-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80B பூகம்பம் மகிந்த தேரரின் செயல்களால் பல முறை ஏற்படுகிறது, குறைந்தது ஒன்பது முறை பூகம்பம் இலங்கையில்? நடைபெற்றுள்ளது . அந்தக் காலத்து எந்தக் கொத்து கட்டிடங்களும் [கற்கட்டிடமும்] , இலங்கையில் மட்டுமல்ல, அருகிலுள்ள தென்னிந்தியாவிலும், இவ்வளவு நிலநடுக்கங்கள் ஒன்றின் பின் ஒன்றாக ஏற்பட்டால், தப்பிப் பிழைத்திருக்க முடியாது. அது மட்டும் அல்ல இலங்கையும் தென்னிந்தியாவும் பூகம்பத்திற்கு ஆளாகும் பகுதிகளும் அல்ல. இந்த அத்தியாயத்தில் நான்கு முன்னாள் புத்தர்களின் கதைகளும் உள்ளன, அவற்றை நிதானமான வரலாறாகக் கருத முடியாது. மேலும் துட்டகாமினி [Duttagamini] ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு தூபியை [Thupa] கட்டுவார் என்று புத்தர் தீர்க்கதரிசனம் கூறினார் என்றும் உள்ளது. அதிகாரம் 15 - 164 முதல் 172 வரை பார்க்கவும். "அப்போது இலங்கைத் தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை, ஆதலால், இத் தீவில் வசித்த தேவர்களுக்கும், நாகர்களுக்கும் உபதேசம் செய்துவிட்டு, ஆகாய மார்க்கமாக பிக்குகளுடன் ஜம்புத்வீபத்துக்குத் திரும்பி வந்தார். [மனிதர்கள் அல்லாத தேவர்கள் மற்றும் நாகர்கள் இலங்கையில் ஏன் வாழ்ந்தார்கள்?, அவர்களுக்கு ஏன் உபதேசம்?? ஏனென்றால் புத்தரின் போதனைகள் மனிதர்களுடன் சம்பந்தப்பட்டது]* அரசனே! இவ்வாறாக இந்த இடம் நான்கு புத்தர்களால் விஜயம் செய்யப்பட்டது. பேரரசனே! இந்த இடத்திலே புத்தருடைய உடல் தாதுவை வைத்த தூபம் இருக்க வேண்டும். அது நூற்றி இருபது முழம் உயர முள்ளதாகவும் இருக்கும். 'ஹேம மாலி' என்ற பெயர் அது பெறும்." நானே அதைக் கட்டுகிறேன்" என்று அரசன் கூறினன். அரசே! நீ இங்கு ஆற்ற வேண்டிய கடமைகள் வேறு பல உள்ளன. அவற்றை நிறை வேற்றுவாயாக! ஆனால் உன் வழி வந்த ஒருவன் இந்த தூபியைக் கட்டுவான். உன்னுடைய சகோதரனும், உபராஜனுமான மகாநாமனுடைய மைந்தன் யத்தாலாயக தீசன் என்பவன் இனிமேல் அரசன் ஆவான். அவனுடைய மகன் கோத அபயன் அடுத்து அரசனுக வருவான். அவனுடைய மகன் காகவன தீசன் எனப்படுவான். ‘இவனுடைய மகன் அபயன் என்பவன் துட்ட காமனி என்ற பெயரால் புகழ்பெற்று விளங்குவான். அவன், தன்னுடைய அதிசய சக்தியினால் இங்கு தூபியைக் கட்டுவான்." என்று கூறுகிறது. பாளி மொழியில் "துட்ட" (Dutta) என்ற சொல்லுக்கு "தீட்டுப்படுத்தப்பட்ட" அல்லது "துன்மார்க்கன்" என்று பொருள், "காம்னி" (Gamini / காமினி) என்றால் "தலைவர்" அல்லது "போர்வீரன்" என்று பொருள். இப்ப என் கேள்வி, புத்தர் முதலில், நாடுகடத்தப்பட்ட , தீய செயல்களின் வடிவமான விஜயனை தேர்ந்தெடுத்தார். அவன் தானும் புத்த மதத்தில் இணையாமல் மற்றும் எங்கும் பரப்பாமல் , தன் ஆட்சியைத் தொடர பிள்ளைகளும் இல்லாமல் போய்விட்டான். இப்ப இதே புத்தர் மீண்டும் துன்மார்க்க போர்வீரன் ஒருவனைத்தான் தேர்ந்து எடுக்கிறார்? அது ஏன் ? புத்தருக்கு அவர்களைத்தான் பிடிக்குமா? துட்ட காமனியின் அத்தியாயம் புத்தரின் வாயிலிருந்து வருவதாக இங்கு கற்பனை செய்யப்படுவதை வெளிப்படையாக அறிகிறோம். புத்தரால் கூறப்பட்டாலும் கூட, யாராலும் கூறப்படும் எந்தவொரு தீர்க்கதரிசனமும், எதோ ஒரு சந்தேகத்திற்குரிய நோக்கத்துடன் தான் பொதுவாக இருக்கும். இந்த அத்தியாயத்தில் பல மாயாஜால நிகழ்வுகள் நடந்துள்ளன. உதாரணமாக, 'ஒரு மாங்காய் விதை உடனே வளர்ந்து உடனடியாக பழங்களைத் தரும் ஒரு உயரமான மரமாகிறது', 15 – 41 முதல் 43 வரை பார்க்கவும். தேரர் அமர்ந்ததும் அரசன் மாங்கனியை அவருக்கு அளித்தான். தேரர் மாம்பழத்தைத் தின்றுவிட்டுக் கொட்டையை அரசனிடம் கொடுத்து அதை நடச் சொன்னார். தன் கையாலேயே அரசன் அதை அங்கு நட் டான். அது வளர்வதற்காக அந்த இடத்தில் தேரர் தம் கையைக் கழுவினர். அதே விடிையில் கொட்டையிலிருந்து முளை வெளிப்பட்டு செடி முளைத்தது. கொஞ்சங் கொஞ்சமாக அது வளர்ந்து, இலைகளும் கனிகளும் நிரம்பிய பெரிய மரமாயிற்று என்கிறது இந்தப் பந்தி. திவலா (Tivala , கிமு 3 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்), திவரா என்றும் குறிப்பிடப்படுகிறார், மௌரியப் பேரரசர் அசோகரின் இரண்டாவது ராணி கருவாகியின் [Karuvaki] மகன். கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்ட அசோகரின் ஒரே மகன் இவர் தான். இவர் அவரது தாயாருடன், ராணி அரசாணை [Minor Pillar Edict III of Ashokan edicts, known as the Queen Edict.] என்று அழைக்கப்படும் அசோகரின் ஆணைகளின் மூன்றாம் சிறு தூண் அரசாணையில் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளார். வேறு எந்த மகன்களோ அல்லது மகள்களோ எந்த கல்வெட்டுகளிலும் / அவரது ஆணைகளிலும் குறிப்பிடப்படவில்லை. இங்கே அசோகர் ராணியின் பரிசுகளுக்குப் பெருமை சேர்க்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறார். அலகாபாத் தூணில் [Allahabad pillar] இது காணப்படுகிறது. "கடவுள்களின் அன்புக்குரியவரின் உத்தரவின் பேரில், இரண்டாவது ராணியின் பரிசு எதுவாக இருந்தாலும், அது ஒரு மாமரமாக இருந்தாலும், ஒரு மடமாக இருந்தாலும், தொண்டு வழங்கும் நிறுவனமாக இருந்தாலும் அல்லது வேறு எந்த நன்கொடையாக இருந்தாலும், அது அந்த ராணியின் ... இரண்டாவது ராணி, திவாலாவின் தாயார், கருவாகியின் புகழுக்குக் கணக்கிடப்பட வேண்டும் என்று எல்லா இடங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்." என்று பதியப்பட்டுள்ளது. ஆனால் புத்த மதத்தை இலங்கையில் நிலைநிறுத்த, பல நூறு தேரர்களுடன் பறந்து இலங்கைக்கு வந்த பெருமைமிக்க மகிந்தவோ, போதி மர கிளையுடன் வந்த பிக்குணி சங்கமித்தவோ, இவர்களின் தாயுமான தேவியோ, கல்வெட்டில் மட்டும் அல்ல, எந்த இந்தியா வரலாற்று குறிப்பிலும் இல்லை. அப்படி என்றால், அசோகன் இவர்களை , இவர்களின் பெருமையை மறந்துவிட்டானா? அல்லது அப்படி ஒன்றுமே இல்லையா, கவனத்தில் எடுப்பதற்கு? நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 81 தொடரும் / Will follow துளி/DROP: 1973 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80B https://www.facebook.com/groups/978753388866632/posts/33133175609664326/?
-
"மூன்று கவிதைகள் / 19"
"மூன்று கவிதைகள் / 19" 'தூது செல்லாயோ' தூது செல்லாயோ கண்மணியை அழைக்காயோ தூய்மை அன்பில் நட்பை வளர்த்து தூரிகை எடுத்து காதல் வரைந்தவள் தூர விலகிப் போனது ஏனோ? ஓரமாய்த் தள்ளி ஓடியது எதற்கோ? ஈர உள்ளம் உனக்கு இல்லையோ? கால் சலங்கை இசை எழுப்பக் காதணி இரண்டும் சேர்ந்து ஆடக் காமன் வலையில் என்னை வீழ்த்தி காதோரம் கெஞ்சிய வார்த்தை எங்கே? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................. புகைப்படக் கவிதை மழலையின் மொழி கேட்டு நான் குழல் ஊதும் கண்ணனை மறந்தேன்! குழவியின் கெஞ்சிக் கொஞ்சிக் குலாவுதலில் அழகு மங்கையின் தழுவலைத் துறந்தேன்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் .......................................................................... 'மின்னலாய் ஒரு பின்னல்' [ஏற்றம், இறக்கம், சமநிலை, தாழ்வு] ஏற்றம் மிகு வாழ்வு வேண்டின் இறக்கம் தருவதைத் தவிர்! சமநிலை தவறாது வாழ தாழ்வு எண்ணங்களை முற்றிலும் அகற்றிடு! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................. துளி/DROP: 1972 ["மூன்று கவிதைகள் / 19" https://www.facebook.com/groups/978753388866632/posts/33126338203681400/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 80 A / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை எனக்கு இன்னும் புரியாதது என்னவென்றால், புத்தர் இலங்கைக்கு வருகை தந்தபோது நாகர்கள் மற்றும் தேவர்கள் உட்பட பில்லியன் கணக்கான ஆன்மாக்கள் புத்த மதத்திற்கு மாறினால், அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களை மீண்டும் மதம் மாற்ற மகிந்த தேரர் ஏன் அனுப்பப்பட்டார்? அல்லது புத்தர் வந்து போன பிறகு, அந்த உயிரினங்கள் அனைத்தும் தனது கொள்கைகளை கைவிட்டு முந்தைய கொள்கைகளுக்கும் சிவன் மற்றும் நாக வழிபாடுகளுக்கும் திரும்பிச் சென்றார்களா? அல்லது புத்தர் சரியாகப் போதிக்கவில்லையா? அத்தியாயம் 14: தலைநகரில் வசிப்பவர்களுக்கு நீர்விழா நடத்த ஏற்பாடு செய்த தேவநம்பிய தீசன் வேட்டையாடுவதில் உள்ள இன்பத்தை அனுபவிக்கப் நாற்பதாயிரம் ஆண்களுடன் வேட்டைப் பயணத்திற்குச் சென்றார். மலையின் உச்சியில் இறங்கிய மகிந்தவிடம் மன்னனை வழிநடத்த விரும்பிய மலைக் கடவுள் (தேவன்), ஒரு ஆண் மானின் வடிவத்தை எடுத்தார். வேடடைக்குச் சென்ற மன்னன் அதைப் பின்தொடர்ந்தார். அந்த மான், மன்னனை மகிந்த தேரரிடம் அழைத்துச் சென்று, அதன் பின் மறைந்தது விட்டது. கட்டாயம் இது ராமாயணத்தில் நடந்த நிகழ்வின் ஒரு நகல், அதில் ராமர் தனது மனைவி சீதையின் வற்புறுத்தலின் பேரில் ஒரு மாயை மானைப் பின்தொடர்ந்தார். குன்றிடை இவரும்; மேகக் குழுவிடைக் குதிக்கும்; கூடச் சென்றிடின், அகலும்; தாழின், தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும்; நின்றதே போல நீங்கும்; நிதிவழி நேயம் நீட்டும் மன்றல் அம் கோதை மாதர் மனம் எனப் போயிற்று, அம்மா! [மகளிர் மனம் போல நின்றும் ஓடியும் மான் மாயம் செய்தது / கம்பராமாயணம் - மாரீசன் வதைப் படலம்] மேலே கூறிய நம்பமுடியாத பல நிகழ்வுகளில் இருந்து, இது ஒரு உண்மையான வரலாற்று நிகழ்வாக இருக்க முடியாது என்பது, கொஞ்சம் சிந்திக்கும் ஆற்றல் உள்ள எவருக்கும் புரியும். அவர்கள், மன்னனும் மகிந்தவும் பல விடயங்களில் விவாதங்களை நடத்தினர். இறுதியில் மன்னனும் அவரது நாற்பதாயிரம் ஆட்களும் புத்த மதத்திற்கு உடனேயே மாறினர். வின்சென்ட் ஏ. ஸ்மித் [Vincent A. Smith], புத்த மதத்திற்கு மதமாற்றம் மிகவும் படிப்படியாக நடந்திருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறுகிறார். நிதானமான வரலாறாகக் கருத முடியாத பல அற்புதங்களும் இயற்கைக்கு மாறான நிகழ்வுகளும் இங்கு கூறப்பட்டு உள்ளன. அசோகரின் மகன் மகிந்தவைப் பற்றி மன்னர் தேவநம்பிய தீசன் அறிந்தது இதுவே முதல் முறை ஆகும். இருப்பினும், மன்னர் அசோகரும் மன்னர் தேவநம்பிய தீசனும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள்? 11- 18 முதல் 19 வரை பார்க்கவும். [1 5 (முத்துக்கள்) கடலில் இருந்து வெளிவந்து குவியலாக கரையில் கிடந்தன. 16 இவை அனைத்தும் தேவநம்பியதீசனின் பெருமையால் நிகழந்தவை. நீலமாணிக்கம் [Sapphire], பெரில் (Beryl) அல்லது காமதகம் , மாணிக்கம் [ruby], இரத்தினக்கல் அல்லது இரத்தினம் [gems] மற்றும் பல நகைகள் மற்றும் 17 முத்துக்களும் மூங்கில் தண்டுகளும் அனைத்தும் ஒரே வாரத்தில், மன்னனுக்கு அவர்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள். இதைக் கண்ட மன்னன் மனதார மகிழ்ச்சியடைந்தார். 1 8 ‘என்னுடைய நண்பனான தர்ம அசோகனைத் தவிர வேறு யாரும் இவ்விலை மதிப்பற்ற பொருள்களைப் பெறத் தகுதி உள்ளவர்கள் அல்ல. இவற்றைப் பரிசாக அவருக்கு அனுப்புவேன்' என்று எண்ணினான். / 19 தேவநம்பியதீசனும், தர்ம அசோகனும் ஒருவரையொருவர் நேரில் பார்த்ததே இலலை. ஆயினும் வெகு காலமாகவே அவர்கள் நண்பர் களாக இருந்தார்கள் என்கிறது இந்தப்பகுதி. ஆனால் வேடிக்கை என்னவென்றால், அசோகர் தனது மகன் மற்றும் மகளைப் பற்றி தனது நீண்டகால நெருங்கிய நண்பரான மன்னன் தேவநம்பிய தீசனுடன் விவாதிக்க மறந்துவிட்டார்! நெருங்கிய நண்பர்கள் பொதுவாக தங்கள் குழந்தைகளைப் பற்றி முதலில் விவாதிப்பார்கள். ஆனால் இங்கு அதைக் காணவில்லை? இது ஒரு வினோதமான நட்பு அல்லது தோழமை! அத்தியாயம் 15 [மகா விகாரை]: இது ஒரு நீண்ட அத்தியாயம், பெரும்பாலும் புத்தர் மற்றும் முந்தைய புத்தர்களைப் பற்றிய நம்பிக்கையைப் பற்றியது, ஆனால் இலங்கையில் நடந்த எந்த நம்பகமான வரலாற்று நிகழ்வுகளையும் பற்றியது அல்ல. மேலும் புராணக் கதைகள் கண்டுபிடிக்கப்படும் போது அத்தியாயங்கள் பொதுவாக நீளமாக இருக்கும். ராணி அனுலாவும் [Queen Anula] ஐநூறு பெண்களும் பப்பஜ்ஜி தீட்சை [pabbajji ordination] பெற விரும்பினர். பப்ஜா (Pabbajjā) என்பது பௌத்த மதத்தில் மடாலய வாழ்க்கைக்குள் நுழைவதற்கான ஆரம்ப புத்த மத சடங்கு ஆகும். இது ஒரு துறவி (பிக்கு) அல்லது கன்னியாஸ்திரி (பிக்குனி) ஆக முழுமையாக வாழ்வை ஈடுபடுத்த முன், அதற்கான முதல் கட்டம் ஆகும், இதில் ஒரு நபர் உலகியலான வாழ்க்கையை விட்டு பௌத்த மதத்தின் வழியில் செல்வதை குறிக்கிறது. அதாவது, இங்கு கட்டாயம் நான்கு விடயங்களை விட்டு முற்றிலும் விலகியிருத்தல் வேண்டும். ஆண்-பெண் கலவி கூடாது. புல்லைக் கூட திருடக் கூடாது. உயிருள்ள சின்னசிறு உயிருக்கும் தீமை பயத்தலாகாது. இயற்கைக்கு மாற்றாக அருஞ்செயலைத் தன்னால் செய்ய இயலுமென்று காட்டலாகாது. இப்ப இலங்கையில் , பர்மாவில் பிக்கு அல்லது பிக்குணியின் வாழ்வு மற்றும் அவர்களின் செயல்கள், வாய்மொழி பேச்சுக்கள் இப்படித்தானா இருக்கிறது என்பதைக் நீங்களே கூறுங்கள்? எனவே இந்த நோக்கத்திற்காக சங்கமித்தாவை [Sanghamitta] அழைத்து வர முடிவு செய்யப்பட்டது. மேலும் தாரை வார்த்த நீர் தரையில் விழுந்தபோது ஒரு பூகம்பம் ஏற்பட்டது. 15 - 22 முதல் 26 வரை பார்க்கவும். ‘புத்தர் ஞானம் பெற்ற புனித போதி மரத்தின் தென்பகுதிக் கிளையுடன் அவள் இங்கே வருவாள். அவளுடன், புனிதத்தால் புகழ்பெற்ற பிக்குணிகளும் உடன் வருவார்கள். இகைக் குறித்து என்னுடைய தந்தையாகிய அரசனுக்குச் செய்தி அனுப்புக. அந்தத் தேரி இங்கு வந்ததும் இந்தப் பெண்களுக்குத் தீட்சை செய்து வைப்பாள்" என்றார் மகிந்த, அதுதான் நல்லது" என்றான் மன்னன். பின்பு அழகிய கலசத்தில் நீரை யெடுத்து மகிந்த தேரருடைய கையில் ஊற்றி தாரை வார்த்துக் கொடுத்தான். "இந்த மகா மேகவனத்தை பிக்கு சங்கத்துக்கு அளிக்கிறேன்' என்று மன்னன் சொன்னான். தாரை வார்த்த நீர் தரையில் விழுந்த போது பூமி அதிர்ந்தது. புவியின் காவலன் தேரரிடம், 'ஏன் இப்படி பூமி அதிர்கிறது?’ என்று கேட்டான். தீவில் இப்போது முதல் தர்மம் வேரூன்றிவிட்டது அதனால்" என்று தேரர் பதிலளித்தார். [எப்படியான புத்த தர்மம் உண்மையில் இலங்கையில் வேரூன்றிவிட்டது என்பதை வடக்கு கிழக்கில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்?] Part: 81 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 14: The King Devanampiya Tissa was having a water festival, and went on a hunting expedition with forty thousand men. The mountain god (Deva) wanted to guide the king to Mahinda who has just alighted on the top of the mountain. The mountain god took the form of a male deer and the king followed it. The deer lead the king to Mahinda Thera and vanished. This is a copy of the event that happened in the Epic Ramayana in which Rama went after an unreal deer on the urging of his consort Sita. This cannot be a real historical event. They, the king and Mahinda, had discussions on many subjects, and in the end, the king and his forty thousand men converted to Buddhism. Vincent A. Smith strongly expresses that the first conversion to Buddhism must have taken place in a very gradual manner. There are so many miracles and unnatural happenings, which cannot be considered as sober history. This is the first time the King Devanampiya Tissa came to know about Mahinda, the son of Asoka. However, it is alleged that the King Asoka and the King Devanampiya Tissa were intimate friends, 11- 18 to 19. Asoka forgot to discuss about his son and the daughter with his long-time intimate friend, the King Devanampiya Tissa! Intimate friends usually discuss first about their children. It is a queer friend ship! There is confusion with the name ‘Anula’. Anula is the consort of Sub-king Mahanaga. The sentence next to it says queen Anula! It seems that the name of the queen is also Anula and the name of the consort of the sub-king, the brother of the king who is next in line to the throne, is Anula. It seems quite strange. Chapter 15: This is a long chapter and mostly about the faith, about Buddha, and the previous Buddhas, but not about any reliable historical events that took place in Lanka. The chapters are usually long when the narratives are invented. The Queen Anula and five hundred other women wanted to receive pabbajji ordination. It was decided to bring Samghamitta for that purpose. Water from the king fell on the ground and an earthquake occurred. Earthquake occurs so many times due to Mahinda Thera’s actions, not less than nine times. No masonry buildings of that time would have survived, not only in Lanka but also in the adjacent South India, these so many earthquakes. Lanka and South India are not earthquake prone regions. There are stories of former four Buddhas, which cannot be considered as sober history. The Buddha prophesied that Dutthagamani would build a Thupa at a particular place, 15 – 168 to 169. The episode of Dutthagamani is imagined to come from the mouth of the Buddha. Any prophesies by anyone, even if it is by the Buddha, is with suspicious motive. A mango seed grow into a tall tree bearing fruits immediately, 15 – 41 to 43. The King Tissa built the MahaVihara. Lengthier the chapter, fraudulent is the narrative. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 80 B தொடரும் / Will follow துளி/DROP: 1971 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80A] https://www.facebook.com/groups/978753388866632/posts/33119471261034761/?
-
கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் [மூன்று பகுதிகள்]
கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 02 கிறிஸ்துமஸுக்கு புத்தாண்டுக்கும் இடையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு இடையில், அடைக்கலமும் ஆராதனாவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு யாழ்ப்பாண பொது நூலகத்தில் மீண்டும் சந்தித்தனர். ஆராதனா நூலகக் குறிப்புப் பகுதியில் நாட்டுப்புற தாளங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்; அடைக்கலம் குற்றச்சாட்டு இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு மீனவருக்காக ஒரு ஆட்கொணர்வு வழக்கைத் தயாரித்துக் கொண்டிருந்தார். வரலாற்றால் வடுக்கள் நிறைந்த, ஆனால் அதை மறைப்பதற்காகவே முழுமையாக புனர்நிர்மாணம் அரசால் செய்யப்பட்ட அந்த யாழ்ப்பாண பொது நூலகத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் உலகங்களைக் கற்றுக்கொண்டனர். 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்' இதைத்தான்1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் இலங்கை அரச அதிகாரத்தால், சிங்கள இன வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் முற்றாக எரிக்கப்பட்டது. அது பற்றியே முதலில் அங்கு பேசத் தொடங்கினர். அவர்களின் கலந்துரையாடலுக்கு இடையில், ஆராதனா, கிறிஸ்மஸ் ஈவை [christmas eve] நான் குழந்தைப் பருவத்தில் விளக்குகளாகவே பார்த்திருக்கிறேன். நட்சத்திரங்களாக. பாடல்களாக. ஆனால் அன்று அது கேள்வியாக இருந்தது. இப்ப கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் முதல் முறை இந்த கிறிஸ்மஸ் ஈவுக்கு சென்றபின், அந்த கேள்வி மறைந்து விட்டது என்றாள். அடைக்கலம் ஒன்றும் பேசவில்லை. அவளை, அவளின் பேச்சை ரசித்தபடி மௌனமாக இருந்தான். பின் இப்ப கிறிஸ்மஸ் பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்டான். அவள் சற்றும் தாமதிக்காமல், உடனடியாகவே, அவனின் கண்ணை பார்த்தபடியே, "இப்போது எனக்குத் தெரியும் — நான் கற்றுக் கொண்ட கிறிஸ்மஸ் பிறந்த நாளைப் பற்றி அல்ல. மனிதன் மனிதனாக நிற்பதைப் பற்றி" என்றாள். "நான் கேள்வி கேட்டே பழகவில்லை. வழிபாடு எனக்கு இசை. பாடல். நடனம். கண்கள் மூடி ஏற்றுக் கொள்ளும் அமைதி." என்று தன்னையும் கொஞ்சம் அறிமுகப் படுத்தினாள். இதுவரை அமைதியாக இருந்த அடைக்கலம், "நான் வழக்கறிஞராக மாறியது சட்டத்தை நேசித்ததனால் அல்ல. அநீதியைப் பார்த்து அமைதியாக இருக்க முடியாததனால்" என்றான். "வடக்கில் ஒரு மனிதன் அவனுடைய நிலத்தில், அவனே விருந்தினன் ஆக்கப்பட்ட போது நான் சட்டப் புத்தகத்தைத் திறந்தேன்" என்று விளக்கமும் கொடுத்தான்." அன்று முதல் என் கிறிஸ்மஸ் ஒரு வழக்குக் கோப்பாகவே இருந்தது, அது மட்டும் அல்ல, நான் தேவாலயத்திற்குப் போகிறேன். ஆனால் நான் அங்கு நம்பிக்கையைத் தேடுவதில்லை. அமைதியை மட்டும் தேடுகிறேன்." என்று தன் கதையைச் சுருக்கமாக சொல்லி முடித்தான். ஆண் பெண்ணின் உடல் அழகைக் கண்டு கவரப்படுவது போல, பெண் ஆணின் புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு, பாதுகாப்பு உணர்வு, அக்கறை போன்ற குணாதிசயங்களில் மயங்கி காதலிப்பதே பொதுவான கண்ணோட்டமாகும். அதில் ஆராதனாவும் ஒருவளே. என்றாலும், ஆராதனா தன் உணர்வுகளை வெளிக் காட்ட நினைத்தாலும் ஏதோ ஒரு நாணம், வெட்கம் அவளைத் தடுத்தது. பெண்ணிடம் தயக்கம் இருக்கும், பயம் இருக்கும், கூச்சம் இருக்கும், நாணம் இருக்கும், வெட்கம் இருக்கும் .... இவற்றிற்கு நடுவில் அவர்கள் தங்கள் காதலையும் சொல்லியாக வேண்டும். இந்த பிரச்சனை இன்று நேற்று அல்ல .... தொன்று தொட்டு வருகிறது. பாண்டிய மன்னன் வீதி உலா போகிறான். அவள் ஒரு சாதாரண குடும்பப் பெண். பாண்டியன் மேல் காதல். சொல்லவா முடியும் ? அவனைக் கொஞ்சம் பார்கவாவது செய்யலாம் என்றால் அவனை சுமந்து வரும் அந்த பட்டத்து பெண் யானை வேக வேகமாக நடந்து சென்று விடுகிறது. யானையிடம் தலைவி சொல்கிறாள் ... "ஏய் யானை, கொஞ்சம் மெதுவா தான் போயேன் ... என்ன அவசரம் .." என்று சொல்ல வேண்டும். யானை கேட்குமே , "ஏன் என்னை மெதுவாக போகச் சொல்கிறாய் " என்று. பாண்டிய மன்னனை சைட் அடிக்கணும் என்று சொல்லவா முடியும் ? அவள் அந்த பட்டத்து பெண் யானையிடம் சொல்கிறாள் " நீ இப்படி தங்கு தங்கு என்று வேகமாய் நடந்து போனால், ஊரில் உன்னைப் பற்றி என்ன சொல்வார்கள். இப்படி ஒரு அடக்கம் இல்லாமல், ஒரு பெண் இருக்கலாமா என்று உன்னைப் பற்றி பழி பேசுவார்கள். எனவே, மெல்லமா போ " என்கிறாள். என்னவோ, அந்த யானை மேல் ரொம்ப கரிசனம் உள்ளவள் போல. எலா அ மடப் பிடியே எங்கூடல்க் கோமான் புலா அல் நெடு நல் வேல் மாறன் - உலாங்கால் பைய நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை ஐயப் படுவது உடைத்து அப்படித்தான் ஆராதனா தன் மனதை மெல்லமா போக செய்து விட்டாள். அதனால், அடைக்கலத்துக்கு அவளின் நிலையை அறியமுடியவில்லை. அதன் பின் ஒரு முறை அடைக்கலத்துடன் நீதிமன்றத்திற்குச் சென்றாள் - உள்ளே அல்ல, ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பங்களுடன் வெளியே காத்திருந்தாள், சட்ட பயத்தை [சட்டத்தின் மீதான அச்சம்] இலகுவான தமிழில் மொழிபெயர்த்தாள். மகன் காணாமல் போன அந்த வயதான பெண்மணியிடம், சமநிலையில் இருந்து, ஆறுதல் அளிக்கப் பேசுவதை அவன் பார்த்தான். அந்த தருணத்தில் அவனின் மனம் அவனுக்குச் சொன்னது, "அவளின் தனிப் பெருமை கொண்ட அழகை விட, அவள் பிறர் துயரத்தை தன் துயராக ஏற்கும் மனிதராக இருக்கிறாள்" என்று. அது அவனை மேலும் சிந்திக்க வைத்தது. அவள் செய்யும் இந்தச் செயல், அவன் வழக்காடும் வாழ்க்கையையும் பிரதிபலித்து, இருவரும் ஒரே உண்மையின் பக்கம் நிற்பவர்கள் என்பதை அவன் உணர்ந்தான். அந்த நிமிடம் அவனுக்குச் சொன்னது: “இந்த பெண்ணுடன் நான் வாழ்க்கையைப் பகிர முடியும்.” அன்று மாலை, சோதனைச் சாவடியைத் தாண்டி அவர்கள் செல்லும் போது, ஆராதனாவின் மனம் காணாமல் போன தன் மகனைப் பற்றி பேசும்போது குரலே இல்லாமல் போன அந்த முதிய பெண்ணின் முகத்தில் இன்னும் இருந்தது. இரும்புக் கம்பிகளும் சீருடை ஒளிகளும் சூழ்ந்த அந்தச் சாலையில், அவள் திடீரென நின்று, “நாம் செய்கிற எல்லாம் சில நேரங்களில் பயனற்றது போல் தோன்றுகிறதா?” என்று கேட்டாள். அந்தக் கேள்வி அவள் நம்பிக்கையால் அல்ல; அவள் சுமந்த பொறுப்பின் சத்தம். அடைக்கலம் ஒரு கணம் மௌனமாக இருந்தான். பிறகு மெதுவாகச் சொன்னான்: “நான் வருவதை நிறுத்தும் நாளில்தான் அது பயனற்றதாகும்.” அவன் நீதியை வெற்றியாக மாற்ற முடியாதவன் என்பதை அறிந்திருந்தான்; ஆனால் நீதி தேவைப்படும் இடத்தில் இருப்பதை விட்டுவிட மறுத்தவன். அவர்கள் மீண்டும் நடக்கத் தொடங்கினார்கள்—சோதனைச் சாவடியைத் தாண்டி, இரவுக்குள்—உலகத்தை மாற்ற முடியாவிட்டாலும், மனிதனை முற்றிலும் உடைய விடாமல் தடுக்க நிற்கும் மனிதர்களைப் போல. அப்பொழுது ஒரு பாடல் அவர்களின் காதில் ஒலித்தது; "உன்னை காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய் அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான் அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்! உன்னை நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர் அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர் அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையுடன் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம் !! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் துளி/DROP: 1970 [கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/33112176718430882/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 79B பகவான் புத்தர் மிகவும் நல்ல மனிதர். அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவருக்கு மட்டும் அல்ல, எந்த மனிதனுக்கும் மனத் திறனை முன்னறிவிக்கும் தெய்வீக சக்தி கட்டாயம் இருக்காது. அதுமட்டும் அல்ல, புத்தரே இப்படியான தெய்வீக சக்திகளை, தன்னால் முடிந்தாலும் முடியாவிட்டாலும், அவ்வற்றை கையாள மாட்டேன் / கையாளக்கூடாது என்கிறார். இருப்பினும், கதையின்படி, இலங்கைக்கு பறந்து வந்த மகிந்த தேரர் மிஸ்ஸகா மலையில் [mount Missaka] இறங்கினார் என்று கூறப்பட்டுள்ளது. மகாவம்சம், அத்தியாயம் 13 - 20, அத்தியாயம் 14 - 2, & அத்தியாயம் 17 - 23, இல், மிஸ்ஸகா மலை குறிக்கப்பட்டுள்ளது. இதை இன்று மிகிந்தலை என்று கருதுகிறார்கள். இது இலங்கையில் அனுராதபுரத்திற்கு அருகிலுள்ள ஒரு மலை சிகரம் ஆகும். இலங்கையில் புத்த மதத்தின் இருப்பைத் தொடங்கிய புத்த துறவி மகிந்தருக்கும் மன்னர் தேவநம்பிய தீசனுக்கும் இடையிலான சந்திப்பு நடந்த இடமாக இது [மிகிந்தலை] இலங்கையர்களால் நம்பப்படுகிறது. இது இப்போது ஒரு புனித யாத்திரைத் தளமாகவும், பல மத நினைவுச் சின்னங்கள் மற்றும் கைவிடப்பட்ட கட்டமைப்புகளின் தளமாகவும் உள்ளது. பழங்கால உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ஒருவர் தனது போதனைகளை முதலில் தான் பிறந்து வளர்ந்த நாட்டிலேயே நிறுவ முனைகிறார். அதன் பிறகு மற்ற நாடுகளுக்கு பரவலாம் அல்லது பரவாமல் போகலாம். ஏனென்றால் அவர்கள் குறிப்பாக தங்கள் நாடு, அவர்களின் மொழி, அவர்களின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்தை நன்றாக அறிந்து இருப்பதுடன் போக்குவரத்து, குறிப்பாக வெளிநாடுகளுக்கு, அந்தக் காலத்தில் கடினமாகவும் இருந்தது. இரண்டாவதாக, விஜயன் வருவதற்கு முன்பு புத்தர் இலங்கைக்கு மூன்று முறை விஜயம் செய்தார், மேலும் அவரது முதல் வருகையின் போது, தேவர்கள் கூடினர், அவர்களின் கூட்டத்தில் புத்தர் தன் கோட்பாட்டைப் போதித்தார். இதன் விளைவாக, ஏராளமான உயிரினங்கள் [many kotis of living beings] பௌத்த மதத்திற்கு மாற்றப்பட்டன. அவ்வாறே, அவர் தனது இரண்டாவது வருகையின் போதும், புத்தம், தர்மம், சங்கம் என்ற மும்மணிகள் அல்லது திரிசரணங்களில் [three jewels, மூன்று இரத்தினங்கள்] அடைக்கலம் புகுந்து, அறநெறிகள் ஒழுக்கத்தைப் பின்பற்றும்படி வழிநடத்தி கடலிலும் நிலத்திலும் வாழ்ந்த ஏராளமான நாகர்களுக்கு கோட்பாட்டைக் கற்பித்தார். அவர்களில் எண்பது கோடி [eighty kotis] பேர் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டனர். தனது மூன்றாவது வருகையின் போது, புத்தர் மீண்டும் போதித்தார். புறப்படுவதற்கு முன், அவர் தனது கால்தடங்களை சுமனகுடாவில் (Sumanakuta / A mountain peak in Ceylon / இப்போது ஸ்ரீ பாத அல்லது ஆதாமின் சிகரம் என்று அழைக்கப்படுகிறது) விட்டுச் சென்றார். அப்படியானால், விஜயன் வந்த நேரத்தில் புத்தரின் போதனைகள் அங்கு இருந்திருக்க வேண்டும், ஆனால் தேவநம்பிய தீசனின் காலம் வரை சிவ வழிபாடும் மற்றும் நாக வழிபாடும் தான் அங்கு தொடர்ந்தன. உதாரணமாக, பதின்மூன்றாம் அத்தியாயத்தில், இந்திரன், மிகச் சிறந்தவரான மகிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறார். அதேபோல, பதினான்காம் அத்தியாயத்தில், தர்மத்தை (பிரசங்கிக்கும்) நேரத்தை அவர் அறிவித்ததாகக் கூறப்படுகிறது. தன்னுடைய அதிசய சக்தியின் மூலம் இலங்கை முழுவதும் கேட்கும் படியாக அவன் தர்மப் பிரசார நேரத்தை அறிவித்தான். இந்த அழைப்பின் காரணமாக ஒரு பெரிய தேவர்கள் கூட்டம் ஒன்று கூடியதாகக் கூறப்படுகிறது; இந்தக் கூட்டத்திற்கு முன்பு தேரர் சமசித்த சுத்தத்தைப் [Samacitta-sutta] உபதேசம் செய்தார். எண்ணற்ற தேவர்கள் கோட்பாட்டிற்கு மாற்றப்பட்டனர் மற்றும் பல நாகர்களும், சுபானர்களும் திரிசரணத்தை மேற்கொண்டனர். [The supanna (a kind of fairy bird / Skt. suparna) or garula (Skt. கருடன், ஒருவகைப் புராணப் பறவை / garuda) are mythical creatures who are imagined as winged and are always considered as the sworn foes of the nagas.] இதனால் அவர்கள் மும்மணிகளில் அடைக்கலம் புகுந்தனர் [came unto the (three) refuges]. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 80 தொடரும் / Will follow துளி/DROP: 1969 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 79B] https://www.facebook.com/groups/978753388866632/posts/33103434085971812/?
-
"மூன்று கவிதைகள் / 18"
"மூன்று கவிதைகள் / 18" 'மின்னலாய் ஒரு பின்னல்' [நம்பிக்கை, துரோகம், சத்தியம், சோதனை] நம்பிக்கை கொடுத்து கண்களை மறைத்து துரோகம் செய்யும் மனிதர்களை அறியாயோ? சத்தியம் வெல்ல களத்தில் இறங்கினால் சோதனை வந்து வேதனை கொடுக்குதே! அல்லது நம்பிக்கை கொடுத்து கண்களை மறைத்து/ துரோகம் செய்யும் மனிதர்களே/ சத்தியம் வெல்லும் நாளில்/ சோதனை வரும் உங்கள் வாழ்வுக்கு! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................. 'மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறான்' விண்ணில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை உண்மை ஒன்றை உலகிற்குப் பகிர ஆண்டவன் வருகையை ஞானிகள் அறிய மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறான்! கண்கள் எல்லாம் அன்பு பொழிய கந்தலில் மறைந்து இருந்த பாலகன் கருணை காட்டி உலகை அணைத்து களவு இல்லா மனிதம் காட்டினான்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................................................. 'வன்னியில் குண்டுகள் ... ' வன்னியில் குண்டுகள் ஆயிரம் விழுகுது கன்னியின் பார்வையில் ஏக்கம் தழுவுது மண்ணுக்கும் மொழிக்கும் நின்ற மக்கள் கண்ணுக்கும் தெரியாமல் சாம்பல் ஆகினர்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................ துளி/DROP: 1968 ["மூன்று கவிதைகள் / 18" https://www.facebook.com/groups/978753388866632/posts/33098366463145241/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 79A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 79 A / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 13: இது மகிந்த தேரர் இலங்கைக்கு பறந்து சென்ற மாயாஜால நிகழ்வைப் பற்றியது. இது இலங்கையில் நடந்த எந்த நம்பகமான வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியதும் அல்ல. இதில் மகிந்த, அசோக மன்னரின் மகன் என்று கூறப்படுகிறது. எனவே அவர் ஒரு மனிதர். எனவே, ஈர்ப்பு விசையை மீறி பறக்கும் திறன் பெற்றிருக்க முடியாது. மகிந்த இலங்கைக்கு பறந்து வந்தது ஒரு புராண கதையாக மட்டுமே இருக்கலாம்? எந்த இந்திய ஆதாரங்களிலும் மகிந்த என்ற, அசோகனின் மகன் பற்றி ஒரு குறிப்பும் இல்லை. அது மட்டும் அல்ல, இவர் பிறந்து வளர்ந்ததாக கூறப்படும் இந்தியாவில், மகிந்த மட்டும் அல்ல, அவரது சகோதரி சங்கமித்தா, அவரது மகன் சுமனா, அவர்களின் தாய் தேவி மற்றும் மூன்றாம் புத்த சபை [Mahinda, his alleged sister Sanghamitta, her son Sumana, their mother Devi, and the Third Buddhist Council] ஆகியவை பற்றி எந்த வரலாற்று அல்லது இலக்கிய ஆவணங்களும் இல்லை. மேலும் அவர்கள் அனைவரும் துறவி எழுத்தாளர்களால் தங்கள் செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கண்டு பிடிக்கப்பட்ட கற்பனையான கதாபாத்திரங்கள் என்றே தோன்றுகிறது. சங்கமித்தா என்ற பெயருக்கு 'சங்காவின் நண்பர்' என்று பொருள். ஆனால், சங்கமித்தா பிறந்தபோது அசோகர் ஒரு பௌத்தர் அல்ல, அவர் ஒரு இந்து. எனவே அவர் தனது மகளுக்கு அப்படி பெயரிட்டிருக்க முடியாது? மேலும், சங்கமித்தா என்பது பெண்களுக்கான பிரத்யேகப் பெயரும் அல்ல. இது ஒரு பட்டப் பெயர் என்பதுடன், அதே பெயரைக் கொண்ட ஆண் தேரர் ஒருவர் தொலைதூரக் கரையிலிருந்து வந்தார் என மகாவம்சமே கூறுவதைக் காண்க. அத்தியாயம் 37 - 1 முதல் 5 வரை பார்க்கவும். ஜேததீசனுடைய [Jetthatissa] மரணத்துக்குப் பின்னர் அவனுடைய தம்பி மகாசேனன் [MAHÁSENA1] இருபத்தேழு வருட காலம் அரசனுக இருந்தான். அவனை அரசனாகப் பட்டாபிஷேகம் செய்வதற்கு மறு கரையிலிருந்து ச்ங்கமித்திர தேரர் இங்கு வந்தார். பட்டாபிஷேகமும் மற்றும் வேறு பலவிதமான சடங்குகளையும் செய்து முடித்ததும் மகா விஹாரையை அழிக்க விரும்பிய கட்டுப்பாடில்லாத அந்தப் பிக்கு, இவ்வாறு கூறி அரசனைத் தம் வசப்படுத்திக் கொண்டார். "மகா விஹாரையில் வசிப்பவர்கள் உண்மையான வினயத்தைப் போதிப்பது இல்லை. நாங்கள் தான் உண்மையான வினயத்தைப் போதிப்பவர்கள்." இதன்பேரில் அரசன் 'மகா விஹாரையில் வசிக்கும் பிக்குகளுக்கு யார் உணவு அளித்தாலும், அவர்களுக்கு நூறு பணம் அபராதம் விதிக்கப் படும்’ என்று கட்டளை பிறப்பித்தான் என்று கூறுகிறது. மகிந்த இலங்கையை புத்த மதத்திற்கு மாற்றுவார் என்று புத்தர் முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது. 13 - 15 முதல் 16 வரை பார்க்கவும். அத்தியாயம் XIII / மகிந்தவின் வருகை: 15. இந்திரன், மிகச் சிறந்தவரான மகிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும். 16. "அங்கு உங்களுக்கு உதவுபவர்கள் நாங்களாக இருப்போம் ' என்றான். புத்தர் ஒரு மனிதராக இருந்ததால், இந்த முன்னறிவிப்பு ஒரு அப்பட்டமான பொய், மேலும் அவருக்கு எந்த முன்னறிவிப்பு திறனும் இருந்திருக்க முடியாது. இன்னும் ஒன்றையும் கவனியுங்கள். புத்தர், தானே, இலங்கைக்கு மூன்று தடவை பறந்து போய், அங்கு கோடிக்கணக்கானோருக்கு போதித்தது என்னவாச்சு? ஏன் அவர் தான் பிறந்து வளர்ந்து இறந்த இடத்தில் புத்த மதத்தை நிலைநிறுத்த, இப்படியான மாயயால வித்தைகள் செய்யவில்லை? அது மட்டும் அல்ல, முன்பும் புத்தர் தனது மரணப் படுக்கையில் விஜயன் இலங்கைக்கு வருவது குறித்து தீர்க்கதரிசனம் கூறினார். அத்தியாயம் 7 – 3 முதல் 4 வரை பார்க்கவும். அத்தியாயம் 07 விஜயனின் பட்டாபிஷேகம்: "சிம்மபாகுவின் மகன் விஜயன் லால நாட்டிலிருந்து எழுநூறு பேர்களுடன் இலங்கைக்கு வந்திருக்கிறான். தேவர்கள் தலைவனே! இலங்கையில் என்னுடைய மதம் நிலை நிறுத்தப்படுவதற்காக அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் இலங்கையையும் கவனமாகப் பாதுகாத்து வருவாயாக." என்கிறார். ததாகதர் கூறிய இவ் வார்த்தைகளைக் கேட்ட தேவராஜன், அவரிடம் கொண்ட மரியாதை காரணமாக இலங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை நீலோற்பலம் மலர் போன்ற மேனி வண்ணம் படைத்த தேவனிடம் ஒப்படைத் தான். [சக்கன் - இந்திரன். விஷ்ணு-நீல வண்ணமுடையவன்.] சக்கனிடமிருந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் அத்தேவன் விரைந்து இலங்கைக்கு வந்து நாடோடியான துறவிக் கோலத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். விஜயனுடன் வந்தவர்கள் யாவரும் அவரிடம் வந்து ஐயனே ! இது என்ன தீவு’ என்று கேட்டனர். "இலங்கைத் தீவு' என்று அவர் பதிலளித்தார். "இங்கு மனிதர் யாரும் கிடையாது. எனவே அபாயம் எதுவும் நேராது' என்றும் அவர் கூறினர். பின்பு தமது கமண்டலத்திலிருந்து நீரையெடுத்து அவர்கள் மீது தெளித்தார். பிறகு அவர்கள் கையில் நூலினுல் காப்புக் கயிறு" கட்டிவிட்டு காற்றிலே கலந்து மறைந்து விட்டார். அங்கே பெண் நாய் உருவில் ஒரு யட்சினி [ யட்சி yakkhini] தோன்றினாள். அவள் குவண்ண [Kuvanna] என்பவளுடைய பரிவாரத்தைச் சேர்ந்தவள். விஜயனைச் சேர்ந்தவர்களில் ஒருவன் இளவரசன் [விஜயன்] தடுத்ததையும் கேளாமல் அவள் பின் தொடர்ந்து சென்றான். அருகில் கிராமம் இருந்தால் தானே நாய் தென்படும்" என்று இளவரசன் அப்பொழுது எண்ணினான். ஒன்றைக் கவனியுங்கள். 'கிராமம் இருந்தால்தானே நாய் தென்படும்', என்ற வரியில், கிராமம் என்றால் என்ன வென்று ஒரு தரம் சிந்தியுங்கள். மனிதர்கள் கூட்டாக வாழும் பொழுதுதான் கிராமம் தோன்றுகிறது. அப்படி என்றால் அங்கு மனிதர்கள் உண்டு என்பதாகிறது. ஆனால், "இங்கு மனிதர் யாரும் கிடையாது' என்று கூறியது எனோ? விஜயனின் நண்பன் சென்ற இடத்தில் நாயுருவில் இருந்த யகூஷிணியின் எஜமானி குவண்ண என்பவள் ஒரு மரத்தடியில் சந்தியாசினியைப் போல் நூல் நூற்றுக் கொண்டு அமர்ந்திருந்தாள். இதில் கட்டாயம் ஒரு உண்மை புலனாகிறது. அதாவது, இலங்கைக்கு புத்த மதம் வரும் முன்பே, மற்றும் சிங்களவர் என்ற ஒரு இனம் பரிணமிக்கும் முன்பே, இலங்கை, சங்க இலக்கியத்தில் கண்ட தென் இந்தியா மாதிரி, நாகரிகம் அடைந்த நாடாகவே காண்கிறோம். உதாரணமாக ஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயன் நாடு கடத்தப் பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, அவன் முதல் குவேனி நூல் நூற்பதை காண்கிறான். பட்டினப் பாலையின் "துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து,... " என்ற வரியில் நாம் காணும் நாகரிக மங்கை போல் குவேனியும் தன் அழகிய உடலுக்கு அணிந்து கொள்ள, உடை ஒன்றை பின்னுவதற்க்காக, நூற்பதை காட்டுகிறது. இது அன்று ஒரு முன்னேறிய நாகரிகம் இலங்கையில் இருந்தது என்பதை கட்டாயம் காட்டுகிறது என்றே நம்புகிறேன். குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும், கவினி என்றால் "பேரழகு படைத்தவள்" என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இராமாயண காப்பியத்தில் இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டது போல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்" என்பது கவனிக்கத் தக்கது. Part: 79 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 13: This is about the magical event of Mahinda Thera flying to Lanka and not about any reliable historical events that took place in Lanka. Mahinda is alleged to be the son of the King Asoka. He is therefore a human and could not have had the gravity defying capability of flying. Mahinda came flying to Lanka is a hoax, as described above. There is no mention of Mahinda in any of the Indian sources. Mahinda, his alleged sister Samghamitta, her son Sumana, their mother Devi, and the Third Buddhist Council have no synchronism with any historical or literature documents in India, and they all are fictitious characters invented by the monkish authors to meet their nefarious agenda. The name Samghamitta means ‘friend of Sanga’. Asoka was not a Buddhist when Samghamitta was born, and therefore he would not have named his daughter thus. Furthermore, Samghamitta is not an exclusive name for females, for a Thera with the same name came from the further coast, 37 - 2. It is alleged that the Buddha foretold that Mahinda would convert Lanka to the faith, 13 - 15 to 16. This foretelling is an abject lie as the Buddha was a human, and he could not have had any foretelling capability. The Buddha also prophesied at his deathbed about the arrival of Vijaya to Lanka, 7 – 3 to 4. Lord Buddha was a very good person, but it does not mean that he had the divine power of foretelling mental faculty. Mahinda, however, as per the narrative flew to Lanka and landed on the Missaka mountain. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 79 B தொடரும் / Will follow துளி/DROP: 1967 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 79A] https://www.facebook.com/groups/978753388866632/posts/33091560820492472/?
-
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! - 2026
"அனைவருக்கும் எம் இதயங்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!" --- உங்கள் "2026" பயணத்தை இனிதே ஆரம்பித்து நீங்கள் கொண்ட கனவுகள் பலிக்கவும் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறவும் என் முழுமனத்தோடு உங்களை வாழ்த்துகிறேன்!. வீடும் நாடும் இனிய எனின் எம் வாழ்க்கையும் இனிதே என்பதை இந்த புது ஆண்டு 2026 இல் உணருங்கள்!!. "யாண்டுபல வாக , நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின், மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்; யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான், காக்க; அதன்தலை ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே." [புறநானூறு பாடல் 191 - பாடியவர் - பிசிராந்தையர்] “தங்களுக்கு இவ்வளவு வயதாகியும் தாங்கள் எப்படி நரையில்லாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்பீர்களானால், சொல்கிறேன் ---- “சிறப்பான என் மனைவியோடு, என்னுடைய மக்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். நான் எண்ணுவது போலவே, என்னிடம் பணிபுரிபவர்களும் எண்ணிப் பணியாற்றுகிறார்கள். என் வேந்தன் முறையல்லாதவற்றைச் செய்யாமல் நாட்டை ஆட்சி செய்கிறான். நான் வாழும் ஊரில், மாட்சிமைக்குரிய நற்குணங்களும் நல்லொழுக்கங்களும் நிறைந்து ஐம்புலன்களையும் வென்று, பணிவோடும் சிறந்த கொள்கைகளோடும் வாழும் சான்றோர்கள் பலர் உள்ளனர்.” புறத்திலும் அமைதியே உண்டாயிற்று. கவலைகள் இல்லாத வாழ்க்கையால் நரை உண்டாகவில்லை" என்கிறான். அப்படியான ஒரு வாழ்வு, அப்படியான ஒரு நாடு உங்களுக்கு கிட்டட்டும் . 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு பண்டைய தமிழ் பாடலில் இருந்து உங்களுக்கு ஒரு வாழ்த்து [மதுரைக் காஞ்சி / ஆசிரியர் - மாங்குடி மருதனார்] "முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் பல் மீன் நடுவண் திங்கள் போலவும் பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி இலங்கு இழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி பெரும வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே" "கடலின் நடுவில் சூரியன் பிரகாசிப்பது போலவும், பல நட்சத்திரங்களுக்கு நடுவில் சந்திரன் ஒளிர்வது போலவும், செழித்த/மலர்ந்த உறவினர்களுடன் பிரகாசமாக, அழகாக விளங்கி, அழகிய அணிகலன்களை அணிந்த பெண்கள் பொற்கிண்ணங்களில் வாசனை நிறைந்த தேறலை (மதுவை) ஊற்றித் தர, நீ தினமும் மகிழ்ச்சியுடனும் இனிமையுடனும் வாழ்க; நீ பெற்ற இந்த நல்ல வாழ்க்கையை (ஊழியை) மகிழ்ச்சியாக அனுபவித்து வாழ்வாயாக!" அன்புடன் [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam/posts/pfbid033aDU7J4b39aeWz2DtwETREGGLkaQYRJhoehLLdX5cqkjeVtzeWn82Dy8d1utaRwVl?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 78 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 78 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை சில இலங்கை புராணக்கதைகள் கூறுவது போல், மகேந்திரன் [மகிந்த] மாயமாக பறக்காமல் தென்னிந்தியாவில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணம் செய்ததாக இந்த கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் மகேந்திரன் [மகிந்த] துறவியானதற்கான காரணம் என்னவென்றால்: பண்டைய இந்திய மரபில், ஒரு மன்னர் இறந்தால், அவரது மூத்த மகன் அரியணையைப் பெறுவார் என்றும் இளைய சகோதரர்கள் அரண்மனையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்றும் பொதுவாக அவர்கள் துறவிகளாக மாற வேண்டியிருந்தது. ஏனெனில் அவர்கள் தங்கள் தாயகத்தில் தங்க அனுமதிக்கப் படுவதில்லை. எனவே தான் அசோகரின் ஒன்றுவிட்ட சகோதரரான மகேந்திரன் [மகிந்த], இந்த மரபைப் பின்பற்றி ஒரு புத்த துறவியானார். முக்கிய குறிப்புகள்: தென்னிந்தியாவிலிருந்து புத்த மதம் படிப்படியாக இலங்கைக்கு பரவியது. பௌத்தம் தமிழ்ப் பகுதிகளுக்கும் இலங்கைக்கும் பரவுவதில் பேரரசர் அசோகரும் அவரது குடும்பத்தினரும் முக்கிய பங்கு வகித்தனர். 7 ஆம் நூற்றாண்டில், தென்னிந்தியாவில் புத்த மதம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது, அதே நேரத்தில் இந்து மதமும் சமண மதமும் மிகவும் பிரபலமாக இருந்தன. அசோகரின் சகோதரர் மகேந்திரன் [மகிந்த], இயற்கைக்கு அப்பாற்பட்ட வழிகளில் அல்ல, தென்னிந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு பயணம் செய்திருக்கலாம். மேலும், தமிழ் நாடுகள் பேரரசர் அசோகரின் ஆட்சியிலிருந்து சுதந்திரமாக இருந்தன. மேலும் மேற்கூறிய மரபின்படி அசோகரின் தம்பி மகேந்திரன் [மகிந்த] தமிழ் நாட்டை வசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது இயல்பானது. கிமு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாடு அல்லது மகதத்தில் (Magadha) பன்னிரண்டு ஆண்டு பஞ்சத்தின் போது சமண மதம் தமிழ்நாட்டிற்கு வந்தது. மன்னர் சந்திரகுப்த [Chandragupta] கூட ஆட்சியைத் துறந்த பிறகு சமணராகி, மைசூருக்கு [Mysore] வந்து அங்கு இறந்தார். புத்த மதம் சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ் நாட்டிற்கு வந்து, கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை கணிசமான காலம் நிலவியது. கி.பி 300 முதல் கி.பி 600 வரையிலான தென் இந்தியா தமிழ் மன்னர்களின் வரலாறு எதுவும் இல்லை. அதுமட்டும் அல்ல, பொது சகாப்தத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளுக்குக் கூட தமிழ் மன்னர்களின் விவரங்கள் தெளிவாக இல்லை. களப்பிரர் (Kalabhra dynasty) தென்னிந்தியாவை ஆண்ட அரசர்கள் ஆவார்கள். இவர்கள் தமிழகத்தை ஏறக்குறைய பொ.ஊ. 250 – பொ.ஊ. 600 காலப்பகுதியில் ஆண்டார்கள் எனச் சொல்லப்படுகிறது. இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சைன சமயம், பௌத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என்று பொதுவாக நம்பப்படுகிறது? இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது. அதன் பின், ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டில், தென்னிந்தியாவில் போர்க்குணமிக்க சைவ மதம் [militant Saivism] நிலவியது. கேரளாவைச் சேர்ந்த ஆதி சங்கரர் அந்தக் காலகட்டத்தில் தனது பிராமண மத வடிவத்தைப் [Brahminical religion] பரப்பினார். ஏழாம் நூற்றாண்டில், சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாறிய பாண்டிய மன்னரின் ஆட்சியில் சமண மதம் கடுமையான அடியைச் சந்தித்தது. அவரது பெயர் மாறவர்மன் அரிகேசரி [Maravarman Arikesari]. அரிகேசரி கி.பி. 640 முதல் 670 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் ஆவார். பாண்டிய மன்னன் செழியன் சேந்தனின் மகனான இவர் தன் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக் கொண்டார். கி.பி.640 ஆம் ஆண்டளவில் மாறவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றார். திருவிளையாடல் புராணத்தில் இவன் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன், போன்ற பெயர்களினாலும் அரிகேசரி பராங்குசன் என்று பெரிய சின்னமனூர்ப் பட்டயங்களிலும் அழைக்கப்பட்டுள்ளான். இந்த மன்னர் ஒரு வெறித்தனமான குணம் [fanatical character] கொண்டவர், முதலில் சமணத் துறவிகளின் தூண்டுதலின் பேரில் சைவர்களை சித்திரவதை செய்தார். பின்னர் அவர் சைவ மதத்திற்கு மாறி சமணர்களுக்கு எதிராக சமமான தீவிரத்துடன் இருந்தார். இவர் சுமார் எட்டாயிரம் சமணத் துறவிகளை உயிருடன் தூக்கிலிட்டார். இது மற்ற அனைத்து மதப் பின்பற்றுபவர்களுக்கும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியிருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பௌத்தர்கள் பெருமளவில் இலங்கைக்கு இடம்பெயர்ந்திருக்க வேண்டும், இருப்பினும், இந்த துயரமான மரணத்திற்குப் பிறகும் சமணர்கள் நீண்ட காலம் உயிர் பிழைத்தனர். மகாவம்சத்தில் தமிழர்களுக்கு எதிரான சார்பு இதனால்த்தான் தோன்றியிருக்கவும் ஒரு வாய்ப்பு உண்டு, ஆனால் தீபவம்சத்தில் வெளிப்படையாகக் அப்படி ஒன்றும் கூறப்படவில்லை. இந்தியாவில் மகாயான பௌத்தம் பரவுவதை கடுமையான தேரவாத பௌத்தத்தால் தாங்க முடியவில்லை என்பதும் இதற்குக் இன்னும் ஒரு காரணமாக இருக்கலாம். சமையலில் இருந்து வரும் சூடான புகையை தினமும் வெளிப்படுத்தாவிட்டால் ஓலை கையெழுத்துப் பிரதிகள் நீண்ட காலம் நிலைத்திருக்காது. புத்த துறவிகள் பொது மக்கள் கொடுக்கும் பிச்சையில் உயிர்வாழ வேண்டும் என்பதால் மடங்களில் சமையல் நடைபெறுவதில்லை. அதனால்த் தான் துறவிகள் எப்போதும் மன்னர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறார்கள். இதனால் அவர்கள் பிச்சை எடுக்கத் தேவையில்லை. சூடான புகைக்கு ஆளாகாத ஓலை கையெழுத்துப் பிரதிகள் நூற்று முதல் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. குறிப்பாக சூடான ஈரப்பதமான சூழலில். எனவே, ஓலை கையெழுத்துப் பிரதிகள் நொறுங்கி நொறுங்குவதற்கு முன்பு அவற்றை கட்டாயம் ஒவ்வொரு நூற்று முதல் நூற்றைம்பது ஆண்டுகளில் நகலெடுக்க வேண்டும். இந்த தருணத்தில் தான் மூலப் பிரதிகளுக்குள் தமக்கு வேண்டியவற்றை செருகவும் மூல பிரதியில் உள்ளவற்றை சிதைக்கவும் சரியான நேரமாக இருந்துள்ளது. இந்தச் செயல்பாட்டில் தான் தமிழ் எதிர்ப்பு உணர்வு மெல்ல மெல்ல மெதுவாக அங்கு சேர்க்கப்பட்டு இருக்கலாம் என்ற வாதமும் இன்னும் அறிஞர்களிடம் உண்டு. Part: 78 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 The earlier mentioned interesting passage, which shows how vivid the traditions of Asoka and his brother continued to be in the south after the lapse of nine centuries, and locates Mahendra in a monastery to the south of the Kaviri, within easy reach of Ceylon, goes a long way to support the hypothesis that Mahendra really passed over to the island from a southern port on the mainland. That hypothesis is much more probable than the Ceylonese story that he came by aerial flight through the air, ‘as flies the king of swans.’ Nor is it likely that his first discourse converted the king and forty thousand of his subjects…’ Unquote Quote from page 51 ‘The assumption of monastic robe by the emperor’s younger brother, or rather half brother on the mother’s side, was quite in accordance with the precedent and rule. ‘According to the laws of India, says Chinese historian, ‘when a king dies, he is succeeded by his eldest son (Kumararaja); the others leave the family and embrace a religious life, and they are no longer allowed to be in their native kingdom’. Unquote Tamil countries were independent of the Emperor Asoka’s rule and it was natural that Mahendra, Asoka’s younger brother elected to reside in Tamil Nadu as per the above-mentioned tradition. Jainism came to Tamil country around third century B. C. during a twelve-year famine in Magadha. Even the King Chandragupta became a Jain after abdicating, and came to Mysore to die. Buddhism came to Tamil country about a century later and prevailed for a considerable time, till about sixth century A. D. There is no history of Tamil kings from 300 A. D. to 600 A. D. The details of Tamil kings are sketchy even for the first three centuries of the Common Era. Around sixth to seventh century, militant Saivism came to exist in the south India. Adi Sankarar from Kerala propagated his form of Brahminical religion around that time. Around the seventh century, Jainism suffered a severe blow under the rule of a Pandyan king who converted from Jainism to Saivism. His name is Maravarman Arikesari, but he is also known as Koon Pandyan and Sundarapandiyan, and he reigned from 641 A. D. to 670 A. D. This king was a fanatical character and tortured Saivists first at the instigation of Jain monks. Then he was converted to Saivism and went against Jains with equal vehemence. He impaled about eight thousand Jain monks alive, and this must have sent shock waves through all other religious followers. The Buddhists must have shifted to Ceylon en masse during this time, however, the Jains survived for a long-time even after this tragic impaling. That is the anti Tamil bias in the Mahavamsa, which is not explicit in the Dipavamsa. It could also be that rigid Theravada Buddhism could not stand the spread of Mahayana Buddhism. Ola manuscripts will not survive long if it is not daily exposed to the warm smoke from cooking. No cooking takes place in monasteries as monks are supposed to survive on alms given by the common folks. That is why monks are always trying to win favour of kings and rulers so that they need not to go around for alms. Ola manuscripts not exposed to warm smoke would not last more than one hundred to one hundred and fifty years, especially in the warm moist environment. Ola manuscripts need to be copied before they become friable and crumbling. This is the opportune time to insert and corrupt the originals. The anti-Tamil sentiment must have slowly built up in this process. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 79 தொடரும் / Will follow துளி/DROP: 1966 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 78] https://www.facebook.com/groups/978753388866632/posts/33076511595330728/?
-
உதவி தேவை: இந்தியக் கடற்படையால் குருநகர் "துறைமுகம்" தாக்கப்பட்டதா?
மேலும் நான் இலங்கை கடற் தொழில் அமைச்சில் [கொழும்பு] கடல் பொறியியல் விரிவுரையாளராக சில ஆண்டு கடமையாற்றிய பொழுது, 1983 க்கு முதல், அங்கு, குறுநகரில் அமைந்துள்ள கடல் தொழில் பயிற்சி நிலையத்துக்கு சில தடவை போய் உள்ளேன். அங்கு பயிற்சி, குருநகர் மீன்பிடித்தல் மற்றும் சிறிய படகுகள் தங்கி இருக்கும் ஜெட்டிகளில் இருந்து புறப்பட்ட மீன் பிடி படகுகளில் தான் நடந்தன - அங்கு பெரிய கப்பல்கள் அல்லது கிரேன்கள் இருக்க வில்லை என்பது நான் நேரடியாக பார்த்தது
-
உதவி தேவை: இந்தியக் கடற்படையால் குருநகர் "துறைமுகம்" தாக்கப்பட்டதா?
📌 What Happened on 21 October 1987? On 21 October 1987, during Operation Pawan — the military campaign by the Indian Peace Keeping Force (IPKF) in Sri Lanka — a special operation was carried out against the Liberation Tigers of Tamil Eelam (LTTE) base at Gurunagar, in the Jaffna Peninsula. Wikipedia+1 ⚓ Attack by Indian Navy MARCOS The Indian Navy’s Marine Commandos (MARCOS — then known as Indian Marine Special Forces) were tasked with neutralizing LTTE’s small naval/boat assets and disrupting their supply routes to Jaffna. Wikipedia A team of about 18 commandos led by Lt. Arvind Singh conducted an amphibious raid on LTTE positions at Gurunagar. They swam long distances and used small assault craft and floating rafts laden with explosives to approach their targets stealthily. Daily News Archives+1 The commandos rigged explosives on the jetty and on LTTE speedboats moored there and detonated them. They then disengaged and returned under fire without suffering casualties among their own team. Daily News Archives 📌 Important Clarification: This was not a large-scale strike on a “major port infrastructure” — Gurunagar did not have a formal harbour with large concrete port buildings or shipping docks comparable to Colombo or Trincomalee. It was essentially a fishing and small-boat landing area/jetty used by LTTE marine elements and local fishermen, not a fully developed commercial port. Daily News Archives 📌 Were Ships or Civilian Boats Hit? The primary targets were LTTE speedboats and small craft which were being used for logistic movement and potentially for attacks. These were destroyed as part of the demolition charges placed by the commandos. Daily News Archives ✔ No evidence exists in reliable military histories that large freight ships, civilian passenger vessels, or commercial port facilities were attacked in this operation. ✔ The operation was a military raid on LTTE assets, not a naval bombardment of port infrastructure. 📌 Casualties & Damage Indian MARCOS — according to mainstream military histories — did not suffer casualties during this specific operation because the team withdrew successfully after detonating their charges. Wikipedia There are no credible official records confirming that hundreds of Indian troops were killed in this particular strike — such figures (e.g., “600 killed”) appear only in unverified online sources and should not be treated as factual. The LTTE’s naval assets at the beach/jetty were destroyed (speedboats and small craft), and the jetty structures sustained explosive damage. 📌 Context: Operation Pawan This raid was part of a larger phase of fighting between IPKF and the LTTE: 📌 Operation Pawan (11–25 October 1987) was the Indian Peace Keeping Force’s campaign to seize and control the Jaffna Peninsula from LTTE control as part of the Indo-Sri Lanka Accord of 1987. Wikipedia Who was involved overall: Indian Army units (various infantry brigades, paratroopers) Indian Navy and Coast Guard blockading coastal supply routes Indian Air Force providing air support LTTE fighters (Sea Tigers, ground forces) Casualties in Operation Pawan (overall, not just Gurunagar): Indian losses: over 200 killed, hundreds wounded in fighting around Jaffna. Wikipedia LTTE losses: estimated thousands overall in the broader Jaffna campaign. Wikipedia This reflects intense urban and jungle warfare over several weeks — not solely the commandos’ beach raid. 📌 Was There a “Port” at Gurunagar? 📍 Gurunagar (Jaffna) was historically a fishing and small-boat landing zone, not a major commercial harbour. Footpaths and basic jetties existed for fishing and small craft — not large ships or cranes — especially during the war period when movement of large vessels was restricted. Daily News Archives ✔ So calling it a “thuramukam” (port) in the sense of a major harbour is inaccurate; it was a jetty/small coastal landing used locally and militarily by the LTTE Sea Tigers. 📌 Aftermath & Impact Short-term Impacts: LTTE speedboats and jetty facilities at Gurunagar were destroyed, disrupting some of the group’s coastal logistics. Daily News Archives The IPKF was able to restrict LTTE maritime movement, contributing to the larger campaign to push rebels out of Jaffna’s urban areas. Wikipedia Longer-term Consequences: Operation Pawan as a whole was strategically costly for India — heavy casualties, political controversy, and eventual Indian withdrawal in 1990. Wikipedia The war further deepened mistrust between the LTTE and IPKF, eventually leading to the assassination of Indian Prime Minister Rajiv Gandhi in 1991, claimed by the LTTE. Wikipedia Civilian consequences: The broader Jaffna operations were part of intense urban warfare affecting civilians in and around Jaffna — shelling, displacement, and casualties — but these were not limited to the Gurunagar raid itself and reflected the larger conflict. Wikipedia 📌 Summary Aspect What Really Happened Target on Oct 21, 1987 MARCOS raid on LTTE boats and jetty at Gurunagar, Jaffna. Daily News Archives Type of place Small jetty/landing area, not a large port. Daily News Archives Ships attacked? LTTE small speedboats and jetty facilities, not big naval or civilian ships. Daily News Archives Casualties (MARCOS) No reported commandos killed in that specific raid. Wikipedia Casualties in campaign IPKF losses in Jaffna operations numbered in the hundreds overall. Wikipedia Aftereffects Disruption of LTTE coastal logistics; part of wider conflict that shaped Sri Lanka’s civil war and India-Sri Lanka relations. Wikipedia
-
கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் [மூன்று பகுதிகள்]
கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 01 கிறிஸ்துமஸ் ஈவ் [christmas eve] சந்திப்பு டிசம்பர் 24 அன்று, யாழ்ப்பாணத்தின் அன்றைய மாலை மெதுவாக மங்கிக் கொண்டிருந்தது. நாட்காட்டியில் [காலண்டரில்] அது கிறிஸ்மஸ் ஈவ் [இயேசுநாதர் பிறந்த நாள் பண்டிகைக்கு முந்திய நாள்] என்று எழுதப்பட்டிருந்தாலும், யாழின் வானம் அதை எந்த மத நாளாகவும் கருதவில்லை. அது பைபிளில் காணப்படும் தேதி அல்ல. கிறிஸ்து டிசம்பர் 25 அன்று பிறந்ததாக ஒருபோதும் பைபிளில் கூறப்படவில்லை. அது ஒரு முன்மொழிவு மட்டுமே. அதுவும் கிறிஸ்து இறந்து 340 ஆண்டுகளின் பின்பே. அதனாலோ என்னவோ அது எப்போதும் போலவே — காற்றோடு, உப்புக் காற்றின் சுவையோடு, மண்ணின் நினைவோடு இருந்தது. ஆனாலும் மக்கள் பெரும் திரளாக வந்தார்கள். வரலாற்றுக்காக அல்ல, நம்பிக்கைக்காக வந்தார்கள். கிறிஸ்துமஸ் ஈவ் அன்று, யாழ்ப்பாண தேவாலயத்திற்குள் காலண்டரில் நம்பிக்கை கொண்டவராக அல்ல, மாறாக மக்களை, இயேசுவை நம்புபவராக, பகுத்தறிவில் என்றும் தன்னை ஒரு மாணவனாகக் கருதும் அடைக்கலம் நுழைந்தான். அவன் ஒரு இளம் வழக்கறிஞர். வடக்கு – கிழக்கில் உண்மைக்காக வழக்காடும் ஒருவன். போலீஸ் நிலையங்களில் அவன் பெயர் நன்கு அறியப்பட்டது. அதிகாரிகளுக்குப் பிடிக்காத பெயர். ஆனால் மக்களுக்கு நன்கு அறியப்பட்ட , விரும்பப்பட்ட பெயர். இவன் அடிக்கடி, தூசி நிறைந்த மாஜிஸ்திரேட் (நீதிபதி / Magistrate) நீதிமன்றங்களிலும் இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட காவல் நிலையங்களிலும் தோன்றினான். - தங்கள் சொந்த நிலம், பலவந்தமாக பறிபோவதை பாதுகாத்ததற்காக கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளுக்காகவும், நில உரிமையாளர்களுக்காகவும் , இந்தியா மீனவர்களின் அத்துமீறலுக்கு - அரசின், கடற்படையின் தீவீர கண்காணிப்பு வேண்டி எதிர்ப்பு தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்காகவும், தங்கள் இறந்தவர்களை நினைவு கூர்ந்ததற்காக கைது செய்யப்பட்ட மாணவர்களுக்காகவும், மக்களுக்காகவும் குரல் கொடுத்தான். அவனுக்கும் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் என்பது பிறந்தநாள் அல்ல, அது வேறு ஒரு நோக்கத்திற்காக, அதாவது அவர் இறந்து நீண்ட காலத்திற்குப் பிறகு - அந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது, அப்போது ரோம் நகருக்கு எளிதான மதமாற்றம் தேவைப்பட்டது, கிறிஸ்துவின் பிறப்பை ஐரோப்பா ஏற்கனவே விரும்பிய சாட்டர்னேலியா மற்றும் சூரிய விழாக்களுடன் இணைக்க அந்த நாள் தேர்ந்து எடுக்கப்பட்டது என்பது வரலாறாகும். ஆனால் உலகத்திற்கு வழிகாட்டிய இயேசுவில் நம்பிக்கை உண்டு. தேதிகளை மட்டும் தான் அவன் நம்பவில்லை. அதனால்த்தான் அவன் அங்கு வந்தான். ஒரு சைவ தமிழ், இசை மற்றும் நடன ஆசிரியை, அவர் மதம் மாறுவதற்காக அல்ல, பாடகர் குழுவிற்கு ஒரு பயிற்சி அளிக்க அங்கு அழைக்கப்பட்டு இருந்தாள். அவளின் பெயர் ஆராதனா. சங்கீதத்தை இறைவனுக்காக அல்ல — மனிதனுக்காகப் பாடுவாள். எல்லாவற்றிற்கும் மேலாக, பண்டிகை கீதங்கள் (கரோல் கீதங்கள் / Christmas Carols) முதலில் கிறிஸ்துமஸுக்கு மட்டுமே பிரத்தியேகமானவை அல்ல. அவை ஒருகாலத்தில், வசந்தத்திற்கும், அறுவடைக்கும், சில நேரம் கிண்டலுக்கும் கூட பாடப்பட்ட பாடல் ஆகும். [They were sung in May fields, during harvests, even as satire]. அதனால் அவள் அதில் தேர்ச்சி பெற்ற பாடகியாகவும் இருந்தாள். ஆராதனா, பலிபீடத்தின் அருகே வெறுங்காலுடன் நின்று, சுருதியை சரிசெய்து, தாளத்தைக் கற்றுக் கொடுத்தாள். அது மட்டும் அல்ல, மகிழ்ச்சி ஒரு கடவுளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல [how joy does not belong to one god alone.] என்பதையும் கற்றுக் கொடுத்தாள். ஒரு மரப் பலகையில் தாளம் போட்டு, ஒரு சிறுவனை மெதுவாகத் திருத்துவதை அடைக்கலம் ஓரளவு அருகில் நின்று கவனித்தான். அவள், அவர்களுக்கு குரல் பயிற்சிக்காக பாடிய போது, தேவாலயம் ரோமன், புராட்டஸ்டன்ட் அல்லது ஆங்கிலிகன் மதத்தை உணரவில்லை - அது தமிழை உணர்ந்தது [When she sang, the church did not feel Roman, Protestant, or Anglican—it felt Tamil.]. நள்ளிரவு சேவைக்குப் பிறகு, அடைக்கலமும் ஆராதனாவும், அலங்கரிக்கப்படட காகித நட்சத்திரங்களின் கீழ் அமர்ந்து ஒருவருடன் ஒருவர் சமயங்களின் வரலாறு பற்றியும், இன்றைய இலங்கை வாழ் தமிழரின் நிலைகள் பற்றியும் பேசினர் . அப்பொழுது, "உனக்குத் தெரியுமா? ," அவள் சிரித்துக் கொண்டே கேட்டாள், "புத்தாண்டும் வரப்போகிறது. இன்னொரு கடன் வாங்கிய கொண்டாட்டம்." அவன் தலையசைத்தான். "ஜனவரி 1 ஆம் தேதி பிரபஞ்சம் சார்ந்தது அல்ல. அது நிர்வாக ரீதியானது. ஜூலியஸ் சீசரின் நாட்காட்டி. பேரரசால் எழுதப்பட்ட காலம்." "மகாவம்சம் கூட புத்தர் இலங்கைக்கு மூன்று முறை பறந்து வந்தார் என்று கூறுகிறதே ?, அதை நம்புகிறீர்களா? என்று ஆராதனா இலங்கை அரசியல் பக்கம் திரும்பினாள். அடைக்கலம் ஒரு சிரிப்புடன் கூறினான், எல்லா புராணங்களும் கூறும் புரளிகள் தான் இவை, என்றாலும் மகாவம்சத்தை உண்மையான வரலாறாக இன்னும் நம்புகிறார்கள். அது தான் தமிழர் பூமியில் நிகழும் அட்டூழியம்" என்றான். “நம்பிக்கை கேள்வி கேட்காத போது தான் ஆபத்தாகிறது,” அவன் தொடர்ந்தான். அவள் மெதுவாகச் சொன்னாள்: “ஆமாம் கேள்வி கேட்கத் தெரிந்த ஒரு மனிதனால் மட்டுமே நம்பிக்கையையும் காதலையும் உண்மையாகப் பாதுகாக்க முடியும். [Only a man who knows how to ask questions can truly protect belief and love.]” அந்த இரவு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் இருவரையும் சமமாகப் பார்த்தது. அந்த உரையாடல் அவர்களை கொஞ்ச நேரம் ஆறுதலாக கதைக்க வழிவகுத்தது. ஆனால், அந்த உரையாடலின் போது, அவன் கண்களுக்கு ஒரு ஓய்வும் கிடைக்கவில்லை. அது அவளை அளந்து அளந்து அவன் மனதுக்கு சொல்லிக் கொண்டே இருந்தது. கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால் ஒப்புமையில் கடலினையும், மீனையும், அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந் தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை தன்னகத்தே கொண்ட ஆராதனா, அடைக்கலத்தின் மனதில் புகுந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. கிறிஸ்மஸ் – புத்தாண்டு இடைப்பட்ட நாட்கள், விடுதலைகளாக இருந்ததாலும், கொண்டாட்ட நாட்களாக இருந்ததாலும் அவர்கள் உரையாடல்களை தொலைபேசி மூலமும் சிலவேளை நேரடியாகவும் சந்தித்து தொடர்ந்தனர். யாழ்ப்பாண சுப்பிரமணிய பூந்தோட்டத்தின் பழைய மரங்களுக்குக் கீழும், யாழ் பொது நூலத்திலும் அவர்கள் இருவரும் தங்கள் எதிர்காலங்களை மெல்ல எழுதிக் கொண்டு இருந்தனர். ஆனால் அந்த பழைய மரங்கள் மகிழ்வாகக் காணப்படவில்லை. அதை வெட்டி அகற்றி, உட்புற அரங்கம்அமைப்பதில் சிலர் ஈடுபடுவது அதன் காதில் விழுந்ததோ என்னவோ? அடைக்கலத்தின் கண்களில் கேள்விகள் அதிகம். பதில் கொடுக்காத உலகத்திற்கான வழக்குத் தயாரிப்பே அவன் வாழ்வு. அதேபோல, ஆராதனாவுக்கு நடனமும் இசையும் அவளுக்குப் பக்தியின் மொழி. கேள்வி கேட்காமல் நம்புவதில் அவளுக்கு ஒரு அமைதி இருந்தது. ஆனால் அப்போது அவர்களுக்கு, குறிப்பாக ஆராதனாவுக்கு காதல் பிறக்கவில்லை. ஆனால் இரண்டு உலகங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தன. "இறப்பவே தீய செயினும் தம் நட்டார் பொறுத்தல் தகுவதொன்று அன்றோ - நிறக்கோங்கு உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட! ஒருவர் பொறை இருவர் நட்பு" என்பது போல, இந்த அடி வாயிலாகப் பொறுமை குணமுடையோராக நண்பர்கள் இருக்க வேண்டுமென நாலடியார் பாடல் உரைக்கின்ற படி, அவர்களின் சந்திப்பு பொறுமையுடனும், ”ஈரம் இல்லாதது கிளைநட்பு அன்று” என்பதற்கு இணங்க, பிற உயிர்களுக்குக் கருணை பண்பு காட்டும் குணமில்லாதவரின் உள்ளத்தில் நட்பும் உறவும் தோன்றுவதில்லை என்பதை உணர்ந்து அது அமைதியாகத் அவர்களுக்கு இடையில் தொடங்கியது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் துளி/DROP: 1965 [கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/33069006056081282/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 77 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 77 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை இலங்கையின் மதமாற்றத்தை விவரிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவின் மடங்கள் அல்லது துறவறக் கட்டளைகளுடன் தொடர்புடைய கதைகள் அல்லது புனைவுககளின் சுருக்கம் அத்தியாயங்கள் VI [VI. The Ceylonese Legend of Asoka] மற்றும் VII [VII. The Indian Legends of Asoka] இல் இந்த புத்தகத்தில் காணப்படுகிறது. அவற்றை வரலாறாக ஏற்றுக்கொள்ள முடியாது, மேலும், உண்மையில், தீவின் மதமாற்றம் அது பழைய புனைவுகளில் கூறப்பட்டதை விட மிகவும் மெதுவாக நடந்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய எந்த அதிகாரப்பூர்வமான விவரமும் எங்களிடம் இல்லை. இப்போது அசோகர் கல்வெட்டுக்களின் கூற்றுக்களின் படி, அது இலங்கையைப் பற்றி அமைதியாக உள்ளது. எனவே, உள்ளூர் துறவியரின் கதைகளை உறுதிப்படுத்தும் தெளிவான வரலாற்றுப் பதிவுகளோ அல்லது அசோகப் பேரரசரிடமிருந்து அதிகாரப்பூர்வ கல்வெட்டுகளோ இல்லை என்பதே உண்மை. அசோகரின் மகள் என்று கூறப்படும் சங்கமித்தாவின் கதை கேள்விக்குரியது. அவளுடைய பெயருக்கு "ஒழுங்கின் தோழி" ["Friend of the Order"] என்று பொருள். இது ஒரு உண்மையான நபரின் பெயரை விட ஒரு குறியீட்டு பட்டமாகத் தெரிகிறது. மேலும், எந்த கல்வெட்டுகளிலும் அவளைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. [சங்கமித்தா பிறக்கும் பொழுது ஒரு இந்து, அப்படி என்றால், எப்படி அவளுக்கு "ஒழுங்கின் தோழி" என்று பெயர் சூட்டி இருப்பார்கள்?] மகிந்த மற்றும் அவரது சகோதரியின் கதைகள், பின்னர் இலங்கையில் பௌத்தத்திற்கு ஒரு மகத்தான வரலாற்றை வழங்கவும், பிரபல பேரரசரான அசோகருடன் இணைக்கவும் உருவாக்கப்பட்டதாக பேராசிரியர் ஓல்டன்பெர்க் [Professor Oldenberg] நம்புகிறார். மகிந்தா மற்றும் சங்கமித்தா பௌத்தத்தை ஒரே நிகழ்வில் கொண்டு வந்திருக்க முடியாது. அது மிகவும் மெதுவாகவும் படிப்படியாகவும் பரவி இருக்கலாம். அதாவது, யதார்த்தம் மிகவும் படிப்படியாக இருந்து இருக்கும் சுருக்கமாக, இலங்கைக்கு பௌத்தம் வருவது பற்றிய பாரம்பரியக் கதைகள் முற்றிலும் உண்மையாக இருக்காது என்றும், இந்த செயல்முறை புராணக்கதைகள் கூறுவதை விட படிப்படியாகவும் குறைவான வேகத்துடனும் நடந்து இருக்கலாம் என்றும் இந்தப் பகுதி கூறுகிறது. The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' என்ற நூலில், பக்கம் 49 தொடக்கம் 51 வரையில் உள்ள பகுதியின் எளிமையான விளக்கம் என்னவென்றால், பௌத்தம் காலப்போக்கில் இலங்கைக்கு பரவியது: பௌத்த இலக்கியங்கள் [Buddhist literature] (பாளி மற்றும் ஒருவேளை சிங்கள மொழியில் எழுதப்பட்டவை) இலங்கைக்கு ஒரே நேரத்தில் வரவில்லை. அதாவது, மகத நாடு (இந்தியாவில் புத்த மதம் தோன்றிய இராச்சியம்) அல்லது மகதம் (Magadha) பேரரசுடனான நேரடித் தொடர்பின் திடீர் விளைவை விட, மாறாக, இலங்கைக்கும், இலங்கைக்கு அருகில் உள்ள இந்தியாவின் பகுதிகளுக்கும் இடையிலான வழக்கமான தொடர்பு மூலம் புத்த மதம் படிப்படியாகப் பரவியது. சைனம் மற்றும் பௌத்தத்தின் வளர்ச்சியில் மகதமானது ஒரு முக்கியப் பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் புத்த மதம்: 5 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கு வருகை தந்த சீன பயணிகள், புத்த மதம் தென்னிந்தியாவை அடைந்து சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். சில புத்த மடங்கள் தென் இந்தியா தமிழ் பகுதிகளில் இருந்தன, அவை இலங்கையின் புத்த நம்பிக்கைக்கும் செல்வாக்கு செலுத்தின கி.பி ஏழாம் நூற்றாண்டில் ஹியுங் சாங் (Hiuen Tsang) எனும் நாடுகண் சீன பிக்கு [the Chinese 7th Century, Buddhist monk, scholar traveller], பாண்டிய அரசனின் மதுரைக்கு அண்மையில், மகிந்த தேரரால் ஒரு மடாலயம் கடப்பட்டதாக குறிப்பிடுகிறார் [a monastery built by Mahinda thera]. அவர் மேலும் காஞ்சிபுரத்தில் ஒரு தூபி [stupa] அசோகனால் கடப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் காஞசிபுரம் ஒரு செழிப்பான நகரம் என்றும், அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் புத்த மதத்தை தழுவியவர்கள் என்றும் குறிப்பிடுகிறார் [Kanchipuram as a flourishing city and states that most of its population was Buddhist]. பாண்டிய இராச்சியத்தில் (கி.பி 640) மத நிலைமைகள்: ஹியுங் சாங், மலைக்கோடடை பகுதிக்கு (காவிரி நதிக்கு தெற்கே உள்ள பாண்டிய இராச்சியம்) விஜயம் செய்து பல்வேறு மதக் குழுக்களைக் கவனித்தார். சிலர் புத்த மதத்தைப் பின்பற்றினர், மற்றவர்கள் இந்து மதம் அல்லது சமண மதத்தைப் பின்பற்றினர். பல புத்த மடாலயங்கள் இடிபாடுகளில் இருந்தன, சுவர்கள் மட்டுமே அங்கு இருந்தன. இந்து கோயில்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தன, மேலும் பலர் சமண மதத்தைப் பின்பற்றினர். மகேந்திரனும் [மகிந்த] அவரது இலங்கைப் பயணமும்: மதுரைக்கு (பாண்டிய இராச்சியம்) அருகில், புதர்களால் மூடப்பட்ட ஒரு பழைய புத்த மடாலயம் இருந்தது. இந்த மடாலயம் பேரரசர் அசோகரின் தம்பி மகேந்திரனால் [மகிந்த] கட்டப்பட்டதாக பாரம்பரியம் கூறப்படுகிறது. அங்கே அருகிலுள்ள ஒரு தூபி (ஒரு புத்த ஆலயம்) அசோகரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. Part: 77 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 “the conversion of the island must have been a process of much slower than it is represented to have been”. The Edicts, as now interpreted, are silent about Ceylon, and cannot be cited in support of the local monastic traditions, which although resting upon a basis of fact, are wholly untrustworthy of details. We must be content to admit our ignorance, which is likely to continue. I am sceptical about the tale of Samghamitta, the supposed daughter of Asoka. Her name, which means ‘Friend of the Order’, is extremely suspicious, and the inscriptions give no indications of her existence. Professor Oldenberg has much justification for his opinion that the story of Mahinda and his sister seems to have been-‘invented for the purpose of possessing a history of the Buddhist institutions in the island, and connect it with the most distinguished person conceivable – the great Asoka. The historical legend is fond of poetically exalting ordinary occurrences into great and brilliant actions; we may assume that, in reality, things were accomplished in a more gradual and less striking manner than such legends make them appear’. The naturalization in Ceylon of the immense mass of Buddhist literature now exist in Pali and, I believe, also in Sinhalese, must necessarily have been a work of time, and seem to be the fruit of long and continuous intercourse between Ceylon and the adjacent parts of India, rather than the sudden result of direct communication with Magadha. The statements of the Chinese pilgrims in the fifth and seventh centuries prove that Asoka’s efforts to propagate Buddhism in the far South were not in vain, and that monastic institutions existed in the Tamil countries, which were in a position to influence the faith of the island. Hiuen Tsang mentions one stupa in the Chola country, and another in the Dravida or Pallava kingdom ascribed to Asoka. Still more significant is his description of the state of religion in A. D. 640 in the Malakotta Pandya country to the south of the Kaviri (Cauvery), where he found that- ‘Some follow the true doctrine, others are given to heresy. They do not esteem learning much, but are wholly given to commercial gain. There are the ruins of many old convents, but only the walls are preserved, and there few religious followers. There are many hundred Deva (Brahmanical) temples, and a multitude of heretics, mostly belonging to the Nirgranthas (Jains). Not far to the east of this city (the unnamed capital,? Madura) is an old Sangharama (monastery) of which the vestibule and court are covered with wild shrubs; foundation walls only survive. This was built by Mahendra, the younger brother of Asoka-raja. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 78 தொடரும் / Will follow துளி/DROP: 1964 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 77] https://www.facebook.com/groups/978753388866632/posts/33063046316677256/?
-
கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" [எட்டு பகுதிகள்]
சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 08 அத்தியாயம் 8 - மீண்டும் யாழ்ப்பாணம் அந்த மாலை, தென்றல் காற்று வீசிக்கொண்டிருக்க, மரங்களின் இலைகள் தன் பாடல்களை பாடிக்கொண்டிருக்க, அவர்களின் வண்டி அளவான வேகத்துடன் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தது. "யாழ்ப்பாண நூலகம், இடிந்து விழுந்தாலும், அது பேசுகிறது," என்று ஆரன் தன் உரையாடலைத் தொடங்கினான். "அறிவையும் கலாச்சாரத்தையும் முற்றிலுமாக அழிக்க முடியாது என்பதை இது நமக்குச் சொல்கிறது. எங்கள் அன்பைப் போலவே, அவையும் தாங்கும்." என்றான். அனலி அவனது கையின் மேல் ஒரு கையை வைத்தாள். "அப்படியானால், நாம் நினைவைப் பேணுபவர்களாக இருப்போம், ஆரன். நம் முன்னோர்களின் கதைகள், அவர்களின் கவிதைகள், அவர்களின் பக்தி மற்றும் நமது பயணத்தை எடுத்துச் செல்வோம் - இதனால் காலம் நகர்ந்தாலும், எதுவும் உண்மையில் இழக்கப்படாது." என்றாள். ஒரு நிமிஷம் வண்டியை ஓரமாக நிறுத்தினார்கள். மன்னார் கடலின் அழகை இருவரும் சேர்ந்து ரசித்தார்கள். உப்பு கொண்ட உன்னத காற்று உதடுகளை வருடிச் செல்ல, அவள் காந்த விழிகளில், அவள் அப்பாவின் எச்சரிக்கையை சற்று மறந்துவிட்டான். கரையை முத்தமிடும் அலைகள் கவலையுடன் மெதுவாக திரும்புகின்றன, ஆரனின் அனலியின் பாதங்களை நனைத்து குழப்பிவிட்டோமோ என்று. மணல் தோண்டும் நண்டுகளும் இருவரையும் விழி உயர்த்தி பார்த்தன, அவர்களின் அணைப்பில் இடைவெளி இல்லையே என்று. தன்னைவிட ஒரு அழகி இருக்கிறாளென நிலவும் இன்னும் விண்ணில் தோன்றவில்லை. இடைவெளி இல்லாமல் இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தனர். நல்ல காலம் "சித்தி" என்று அக்காவின் மகள் கூப்பிட்டது இருவரையும் எல்லை தாண்டாமல், வண்டிக்கு திரும்ப வைத்தது. என்றாலும் அவன் எண்ணங்கள் ஏதேதோ மனதில் இன்னும் கற்பனை செய்துகொண்டே இருந்தது. 'பிரமன் அழகை எல்லாம் ஒன்று குழைத்து படைத்திட்ட அழகோவியமாக, அவள் அங்கத்தில் எது அழகு என்று ஆராய்ச்சி பண்ண முடியாத படி என்னை தவிக்க வைத்துவிட்டானே ' என்று பெருமூச்சு விட்டான். 'மான் விழி, மீன் விழி என்று பெண்களின் கண்களைச் சொல்வார்கள். இவள் கண்களோ பார்த்தோர் மனதை ஊடுருவிச் செல்லும் அம்பு விழியாய் இருக்கே. அழகான கண்கள் அதன் இமைகள் நேர்த்தியாக மை தீட்டி அழகு கொடுக்குதே' ஆரன், அனலியை திரும்பி பார்த்தான். முகத்தில் தவழும் தலை முடியால் அவள் முகம் மேகம் மூடிய நிலவு போல பிரகாசித்தது. கன்னங்களோ பளிங்குக்கல் போல பளபளத்தது. அளவாக வடிவமைத்த மூக்கோ கிளி கண்டால் கொத்தும் கோவைப்பழம் போல இருந்தது. காதில் இருந்த வளையம் கிளி ஊஞ்சலாட நினைத்திடுமோ என்று கொஞ்சம் பயந்தான். அவன் எண்ணம் முடிவு இல்லாமல் தொடர்ந்தது. அப்பொழுது அவளின் தேனில் ஊறிய பலாச்சுளை போன்ற உதடுகள் அதன் ஓரங்களில் சிறுநகை ஒன்றைத் தவழ விட்டது. அந்தப் புன்னகை அவன் மனதை கிறங்கடித்தது, ஆனால் அவன் அதை வெளியே காட்டவில்லை. யாழ்ப்பாணம் அடைந்ததும், நேராக வண்டி 'வடக்கு, கிழக்கு தனியார் சுற்றுலா லிமிடெட்' க்கு போனது. அங்கே அவர்களை வரவேற்ற அனலியின் அப்பா, ஆரனுக்கும் அனலிக்கும் வேன் டிரைவருக்கும் வடையுடன் கோப்பி கொடுத்தார். அக்காவின் மகள் துள்ளிக்கொண்டு வீட்டுக்குள் ஓடிவிட்டார். ஆரன் முழு சுற்றுலாவிற்க்கான மிகுதிப் பணத்தைக் கொடுத்தான். அதன் பின் அவர்கள் உரையாடும் பொழுது, ஒரு சந்தர்ப்பத்தில் ஆரன், அனலியைத் திருமணம் செய்ய விரும்புவதாக தன் எண்ணத்தை மெதுவாகக் கூறினான், உடனே கொஞ்சம் வெட்கத்துடன், பக்கத்தில் இருந்த அனலி, தன் அப்பாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, அவரின் காதல் தானும் விரும்புவதாகக் கூறினாள். அவர்களுக்குள் எந்த சூழலில்-எந்த காலகட்டத்தில் காதல் வந்தது, ஆக்கிரமித்தது என்று சொல்ல முடியவில்லை. ஓசை படாமல் வந்து உட்கார்ந்து கொண்டது. இரண்டு பேருக்குள்ளும் காதல் இருந்தது பல சந்தர்ப்பங்களில் உறுதியானது. ஆரனுக்கு இருந்த அதே உணர்வு அனலிக்கும் இருந்தது. அதனால்த்தான் அனலியும் உடனடயாக ஒத்துக்கொண்டாள். சுற்றுலா பயணிக்கவே காலம் பணித்தாலும் சற்றும் எதிர்பாராது நம்மை இணைத்ததோ? தேகம் சிறகடிக்க வானம் குடைபிடிக்க தொலைந்தது எம் இருவரின் இடைவெளியோ ? மேனி எங்கும் சுவை தேடி அலையும் இளம்முயல் குட்டிகள் நம் இதழ்களோ? குரல் அலையையும் இதய வாசத்தையும் கடத்திவரும் காற்றின் காதலர்கள் நாமோ? விழிக்கும் மொழிக்கும் வல்லமை வந்ததோ பொங்கும் நட்பை காதலாய் மாற்றிட? வலிக்கும் மனதிற்கும் சக்தி பிறந்ததோ என்றும் நாம் ஒருவரையொருவர் நினைக்க? அதன் பின், அவர்கள் தங்கள் காதல் தொடங்கிய நல்லூர் கோவிலுக்கு மீண்டும் சென்றனர். பிரமாண்டமான திருவிழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன, தாளமாக மேளங்கள் முழங்கின, பக்தர்கள் முருகனுக்கு காணிக்கைகளை எடுத்துச் சென்றனர். காற்று, கொண்டாட்டத்தாலும் பக்தியாலும் மின்னியது. ஆரன் அனலியை நோக்கித் திரும்பினான். “நல்லூரிலிருந்து திருகோணமலை வரை, கண்டி முதல் நுவரெலியா வரை, மட்டக்களப்பு முதல் கதிர்காமம் வரை, முல்லைத்தீவு முதல் மன்னார் வரை ... இந்தப் பயணம், ஒரு பயணத்தை விட மேலானது. இது இதயத்தின் யாத்திரையாக இருந்தது. ஒவ்வொரு இடமும் எங்களுக்கு பக்தி, சகிப்புத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் அழகைக் கற்றுக் கொடுத்துள்ளது.” என்றான். அனலி சிரித்தாள், அவள் கண்கள் பிரகாசித்தன. “இவை அனைத்திலும், நாங்கள் ஒன்றாக நடந்தோம். வரலாற்றின் வழியாக, நிலப்பரப்புகளின் வழியாக, கடந்த காலத்தின் கிசுகிசுக்கள் வழியாக. எங்கள் காதல் இந்தக் கதைகளைப் போன்றது - இலங்கையின் தமிழ் மண்ணில் பின்னப்பட்டது.” என்றாள். மாலை சூரியன் யாழ்ப்பாணத்தின் மீது மறையும் போது, நகரத்தை அம்பர் (amber) ஒளியில் வரைந்தபோது, ஆரனும் அனலியும் நல்லூர் கோயில் படிகளில் கைகள் பின்னிப் பிணைந்து, இதயங்கள் ஒன்றாகின. அந்த அமைதியான, புனிதமான தருணத்தில், அவர்கள் புரிந்துகொண்டார்கள்: அன்பும் வரலாறும் பிரிக்க முடியாதவை. பக்தி, நினைவாற்றல் மற்றும் பகிரப்பட்ட பயணம் மூலம், அவர்களின் கதை - யாழ்ப்பாணத்தின் நீடித்த உணர்வைப் போல - என்றென்றும் நிலைத்திருக்கும் என்று. அனலி அவன் மீது சாய்ந்தாள், அவளுடைய கண்கள் மின்னின. "அன்பு அனைத்தையும் சுமந்து செல்கிறது. அது கதைகள், பக்தி மற்றும் அடுத்த தலைமுறைக்கான நம்பிக்கையை சுமந்து செல்கிறது. அதனால்தான் நமது கதையும் முக்கியமானது - அது திரைச்சீலையின் ஒரு பகுதியாகும்." என்றாள். ஆரன் தனது கையை அவளின் கையுடன் இறுக்கிக் கொண்டான். "அப்படியானால், அனலி, நாம் எங்கு சென்றாலும், வரலாறு எந்த புயல்களைக் கொண்டு வந்தாலும், நமது அடையாளத்தைக் கொண்டாடுவோம், நமது கலாச்சாரத்தைப் பாதுகாப்போம், நமது அன்பைப் போற்றுவோம் என்று சபதம் செய்வோம்." என்றான். "நாங்கள் சென்ற ஒவ்வொரு நகரமும் எங்களுக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொடுத்தது: கதிர்காமத்தில் பக்தி, யாழ்ப்பாணத்தில் மீள்தன்மை, மன்னாரில் சகிப்புத்தன்மை, மலைப்பகுதிகளில் நெருக்கம், இப்போது, இங்கே - நாம் உள்ளூருக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் இடையிலான பாலம், கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான பாலம்." என்றாள் சிரித்தபடி. “வரலாறு புத்தகங்களில் மட்டுமல்ல,” ஆரன் மெதுவாகச் சொன்னான். “அது கோயில்களிலும், ஆறுகளிலும், கோட்டைச் சுவர்களிலும்... இதயங்களிலும் உள்ளது. நாங்கள் செய்தது எளிமையானது, ஆனால் ஆழமானது - நாங்கள் நினைவில் வைத்திருந்தோம், நேசித்தோம், அதை முன்னோக்கி எடுத்துச் சென்றோம்.” என்றான். அவன் தனது நாட்குறிப்பில்: "இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். பண்டைய பயணிகள், கல்வெட்டுகள் மற்றும் தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போன்ற நாளேடுகள் இந்த நிலங்களை ஆண்ட தமிழ் மற்றும் நாக மன்னர்களின் இருப்பை பதிவு செய்கின்றன. இவ்வாறு ஆழமான வரலாறு இருந்தபோதிலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கை (1948 முதல்) பாகுபாடு, இனக் கலவரங்கள் 1956, 1958, 1977, 1983, … ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 1987 க்கும் 2009 மே 18ம் தேதிக்கும் இடையில் குறைந்தது ஐம்பதாயிரம் அல்லது அதற்கும் மேற்பட்ட பொது தமிழ் மக்கள் உயிரிழந்தனர். பல இலட்ச மக்கள் குறிப்பாக 1983 க்கு பின் புலம்பெயர்ந்தார்கள். அவர்களின் பரம்பரையில் ஒருவனே நான்! [ஆரன்!] இன்று, பல தமிழர்கள் என் [ஆரனின்] தாய் தந்தை போல், கட்டாய இடம்பெயர்வு காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் அதே வேளையில், தாயகத்துடனான அவர்களின் தொடர்பு மங்கிவிடக்கூடாது. இந்த தொடர்பைப் பேணுவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு வழக்கமான வருகைகள் ஆகும். யூதர்கள் 2,000 ஆண்டுகள் எருசலேமுக்குச் சென்றனர். ஆர்மேனியர்கள் இன்னும் அர்மேனியாவிற்கு செல்கிறார்கள். ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள், கானா, செனெகல் சென்று “Door of No Return” இடத்தைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள். அப்படியே, புலம்பெயர் தமிழரும் தாயகத்தை விட்டு விலகக் கூடாது. நீங்கள் செல்லாவிட்டால் வரலாறு அழிக்கப்படும். ஆனால் நீங்கள் சென்றால் — வரலாறு உயிர்ப்படும். நம்மை யாரும் அழிக்க முடியாது என்பதற்கான சாட்சி அதுவே. நாம் செல்லாவிட்டால், நம்மை அழிக்க முயலும் மௌனம் மேலோங்கும். நாம் சென்றால், உலகம் அறியும் — வடகிழக்கு எப்போதும் தமிழர் தாயகம் என்று. ஆனால், நீங்கள் அங்கே உங்களுக்கு ஒரு துணை தேடவேண்டும் என்பது கட்டாயம் அல்ல, அது தனிப்பட்ட முடிவு, அதில் நானும் ஒருவனாகிவிட்டேன். அவ்வளவுதான்!" என்று எழுதினான். அனலி அதைப் பார்த்து, ஆரனை மனதார வாழ்த்தியதுடன் பெருமையும் அடைந்தாள்! ஆரன் அனலியின் இதயங்கள் பல நூற்றாண்டுகளின் தமிழ் வரலாற்றோடு ஒற்றுமையாக துடித்தன - ஒரு மக்களின் கதையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு காதல் கதையாக அது பின்னிப்பிணைந்து. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று துளி/DROP: 1963 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 08 https://www.facebook.com/groups/978753388866632/posts/33056093137372574/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 76 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 76 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 12: இது புத்தரின் நம்பிக்கையை பல நாடுகளுக்குப் பரப்புவது பற்றியது. தீபவம்சம் மற்றும் மகாவம்சம் இரண்டிலும் நாக மன்னர்கள் மற்றும் நாக இனம் பற்றிய பாரபட்சம் உள்ளது. இது இந்த அத்தியாயத்தில் பிரதிபலிக்கிறது. இந்த அத்தியாயம் இலங்கையில் உண்மையில் நடந்த எந்த வரலாற்று நிகழ்வுகளையும் பாதிக்காத ஒன்று ஆகும். இருப்பினும், பகவான் புத்தரின் பெயரில் வரலாற்றுத் திரிபு இங்கு நடந்துள்ளது. மொகாலிபுத்தர் (Moggaliputta), தேரர்களை அருகிலுள்ள நாடுகளுக்கு புத்தரின் நம்பிக்கையைப் பரப்ப அனுப்பினார். அசோகரின் அரசுக்கு, இலங்கை அருகிலுள்ள அண்டை நாடு அல்ல. மகாவம்சம் மற்றும் தீபவம்சத்தில் பட்டியலிடப்பட்டுள்ள, அனுப்பப்பட்ட நாடுகள் மற்றும் தேரர்களின் பெயர்கள் அசோக மன்னரின் பாறை அரசாணை 13 உடன் சரியாக உறுதிப்படுத்தப் படவில்லை. பாறை சாசனம் 13 இன் படி, அசோகர் கலிங்கப் போருக்கு வருத்தம் தெரிவித்ததுடன், தர்மத்தைப் பரப்புவதில் கவனம் செலுத்தினார் என்பதையும் ஒழுக்கம் மற்றும் நெறிமுறை விதிகளைப் பயன்படுத்தி நீதி மற்றும் நல்லாட்சி மூலம் தனது செல்வாக்கை விரிவுபடுத்தவும் மற்றும் இராஜதந்திர உறவுகளைக் ஏற்படுத்துவதையும் குறிப்பிடுகிறது. குறிப்பாக, அசோகர் அண்டை நாடுகளுக்கு தரும தூதுகளை [பௌத்தத்தில், தர்மம் (பாலி: தம்மம்) என்பது புத்தரின் போதனைகளைக் குறிக்கிறது / Dhamma missions] அனுப்பியதாக பதின்மூன்றாவது சாசனத்தில் கூறுகிறார். கிரேக்கம், கந்தாரா (இன்றைய ஆப்கானிஸ்தான்) மற்றும் தமிழ் நாடுகளான சோழ, பாண்டிய, கேரளம் மற்றும் சத்யபுத்ரா மற்றும் தாமிரபரணி வரையும் [Greek, Ghandara (present day Afghanistan), and various other places, including Tamil countries Cola, Pandya, Kerala, Satyaputra and as far as Tamaraparni] உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தூதுவர்கள் அனுப்பப்பட்டனர் என்று தர்மத்தின் வெற்றியைப் பற்றிப் பேசுகிறது. தாமரைபர்ணி என்பது இலங்கை அல்ல, தாமரைபர்ணி நதிக்கரையோரப் பகுதிகளைக் குறிக்கிறது. தாமரைபர்ணி நதி இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாண்டிய நாட்டில் உருவாகி, பாண்டியர்களின் கடற்கரையான மன்னார் கடலுக்கு ஓடுகிறது. அசோகர் தனது எந்த ஆணைகளிலும் இலங்கை அல்லது அதற்கு உரித்தான எந்தப் பெயரையும் குறிப்பிடவில்லை, ஆனால் மேற்கூறிய தமிழ் நாடுகளை அவர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அரசாணையில் உள்ள தாமரைபர்ணியை எதிர் கடற்கரையில் உள்ள ஒரு இடமாகக் கருத முடியாது. வி.ஏ. ஸ்மித், 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919,', என்ற குறிப்பில், இலங்கை என்பது தாமரைபர்ணி என்ற பெயரால் குறிக்கப்படவில்லை என்பதைக் தெளிவாகக் காட்டுகிறது. அசோகரின் ஆணை, சோழர்கள் மற்றும் பாண்டிய நாடுகளை தர்மத்தின் மூலம் அவர் கைப்பற்றிய நாடுகள் என்று தெளிவாகக் குறிக்கிறது, ஆனால் தீபவம்சம் மற்றும் மகாவம்சம் இரண்டும் இந்த நாடுகளைக் குறிப்பிடவில்லை. புத்த மதம் தமிழ் நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தது, மகிந்தன் அல்லது மகிந்தரால் காற்றில் பறந்து கொண்டு வந்தது அல்ல என்ற உண்மையை மறைக்க, இது வேண்டும் என்றே விடுபட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகச் சொல்லப்படும் பொய்யை விட, ஒருவரின் தொடர்ச்சியான, கட்டாயப் படுத்தப்பட்ட மற்றும் பெரும்பாலும் பகுத்தறிவற்ற நடத்தையின் விளைவாகக் கூறப்படும் பொய் இது என்று கருதுகிறேன். அது மட்டும் அல்ல, இந்தியாவில் மூன்றாம் பௌத்த சபை மற்றும் மொகாலிபுத்தர் தேரர் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. வி.ஏ. ஸ்மித் [V. A. Smith], மூன்றாம் சபையையும் வரலாற்றுக் குறிப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி, இலங்கையின் மதமாற்றத்தையும், சரியான வரலாறாக இல்லாமல், கட்டுக்கதைகளாகக் கருதுகிறார். ஏழாம் நூற்றாண்டின் சீன யாத்ரீகர் சுவான்சாங் (யுவான் சுவாங்) (ஆங்கிலம்: Xuanzang / Hsuan-tsang, sometimes transcribed Xuan Tsang), சோழ நாட்டில் தூபி [stupa] இருந்ததாகவும், திராவிட அல்லது பல்லவ இராச்சியத்தில் மற்றொரு தூபி இருந்ததாகவும் கூறுகிறார். இது அசோகரின் தம்பி மகேந்திரனால் [மகிந்தவினால் / Vitashoka or Vigatashoka] கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. முழு விவரங்களுக்கு 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' என்ற குறிப்பின் 49வது பக்கத்தைப் பார்க்கவும். இந்த தம்பி தான் தமிழ்நாட்டிலிருந்து புத்த மதத்தை இலங்கைக்கு எடுத்துச் சென்றவர். என்றாலும் இலங்கைத் துறவிகள் தமிழ்நாடு வழியாக பௌத்தத்தின் தொடர்பை அழிக்க விரும்பினர் போல் தெரிகிறது. இதனால், அசோகரின் மகன் மற்றும் மகள், மகிந்த மற்றும் சங்கமித்தா ஆகிய இரண்டு கதாப்பாத்திரங்களை உண்டாக்கினார் என வலுவாக நம்பலாம், ஏனென்றால், புத்தர் மற்றும் அசோகன் பிறந்த இந்தியாவில், இந்த இரு பிள்ளைகளையும், இந்தியாவின் வரலாற்றிலோ இலக்கியத்திலோ எங்குமே காணவே இல்லை. இதேபோல் தான், பேரரசர் அசோகா தனது ஒன்றுவிட்ட 99 சகோதரர்களைக் கொன்றார் என்ற கதையும் இருக்கிறது. 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' என்ற புத்தகத்தின் 47 முதல் 50 பக்கங்கள், இலங்கைத் தீவின் புத்த மத மாற்றத்தைப் பற்றி அலசுகிறது. Part: 76 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 12: This is about spreading Buddha’s faith to many countries. There are bias in both Dipavamsa and Mahavamsa about Naga kings and the Naga race. This is reflected in this chapter. This chapter has no bearing on any historical events that really took place in Lanka. However, historic distortion took place on the name of Lord Buddha. Moggaliputta sent Theras to propagate the faith to the adjacent countries. Lanka is not an adjacent, not a neighbouring, country to the Asoka’s kingdom. The names of countries and Theras sent to the countries as listed in the Mahavamsa and the Dipavamsa do not properly corroborate with the Rock Edict 13 of the King Asoka. Asoka sent missions, as per his Rock Edict 13, to Yona king Antiyoga, to four kings beyond the king Antiyoga, named Tulamaya, Antekina, Maka and Alikyashudala. Asoka speaks of conquest by Dhamma “likewise in the south among the Cholas, the Pandyas, and as far as Tamaraparni”. Tamaraparni refers to the regions along the Tamaraparni River, not Lanka. Tamaraparani River originates in the Pandya country, in the present day Thirunelvelly District, and runs to Mannar Sea, the sea coast of Pandyas. Asoka never mentioned the name Lanka in any of his edicts, but he clearly states the above mentioned Tamil countries. Tamaraparni in the edict can never be construed as a place on the opposite coast. V. A. Smith, Reference 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919,' was clearly of the view that Lanka is not meant by the name Tamaraparni. Asoka’s edict clearly identifies the Cholas and Pandya countries as the countries where his conquest by Dhamma took place, but both the Dipavamsa and the Mahavamsa do not mention these countries. This is a deliberate omission to hide fact that the Buddhism came to Lanka from Tamil countries and not by Mahinda by flying through air which is a pathological lie. There is no evidence for the Third Buddhist Council and the convenor Moggaliputta Thera in India. V. A. Smith considers the Third Council and the conversion of Ceylon as described in the chronicles as legends, and not as sober history. The seventh century Chinese pilgrim, Hiuen Tsang, says there was a stupa in the Chola country, and another in the Dravida or Pallava kingdom, believed to be built by Mahendra, the younger brother of Asoka. See page 49 of Reference 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' for full details. This younger brother, Mahendra is the one who took Buddhism to Lanka from Tamil Nadu. The monks wanted to obliterate the connection of the Buddhism through Tamil Nadu, and invented a son and a daughter of Asoka, Mahinda and Sanghamitta. Similarly they invented the fictitious story that the Emperor Asoka killed 99 of his half brothers. There is no independent record in India, the birth place of Buddhism, Buddha, and Asoka about Mahinda and Sanghamitta. The Pages 47 to 50 of Reference 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' are quoted below about the conversion of the island. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 77 தொடரும் / Will follow துளி/DROP: 1962 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 76 https://www.facebook.com/groups/978753388866632/posts/33048586891456532/?