விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
இலங்கை எறிபந்து அணியில் முதல் முறை தமிழ் வீரர்கள் November 25, 2015 இலங்கை எறிபந்து அணியில் 19 வயது ஆண்கள் பிரிவில் ஆர்.பிரவீன், பெண்கள் பிரிவில் பி.கிருத்திகா, கே.சபரி சாமிகா ஆகியோர் டிசெம்பர் 27ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதிவரை மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றவுள்ளனர். இதேபோன்று இன்று புதன்கிழமை மலேசியாவில் நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை கலிலியா கிறசன் கழகம் சார்பாக என்.திவ்வியநாத், எஸ். தரன், எஸ்.அபிநயன், பி.சாருஜன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எறிபந்துப் போட்டியில் தமிழ் வீரர்கள் கலந்து கொள்வது இதுவே முதல் முறை ஆகும். http://www.onlineuthayan.com/sports/?p=3940&cat=3
-
- 0 replies
- 921 views
-
-
இலங்கை அணியில் நான்கு தமிழ் வீரர்கள் November 25, 2015 கெவின் பீற்றர்சன் கிரிக்கெட் பவுண்டேசனினால் நடத்தப்படும் துடுப்பாட்டத் தொடரில் பங்குபற்றும் இலங்கை அணியில் நான்கு தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த தொடர் எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 3ஆம் திகதி வரை டுபாயில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான அணி நேற்று முன்தினம் டுபாய் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. நடப்பு வருடத்தில் வடமாகாணத்தில் இடம் பெற்ற முரளி கிண்ணத் தொடரில் சிறந்த பெறுபேற்று வெளிப்படுத்திய 12 வீரர்கள் ஒரு அணியாகத் தெரிவுசெய்யப்பட்டனர். இதில் வவுனியா மாவட்ட இணைந்த அணியில் விளையாடிய கிரிதரன், சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியில் விளையாடிய …
-
- 9 replies
- 1.1k views
-
-
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டுக்கு இடமளிக்கப்படுமா? சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சாட்சன் சமீபத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.சி.சி) தலைவரை சந்தித்து பேசினார். அப்போது ஒலிம்பிக் போட்டியில் 20 பேர் கிரிக்கெட் போட்டியை சேர்ப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார். இதுபற்றி ‘‘ரிச்சாட்சன் கூறும்போது, ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுவதற்காக சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு ஐ.ஓ.சி. தலைவரிடம் கேட்டுக் கொண்டேன். 2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தேன். கிரிக்கெட் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அவ்வளவு எளிது அல்ல’’ என்றார். …
-
- 0 replies
- 439 views
-
-
சோதனைகளில் சாதித்த இம்ரான் கான் - சிறப்பு பகிர்வு.. உலகக்கோப்பையில் ஆசிய அணிகளின் ஆதிக்கத்தை கபில் தேவ் துவங்கி வைத்தார் என்றால் அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர் இம்ரான் கான். அவரின் பிறந்த தினம் நவம்பர் 25. 92 ஆம் வருடம் உலககோப்பையை பாகிஸ்தான் அணி வென்றதே எதோ ஒரு தேவதைக்கதை போல மாயங்களும்,அதிர்ஷ்டங்களும்,அற்புதமான சுவாரசியங்களும் நிரம்பியது. இம்ரான் கான் தான் அணியின் தலைவர். அம்மாவுக்கு கேன்சர் வந்து இறந்து போயிருக்க அவரைப்போல துன்பப்படும் எண்ணற்ற பிரஜைகளுக்கு உதவும் மருத்துவமனையை கட்டிக்கொண்டு இருந்தார் அதற்கு பணம் தேவைப்பட்டது. நாற்பது வயதில் அணியின் கேப்டனாக அந்த ஆசையோடு பொறுப்பேற்றுக்கொண்டார். வேகப்புயல் வக்கார் யூனிஸ் போட்டிக்கு சில வாரங்கள…
-
- 0 replies
- 745 views
-
-
பிளட்டர், பிளட்டினிக்கு 7 வருடத் தடை? இடைக்காலத் தடைக்குள்ளாக்கப்பட்டு உள்ளவர்களான, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவரான செப் பிளட்டருக்கும் ஐரோப்பிய கால்பந்தட்டாச் சங்கங்களின் ஒன்றியத் தலைவர் மைக்கல் பிளட்டினிக்கும், ஏழு வருடத் தடை விதிக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களிருவரின் மேலும் விதிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டாலேயே, இந்தத் தண்டனை வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. பிளட்டரின் ஆலோசகராக 2002ஆம் ஆண்டில் செயற்பட்டமைக்காக, 2011ஆம் ஆண்டில் பிளட்டினிக்கு வழங்கப்பட்ட 1.35 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்கள் தொடர்பாகவே, அவர்களுக்கெதிரான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆலோசனைப் பணிக்கா…
-
- 2 replies
- 927 views
-
-
ரியல் மெட்ரிட் பயிற்றுநரை நீக்காவிட்டால் தான் விலகப்போவதாக ரொனால்டோ எச்சரிக்கை! ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழகத்திலிருந்து பயிற்றுநர் ரபாயெல் பெனிட்டஸை நீக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் அக்கழகத்திலிருந்து தான் விலகப்போவதாகவும் கிறிஸ்டியானோ ரொனால்டோ எச்சரித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்த்துக்கல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (30) 2009 ஆம் ஆண்டு முதல் ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழகத்தில் விளையாடி வருகிறார். ஆனால், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற லா லீகா போட்டியில் ரியல் மெட்ரிட் கழகத்தை பார்ஸிலோனா கழகம் 4:0 கோல்களால் வென்றது. இத்தோல்வியினால், லா லீ…
-
- 0 replies
- 515 views
-
-
19 வயதின்கீழ் இலங்கை குழாமில் சனோகீத் சண்முகநாதன் பத்தொன்பது வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாமில் கண்டி திரித்துவ கல்லூரி சகலதுறை வீரர் ஷனோகீத் சண்முகநாதன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். துடுப்பாட்டத்திலும் சுழல்பந்துவீச்சிலும் சிறந்து விளங்கும் இவருக்கு கிரிக்கெட் விளையாட்டுத்துறையில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்து, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் மும்முனை தொடரை முன்னிட்டு இலங்க…
-
- 0 replies
- 652 views
-
-
வெளிநாட்டுக்கு கிரிக்கெட் வீரர்கள் ஏற்றுமதியை தொடங்கியது சீனா! விளையாட்டுத்துறையில் சீனா கொடி கட்டி பறக்கும் நாடு. ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிகளில் சீனாவின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருக்கும். ஜிம்னாஸ்டிக் , பளுதூக்குதல் போன்ற பிரிவுகளில் சீன வீரர்- வீராங்கனைகளை அடித்துக் கொள்ள முடியாது. ஆனால் அந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடையாது. இந்தியாவின் அண்டைநாடாக இருந்த போதிலும், சீனர்கள் கால்பந்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கிரிக்கெட்டுக்கு கொடுப்பது இல்லை. ஹாங்காங் உள்ளிட்ட சில நகரங்களில் கிரிக்கெட் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது உண்டு. அந்த வகையில் முதல்முறையாக சீனாவை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வ…
-
- 0 replies
- 684 views
-
-
ஏடிபி டூர் பைனல்ஸ் போட்டி: பெடரரை வீழ்த்தி 4வது முறையாக பட்டம் வென்றார் ஜோகோவிக் லண்டனில் நடைபெற்ற ஏடிபி டூர் பைனல்ஸில் சாம்பியன் பட்டம் வென்ற செர்பியாவின் ஜோகோவிக். படம்: ஏஎஃப்பி 2வது இடம் பிடித்த பெடரர். படம்: ஏஎஃப்பி ஏடிபி டூர் பைனல்ஸ் இறுதிப்போட்டி யில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்தி நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோ விக் பட்டம் வென்றார். ஏடிபி டூர் பைனல்ஸில் அவர் தொடர்ச்சியாக பட்டம் வெல்வது இது 4வது முறை யாகும். லண்டனில் ஏடிபி டூர் பைனல்ஸ் போட்டி நடைபெற்றது. தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்…
-
- 0 replies
- 602 views
-
-
தென்னாப்ரிக்கா சிறந்த அறிமுக கிரிக்கெட் வீரராக ரபடா தேர்வு செவ்வாய், 24 நவம்பர் 2015 (00:18 IST) தென்னாப்ரிக்காவின் சிறந்த அறிமுக கிரிக்கெட் வீரராக ரபடா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்னாப்ரிக்காவில், இந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தென்னாப்ரிக்காவின் சிறந்த அறிமுக கிரிக்கெட் வீரராக ரபடா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தான் ரபடா அறிமுகம் ஆனார். ஆனால், அந்த போட்டியில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆநால் 6 விக்கெட்டுகள் அற்புதமாக வீழ்த்தினார். இதன் மூலம், அறிமுக போட்டியில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற…
-
- 0 replies
- 639 views
-
-
இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் இடம்பெறலாம் ! இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டித் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸிலோ அல்லது இலங்கையிலோ நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபையும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா, நடக்காதா என்று பல கேள்விகள் எழுந்து வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து இருநாட…
-
- 0 replies
- 541 views
-
-
பங்களாதேஷ் பிரீமியர் லீக் : டைனமைட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான நிலையில், முதல் நாளில் நடைப்பெற்ற கொம்மிலா விக்டொரியன்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில், டாக்கா டைனமைட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இப் போட்டியானது, நேற்று மிர்பூர் மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற, கொம்மிலா விக்டொரியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன் படி முதலில் களமிறங்கிய கொம்மிலா விக்டொரியன்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களை குவித்தது. அணியின் அதிகபட்ச ஓட்டமாக மஸ்ரபீ மோடார்ஸா 26 பந்தில் இரு சிக்சருடன்…
-
- 2 replies
- 852 views
-
-
அஷ்வின் vs டி வில்லியர்ஸ் - இதுவரை ஜெயிச்சது யாரு? கிரிக்கெட் உலகில், கடந்த சில ஆண்டுகளாக உலகின் அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் மரண பயத்தைக் கொடுத்து வருகிறார் தென்னாப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ். ஒரு காலத்தில் சச்சின் விக்கெட்டை வீழ்த்தும் பவுலரை உலகம் எப்படி கொண்டாடியதோ, அதுபோல தற்போது டி வில்லியர்ஸின் விக்கெட்டை வீழ்த்தும் நபருக்கு பாராட்டுகள் குவிகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்கா தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றை தென்னாப்பிரிக்கா கைப்பற்ற, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு டி20, ஐந்து ஒருநாள் போட்டி, மூன்று டெஸ்ட் இன்னிங்ஸ…
-
- 0 replies
- 581 views
-
-
முழு பலத்துடன் களமிறங்கவுள்ளோம் : லசித் மலிங்க இருபதுக்கு 20 உலகக் கிண் ணத்திற்கு நாம் தயாராகிக்கொண்டிருக்கிறோம். எந்தெந்த பயிற்சிகள் தேவையோ அத்தனையை யும் பெற்று முழு பலத்துடன் களமிறங்கவுள்ளோம். நடப்பு சம்பியன் என்ற சூழலில் களமிறங்குவதால் அழுத்தம் இருக்கி றதா என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. வெற்றி என்பது ஒரு திருப்புமுனைதான். தொடர் வெற்றியே எமது இலக்கு என இலங்கை இருபதுக்கு 20 அணித் தலைவர் லசித் மலிங்க தெரிவித்தார். இலங்கையின் இருபதுக்கு 20 ஆண்கள் கிரிக்கெட் அணிக்கும் பெண்கள் கிரிக்கெட் …
-
- 0 replies
- 517 views
-
-
சானியாவுக்கு இது பொன்னான வருடம் தனது டென்னிஸ் வாழ்க்கையில் இந்த வருடம் ஒரு பொன்னான வருடமாக அமைந்ததாக இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தெரிவித்துள்ளார். பெண்களுக்கான இரட்டையர் தரவரிசையில் முதல் நிலை வீராங்கனையான சானியா மீர்ஸா, இந்த வருடம் பல வெற்றிகளை ஈட்டியுள்ளதுடன் இந்த வெற்றிகள் மனநிறைவை தருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வருடத்தை விட சிறந்த வருடம் மிண்டும் அமைவது மிகவும் கடினம் என அவர் கூறினார். அடுத்த ஆண்டு இந்த ஆண்டை விட சிறப்பாக அமையும் என எதிர்பார்ப்பதுடன் இந்த ஆண்டுக்கு நிகரான வெற்றிகளை குவிக்க முடியும் என்ற…
-
- 0 replies
- 595 views
-
-
பாகிஸ்தான் – இங்கிலாந்து தொடரில் மீண்டும் கிழம்பியது சூதாட்டச் சர்ச்சை November 23, 2015 பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாகவும் பாகிஸ்தான் வீரர்களே அவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் சர்ச்சை ஏற்பட்டுள்ளன. தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 2–0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 3–1 என்ற கணக்கிலும் கைப்பற்றின. மூன்று ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடர் வருகிற 26ஆம் திகதி தொடங்குகிறது. இதற்கிடையே சார்ஜாவில் நடந்த 3ஆவது ஒருநாள் ஆட்டத்தில் சூதாட்டம் நடைபெற்றதாக பத்திரிக்கை ஒன்று குற்றம்சாட்டி உள்ளது. அதோடு இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கட்டுப…
-
- 0 replies
- 325 views
-
-
வில்லியர்ஸ்தான் வில்லன் November 22, 2015 தான் சந்தித்ததில் மிகவும் கடினமான துடுப்பாட்ட வீரர் என்றால் அது தென்னாபிரிக்காவின் வில்லியர்ஸ்தான் என்று தெரிவித்துள்ளார் ஜோன்சன். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்துடன் சர்வதேச ஆட்டங்களில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார் ஜோன்சன். ஓய்வின் பின்னர் தனது கிரிக்கெட் வாழ்வில் நடந்த சில சுவாரஷ்யமான விடயங்களை அவர் பகிர்ந்துள்ளார். இதன்படி தனக்கு சவாலான வீரராக வில்லியர்ஸை குறிப்பிட்டுள்ளார். வில்லியர்ஸ் தொடர்பாக ஜோன்சன் குறிப்பிடுகையில் – ‘2012ஆம் ஆண்டு சென்சூரியன் நகரில் நடந்த ஆட்டம் எனக்கு நினைவுள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்தில் நான் சில இலக்குகளை வீழ்த்தி, கம்பீரமாக வலம் வந்தேன். அப்போது கள…
-
- 0 replies
- 404 views
-
-
டோனி அனைத்தும் அறிவார் November 21, 2015 கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது க்கு தெரியும் என்று முன்னாள் கிரிகெட் வீரர் ஜி.ஆர் விஸ்வநாத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என்பது தனிப்பட்ட அந்த வீரரை பொறுத்தது. பிறர் அதை வலியுறுத்த கூடாது. டோனி இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு உழைத்துள்ளார். அவருக்கு எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது நன்கு தெரியும். பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள், ஒரு வீரருக்கு தேவைப்படும் அளவுக்கு, சிக்னல்களை கொடுத்து விடுகிறார்கள். எனவே அந்த வீரர் வெளியேற்றத்திற்கு அவராகவே தயாராகிவிடுவார். முன்பெல்லாம் இப்படி கிடையாது. திடீரென வீரர்களை நீக்கி விடுவார்கள்.…
-
- 0 replies
- 391 views
-
-
சூதாட்டத்தில் ஈடுபட்ட மொகமது ஆமீருடன் ஆட முடியாது: ஹபீஸ் திட்டவட்டம் மொகமது ஹபீஸ். | கோப்புப் படம். சூதாட்டத்தில் ஈடுபட்டு சிறைத் தண்டனை அனுபவித்த பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமீருடன் சேர்ந்து ஆட முடியாது என்று மொகமது ஹபீஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் பிரிமியர் லீகின் சிட்டகாங் வைகிங்ஸ் அணி ஹபீஸுடன் ஏற்படுத்தவிருந்த ஒப்பந்தத்தை மொகமது ஹபீஸ் நிராகரித்ததாக செய்திகள் எழுந்தன. காரணம் அந்த அணியில் சூதாட்ட வீரர் ஆமீர் இருந்தார் என்பதே. “நான் எந்த ஒரு தனிநபருக்கு எதிராகவும் பேசவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கவுரவம் பற்றிய விவகாரம் இது. நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய நாட்டு கிரிக்கெட் அணியின் பெயரைக்…
-
- 0 replies
- 259 views
-
-
சொந்த மைதானத்தில் பார்சிலோனாவிடம் 4 கோல்கள் வாங்கி ரியல்மாட்ரிட் படுதோல்வி ஸ்பானீஷ் லீக் கால்பந்து தொடரில் நேற்று இரவு நடைபெற்ற எல்கிளாசிகோ மோதலில் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் அணியை தோற்கடித்தது. மாட்ரிட் நகரில் ரியல்மாட்ரிட் அணிக்கு சொந்தமான சான்டியாகோ பெர்னாபூ மைதானத்தில் 85 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இந்த ஆட்டம் நடைபெற்றது. ரியல்மாட்ரிட் அணியின் கரீம் பென்ஜமா,ஜேம்ஸ் ரோட்ரிகஸ் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். பார்சிலோனா அணியின் காயம் காரணமாக லயனல் மெஸ்சி இடம் பெறவில்லை. சவுரஸ் தலைமையில் பார்சிலோனாவின் முன்களம் ஆடியது. முதல் பாதியில் 11வது நிமிடத்தில் நெய்மர் கொடுத்த பாசை பயன்படுத்தி சவுரஸ் முதல் கோலை அடித்தார். அடு…
-
- 0 replies
- 300 views
-
-
கிரிக்கெட் வீரர் மயங்கி விழுந்து பலி நமீபியா கிரிக்கெட் வீரர் ரெய்மண்ட் வேன் ஸ்கூர் மைதானத்தில் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரெய்மண்ட் வேன் ஸ்கூர் (வயது 25) பக்கவாதத்தால் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவர் 8000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/11/21/%E0%AE%95%E0…
-
- 0 replies
- 245 views
-
-
தொடரை வென்றது இங்கிலாந்து நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 84 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஒயின் மோர்கன், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என தெரிவித்தார். இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படதா போதும், பாகிஸ்தான் அணியில், காயத்திலிருந்து மீண்ட யசீர் ஷா, ஸபார் க…
-
- 0 replies
- 485 views
-
-
46 பந்தில் ஜாஸ் பட்லர் சதம் விளாசல் 46 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்த ஜாஸ் பட்லர். பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் குவித்தது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகித்த நிலையில் நேற்று கடைசி போட்டி துபையில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க வீரர்களில் ஒருவரான ராய் 117 பந்தில், 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 102 ரன்னும், அடுத்து வந்த ஜோ ரூட் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஜாஸ் பட்லர் 46 பந்தில் சதம் அடித்து மிரட்டினார். அவர் 52 பந்தில், 8 சிக்ஸர், 10 பவுண்ட…
-
- 1 reply
- 293 views
-
-
கழகங்களுக்கிடையிலான AIA பிரீமியர் கிரிக்கெட் போட்டி ஆரம்பம் கழகங்களுக்கிடையிலான AIA பிரீமியர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நாடளாவிய ரீதியில் 14 கழகங்கள் பங்கேற்கும் AIA பிரீமியர் கிரிக்கெட் தொடர் 11 நாட்கள் வெவ்வேறு மைதானங்களில் இடம்பெறுகின்றது. குழுமட்ட போட்டிகள் அனைத்தும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை இடம்பெறும். முதலாவது அரையிறுதிப் ப…
-
- 0 replies
- 474 views
-
-
பயிற்றுநர் பதவியிலிருந்து வக்காரை நீக்குமாறு மியண்டாட், சர்வ்ராஸ் வலியுறுத்தல் பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்றுநர் வக்கார் யூனிசை நீக்கி புதிய ஒருவரை பயிற்றுநராக நியமிக்கவேண்டும் என முன்னாள் வீரர்களான ஜாவேட் மியண்டாடும் சர்வ்ராஸ் நவாஸும் வலியுறுத்தியுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தமை ஏமாற்றத்தைத் தருவதாக இருவரும் குறிப்பிட்டுள்ளனர். தலைமைப் பயிற்றுநர் வக்கார் யூனிஸின் விருப்பு, வெறுப்புகளுக்கு அமையவே விளையாடும் பதினொருவர் தெரிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட மியண்டாட், எனவ…
-
- 0 replies
- 287 views
-