Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சந்திமல், ஹத்துருசிங்க உள்ளிட்ட மூவருக்கு போட்டி தடை இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமல் உள்ளிட்ட மூவருக்கு தலா இரு போட்டிகளுக்கு ஐ.சி.சி தடை விதித்துள்ளது. இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமல், இலங்கை அணிப் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கே குறித்த தடை உத்தரவு ஐ.சி.சி யினால் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக மைதானத்திற்கு வரமறுத்தமை மற்றும் போட்டியை தாமதமாக ஆரம்பிப்பதற்கு காரணமாக இருந்தமை போன்ற செயற்பாடுகளால் அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த மூவரும்…

  2. பாகிஸ்தான் வீரர் அஹமட் ஷேசாத் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபணம் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷேசாத் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று (10) உறுதி செய்தது. இதன் காரணமாக அவருக்கு குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், அவரிடம் விளக்கம் கோரி குற்றப்பத்திரிகை சமர்பிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 26 வயதுடைய அனுபவமிக்க ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷேசாத் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் கிண…

  3. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சுழல் மன்னன் ஹேரத் விரைவில் ஓய்வு டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 400 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய உலகின் முதலாவது இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத், எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக பிபிசி சிங்கள செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து ஜாம்பவானான முத்தையா முரளிதரன் ஓய்வுபெற்ற பிறகு, ரங்கன ஹேரத் 2010ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அணியின் துரும்புச் சீட்டாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார். டெஸ்ட் அரங்கில் இலங்கை அணி அண்மைக்காலமாக சுழற்பந்து வீச்சினால் பெற்ற ஒருசில முக்கிய வெற்றிகளுக்கு காரணமா…

  4. விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் - முன்றரை மணி நேரம் போராடி காலிறுதியில் தோல்வி அடைந்தார் பெடரர் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் காலிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மூன்றரை மணி நேரம் போராடி தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #Wimbledon2018 #RogerFederar #KevinAnderson விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. …

  5. ``எனது முடிவைப் புரிந்துகொள்ளுங்கள்!” ரசிகர்களுக்கு ரொனால்டோ உருக்கமான கடிதம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து உலகில் தவிர்க்க முடியாத பெயர். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவரின் கால்பந்தாட்ட திறமைக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த உலகக்கோப்பையிலும் அவரின் விளையாட்டை நாடுகள் கடந்து ரசித்தனர். உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கையில் மிக முக்கிய முடிவு ஒன்றை அறிவித்தார். அதாவது கடந்த 9 ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வந்த ரொனால்டோ, இனி யுவெண்டஸ் கிளப் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது ரியல் மாட்ரிட் ரசிகர்களுக்கு பெரு…

  6. ரோ‘ஹிட்’ மேன் என்ற செல்லப்பெயர் பிடித்திருக்கிறது: தினேஷ் கார்த்திக்கிடம் ரோஹித் சர்மா ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக். | படம்: விவேக் பெந்த்ரே. ஞாயிறன்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் சதம் எடுத்து வெற்றிக்கு வித்திட்ட நாயகன் ரோஹித் சர்மா பிசிசிஐ.டிவிக்காக தினேஷ் கார்த்திக் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அணியில் இடம்பெற்று ஆட வேண்டிய தினேஷ் கார்த்திக் இண்டெர்வியூ மேனாக மாற்றப்பட ரோஹித் ‘ஹிட்’ மேன் செல்லப்பெயர் குறித்து பதில் அளித்துள்ளார்! பிசிசிஐயின் கிளிஷேயான கேள்விகளுக்கு ரோஹித் சர்மா அளித்த பதில்கள் இதோ: கொலின் மன்ரோவுக்கு இணையாக 3 டி20 சர்வதேச சதங்களை எப்படி உணர்கிறீர்கள்? …

  7. ‘விராட் கோலியை சதம் அடிக்க விட்டுவிடுவோமா?’- ஆஸி. வீரர் பாட் கம்மின்ஸ், மெக்ரா சவால் விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் : கோப்புப்படம் ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆண்டு இறுதியில் டெஸ்ட் தொடருக்காக வரும் இந்திய அணிக்கு நெருக்கடி அளிப்போம். கேப்டன் விராட் கோலியை சதம் அடிக்கவிடாமல் பார்த்துக்கொள்வோம் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் சவால் விடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராவும் கம்மின்ஸ் சவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாட உள்ளது.…

  8. எண்பதுகளை ஆட்கொண்ட 'சன்னி டேஸ்': சுனில் கவாஸ்கர் அறிந்ததும்-அறியாததும்! ஜூலை 10, 1949-ஆம் வருடம் மும்பையில் பிறந்த சுனில் கவாஸ்கர், 1966-ஆம் ஆண்டு தன்னுடைய 17-ஆவது வயதில் இந்தியாவின் பள்ளிகள் அளவிலான மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்படுகிறார். அன்று முதல் கிரிக்கெட் உலகின் புதிய சகாப்தம் உதயமானது என்றே கூறலாம். அப்போது மும்பையின் ரஞ்சி அணிக்காக தேர்வு செய்யப்படுகிறார். அன்றைய காலகட்டம் முதல் இந்திய அளவிலான உள்ளூர் அணிகளில் சிறந்த அணியாக மும்பை இருந்து வருகிறது. அதுபோன்ற ஒரு அணியில் சிறிய வயதிலேயே தேர்வானாலும் அடுத்த இரு சீசன்களுக்கு அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. பின்னர் 19…

  9. ஐபிஎல் ரசிகர்களுக்கு மீண்டும் 360 டிகிரி அதிரடி காணக்கிடைக்குமா? மவுனம் கலைத்த ஏ.பி.டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்த தென் ஆப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மென் ஏ.பி.டிவில்லியர்ஸ் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவாரா ஆடமாட்டாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இந்நிலையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் இது குறித்து மவுனம் கலைத்துள்ளார்: “ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஆடுவேன், அதே போல் டைட்டன்ஸ் அணிக்கு ஆடி இளம் வீரர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன், என்னிடம் திட்டமிடல் எதுவுமில்லை. இதனை நீண்டநாட்களாக என்னால் தெரிவிக்க முடியாமல் இருந்தது அவ்வளவே. நிறைய இடத்தி…

  10. விம்பிள்டனில் புதிய சாதனை: முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றவர்கள்! (படங்கள்) கிராண்ட்ஸ்லாம் ஓபன் எராவில் இப்படி நடைபெற்றதில்லை. இதுவே முதல்முறை என்பதால் இந்த எட்டு வீராங்கனைகளும் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்கள். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த வருட விம்பிள்டன் போட்டியில் மகளிர் பிரிவில் காலிறுதிக்குத் தகுதி பெற்ற எட்டு வீராங்கனைகளும் போட்டித் தரவரிசையில் டாப் 10-க்கு வெளியே உள்ளவர்கள். ஓபன் எரா காலக்கட்டத்தில் எந்தவொரு கிராண்ட்ஸ்லாமிலும் இதுபோல நடைபெற்றதில்லை. (ஓபன் எரா - 19…

  11. டி20 வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஆரோன் பின்ச் டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக 900 புள்ளிகளை கடந்து ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் சாதனை படைத்துள்ளார். துபாய் : டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியளில் 900 புள்ளிகளை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரும், டி20 போட்டிகளின் கேப்டனுமான ஆரோன் பின்ச் படைத்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற தொடரின் ம…

  12. பாக். கேப்டன் சர்பராஸ் அகமதுவின் நீட்டிய கையைப் புறக்கணித்த கிளென் மேக்ஸ்வெல் படம். | ஏ.எப்.பி. ஹராரேயில் நடைபெற்ற முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியபோது ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெலின் விளையாட்டுணர்வற்ற செயல் பலரது கவனத்தையும் ஈர்த்து சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது, அப்போது மேக்ஸ்வெல், ஷோயப் மாலிக்குடன் கைகொடுத்தார். நடுவர்களுக்குக் கைகொடுத்தார், ஆனால் பாகிஸ்தான் வெற்றிக் கேப்டன் சர்பராஸ் அகமது தன் கையை மேக்ஸ்வெலை நோக்கி நீட்டியபோதும் கண்டும் காணாமல் சென்றார் கிளென் மேக்ஸ்வெல், இதனை கேமரா…

  13. ஒரே போட்டியில் இரண்டு உலக சாதனைப் படைத்து தல டோனி அசத்தல் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் தல டோனி இரண்டு உலக சாதனைப் படைத்து அசத்தியுள்ளார். #WorldCup2018 இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலின் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 8-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் …

  14. பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ்- ஹாமில்டனை பின்னுக்குத் தள்ளினார் செபஸ்டியான் வெட்டல் பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸில் லெவிஸ் ஹாமில்டனை பின்னுக்குத் தள்ளி பெர்ராரி வீரர் செபஸ்டியான் வெட்டல் சாம்பியன் பட்டம் வென்றார். #BritishGP ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ பந்தயம் 21 சுற்றுகளாக (கிராண்ட் பிரிக்ஸ்) நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். அதன்படி 10-வது சுற்று பிரட்டனில் இன்று நடைபெற்றது. இது பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் என்று அழைக்கப்படும் இதற்கான தகுதிச் சுற்று வெள்ளிக்கிழமை மற்றும் சன…

  15. லிதுவேனியாவுடனான மோதலை சமநிலையில் முடித்த இலங்கை இலங்கை மற்றும் லிதுவேனியா கால்பந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற சர்வதேச நட்பு ரீதியிலான போட்டித் தொடரின் முதலாவது போட்டி எந்தவித கோல்களும் இன்றி சமநிலையில் நிறைவுற்றுள்ளது. கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இன்று (08) மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகிய இந்த மோதல் இலங்கை அணி சுமார் 20 மாதங்களின் பின்னர் ஆடும் சர்வதேசப் போட்டியாகவும், 6 வருடங்களின் பின்னர் இலங்கையில் விளையாடும் சர்வதேசப் போட்டியாகவும் அமைந்தது. போட்டியின் ஆரம்பத்திலேயே லிதுவேனிய அணி இலங்கை வீரர்களை சோதித்தது. அலோசியஸ் டடஸ் உள்ளனுப்பிய பந்தை ஸ்டோன்கஸ் லோரினஸ் தலையால் தட்டி கோலாக்க முயற்சித்த ப…

  16. இங்கிலாந்துடன் நாளை முதல் டி20 போட்டி: சவாலுக்கு தயாரா கோலி படை?- ராகுல், தினேஷ் யாருக்கு இடம்? இங்கிலாந்து கேப்டன் மோர்கன், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர் கோப்பையுடன் இன்று போட்டோவுக்கு போஸ் கொடுத்த காட்சி - படம்: ஏபி இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை மான்செஸ்டர் நகரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யார் இடம் பெறுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இங்கிலாந்துக்கு 3 மாதங்கள் சுற்றுப்பயணமாகச் சென்றுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முன்னதாக அயர்லாந்துடன் நடந்த டி20 தொடரை 2-0 …

  17. 28 வருடத்திற்குப் பிறகு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1990-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தியுள்ளது. #PAKvAUS ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்தது. பின்னர் 184 ரன்கள…

  18. “தாதா” கங்குலிக்கு இன்று பிறந்தநாள்: தன்னுடைய ஸ்டைலில் வாழ்த்துக்கூறிய சேவாக் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி : கோப்புப்படம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு இன்று 46-வது பிறந்தநாளாகும். அவருக்கு முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணி, டிராவிட் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி என்பது மறுப்பதற்கில்லை. கடந்த 1990களில் இந்திய அணிக்கு அறிமுகமாகினார் சவுரவ் கங்குலி. தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். …

  19. டோனிக்கு இன்று 37-வது பிறந்தநாள் - சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து மழை இந்திய ஒருநாள் அணியின் முன்னாள் கேப்டன் டோனி இன்று 37-வது பிறந்த நாளை கொண்டாடி வருவதால் அவருக்கு, ரசிகர்கள், பிரபலங்கள் உள்பட பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். #MSDhoni #HappyBirthdayMSDhoni ராஞ்சி : இந்திய ஒருநாள் அணி விக்கெட் கீப்பரும் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவருமான மகேந்திர சிங் டோனி இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண…

  20. ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின்போதும் ‘மாட்டுச் சாணத்தை’ எடுத்துச் செல்லும் கிரிக்கெட் வீரர் மகாயா நிடினி : கோப்புப்படம் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் போது, கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஸ்போர்ட்ஸ் கிட் உடன் எடுத்துச் செல்வார்கள், சிலர் தங்களின் மனைவியை உடன் அழைத்துச் செல்வார்கள் என்றுதான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், ஒரு கிரிக்கெட் வீரர் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின்போதும், தன்னுடன் மாட்டுச் சாணத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவருக்கு நேற்று 41-வது பிறந்த நாளாகும். தென் ஆப்பிரிக்க நேரப்படி இன்றுதான் அவருக்குப் பிறந்த நாள். அவர் வேறுயாரும…

  21. முதல் டெஸ்ட் - வங்காள தேசத்தை முதல் இன்னிங்சில் 43 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 43 ரன்களில் வங்காள தேசம் சுருண்டது. #WIvBAN #TestSeries ஆண்டிகுவா: வங்காள தேசம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் ஆண்டிகுவா நகரில் இன்று இரவு தொடங்கியது. டாஸ் வென்ற வெ…

  22. ஏசியன் சம்பியன் சிப் போட்டியில் விளையாட வவுனியா இளைஞனும் தெரிவு ஏசியன் சம்பியன் சிப் போட்டியில் விளையாட செல்லும் இலங்கை கூடைப்பந்தாட்ட அணியில் வவுனியா இளைஞனும் தெரிவாகியுள்ளார். ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் ஏசியன் சம்பியன் சிப் போட்டியில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் தலைநகர் டாக்கா செல்லும் இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியில் வவுனியா இளைஞனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியின் 18 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த கந்தவநேசன் கவிலவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்களில் மாகாண மட்டத்தில் பல பதக்கங்கள…

  23. தேசிய ரீதியிலான கூடைப்பந்தாட்ட தொடரில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சம்பியன்! 15 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு “C” மகளிர் பாடசாலைகளுக்கு இடையிலான இந்தப் பருவகாலத்திற்கான நாடளாவிய கூடைப்பந்து தொடரின் இறுதிப் போட்டியும், மூன்றாம் இடத்திற்கான போட்டியும் நேற்று புனித அந்தோனியார் கல்லூரியின் மகளிர் கூடைப் பந்தாட்ட அரங்கில் இடம்பெற்றிருந்தது. இறுதிப் போட்டி யாழ்ப்பாணம் வேம்படி உயர்தர மகளிர் பாடசாலை அணியும், கண்டி புனித அந்தோனியர் மகளிர் கல்லூரி அணியும் மோதியிருந்த இந்த இறுதிப் போட்டியில், யாழ்ப்பாண வீராங்கனைகள் 66-37 என்ற புள்ளிகள் கணக்கில் மைதான சொந்தக்காரர்களான அந்தோனியார் மகளிர் கல்லூரி அணியை வீழ்த்தி சம்பி…

  24. விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடக்கம் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. #wimbledon2018 லண்டன்: ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் உயரியதும், கவுரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் …

  25. விளையாட்டுத்துறை அமைச்சரைச் சந்தித்த முன்னாள் இலங்கை கிரிக்கெட் நிறுவன உறுப்பினர்கள் ; பேசிய விடயங்கள் இதோ ? இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலை குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்து எடுத்துக் கூறியுள்ளனர். குறித்த சந்திப்பு நிறைவடைந்த நிலையில் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவருமான அர்ஜூன ரணதுங்க, 'குறிப்பாக கிரிக்கெட் சபையில் இருந்த முன்னாள் அங்கத்தவர்களுடன் கலந்தாலோசித்தோம். எமக்கு கடமையொன்று உள்ளது கிரிக்கெட் தொடர்பில் கவனம் செலுத்த. ஆகவே தற்போதைய விளையாட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.