விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
அன்று பி.சி.சி.ஐ கொடுத்தது ஐந்து லட்சம், இன்று வாங்குவது 6 ஆயிரம் கோடி! #IPLTvRights இந்தியாவில் விளையாட்டை வருமானமாக்க பல அமைப்புகளும் திணற, பல ஆயிரம் கோடிகளில் டீல் பேசுகிறது பிசிசிஐ. கிரிக்கெட்டைக் கண்டுபிடித்தது இங்கிலாந்தாக இருந்தாலும், இன்று கிரிக்கெட்டைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பு பிசிசிஐதான். 1992-ம் ஆண்டு இந்தியா ஆடும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப, பிசிசிஐ நிர்வாகத்திடம் ஒரு மேட்சுக்கு 5 லட்சம் ரூபாய் கேட்டது பிசிசிஐ. ஆனால் இன்று, இந்திய கிரிக்கெட் அணி ஆடும் மேட்சுகளை தங்கள் சேனலில் ஒளிபரப்ப, 5 ஆண்டுகளுக்கு 6,128 கோடி ரூபாய் தர ஒப்பந்தம் போட்டிருக்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ். அதாவ…
-
- 0 replies
- 408 views
-
-
கங்குலி சட்டையை கழற்றிதான் சுற்றினார்; 2019-ல் உ.கோப்பையை வென்றால், நான் சட்டை இல்லாமல் ஆக்ஸ்போர்ட் தெருவில் நடப்பேன்: விராட் கோலி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியுடன், தற்போதைய கேப்டன் விராட் கோலி: கோப்புப் படம் - படம்: ஏஎப்ஃபி 2002-ல் நடந்த நாட் வெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் வென்ற போது கங்குலி சட்டையைக் கழற்றிதான் சுற்றினார். ஆனால் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றால், ஆக்ஸ்போர்ட் தெருவில் சட்டையில்லாமல் நடப்பேன் என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார். கடந்த 2002ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு கங்குலி தலைமையிலான இந்திய அணி பயணம் மேற்கொண்டது. அதில் நா…
-
- 0 replies
- 293 views
-
-
தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம், மூன்றாவது தங்கப்பதக்கத்தை வென்று அசத்தல் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் விழாழனன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆடவருக்கான பளுதூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார், வேலுர் மாவட்டம் சத்துவாச்சாரியைச்சேர்ந்தவர். சதீஷ்குமார் ஸ்காட்லாந்தில் நடந்த முந்தைய காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா தற்போது வரை 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. http://www.news.mowval.in/News/t…
-
- 0 replies
- 465 views
-
-
காமன்வெல்த் போட்டி- 14 தங்கத்துடன் 36 பதக்கங்கள் பெற்று ஆஸ்திரேலியா முதலிடம் காமன்வெல்த் 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 14 தங்கத்துடன் 36 பதக்கங்கள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. #CWG2018 #GC2018 ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டி நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 4-ந்தேதி) கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று போட்டிகள் தொடங்கியது. தொடக்க நாளில் இங்கிலாந்து 6 தங்கம், தலா மூன்று வெள்ளி, வெண்கலத்துடன் 12 பதக்கங்…
-
- 2 replies
- 534 views
-
-
ஐபிஎல் போட்டிக்கு அழைத்தால் கூட நான் விளையாட வரமாட்டேன்: அப்ரிடி ‘அந்தர் பல்டி’ பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி - படம் உதவி: ட்விட்டர் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் விளையாட என்னை அழைத்தால் கூட நான் விளையாமாட்டேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி மீண்டும் வம்பிழுக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் முதன்முதலில் தொடங்கும் போது டெக்கான் சார்ஜர்க்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அப்ரிடி அப்போது ஐபிஎல் போட்டியை புகழ்ந்து தள்ளினார். அப்போது அவர் கூறுகையில், ‘ஐபிஎல் தொடரில் நான் விளையாடிய அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. மிகச்சிறந்த அனுபவம். மிகச்சிற…
-
- 0 replies
- 350 views
-
-
அரையிறுதிக்கான பிரகாச வாய்ப்புடன் பார்சிலோனா, லிவர்பூல் அணிகள் @Getty Images ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் முதல்கட்ட காலிறுதிப் போட்டிகளில் பார்சிலோனா மற்றும் லிவர்பூல் அணிகள் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளன. இதில் ரோமா கழகத்துடனான போட்டியில் பார்சிலோனா இரண்டு ஓன் கோல்களின் உதவியுடன் வெற்றியை உறுதி செய்ததோடு மன்செஸ்டர் சிட்டி அணியுடனான போட்டியில் லிவர்பூல் முதல் 31 நிமிடங்களுக்குள்ளேயே கோல் மழை பொழிந்து வெற்றியை தன்வசமாக்கிக் கொண்டது. சம்பியன்ஸ் லீக் தொடரின் கடைசி இரண்டு முதல் கட்ட காலிறுதி போட்டிகளாகவே நேற்று (04) இரவு இந்த போட்டிகள் நடைபெற…
-
- 0 replies
- 316 views
-
-
இலங்கை அணியுடன் சச்சரவுகளில் ஈடுபட்ட சில வெளிநாட்டு வீரர்கள் இலங்கை அணியுடன் சச்சரவுகளில் ஈடுபட்ட சில வெளிநாட்டு வீரர்கள் சுதந்திரக் கிண்ண T-20 தொடரின் ஆறாவது போட்டியில் பங்களாதேஷ் அணியினர் இலங்கை அணியினை கிண்டல் செய்யும் விதமாக பாம்பு நடனம் ஆடியது, இலங்கை வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மைதானத்தினை விட்டு வெளியேறுவது போன்று அச்சுறுத்தல் விடுத்தது, ஓய்வறைக் கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டது போன்றவை கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. இது மாதிரியாக கடந்த காலங்களிலும் இலங்கை அணியுடனும், இலங்கை வீரர்களுடனும் ஏனைய நாட்டு அணிகளும், வீரர்களும் முறுகல் நிலையினை தோற்றுவித்த சம்பவங்கள்…
-
- 0 replies
- 436 views
-
-
ஆஸ்திரேலியா மீண்டும் ஆலன் பார்டரிலிருந்து தொடங்க வேண்டும்! #SAvAUS தோல்வியை உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா? தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், தோல்வி பெற்றுவிடுவோமோ என்று பயப்படுபவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அவமானமாக தென் ஆப்பிரிக்க மண்ணில் 3-1 என டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது ஆஸ்திரேலியா. கடைசி டெஸ்ட்டில் 492 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி என்பது கடந்த 90 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா சந்திக்காத சறுக்கல். உலகுக்கே கிரிக்கெட் எப்படி ஆடப்படவேண்டும், கேப்டன்ஷிப் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்த ஆஸ்திரேலியா இப்படி ஒரு மாபெரும் அவமானத்…
-
- 0 replies
- 378 views
-
-
ஆஸ்திரேலியா - அன்று 90’ஸ் கிட்ஸ்களின் ஆதர்சம்... இன்று? 2015 வேர்ல்டு கப். சிட்னியில இந்தியா - ஆஸ்திரேலியா செமி ஃபைனல். அதுவரைக்கும் இந்தியா ஒரு மேட்ச் கூடத் தோக்கல. ஆனாலும் ஒரு பயம். அந்த பயம் 2011 உலகக்கோப்பை குவாட்டர் ஃபைனல்லயும் இருந்துச்சு. இந்த செமி சிட்னியில, அந்த காலிறுதி அஹமதாபாத்ல. வெளியூர்ல ஆடுனப்போ இருந்த பயம் இந்தியால ஆடுனப்போவும் இருந்துச்சு. 2011 செமி ஃபைனல், ஃபைனல் மேட்ச் அப்பெல்லாம்கூட இல்லாத பயம், அந்த குவாட்டர் ஃபைனல்ல இருந்துச்சு. மேட்ச் முடியுற வரைக்கும் அந்த பயம் கொஞ்சம் கூட குறையல. மேட்ச்சோட எந்த தருணத்துலயும் கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ண முடியல. இதுக்கு ஒரே காரணம் - அந்த 2 மேட்ச்லயும் இந்தியா எதிர்த்து விளையாடுனது ஆஸ்திரேலியா. அந்த பயம…
-
- 0 replies
- 546 views
-
-
கேலி செய்த ரசிகர்களை ‘பைசைக்கிள் கிக்’ கோல் மூலம் திகைக்க வைத்த ரொனால்டோ ரொனால்டோ அடித்த பைசைக்கிள் கிக் ஷாட் கோல். - படம். | ஆல்பர்ட்டோ லிங்ரியா. டியூரினில் நடைபெற்ற யுஏஃபா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியால் மேட்ரிட் 3-0 என்ற கோல் கணக்கில் யுவண்டஸ் அணியை காலிறுதி முதல் லெக் ஆட்டத்தில் வீழ்த்தியது. இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த பைசைக்கிள் கிக் கோல் ரொனால்டோ ரசிகர்களை எழுச்சியுறச் செய்துள்ளது. ரியால் மேட்ரிட் வீரர் டேனி கார்வஜல் பந்தை லேசாக தூக்கி விட கோல் அருகில் இருந்த ரொனால்டோ கோலுக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்த நிலையில் அப்படியே காற்றில் கால்க…
-
- 2 replies
- 768 views
-
-
பாகிஸ்தானிற்கு உலக அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும் - சப்ராஸ் அகமத் பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் செய்வது குறித்த தங்கள் எண்ணத்தை உலக கிரிக்கெட் அணிகள் மாற்ற வேண்டும் பாக்கிஸ்தானிற்கு அந்த அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சப்ராஸ் அகமத் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தானில் இடம்பெற்ற மேற்கிந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு - 20 தொடரை பாக்கிஸ்தான் அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியதை தொடர்ந்தே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அணிகள் இனிமேல் காரணங்களை முன்வைக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், இன்றைய போட்டியை பார்ப்பதற…
-
- 0 replies
- 327 views
-
-
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியுடன் விடைபெற்றார் மோர்னே மோர்கல் தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான மோர்னே மோர்கல் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியுடன் விடைபெற்றார். #SAvAUS #MorneMorkel தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மோர்னே மோர்கல். 33 வயது 179 நாட்களாகும் இவர், தென்ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தியாவிற்கு எதிரான டர்பன் டெஸ்டில் அறிமுகமானார். அதன்பின் அந்த அணியின் ம…
-
- 0 replies
- 398 views
-
-
முரளிக்காக அர்ஜுனா, அர்ஜுனாவுக்காக கதிர்காமர் பந்தை சேதப்படுத்திய சர்ச்சை இன்று அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அப்பால் அந்த நாட்டினது கௌரவப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. எனவே, கிரிக்கெட் ஜாம்பவான் சேர் டொன் பிரெட்மன் அளவுக்கு ஒப்பிட்டு புகழப்பட்ட அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் அனுபவ வீரர் டேவிட் வோர்னர் என இரு முன்னணி வீரர்களை இழக்கும் அளவுக்கு இந்த விடயம் சென்றது. 1970களில் கெர்ரி பாக்கர் காலத்துக்கு பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அதன் மோசமான காலத்திற்கு முகம்கொடுத்துள்ளது. கெர்ரி பாக்கர், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மற்றும் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தையே மீறி உலகக் கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்தியபோது அதில் பங்கேற்ற தனத…
-
- 0 replies
- 410 views
-
-
கோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ; நாளை ஆரம்பம் : அச்சுறுத்தலாக அமையும் காலநிலை கடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெற்றுவரும் கொமன்வெல்த் விளையாட்டுப்போட்டி நாளை அவுஸ்திரேலியாவின் கோல்கோஸ்ட் நகரில் ஆரம்பமாகின்றது. இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து இந்த கொமன்வெல்த் விளையாட்டு போட்டி இடம்பெற்று வருகின்றது. இம்முறை பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் (கொமன்வெல்த் விளையாட்டு) 6, 600 வீர வீராங்கனைகள் போட்டியிடவுள்ளனர். இம்முறை நடைபெறவுள்ள போட்டிகளில் ஆண் பெண் இருபாலாருக்கும் சரிசமமான தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும். ஒலிம்பிக், ஆச…
-
- 2 replies
- 401 views
-
-
’103 பந்துகளில் 7 ரன்கள்... பட்டையைக் கிளப்பிட்டான்ல..!’ இதான் டெஸ்ட் மேட்ச் #NZvENG டி-20, டி-10, ஐஸ் கிரிக்கெட் வரை பார்த்துவிட்ட கிரிக்கெட் ரசிகர்கள், இன்று சர்வதேச 'பாக்ஸ் கிரிக்கெட்' ஆட்டத்தையும் பார்த்திருப்பார்கள். நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் ஆடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி செஷன் அப்படித்தான் இருந்தது. பேட்டைச் சுற்றி 8 ஃபீல்டர்கள். பந்து பேட்டைத் தொட்டு 'எட்ஜ்' ஆனால் பிடிப்பதற்காக ஒற்றைக்காலில் காத்திருக்கிறார்கள். தூக்கி அடித்தாலும் முடிந்தது. பந்தை விடவும் முடியாது... யார்க்கர்கள் தாக்குகின்றன. உடலாலும் வாங்க முடியாது. எல்.பி ஆக வாய்ப்புண்டு. தோல்வி அருகாமையில் இருப்பதால் நெருக்கடி வேறு. இத்தனையையும் சமாளிப்பது …
-
- 0 replies
- 460 views
-
-
ராணுவ சீருடையில் பத்மபூஷண் விருது பெற்ற மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் மற்றும் வீரர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து உயரிய பத்மபூஷண் விருது பெற்றார். இந்திய அரசால் வழங்கப்படும் மிகப்பெரிய 3-ஆவது நிலை கௌரவமாக பத்மபூஷண் விருது உள்ளது. இதன்மூலம் இந்திய அளவில் பத்மபூஷன் பெறும் 11-ஆவது கிரிக்கெட் வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இந்த விழாவில் ராணுவ சீருடையில் வந்த மகேந்திர சிங் தோனி, ராணுவ அணிவகுப்பில் சென்று குடியரசுத் தலைவரிடம் இருந்து இவ்விருதை பெற்றார். புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகைய…
-
- 1 reply
- 535 views
-
-
2018 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணம் இலங்கையில்? இந்த ஆண்டு செம்டம்பர் மாதம் இந்தியாவில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி விளையாடுவதில் சிக்கல்கள் உள்ள காரணத்தினால், குறித்த தொடரினை இலங்கையில் நடாத்த ஆசிய கிரிக்கெட் வாரியம் (ACC) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய கிரிக்கெட் வாரியத்தின் கூட்டத் தொடரின் போது, 2018ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்தும் நாடாக இந்தியா பெயரிடப்பட்டிருந்தது. எனினும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அயல் நாடுகளிடையே அரசியல் ரீதியாக குளறுபடிகள் நீடிப்பதால் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்து விளையாடுவதில் பிரச்சினைகள் இருக்க…
-
- 0 replies
- 350 views
-
-
உலகக்கோப்பை ஜெயிச்சு 7 வருஷமாச்சு... தோனியின் அந்த சிக்ஸர் இன்னமும் கண்ணுக்குள்ளே..! #OnThisDay #2011CWC 28 ஆண்டு கால உலகக்கோப்பை கனவுக்கும், 121 கோடி மக்களின் ஏக்கத்துக்கும் தீனிபோட்ட நாள், ஏப்ரல் 2, 2011. சச்சின் ஒருமுறையாவது உலகக்கோப்பையைத் தன் கையால் தொடுவாரா? சொந்தமண்ணில் இதுவரை எந்த நாடும் கோப்பையை வென்றதில்லை. இந்திய அணி அந்தச் சாதனையைப் படைக்குமா போன்ற பல கேள்விகளுக்குப் பதில் கிடைத்த நாள் அது. ஆம், இந்திய கிரிக்கெட் அணி, உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்து, இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்திய 10-வது உலகக்கோப்பைத் தொடர், 2011-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி …
-
- 0 replies
- 365 views
-
-
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி அ-அ+ வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. #PAKvWI #KarachiT20I கராச்சி: பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அங்கு சுமார் 10 ஆண்டுக…
-
- 1 reply
- 383 views
-
-
தாய்நாட்டுக்கு ஆட ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க மறுத்த குசல் பெரேரா பந்தை சேதப்படுத்திய சர்ச்சையால் தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய உப அணித் தலைவர் டேவிட் வோர்னருக்கு பதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அழைக்கப்பட்ட இலங்கையின் முன்னணி வீரர் குசல் பெரேரா அந்த அழைப்பை நிராகரித்துள்ளார். இதனை அடுத்து சன்ரைசர்ஸ் அணிக்கு இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இலங்கை டெஸ்ட் அணிக்கு திரும்பும் இலக்குடனும் சில காயங்களினைக் கருத்திற் கொண்டதன் காரணமாகவுமே குசல் பெரேரா இந்த ஆண்டு ஐ.பி.எல் அழைப்பை நிராகரித்ததாக அவரது முகாமையாளர் ரவி டி சில்வா உறுதி செய்துள்ளார். இலங்கை அணியின் அடுத்த தொடரான மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் பங்கேற்பது…
-
- 0 replies
- 487 views
-
-
சம்பியனானது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான தொடரான பிரெஞ்சு லீக் கிண்ணத் தொடரில் பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது. போர்டெக்ஸ் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற குறித்த போட்டியில், பரிஸ் ஸா ஜெர்மைனின் நட்சத்திர முன்கள வீரரான கிலியான் மப்பே மொனாக்கோவின் கமில் கிலிக்கால் வீழ்த்தப்பட்டார். இதனையடுத்து, காணொளி உதவி மத்தியஸ்தருடன் மூன்று நிமிடங்களளவில் ஆலோசித்த கிளமன்ட் டுர்பின், பரிஸ் ஸா ஜெர்மைனுக்கு பெனால்டி வழங்குவதை உறுதிப்படுத்தினார். இந்நிலையில், குறித்த பெனால்டியை பரிஸ் ஸா ஜெர்மைனின் இன்னொரு நட்சத்திர முன்கள வீரரான எடின்சன் கவானி கோலாக்க, போட்டியின் எட்டாவது நிமிடத்திலேய…
-
- 1 reply
- 695 views
-
-
வடக்கு, கிழக்கில் கால்பந்து நிலைமை எவ்வாறு உள்ளது? இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீரர்களை உள்வாங்குவதற்கான தேர்வு முகாம்கள் (Trials) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) ஏற்பாட்டில் இரண்டு மாகாணங்களுக்கும் வெவ்வேறு கட்டங்களாக கடந்த வாரம் நடைபெற்று முடிந்திருக்கின்றன. கடந்த காலங்களில் சர்வதேசப் போட்டிகள் எதிலும் பங்கு கொள்ளாத இலங்கை கால்பந்து அணி, FIFA தரவரிசையில் வரலாற்றில் மிகவும் மோசமான பதிவாக தற்போது 200ஆவது இடத்தில் உள்ளது. இவ்வாறான ஒரு நிலையில், இலங்கையின் கால்பந்து விளையாட்டில் பல முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கான திட்டங்களை வகுத்து இருக்கின்ற இலங்கை கால்பந்து சம்மேளனம், அதன் முதற்க…
-
- 0 replies
- 343 views
-
-
என் கணவரின் தவறுக்கு நானே காரணம்- வார்னரின் மனைவி உருக்கம்: வெளிவராத புதிய தகவல்கள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், அவரின் மனைவி கேண்டிஸ் வார்னர் - படம்: ஏஎப்ஃபி பந்தை சேதப்படுத்தியதில் சிக்கி 12 மாதங்கள் தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் செயலுக்கு தானே காரணம் என்று அவரின் மனைவி கேன்டிஸ் தெரிவித்துள்ளார். கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில்ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப் ஆகியோர் சிக்கினார்கள். இதில் டேவிட் வார்னர், ஸ்மித்துக்கு 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 338 views
-
-
மெஸ்சியின் கடைசி நிமிட கோலால் சாதனையை தக்க வைத்தது பார்சிலோனா லா லிகா கால்பந்து லீக் செவியாவிற்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்சியின் கடைசி நிமிட கோலால் பார்சிலோனா சாதனையை தக்கவைத்தது. #LaLiga #Messi ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து லீக்கில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் செவியா - பார்சிலோனா அணிகள் மோதின. சொந்த மைதானத்தில் செவியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் பிரான்கோ வாஸ்குயிஸ் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் செவியா 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டத்தில் 50-வது நிமிடத்தில் லூயிஸ…
-
- 0 replies
- 271 views
-
-
‘பால் டாம்பரிங்’ விவகாரத்தில் கோபம்: ஸ்டீவ் ஸ்மித்தின் கிரிக்கெட் சாதனங்களை வீசி எறிந்த தந்தை ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை ஆற்றுப்படுத்தும் அவரின் தந்தை பீட்டர் - படம்: ஏஎப்ஃபி பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் சிக்கி 12 மாதங்கள் தடை பெற்ற ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் கிரிக்கெட் உபகரணங்களை, அவரின் தந்தை பழைய பொருட்கள் வைக்கும் அறையில் வீசி எறிந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினார்கள். இந்த குற்றத்துக்கு …
-
- 0 replies
- 304 views
-