Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இன்னும் எத்தனை போட்டிகளை வெல்லப்போகிறீர்கள்?' - சானியா பேட்டி ஹைதராபாத்தில் தனது ஜூப்ளி ஹில்ஸ் இல்லத்தில் சானியா மிர்சா. | படம்: மொகமது யூசுப். மகளிர் இரட்டையர் டென்னிஸ் ஆட்டத்தில் தற்போது உச்சத்தில் இருந்து வரும் சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி 2015-ம் ஆண்டை அற்புதமாக முடித்ததோடு, 2016-ம் ஆண்டை ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்று அபாரமாகத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் மெல்பர்னிலிருந்து மகிழ்ச்சியுடன் திரும்பிய சானியா மிர்சா அளித்த பேட்டி வருமாறு: "எப்போதும் வேட்டையாடப்படுவதை விட, வேட்டையாடுபவராக இருப்பது ஒரு சிறப்பான தருணம்தானே. உயர்மட்டத்தில் சீராக வெற்றிகளை குவிப்பது என்பது உடல், மனம் ஆகியவற்றுக்கு விடுக்கப்படும் பெரிய சவால். …

  2. இங்கிலாந்துக்கு ஓடியது ஏன்?: தென்ஆப்ரிக்காவில் பீட்டர்சனை போட்டுத் தள்ளிய இந்திய வம்சாவளி! கெவின் பீட்டர்சன்... தந்தை நாடான தென்ஆப்ரிக்காவில் இருந்து வெளியேறி, தாய் நாடான இங்கிலாந்து அணியில் ஏன் இணைந்தார். கடந்த 16 ஆண்டுகளாக கிரிக்கெட் ரசிகர்கள் மண்டையை போட்டு உடைத்துக் கொள்ளும் விஷயம் இது. கெவினின் தந்தை தென்ஆப்ரிக்காக்காரர். தாய் இங்கிலாந்து நாட்டவர். அந்தவகையில் கெவினுக்கு இங்கிலாந்துடன் தொடர்பு இருந்தது. கடந்த 2000 ஆம் ஆண்டு வாக்கின் கெவின் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தார். சரி... இங்கிலாந்துதான் அவருக்கு பிடித்திருக்கிறது என பெற்றோர்கள் விட்டு விட்டனர். கொஞ்ச காலம் கவுண்டி கிரிக்கெட்டில் கெவின் பீட்டர்சனின் காலம் கழிந்தது. அடுத்த நான்கே ஆண்டுகளில் …

  3. ராகுல் டிராவிட்டின் தயாரிப்பு : அடுத்த தோனி வங்கதேசத்தில் இருக்கிறார்! இளையோர் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம். அபாரமான விக்கெட் கீப்பிங் திறமை... என தோனியின் கலவையாகத் தெரிகிறார் ரிசாப் பன்ட். அதிரடி வீரர் கில்கிரிஸ்ட்தான் நம்ம ரிசப்பிற்கும் ரோல் மாடல். அதிரடியிலும் அவரை போல்தான் என்பதை நேபாளத்திற்கு எதிராக பின்னி பிடலெடுத்தை பார்த்த போதே தெரிந்தது. நேபாளத்திற்கு எதிராக 24 பந்துகளில் 78 ரன்களை விளாசிய இந்த பன்ட் யார்? இளையோர் உலகக் கோப்பையின் விளையாடும் இந்திய அணியின் துணை கேப்டன்தான் இந்த பன்ட். இடது கை ஆட்டக்காரர். கூடவே விக்கெட் கீப்பர் என களத்தில் இரு கடினமான பணிகள். நமக்கு தோனியாக பன்ட் தெரிந்தாலும் அவருக்கு ஹீரோ கில்கிறிஸ்ட்தான். முதல் பந…

  4. மான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளராக பெப் கார்டியாலோ பேயர்ன், பார்சிலோனா அணிகளின் முன்னாள் பயிற்சியாளர் பெப் கார்டியாலா பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கிறார். இதுவரை அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த மனுவேல் பெல்கிரினியின் ஒப்பந்தம் இந்த ஜுன் மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து உலகின் பணக்கார கால்பந்து அணிகளுல் ஒன்றான மான்செஸ்டர் சிட்டி, கார்டியாலா கைக்கு வருகிறது. இந்த அணிக்காக பெப் கார்டியாலா 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பார்சிலோன அணிக்காக பெப் 4 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்த போது அந்த அணி 14 கோப்பைகளை வென்றது. இதில் 3 ஸ்பானீஷ் லீக் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள…

  5. செய்தித்துளிகள் $ ஸ்பானிஷ் கால்பந்து லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 6-0 என்ற கோல்கள் கணக்கில் இஸ்பான் யால் அணியை வீழ்த்தியது. இதில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார். ----------------------------------------- $ ஐபிஎல் டி 20ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராக சேவாக் நியமிக்கப்பட்டுள்ளார். ----------------------------------------- $ அமெரிக்காவின் ஒகியோ நகரில் நடைபெற்று வரும் கிளீவ்லன்ட் கிளாசிக் ஸ்குவாஸ் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் தோல்வியடைந்தனர். ----------------------------------------- $ இந…

  6. மெஸியின் கடவுச்சீட்டு படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட துபாய் பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறை; ஆப்கான் சிறுவனை சந்திக்க மெஸி ஆர்வம் 2016-02-02 10:33:11 ஆர்­ஜென்­டீன கால்­பந்­தாட்ட அணித்­த­லை­வ­ரான லயனல் மெஸியின் கட­வுச்­சீட்டு புகைப்­ப­டத்தை இணையத்­த­ளத்தில் வெளி­யிட்ட துபாய் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வ­ருக்கு ஒரு மாத கால சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. ஸ்பெய்னின் பார்­ஸி­லோனா கழ­கத்­துக்­கா­கவும் விளை­யாடும் லயனல் மெஸி கடந்த வருடம் குளோபல் சொக்கர் அவார்ட்ஸ் விருதை வென்றார். ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் துபாயில் கடந்த டிசெம்பர் 27 ஆம் திகதி இவ்­வி­ருது வழங்கல் விழா நடை­பெற்­றது. …

  7. ரியோ ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டவாறு நடத்தப்படும் - பிரேசில் [ Tuesday,2 February 2016, 06:59:47 ] ஸீகா வைரஸ் பரவி வருகின்ற போதிலும் ரியோ டி ஜெனைரோ ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டவாறு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸீகா வைரஸ்சினால் மெய்வல்லுநர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 2016 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ டி ஜெனைரோ நகரில் நடைபெறவுள்ளது. ஸீகா வைரஸ் பரவலை உலகளாவிய பொதுசுகாதார அவரச நிலைமையாக உலக சுகாதார ஸ்தாபனம் நேற்றைய தினம் பிரகடனப்படுத்தியிருந்தது. கர்பிணி அல்லாவிடின் எந்தவொரு ஆபத…

  8. களத்தில் தல டோனி... தளபதி யுவி... இப்போ வாங்க பங்காளிகளா..! இந்திய அணி வென்ற மிகச் சிறந்த சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் போட்டிகள் என பட்டியலிட்டால், அதில் பல போட்டிகளில் துருப்புச்சீட்டாக யுவராஜ் சிங் கண்டிப்பாக இருந்திருப்பார். 1983-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற பின்னர், கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக இந்திய அணி, அயல்மண்ணில் இறுதி போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்த சமயம் அது. 2002 -ம் ஆண்டு நடந்த நாட்வெஸ்ட் கோப்பைக்கான முத்தரப்பு போட்டியின் இறுதி போட்டியில், இந்தியாவுக்கு 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. ஷேவாக், கங்குலி, டெண்டுல்கர், மோங்கியா, டிராவிட் என முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழக்க, 24 ஓவர…

  9. கரீபியன் லீக் T 20 போட்டியிலும் சங்கக்காரா February 01, 2016 இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா, மேற்கிந்திய தீவுகளில் நடக்கும் கரீபியன் லீக் டி20 போட்டியிலும் கலக்கவுள்ளார். சங்கக்காரா கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அவரது ஆட்டத்திறன் மெருகேறிக் கொண்டே தான் செல்கிறது. சச்சின்- வார்னே நடத்திய ஆல் ஸ்டார்ஸ் டி20 தொடரில் பங்கேற்ற சங்கக்காரா பட்டையை கிளப்பினார். இதனையடுத்து அவுஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் டி20 தொடரிலும் பங்கேற்றார். மேலும், தற்போது ஓய்வு பெற்றவர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் அதிரடி ஆட்டத்தை காட்டி வருகிறார். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெ…

  10. டி20 பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி முதலிடம் விராட் கோலி. | படம்: கெட்டி இமேஜஸ். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விராட் கோலி தனது கனவு பார்மில் இருந்து வருகிறார். இந்நிலையில் டி20 தொடரில் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட விராட் கோலி டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய டி20 கேப்டனும், தொடக்க வீரருமான ஏரோன் பிஞ்ச்சை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்தார். மூன்று டி20 போட்டிகளில் 90 நாட் அவுட், 59 நாட் அவுட், 50 ஆகிய ஸ்கோர்களை எடுத்தார் விராட் கோலி. இதன் மூலம் 47 தரவரிசைப் புள்ளிகளைக் கூடுதலாகப் பெற்று முதலிடம் சென்றார். டேவிட் வார்னர் 6 இடங்கள் பின்னடைவு கண்டு 18-வது இடத…

  11. இலங்கை பெண்ணிடம் அசிங்கப்பட்ட கோலி அவுஸ்திரேலிய உணவகமொன்றில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இலங்கை பெண்ணிடம் வசமாக சிக்கியுள்ளார். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் காலை உணவிற்காக இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் உணவருந்துவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு கோலியுடன் வந்த அவரது முகாமையளார், குறித்த இலங்கைப் பெண்ணைப் பார்த்து “ காலை உணவின் போது இல்லை ” என தெரிவித்துள்ளார். இதையடுத்து நகைச்சுவையான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி குறித்த பெண்ணின் கணவர் தனது முகப்புத்தகத்தில் நகைச்சுவையாக தரவேற்றியுள்ளார். சம்பவம்…

  12. ஒரே ஓவர்... ஓஹோனு வாழ்க்கை : ஐ.பி.எல். ஏலத்தில் யுவராஜ் சிங் மீண்டும் மார்க்கி வீரர்! வரும் சீசனுக்கான ஐ.பி.எல். போட்டித் தொடருக்கான ஏலத்தில் யுவராஜ் சிங் மீண்டும் மார்க்கி வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவராஜ் சிங் இடம் பிடித்திருந்தார். முதல் இரு போட்டிகளில் யுவராஜ் சிங்குக்கு களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கடைசி போட்டியில், கடைசி ஓவரில் அதிரடி காட்டி இந்திய அணியின் வெற்றிக்கு யுவராஜ் சிங் வித்திட்டார். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையென்ற நிலையில் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாச, இந்திய அணி 200 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை வொயிட் …

  13. 140 ஆண்டு கால சாதனை: ஆஸ்திரேலியாவை வொயிட் வாஷ் செய்த முதல் கேப்டன் தோனி ! சிட்னியில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 198 ரன்களை வெற்றி இலக்காக வைத்த போது, இந்திய அணி வெற்றி பெறுவது சற்று சிரமமாகவே தோன்றிது. ஷேன் வாட்சன் 74 பந்துகளில் 124 ரன்களை குவித்து இந்திய பந்துவீச்சை சிதறடித்தார். இந்தியாவை பொறுத்த வரை விராட் கோலியும் (50) ரோகித்தும் (52) தங்கள் பங்களிப்பை செவ்வனே செய்தனர். இதனால், 140 கால ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில், அந்த அணியை அதன் சொந்த மண்ணில் வொயிட் வாஷ் செய்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. கடந்த 140 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் எந்த அணியும் வொயிட் வாஷ் செய்தது க…

  14. தோனியை நிம்மதி பெருமூச்சு விட வைத்த உச்ச நீதிமன்றம்! இந்து கடவுள் மகாவிஷ்ணு போல அட்டைப்படம் வெளியிட்டது தொடர்பாக இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது ஆந்திர நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்கில் நடவடிக்கைக்கு எட்டு வாரங்கள் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு பிசினஸ் டுடே இதழில் தோனி இந்து கடவுள் மகாவிஷ்ணு போன்று அட்டைப்படத்தில் போஸ் வெளியிடப்பட்டது. இந்துக்களின் மத உணர்வை காயப்படுத்தியதற்காக கேப்டன் தோனி மீது வழக்கு தொடரப்பட்டது. முன்னதாக, கடந்த ஜனவரி 7-ஆம் தேதியன்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்து ஆந்திர நீதிமன்றம் உ…

  15. வாட்சன் சதம்.. ஒரு சாதனையும் கூட! சிட்னி: இந்தியாவுக்கு எதிரான 3வது டுவென்டி 20 போட்டியில் இன்று ஆஸ்திரேலிய கேப்டன் வாட்சன் போட்ட அதிரடி சதமானது, பல சாதனைகளுக்கும் வித்திட்டுள்ளது. 71 பந்துகளில்124 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் வாட்சன். காயமடைந்த ஆரோன் பின்ச்சுக்குப் பதில் இன்று கேப்டனாக செயல்பட்ட வாட்சன் பேட்டிங்கில் பேயாட்டம் போட்டார். சிட்னி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இந்தியப் பந்து வீச்சை சட்னியாக்கி விட்டார் வாட்சன். மேலும் அவரது அபாரமான பேட்டிங்காகவும் இது அமைந்தது. கோஹ்லி செய்த தவறால் உண்மையில் 50 ரன்களில் இருந்தபோது வாட்சன் கொடுத்த அழகான கேட்ச்சை கோஹ்லி தவறவிட்டு விட்டார். அதன் பிறகு வாட்சனின் அதிரடி …

  16. ஒருநாள் போட்டிகளில் அதிவேக 50 சிக்சர்கள்: கோரி ஆண்டர்சன் சாதனை கோரி ஆண்டர்சன் விரைவில் 50 சிக்சர்கள் சாதனை. | படம்: ஏ.எப்.பி. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50 சிக்சர்களை குறைந்த இன்னிங்சில் அடித்து புதிய சாதனை நிகழ்த்தினார் நியூஸிலாந்தின் அதிரடி வீர்ர் கோரி ஆண்டர்சன். இன்று ஆக்லாந்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 3 சிக்சர்களை அடித்தார். இதன் மூலம் 33 ஒருநாள் இன்னிங்ஸ்களில் கோரி ஆண்டர்சன் 51 சிக்சர்களை அடித்து மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரசலின் சாதனையை முறியடித்தார். ஆந்த்ரே ரசல் 42 இன்னிங்ஸ்களில் 50 சிக்சர்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆட்டத்தில் அதிரடி அரைசதம் கண்ட மார்…

  17. கப்தில், வில்லியம்சன் அதிரடியில் தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை 2-0 என்று வென்று டிராபியுடன் காட்சியளிக்கும் நியூஸிலாந்து அணி. | படம்: ஏ.எப்.பி. தோல்வியின் விரக்தியில் பாகிஸ்தான். | படம்: ஏ.எப்.பி. ஆக்லாந்தில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை டக்வொர்த் லூயிஸ் முறையில் வீழ்த்திய நியூஸிலாந்து ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 48 ஓவர்களில் 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணிக்கு மழைகாரணமாக திருத்தியமைக்கப…

  18. நெய்மருக்கு ரூ.76 லட்சம் அபராதம் January 31, 2016 வரி ஏய்ப்பு விவகாரத்தில் பிரேசில் கால்பந்து அணியின் தலைவர் நெய்மருக்கு ரூ.76 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் தேசிய கால்பந்து அணியின் தலைவரும், நட்சத்திர வீரருமான நெய்மர் 2007 மற்றும் 2008ம் ஆண்டு வரி ஏய்ப்பு செய்து வந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ரூ.76 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. http://www.onlineuthayan.com/sports/?p=8627&cat=11

  19. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கேப்டன் தோனி புதிய சாதனை சனி, 30 ஜனவரி 2016 (17:52 IST) ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 1-4 என்ற கணக்கில் தோற்றது. இதனால் இந்திய கேப்டன் தோனி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் அந்த அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் நடந்து முடிந்த இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது தோனி தலைமையிலான அணி. மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் தோனி வசம் இரண்டு சாதனைகள் வந்துள்ளன. ஏற்கனவே தோனி அதிக வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன் என்ற கங்குலியின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் …

  20. ஏ.பி. டி. இனி ஃபுல் டைம் கேப்டன்! தென்ஆப்ரிக்க அணி டெஸ்ட் அணியின் கேப்டனாக டி வில்லியர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்து வந்த ஹாசிம் ஆம்லா, அண்மையில் அந்த பதவியில் இருந்து விலகினார். இந்தியாவுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் தோல்வி, இங்கிலாந்துக்கு எதிராக 3-1 என்ற கணக்கில் தோல்வி கண்டது, ஆம்லாவை பதவியில் இருந்து விலக வைத்தது. ஹாசிம் ஆம்லாவின் ராஜினாமாவுக்கு பின், டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டனாக டி வில்லியர்ஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்ஆப்ரிக்க அணியின் டெஸ்ட் அணிக்கு, டி வில்லியர்ஸ் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அணிக்கும் ஏ.பி.டி ஏற்கனவே கேப்டனாக உள்ளார். http://ww…

  21. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்.... 20க்கு 20 ஒவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இம்முறை, பிரிவு-1-ல் கடந்த டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் செம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கஅணி, மே.இ.தீவுகள் அணி, இங்கிலாந்துஅணி ஆகியவற்றுடன் தகுதிச் சுற்றிலிருந்து தகுதி பெறும் மற்றொரு அணியும், பிரிவு-2-ல் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வென்று தகுதி ப…

  22. கோஹ்லி ரசிகர் என்பதற்காக பத்து ஆண்டுகள் ஜெயில் தண்டனையா? கிரிக்கெட்டைப் பொறுத்தவரை வேறொரு நாட்டின் டீமைப் பிடிக்கவில்லை என்றாலும்கூட, அந்த நாட்டின் ஏதோ ஒரு திறமையான விளையாட்டு வீரர் நம் மனத்தை வெகுவாகக் கவர்ந்திருப்பார். அப்படித்தான் பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் உமர் டிராஸ் என்பவருக்கும். பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவின் விராட் கோஹ்லி என்றால் உமருக்கு உயிர். பாகிஸ்தானும், இந்தியாவும் மோதும் மேட்ச்சில்கூட, லேசாக அவரது மனம் விராட் கோஹ்லி மீதே இருக்குமாம். ‘‘விராட் கோஹ்லி திறமைக்கு நான் அடிமை. அவரின் டை ஹார்டு ஃபேன். அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். ஆனால், அதுவே எனக்கு இப்படி ஜெயில் தண்டனை வாங்கித் தரும் என்று நினைக்கவில…

  23. எப்போ, எப்படி செய்யனும் என்று அவருக்கு மட்டும்தான் தெரியும்.. டோணி பற்றி சங்ககாரா சென்னை: கேப்டன் பொறுப்பை எப்போது விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது டோணிக்கு நன்கு தெரியும் என்று இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்தார். நிருபர்கள் கேள்விக்கு சங்ககாரா அளித்த பதில்களின் தொகுப்பை பாருங்கள்: இலங்கையில் ஒன்டே-டெஸ்ட் போட்டிகளுக்கு மேத்யூசும், டி20 போட்டிகளுக்காக சண்டிமாலும் இலங்கை அணி கேப்டன்களாக செயல்படுகிறார்கள். அதே வியூகத்தை இந்திய அணியில் புகுத்தலாமா என்பது பற்றி நான் பதில் சொல்ல முடியாது. அதேநேரம் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுவது ஒரு கலை. டெஸ்ட் ஆடும் வீரர்களில் அதிகம்பேர் டி20 போட்டிகளில் ஆடுவது பொருத்தமாகாது. டோணிக்கு தெர…

  24. முதன்முதலாக ஆஸி.க்கு எதிராக கிரிக்கெட் தொடரை வென்று இந்திய மகளிர் அணி சாதனை 2016 Getty Images இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. | கெட்டி இமேஜஸ். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்த வகை கிரிக்கெட் ஆட்டத்திலும் முதல் முதலாக தொடரை வென்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை புரிந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மிதாலி ராஜ் தலைமை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2-0 என்று கைப்பற்றியது. மெல்போர்னில் நடைபெற்ற இன்றைய 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் ஆஸ்திரேலிய அணியை பேட் செய்ய அழைத்தார். ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. மழையால் பாதிக்கப்பட்ட…

  25. செய்துத் துளிகள்: வீழ்த்தும் உரிமை உள்ளது- அஸ்வின் அஸ்வின். | கோப்புப் படம். இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறும்போது, "ஆஸி. தொடர் பேட்ஸ்மேன்களின் தொடர் என்றே கருதுகிறேன். எனவே சரியான இடங்களில் பந்து வீசுவது அவசியம். ஆஸ்திரேலிய வீரர்கள் எனது பந்துகளை ஆக்ரோஷமாக எதிர்கொள்ள உரிமை பெற்றவர்கள் என்றால் எனக்கு அவர்களை வீழ்த்தும் உரிமை உள்ளது. ஒரு பந்து வீச்சாளரை குறிவைத்து அடிப்பது என்பது ஆட்ட திட்டத்தின் ஒரு பகுதி. இந்த சவாலை மகிழ்ச்சியுடன் சந்திக்க தயாராகவுள்ளேன். இதனை முறியடிக்க போதுமான திறமைகள் என்னிடத்தில் உள்ளது" என்று தெரிவித்தார். ------------------------------------------------------------ இந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.