Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. உங்களது சொந்த இன்னல்களில் திசரவை பாருங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தனது எடை பற்றி பிரித்தானிய பத்திரிகைகள் நையாண்டியாக குறிப்பிட்டபோது, அன்ட்ரூ பிளிண்டொப் தனது சந்தர்ப்பம் வந்ததும் அதற்கு சரியான பதிலடி கொடுத்தார். இது இன்னல்களின்போது எப்படி முகம் கொடுப்பது என்று சகலதுறை வீரர்களுக்கு பாடம் கற்பித்து கொடுப்பது போல இருந்தது. 2001 ஆம் ஆண்டு குளிர்கால சுற்றுப் பயணத்தின்போது கிறிஸ்ட்சர்ச்சில் (Christchurch) 137 ஓட்டங்களை விளாசிய பிளின்டொப், தான் இங்கிலாந்தின் மிகச் சிறந்த சகலதுறை வீரரான செர் இயன் பொத்தமுடன் ஒப்பிட்டு பேசப்படுவதை கண்டார். அப்போது, ‘எடை அதிகரித்திருப்பதை மோசமாக கருதவில்லை’ என்று அவர் பிரித்தானிய பத்திரிகைகளுக்கு பதிலடியாக குறிப…

  2. ஒலிம்பிக் கனவுகளுடன் தமிழகத்தில் உருவாகும் நம்பிக்கை கீற்று 'கோலேசியா' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தந்தையை இழந்து மிக எளிய பின்னணியில் தாய் மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வரும் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவியான கோலேசியாவுக்கு 2024 பாரீஸ் ஒலிம்பிஸ் மட்டும்தான் கனவு. தனது கனவை அடைய அவர் செய்த தியாகங்கள் என்ன? கோலேசியாவின் ஒருநாள் வாழ்க்கை எப்படி? அதிகாலை 5 மணிக்கு எ…

  3. முத்தரப்பு டி 20 தொடர்: இறுதிப் போட்டியில் நுழைந்தது நியூஸிலாந்து முத்தரப்பு டி 20 தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எனினும் நெட் ரன்ரேட் அடிப்படையில் நியூஸிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. கேப்டன் மோர்கன் 46 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 80 ரன்களும், டேவிட் மலான் 36 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் விளாசினர். நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போ…

  4. இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அஸ்வின் திகழ்கிறார்: சையத் கிர்மானி புகழாரம் ரவிச்சந்திர அஸ்வின் : கோப்புப் படம் கிரிக்கெட் விளையாட்டில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனைகளும், அர்ப்பணிப்பும், இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக் இருக்கிறது என்று இந்தியஅணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மாணி புகழாரம் சூட்டினார் சென்னை ரோட்டரி சார்பில் தமிழக வீரரும், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு “ ஐக்கான் ஆப் சென்னை” விருது இன்று வழங்கப்பட்டது. இந்த விருதை இந்தியஅணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மாணி, அஸ்வினுக்கு வழங்கினார். …

  5. இலங்கைக்கு எதிரான T20 தொடரில் 7 மாற்றங்களுடன் களமிறங்கவுள்ள பங்களாதேஷ் இலங்கைக்கு எதிரான எதிர்வரும் T20 தொடருக்கு பங்களாதேஷ் புதிய குழாம் ஒன்றை அறிவித்துள்ளது. தென்னாபிரிக்க தொடரில் காயம் காரணமாக இடம்பெறாத அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் மற்றும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் இந்த குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை (10) வெளியிடப்பட்ட 15 பேர் கொண்ட பங்களாதேஷ் குழாமில் ஐந்து புதுமுக வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் காயம் காரணமாக விளையாடாத ஷகீப் அல் ஹஸன் இந்த குழாமுக்கு தலைமை வகிக்கிறார். தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தில் இடம்பெற்ற ஏழு வீரர்கள் இரண்டு போட்டிகள் கொ…

  6. 2019 உலகக்கோப்பைக்கு முன் 30 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது இந்தியா இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியா 30 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. #TeamIndia #BCCI இந்திய அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் (இந்தியா, இலங்கை, வங்காள தேசம்) தொடரில் விளையாடுகிறது. இத்துடன் இந்தியாவின் 2017-18 சீசன் முடிவடைகிறது. அதன்பின் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்கிறார்கள். ப…

  7. வேகப்பந்து வீச்சாளராக இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடியவரும், தற்போதைய போட்டி நடுவராகவும் உள்ள பிரதீப் ஜயப்பிரகாஷுடனான சிறப்பு நேர்காணல்.

  8. 36 வயதில் `நம்பர் ஒன்': வரலாறு படைத்தார் ரோஜர் ஃபெடரர்! டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் அரங்கில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளார். இதன்மூலம் மிக அதிக வயதில் டென்னிஸ் அரங்கில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர். வயது 36. இவர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். டென்னிஸ் அரங்கில் அசாத்திய வீரராகத் திகழ்ந்த ஃபெடரருக்கு இடைப்பட்ட காலத்தில் சறுக்கல் ஏற்பட்டது. தொடர் தோல்விகள் வந்து சேர்ந்தன. தரவரிசையிலும் கீழே சரிந்தார். இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியில் கிடைத்த வெற்றி ஃப…

  9. ``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ) ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 போட்டியின்போது நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் சிக்ஸருக்கு விளாசிய பந்தை ஒற்றைக் கையில் பிடித்த பல்கலைக்கழக மாணவருக்கு 50,000 நியூசிலாந்து டாலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3 நாடுகள் டி20 தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் முக்கியமான லீக் சுற்றுப் போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி மார்டின் கப்திலின் சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்…

  10. ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுக்கள் 16 வயது வீரர் சாதனை! ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதிய 4 ஆவது ஒருநாள் போட்டியில் 16 வயது வீPரர் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதும் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் தொடர்கள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் ஏற்கனவே நடைபெற்ற 2 இருபதுக்கு 20 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 9 ஆம் திகதி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இப் போட்டியில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளிலும், ஜிம்பாபே அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள…

  11. தென்ஆப்பிரிக்கா எதிர் இந்தியா ஒருநாள் போட்டி செய்திகள் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர்: தெ. ஆப்பிரிக்க அணி அறிவிப்பு படம். | ராய்ட்டர்ஸ். இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி, பேட்ஸ்மன் காயா ஜோன்டோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா தொடரைக் கைபற்றிவிட்டது இந்நிலையில், ஒருநாள் தொடர் பிப்ரவரி 1-ந்தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டம், பிப்ரவரி 1-ம் தேதி…

  12. உலகக்கிண்ணத்திற்கு நேபாளம்- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தகுதி! இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கும். ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் போட்டியை நடத்தும் இங்கிலாந்தை தவிர்த்து முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். மீதமுள்ள இரண்டு அணிகள் தகுதிச் சுற்றில் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ஐசிசி தரவரிசையில் இடம் பிடித்திருக்கும் முன்னணி அணியான மேற்கிந்திய தீவுகள் உள்பட ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் நேரடியாக தகுதி பெறவில்லை. இந்த அணிகள் தகுத் சுற்றில் விளையாட வேண்டும். இவற்றுடன் 2015 முதல் 2017 வரை நடைபெற்ற உலகக் கிரிக்கெட் லீக் சம்பியன்ஷிப்…

  13. சிக்ஸர் மழை பொழிந்த டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா உலக சாதனை! 120 பந்துகளில் 244 ரன்கள். இதுதான் ஆஸ்திரேலிய அணிக்கு அளிக்கப்பட்ட இலக்கு. இதை மட்டும் நிகழ்த்திக்காட்டினால் உலக சாதனை செய்யலாம். இதற்கு முன்பு டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 231 ரன்கள் எடுத்தபோது அந்தக் கடினமான இலக்கை 19.2 ஓவர்களில் எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஏழு பந்துகள் மீதமுள்ள நிலையில் 245 ரன்கள் எடுத்து வெற்றியடைந்த ஆஸ்திரேலியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதுவரை நடைபெற்ற 6800 + சர்வதேச, உள்ளூர…

  14. நன்றாக ஆடிய போதும் என்னை அணியிலிருந்து நீக்கியது காயப்படுத்துகிறது: சுரேஷ் ரெய்னா வருத்தம் சுரேஷ் ரெய்னா. - படம். | ஏ.எப்.பி. இந்திய அணிக்காக கடைசியாக கடந்த பிப்ரவரியில் ரெய்னா ஆடியதோடு சரி, அதன் பிறகு சர்வதேசப் போட்டிகளில் ரெய்னா இடம்பெறுவதில்லை. விராட் கோலியின் நீக்கு, தூக்கு கொள்கையின் படி இவரும் தூக்கப்பட்டார். இந்நிலையில் தான் நன்றாக ஆடிய போதும் அணியிலிருந்து தூக்குவது தனக்கு மிகுந்த காயத்தை ஏற்படுத்துவதாக சுரேஷ் ரெய்னா வருத்தமடைந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரெய்னா மீண்டும் நீல உடையில் களமிறங்குவதை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி…

  15. தோனி கேப்டன் ஆன போது ஏற்கெனவே அணி நிலைபெற்றிருந்தது, மாற்றம் கொண்டு வந்தவர் கோலி: யுவராஜ் சிங் பேட்டி ஏப்ரல் 4, 2014, வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய மகிழ்ச்சியில் கோலியைத் தூக்கும் யுவராஜ், அருகில் தோனி. - படம். | ஏ.எஃப்.பி. கிரிக்கெட் வாழ்வில் ஏகப்பட்ட காயங்கள், புற்று நோய் தாக்குதல் என்று நிறைய போராட்டங்களைச் சந்தித்து வென்றுள்ள வீரர் யுவராஜ் சிங். இப்போது கூட வயது ஒரு காரணியல்ல, ஆட்டத்திறன் தான் முக்கியம் என்று கூறியுள்ளார். ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் தன் கிரிக்கெட் வாழ்க்கைப் பற்றி பல்வேறு விஷயங்களைப் பகிர…

  16. ரொனால்டோ ‘100’ மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ‘ரவுண்டு–16’ போட்டியில், ரொனால்டோ 2 கோல் அடித்து கைகொடுக்க, ரியல் மாட்ரிட் அணி, 3–1 என, பாரிஸ் செயின்ட்–ஜெர்மைன் அணியை வீழ்த்தியது. ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகரில் நடந்த ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான ‘ரவுண்டு–16’ சுற்றின், முதல் போட்டியில், ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), பாரிஸ் செயின்ட்–ஜெர்மைன் (பிரான்ஸ்) அணிகள் மோதின. ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் பாரிஸ் அணியின் ராபியாட், முதல் கோல் அடித்தார். இதற்கு, 45வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனா…

  17. அஸ்வின் மற்றும் ஜடேஜா ஒருநாள் அணிக்கு திரும்பும் வாய்ப்பே இல்லை- முன்னாள் வீரர் அ-அ+ குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோரில் யாருக்காவது ஒருவருக்கு காயம் ஏற்படும்வரை, அஸ்வின் அல்லது ஜடேஜாவிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை. இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா. இருவரும் தங்களது நேர்த்தியான பந்து வீச்சால் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வந்தனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் இருவருக்கும் வாய்ப்பு…

  18. விராட் கோலி, ரோஹித் சர்மாவின் ரன் அவுட் காதல்கள்! ரோஹித் சர்மா, விராட் கோலி. - படம். | ராய்ட்டர்ஸ். ரோஹித் சர்மா, விராட் கோலி இடையே தவறான கணிப்புகளினால் ஏற்படும் ரன் அவுட்கள் அன்றைய போர்ட் எலிசபெத் போட்டியில் நடந்ததுடன் 7-வது முறையாகும். இரு வீரர்களும் சேர்ந்து 50 ஓவர்கள் வரை ஆடினால் உலகில் எந்தப் பந்து வீச்சும் சிதறடிக்கப்படும் என்பது சிறு குழந்தைக்குக் கூட தெரியும், இதனால் அணிகள் இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடும்போது ரன்களை, குறிப்பாக சிங்கிள், இரண்டுகளை எடுக்க விடாமல் இறுக்கமான களவியூகங்களை அமைப்பது இயல்பான ஒன்றே. இந்நிலையில் இருவருக்குமிடையே ஏற்படும் ரன் ஓட்டப் …

  19. ஐபிஎல் போல கனடாவில் கிரிக்கெட் லீக்: தொழிலதிபர் முயற்சி கனடியன் ப்ரீமியர் லீக் தளத்திலிருந்து... இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், கனடா நாட்டில் ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட் லீக் போட்டியை நடத்த தொழிலதிபர் ஒருவர் திட்டமிட்டுள்ளார். ராய் சிங் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் இம்முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறார். கனடிய ப்ரீமியர் லீகை தொடங்குவதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார். இதற்காக கனடியன் ப்ரீமியர் லீக் டி20-ஐ தொடங்கியுள்ளார். இதற்கான சோதனை ஆட்டத்தை ஏற்கெனவே மாண்ட்ரியலில் நடத்தியும் காட…

  20. ஹொங்கொங் T-20 யில் சங்காவின் அதிரடி ஆட்டம் வீணானது ஹொங்கொங் T-20 பிளிட்ஸ் போட்டித் தொடரில் குமார் சங்கக்கார தலைமையிலான கெலக்சி கிளடியேட்டர்ஸ் லாண்டவ் அணி, இறுதிப் போட்டியில் ஹங் ஹோம் ஜகுவார்ஸ் அணியிடம் 6 ஓட்டங்களால் போராடி தோற்றது. இந்த போட்டியில் சங்கக்கார தனது துடுப்பாட்டத்தின் மூலம் தனது அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்ததோடு இறுதிப் போட்டியிலும் அதிரடியாக ஆடி தொடர் நாயகன் விருதை வென்றார். ஹொங்கொங்கில் ஐ.பி.எல். பாணியில் குறுகிய காலத்தில் நடத்தப்பட்ட ஹொங்கொங் T-20 பிளிட்ஸ் தொடரில் பல சர்வதேச வீரர்களும் இணைக்கப்பட்டனர். அவர்களில் இலங்கை வீரர் சங்கக்கார தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் சோபித்தமை குறிப்பிடத்தக்கது. …

  21. ஜகார்த்தா மெய்வல்லுனர் தொடரில் இலங்கைக்கு 3 தங்கப் பதக்கங்கள் இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு அந்நாட்டு மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தோனேஷிய அழைப்பு மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகின. இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் பங்குபற்றலுடன் இடம்பெறும் இந்தப் போட்டி நிகழ்ச்சிகளுக்கு இலங்கையிலிருந்து 24 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இதில், போட்டிகளின் முதல் நாளில் குறுந்தூர ஓட்ட வீரரான வினோஜ் சுரன்ஞய டி சில்வா, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அவர் குறித்த போட்டியை 10.30 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார். …

  22. கடவுளை நம்பி களத்தில் குதித்த இலங்கையின் எதிர்கால மிஸ்டர் கிரிக்கெட் (AFP/Getty Images) 2015 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு இலங்கை அணி வரலாற்றில் இல்லாதவாறு அடுத்தடுத்து பல தொடர்களில் நெருக்கடிகளையும், தோல்விகளையும் சந்தித்து தடுமாறி வந்தமை அனைவரும் அறிந்த விடயம். அதற்கான காரணங்களாக உள்ளூர் போட்டிகளில் காணப்படுகின்ற குறைபாடுகள், வீரர்களின் தொடர் உபாதைகள், உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் சிறந்த நிரந்தர பயிற்சியாளர் ஒருவர் இல்லாமை உள்ளிட்ட காரணங்களைக் குறிப்பிடலாம். இவற்றின் காரணமாக 2019 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு நேரடித் தகுதியினைப் பெற்றுக்கொள்வதற்காக இன்னுமொரு அணியில் தோல்விக்காக காத்திரு…

  23. ஐசிசி தரவரிசைப் பட்டியல்: முதலிடத்தை பிடித்தது 'கோலி படை'; சரிந்தது தெ.ஆப்பிரிக்கா இந்திய அணி : கோப்புப் படம் - படஉதவி: ஏஎப்பி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியதையடுத்து, ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடித்ததாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பின் இந்தியா தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 5-வது முறையாக முதலிடத்தில் இந்திய அணி அமர்கிறது. முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி 2-ம் இடத்துக்கு சரிந்தது. சர்வதேச ஒருநாள் போட்…

  24. தோல்விக்குக் காரணம் சாஹலின் நோ-பால்: சுனில் கவாஸ்கர் விமர்சனம் யஜுவேந்திர சாஹல். - படம். | ஏ.பி. வாண்டரர்சில் நடைபெற்ற 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றதற்கு டேவிட் மில்லர் பவுல்டு ஆன சாஹலின் நோ-பால்தான் காரணம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். சாஹல் நோ-பாலில் மில்லர் பவுல்டு ஆன போது அவரது தனிப்பட்ட ஸ்கோர் 7 ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. “இதுதான் அந்த ஆட்டத்தின் திருப்பு முனை என்று நான் கருதுகிறேன். ஏ.பி.டிவில்லியர்சும் ஆட்டமிழந்து விட்டார், மில்லர் அப்போது சாஹல் பந்துகளைக் கணிப்பதில் திணறிக் கொண்டிருந்தார். இந்திய அண…

  25. அவுஸ்திரேலிய அணி இன்னும் உலகக்கோப்பைக்கு தயாராகவில்லை இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு அவுஸ்திரேலிய அணி இன்னும் தயாராகவில்லை என அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டாரென் லீமான் (Australian coach Darren Leeman) தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவுஸ்திரேலியா, அண்மைக்காலமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பின்தங்கி வருகின்றது. கடைசியாக விளையாடிய 15 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே அவுஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் ஆக்ரோஷமான அணுகுமுறை தேவை என டாரென் லீமான் தெரிவித்துள்ளார். உண்மையிலேய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.