Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகானா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by சகானா

  1. தமிழ்நாட்டு மாணவர்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமா Updated 2 minutes ago தமிழ்நாட்டு மாணவர்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக Montreal மாணவர்களால் நடத்தப்படும் 24 மணித்தியால உண்ணாவிரதப் போராட்ட நிகழ்விலிருந்து -முகநூல்- தமிழ் ஈழத்தை உருவாக்கிடு ! இலங்கை மீது போர் தோடு ! கோவையில் உண்ணா நோன்பு [படங்கள்] பிரிவு: தமிழ் நாடு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசின் இனவெறி கொலைகளுக்கு எதிராகவும் கோவை மாவட்ட ஆன்மீக சமய சமுதாய கலை இலக்கிய அமைப்புகள் ஒருங்கிணைத்து ஆதினங்கள் -சான்றோர்கள் முன்னிலையில் ஒரு நாள் அடையாள உண்ணா நோன்பு அறப்போரட்டதில் ஈடுபட்டுள்ளனர். நன்றி: http://dinaithal.com
  2. தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு , கடலூர் மாவட்டம் சார்பாக வருகின்ற 08.04.2013, திங்கள் கிழமை மாலை 5.00 அளவில் விருத்தாசலம் வானொலி திடலில் மாணவர்கள் பங்கேற்கும் ------ "மாபெரும் பொதுக்கூட்டம் " , -------- வரலாறு படிப்பதற்கு மட்டுமல்ல படைப்பதற்கும் தான் , நமது ஈழ உறவுகளை காப்பாற்ற அணி திரள்வீர்! தமிழ் எங்கள் குருதி, ஈழம் அது உறுதி . தொடர்பிற்கு மாறன் : 99522 24112 பிரவின் : 95000 78349
  3. ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு என்ற நிலையை உலகம் எடுக்கும் வரை , அதற்கான அழுத்தங்களை திட்டமிட்டு போராடும் பணியை, குணத்தை மானமுள்ள தமிழன் தன் வாழ்வில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டதை உலகிற்கு உறுதியாக தெரிவித்து வருகிறது தமிழக மாணவர்களின் இன மீட்சிக்கான போராட்டம் . அதை தொடர்ந்த உலகம் முழுவதும் நடக்கும் எழுச்சி போராட்டங்கள் , ஈழ நாட்டிற்கான முழு நம்பிக்கையை கொடுக்கிறது. தமிழனுக்கு என்று தனியே ஒரு நாடு இல்லை என்றால் அவனது மொழியை , அவனது மிச்ச சொச்ச கலாசாரத்தை அவனது பண்பாட்டை , அவனது அடையாளத்தை எக்காலத்திற்கும், பிற அரசாங்க நடைமுறைகளை கொண்ட அரசியளிர்க்குள் காக்க முடியாது. இங்கே தமிழன் என்று சொன்னது ஈழ தமிழனை மட்டும் அல்ல . ஒட்டு மொத்த உலக தமிழனையும்தான் ; உலகில் அப்படி ஒரு தனி நாடு உருவாக வாய்ப்பு உள்ள இடம் ஈழம் மட்டுமே . எனவே ஈழம் என்பது ஈழ தமிழனுக்கு மட்டும் அன்று அது ஒட்டு மொத்த தமிழனுக்கும் மொழி அடையாளமாக, கலாசார அடையாளமாக இருக்கும் . தமிழரின் தனி நாடு, தமிழ் மொழியை காப்பாற்றும் ; தமிழர் கலாசாரத்தை வாழ்வு முறைகளை உயிர்பித்து எப்போதும் நிற்கும். அதையே பிரதானமாக கொண்டு நிற்கும். தமிழ் இனம் , தமிழ் மொழி காக்க படவேண்டும் என்றால் வாய்ப்பு உள்ள தமிழ் ஈழம் நாடு தமிழருக்கு என்று நிச்சயம் வேண்டும். அதற்குண்டான பணிகளை நாம் நாளும் நம் சிந்தனையில் திட்டமிடுவோம் -முகநூல்-
  4. இலங்கை ஆட்டக்காரர்களை வெளியேற்றாவிட்டால் சன் குழுமம் அலுவலகம் முற்றுகை: மாணவர்கள் அறிவிப்பு! இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு பல கோரிக்கைகளை நடுவண் அரசுக்கும் சன் குழுமத்திற்கும் வைத்துள்ளது . முதல் கட்டமாக சன் தொ.கா. வின் உரிமையாளரின் அணியான ஐதராபாத் ஐ பி எல் அணியில் இருந்து இலங்கை ஆட்டக் காரர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் , வரும் வெள்ளிக் கிழமை இரவிற்குள் சன் குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், அப்படி இலங்கை விளையாட்டாளர்களை வெளியேற்றாத பட்சத்தில் மாணவர்கள் தமிழகமெங்கும் உள்ள சன் குழும அலுவலகங்களை முற்றுகையிடுவதாக தெரிவித்தனர் . மேலும் நடுவண் அரசுக்கு சில கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர் - தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை உடனான ராஜதந்திர உறவுகளை இந்திய இத்துடன் முறித்துக் கொள்ள வேண்டும் . - இந்தியாவிலும் தமிழகத்திலும் உள்ள இலங்கை தூதரகத்தை உடனே மூட வேண்டும் - இலங்கை மீது பொருளாதாரத் தடையை கொண்டு வர வேண்டும் . - தமிழக முதல்வர் கூறியது போல் இந்தியா , இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் . - ஐ.நா வின் மூலமாக இலங்கை மீது சர்வதேச இனப்படுகொலை விசாரணை மற்றும் பொது வாக்கெடுப்பிற்கு இந்தியா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் . - இந்திய அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கைக்கு கொடுக்கும் ராணுவ , கடற்படை பயிற்சிகள் யாவையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் . இலங்கை அரசுக்கு தொலை தொடர்பு ராடர் போன்ற சாதனங்களை கொடுத்து உதவுவதை நிறுத்த வேண்டும் . - பாகிஸ்தான் உடனாக விளையாட்டு உறவை முறித்து போல் இலங்கை உடனாட விளையாட்டு உறவையும் முறித்துக் கொண்டு , இந்தியாவில் எங்கும் இலங்கை ஆட்டக் கார்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது . இவ்வாறான கோரிக்கைகளை இன்று மாணவர்கள் இந்திய அரசுக்கு முன்வைத்தனர் ஒருங்கிணைப்பாளர்கள் கை கோர்க்கிறார்கள் ! ஐ.பி.எல்லில் இலங்கை வீரர்களை தமிழகத்தை விட்டு விரட்டிய மாணவ வீரர்கள் அவர்களை இந்தியாவை விட்டே விரட்ட களமிறங்கி விட்டாரகள்! பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு - சேப்பாக்கம் -முகநூல்-
  5. ------------------------------ இலங்கையில் நடந்த இனபடுகொலையை கண்டித்தும் மற்றும் தமிழகத்தில் மாணவர்கள் தன்னெழுச்சியாக செய்து வரும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், ஜப்பான் தமிழர்களின் சார்பாக இந்திய தூதரகம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணா நிலை போராட்டம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற மாபெரும் மனிதாபிமான குற்றங்களை கண்டித்து நமது வருத்தங்களை பதிவு செய்ய வேண்டும் என்று மனிதாபிமானம் உள்ள அனைத்து நல்ல உள்ளங்களை கேட்டுக்கொள்கின்றோம். -முகநூல்-
  6. திருச்சி சட்டகல்லூரி மாணவர்கள் தாக்கபட்டத்தை கண்டித்து சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் சென்னை சத்தியமூர்த்தி பகவன் எதிரில் உள்ள தமிழ் நாடு தேசிய காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
  7. வாழ்த்துகள்....................!!! மாணவர் போராட்டம் தொடரட்டும்............. தமிழ்நாட்டுத் தமிழர் ஒன்று திரளட்டும்................ தரணியெங்கும் தமிழீழ விடுதலைக் குரல் ஒலிக்கட்டும்............. பகைவர் புறமுதுகோட.............. நம் தமிழர் தாயகம் " தமிழீழம் மலரட்டும்.......................!!! -முகநூல்-
  8. தோழர்களே!!! சொன்னால் புரிந்து கொள்வதற்கு சூடு, சொரணை உள்ளவனா சிங்களவன்?!!! தமிழரின் உயிர் குடித்து, ரத்தவெறி பிடித்து, கொலைகாரக்கூத்தாடுகின்றான்!!! அவனிடம் போய் நீதியை எதிர்பார்க்கலாமா?!!! அறிவு, பண்பு உள்ளவனிடம் அஹிம்சையை பற்றி பேசலாம்!!! பினந்தின்னிக்கழுகுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமா?!!! பேசிப்பார்க்காமலா ஆயுதம் ஏந்தினார் எம் தலைவர்?!!! ஆயுதம் எடுத்த பின்னரும் அமைதி வேண்டி பேச்சுவார்த்தை நடத்தினாரே?!!! "காட்டுமிராண்டி" காடயனிடம் கருணையை எதிர்பார்க்கலாமா?!!! சிங்களவனைப்பற்றி என்ன சொல்வது, எங்களவனே எமக்கு துரோகம் செய்யும்போது?!!! தோழர்களே!!! உங்களை நம்பியே எமது ஈழத்தை விட்டுச்சென்றார் எம் தலைவர்!!! ஒவ்வொரு மாணவனும் அவரின் மறுபிறப்பு!!! ஒவ்வொரு குரலும் புலிகளின் போர்க்குரல்!!! ஒவ்வொரு கண்ணிலும் ஈழத்தின் தாகம்!!! ஒவ்வொரு இதயத்திலும் ஈழத்தின் வேர்கள்!!! கனவு கண்டேன் ஈழத்தின் விடுதலைக்காய்!!! கனவு மெய்ப்படவேண்டும்!!! தமிழரின் தாகம்!!! தமிழீழ தாயகம்!!! -முகநூல்- ------------------------------------------------------------------------------------------------------- சட்டசபையில் பொது வாக்கெடுப்பு தீர்மானம் மாணவர்களிற்கு கிடைத்த வெற்றி ; அவர்களின் போராட்ட அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி என்பதில் துளி அளவு கூட சந்தேகம் இல்லை ஆனால் மாணவர்கள் நாங்கள் , எங்களை பாராட்ட வேண்டும் என்று ஆசை கொள்ளவில்லை . எங்கள் அனைவரின் நோக்கம் தமிழர்கள் இனி மேலும் கண்ணீர் விட்டு அழாதபடிக்கு ஒரு நிம்மதியான, சுதந்திரமான, உரிமையான, அவர்களிர்க்குண்டான தேசம்; அது ஈழம் ; அதை பெரும் வரை எங்கள் அறவழி பணி தொடரும் . இப்போதைய தமிழக அரசின் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு பரிசீலித்து , தமிழக சட்ட மன்றத்தை மதித்து , இலங்கையுடனான தமது வெளியுறவு கொள்கையை மாற்ற வேண்டும் . அந்த மாற்றம் வேண்டும் அதுவே எங்களிற்கான வெற்றியாக இருக்கும். எங்களிற்கு தேவை வெற்று பாராட்டல்ல. -முகநூல்-
  9. போர் துவங்கி கடந்த ஐந்து வருடங்களாக எந்த அரசியல் கட்சியாலும் அவலங்களை தடுக்க முடியாத சூழல். நீதி பெற்று தரமுடியாத நிலை. இதை மாற்ற நினைத்து மாணவர்கள் தன்னெழுச்சியாக இந்த போராட்டத்தை துவக்கியுள்ளளோம். இங்கும் வந்து தங்களுடைய சுயைலாபத்திற்காக மாணவர்களை அரசியல் கட்சிகள் ரீதியாக பிரித்து மீண்டும் களத்தை பழைய நிலைக்கு கொண்டு சென்றுவிட வேண்டாம். தொலைவில் இருந்து மாணவர்கள் கவனித்தால்தான் எல்லா கட்சிகளின் கருத்துகளையும் உள்வாங்கி ஒரு முடிவுக்கு வர இயலும். -------------------------- மனிதநேயம் உள்ள தமிழர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் இணைத்து ஈழத்தில் பொது வாக்கெடுப்பு வேண்டி இந்தியாவை நிர்பந்திக்கும் வகையில் அமையும். அதற்கான ஆதரவை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கட்சிகளையும் அனைத்து மாநிலங்களில் உள்ள மாணவர்களையும் அனுகி நம் தரப்பு நியாயங்களை எடுத்துரைப்போம். ------------------------ பின்வரக்கூடிய நாட்களில் எங்களுடைய மாணவர்கள் போராட்டம் படிப்பிற்கும் பொது அமைதிக்கும் பங்கம் விலைவிக்காத வகையில் அதே சமயம் உறுதியான நம்பிக்கையுடன் அனைத்து மனிதநேயம் உள்ளவர்களையும் திரும்பிப்பார்க்கவைக்கும் வகையில் அறவழியில் தொடர்வோம். --------------------------- அரசியல் வாதிகளே ! மாணவர்கள் இணைந்து எல்லா பொதுப் பிரச்சனைகளுக்கும் பொது மேடை அமைத்து தருகிறோம். அதில் வந்து உங்களுடைய வாதங்களையும் எதிர் வாதங்களை முன்வையுங்கள். அதில் எங்களுக்கு எது சிறந்ததென்று படுகிறதோ அதை நாங்கள் பொதுமக்களிடம் கொண்டு சேர்கிறோம். மாணவர்களை மாணவர்களாகவே இயங்க விடுங்கள்.. -முகநூல்-
  10. தமிழக மாணவர் எழுச்சிக்குக் கவிஞர் சேரன் வாழ்த்து: தமிழக மாணவர் எழுச்சிக்குக் கவிஞர் சேரன் வாழ்த்து: அறிவின் சுடரும் உணர்வின் தோழமையும் எழுக!! https://www.facebook.com/photo.php?v=547897741899017&set=vb.156857431011847&type=2&theaterℑ=/preview.jpg" /> https://www.facebook.com/photo.php?v=547897741899017&set=vb.156857431011847&type=2&theaterℑ=/preview.jpg" /> Get Flash to see this player.
  11. ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடுவோம் மத்திய அரசுக்கு மாணவர் கூட்டமைப்பு. இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் பிரதிநிதிகள் வரும் 31ஆம் தேதிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும்தமிழீழ விடுதலைக்கான மாணவ கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. அப்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: 'எங்கள் கோரி்க்கைகள் எதுவுமே சாத்தியம் இல்லாதவை அல்ல. நிறைவேற்ற முடியாதவையும் அல்ல. இன அழிப்பு, போர்க் குற்றம், சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை ஆகிவற்றை கொண்டுவரும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டிருந்தால், கண்ணிமைக்கும் நேரத்தில் அதனால் இந்தத் தீர்மானங்களைக் கொண்டு வந்திருக்க முடியும். மாபெரும் எங்கள் போராட்டத்தை அற்பப் புழுவைப்போல மத்திய அரசு நினைத்துவிட்டது. முள்ளிவாய்க்காலுக்கு முன் பல வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றியதுபோல இப்போதும் ஏமாற்றிவிட்டது. தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. இந்திய அரசை ஒதுபோதும் மன்னிக்க முடியாது. எட்டு கோடி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மத்திய அரசுக்கு நாங்கள ஏன் மதிப்பளிக்க வேண்டும். உங்களுக்கு இனியும் நாங்கள ஒத்துழைக்கப்போவது இல்லை. இந்திய விடுதலைப் போரில் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக ஒத்துழைக்க முடியாது என்று காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தைப்போல, ஒரு தீவிர இயக்கம் தொடங்க வேண்டிய கட்டாயத்தை மத்திய அரசு ஏற்படுத்திவிட்டது. இனி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய எந்த வரியையும் செலுத்த வேண்டும். எந்தக் கட்டணத்தையும் செலுத்த வேண்டாம். செலுத்தவும் கூடாது என்பதை வலியுறுத்தி மக்களிடம் பிரசாரம் செய்ய இருக்கிறோம். ஊடகங்களும் எங்கள் கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். இந்தப் போராட்டம் தொடர் போராட்டமாக முன்னேறும். இதில் மாணவர்களின் ஒற்றுமைதான் மையம். ஈழத் தமிழ் மக்களுக்கு தாயக அதிகாரம் பெற்றுத் தரும் வரையில் மாணவர் போராட்டம் தொடரும். மத்திய அரசின் பிரதிநிதிகள் வரும் 31ஆம் தேதிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தவறினால் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்று கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் தெரிவித்தனர்.
  12. நேற்றைய மதுரை மாணவர் போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் நாகராஜ். பெரியார் பேருந்து நிலையத்திற்கு ஒரு சவாரிக்காக வந்து இருந்தவர், மாணவர் போராட்டத்தை கண்டவுடன் தன்னையும் அந்த போராட்ட்டத்தில் இணைத்து கொண்டார். ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக கோஷங்களை கடுமையாக எழுப்பி வந்தார். உணர்ச்சி மேலிட அவர் கூறியது "தம்பிகளா இத்தனை வருஷமா மனசுக்குள்ள வச்சிக்கிட்டு குமுறிகிட்டு இருந்தேன்பா..... நீங்கல்லாம் போராட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தாம்ப்பா நிம்மதியா இருக்கு." "என் மகன் காலேஜுல படிக்குறான்.... போடா போய் போராடு அப்படின்னு அனுப்பிட்டேன்.." "இனிமேல் மதுரைல போராட்டம் நடக்கும் போது போன் போடுங்க .. நேரம் கிடைக்கும் போது கலந்துக்குறேன்." "எப்பாடு பட்டாவது ஈழ மக்களுக்கு நல்லது ஏதாவது நடக்க வைக்கணும்யா" அவரை பார்க்கும் போது இப்படி எத்தனை பேர் உலகமெங்கும் மனம் குமுறி கலங்கி உள்ளனரோ என தோன்றியது. அந்த ஆட்டோ ஓட்டுனரின் மொபைல் எண் : 9894038560 அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள்.
  13. தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு - அறிவிப்பு ;- ================================== தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஓன்று திரட்டி , தமிழீழ பிரச்சினை உள்பட இனிவரும் அனைத்து வகையான சமுதாய பிரச்சினைகளுக்கும் தமிழக மாணவர்கள் தங்கள் கையில் எடுத்து போராடுவார்கள்.. போராடுவோம்... இதை கருத்தில் கொண்டு தான் - " தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு " என்ற மாபெரும் அமைப்பு இன்று உருவாக்க பட்டுள்ளது... கட்சி வேறுபாடு இல்லாமல் , சாதி மதம் அப்பாற்பட்டு - தமிழின உணர்வு மட்டுமே உள்ள அனைத்து மாணவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்... வருகிற மார்ச் 31 -க்குள் தமிழக மாணவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றா விடில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து தமிழ் மாணவர்களையும் ஓன்று திரட்டி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகை இடுவோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்... கட்சி வேறுபாடு இல்லாமல் , சாதி மதம் அப்பாற்பட்டு - தமிழின உணர்வு மட்டுமே உள்ள அனைத்து மாணவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்... தமது இரத்த சொந்தங்களுக்காக , அவர்களின் இனபடுகொலைக்கு நியாயம் கேட்பதற்காக அறவழியில் போராடிய தமிழக மாணவர்களை - "தமிழ் பொறுக்கிகள் " என்று கொச்சை படுத்திய சி . சுப்ரமணிய சுவாமியை மிக கடுமையாக , வன்மையாக கண்டிக்கிறோம்... அவர் மன்னிப்பு கேட்காவிடில் , அவர் தமிழகம் வரும்போது அவருக்கு எதிராக மிக பெரிய போராட்டம் மற்றும் கருப்பு கொடி ஆர்பாட்டம் நடத்த படும்.... ஆசிய விளையாட்டு போட்டியில் சிங்கள விளையாட்டு வீரர்கள் இடம்பெறுவதால் அந்த போட்டி தமிழகத்தில் நடை பெறாது என்று தமிழக அரசு அறிவித்தது, அதேபோல - சிங்கள விளையாட்டு வீரர்கள் வருகிற IPL -2013, T20 விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவில் எங்கு பங்கு கொண்டாலும் அவர்களுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்பாட்டங்களும் , கருப்பு கொடி போராட்டங்களும் கட்டாயம் நடைபெறும். ------------------------- "உங்கள் காலை பிடித்து கேட்டுகொள்கிறோம் , உங்கள் கைகளில் எங்கள் கண்ணீரை விட்டு அழுது மன்றாடுகிறோம்" -------- பொது நண்பர்களே நீங்கள் எந்த கட்சி விருப்பம் கொண்டும் இருந்து கொள்ளுங்கள் அல்லது எந்த இயக்கத்திலும் இருந்து கொள்ளுங்கள் . மாணவர்களின் ஈழ விடுதலை போராட்டத்திற்கு, அவர்களோடு உடன் வரும் பொழுது ஈழம் விரும்பும் நபராக மட்டுமே வாருங்கள் . கட்சி அடையாளங்களை அப்படியே உங்களிற்குள் வைத்து கொள்ளுங்கள். உங்கள் கட்சி விருப்பத்தை மாணவர்களிடம், புதியவர்களிடம் காட்டி அதன் செல்வாக்கை அரசியல் அறியா புதியவர்களிடம் காட்ட நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே . மாணவர் போராட்டம் மாணவர் போராட்டமாகவே இருக்கட்டும் . அது "அந்த கட்சி "மாணவர் போராட்டம் , "இந்த இயக்கம் " மாணவர் போராட்டம் என்று நமக்குள் நம்மை பிரித்து , அடையாள படுத்த நினைக்கும் யாரையும் முதலில் தூர விலக்கி வையுங்கள். போராட வேண்டிய காலமும் , சந்திக்க வேண்டிய களமும் அதிகம் உள்ளது . ஈழம் வெல்லும் , ஈழம் தமிழர்களின் பூமி அதை இப்போதைக்கு உலகத்தின் அனைத்து உதவியோடு ஆக்கிரமித்து இருக்கும் இலங்கை அந்த மண்ணை விட்டு வெளியேறி அங்கே தமிழர்கள் சுய நிர்ணய உரிமை பெறும் நாள் , நாளைக்கு மறுநாள் நடந்து விட கூடியது அல்ல. இங்கே நாம் அடிக்கும் ஒவ்வொரு அடியும் போராட்ட விடைகளும் , இந்தியாவை இலங்கையில் இருந்து பிரிக்கும் . இந்தியா பிரிந்தால் மொத்த உலகம் இலங்கையை விட்டு பிரியும். பிரிந்தால் பொது வாக்கெடுப்பு என்ற முழக்கத்தை நாம் அழுத்தலாம் . அழுத்த வேண்டும் . அப்போது ஈழம் வரும் . வந்தே தீரும் . எனவே பொதுவான நண்பர்களே எங்களிற்கு உதவுங்கள் ஆனால் உங்கள் கட்சி சாயத்தை எங்கள் மீது பூச நினைக்காதீர்கள் உங்கள் காலை பிடித்து கேட்டுகொள்கிறோம் , உங்கள் கைகளில் எங்கள் கண்ணீரை விட்டு அழுது மன்றாடுகிறோம் எங்களை பிரித்து அரசியல் கூட்டத்திற்குள் எங்களை அமிழ்த்து விடாதீர்கள் அண்ணன்களே ! நாம் அனைவரும் சேர்ந்து தமிழரின் மானத்தை காப்போம் . வீழ்ந்தான் செத்தான் என்ற நிலையில் உள்ள தமிழனின் வாழ்வை , உரிமையை போராடி பெற்றான் என்று மாற்றுவோம் . வாருங்கள் உன்னத நோக்கத்தோடு கை கொடுங்கள். ஆங்காங்கே உள்ள மாணவர்கள் வீறு கொண்டு எழுங்கள் . உங்களிற்கு அடையாளம் முக்கியம் அல்ல போராட்டமே முக்கியம் . ----------------------------- தொடர்ச்சியாக தமிழின விரோத போக்கை கடைபிடிக்கும்,மாணவர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்களின் போராட்டங்களை கொச்சை படுத்தும் காங்கிரஸின் கைக்கூலி மற்றும் சிங்களனின் கைக்கூலி ராமேஸ்வரத்தை திரு.தேவதாஸ் இன்று நடைபெற்ற மீனவர் கூட்டத்தில் மாணவர் போராட்டத்தை மிக கேவலமாக விமர்சித்துள்ளார்,மேலும் இந்த போராட்டங்கள் மற்றும் புத்த பிட்சுக்கள் தாக்கப்பட்ட காரணத்தினால் தான் இன்னும் மீனவர்களை விடுவிக்கவில்லை என்றும் மீனவர்களை திசை திருப்புகிறார்,எனவே அனைவரும் ஜனநாயக ரீதியில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து இது போன்ற சமூக மற்றும் இனத்ரோகிகளை செயலிழக்க செய்வோம்..அவருடைய தொடர்பு எண்-9443131101 -------------------------------- -முகநூல்-
  14. தமிழ் இளைய சமுதாயமே , 1947இல் சுதந்திரம் கண்ட இந்தியா மீண்டும் கடந்த ஒன்பது வருடங்களாக ஒரு வெள்ளைக்காரியிடம் அடிமைபட்டு கிடக்கிறது ; அவனும் இவனும் மாறி மாறி ஆண்டு நம்மை மைவாங்கி விரல்களாக பயன்படுத்தியது போதும் ; இனி தமிழரை வாக்கு வங்கியாக ஏலம் போடும் அரசியல்வாதிகள் நமக்கு தேவையில்லை ; இனி தமிழர் எதிர்காலம் நம் மாணவர் கையில் ; எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் நாற்பது தொகுதிகளிலும் மாணவர் கூட்டமைப்பு சார்பாக வேட்பாளரை நிறுத்துங்கள் ; கண்டிப்பாக அரசியல் வியாபாரிகளை தவிர எல்லோரும் உங்களை ஆதரிப்பார்; நாற்பது தொகுதிகளிலும் உங்களுக்கு ஜெயம் நிச்சயம் ; முதலில் தமிழகம் முழுவதும் மாணவர்களை ஒருங்கிணையுங்கள்; உங்களுக்குளே சட்ட திட்டங்களை வகுங்கள்; அதற்க்கு அரசியல் சார்பற்ற தமிழ் சமூக ஆர்வலர்களை உங்களோடு சேர்த்துகொள்ளுங்கள் ; ஒரு சுயகட்டுபாடான அமைப்பை உருவாக்குங்கள் ; இந்த ஒற்றுமையை பேணி காத்து வெற்றி கனியை பறியுங்கள்; உலக தமிழர்கள் எல்லோரும் உங்கள் பின்னே ; தமிழன் மத்திய அரசிடம் இதுவரை குனிந்தது போதும் - இனி தமிழனை நிமிர வைப்பது உங்கள் கையில் - நாற்பதை வென்றெடுத்து விட்டால் இனி நடப்பதை தமிழன் முடிவு செய்வான் ..! தயவு செய்து இதை எல்லோர்க்கும் பகிர்ந்து கொள்ளவும் ; குறிப்பாக இளைய சமுதாயத்திற்கு ..! -முகநூல்-
  15. போராட்டம் , மாணவர் போராட்டம்தான் அது அந்த வடிவம் பெற்றது இந்த வடிவம் பெற்றது என்று எதுவும் இல்லை . எதுவும் மாறவில்லை . ஒரு குழுவாக கூடும் மாணவர்கள் அவர்களிற்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்வார்கள் . அதை செய்து கொண்டு உள்ளார்கள் . மானவர்களிற்கு தெரியும் அவர்கள் பகுதியில் உள்ள உள்ளூர் நிலைகளிற்கு ஏற்ப எப்படி போராடுவது என்று. மத்தியமாக கூடி ஒரு மிகபெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் வெகு விரைவில் வரும் இன்னும் சில நாட்களில் மாணவர்கள் அனைவர்களிடமும் இது பற்றி பேசுவோம் . எந்த மாணவர் குழுவும் தொய்வடைந்து விடவில்லை . இப்போதுதான் Warm-up ஆகி உள்ளார்கள் . அந்த முதல் நிலை போராட்டத்தை மட்டுமே தமிழகம் இப்போது பார்த்து உள்ளது . மாணவர்களின் முழு சக்தி இன்னமும் பிரயோகபடுத்தபடவில்லை . அதற்கான கால சூழல் மிக அருகில் வருகிறது. ------------------------------------------------------------------------------- நாளை காலை 11.00 மணிக்கு தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் அடுத்தக்கட்ட போராட்ட வடிவம்,ஐ நா மனித உரிமையில் அமெரிக்க்க தீர்மான வாக்கெடுப்புக்கு பிறகு மாணவர்களின்போராட்ட முடிவு பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.இடம் -பத்திரிக்கையாளர்கள் மன்றம், சேப்பாக்கம்,சென்னை. ----------------------------------------------------------- இருபது ஆண்டுகளிற்கு பின்னர் அரசு அனுமதி பெற்று கூடும் ஈழ தமிழர்கள் , வள்ளுவர் கோட்டத்தில் (சென்னை ) உண்ணா விரதம் : வள்ளுவர் கோட்டத்தில் , காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை தமிழகத்தில் உள்ள ஈழ தமிழர்கள் ஐந்தாயிரம் பேர் மாபெரும் உண்ணாவிரத நிகழ்வினை ஒருங்கிணைத்து உள்ளார்கள் . சென்னையில் உள்ள நண்பர்கள் வள்ளுவர் கோட்டம் வாருங்கள் வந்து உண்ணா விரத நிலைக்கு ஆதரவு கொடுங்கள் . Date : 22-03-13 morning 9 am to 5 pm , total expecting tamils around 5000 members+ -முகநூல்-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.