Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. குமார் சங்ககாரா மீண்டும் சதம் இங்கிலாந்து surrey கவுன்டி அணிக்காக ஆடிவரும் குமார் சங்ககாரா County Championship போட்டியில் Lancashire அணிக்கு எதிராக 118 ஓட்டங்கள் எடுத்து உள்ளார். Surrey 480 & 283/7d Lancashire 272 & 22/0 (7.0 ov) Lancashire require another 470 runs with 10 wickets http://www.espncricinfo.com/county-championship-div2-2015/engine/match/804433.html

  2. இங்கிலாந்து பயிற்றுநர் குழாமில் மஹேல, கொலிங்வுட் பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான மூவகை கிரிக்கெட் தொடர்­களை முன்­னிட்டு மஹேல ஜய­வர்­தன, போல் கொலிங்வுட் ஆகி­யோரை விசேட பயிற்­று­நர்­க­ளாக இங்­கி­லாந்து நிய­மித்­துள்­ளது. இதன் மூலம் தனது நிபு­ணத்­துவ பயிற்­றுநர் குழாமை இங்­கி­லாந்து பலப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளது. ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­திற்கு விஜயம் செய்யும் இங்­கி­லாந்து அணியின் பயிற்சிப் போட்­டி­யின் ­போதும் பாகிஸ் ­தா­னுக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­யின் ­போதும் இங்­கி­லாந்து அணிக்கு துடுப்­பாட்டப் பயிற்­சி­களை மஹேல ஜய­வர்­தன வழங்­க­வுள்ளார். ஆசிய கண்ட ஆடு­க­ளங்­களின் தன்­மையை நன்கு அறிந்­துள்ள மஹேல ஜய­வர்­தன, இந்த ஆடு­க­ளங்­களில் திற­மையை …

  3. பார்சிலோனா அணிக்கு எதிராக ரோமா வீரர் அடித்த அசத்தல் கோல் (வீடியோ) சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று ரோம் நகரில் நடந்த ஆட்டத்தில், பார்சிலோனா- ஏ.எஸ். ரோமா அணிகள் மோதின. இந்த போட்டியின் போது பார்சிலோனா அணியின் சுவாரஸ் 21வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். மெஸ்சி கொடுத்த கிராசை தலையால் முட்டி சுவாரஸ் கோலாக்கினார். 31வது நிமிடத்தில் ரோமா அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணியின் ஃபுளோரன்சி 60 அடி தொலைவில் இருந்து அடித்த பந்து மிக நேர்த்தியாக வளைக்குள் வந்து தஞ்சமடைந்தது. பார்சிலோனா அணியின் கோல்கீப்பர் ஸ்டெகன் கோல்கம்பத்தை விட்டு சற்று முன்னால் நின்று கொண்டிருந்ததை கவனித்த ஃபுளோரன்சி அந்த சமயத்தை பயன்படுத்தி மிக நேர்த்தியாக இந்த கோலை…

  4. சானியாவின் அடுத்த ஜோடி யார்? கடந்த 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில், இந்திய டென்னிஸ் அணித் தேர்வில் யார்-யாருடன் ஜோடி சேருவது என்பதில் ஒரு களேபரமே நடந்தது. இறுதியில் 7 பேர் கொண்ட இந்திய டென்னிஸ் குழுவினர் வெறுங்கையுடன் திரும்பியது தான் மிச்சம். இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, லியாண்டர் பெயசுடன் சேர்ந்து விளையாடினார். இந்த நிலையில் 2016-ம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் போது சானியா மிர்சா யாருடன் ஜோடி சேருவார் என்ற கேள்வி இப்போதே எழத் தொடங்கி விட்டது. சானியா சூப்பர் பார்மில் இருப்பதால் கலப்பு இரட்டையர் பிரிவு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்திய முன்னணி வீரர் ரோகன் போபண்ணாவிடம் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்திய…

  5. தேசிய மட்ட கபடிப் போட்டிகளில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் சாதனை படைத்துள்ளன. 15 வயது பிரிவில் கிளிநொச்சி சிவபுரம் அ.த.க பாடசாலை முதலிடத்தினையும், 19 வயது பிரிவில் கிளிநொச்சி இந்து கல்லூரி இரண்டாம் இடத்தினையும் பெற்று மாவட்டத்திற்கும், வடமாகாணத்திற்கும் புகழ் தேடி தந்துள்ளனர். கிளிநொச்சி இந்துக்கல்லூரி 19 வயது பிரிவு மாணவர்கள் திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய மட்ட கபடி போட்டியில் அனுராதபுரம் மக்குளாவ மகாவித்தியாலயத்தை எதிர்த்து தேசிய மட்டத்திற்கான இறுதிப்போட்டியில் போட்டியிட்டு பத்திற்கு இருபது எனும் விகிதத்தில் இரண்டாம் நிலையினை பெற்றுக்கொண்டார்கள். இப்போட்டியில் பிரகாசித்த இரு வீரர்களான க.தசப்பிரியன், எஸ்.சிவராஜ் ஆகியோர் தேசிய கபடி அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறி…

  6. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு மிஸ்பா உல் ஹக். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. ஐக்கிய அரபு அமீரகத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இடது கை பேட்ஸ்மென் ஃபவாத் ஆலம் சேர்க்கப்பட்டுள்ளார். 2009-ம் ஆண்டில் நியூஸிலாந்துக்கு எதிராக பவாத் ஆலம் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியதால் அவர் அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொழும்புவில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் 168 ரன்களை அடித்தார் பவாத் ஆலம். பாகிஸ்தான் டெஸ்ட் அணி வருமாறு: மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), அகமது ஷெசாத், ஷான் மசூத்…

  7. சாம்பியன்ஸ் லீக் தொடங்கியது : ஐரோப்பாவின் கால்பந்து அரசன் யார்? (அலசல் கட்டுரை) உலக கால்பந்து காதலர்களின் தாகத்தைத் தணிக்க வந்துவிட்டது யூஃபா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ஜூன் இறுதியில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று, 17 நாடுகளைச் சார்ந்த 32 அணிகள் இத்தொடரில் விளையாட தகுதிபெற்றுள்ளன. செப்டம்பர் 15 தொடங்கும் 61ஆவது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், பங்கேற்கும் 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் இரண்டு அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி இத்தாலியின் சான் சிரோ நகரில் நடைபெறும். வெற்றி பெரும் அணிக்கு பரிசுத் தொகையாக 15 மில்லியன் யூரோ வழங்கப்படும். தற்போது இக்கோப்ப…

  8. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுகிறார் கெயில்! பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முதல் சீசன் அடுத்த ஆண்டு கத்தாரில் உள்ள தோஹா நகரில் தொடங்குகிறது. ஐந்து அல்லது 6 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த தொடரில் குறைந்தது 25 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறவேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தொடரில் வீரர்களுக்கான வரைவு பட்டியலில் கெயில் இடம் பெறுவார் என வீரர்களை ஒப்பந்தம் செய்யும் ஏஜன்சி உறுதி செய்துள்ளது. டி20 போட்டிகளை பொறுத்த வரை கெயிலுக்கு சந்தை மதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் இவரை ஏலம் எடுக்க பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகள் முட்டி மோதிக் கொள்ளும். இவர் தவிர கீரான் பொல்லார்ட், டேரன் சமி,சுனில் நரீன், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஓவைஸ் ஷா …

  9. சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி தோல்வி! சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்றுத் தொடங்கின. இதில் இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி அணிகள் முதல் ஆட்டத்திலேயே பரிதாப தோல்வியை சந்தித்துள்ளன. 'பி ' பிரிவில் இடம் பெற்றுள்ள மான்செஸ்டர் யுனைடெட் அணி நேற்று பி.எஸ்.வி என்டோவன் அணியை எதிர்கொண்டது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி அதிர்ச்சி தோல்வி கண்டது. மற்றொரு ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் சக்தர் டொனாஸ்க் அணியை வீழ்த்தியது. கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார். கரீம் பென்ஜமா தன் பங்குக்கு ஒரு கோல் அடித்தார். இங்கிலாந்தை சேர்ந்த ம…

  10. செல்சியில் நகைச்சுவை, கேலிக்குத் தடை இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களாக செல்சி அணி, இப்பருவகாலத்தில் மோசமான தொடக்கமொன்றைப் பெற்றுள்ள நிலையில், அவ்வணியின் பயிற்சிகளின் போது நகைச்சுவையான கேலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. கடந்த 29 வருடங்களில், செல்சி அணி சந்தித்த மிக மோசமான பருவகால ஆரம்பத்தையடுத்தே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதல் 5 போட்டிகளில், வெறுமனே 4 புள்ளிகளை மாத்திரமே செல்சி அணி பெற்றுள்ள போதிலும், நெருக்கடி நிலைக் கூட்டங்களுக்கான தேவை இன்னமும் ஏற்படவில்லை எனவும் அக்கழக வட்டாரங்கள் அறிவிக்கின்றன. செல்சியின் முகாமையாளராக மொரின்கோ பதவியேற்றுக் கொண்ட பின்னர், பயிற்சிகளின் போது …

  11. முதலிடத்தைப் பிடித்தார் சானியா மிர்சா உலக டென்னிஸ் வீரர்­களின் தர வரி­சைப்­பட்­டி­யலை சர்­வ­தேச டென்னிஸ் சங்கம் வெளி­யிட்­டுள்­ளது. இதன்­படி பெண்கள் இரட்­டையர் பிரிவில் இந்­திய வீராங்­கனை சானியா மிர்சா முத­லி­டத்­திலும், மார்ட்­டினா ஹிங்கிஸ் (சுவிட்­ஸர்­லாந்து) 2ஆ-வது இடத்­திலும் நீடிக்­கின்­றனர். அண்­மையில் நடந்­து­மு­டிந்த அமெ­ரிக்க ஓபன் டென்னிஸ் போட்­டியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி சம்­பியன் பட்டம் வென்­றி­ருந்­தது. இது­கு­றித்து சானியா கூறு­கையில், விம்­பிள்டன் பட்­டத்­துக்கு பிறகு அமெ­ரிக்க ஓபன் பட்­டத்­தையும் வென்றிருப்­பது மகிழ்ச்சி அளிக்­கி­றது. எனக்­கா­கவும், நாட்­டுக்­கா­கவும், எனது குடும்­பத்­துக்­கா­கவும் டென்னிஸ் விளை­யா­டு­கிறேன். அதில் வெற்றி பெற வ…

  12. சுவிஸ் நாட்டின் ஜூறா மாநிலத்தில் வசித்து வரும் 13 வயதுடைய ஈழத்து சிறுவன் அஷ்வின் சிவசுப்பிரமணியம் குறித்த மாநில தேசிய ஐஸ் ஹொக்கி கழகத்தில் U 14 பிரிவில் காப்பாளராக விளையாடி வருகின்றார். இவர் தற்போது சுவிஸ் நாட்டில் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களில் ஒன்றான EHC-Bienne (LNA) Minitop பிரிவில் பந்து காப்பாளராக ஒப்பந்தமாகி விளையாடி வருகின்றார்.சுவிஸ் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களுக்கிடையிலான சம்பியன் லீக் 2015- 2016 போட்டிகளில் அஷ்வின் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அஷ்வின் கடந்த பெப்ரவரி மாதம் கனடாவில் நடைபெற்ற சர்வதேச U 14 ஐஸ் ஹொக்கி சம்பியன்ஷிப் போட்டிகளில் சுவிஸ் அணிக்காக விளையாடி சிறந்த பந்து காப்பாளர் பட்டத்தையும் பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும். - See more at: h…

  13. வேகப்பந்து வீச்சு பயிற்றுநராக நுவான் சொய்ஸா இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநராக, இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இப்பதவியில் காணப்பட்ட சமிந்த வாஸ், சில மாதங்களுக்கு முன்னர் அப்பதவியிலிருந்து விலகிய நிலையிலேயே, தற்போது நுவான் சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார். ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள அவரது ஒப்பந்தம், ஒரு வருடத்துக் செல்லுபடியாகும் என, இலங்கை கிரிக்கெட் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை சார்பாக 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நுவான் சொய்ஸா, 64 விக்கெட்டுகளையும், 95 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 108 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்க…

  14. உலகக் கிண்ண ஒளிபரப்பு உரிமை:அழுத்தத்தில் செப் பிளட்டர் 2010, 2014ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வழங்கப்பட்டதில், முறைகேடுகள் இடம்பெற்றதாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஏற்கெனவே அழுத்தத்துக்குள்ளாகியுள்ள சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (ஃபீபா) தலைவர் செப் பிளட்டர், மேலும் அழுத்தத்துக்குள்ளாகியுள்ளார். ஃபீபா உப தலைவராகக் கடமையாற்றிய ஜக் வோணர், 2005ஆம் ஆண்டு கரீபியன் கால்பந்தாட்ட ஒன்றியத்திற்குத் தலைவராகவும் காணப்பட்டதோடு, 2010, 2014ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான 600,000 அமெரிக்க டொலர்களுக்கு, ட்ரினிடாட் அன்ட் டொபாகோவுக்கான ஒளிபரப்பு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அவ்வொன்றியத்த…

  15. பதவி விலகுகிறார் ரொஷான் மஹாநாம சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் எலைட் பேனல் நடுவர் குழுவில் இருந்து ரொஷான் மஹாநாம இந்த வருட இறுதியுடன் விலகவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. 1996ம் ஆண்டு இலங்கை அணி உலகக் கிண்ணத்தை சுவீகரித்த வேளை, அந்த அணியில் இடம்பெற்ற முக்கிய வீரர்களில் மஹாநாமவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் எலைட் பேனல் நடுவர் குழுவில் சுமார் 12 ஆண்டுகாலம் சேவையாற்றிருந்த இவர் இந்த வருட இறுதியில் அப் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=72606 ரொஷான் மகாநாமா விலகல் தனது குடும்பத்துடனும், தனது வர்த்தக நடவடிக்கைகளுடனும் இலங்கையில் மேலதிக நே…

  16. ஆஸ்திரேலியாவை வீழ்த்த நல்ல வாய்ப்பு: முஷ்பிகுர் ரஹிம் நம்பிக்கை வங்கதேச அணியின் டெஸ்ட் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம். | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரவிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அந்த அணியை வீழ்த்த ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்று வங்கதேச டெஸ்ட் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்துள்ளார். "ஆஸ்திரேலியாவை வீழ்த்த இதுவே சிறந்த வாய்ப்பு, எனவே நாங்கள் 100%-க்கும் மேல் பங்களிப்பு செய்து வெற்றிக்கான வாய்ப்புகளை சாத்தியமாக்குவோம்” என்றார். ஒருநாள் போட்டிகளில் வளர்ந்து வரும் வங்கதேசம், தொடர்ச்சியாக ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரன இருதரப்பு ஒருநாள் தொடர்களை வென்றது. டெஸ்ட் போட்டிகளில் ஜிம்பாப்வேயை 3-0 என்று வீழ்த்தியது வங்கத…

  17. செய்தித் துளிகள் ஹாக்கியில் புதிய விதிமுறை ஹாக்கி இந்தியா லீக் (ஹெச்ஐஎல்) தொடரில் புதிய விதிமுறை புகுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 4-வது சீசனிலிருந்து ஒவ்வொரு ஃபீல்டு கோலும், 2 கோல்களாக கணக்கில் கொள்ளப்படும். ஹெச்ஐஎல் தலைவர் நரீந்தர் பாத்ரா இதனை அறிவித்துள்ளார். அணியில் வீரர்களின் எண்ணிக்கை 24-லிருந்து 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில், 12-8 என்ற விகித்தில் இந்திய-வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறுவர். இதுதவிர, ஓர் அணியில் 2 கோல் கீப்பர்கள் கட்டாயம் என்பது உள்ளிட்ட விதிமுறைகளும் புகுத்தப்பட்டுள்ளன. வில் வித்தையில் தங்கம் கொலம்பியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை வில் வித்தைப் போட்டியில் ஆடவர் பிரிவில் சர்வேஷ் பரீக், சந்தீப் குமார், இசய்யா ராஜேந்தர் சனம் ஆகியோரடங்கிய இந்…

  18. ஆஸி., அணி அறிவிப்பு சிட்னி: வங்கதேச தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர்களான ஆன்ட்ரூ பேகேட், கேமிரான் பான்கிராப்ட் இடம் பிடித்துள்ளனர். அடுத்த மாதம் வங்கதேசம் செல்லும் ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சிட்டகாங்கில் வரும் அக்., 9ல் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் மிர்புரில் அக்., 17ல் ஆரம்பமாகிறது. டெஸ்ட் தொடருக்கு முன், ஆஸ்திரேலிய அணி, வங்கதேச கிரிக்கெட் போர்டு லெவன் அணியுடன் மூன்று நாள் (அக்., 3–5) பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) நேற்று அறிவித்தது. இதில் அறிமுக வீரர்களான வேகப்பந்துவீச்சாளர் ஆன்ட்ரூ பேகேட், துவக்க வீரர் கேமிரான் பான்கிராப்ட் தேர்வு ச…

  19. தென் ஆபிரிக்க கிளென்விஸ்டா அணியுடன் மோதிய கென்ய மாசாய் கிரிக்கெட் வொரியர்ஸ் அணியினர் தென் ஆபிரிக்காவின் கிளிப்ரிவர்ஸ்பர்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றில் கென்யாவைச் சேர்ந்த மாசாய் கிரிக்கெட் வொரியர்ஸ் அணியினரும் தென் ஆபிரிக்காவின் கிளென்விஸ்டா கிரிக்கெட் அழக அழைப்பு அணியினரும் பங்குபற்றியபோது பிடிக்கப்பட்ட படங்கள் இவை. கென்யாவின் மாசாய் இன வீரர்கள், காண்டாமிருக வேட்டைக்கு எதிரான விழிப் புணர்வை ஏற்படுத்துவற்காக தென் ஆபிரிக்காவில் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுகின்றனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=12089#sthash.5my3ZXwO.dpuf

  20. அமெரிக்க ஓபனில் நிஷிகோரி அதிர்ச்சி தோல்வி: ஜோகோவிச், நடால், செரீனா முன்னேற்றம் 2-வது சுற்றுக்கு முன்னேறியதும் ஆர்ப்பரிக்கிறார் நடால். படம்: ஏ.எப்.பி. ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஜப்பானின் நிஷிகோரி அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். அதேநேரத்தில் முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடால், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் 6-…

  21. ஒரு நாள் தொடர் இன்று தொடக்கம்: இங்கிலாந்தை சமாளிக்குமா ஆஸ்திரேலியா இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணி கள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் சவுதாம்ப்டனில் இன்று தொடங்குகிறது. ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது இங்கிலாந்து. டெஸ்ட் தொடரை இழந்துவிட்டதால், ஒரு நாள் தொடரைக் கைப்பற்றி பதிலடி கொடுக்கும் முனைப்புடன் உள்ளது ஆஸ்திரேலியா. இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை இழந்திருக்கலாம். ஒரு டி-20 போட்டியிலும் தோற்றிருக்கலாம். ஆனால், ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை தரவரிசையில் அவர்கள்தான் நம்பர் 1. இங்கிலாந்தோ 6-வது இடத்தில் உள்ளது. ஸ்டீவன் ஸ்மித் தலைமைய…

  22. வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷஹாதத் ஹுசைன் அணியிலிருந்து நீக்கம் வீட்டில் வேலைபார்த்த சிறுமியை துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வங்கதேச கிரிக்கட் வீரர் ஷஹாதத் ஹுசைனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது. வங்கதேச கிரிக்கட் வீரர் ஷஹாதத் ஹுசைனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஷஹாதத் ஹுசைனும் அவரது மனைவியும் அவர்களின் வீட்டில் வேலைபார்த்துவந்த 11 வயது சிறுமியை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்தே கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தலைமறைவாகியுள்ள ஷஹாதத் ஹுசைனை தேடிவருவதாக காவல்துறை கூறுகின்றது. அவர் துன்புறுத்தி துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சிறுமி மருத்துவமனையில் …

  23. கிராண்ட் ஸ்லாம் விநோதம்: வென்றார்...சென்றார்! நியூயார்க்: இத்தாலியின் பிளேவியா பென்னெட்டா, அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றிய கையோடு ஓய்வு அறிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை 33 வயது நிரம்பிய பென்னட்டா சகநாட்டு வீராங்கனை ராபர்ட்டா வின்சியை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 7-6 (7-4), 6- 2 என்ற செட் கணக்கில் பென்னட்டா வெற்றி பெற்றார். இதன் மூலம் உலகிலேயே அதிக வயதில் மகளிர் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமை பென்னட்டாவுக்கு கிடைத்தது. பெனட்டா தனது டென்னிஸ் வாழ்க்கையில் வென்ற முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமும் இதுதான். இந்த போட்டி முடிந்த கையோடு டென்னிசில் இருந்து விடை பெறுவதா…

  24. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: நியூஸிலாந்து அணியில் ஜேம்ஸ் நீஷம் ஜேம்ஸ் நீஷம் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய நியூஸிலாந்து அணியோடு ஒப்பிடுகையில், இப்போது ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. நீல் வாக்னருக்குப் பதிலாக ஜேம்ஸ் நீஷம் சேர்க்கப்பட்டுள்ளார். முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய ஆல்ரவுண்டரான நீஷம், தனது முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. நீஷமின் வருகை பேட்டிங்கிற்கு மட்டுமின்றி வேகப்பந்து வீ…

  25. யு.எஸ். ஓபனில் சாம்பியன் : ஒரே ஆண்டில் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று லியாண்டர் சாதனை! அமெரிக்க ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. விம்பிள்டனை தொடர்ந்து அமெரிக்க ஓபனிலும் பட்டம் வென்றுள்ள லியாண்டருக்கு தற்போது 42 வயதாகிறது. அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் அமெரிக்காவின் சாம் கியூரே, பெதானி இணையை லியாண்டர் இணை எதிர்கொண்டது. இதில் முதல் செட்டை 6-4 என்று லியாண்டர் இணை கைப்பற்றியது. 2வது செட்டை அமெரிக்க ஜோடி வென்றாலும் 3வது செட்டை 10-7 என்ற கணக்கில் லியாண்டர் பயஸ்- மார்ட்டினா ஜோடி வென்று பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஆண்டில் ஏற்கனவே ஆஸ்திரேலிய ஓபன், வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.