Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகானா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by சகானா

  1. சூனியக்காரி சோனியா ,,ரத்தகாட்டேறி மன்மோஹன்சிங் , இனபடுகொலை கொடுங்கோலன் ராஜபக்சே மூவருக்கும் மதுரையில் தூக்கிலிட்ட மாணவர்கள்
  2. நாங்கள் எதற்கும் தயார், நாங்கள். வீர தமிழச்சிகள் @ Coimbatore -முகநூல் - சென்னை (நுங்கம்பாக்கம்) - காவல்துறை தாக்கியதில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்­ அவசர சிகிச்சைப் பிரிவில் மாணவர் கார்த்திக் கவலைக்கிடம் - அவசர தொடர்புக்கு ஒருங்கிணைப்பாளர் சீ .தினேஷ் 9791162911. -------------------------------- நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கர தடி அடி ... ஒரு மாணவர் மிகவும் கவலைக்கிடம் .... சென்னையில் மத்திய அமைச்சர் ப .சிதம்பரம் வீடு முற்றுகை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீ.தினேஷ் தலைமையில் 1000க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் முற்றுகையில் பங்கேற்றனர் .மாணவர்களை கைது செய்யும் போது காவல்துறைக்கும்­ மாணவர்களுக்கும்­ இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.இதி­ல் சில மாணவர்கள் மயக்கமடைந்து ராயபேட்டை அரசு மருத்துவமனையில்­ அனுமதிக்கப்பட்ட­ுள்ளனர் இந்த முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சாஸ்திரி பவனையும் மாணவர்கள் முற்றுகையிட்டனர­் .இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது­ .தொடரும் மாணவர்களின் முற்றுகை போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர் .காவல்துறை தாக்கியதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர­்களில் ஒருவரான கார்த்தி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்­ அவசர சிகி.
  3. பழனி Engineering Students / போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அவர்களை வழிநடத்த, போராட்டத்தை ஒழுங்குபடுத்த சரியான தலைமை இல்லாமல் தவிக்கின்றனர் உடனடியாக அவர்களைத் தொடர்புகொண்டு, ஆவன செய்யுங்கள் நண்பர்களே/ மாணவர்களே Tel: 8940254065 thamil chelvan ----------------------- புதுக்கோட்டை அருகே உள்ள கைக்குறிச்சியில் இருக்கும் ஸ்ரீ பாரதி மகளிர் கல்லூரியில் மாணவிகளை போராட்டம் நடத்த அனுமதி மறுக்க படுகிறது மேலும் மாணவிகளை மிரட்டி கல்லூரி நடைபெற்று கொண்டிருக்கிறது. உங்கள் கண்டனத்தை பதிவு செய்யவும். தொலைபேசி எண்-04322-20678/22010 ---------------------------- மாணவர்கள் போராட்டக் குழு சார்பாக நாளை காலை 11 மணி அளவில் பத்தாயிரம் மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே நடைபெரும், சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் தவறாமல் பங்கெற்கவும் -------------------------------- இலண்டன் அமெரிக்கத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்....முழக்கம் விண்ணை முட்டுகிறது. 1.WE WANT TAMIL EELAM 2.OUR LEADER PRABAKARAN 3.WE WANT INTERNATONAL INVESTIGATION 4.WE WANT OUR LAND 5.WE SUPPORT TAMILNADU FRIENDS 6.UN STOP SUPPORTING GENOCIDE 7.US STOP SUPPORTING GENOSIDE. --------------------- - முகநூல் -
  4. சாந்தோம் கதோலிக் திருச்சபை சார்பாக முன்னூறுக்கும் மேற்ப்பட்டோர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர் ------------------------------------ கோவையில் இன்று Dr.NGP கலை அறிவியல் "தனியார்" கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாசலில் ஆர்ப்பாட்டம். பின்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் வழிகாட்டுதல் படி GPT கல்லூரி, இந்துஸ்தான் கல்லூரி போன்ற கல்லூரி மாணவர்கள் ஒரே நாளில் இணைந்து விமான நிலையத்தை முற்றுகையிட்டு 150 பேர் கைது. --------------------------- இன்று திருநெல்வேலியில் நடைபெற்றுவரும் தொடர் முழக்க போராட்டத்தின்போது இவர்கள் ஒலி வாக்கியை(mike) கையில் பிடித்து முழக்கம் மிட்டனர் முடிவில் ஈழம் மலரும் ஈழம் மலரும் என்று முழக்கத்தை முடித்தனர் ஆம் அதில் ஐயமில்லை நாளைய தலைமுறையும் இணைந்த பெருமிதத்தில் கூறுகிறோம் ------------------------- நாளை காலை எட்டு மணியளவில் பள்ளிக்கரணையில் உள்ள ஆசான் கலைக்கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குகிறார்கள், #tamilnaduhungerstrike அணைத்து நண்பர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. தொடர்புக்கு தோழர் வெங்கட்: 9840718716 ------------------ -முகநூல் -
  5. இனி ஒரு தமிழன் பலியானால் மாணவன் நாங்கள் புலியாவோம் ! எனும் முழக்கத்தோடு தற்போது 20-03-13 நேரம் இரவு 8 -மணி அளவில் பழைய மகாபலிபுரம் ரோட்டில் முகமது சதக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலால் சென்னை பாண்டி சாலை சம்பித்தது
  6. ஈழத்தமிழர் திரைப்படச் சங்கம் தமிழ் நாட்டில் மாணவர்களால் முன்நெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒளிப்பதிவு ஒன்றை ஈழத்தமிழர் திரைப்படச் சங்கம் ( lift) செய்ய உள்ளது. முடியுமான வரை அனைத்து கலைஞர்களையும் ஒன்று கூட்டி எமது நன்றிகளையும் ஆதரவையும் தெரிவிப்பதே இவ் ஒளிபதிவின் நோக்கமாகும் அந்த வகையில் ஏனைய கலைஞர்களுக்கும் இவ் விடயத்தை தெரியப்படுத்தி பங்கு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் . ஒளிப்பதிவு நடை பெறும் நாள் 20/03/03 புதன் மாலை 15:00 மணி தொடக்கம் 17:00 வரை மேலதிக விபரங்கட்கு : 06 51 87 31 46 சதாபிரணவன் 06 16 85 45 98 சுலச்சன் நன்றி ஈழத்தமிழர் திரைப்படச் சங்கம் (lift)
  7. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் -சீ.தினேஷ் மற்றும் கோ.திவ்யா ஆகியோரின் கூட்டறிக்கை:- இன்று (20/03/2013) தமிழகம் முழுவதும் "தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு"-னால் முன்னெடுக்கப்பட்ட "ஒரு கோடி மாணவர்கள் தொடர் முழக்கப்போராட்டம்" சென்னை மெரினா காந்தி சிலை தொடங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரெழுச்சியோடு நடைபெற்றது. இதில் தமிழக அனைத்துக் கல்லூரி மாணவர்கள் உட்பட பொதுமக்கள்,வணிகர்கள் ,வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பேராதரவு தந்தது, மாணவர் கூட்டமைப்புக்கு பெரும் உத்வேகத்தை தந்துள்ளது.மேலும் அனைத்து அரசியல் இயக்க தலைவர்களும் ,தமிழ்தேசிய அமைப்புகளும்,முற்போக்கு இயக்கங்களும் மற்றும் திரைத்துறையினரும் எங்கள் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவினை தந்துள்ளனர்.அவர்களுக்கும் எங்களது நன்றியினை கூட்டமைப்பு சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அடுத்தக்கட்ட போராட்டங்களை தமிழகத்திலுள்ள அனைத்துக்கல்லூரி மாணவ பிரதிநிதிகளையும் கலந்தாலோசித்து விரைவில் இக்கூட்டமைப்பு அறிவிக்க இருக்கிறது.இப்போராட்டம் வெற்றிபெற உதவிய தங்கள் ஊடகத்திற்கு/பத்திரிகைக்கு அனைத்துக்கல்லூரி மாணவர்களின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். நன்றி. இப்படிக்கு, ஒருங்கிணைப்பாளர்கள், சீ.தினேஷ் (9791162911) ) -முகநூல்-
  8. நண்பர்களே! நமது இளைய சமுதாயம் ஒரு புதிய விடியலை தேடி போராடி கொண்டிருக்கும் போது, நாமும் நம் பங்கிற்கு ஏன் போராட கூடாது ?. போராட்டம் என்றால் இது மற்றுமொரு வகை , அமைதியான முறையில் நமது ஆதங்கத்தை ஐ நா வுக்கு தெரிவிப்போம்.ஐ நா மட்டுமல்ல ஏனைய ஆட்சியாளர்களுக்கும் தெரிவிப்போம். இதோ இங்கே குறிபிட்டுள்ள இணைய இணைப்பினை சொடுக்கி புதிய பக்கத்தில் தங்களது முழு தகவல்கள் முதல் பெயர், தந்தை பெயர் , மின் அஞ்சல் முகவரி மற்றும் விண்ணப்பத்தின் நோக்கம் " ஏன் தமிழ் ஈழம் மலர வேண்டும் ? " உங்களது கருத்தை பதிவு செய்யுங்கள். சிறு துளி பேரு வெள்ளம் என்றும் உங்கள் ஆதரவுடன் - தமிழர் வரலாறு http://www.change.org/en-IN/petitions/urge-united-nation-to-conduct-referendum-for-tamil-eelam Urge United Nation to Conduct Referendum for Tamil Eelam -முகநூல்-
  9. நாளை விருத்தாசலத்தில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு , கடலூர் மாவட்டம் சார்பாக கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் இருந்து கருப்பு துணியால் கண்ணை கட்டிக்கொண்டு 1000 திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பேரணியாக புறப்பட்டு விருத்தாசலம் நகரத்தின் முக்கிய இடங்களுக்கு சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர் , இதில் அந்த பகுதியில் உள்ள இணையதள நண்பர்கள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கலந்துகொள்ள வேண்டுகிறோம் தொடர்பிற்கு :- செல்வமணி : 8015107884 நித்தியானந்தம் : 96006 51091 சார்லஸ் : 9698969277
  10. ராஜபக்ஷேவுக்கு தூக்கு கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள், நாகர்கோயில் முதன்மை நீதிமன்ற வாயிலில், ராஜபக்ஷே உருவபொம்மையை தூக்கில் தொங்கவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  11. மாணவர் போராட்டத்தால் மதுரை மாநகரம் ஸ்தம்பித்தது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக அனைத்து கல்லூரி மாணவர்களின் தொடர்முழக்க போராட்டம் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பெரியார் பேருந்து நிலையம் நோக்கி பெரும் பேரணி நடைபெற்று வருகிறது. போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் போராட்டம் நடை பெற்று வருகிறது. சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்களும் ஆர்வமாக பேரணியில் கலந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது
  12. தமிழருக்காக ஒன்றிணைந்து போராடி வரும் அனைவருக்கும் யாழ்ப்பாண மாணவர் ஒன்றியத்தின் பணிவான நன்றிகள் Salute tamil students..... coming soon Tamil elam !
  13. மாணவ புரட்சி தீயீன் தொடர் ஜீவாலைகளாக இன்று திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சியில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது. இது நாளை வரை மூலனூரில் தொடரும் அதன்பின் இதே கட்டமைப்போடு தாராபுரம் நகரில் கால வரையின்றி தொடரும் என அறிவிப்பு செய்துள்ளனர் போராட்ட ஒருங்கினைப்பாளர்கள். இந்த இட மாற்றத்திற்க்கான காரணம் காவல் துறையின் கடுமையே ஆகும் என்றும் அறிவித்துள்ளனர். இப்போராட்ட குழுவினர் தொடர்புக்கு : ரூபன் -8870737070 கிங்ஸ்லி -9952650743 மேலும் இன்று பழநி பழனியாண்டவர் கலை கல்லூரி மாணவர்களும் தொடர் கால நிர்ணயமற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். 3-நாட்களாக கல்லூரி வளாகத்துக்குள் நடைபெற்ற இவர்களின் போராட்டம் இன்று கல்லூரி வாயிலின் முன்பு நடைபெற்றது. நேற்று இரவு 12 மணி வரை காவல் துறையினரிடம் வாக்கு வாதம் நடைபெற்றுள்ளது இதனடுத்தே போராட்டம் கல்லூரிக்கு வெளியே எடுத்து வரப்பட்டுள்ளது. இப்போராட்ட குழுவினர் தொடர்புக்கு : சரவணன் : 9597996059 மணி ; 7845583908
  14. "தமிழீழ விடுதலைக்கான போராட்ட முழக்கங்கள்" மத்திய அரசே! மத்திய அரசே! மௌனம் காட்டும் மத்திய அரசே! மனிதநேயம் இல்லாமல் மரமாய் போன மத்திய அரசே! இரக்கம் இல்லா அரக்கனுக்கு இணங்கி போகும் மத்திய அரசே! ஆட்டம் போடும் சிங்களவன் அடியாள் நீ தான் மத்திய அரசே! ஆயிரமாயிரம் தமிழர்கள் அழிய ஆயுதம் தந்த மத்திய அரசே! இலங்கைகாரன் சொல் படி நடக்கும் எடுபிடி ஆள் நீ மத்திய அரசே! கொத்துக் கொத்தாய் குண்டுகள் போட்டு செத்து விழுந்த காட்சிகள் கண்டும், வாயை திறந்து தட்டிக்கேட்க வக்கில்லாத மத்திய அரசே! பாலகன் முகத்தை பார்த்துப் பார்த்துப் பாழும் நெஞ்சும் துடிக்கிறதே, பாவிகளே உங்களுக்கு பாசம் கொஞ்சமும் கிடையாதா? உலகமே பதைபதைத்து ஓலமிட்டு கதறும் போது, வெளி உறவு வேசம் போட்டு வேடிக்கைகள் செய்கின்றாய்! மரணத்தின் ஓலங்கள் மாநிலம் எங்கும் ஒலிக்கும் போது, மௌனம் காத்து நிற்பது தான் மனிதநேய கொள்கையா ? புத்தன் வேசம் போட்டுக் கொண்டு பூதங்கள் அங்கு ஆட்டம் போட, பயிற்சிக் களம் அமைத்து தந்து பாவம் செய்த மத்திய அரசே! நடுகடலில் மீனவரை நாயாய் வந்து சுடுகின்றான்! தமிழன் என்றால் இன்னும் கொஞ்சம் தைரியமாக கொல்கின்றான்! அழுது நாங்கள் சொன்ன போதும் அமைதி காத்த மத்திய அரசே! நாங்களும் இந்தியர் என்ற நம்பிக்கை உனக்கு இல்லையா ? "ஆம்" என்றால் அவனை எதிர்க்கும் ஆண்மை கூட இல்லையா? இறையாண்மை என்று சொல்லி இலங்கைக்காரன் வால் பிடிக்கும், ஈனச் செயலை மத்திய அரசே! இனியாவது நிறுத்திக்கொள்! மண்டி போட்டு மண்டி போட்டு, மௌனம் காத்து வாழ்ந்தது போதும்! இனப் படுகொலை செய்தவனுக்கு இறுதிச் சடங்கை செய்திடுவோம்! ஈழத்தமிழர் வாழ்வுக்காக இன்னுயிரும் தந்திடுவோம், தனி ஈழம் அமைந்திடவே தமிழர்கள் ஒன்றாய் குரல் கொடுப்போம! உலகத் தமிழர் எல்லோரும் ஒரு தாய் வாயிற்று பிள்ளைகளே! எல்லைகள் தாண்டி படந்திருக்கும் எங்கள் உயிர் பாசக் கொடி, எழுச்சி தமிழர்கள் எல்லோருக்கும் என்றும் ஒரே தொப்புள் கொடி! பதுங்குதல் என்பது கூட பாயும் புலியின் செயல் தானே? ஒற்றை கொக்காய் காத்து நின்று சிங்கள மீன்களை கொத்திடுவோம்! ஓங்கி உயர உலகம் வியக்க உயர்ந்த நம் கொடி ஏற்றிடுவோம்! உலகில் உள்ள தமிழருக்கெல்லாம் ஒரே ஒரு உறைவிடமாய், புயல்கள் ஒன்றாய் மையம் கொண்ட புலிகளுக்கெல்லாம் புகலிடமாய், நாளை மலரும் தமிழீழம் நமக்கான தனி ஈழம்.. ஓய்வு இல்லா சூரியனாய் உறக்கம் கொள்ளா கடல் அலையாய், உறைந்து நிற்கும் அனல் நெருப்பாய், ஒரு நாள் வெடிப்போம் எரிமலையாய்!! வாழ்வில் சாவும் ஒருமுறை தான் வந்தால் மடிவோம் வீரர்களாய், வரலாறு நம்மை வாசிக்கும் வரும் தலைமுறை நேசிக்கும்! -செங்கதிர்
  15. கடந்த எட்டு நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு, தமிழ் உணர்வாளர்கள் உண்ணாவிரத பந்தலிலேயே அவசர கால மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். ஆனால் இன்று அங்கு வந்த கல்லூரி நிர்வாகமும்,காவல் துறையும் மருத்துவ குழு கல்லூரிக்குள் வரக்கூடாது என்று வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. மாணவர்களின் உடல் நிலை பற்றியும்,அவர்களுக்கு கட்டாயம் அவசர சிகிச்சை தேவைப்படும் என்று செவிலியர்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் காவல்துறையானது மருத்துவ உபகரணங்களை எடுத்து வெளியே வீசி சென்றது.
  16. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மதுரையில் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தாலும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் அனைத்து பொறியியல் கல்லூரிகள் சார்பாக அண்ணா நகர் சுகுணா ஸ்டோர் அருகில் நாளை 20-03-2013 காலை 9 மணிக்கு போராட்டம். விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் : Ram siddarth -9944547414 Dhinesh Pandian -9994693356 அனைத்து மாணவர்களும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்... களமாடி வெற்றி காண களத்தில் உங்களோடு நாங்கள் எப்போதும் இருக்கிறோம்... வெற்றி பயணமிது... ================ வெற்றியை நோக்கிய பயணமிது... வீரு கொண்டு புறப்படுவோம்... நம்பிக்கை நிறைந்த நெஞ்சங்களும்.. வீரம் நிறைந்த தோள்களும்... களமாடுகின்றன இங்கே... வெற்றிய நோக்கிய பயணமிது... வென்று.... காப்பது... நம் கடமை... காத்திருந்தது.... கவலை கொண்டிருந்தது... போதுமென்று... பொங்கியெழுந்ததும் சரியே... வெற்றியை நோக்கிய நம் பயணம் தொடரட்டும்.. விரும்பியவர்கள் நம் கால் தடங்களை தொடரட்டும்.. அனைத்து சகோதர- சகோதரிகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்.... வாழ்த்துக்களும்...
  17. பெதவையில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் தமிழீழம் வேண்டி உண்ணாவிரதம் !!! வாழ்துச்சொல்ல sivaprakash:9942659498 boopathi:9578467659 balaji:9788814842 உரிமைகளை ஒரு போதும் அறியாமையால் இழந்து நிற்க வேண்டாம். கடமைகளை ஒரு போதும் தட்டி கழிக்க வேண்டாம். இது உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய தருணம்... கடமைகளை தவறாமல் ஆற்றி முடிக்க வேண்டிய தருணம். நாளை ஒன்று கூடுவோம் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.