விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட தென் ஆபிரிக்கா தயக்கம் 2016-04-21 11:16:56 அவுஸ்திரேலியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் அடிலெய்ட் விளையாட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடுவதற்கு போதிய அனுபவமில்லை என தென் ஆபிரிக்க வீரர்கள் தெரிவிப்பதுடன், அவ்வாறு விளையாடினால் அது தங்களது அணிக்கு பாதிப்பாக அமையும் எனவும் தெரிவித்துள்ளனர். எனினும், அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்காவை விளையாட வைப்பதில் கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா …
-
- 0 replies
- 534 views
-
-
வர்ணனையாளராகிறார் மஹேல இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான மஹேல ஜயவர்தன, வர்ணனையாளராக செயற்படவுள்ளார். இலங்கை அணி அடுத்த மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் ஸ்கை ஸ்போர்ட்ஸின் வர்ணனையாளராக மஹேல ஜயவர்தன செயற்படவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே வர்ணனையாளர்கள் குழுவில் பணியாற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர்களோடு மஹேலவும் இணையவுள்ளார். தற்போது ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர்கள் குழுவில் முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவர்களான இயன் பொத்தம், டே…
-
- 0 replies
- 515 views
-
-
ரியோ ஒலிம்பிக் தீபச் சுடர் ஓட்டம் வியாழனன்று ஆரம்பம் ரியோ டி ஜெனெய்ரோவில் 2016 ஆகஸ்ட் 5ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 31ஆவது ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான தீபச் சுடர், ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் அமைந்துள்ள ஹேரா பெண் கடவுளரின் கோவில் முன்றலில் வியாழனன்று வைபவரீதியாக ஏற்றப்படவுள்ளது. பண்டைய ஒலிம்பிக் மற்றும் நவீன ஒலிம்பிக் ஆகியவற்றின் சம்பிராதயங்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வைபவத்தின்போது ஹேரா என்ற பெண் கடவுளரின் பாத்திரத்தை ஏற்கவுள்ள கிரேக்க நடிகை கெத்தரினா லேஹூ தீபச் சுடரை ஏற்றவுள்ளார். இந்தச் சுடர் சூரிய கதிர்களிலிருந்து பரவளைய ஆடியைக் கொண்டு இயற்கையாக பற…
-
- 1 reply
- 569 views
-
-
<p>Your browser does not support iframes.</p> 500-வது கோல் அடித்து சாதனை படைத்த வீரர் ஸ்பெயின் கிளப் போட்டியான லாலிகா தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 1-2 என்ற கோல் கணக்கில் வலேன்சியா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. முடிவு ஏமாற்றம் அளித்தாலும், தனிப்பட்ட முறையில் இந்த ஆட்டம் மெஸ்சிக்கு தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் மெஸ்சி 63-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் சர்வதேச மற்றும் கிளப் போட்டிகளில் 500 கோல்களை அவர் எட்டியிருக்கிறார். 28 வயதான மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக 450 கோல்களும், அர்ஜென்டினாவுக்காக 50 கோல்களும் அடித்திருக்கிறார். மெஸ்சி இடது காலால் 406 கோல்களும்,…
-
- 5 replies
- 669 views
- 1 follower
-
-
மலிங்கவை இலங்கை வருமாறு அழைப்பு இலங்கை அணி வீரர் லசித் மாலிங்கவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட விஷேட மருத்துவக் குழுவின் முன் எதிர்வரும் புதன்கிழமை ஆஜராகுமாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/5271
-
- 4 replies
- 666 views
-
-
ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில் இந்தியப் பெண் இந்தியாவின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார். ரியோ போட்டிக்கு தகுதிபெற்றுள்ள தீபா கர்மாகர் ஓலிம்பிக் ஒன்றில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவர் கிளாஸ்கோவில் கடந்த 2014ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளிலும் அவர் பதக்கம் ஒன்றை வென்றிருந்தார். ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ள செய்தி இந்தியாவில் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. இந்திய அரசாங்கம் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்கு குறிப்பிடத்தக்க அளவு நிதி வழங்காத சூழலில…
-
- 1 reply
- 831 views
-
-
வருடத்தின் அதி சிறந்த வீரருக்கான லோரியஸ் விருது ஜோகோவிச்சுக்கு; சிறந்த வீராங்கனையாக செரீனா வில்லியம்ஸ் தெரிவு சேர்பியாவின் டென்னிஸ் சம்பியன் நொவாக் ஜோகோவிச் வருடத்தின் அதி சிறந்த விளையாட்டு வீரருக்கான லோரியஸ் விருதை வென்றெடுத்துள்ளார். இதேவேளை, வருடத்தின் அதி சிறந்த வீராங்கனைக் கான லோரியஸ் விருதை ஐக்கிய அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வென்றெடுத்துள்ளார். இவ் வருடத்திற்கான லோரியஸ் விருது விழா ஜேர்மன் நாட்டின் தலைநகரான பேர்லினில் அமைந்துள்ள பலாய்ஸ் அம் ஃபன்க்டேர்ன் கோபுர மண்டபத்தில் திங்களன்று நடைபெற்றது. செரீனா வில்லியம்ஸ் வென்றெடுத்த நான்காவது லோரியஸ் விருது இது…
-
- 0 replies
- 282 views
-
-
மகளிர் கியா சுப்பர் லீக் இருபது 20 கிரிக்கெட் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள அங்குரார்ப்பண மகளிர் சுப்பர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 18 வெளிநாட்டு வீராங்கனைகள் விளையாடவுள்ளனர். அவர்களில் 17 பேர் பெயரிடப்பட்டுள்ளதுடன் ஒருவர் மாத்திரம் இன் னும் அறிவிக்கப்படவில்லை. அவுஸ்திரேலிய அணித் தலைவி மெக்ல னிங், நியூஸிலாந்து அணித் தலைவி சுசி பேட்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவி ஸ்டெவானி டெய்லர். அவரது சக வீராங்கனை டியேண்ட்ரா டொட் டின் உடப்ட 18 வெளிநாட்டு வீராங்கனைகள் மகளிர் சுப்பர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட்…
-
- 0 replies
- 404 views
-
-
பார்சிலோனா: ஜாம்பவான்களின் அணிக்கு சரிவு ஏன்? ஏதாவது ஒரு ஃபுட்பால் டீம் பேரு சொல்லுங்க – பார்சிலோனா. ஒரு ஃபுட்பால் பிளேயர் பேரு சொல்லு – மெஸ்ஸி. இந்தக் கேள்விகளுக்கு பெரும்பாலானோர் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருக்கும். காரணம் இவர்கள் ஐரோப்பாவின் நடப்பு சாம்பியன்கள் என்பதால் மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளில் 22 கோப்பைகள் வென்று தன்னிகரற்ற அணியாக விளங்குவதால்தான். மெஸ்ஸி, இப்ராஹிமோவிக், தியரி ஹென்றி, நெய்மார், சுவாரஸ், சேவி, இனியஸ்டா, புயோல், வில்லா என உலகின் மிகப்பெரிய வீரர்களெல்லாம் இவ்வணிக்காக விளையாடியுள்ளனர். ஸ்பானிஷ் லா லிகா, கோபா டெல் ரே, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பிய சூப்பர் லீக், கிளப் உலகக்கோப்பை என அனைத்தும் தற்போது அவர…
-
- 0 replies
- 522 views
-
-
இதுதான் ஐ.பி.எல் லின் சிறந்த டீம்... எப்படி? முன்னெல்லாம் இந்திய அணியின் பயிற்சியாளர் தவிர்த்து, வேறு அணிகளின் பயிற்சியாளர்கள் யாரென நமக்குத் தெரியாது. காரணம், அதிகம் அறியப்படாத வீரர்களே பெரும்பாலும் பயிற்சியாளர்களாக உருவெடுத்தனர். உதாரணமாக டன்கன் பிளட்சர் போன்றோரைச் சொல்லலாம். ஆனால் இப்போதெல்லாம் முன்னணி வீரர்கள் அனைவருமே கோச்சிங் செய்யத் தொடங்கிவிட்டனர். ஆண்டி பிளவர், கிறிஸ்டன் எனத் தொடங்கி ஜெயவர்தனே வரை அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. சர்வதேச அரங்கே இப்படியென்றால் ஐ.பி.எல் நிலைமையை சொல்லவே தேவையில்லை. முன்னாள் வீரர்கள், உச்ச நட்சத்திரங்கள் எல்லாம் பயிற்சியாளர் பொறுப்பில் அமர்ந்திருக்கின்றனர். சச்சின், டிராவிட், பிளமிங் என பயிற்சி…
-
- 0 replies
- 847 views
-
-
லசித் மலிங்க எனும் 'குழப்பவாதி' Comments லசித் மலிங்க எனும் பெயர், இலங்கை இரசிகர்களுக்கு இரண்டுவிதமான உணர்வுகளைத் தரக்கூடியது. ஒன்று, யோக்கர் பந்துகளை அநாயசமாக வீசி, விக்கெட்டுகளைக் கைப்பற்றி, வெற்றிகளைப் பெற்றுத்தரும் நாயகன். இரண்டாவது, நாட்டின்மேல் பற்றுக் கொண்டவரல்லர் அல்லது ஐ.பி.எல் போட்டிகளை அதிகமாக விரும்பும் ஒருவர் என, குறிப்பிட்ட ஒரு பிரிவினரால் சித்தரிக்கப்படும் ஒருவர். இவை இரண்டுமே சிலவேளைகளில் ஒன்றாக இருக்கலாம், சில வேளைகளில், ஏதாவதொன்று தான் சரியாக இருக்க முடியும். ஆனால், இவை இரண்டுக்குமிடையில் ஏதாவதொரு சம்பந்தமுள்ளது என்பது தான் உண்மை. அண்மையில் எழுந்த சர்ச்சை, முழங்கால் உபாதைக்குள்ளான லசித் மலிங்க, ஆசியக் கி…
-
- 1 reply
- 556 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலைவராக இன்ஸமாம் உல் ஹக் நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலைவராக முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுநர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக இன்ஸமாம் அறிவித்துள்ளார். இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளின் சுப்பர் 10 சுற்றுக்கு ஆப்கானிஸ்தானை இன்ஸமாம் முன்னேற்றியிருந்தார். அப் போட்டியில் சம்பியனான மேற்கிந்தியத் தீவுகளை கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் வருட இறு…
-
- 0 replies
- 413 views
-
-
ஷிகர் தவானை எச்சரிக்கிறாரா கெளதம் காம்பீர்..? டெஸ்ட் போட்டிகளில் சீராக ஆடுவதில்லை. ஒருநாள் போட்டிகளிலும் அதே நிலை. டி20 களில் சொல்லவே வேண்டாம் உச்சகட்ட சொதப்பல். நாம் பேசிக்கொண்டிருப்பது இந்திய அணியின் துவக்க வீரர் தவான் பற்றி தான். 2013ம் ஆண்டு அறிமுகமான முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை அலற விட்டு அசத்தலாக கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய தவான், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடர் நாயகன் விருது வாங்கி நம்பிக்கை தந்தார். போகப்போக, கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக தொடர்ந்து மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். டி20 உலகக்கோப்பையில் 4 போட்டிகளில் 41 ரன்கள் மட்டுமே எடுக்க அரையிறுதிப் போட்டியில் அவரை வெளியில் அமர்த்தினார் தோனி. சரி கூடிய விரைவில் தவானிற்…
-
- 0 replies
- 670 views
-
-
இனி கிரிக்கெட் கதை சொல்ல மாட்டாரா ஹர்ஷா போக்ளே..?! கிரிக்கெட் – இந்தியாவின் அதிகாரப்பூர்வமற்ற தேசியப் பண்டிகை. மேட்ச் பார்க்க பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு கட் அடிப்பது, டி.டி.எச் பேக்குகள் வாங்குவது, கேபிள் காரரிடம் சண்டையிட்டு சோனி, ஸ்டார் சேனல்களை வரச்செய்வது என இந்தியர்களுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குமான காதலை வலுப்படுத்திய ஒரு அற்புத சக்தி தான் கிரிக்கெட். அப்படி அத டி.வி யில தான் பாக்கனுமா? ஸ்டேடியத்தில் பார்ப்பதை விட டி.வி யில் கிரிக்கெட் பார்க்க இந்தியர்கள் அதிகம் விருப்பப்படுவது ஏன்? இரண்டே காரணங்கள் தான். ஒன்று அடிக்கடி காட்டும் ரீ-ப்ளே. இரண்டாவது மேட்சை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வர்ணனை. என்னதான் இந்தியா பாகிஸ்த…
-
- 0 replies
- 595 views
-
-
<p>Your browser does not support iframes.</p> ரங்கன ஹேரத் ஓய்வு ரங்கன ஹேரத் சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரது இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்றுக் கொண்டுள்ளதாக, அதன் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=79013
-
- 0 replies
- 1.2k views
-
-
புதிய வகை தலைக் கவசத்தை அணிய மறுக்கும் இங்கிலாந்து அணி தலைவர் புதிய வகை தலைக் கவசத்தை அணிவதற்கு இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தலைவர் அலிஸ்டயர் குக் மறுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இங்கிலாந்து கிரிக்கட் அணி நிர்வாகம் புதிய வகை தலைக் கவசத்தை அறிமுகம் செய்துள்ளது. எனினும் பழைய வகை தலைக் கவசம் தமக்கு சௌகரியமாக காணப்படுவதாகவும் புதிய வகை தலைக் கவசத்தை அணியப் போவதில்லை எனவும் குக் கூறியுள்ளார். இதனால் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. தமது பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள தமக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குக் போன்ற முன்னணி வீரர்கள் இவ்வாறு பழைய வகை தலைக் கவசத்தை அணிவது பிழையான முன்னுதாரணத…
-
- 0 replies
- 479 views
-
-
இலங்கை அணிக்கு எந்த விதமான போட்டியாக இருந்தாலும் ஒரு தலைவர்தான் இனிவரும் அனைத்து விதமான போட்டிகளுக்கும் இலங்கை அணிக்கு ஒரு தலைவர் முறைமை கடைப்பிடிக்கப்படவுள்ளது. அதேநேரம் தலைவராக அஞ்சலோ மெத்தியூஸும் உப தலைவராக தினேஷ் சந்திமாலும் நீடிப்பர் என இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 என 3 வகையான போட்டிகளிலும் இனி ஒரே தலைவர் தான் செயற்படு வார். இதுதான் எமக்கு சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். இலங்கை அணியின் தலைவர் மற்றும் உப தலைவர்களை எடுத்து பார்த்தால் அவர்களிடம் சிறந்த…
-
- 0 replies
- 440 views
-
-
கரீபியன் பீரிமியர் லீக் தொடரில் பார்படோஸ் அணியை விலைக்கு வாங்கிய மல்லையா April 14, 2016 இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்து விட்டதலைமறைவாக உள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, கரீபியன் பீரிமியர் லீக் தொடரில் பார்படோஸ் அணியை விலைக்கு வாங்கியுள்ளார். ஐபிஎல் தொடரில் பெங்களூர் றொயல்சேலஞ்சர்ஸ் அணியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகியதையடுத்து, கடந்த பெப்ரவரி மாதம் இந்த புதிய அணிக்கு பங்குதாரர் ஆகியிருப்பதாக மல்லையா கூறியுள்ளார். இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 6 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே செலவழித்துள்ளதாக தெரிவித்த மல்லையா, அந்த அணியின் மதிப்பு சுமார் ரூ.130 கோடியாக உள்ள நிலையிலும், மற்ற உரிமையாளர்கள் தன்னையும் பங்குதாரராக இணை…
-
- 0 replies
- 525 views
-
-
திரைப்படமாக சச்சினின் சுயசரிதையை வெளிவரவுள்ளது சச்சினின் சுயசரிதையை இங்கிலாந்தை சேர்ந்த இயக்குநர் ஜேம்ஸ் எர்ஸ்கைன் திரைப்படமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் சச்சின் முதன்முறையாக நடித்துள்ளார். இதன் போஸ்டரில், கிரிக்கெட் மட்டை ஒன்றை சுமந்து கொண்டு கால்கவசம் அணிந்தபடி மைதானத்தில் சச்சின் நடந்து செல்வது போன்ற காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. இது குறித்து டுவிட்டரில் சச்சின் வெளியிட்டுள்ள செய்தியில், பல வருடங்களாக என் மீது அன்பு செலுத்தி, ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி! ஏப்ரல் 14 ஆம் திகதி மதியம் 1 மணி அளவில் வெளியாகும் டீசரை காணுங்க…
-
- 0 replies
- 509 views
-
-
’’எனக்கு சவாலாக விளங்கியது 5 பந்துவீச்சாளர்கள்’’ மக்கல்லம் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் தனக்கு சவாலாக விளங்கிய 5 பந்துவீச்சாளர்கள் பற்றி நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரண்டன் மெக்கலம் கூறியுள்ளார். நியூசிலாந்து அணியின் அதிரடி வீரரான மெக்கல்லம் எதிரணிக்கு எப்போதும் சவாலாகவே இருப்பார். அவரை தொடக்கத்தில் இருந்தே கட்டுப்படுத்த எதிரணி பந்துவீச்சாளர்கள் திணறுவர். அப்படிப்பட்டவரே தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தனக்கு 5 பந்துவீச்சாளர்கள் சவாலாக விளங்கியதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இலங்கை அணியின் முரளிதரன் எனக்கு எப்போது தொல்லை கொடுத்தார். அவர் என்ன பந்துவீசுகிறார், அது எங்கு சுழன்று வரும் என்பது யாருக்கும் தெரியாது. பிரா…
-
- 0 replies
- 483 views
-
-
இலங்கை வருகிறது அவுஸ்திரேலியா இவ்வாண்டு ஜூலை மாதத்தில், முழுமையான கிரிக்கெட் தொடரொன்றுக்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு வரவுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடருக்காகவே, அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு வரவுள்ளது. இந்தத் தொடர், ஜூலை 26ஆம் திகதி ஆரம்பித்து, செப்டெம்பர் 9ஆம் திகதி நிறைவடையவுள்ளது. அவுஸ்திரேலிய அணி இறுதியாக, 2011ஆம் ஆண்டே, டெஸ்ட் தொடரொன்றுக்காக இலங்கைக்கு வந்திருந்த நிலையில், 5 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு வரவுள்ளது. அண்மைக்காலமாக சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திவரும் அவுஸ்திரேலிய அணி, உலக டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாமிடத்தில் காணப்படுவதோடு, இலங்கை அணி தடு…
-
- 0 replies
- 398 views
-
-
'குசால் இன்னமும் தடை செய்யப்படவில்லை' இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசால் ஜனித் பெரேரா, இன்னமும் தடைக்குள்ளாக்கப்படவில்லை என, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். குசால் பெரேரா தடை செய்யப்பட்டுள்ளார் என முன்னர் செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே, இந்தத் தகவலை மஹேல ஜெயவர்தன வெளியிட்டுள்ளார். தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியமை காரணமாக சர்வதேச கிரிக்கெட் சபையின் விசாரணைகளுக்கு முகங்கொடுத்துவரும் குசால் ஜனித் பெரேரா, டிசெம்பர் 7ஆம் திகதி, இடைக்காலத் தடைக்குள்ளாக்கப்பட்டார். எனினும், ஏனையோரைப் போலன்றி, குசால் பெரேராவின் விசாரணை தொடர்பான முடிவு, இதுவரை வெளிவரவில்லை. …
-
- 0 replies
- 553 views
-
-
நமீபியாவுக்கெதிராக ஆப்கானிஸ்தானுக்கு இனிங்ஸ் வெற்றி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவிலுள்ள கிரேட்டர் நொய்டா விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் ஆப்கானிஸ்தான், நமீபியா அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 36 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. நான்கு நாட்களைக் கொண்ட இப்போட்டியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) ஆரம்பித்திருந்தது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக பிக்கி யா பிரான்ஸ் 46 ஓட்டங்களைப் பெற்றார்.…
-
- 0 replies
- 370 views
-
-
பிரபல பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வீதி விபத்தில் பலி இந்தியாவின் முன்னணி பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான ஜெய்பூரைச் சேர்ந்த வேணு பலிவால் வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 44 வயதான வேணு பாலிவால் மத்திய பிரசேத மாநிலம் விதிஸா மாவட்டத்தில் உள்ள கையாராஸ்பூர் அருகே தனது ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த அவர் வீதியில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளார். இவ்விபத்தில் பலத்த காயமடைந்த அவர், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக விதிஸா மாவட்ட மருத்துவமனைக்கு க…
-
- 0 replies
- 607 views
-
-
இருதயக் கோளாறு: 26 வயதிலேயே இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் டெய்லர் ஓய்வு இருதயக் கோளாறினால் 26 வயதிலேயே ஓய்வு பெற்றார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் டெய்லர். | கெட்டி இமேஜஸ். இருதயக் கோளாறுகள் காரணமாக இங்கிலாந்து பேட்ஸ்மென், நாட்டிங்கம்ஷயர் வீரர் ஜேம்ஸ் டெய்லர் தனது 26-வது வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற நேரிட்டுள்ளது. இருதயத்தின் வலது அறையில் தசை சுருங்கி விரிவதில் இவருக்கு தீவிர பிரச்சினைகள் இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது. இருதய தசை சுருங்கி விரிவதில் பிரச்சினைகள் இருந்தால் அது மாரடைப்பில் போய் முடியும். இந்நிலையில் அவர் ஓய்வு அறிவித்துள்ளார். கடந்த மார்ச் 2012-ல் கால்பந்து வீரர் பாப்ரிஸ் மும்பா இதே …
-
- 0 replies
- 454 views
-