Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. விம்பிள்டன் வின்னர் ‘யார்’ லண்டன்: பச்சை பசேல் என்ற புல்வெளி மைதானத்தில் ‘வெண்ணிற’ தேவதைகளாக வீராங்கனைகள், ஆக்ரோஷமாக வீரர்கள் விளையாடும் விம்பிள்டன் டென்னிஸ் பார்ப்பதற்கும் ரம்மியமாக இருக்கும். மிக நீண்ட பாரம்பரிய மிக்க இத்தொடர் இன்று லண்டனில் துவங்குகிறது. இதில் பெடரர் 8வது முறையாக பட்டம் வெல்ல காத்திருக்கிறார். பெண்கள் பிரிவில் செரினா வில்லியம்ஸ், கிவிட்டோவா என நிறைய பேர் களத்தில் உள்ளனர். லண்டனில் ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற 129வது விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா இன்று ஆரம்பமாகிறது. ஆண்கள் ஒற்றையரில் இதுவரை 7 முறை பட்டம் வென்றுள்ள ‘புல்தரை கள மன்னன்’ சுவிட்சர்லாந்தின் பெடரர், கடைசியாக 2012ல் கோப்பை வென்றார். உலகின் ‘நம்பர்–2’ வீரரான இவர், கடந்த ஆண்டு நடந்த பைனலில…

  2. பாடும் மீன்களின் சமரில் புனித மிக்கேல் கல்லூரி சம்பியன் -எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா மட்டக்களப்பு நகரில் பிரசித்தி பெற்ற புனித மிக்கேல் கல்லூரிக்கும் மற்றும் மெதடிஸ்த கல்லூரிக்குமடையிலான பாடும் மீன்களின் சமர் என வர்ணிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டியில் மிக்கேல் கல்லூரி அணி இவ்வருடத்துக்கான சம்பியானகத் தெரிவு செய்யப்பட்டது. இரு அணிகளுக்குமிடையிலான 50 ஓவர்கள் கொண்ட போட்டி கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (27) இடம்பெற்றது. இதன்போது நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி, 39.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட மிக்கேல் கல்லூரி அணிக்கு வெற்றிக் கி…

  3. திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் முதலிடத்தில் -குணசேகரன் சுரேன் யாழ். சென்ரல் விளையாட்டுக்கழகத்தின் ஜோர்ஜ் வெப்ஸர் தரவரிசையில் திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் 53.65 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. யாழ். மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடும் கழகங்களை வருடா வருடம் தரவரிசைப்படுத்தும் நடவடிக்கையை சென்ரல் விளையாட்டுக்கழகம் மேற்கொள்கின்றது. 50 ஓவர் போட்டியில் வெற்றியீட்டினால் 5 புள்ளிகள், 30 ஓவரில் வெற்றியீட்டினால் 3 புள்ளிகள், இருபது – 20 வெற்றியீட்டினால் 2 புள்ளிகள் இதற்கு வழங்கப்படுகின்றது. இதனைவிட பெறப்படும் ஒவ்வொரு 10 ஓட்டங்களுக்கு 0.1 புள்ளிகளும், வீழ்த்தப்படும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் 0.1 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் திருநெல்வேலி அணி, இந்தாண்டு இதுவரைய…

  4. ரகானே புதிய கேப்டன் * இந்திய அணி அறிவிப்பு புதுடில்லி: ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணிக்கு ரகானே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். தோனி, கோஹ்லி உள்ளிட்ட ‘சீனியர்’ வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டது. ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டி (ஜூலை 10, 12, 14), இரண்டு ‘டுவென்டி–20’ போட்டிகளில் (ஜூலை 17, 19) பங்கேற்கிறது. இத்தொடருக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்ய, சந்தீப் படேல் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. முடிவில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தோனி ஓய்வு: கடந்த 7 மாதங்களாக கேப்டன் தோனி, கோஹ்லி, ரோகித் சர்மா, அஷ்வின் மற்றும் ரெய்னா உள்ளிட்ட ‘சீனியர்’ வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இதனால் ஜிம்பாப்வே தொடரில் …

  5. புலிக்கு பிறந்தது பூனையாகுமா? பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ, தற்போது ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். போர்ச்சுக்கல் அணியின் கேப்டனான இவர்தான் உலகிலேயே தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அத்துடன் விளையாட்டு மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் ரொனால்டோ 3வது இடத்தையும் பிடித்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் சுமார் 450 கோடிக்கும் அதிகம் ஆகும். ரொனால்டோவுக்கு பல மாடல் அழகிகளுடன் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு ஜுன் மாதம் ரொனால்டோ, தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தார். ஆனால் குழந்தைக்கு தாய் யார்?என்பதை ரொனால்டோ இன்று வரை அறிவிக்கவில்லை. ஜுனியர் ரொனால்டோ பிறந்தது முதல் ரொனால்டோவின் தாயார் மற்றும் சகோதரிகள் பராம…

  6. சூதாட்ட புயலில் டாம்பே: மீண்டும் பிரிமியர் தொடரில் சர்ச்சை மும்பை: பிரிமியர் கிரிக்கெட் தொடரில் மீண்டும் சூதாட்ட சர்ச்சை வெடித்துள்ளது. ராஜஸ்தான் அணி வீரர் பிரவிண் டாம்பேவை, மற்றொரு மும்பை வீரர் ‘பிக்சிங்கில்’ ஈடுபட அணுகியது அம்பலமாகியுள்ளது. ஆறாவது பிரிமியர் தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீசாந்த்திற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இப்பிரச்னையில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் பதவியே பறிபோனது. இதனிடையே எட்டாவது பிரிமியர் தொடரின் போது,‘ ராஜஸ்தான் அணியில் உள்ள மும்பையை சேர்ந்த வீரர் ஒருவரை, இந்த தொடரில் பங்கேற்காத மற்றொரு மும்பை வீரர் அணுகினார்,’ என, செய்திகள்…

  7. இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு: சங்கக்காரா அறிவிப்பு குமார் சங்கக்காரா. | படம்: ஏ.பி. இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியே தனது கடைசி டெஸ்ட் போட்டி என்று சங்கக்காரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான நடப்பு தொடரில் 3-வது டெஸ்ட் போட்டியில் சங்கக்காரா விளையாட மாட்டார். ஆனால் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு மீண்டும் வந்து, முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 2-வது டெஸ்ட் போட்டி முடிவில் ஓய்வு பெறுகிறார். இதுவரை 131 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய …

  8. என்னுடனான வாக்குவாதத்திற்குப் பிறகு லாரா தொடர்ச்சியாக 3 சதங்களை அடித்தார்: கர்ட்லி ஆம்புரோஸ் லாராவுக்கும் தனக்குமான வேறுபாடுகளையும் நட்பையும் விளக்கும் ஆம்புரோஸ். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. மேற்கிந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி ஆம்புரோஸ் அதிகம் பேசாதவர், ஆனால் அவர் ‘டைம் டு டாக்’ என்ற சுயசரிதை நூலுக்குப் பிறகே நிறைய பேசத் தொடங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் கூரியர் மெயில் ஊடகத்துக்கு அவர் சமீபமாக அளித்த பேட்டி ஒன்றில் அவருக்கும் பிரையன் லாராவுக்கும் இடையேயான முரண்பட்ட உறவுகளை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பேட்டியில் பிரையன் லாரா கேப்டன் ஆனது உங்களுக்கு பிடித்தமானதாக இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆம்புரோஸ், “லாரா எவ்வளவு பெரிய பேட்ஸ்மென் என்பது எங…

  9. அப்பாவுக்கு டார்ச்லைட், மகனுக்கு சாம்பியன்ஷிப்: தங்க மகன் சாய்நரேன்! வீட்டில் சுவரில் மாட்டியிருக்கும் ஒரு கடிகாரத்தைத் தவிர அந்த ஒற்றை அறை வீடு முழுக்க நிரம்பி யிருப்பவை பதக்கங்களும், கோப்பைகளும், சான்றிதழ்களும்தான். இத்தனைக்கும் சொந்தக்காரன் சிறுவன் சாய்நரேன். சென்னை கே.கே நகரைச் சேர்ந்த கார்த்திக்கின் மகன் சாய்நரேன் தாய்லாந்தில் நடந்த சர்வதேச ஓப்பன் ரோலர் ஸ்கேடிங் போட்டியில் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று திரும்பியிருக்கிறான். கே.கே. நகர் ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் சாய்நரேன் மாவட்ட, மாநில, தேசிய அளவில் ஸ்கேட்டிங், இசை, ஓவியம் என்று பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வாங்கிக் குவித்து வருகிறான். தாய்லாந்து நாட்டில் …

  10. சபாஷ்!...அந்த 463 பேரில் ஒருவனை உருவாக்கியவரே தமிழர்தான்!! அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்து தொடரான என்.பி.ஏவில் விளையாட இந்தியாவை சேர்ந்த சத்னம்சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த சங்கரன் சுப்பிரமணியம் என்ற கூடைப்பந்து பயிற்சியாளர்தான் சத்னம் சிங்கின் இந்த அளப்பரிய சாதனைக்கு காரணமாக இருந்துள்ளார். இந்தியாவுக்கு கிரிக்கெட், தென் அமெரிக்காவுக்கு கால்பந்து எப்படியோ அப்படிதான் வட அமெரிக்கர்களுக்கு கூடைப்பந்து என்றால் உயிர். கடந்த 1946ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நேஷனல் பேஸ்கட்பால் அசோசியேஷன் என்ற அமைப்பு சார்பாகத்தான் என்.பி.ஏ கூடைப்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 29 அமெரிக்க அணிகளும் கனடாவை சேர்ந்த ஒரு அணி மொத்தம் 30 அணிகள் பங்கேற்கின்றன…

  11. டென்னிஸ் மைதானத்தில் முத்தத்துக்கு போட்டிபோட்ட ஜோகோவிச்! (வீடியோ) லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் வீரர்கள் ஜோகோவிச், ரிச்சர்டுக்கு இளம் ரசிகைகள் முத்தம் கொடுத்து மைதானத்தையே அதிர வைத்தனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க்கில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச்சுடன், பிரான்ஸ் வீரர் ரிச்சர்டு மோதினார். போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது ஜோகோவிச் திடீரென தனது சட்டையை பார்வையாளர் மாடத்தில் இருந்த இளம் ரசிகை ஒருவரிடம் வீசினார். அதை பார்த்த வீரர் ரிச்சர்டு பதிலுக்கு தனது சட்டையை கழற்றி மற்றொரு இளம் ரசிகையிடம் கொடுத்தார். பதிலுக்கு அ…

  12. மெக்கல்லம் விலகல் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர் களில் இருந்து நியூஸிலாந்து அணியின் கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் விலகியுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு நியூஸிலாந்து அணி தொடர்ச்சியாக விளையாடி வருவதால் களைப்படைந்துள்ள மெக்கல்லம் மேற்கண்ட தொடர் களில் இருந்து விலகியிருக்கிறார். மெக்கல்லம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறலாம் என தகவல் வெளியாகியிருந்தது. அது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் கிளம்பின. ஆனால் இப்போது மெக்கல்லம் அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரலில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை வரை நியூஸிலாந்துக்கு அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார். http://tamil.thehindu.com/sports/மெக்கல்லம்-விலகல்/article7360707.ece

  13. பவுலர்களுக்கு சாதகமாக கிரிக்கெட்டில் பல விதிமுறைகள் மாற்றம்: பார்படோஸ்: பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான வகையில் தற்போதுள்ள ஒருநாள், கிரிக்கெட் விதிமுறைகள் சிலவற்றில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாற்றம் கொண்டுவந்துள்ளது. புதிய விதிமுறைகள், ஜூலை மாதம் 5ம் தேதிமுதல் அமலுக்கு வரும். ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டு, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாக மாறிக்கொண்டே வருகிறது. இதனால், ஒரு அணி 400 ரன்களுக்கு மேல் எடுப்பது கூட சர்வ சாதாரணமாகிவிட்டது. பரிதாப பவுலர்கள் பவுலர்கள் பரிதாபமான ஜீவன்கள் போல மைதானத்தில் காணப்படுகிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக, அனில்கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கடந்த மாதம், ஒரு பரிந்துரையை அளித்திருந்தது. ஃபீல்டர்கள் எண்…

  14. தோனிக்கு அப்ரிடி ஆதரவு: 'தோற்றால் சாடுவது துணைக்கண்ட போக்கு' 2011 உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன் தோனியும், அப்ரிடியும் மொஹாலியில் பேசிக்கொள்ளும் காட்சி. | கோப்புப் படம்: பிடிஐ. ஒரு தொடரை இழந்தால் உடனே தாறுமாறாக விமர்சிப்பது என்பது ‘துணைக் கண்டங்களின் போக்கு’ என்று தோனிக்கு தனது ஆதரவை பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி மனதார தெரிவித்துள்ளார். "வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த பிறகு தோனியை இலக்காக்கும் விதம் குறித்து நான் மிக மோசமாக உணர்கிறேன். இது துணைக்கண்ட மனோநிலை என்பதை நான் முழுமையாக நம்புகிறேன், இங்குதான் ஒரு தொடரைத் தோற்றால் உடனே ஹீரோக்களை கடுமையாக விமர்சனம் செய்யும் போக்கு இருந்து வருகிறது. உண்மையான நிலவரத்தை சித்தரிக்காமல் இருப்பதில் ஊ…

  15. டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் வந்த 10 மாதத்திற்குள் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை ! சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வந்த 10 மாதங்களில், 50 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் வீரர் யாஷிர் ஷா புதிய வரலாறு ஏற்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 2வது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாஷிர் ஷா களதிறங்கும் 9வது டெஸ்ட் போட்டி ஆகும். கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் பாகிஸ்தான் அணிக்காக முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் யாஷிர் ஷா 3 விக்கெட்டுகள…

  16. கோல் கீப்பரையே தூக்கி சென்ற பவர்ஃபுல் கிக் : பிரேசில் வீரர் ஹல்க் மிரட்டல் (வீடியோ) பிரேசிலை சேர்ந்த இளம் வீரரான ஹல்க், கடந்த உலகக் கோப்பை போட்டியில் அணியில் இடம் பெற்றிருந்தார். கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில், அவர் பிரேசில் அணியில் இடம் பெறவில்லை. தற்போது அவர், ரஷ்யாவை சேர்ந்த செனித் செயின்ட பீட்டர்ஸ்பர்க் அணிக்காக விளையாடி வருகிறார். அடுத்த சீசன் தொடங்கவுள்ளதையடுத்து ஹல்க், அந்த அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். http://youtu.be/66z1p5jLKYw நேற்று பயிற்சியில் ஈடுபட்டபோது ஹல்க் அடித்த பவர்ஃபுல் கிக், கோல்கீப்பரை பந்துடன் சேர்ந்து தூக்கி சென்று விட்டது. இந்த வீடியோ காட்சியை செனித் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அணியே வெளியிட்டுள்ளது. http://www.v…

  17. இந்திய அணியை விட தென் ஆப்பிரிக்கா கடினமான அணி: மஷ்ரபே மொர்டசா இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டிக்கு முன்னதான பயிற்சியின் போது கைகொட்டிச் சிரிக்கும் மஷ்ரபே மொர்டசா. | படம்: ஏ.பி. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியதையடுத்து வங்கதேச அணியின் கேப்டன் மொர்டசா தன்னம்பிக்கையின் உச்சத்துக்குச் சென்றுள்ளார். பிடி நியூஸ்24.காம் தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இந்திய அணியை விட அடுத்ததாக தாங்கள் சந்திக்கும் தென் ஆப்பிரிக்கா நிச்சயமாக கடினமான அணியே என்று கூறியுள்ளார். இத்தனைக்கும், ஐசிசி ஒருநாள் போட்டி அணிகள் தரவரிசையில் இந்திய அணி 2-ம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 4-ம் இடத்திலும் உள்ளது. மேலும் வங்கதேசத்தின் கடும் வெயிலில் தென் ஆப்பிரிக்கா தொ…

  18. வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன்தான் உலகிலேயே சிறந்த ஆல்ரவுண்டர்! வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியிலும் சிறந்த ஆல்ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.சி.சி ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இலங்கை வீரர் தில்ஷன் திலகரத்னேவை பின்னுக்கு தள்ளி, 4 புள்ளிகள் அதிகம் பெற்று சாதித்தார் ஷாகிப் அல் ஹசன். இந்தியாவுக்கு எதிரான தொடரில், வங்கதேச அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 123 ரன்களை (52,51,20) சாகிப் அல் ஹசன் அடித்தார். அதேபோல் இந்த 3 ஒருநாள் போட்டியிலும் 99 ரன்களை விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியிருந்தார். இதில் முதல் ஒருநாள் போட்டியில் 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அ…

  19. குரங்குச் சேட்டை செய்பவர் கேப்டனாக இருக்க முடியாது.. கோஹ்லிக்கு கிர்மானி "நறுக்" பெங்களூரு: கேப்டன் டோணிக்கு முன்னாள் இந்திய விக்கட் கீப்பர் சையத் கிர்மானி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கேப்டன் என்றால் இவரைப் போலத்தான் இருக்க வேண்டும். மைதானத்தில் குரங்குச் சேட்டை செய்பவர் கேப்டனாக இருக்க முடியாது என்றும் அவர் மறைமுகமாக விராத் கோஹ்லியை கண்டித்துள்ளார். வருங்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக வருபவர்கள், டோணியைப் பின்பற்ற வேண்டும் என்றும் கிர்மானி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்த கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர் கிர்மானி. ஒன்இந்தியாவுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: டோணிதான் பெஸ்ட்…

  20. நமக்குத் தேவை வேகப்பந்து வீச்சாளர்களா? நல்ல பந்து வீச்சாளர்களா?: தோனி வேகப்பந்து வீச்சாளர்கள் மீது தோனி சாடல். | கோப்புப் படம். வங்கதேசத்துக்கு எதிராக 1-2 என்று ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணியின் கேப்டன் தோனி, ஆட்டம் முடிந்த பிறகு கேள்விகளுக்கு பதில் அளித்தார். பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய தோனி, 'நமக்குத் தேவை வேகப்பந்து வீச்சாளர்களா, அல்லது நல்ல பந்து வீச்சாளர்களா என்பதை முடிவெடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். நேற்றைய ஆறுதல் வெற்றி குறித்து தோனி, கூறும் போது, “ரன்கள் இருந்தால் வெற்றி நிச்சயம், இந்தப் போட்டியில் ரன்கள் குவித்தோம். நமது பவுலர்களுக்கு கூடுதலாக 10-15 ரன்களைக்கான சவுகரியம் அளிக்கும் போது ஆட்டம் சுவாரசியமாகிறது. சில வேளைகளில் இத்தகைய, பந்துகள் மெத…

  21. ஒருநாள் போட்டி பவுலிங் தரவரிசை: டாப்-10-ல் அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின். | படம்: ஏ.பி. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பவுலிங் பிரிவில் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் டாப்-10-ல் நுழைந்தார். அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 10-ம் இடம் பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி 4-ம் இடத்தில் உள்ளார். ஷிகர் தவண் 7-ம் இடத்திலும் கேப்டன் தோனி 8-ம் இடத்திலும் உள்ளனர். சுரேஷ் ரெய்னா 2 இடங்கள் முன்னேறி 18-ம் இடத்திற்கு வந்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் டிவில்லியர்ஸ் 902 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார், அவரை விட 42 புள்ளிகள் குறைவாக உள்ள சங்கக்காரா 2-ம் இடத்தில் உள்ளார். ஆம்லா, விராட் கோலி, தில்ஷன், வில்லியம்சன், ஷிகர் தவண், தோனி, ராஸ் டெய்லர், கிளென்…

  22. '' எனக்கு பின்னால் சுரேஷ் ரெய்னா இருப்பதால் தனி தைரியம் பிறந்தது!'' -தோனி வங்கதேசத்துக்கு எதிராக நடந்த தொடரில் சுரேஷ் ரெய்னா 6வது நிலையில் களமிறங்கினார். இதனால் இந்திய அணிக்கு அந்த இடத்தில் விளையாட ஒரு அனுபவ வீரர் கிடைத்துள்ளதாக கேப்டன் தோனி கூறியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி முடிந்த பிறகு தோனி செய்தியாளர்களிடம் கூறுகையில், '' என்னை பொறுத்த வரை 4-வது விக்கெட்டுக்கு அதிகமாக களமிறங்கியதில்லை. 5 வீரர்களுக்கு அப்புறமும் அனுபவம் வாய்ந்த ஒரு வீரர் தேவைப்பட்டார்.. இதனால்தான் சுரேஷ் ரெய்னாவை பின்னால் களமிறக்க முடிவெடுத்தோம். இதன் மூலம் 6-ம் நிலையில் ஒரு அனுபவ வீரர் ரெய்னா மூலம் அணிக்கு கிடைக்கிறார். இவரைப் போலவே 7-வது விக்கெட்டாக களமிறங்க நல்ல வீ…

  23. பேட்டிங் தரவரிசையில் முதல் 10க்குள் கோலி, தவான், தோனி! ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான சிறந்த வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடத்திற்குள் இந்திய வீரர்கள் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். பட்டியலில் வழக்கம்போல் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார். இவர் 902 புள்ளிகளை பெற்றுள்ளார். அடுத்த இடத்தில் இலங்கை வீரர் குமார சங்கக்காரா மற்றும் ஹாசிம் ஆம்லா இடம் பெறுகின்றனர். தொடர்ந்து இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலி, 802 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடிக்கிறார். வங்கதேச தொடரில் இந்தியா அணிக்காக 158 ரன்கள் எடுத்த ஷிகர் தவான் 777 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு பிடிக்கிறார். கடந்த தரவரிசை பட்டியலில் தவான் …

  24. ஒரு தொடரை இழந்தால் தோனிக்குள்ள மரியாதை போய் விடுமா? - சுரேஷ் ரெய்னா கேள்வி! ஒரு தொடரை இழந்தவுடன் தோனிக்குள்ள மரியாதை போய் விடுமா? என்று இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா கேள்வி எழுப்பியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை, இந்திய அணி 2-1 என்று இழந்தாலும், கடைசி போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதால், வொயிட் வாஷில் இருந்து தப்பியது. கடைசி ஒருநாள் போட்டியில் 21 பந்துகளில் 38 ரன்கள் விளாசிய சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனிக்கு களத்திலும் வெளியேயும் எப்போதும் பக்கபலமாக இருப்பவர். வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததும் தோனி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில், ''தோனி எப்போதும் பாசிட்டிவான போக…

  25. பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஜாகிர் அப்பாஸ் ஐ.சி.சி. புதியதலைவர்! பார்படோஸ்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாகீர் அப்பாஸ், ஐசிசி-யின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணியிடம் வங்கதேச அணி தோல்வியடைந்தது. இதையடுத்து, ஐ.சி.சி. சேர்மன் ஸ்ரீநிவாசனின் உத்தரவின்பேரில்தான் நடுவர்கள், இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக அப்போது ஐ.சி.சி. தலைவராக இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தபா கமால் குற்றம் சாட்டியதோடு, பதவியில் இருந்தும் விலகினார். இதையடுத்து அந்த பதவிக்கு தற்போது பாகிஸ்தானை சேர்ந்த ஜாகிர் அப்பாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளில் உள்ள பார்படோசில் நடைபெற்று வருத் ஐ.சி.சி. வருடாந்திர ஆலோசனை கூட்டத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.