Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை- முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஊடகங்கள் சித்தரிப்பது போன்று அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்த முயன்றமை அம்பலமாகியதை தொடர்ந்து ஊடகங்கள் அவுஸ்திரேலிய வீரர்கள் களத்தில் நடந்துகொள்ளும் விதத்தினை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையிலேயே இந்த சர்ச்சையின் பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்த லீமன் ஊடகங்கள் சித்தரிப்பது போன்று அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என தெரிவித்துள்ளார். மக்குயர் ஸ்போர்ட்ஸ் ரேடியோவிற்கு அவர் இ…

  2. விராட்கோலி புதிய மைல்கல்; கேப்டன்ஷியில் கங்குலி சாதனையை முறியடிப்பாரா ? இங்கிலாந்துக்கு எதிராக சதம்அடித்த மகிழ்ச்சியில் விராட்கோலி - படம்உதவி: ட்விட்டர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் 23 ரன்கள் அடித்ததன் மூலம் அந்த அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை கோலி எட்டியுள்ளார், மேலும் முதல் சதத்தையும் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. ஆனால், 1-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித்தொடரின் முதல் ஆட்டம் பர்மிங்ஹாமில் தொடங்கி நடந்து வருகிறது. …

  3. ‘‘போடு மாமா அடுத்த மூணு பாலையும்... அப்படியே போடு’’ - பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியில் அஸ்வினை உற்சாகப்படுத்திய தினேஷ் கார்த்திக் பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து அணி 285 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்களில் ரவிசந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 25 ஓவருக்கு 60 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக…

  4. இனி கால்பந்து மேனேஜர்களுக்கும் ரெட் கார்டு.. இங்கிலாந்து கால்பந்து அமைப்பு அதிரடி! இங்கிலாந்து கால்பந்து அமைப்பான "The FA", தன் கட்டுப்பாட்டில் நடக்கும் கால்பந்து தொடர்களில், அணியின் மேனேஜர்கள் கண்டிக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு ரெட் கார்டு (Red Card) மற்றும் எல்லோ கார்டு (Yellow Card), வழங்க முடிவு செய்துள்ளது. பொதுவாக கால்பந்தில், வீரர்கள் விதிகளை மீறி குறிப்பிட்ட தவறுகளை செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக எல்லோ கார்டும், ஆட்டத்தில் இருந்து வெளியேற ரெட் கார்டும் வழங்கப்படும். மேனேஜர்கள் ஆட்டத்திற்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டால், அவர்களுக்கு நடுவர் எச்சரிக்கை செய்யவும், வெளியேறும் படி கூறவும் முடியும். ஆனாலு…

  5. அடுத்த உலகக்கிண்ணத்தின் துருப்புச்சீட்டு மெத்திவ்ஸ் – சங்கா இங்கிலாந்தில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியில், அஞ்செலோ மெத்திவ்ஸ் விளையாடுவதன் முக்கியத்துவம் குறித்து, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார கருத்து வெளியிட்டுள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக நான்கு சதங்களை விளாசிய சாதனையை, தன்னகத்தே கொண்டுள்ள குமார் சங்கக்கார, அஞ்செலோ மெத்திவ்சின் சகலதுறை திறமையானது 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் விளையாடும் இலங்கை அணிக்கு அதீத நம்பிக்கை அளிக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் எவ்வி…

  6. விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்- மனம் திறந்தார் பிரேசில் நட்சத்திரம் நெய்மர் ரஷ்யாவில் சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. முன்னதாக நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், எதிரணி வீரர் காலை தட்டிவிட்டதாகக்கூறி சில அடி தூரத்துக்கு டைவ் செய்தபடி உருண்டு சென்று விழுந்தார். இதுதொடர்பாக ஆட்டம் முடிவடைந்ததும் மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் கடும் விமர்சனம் செய்தார். நெய்மர் வேண்டுமென்றே நடித்து நேரத்தை கடத்தியதால் தங்கள் அணியின் ஆட்டத்திறன்…

  7. ஐசிசி கால்பந்து தொடர்- பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை 5-1 என வீழ்த்தியது அர்செனல் சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரில் அர்செனல் 5-1 என பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை வீழ்ததியது. #Arsenal #PSG சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் அர்செனல் - பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் மோதின. இதில் அர்செனல் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மெசுட் ஒசில் 13-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அலெக்சாண்டர் 67-வது நிமிடத்திலும், 71-வது…

  8. கிறிஸ் கெயில் பறக்கவிட்ட ‘சிக்ஸர்களுக்கு பலன்’ - ஷாகித் அப்ரிடியின் சாதனை சமன் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் - படம் உதவி: ஐபிஎல் ட்விட்டர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடியின் சாதனையை மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் சமன் செய்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக டி20 தொடர் விளையாட இருப்பதால், அதில் அடிக்கும் சிக்ஸர்கள் மூலம் உலகிலேயே அதிகமான சிக்ஸர்கள் அடிக்கும் வீரராக கெயில் வலம் வரப்போகிறார். வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கடைசி மற்றும் 3-வது போட்டி செயின்ட் கிட்ஸ் நகரில் சனிக்கிழமை நடந்தது. இதில் அதிரடியாக ஆடிய…

  9. பற்­றிக்­ஸில் மட்­டும் ஆடு­க­ளம் இருந்­தால் போதுமா? வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க செய்­தி­யொன்று கடந்த வாரம் உத­ய­னில் வெளி­யா­கி­யி­ருந்­தது. 19 வய­துக்­குட்­பட்ட இந்­திய அணிக்கு எதி­ரான கிரிக்­கெட் ஆட்­டத்­தில் இலங்கை 19 வய­துக்­குட்­பட்ட அணி­யில் தமிழ் வீரர் வி.விஜஸ்­காந் இடம்­பெற்­றார் என்­கிற செய்­தியே அது. 19 வய­துக்­குட்­பட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான ஆட்­டம் என்று அமைந்­தா­லும் அது பன்­னாட்டு அந்­தஸ்­து­பெற்ற ஆட்­டம். அதில் தமிழ் வீர­ரொ­ரு­வர் இடம்­பெற்­றமை மகிழ்ச்சி. அதி­லும் விளை­யா­டும் பதி­னொ­ரு­வர் கொண்ட குழா­மில் இடம்­பி­டித்­துக் கள­மி­றங்­கி­யமை மிக­மிக மகி­ழ்ச்சி. ஆனால் கவ­லைப்­ப­டும் படி­யான புள்­ளி­வி­வ…

  10. விமர்சித்த ரசிகரை மிரட்டிய ஷபீர் ஆட்­டத்­திறன் மோச­மாக இருக்­கி­றது என முகப் புத்­த­கத்தில் விமர்­சித்த ரசி­கரை மோச­மான வார்த்­தையால் திட்டி மிரட்­டிய பங்­க­ளாதேஷ் வீரர் ஷபீர் ரஹ்மான் தற்­போது சிக்கலுக்குள்ளாகி­யுள்ளார். அண்மைய நாட்களில் ஷபீர் ரஹ்மான் தொடர்ந்து மோச­மா­கவே ஆடி வரு­வதால் இவர் மீது விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன. இதனைய­டுத்து, ரசிகர் ஒருவர் ஷபீரின் மோச­மான ஆட்டம் குறித்து முகப்­புத்­த­கத்தில் பதி­விட்­டுள்ளார். அதனைக் கண்ட ரசி­க ரின் நண்பர் ஷபீ­ருக்கு அத னைப் பகிர, கடும் கோபம் கொண்ட ஷபீர் அந்த ரசி­கரை தகாத வார்த்­தை­களால் திட்­டி­ய­தோடு தாக்­குதல் தொடுப்­ப­தாகவும் மிரட்­டி­யுள்ளார். இவ் விவ­காரம் அந்­ …

  11. ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸ் – லுயிஸ் ஹமில்டன் சம்பியன் போர்மியுலா வன் கார்ப்பந்தயப் போட்டியின்; ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸில் மெர்சிடிஸ் அணிக்காக விளையாடும் இங்கிலாந்தின் லுயிஸ் ஹமில்டன் ( Lewis Hamilton ) சம்பியன் பட்டத்தினை கைப்பற்றியுள்ளார். ஓவ்வாரு வருடமும் போர்மியுலா வன் கார்ப்பந்தயப் போட்டி 21 சுற்றுக்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றையதினம் 12-வது சுற்று ஹங்கேரியில் நடைபெற்றது. இதில் ஹமில்டன் முதலிடத்தினை பெற்று சம்பியன் கிணத்தினை கைப்பற்றியுள்ள அதேவேளை பெர்ராரி வீரர் செபாஸ்டியன் விட்டல் 2-வது இடமும், மற்றொரு பெர்ராரி வீரர் கிமி 3-வது இடமும் பெற்றுள்ளனர். இந்த வெற்றியின் மூ…

  12. அதிக விலை உயர்ந்த கோல்காப்பாளர்கள் கோல்காப்பாளர் ஒருவருக்கான சாதனை தொகைக்கு இத்தாலியின் ஏ.எஸ். ரோமா கழகத்தில் இருந்து பிரேசில் வீரர் அலிசன் பெக்கரை லிவர்பூல் கழகம் வாங்கியுள்ளது. கோல்காப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த பரிமாற்றக் கட்டணங்கள் பற்றி இனி பார்ப்போம். ப்ரீமியர் லீக் உட்பட பெரும்பாலான உடன்படிக்கைகள் இங்கிலாந்து கழகங்களுக்கு இடையிலேயே இடம்பெற்றிருக்கின்றன. யூரோ நாணயத்தில் மில்லியன்களாலான அந்தப் பட்டியல் கீழ்வருமாறு, 1. அலிசன் பெக்கர் – 73 மில்லியன் யூரோ (ரோமாவில் இருந்து லிவர்பூல், 2018) பிரேசில் கழகமான இன்டர்நேசனலில் மூன்று ஆண்டுகள் திறமையை வெளிப்படுத்திய அலிசன் அந்த கழகம் கேம்பியனோடோ க…

  13. வட மாகாண வீரர்களின் சாதனையே தேசிய அணிக்கான தெரிவு வட மாகாணத்தில் இரு கிரிக்கெட் வீரர்கள் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியில் இணைந்திருப்பது மிகப்பெரிய சாதனை என்று இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் முகாமையாளர் ஹேமந்த தேவப்பிரிய குறிப்பிட்டார். ”யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் டெஸ்ட் குழாமில் 16 ஆவது வீரராக இருக்கும் வலதுகை சுழல் பந்துவீச்சாளர் (விஜயகாந்த்) வியாஸ்காந்த். அந்த பகுதியில் இருந்து கிரிக்கெட் வீரர் ஒருவர் வருவது மிகப்பெரிய சாதனையாகும்” என்று அவர் தெரிவித்தார். இலங்கை மற்றும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட உத்திய…

  14. ‘செய்தித்தாள்களையும், சமூகவலைதளங்களையும் பார்க்காதே’: ஸ்ரேயஸ் அய்யருக்கு தோனி அறிவுரை ஸ்ரேயாஸ் அய்யர், எம்.எஸ்.தோனி - படம் உதவி: ட்விட்டர் ஐபிஎல் நாளேடுகளைப் படிக்காதே, அனைத்து விதமான சமூக ஊடகங்களிலும்இருந்தும் ஒதுங்கி, கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்து என்று தோனி, எனக்கு அறிவு கூறினார் என்று ஸ்ரேயஸ் அய்யர் தெரிவித்துள்ளார். ஜுன் சேனலில் வெளியாகும், ஓபன் ஹவுஸ் வித் ரெனில் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ஸ்ரேயஸ் அய்யர் பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்தபின், தோனி எனக்கு ஏராளமான ஆலோசனைகளை வழங்கினார். அதில் குறிப்பாக என்னை செய்தித்த…

  15. 40 நிமிடங்களில் ஆட்டம் முடிந்தது; காட்டடி பேட்டிங் செய்த கப்தில்: 38 பந்துகளில் 108 ரன்கள் விளாசல் மார்ட்டின் கப்தில் சதம் அடித்த மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட காட்சி இங்கிலாந்தில் நடந்த கவுண்டி அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் பொளந்து கட்டிய நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் 38 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்து 40 நிமிடங்களில் வோர்செஸ்டர்ஷையர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். நார்த்தாம்டன் நகரில் உள்ள கவுண்டி மைதானத்தில் நேற்று வோர்செஸ்டர்ஷையர் அணிக்கும், நார்த்தாம்டன்ஷையர் அணிக்கும் இடையிலான டி20 போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நார்த்தாம்டன்ஷையர் அணி, 188 ரன்கள் குவித்தது. …

  16. 33 வயதில் 20 வயது வீரருக்குரிய ஃபிட்னஸ்... கெத்துக் காட்டும் ரொனால்டோ! 33 வயதில் 20 வயது வீரருக்குரிய உடல் திறனுடன் ரொனால்டோ உள்ளார். ரஷ்ய உலகக் கோப்பைத் தொடரில், மணிக்கு 33.98 கிலோமீட்டர் வேகத்தில் ஓடிய ஒரே வீரர் 33 வயதுடைய ரொனால்டோ! வேறு எந்த வீரரும் இந்த வேகத்தை எட்டவில்லை. ஏன்... 20 வயது கிலியன் எம்பாப்பேகூட இவ்வளவு வேகத்தில் ஓடவில்லை. ஆனால், போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ, அதிகபட்சமாக 33.98 கிலோமீட்டர் வேகத்தில் ஓடி கால்பந்து நிபுணர்களை வியக்கவைத்துள்ளார். ரொனால்டோவின் உடல்திறன் குறித்துப் பார்ப்பதற்கு முன், ஐரோப்பியக் கால்பந்து தொடர்கள் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். 1990-களில், உல…

  17. பவுன்சரைப் போட்டு சேவாகை காலி செய்து விடுவார்கள் என்று கேலி பேசினர்: சேவாக், தோனியை செதுக்கி வளர்த்தது பற்றி கங்குலி ருசிகரப் பதிவு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி : கோப்புப்படம் இந்தியக் கிரிக்கெட்டில் இரு பெரும் சாதனையாளர்களான வீரேந்திர சேவாக், எம்.எஸ்.தோனி ஆகியோரின் கிரிக்கெட் வாழ்க்கையைக் கட்டமைத்ததிலும், செதுக்கியதிலும் முன்னாள் கேப்டன், வீரர் சவுரவ் கங்குலிக்கு முக்கியப்பங்கு உண்டு இந்தியக் கிரிக்கெட்டில் கேப்டன்களாக இருந்தவர்களில் கங்குலியின் காலம் என்பது மிக அற்புதமான காலமாகும். இளைஞர்கள் அதிகமானோர் வெளிக்கொண்டு வரப்பட்டனர். அதிகமான போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறத் தொடங்கி இருந்த காலம். …

  18. ‘கிரிக்கெட்டில் இவர் பரவாயில்லையே!’- கோலியின் அரைசதம் குறித்து எசெக்ஸ் கிரிக்கெட் கேலி ட்வீட் படம். | ஏ.எப்.பி. கெம்ஸ்போர்டில் இந்திய அணியும் எசெக்ஸ் அணியும் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. இதில் இந்திய அணி விராட் கோலி உள்ளிட்டோரின் அரைசதங்களுடன் 395 ரன்கள் எடுக்க எசெக்ஸ் அணி தன் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்நிலையில் ரன் இயந்திரமான இந்திய கேப்டன் விராட் கோலி 67 பந்துகளில் அரைசதம் எடுத்தார், பிறகு 93 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஒரு 3 பந்து நீங்கலாக சரளமாகவே ஆடினார், இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். கோலி அரைசதம் எடுத்து இடது கை வேகப்பந்து…

  19. தீப்பொறி பறக்கும் பார்மில் இருக்கும் ஃபகார் ஜமானை வீழ்த்துவது எப்படி? - இந்திய பவுலர்களுக்கு மைக் ஹஸ்ஸி ஆலோசனை பாகிஸ்தான் சரவெடி வீரர் ஃபகார் ஜமான். | ஏ.பி. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியப் பந்து வீச்சைப் புரட்டி எடுத்து 106 பந்துகளில் 114 ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கியமாகத் திகழ்ந்த ஃபகார் ஜமான் சமீபத்தில் தீப்பொறி பறக்கும் பார்மில் இருந்து வருகிறார், ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததோடு பல ஒருநாள் சாதனைகளை அந்தத் தொடரில் முறியடித்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இவரைக் கட்டுப்…

  20. எப்போதும் இம்ரான் கேப்டன்தான் பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கான ரேஸில் பாக். கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் முந்திச் செல்லும் நிலையில் உள்ளார். கிரிக்கெட் உலகில் அவர் எப்போதும் முதன்மையான மற்றும் புதிரான கேப்டனாகவே தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். கிரிக்கெட் வாழ்க்கை யில் இருந்து விடுபட்ட பின்னர் அரசியல் பாதையில் சாத்தியமற்ற சூழ்நிலையில் தன்னை பொது வாழ்க்கைக்கு உட்படுத்திக் கொண்டார். 1980-ம் ஆண்டுகளில் கிரிக்கெட் உலகில் பல்வேறு கேப்டன்கள் இருந்தனர். ஆனால் களத்தில் தலைவராக செயல்பட்டது இம்ரான்கான் மட்டுமே. ஷார்ஜாவில் நடத்தப்பட்ட பெரும்பாலான ஆட்டங்களில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது. அப்ப…

  21. தனுஷ்க குணதிலகவுக்குத் தடை இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக, அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் இடைக்காலத் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என, இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (22) அறிவித்தது. வீரர்களுக்கான நடத்தைக் கோவையை மீறினார் என்ற குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முடிவடையும் வரையே, அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததும், இத்தடை அமுலுக்கு வருமெனவும், இப்போட்டியிலும் இன்றைய (23) தினம் அவர் பங்குபற்ற மாட்டாரெனவும், கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்தது. …

  22. டிஎன்பிஎல் 2018- வலது கையாலும், இடது கையாலும் பந்து வீசி அசத்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் காஞ்சி வீரன்ஸ் அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் இரண்டு கைகளாலும் பந்து வீசி அசத்தினார். #TNPL2018 #KV தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 22-ந்தேதி நடைபெற்ற ஆட்டத்தில் விபி காஞ்சி வீரன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கா…

  23. `2019 உலகக்கோப்பைக்குப் பின் ஓய்வு?' - என்ன சொல்கிறார் டேல் ஸ்டெயின் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பைக்குப் பின் தான் ஓய்வு பெறப்போவதாக தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார். தனது வேகப்பந்துவீச்சால் பல்வேறு அணிகளைத் திணறடித்தவர் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின். 2004-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், தொடர்ந்து தனது திறமையை நிரூபிந்ததால் ஒருநாள், டி20 போட்டிகளிலும் இடம்பெற்றார். வேகத்துடன் கூடிய ஸ்விங் பந்துவீச்சால் எதிரணி வீரர்களைப் பலமுறை இவர் கலங்கடித்தார். ஒருகட்டத்தில் இவரும், மோர்னே மார்கலும் தென்னாப்பிரிக்காவை நம்பர் ஒன் அந்தஸ்துக்கு …

  24. சர்வதேச சம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடர் – மன்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி லிவர்பூல் வெற்றி EAST RUTHERFORD, NJ – JULY 25: Mohamed Salah #11 of Liverpool celebrates his goal with teammates during the International Champions Cup match between Liverpool FC and Manchester City FC at MetLife Stadium on July 25, 2018 in East Rutherford, NJ. Liverpool won the match with a score of 2 to 1. (Photo by Ira L. Black/Corbis via Getty Images) சர்வதேச சம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடரின் மன்செஸ்டர் சிட்டி அணியுடனான போட்டியில் லிவர்பூல். அணி 2-1 என்ற கோல் கணக்கில் அணியை வென்றுள்ளது. கால்பந்து லீக் …

  25. ஹெட்மையரின் அதிரடி சதம், ஹோல்டரின் மறக்க முடியா கடைசி ஓவர்: வங்கதேசத்தை வீழ்த்தியது மே.இ.தீவுகள் மே.இ.தீவுகளை தன் அதிரடி சதத்தினால் வெற்றிக்கு இட்டுச் சென்ற ஆட்ட நாயகன் ஹெட்மையர். | ஏ.எப்.பி. அமெரிக்காவில் நடைபெறும் மே.இ.தீவுகள், வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியின் பரபரப்பான போட்டியில் வங்கதேசத்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மே.இ.தீவுகள் 3 போட்டிகள் கொண்ட தொடரை இதுவரை 1-1 என்று சமன் செய்துள்ளது. மே.இ.தீவுகளில் ஹெட்மையர் 93 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 125 ரன்கள் விளாச மே.இ.தீவுகள் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் பிரமாதமாக இலக்கை விரட்டி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.