Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ரொனால்டோ உலகின் பணக்கார கால்பந்து வீரரானது இப்படிதான்!(வீடியோ) ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோதான் கால்பந்து உலகின் பணக்கார வீரர். அட்டகாசமான டிரிபிளிங், தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றும் திறமை, பவர்ஃபுல் ப்ரீகிக்குகள் மட்டும் ரொனால்டோவின் அடையாளம் அல்ல. பந்தை கன்ட்ரோல் செய்வதிலும் ரொனால்டோவுக்கு நிகர் ரொனால்டோதான். GQ Magazine's 'Body Issue இதழுக்காக ரொனால்டோ பந்தை கட்டுப்படுத்தும் வித்தையை செய்து காட்டினார். அந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது. http://www.vikatan.com/news/sports/57921-ronaldo-strips-off-to-juggle-ball.art

  2. இலங்கை – இந்தியா ரி-20 பெப்ரவரியில் January 21, 2016 இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட ரி-20 தொடர் தொடர்பான அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிட்டுள்ளது. முதலாவது ஆட்டம் புனேயில் பெப்ரவரி 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது ரி-20 ஆட்டம் டெல்லியில் பெப்ரவரி 12ஆம் திகதியும், மூன்றாவது மற்றும் கடைசி ரி-20 ஆட்டம் விசாகப்பட்டினத்தில் பெப்ரவரி 14ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. http://www.onlineuthayan.com/sports/?p=8186

  3. எம்.சி.சி உரையாற்றுகிறார் மக்கலம் இவ்வாண்டுக்கான மெரிலிபோன் கிரிக்கெட் கழக(எம்.சி.சி) கிரிக்கெட்டின் உணர்வுக்கான விரிவுரையை, நியூசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம் ஆற்றவுள்ளார். எம்.சி.சி-இன் தலைமையகமான லோர்ட்ஸ் மைதானத்தில், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இந்த உரை இடம்பெறவுள்ளது. 2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த எம்.சி.சி உரை, றிச்சி பனர், தெஸ்மொன்ட் துட்டு, இம்ரான் கான், குமார் சங்கக்கார, மார்ட்டின் குரோ, இயன் பொத்தம் ஆகியோரால், இதற்கு முன்னர் ஆற்றப்பட்டிருந்தது. விரைவில் ஓய்வுபெறவுள்ள பிரென்டன் மக்கலம், நியூசிலாந்து அணியைச் சிறப்பாக வழிநடத்தி, அவ்வணியைப் பலமான அணிகளுள் ஒன்றாக மாற்றினார் எனப் புகழப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http:…

  4. இரண்டு கைகளிலும் பந்துவீசும் இந்திய வீரர் January 20, 2016 சையது முஸ்டாக் அலி டி20 டிராபி போட்டியில் விடர்பா அணியின் அக்செய் கர்னெவர் தனது 2 கைகளிலும் பந்துவீசி அனைவருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளார். இந்தியாவில் உள்ளூர் தொடரான சையது முஸ்டாக் அலி டி20 டிராபி போட்டிகள் நடந்து வருகிறது. இதில் பரோடா- விடர்பா அணிகள் மோதிய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய விடர்பா அணி 5 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் பரோடா அணி துடுப்பெடுத்தாடும் போது விடர்பா அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்செய் கர்னெவர் இரண்டு கைகளிலும் பந்துவீசினார். வலது கை துடுப்பாட்ட வீரருக்கு இடது கையிலும், இடது கை துடுப்பாட்ட வீரருக்கு வலது கையிலும் மாறி மா…

  5. அரசியலுக்காய் ஊதிப்பெருப்பிக்கப்படும் போட்டி நிர்ணயச் சர்ச்சைகள் 'இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர், பாரிய நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம்", 'ஆஜராகுமாறு அணித்தலைவர் மத்தியூஸூக்கு அழைப்பு", 'இலங்கை வீரர்கள், பாரிய நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில்" - இது, கடந்த சில நாட்களாக, இலங்கையின் பெரும்பாலான ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் தலைப்புகள். இதில், செய்திகளை வெளியிட்ட பலருக்கும் அவற்றைப் பகிர்ந்தோருக்கும், இவற்றின் பின்னணி குறித்தான தெளிவு காணப்பட்டிருக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, இவ்வாறு வீரர்களும் கிரிக்கெட்டோடு சம்பந்தப்பட்டவர்களும், கடந்த ஆட்சிக்காலத்தில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்…

  6. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் காப்பாளர் இடைநீக்கம் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் இலங்கையின் தென் பகுதியிலுள்ள காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பொறுப்பாளர் ஜயந்த வர்ணவீரவை சர்வதேச கிரிக்கெட் பேரவை மூன்று வருடங்களுக்கு இடைநீக்கம் செய்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடித் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை ஒன்றுக்கு ஒத்துழைப்பு வழங்காததன் காரணத்தினாலேயே அவரை இடைநீக்கம் செய்துள்ளதாக கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேர்முக விசாரணையில் கலந்துக்கொள்ளும்படி வர்ணவீரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு சந்தரப்பங்களில் அவர் விசாரணைக்கு வரவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …

  7. செம சேஸ்...கோலியின் ரேஸ்! டைம் டூ லீட் கோலி என வெறுத்துப்போய் ஸ்டேட்டஸ் தட்டிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தலைமையில், உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்த தென்னாபிரிக்காவை வொயிட் வாஷ் செய்த இந்திய அணி, ஒரே மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருதின போட்டிகளில் வொயிட்வாஷ் ஆகும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஆஸி மண்ணில் கடந்த 2014 -ம் ஆண்டில் இருந்து இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளிலும், ஏழு ஒருதின போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, இந்திய அணி விளையடியிருக்கிறது. அனைத்திலும் தோல்விதான். தற்போதைய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் பவுலிங் மிக மோசமாக இருக்கிறது. முதல் மூன்று போட்டிகளிலும் 290 ரன்களுக்கு மேல் குவித்து…

  8. பார்வையாளர்கள் திகைப்பில் : தலைக்கவசம் அணிந்து கடமையிலீடுபடும் நடுவர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நடுவரொருவர் பார்வையாளர்களை திகைப்புக்குள்ளாக்கும் வகையில் தலைக்கவசம் அணிந்து கடமையிலீடுபட்டுள்ளார். கான்பெராவின் மனுகா ஓவல் மைதானத்தில் இடம்பெறும் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டியில் நடுவராக பணியாற்றும் ஜோன் வோர்ட் என்ற நடுவரே இவ்வாறு தலைக்கவசம் அணிந்து கடமையாற்றுகின்றார். பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரர்களும் மற்றும் முன்னணி களத்தடுப்பில் ஈடுபடும் வீரர்களுமே தலைக்கவசம் அணிந்து விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்…

    • 1 reply
    • 618 views
  9. விழிப்புலனற்றோர் ஆசிய கிண்ண ரி 20 ஆரம்பப் போட்டியில் இலங்கை வெற்றி 2016-01-20 11:31:30 விழிப்­பு­ல­னற்­றோ­ருக்­கான அங்­கு­ரார்ப்­பண ஆசிய கிண்ண இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் பங்­கு­பற்றும் இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணி தனது முத­லா­வது போட்­டியில் பங்­க­ளா­தேஷை 9 விக்­கெட்­களால் வெற்­றி­கொண்­டது. கொச்சின், ஜவ­ஹர்லால் நேரு விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற இப் போட்­டியில் சக­ல­து­றை­களில் பிர­கா­சித்த சுரங்க சம்பத், சமன் குமார ஆகியோர் இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணியின் வெற்­றியில் பெரும் பங்­காற்­றினர். எண்­ணிக்கை சுருக்கம் பங்­க­ளாதேஷ் விழிப்­பு­ல­னற்றோர் 20 ஓவர்­களில் 129 க்கு 8 விக். (சுரங்க சம…

  10. விளையாட்டு செய்தித்துளிகள்: விராட் கோலி உழைப்பு # ஒரு கிரிக்கெட் வீரராக எனது முன்னேற்றத்திற்காக நான் கடினமாக உழைக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் கற்றுக்கொண்டு வருகிறேன். ஆடுகளத்தில் புதிதாக ஏதாவது செய்ய முயற்சிக்கிறேன். 7 ஆயிரம் ரன்னை அதிகவேகமாக கடக்க வேண்டும் என திட்டமிடவில்லை. என்னுடைய திட்டம் எல்லாம் அதிக அளவு ரன்கள் குவிக்க வேண்டும், அதன்மூலம் அணிக்கு நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்பதுதான். நான் சாதனையை எண்ணவில்லை. ஆனால், கடவுள் இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார் என்று விராட் கோலி தெரிவித்தார். # மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டி பினாங்கு நகரில் இன்று தொடங்குகிறது. பிரிமியர் பாட்மிண்டன் லீக் தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்கள் சிறிது ஓய்வுக்கு ப…

  11. மெத்தியூஸிடம் 5 மணிநேர விசாரணை இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று, சுமார் 5 மணித்தியாலங்களாக வாக்குமூலமளித்தார். பணத்துக்காக ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக குசால் ஜனித் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர், சர்வதேச கிரிகெட் சபையிடம் முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பிலேயே வாக்குமூலம் பெறப்பட்டதாக, மெத்தியூஸ் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/164146/%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B8-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%9…

  12. டெஸ்ட் தரவரிசையில் அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளி ஸ்டூவர்ட் பிராட் முதலிடம் ஐசிசி டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் ஸ்டூவர்ட் பிராட் முதலிடம். | கோப்புப் படம். ஐசிசி டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் நீண்ட காலத்துக்கு பிறகு முதலிடம் பிடித்த அஸ்வினை பின்னுக்குத்தள்ளி இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் முதலிடம் பிடித்தார். பிராட் 880 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க, அஸ்வின் 871 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும், டேல் ஸ்டெய்ன் 850 புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக டாப் 10-ல் யாசிர் ஷா, ஜேம்ஸ் ஆண்டர்சன், ரவீந்திர ஜடேஜா, டிரெண்ட் போல்ட், ஜோஷ் ஹேசில்வுட், டிம் சவுதி, வெரனன் பிலாண்டர் ஆகியோர் உள்ளனர். அதேபோல் பேட்டிங்கில் ஆஸ்திரேலிய கே…

  13. தோனி நிச்சயம் வெற்றிப்பாதைக்கு திரும்புவார்: மைக் ஹஸ்ஸி ஆதரவுக்கரம் தோனி தன்னால் முடியவில்லை என்ற மனநிலைக்கு வந்தால் நிச்சயம் ஆட்டத்தை கைவிடுவார் ஆனால் அவரால் இன்னமும் பங்களிப்பு செய்ய முடியும்-ஹஸ்ஸி. | படம்: கெட்டி இமேஜஸ். 'வீரர்களின் அழுத்தத்தைக் குறைத்து அவர்களை ரிலாக்ஸாக வைத்திருக்கும் ஆச்சரியமிக்க திறன் கொண்டவர் தோனி' என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் சென்னை அணியில் தோனியின் கீழ் ஆடியவருமான மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்ற மைக் ஹஸ்ஸி, மிஸ்டர் கிரிக்கெட் என்று அழைக்கப்படுவதற்கேற்ப தனது 40 வயதிலும் பிக்பாஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் சிட்னி தண்டர் அணியை வழி நடத்திச் சென்று அ…

  14. ரபேல் நடாலையே அசர வைத்த காது கேளாத டென்னிஸ் வீரர்! பிறவியிலிருந்து காதுகள் கேட்கவிட்டாலும், லட்சியத்தை நோக்கிய தனது பயணத்தை தங்குதடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறார் லீ டக் ஹீ. ஜனவரி 18-ம் தேதி தொடங்கும் கிரான்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கப் போகிறார், கொரியாவைச் சார்ந்த இந்த 17 வயது இளைஞன். தன்னுடைய பிரச்னையை ஒரு குறையாகவே கருதாத லீ, தனக்கு இது மிகப்பெரிய பலம் என்று சொல்லி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார். நடாலைக் கவர்ந்தவர் பிறக்கும்போதிருந்தே காது கேளாத லீக்கு, இரண்டாம் வகுப்பு படிக்கையில்தான் தனக்கு இப்படியொரு பிரச்னை இருக்கிறது என்றே தெரிந்துள்ளது. ஆனாலும் ஒருநாளும் இதைப்பற்றி வருந்தியதில்லையாம் லீ. டென்னிஸ் பேட்டை கையில் …

  15. சச்சினுக்கு கைதட்ட சொன்ன அப்பாக்கள், இவர்களை அறிமுகப்படுத்தியதுண்டா? மூன்று போட்டிகள்... மூன்றிலும் 290க்கும் மேற்பட்ட ரன்கள். ஆனால் மூன்றிலும் தோல்வி. இதற்குக் காரணம் மோசமான பந்துவீச்சு என்று தோனி சொல்லித்தான் நமக்கு புரிய வேண்டுமென்பதில்லை. இப்போது மட்டுமல்ல, கும்ப்ளே, ஸ்ரீநாத் போன்ற பந்துவீச்சாளர்கள் இந்தியாவில் விளையாடிய காலம் தொட்டு இந்திய பந்துவீச்சு என்பது இப்படித்தான். கவாஸ்கர், சச்சின், கோலி என ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை உருவாக்கிவிடும் இந்திய அணியால், வாசித்அக்ரம் போலவோ அல்லது பேட்ரிக் பேட்டர்சன் போலவோ ஒரு பந்துவீச்சாளரை உருவாக்க முடியாமல் போவது ஏன்? என்ற கேள்வி இன்றும் எழாமல் இல்லை. கிரிக்கெட்டைத் தவிர்த்து பிற…

  16. வெறும் 12 பந்துதான்.. யுவராஜ் சிங்கின் உலக சாதனை சமன்...! மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் தொடரில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் வெறும் 12 பந்துகளில் அரை சதமடித்து உலக சாதனையை சமன் செய்து விட்டார். டுவென்டி 20 போட்டிகளில் இது நாள் வரை இந்த சாதனையை இந்தியாவின் யவராஜ் சிங்தான் வைத்திருந்தார். தற்போது அதை சமன் செய்துள்ளார் கெய்ல். சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வந்த கெய்லுக்கு இந்தப் புதிய சாதனை சற்று ஆறுதல் தரும் என்று நம்பலாம். பிக்பாஷ் சீரிஸ் ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டுவென்டி 20 தொடர் நடந்து வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியின் சார்பில் ஆடி வருகிறார் கெய்ல். அடிலைடுக்கு எ…

  17. விம்பிள்டன் உட்பட பல டென்னிஸ் போட்டிகளில் மோசடி? விம்பிள்டன் போட்டிகள் உட்பட, உலகின் பல முன்னணி டென்னிஸ் போட்டிகளில், பந்தய மோசடி நடைபெற்றுள்ளன என்று சந்தேகப்படுவதற்கான ஆதாரங்கள், பிபிசி மற்றும் பஸ்ஃபீட் நியூஸ் ஆகியவை இணைந்து முன்னெடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது. விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலும் மோசடி என சந்தேகங்கள் எழுந்துள்ளன என பிபிசி கூறுகிறது. கடந்த பத்தாண்டுகளில்,கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் உட்பட பலர், பந்தய மோசடியில் ஈடுபட்டு ஆட்டங்களில் தோல்வியடைந்தனர் எனும் சந்தேகத்தின் பேரில், டென்னிஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என்று, இரகசிய ஆவணங்கள் மற்றும் கோப்புகள் காட்டுகின்றன. பல விளையாட்டு வீ…

  18. சங்காவை துரத்தும் டோனி January 18, 2016 விக்கட் கீப்பராக செயல்பட்டடுவரும் டோனி, ஜார்ஜ் பெய்லியை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து ஆட்டமிழக்க செய்தார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கட் கீப்பர்கள் வரிசையில் டோனி (415 போட்டி, 138 ஸ்டம்பிங்) 2வது இடம்பிடித்தார். இலங்கை அணியின் சங்கக்காரா 594 போட்டிகளில் 139 ஸ்டம்பிங்கள் செய்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்க்கது http://www.onlineuthayan.com/sports/?p=7975

  19. பிரீமியர் லீக் :மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 176 கோல்கள் அடித்து ரூனி சாதனை பிரீமியர் லீக்கில் ஒரே அணிக்காக அதிக கோல் அடித்து மான்செஸ்டர் யுனைடெட் ஸ்டிரைக்கர் ரூனி புதிய சாதனை படைத்தார். நேற்று ஆன்பீல்ட் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் லிவர்பூல் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பிற்பாதியில் 78வது நிமிடத்தில் ஜுவான மாத்தா கிராஸ் செய்த பந்தை ஃபெலானி தலையால் முட்டினார். பந்து கிராஸ்பாரில் பட்டு ரீபவுண்ட் ஆனது. அதனை ரூனி மின்னல் வேகத்தில் கோலுக்குள் அடித்தார். இது மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ரூனி அடிக்கும் 176வது கோல் ஆகும். பிரீமியர் லீக்கை பொறுத்த வரை ஒரே அணிக்காக அதிக கோல் அடித்து இதுவரை திய…

  20. நாளை இலங்கை வருகிறது உலகக் கிண்ணம் 6 ஆவது இருபதுக்கு20 உலகக்கிண்ணம் இந்தியாவில் எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை 16 நாடுகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரின் உத்தியோகபூர்வ கிண்ணம் இலங்கை வரவுள்ளது. உலகம் முழுவதும் வலம் வரும் இக்கிண்ணம், நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இலங்கையில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக் கிண்ணமானது மக்கள் பார்வைக்காக எதிர்வரும் 17ஆம் திகதி காலி முகத்திடலில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 இல் பங்களாதேஷில் இடம்பெற்ற 5 ஆவது தொடரின் கிண்ணத்தை இலங்கை அணி தனதாக்கிக் கொண்டது. இருபதுக்கு20 கிண்ணத்திற்கான தொடர் 2007 ஆம…

  21. இணைப்பாட்டத்தில் கப்டில் - வில்லியம்சன் உலக சாதனை; பாகிஸ்தானை 10 விக்கெட்களால் வென்றது நியூஸிலாந்து 2016-01-17 19:45:21 பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான இரண்­டா­வது சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் இணைப்­பாட்ட உலக சாதனை நிலை­நாட்­டிய மார்ட்டின் கப்­டிலும் கேன் வில்­லி­யம்­சனும் நியூ­ஸி­லாந்­துக்கு 10 விக்கெட் வெற்­றியை ஈட்­டிக்­கொ­டுத்­தனர். இவர்கள் இரு­வரும் பிரிக்­கப்­ப­டாத ஆரம்ப விக்­கெட்டில் பகிர்ந்த 171 ஓட்­டங்கள் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் எந்த ஒரு விக்­கெட்­டுக்­கு­மான அதி­கூ­டிய இணைப்­பாட்­ட­மாகும். இதற்கு முன்னர் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ராக ப்றிஜ்­டவுன் வ…

  22. டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடம்: ஒரு வருடத்திற்கு யாரும் அசைக்க முடியாது! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த தென்னாப்பிரிக்க அணி, நம்பர் 1 இடத்தையும் இழந்தது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. தோனி தலைமையிலான இந்திய அணி முதலிடத்தில் 2011ம் ஆண்டு இருந்தது. அதன் பின் அந்த இடத்தை தற்போது கோலி தலைமையிலான இந்திய அணி பிடித்துள்ளது. தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட மிக குறைந்த டெசிமல் புள்ளிகள் வித்தியாசத்தில் வேறுபட்டுள்ளது. ஆனாலும் இந்திய அணியால் ஒரு வருடத்துக்கு இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் எப்படி தெரியுமா? ஆஸ்திரேலிய அணிக்கு தற்போது உள்ள அட்டவணைப…

  23. நாக்அவுட் நாயகன் முகமது அலி ஒலிம்பிக் தங்க பதக்கத்தை நதியில் வீசியெறிந்தது ஏன்? களம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகள், அதில் 37 நாக்-அவுட் வெற்றிகள், ஒலிம்பிக் தங்கப்பதக்கம் என குத்துச்சண்டை உலகின் பிதாமகன் முகமது அலியின் பிறந்த தினம் இன்று. தனது ஆக்ரோஷமான குத்துக்களால் எதிராளியை நிலைகுலைய வைக்கும் முகமது அலி, அடிப்படையில் அமைதியை விரும்புவர். வியட்நாம் போரை எதிர்த்ததற்காக தடை செய்யப்பட்டாலும் தன் நிலையை மாற்றிக்கொள்ளாதவர். மருத்துவர்களே கைவிட்டாலும் தனது மனோபலத்தால் இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர். அவரது வாழ்வில் நடந்த சில ருசிகர சம்பவங்கள் இங்கே சைக்கிள் திருடனால் குத்துச்சண்டை வீரராக மாறியவர் 1942ம் ஆண்டு ஜனவரி 17ம் நாள் அமெரிக…

  24. சிறந்த பங்களிப்பு அளிக்க முடியாமையால் மன்னிப்பு கேட்டார் சங்கா பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் சிறப்பாக விளையாட முடியாமல் போனதற்கு அந்த அணி வீரர்களிடம் குமார் சங்கக்காரா மன்னிப்பு கோரியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா அவுஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் லீக் டி20 தொடரில் ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 8 போட்டிகளில் விளையாடிய சங்கக்காரா 105 ஓட்டங்களே எடுத்தார். அடிலெய்டு ஸ்டைக்கர்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் கூட 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில் அணிக்கு சிறந்த பங்களிப்பு அளிக்க முடியாமல் போனதால் சங்கக்காரா வீரர்களிடம் மன்னிப்பு கோரியதா…

  25. பதில் சொல்ல முடியாத அளவுக்கு ஆஸி நிருபரை கலாய்த்த தோனி (வீடியோ) இரண்டாவது போட்டியில் தோற்ற பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தோனி. தோல்விக்கான காரணங்களை கூறினார். இடையில் ஒரு ஆஸி நிருபர் 'ரோஹித் ஷர்மா எட்ஜ் ஆனதற்கு அவுட் வழங்கப்படவில்லையே என கேட்க தோனி கூலாக '' நீங்கள் சொன்ன ஸ்லாங் எனக்கு புரியவில்லை மீண்டும் கூறுங்கள் என கேட்டார். நிருபரும் திரும்ப அதே கேள்வியை கேட்க ''ஓ! எட்ஜ் குறித்து கேட்கிறீர்களா? நான் உங்களுக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன், காரணம் சென்ற முறை ஜார்ஜ் பெய்லி குறித்து என்னிடம் நீங்கள் இதே கேள்வியை என்னிடம் கேட்கவில்லை' என நக்கலாக சென்ற போட்டியில் பெய்லிக்கு அவுட் வழங்கப்படாததை சுட்டி காட்டி கலாய்த்தார். அந்த ஆஸி நிருபரும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.