Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு மெல்போர்ன் மைதானம். | கோப்புப் படம். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஷேன் வாட்சன், நேதன் லயன் ஆகியோர் இடம்பெறவில்லை. ஷேன் வாட்சன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறார். இந்நிலையில் பிக்பாஷ் லீகில் சொல்லிக்கொள்ளும்படியான இன்னிங்ஸ் எதையும் ஆடவில்லை. அணியில் ஒரே பகுதி நேர ஸ்பின்னராக கிளென் மேக்ஸ்வெல் மட்டுமே 13 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்த அணிக்கு ஸ்டீவ் ஸ…

  2. லாராவின் சாதனையை எட்ட 86 ரன்களே தேவை : சங்கடத்துடன் விடைபெற்றார் சந்தர்பால் ! மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஷிவ்நாராயண் சந்தர்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். சுமார் 22 வருடங்கள் கிரிக்கெட்டுடன் பயணித்த அவருக்கும் பெரும்பாலான கிரிக்கெட்டர்களை போல, ஓய்வு பெறும் தருணம் இனிப்பாக இல்லை. கடந்த 1994-ம் ஆண்டு சந்தர்பால், கினியாவில் நடந்த போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன் முறையாக களம் இறங்கினார். இந்த போட்டியில் சந்தர்பால் அரை சதம் அடித்தார். மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியில், 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவரது இறுதி டெஸ்ட் போட்டியும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே அ…

  3. அம்மாடியோவ்... 50 ஓவரில் 485 ரன்கள்! - இளம் இந்திய அணி அசத்தல் ஆட்டம்! ஆஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிகளை தடுத்து நிறுத்தி, அதன் மண்ணிலேயே அந்த அணியை 329 ரன்களை சேஸ் செய்தது, 6 இந்திய வீரர்கள் சென்சுரி அடித்தது உள்ளிட்ட பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது சீனியர் அணி. அதே போல இன்று 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியும் மெகா சாதனை நிகழ்த்தியிருக்கிறது. யுவராஜ் , விராட் கோலி என பல வீரர்கள் இந்திய அணியில் நுழைந்தது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பையில் பிரகாசித்ததன் மூலம்தான். தற்போது 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராக டிராவிட் இருக்கிறார். வருங்காலத்தில் சீனியர் இந்திய அணி, உலக அரங்கில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக இப்போதே இளம் வீரர்களை பட்டை தீட…

  4. நான் நிரபராதி என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு அளியுங்கள்: டானிஷ் கனேரியா வேண்டுகோள்! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அனில் தல்பாட்டுக்குப் பிறகு இந்து மதத்தை சேர்ந்தவர் என்ற பெருமை பெற்றவர் டானிஷ் கனேரியா. கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில், ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கிய இவருக்கு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு வாழ்நாள் தடை விதித்தது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முழுமையாக ஏற்றுக் கொண்டது. இதனை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் கனேரியா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இந்த விவகாரத்தில் தனக்கு உதவி செய்யும்படி டானிஷ், பி.சி.சி.ஐ.யிடம் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில…

  5. கேப்டனாக தோனியின் கடைசி இன்னிங்ஸா இது? - மூன்று அதிர்ச்சி காரணங்கள் ஏழ்மையானவர்கள் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்து, தடதடவென சாதனைகளை உடைத்து நொறுக்கி, இந்திய அணியை புரட்டிப்போட்டு , தனது அதிரடி அபார ஃபினிஷிங் மற்றும் அட்டகாசமான கேப்டன்ஷிப் துணை கொண்டு, இந்திய அணிக்கு குறுகிய காலத்தில் டி20, ஒருநாள் உலககோப்பைகள், சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை வென்று, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை தரவரிசையில் முதல் இடத்துக்கு உயர்த்தி , உலகில் எந்தவொரு கிரிக்கெட் கேப்டனும் செய்யாத சாதனைகளை படைத்தவரும், உலகின் வெற்றிகரமான கேப்டன்களில் டாப் இடத்தில் இருப்பவருமான மகேந்திர சிங் தோனிக்கு இன்று கடைசி ஒரு தின போட்டியாக அமையக்கூடும் என தகவல்கள் கசிகின்றன. அதற…

  6. யூரோ 2016 : கோல் லைன் டெக்னாலஜி அறிமுகம்; யூஃபா அறிவிப்பு (வீடியோ) யூரோ 2016 கால்பந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் 'கோல் லைன் டெக்னாலஜி' நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக ஐரோப்பிய கால்பந்து சம்மேளனமான யூஃ பா அறிவித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் போது ஜெர்மனிக்கு எதிரான 2வது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பிராங்க் லேம்பர்ட் அடித்த பந்து கிராஸ் பாரில் பட்டு எல்லைக் கோட்டைத் தாண்டியது. ஆனால் நடுவரால் சரியாக அதனை கணித்து கோல் என்று அறிவிக்க முடியவில்லை. கடந்த 2012ஆம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராக உக்ரேன் வீரர் ஷிவ்சென்கோ அடித்த கோலும் இதே கோலும் இதே போல் …

    • 1 reply
    • 441 views
  7. ’’ அனைவருக்கும் நன்றி ’’ கெய்ல் January 21, 2016 மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், தன்னை விமர்சனம் செய்த அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார். பிக்பாஷ் தொடரில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியாவில் முகாமிட்டிருந்த கிறிஸ் கெய்ல் அங்கு தனது ஆட்டங்கள் முடிந்ததைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். சமீபத்தில் அவர் பெண் செய்தியாளரிடம் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார். இதனால் அவருக்கு 10,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், முன்னாள் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் இயான் சேப்பல், கெய்லை யாரும் விளையாட அனுமதிக்கக் கூடாது. அவருக்கு சர்வதேச அளவில் தடை விதிக்க வேண்டும் என்று அதிகமாகவே கொந்தளித்தார்.…

  8. விவ் ரிச்சர்ட்ஸ் ஒரு மிகப்பெரிய வீரர், அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள்: விராட் கோலி விராட் கோலி. | கெட்டி இமேஜஸ். விராட் கோலியின் ஆட்டத்தில் தன்னுடைய ஆட்டத்தின் சில சுவடுகள் தெரிவதாக மே.இ.தீவுகள் ‘கிரேட்’ விவ் ரிச்சர்ட்ஸ் கூறியதையடுத்து ரிச்சர்ட்ஸ் மிகப்பெரிய வீரர், அவர் எங்கே, நான் எங்கே... என்று விராட் கோலி தன்னடக்கம் காண்பித்துள்ளார். ஏற்கெனவே கடந்த ஆண்டு அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளன்று பெரிய இலக்கைத் துரத்திய போது அபார சதம் கண்ட விராட் கோலியின் ஆட்டம் விவ் ரிச்சர்ட்ஸ் போன்று இருந்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர், தற்போது விவ் ரிச்சர்ட்ஸே இப்படி கூறுவது உண்மையில் கோலிக்குப் பெருமை சேர்ப்பதாகு…

  9. விராட் கோலி சதத்தை விமர்சித்த மேக்ஸ்வெல்: ஸ்மித், பிஞ்ச் ஆதரிக்கவில்லை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் அவர் சதமெடுப்பதற்காக தனது அதிரடி வழியிலிருந்து திசைதிரும்புகிறார் என்று ஆஸ்திரேலிய வீர்ர் கிளென் மேக்ஸ்வெல் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் கிளென் மேக்ஸ்வெல் கருத்தை ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், ஏரோன் பிஞ்ச்சும் ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே மேக்ஸ்வெல், ‘இந்திய பேட்ஸ்மென்கள் சதம் என்ற மைல்கல்லை மட்டுமே குறிவைத்து ஆடுகின்றனர் என்று நான் நினைக்கிறேன். சிலர் மைல்கல்லை நோக்கி ஆடுகின்றனர், சிலர் அப்படி ஆடுவதில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்…

  10. ஃபிஃபா நடுவரின் வீடு இதுதான் : வறுமையும் பொறுமையும் ரூபாதேவியின் அடையாளம்! பூட்டுக்கும் பிரியாணிக்கும் மட்டும் திண்டுக்கல் பெயர் போன ஊர் கிடையாது. கால்பந்தும் இங்கும் வெகு பிரபலம். தடுக்கி விழுந்தால் ஒரு கால்பந்து வீராங்கனையை இங்கு சந்திக்கலாம். இதே திண்டுக்கல் இப்போது சூரிச் வரை பேசப்படுகிறது என்றால் அதற்கு காரணம் ரூபாதேவி என்ற கால்பந்து வீராங்கனை. தமிழகத்தில் இருந்து முதன் முறையா ஃபிஃபாவின் அங்கீகரிக்கப்பட்ட நடுவராக இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவில் கால்பந்து ஏழ்மையும் துயரமும் கலந்த விளையாட்டுதானே. அதற்கு ரூபாதேவியும் தப்பவில்லை. கூரை வேயப்பட்ட வீடு. அதுவும் ஆங்காங்கே பிய்ந்து தொங்குகிறது. ஆனால் ரூபாதேவிக்கு இன்று உலகின் பணக்கார அமை…

  11. தொடரை இழந்தது பாகிஸ்தான் January 22, 2016 வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தானை 95 ரன்கள் வித்தியாசத்தில் நொறுக்கியது நியூஸிலாந்து. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூஸிலாந்து 2-1 என்று கைப்பற்றியது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுக்க இலக்கை விரட்டிய பாகிஸ்தான் 16.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. மார்டின் கப்தில் 19 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுக்க, வில்லியம்சன் 33 ரன்களை எடுத்தார். ஆனால் கோரி ஆண்டர்சன் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 82 ரன்கள் விளாசி கடைசி வரை நாட் அவ…

  12. செய்தித் துளிகள்: அரையிறுதியில் தீபிகா பல்லிகல் தீபிகா | கோப்புப் படம் கிரானைட் ஓபன் ஸ்குவாஸ் போட்டி டொரான்டோவில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதியில் தரவரிசையில் 17வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல், எகிப்தின் சல்மா ஹனி இப்ராஹிமை எதிர்த்து விளையாடினார். இதில் 27வது இடத்தில் உள்ள சல்மாவை 12-10, 11-2, 11-4 என்ற செட் கணக்கில் தீபிகா பல்லிகல் தோற்கடித்தார். இந்த ஆட்டம் 34 நிமிடங்களில் முடிவடைந்தது. அரையிறுதியில் 6ம் நிலை வீராங்கனையான கயானாவின் நிக்கோலேடி பெர்ணான்டஸை சந்திக்கிறார் தீபிகா. ------------------------------------------------------------- இந்தியா-இலங்கை டி 20-ல் மோதல் ஆசிய கோப்ப…

  13. முதற்தடவையாக இருபதுக்கு 20 ஆசியக்கிண்ணம் ஆசியக் கிண்ண இரு­ப­துக்கு 20 தொட ரும், அதனைத் தொடர்ந்து இரு­ப­துக்கு 20 உல­கக் கிண்ணத் தொடரும் அடுத்த மாதம் நடை­பெற இருக்­கி­றது. இதற்கு தயா­ராகும் வகையில் இந்­திய– இலங்கை அணிகள் மூன்று போட்­டிகள் கொண்ட இ20 தொடரில் விளை­யாட முடிவு செய்­துள்ளன. இந்த மூன்று போட்­டிகள் நடை­பெறும் திகதி மற்றும் இடங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதன்­படி முதல் போட்டி பெப்­ர­வரி மாதம் 9ஆம் திகதி புனேவில் தொடங்­கு­கி­றது. பெப்­ர­வரி 12ஆம் திகதி டெல்­லியில் 2ஆவது போட்­டியும், பெப்­ர­வரி 14ஆம் திகதி விசா­கப்­பட்­டி­னத்தில் 3ஆ-வது மற்றும் கடைசி போட்­டியும் நடக்­கி­றது. 2014 ஆம் ஆண்டு நடை­பெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறு­திப்…

  14. உலக கிண்ண 20 க்கு 20 தொடருக்கான அயர்லாந்து அணிக்கு வாஸ் உதவி வழங்கவுள்ளார் [ Thursday,21 January 2016, 16:54:43 ] உலக கிண்ண 20 க்கு 20 கிரிக்கெட் தொடருக்கென தயாராகும் அயர்லாந்து அணிக்கு ஸ்ரீலங்கா அணியின் முன்னாள் இடதுகர வேகப்பந்துவீச்சாளர் சமிந்தவாஸ் உதவி வழங்கவுள்ளார். சமிந்த வாஸ் பந்துவீச்சு பயிற்றுவிப்பு ஆலோசகராக செயற்படவுள்ளதாக அயர்லாந்து கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் அயர்லாந்து அணியுடன் இணையவுள்ள 41 வயதான சமிந்த வாஸ், தொடர் முடிவுடையும் வரை அணியுடன் இணைந்து செயற்படவுள்ளார். மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி இந்தியாவில் உலக கிண்ண 20 க்கு 20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. அயர்லாந…

  15. தோள் பட்டை வலிக்காக டேல் ஸ்டெயினுக்கு வித்தியாசமான சிகிச்சை! தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள வலிக்காக, தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வரும் தெனாப்பிரிக்க பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. தோள்பட்டை வலி காரணமாக அந்த போட்டியில் இருந்து அவர் விலகினார். அடிக்கடி தோள்பட்டை வலியால் அவதிப்படுவதால், இந்த முறை டெல் ஸ்டெயினுக்கு ஹைபெர்பெரிக் முறையிலான ஆக்சிஜன் தெரபி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, முழுவதும் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட ஒரு தனி சேம்பரில் டேல் ஸ்டெயின் அடைக்கப்பட்டார். இந்த ச…

  16. பெண்ணுக்கு உதவிய சோங்கா : பாராட்டும் இணைய உலகம் பந்து எடுத்து கொடுக்கும் இளம்பெண்ணுக்கு செய்த உதவியால் சமூக வலைதளங்களில் புகழ்ந்து பேசப்படும் வீரராக டென்னிஸ் வீரர் ஜோ-வில்பிரட் சோங்கா காணப்படுகின்றார். டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 9ஆம் இடத்தில் உள்ள பிரெஞ்சு வீரர் ஜோ-வில்பிரட் சோங்காவுக்கும் அவுஸ்திரேலியா வீரர் ஒமர் ஜெசிகாவுக்கும் இடையேயான போட்டி அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்தது. இந்த போட்டியின் போது, ‘போல் கேர்ள்’ என்று அழைக்கப்படும் வீரர்களுக்கு பந்தை எடுத்துக் கொடுக்கும் பணியில் உள்ள இளம்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதை புரிந்து கொண்ட ஜோ, அவருக்கு ஆறுதல் கூறி மைதானத்திற்கு வெளியே கொண்டு சென்று பணியாளர்களிடம…

  17. ரொனால்டோ உலகின் பணக்கார கால்பந்து வீரரானது இப்படிதான்!(வீடியோ) ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோதான் கால்பந்து உலகின் பணக்கார வீரர். அட்டகாசமான டிரிபிளிங், தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றும் திறமை, பவர்ஃபுல் ப்ரீகிக்குகள் மட்டும் ரொனால்டோவின் அடையாளம் அல்ல. பந்தை கன்ட்ரோல் செய்வதிலும் ரொனால்டோவுக்கு நிகர் ரொனால்டோதான். GQ Magazine's 'Body Issue இதழுக்காக ரொனால்டோ பந்தை கட்டுப்படுத்தும் வித்தையை செய்து காட்டினார். அந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது. http://www.vikatan.com/news/sports/57921-ronaldo-strips-off-to-juggle-ball.art

  18. இலங்கை – இந்தியா ரி-20 பெப்ரவரியில் January 21, 2016 இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட ரி-20 தொடர் தொடர்பான அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிட்டுள்ளது. முதலாவது ஆட்டம் புனேயில் பெப்ரவரி 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது ரி-20 ஆட்டம் டெல்லியில் பெப்ரவரி 12ஆம் திகதியும், மூன்றாவது மற்றும் கடைசி ரி-20 ஆட்டம் விசாகப்பட்டினத்தில் பெப்ரவரி 14ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. http://www.onlineuthayan.com/sports/?p=8186

  19. எம்.சி.சி உரையாற்றுகிறார் மக்கலம் இவ்வாண்டுக்கான மெரிலிபோன் கிரிக்கெட் கழக(எம்.சி.சி) கிரிக்கெட்டின் உணர்வுக்கான விரிவுரையை, நியூசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம் ஆற்றவுள்ளார். எம்.சி.சி-இன் தலைமையகமான லோர்ட்ஸ் மைதானத்தில், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இந்த உரை இடம்பெறவுள்ளது. 2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த எம்.சி.சி உரை, றிச்சி பனர், தெஸ்மொன்ட் துட்டு, இம்ரான் கான், குமார் சங்கக்கார, மார்ட்டின் குரோ, இயன் பொத்தம் ஆகியோரால், இதற்கு முன்னர் ஆற்றப்பட்டிருந்தது. விரைவில் ஓய்வுபெறவுள்ள பிரென்டன் மக்கலம், நியூசிலாந்து அணியைச் சிறப்பாக வழிநடத்தி, அவ்வணியைப் பலமான அணிகளுள் ஒன்றாக மாற்றினார் எனப் புகழப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http:…

  20. இரண்டு கைகளிலும் பந்துவீசும் இந்திய வீரர் January 20, 2016 சையது முஸ்டாக் அலி டி20 டிராபி போட்டியில் விடர்பா அணியின் அக்செய் கர்னெவர் தனது 2 கைகளிலும் பந்துவீசி அனைவருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளார். இந்தியாவில் உள்ளூர் தொடரான சையது முஸ்டாக் அலி டி20 டிராபி போட்டிகள் நடந்து வருகிறது. இதில் பரோடா- விடர்பா அணிகள் மோதிய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய விடர்பா அணி 5 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் பரோடா அணி துடுப்பெடுத்தாடும் போது விடர்பா அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்செய் கர்னெவர் இரண்டு கைகளிலும் பந்துவீசினார். வலது கை துடுப்பாட்ட வீரருக்கு இடது கையிலும், இடது கை துடுப்பாட்ட வீரருக்கு வலது கையிலும் மாறி மா…

  21. அரசியலுக்காய் ஊதிப்பெருப்பிக்கப்படும் போட்டி நிர்ணயச் சர்ச்சைகள் 'இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர், பாரிய நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம்", 'ஆஜராகுமாறு அணித்தலைவர் மத்தியூஸூக்கு அழைப்பு", 'இலங்கை வீரர்கள், பாரிய நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில்" - இது, கடந்த சில நாட்களாக, இலங்கையின் பெரும்பாலான ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் தலைப்புகள். இதில், செய்திகளை வெளியிட்ட பலருக்கும் அவற்றைப் பகிர்ந்தோருக்கும், இவற்றின் பின்னணி குறித்தான தெளிவு காணப்பட்டிருக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, இவ்வாறு வீரர்களும் கிரிக்கெட்டோடு சம்பந்தப்பட்டவர்களும், கடந்த ஆட்சிக்காலத்தில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்…

  22. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் காப்பாளர் இடைநீக்கம் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் இலங்கையின் தென் பகுதியிலுள்ள காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பொறுப்பாளர் ஜயந்த வர்ணவீரவை சர்வதேச கிரிக்கெட் பேரவை மூன்று வருடங்களுக்கு இடைநீக்கம் செய்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடித் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை ஒன்றுக்கு ஒத்துழைப்பு வழங்காததன் காரணத்தினாலேயே அவரை இடைநீக்கம் செய்துள்ளதாக கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேர்முக விசாரணையில் கலந்துக்கொள்ளும்படி வர்ணவீரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு சந்தரப்பங்களில் அவர் விசாரணைக்கு வரவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …

  23. செம சேஸ்...கோலியின் ரேஸ்! டைம் டூ லீட் கோலி என வெறுத்துப்போய் ஸ்டேட்டஸ் தட்டிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தலைமையில், உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்த தென்னாபிரிக்காவை வொயிட் வாஷ் செய்த இந்திய அணி, ஒரே மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருதின போட்டிகளில் வொயிட்வாஷ் ஆகும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஆஸி மண்ணில் கடந்த 2014 -ம் ஆண்டில் இருந்து இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளிலும், ஏழு ஒருதின போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, இந்திய அணி விளையடியிருக்கிறது. அனைத்திலும் தோல்விதான். தற்போதைய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் பவுலிங் மிக மோசமாக இருக்கிறது. முதல் மூன்று போட்டிகளிலும் 290 ரன்களுக்கு மேல் குவித்து…

  24. பார்வையாளர்கள் திகைப்பில் : தலைக்கவசம் அணிந்து கடமையிலீடுபடும் நடுவர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நடுவரொருவர் பார்வையாளர்களை திகைப்புக்குள்ளாக்கும் வகையில் தலைக்கவசம் அணிந்து கடமையிலீடுபட்டுள்ளார். கான்பெராவின் மனுகா ஓவல் மைதானத்தில் இடம்பெறும் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டியில் நடுவராக பணியாற்றும் ஜோன் வோர்ட் என்ற நடுவரே இவ்வாறு தலைக்கவசம் அணிந்து கடமையாற்றுகின்றார். பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரர்களும் மற்றும் முன்னணி களத்தடுப்பில் ஈடுபடும் வீரர்களுமே தலைக்கவசம் அணிந்து விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்…

    • 1 reply
    • 622 views
  25. விழிப்புலனற்றோர் ஆசிய கிண்ண ரி 20 ஆரம்பப் போட்டியில் இலங்கை வெற்றி 2016-01-20 11:31:30 விழிப்­பு­ல­னற்­றோ­ருக்­கான அங்­கு­ரார்ப்­பண ஆசிய கிண்ண இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் பங்­கு­பற்றும் இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணி தனது முத­லா­வது போட்­டியில் பங்­க­ளா­தேஷை 9 விக்­கெட்­களால் வெற்­றி­கொண்­டது. கொச்சின், ஜவ­ஹர்லால் நேரு விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற இப் போட்­டியில் சக­ல­து­றை­களில் பிர­கா­சித்த சுரங்க சம்பத், சமன் குமார ஆகியோர் இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணியின் வெற்­றியில் பெரும் பங்­காற்­றினர். எண்­ணிக்கை சுருக்கம் பங்­க­ளாதேஷ் விழிப்­பு­ல­னற்றோர் 20 ஓவர்­களில் 129 க்கு 8 விக். (சுரங்க சம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.