புதிய பதிவுகள்2

போரின் நடுவே இரானில் அமெரிக்க விமானப்படை வீரரை தேடும் பணி எவ்வளவு கடினமாக இருக்கும்?

1 day 3 hours ago
போரின் நடுவே இரானில் அமெரிக்க விமானப்படை வீரரை தேடும் பணி எவ்வளவு கடினமாக இருக்கும்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,எதிரிப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து வீழ்த்தப்பட்ட விமானங்களின் வீரர்களை மீட்பதற்காக, அமெரிக்க விமானப்படையின் பாராரெஸ்க்யூ பிரிவுகள் சிறப்பு பயிற்சி பெறுகின்றன. கட்டுரை தகவல் பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இரான் வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க எஃப்-15 (F-15) போர் விமானத்தின் விமானி மீட்கப்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உறுதிப்படுத்தப்பட்டால், பல தசாப்தங்களாகத் தொடரும் அமெரிக்காவின் போர்க்கால தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இதுவே மிகவும் சமீபத்தியதாக இருக்கும். பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் (CBS) நியூஸ் தகவல்படி, விமானத்தில் இருந்த இரண்டாவது நபரைத் தேடும் பணி இரானின் உட்பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போர்க்கால தேடுதல் மற்றும் மீட்பு (Combat Search and Rescue - CSAR) பணிகள், அமெரிக்க மற்றும் நட்பு நாட்டு ராணுவங்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ளும் பணிகளிலேயே மிகவும் சிக்கலான மற்றும் நேரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பணிகளாகக் கருதப்படுகின்றன. அமெரிக்காவில், விமானப்படையின் எலிட் (Elite) பிரிவுகள் சிஎஸ்ஏஆர் (CSAR) நடவடிக்கைகளுக்காக பிரத்யேகமாகப் பயிற்சி பெற்றுள்ளன. விமானங்கள் இழக்கப்படக்கூடிய வாய்ப்புள்ள போர் பகுதிகளுக்கு அருகில் அவர்கள் முன்கூட்டியே பணியமர்த்தப்படுகிறார்கள். போர்க்கால தேடுதல் மற்றும் மீட்பு என்றால் என்ன? சுருக்கமாகச் சொன்னால், சிஎஸ்ஏஆர் பணிகள் என்பது சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களின் விமானிகள் மற்றும் தனித்துவிடப்பட்ட துருப்புகள் உள்ளிட்ட உதவி தேவைப்படும் நபர்களைக் கண்டறிவதற்கும், அவர்களுக்கு உதவுவதற்கும் மற்றும் அவர்களை மீட்பதற்கும் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகள் ஆகும். மனிதநேயப் பணிகளின் போதோ அல்லது பேரிடர்களுக்குப் பின்னரோ நடைபெறும் வழக்கமான தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு மாறாக - சிஎஸ்ஏஆர் பணிகள் ஆபத்தான அல்லது மோதல்கள் நிறைந்த சூழலில் நிகழ்கின்றன. சில சந்தர்ப்பங்களில், அதாவது வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) இரானில் நடந்ததாகக் கூறப்படும் மீட்பு முயற்சியைப் போல - இந்த நடவடிக்கைகள் எதிரி நாட்டின் எல்லைக்குள் உள்ள தொலைதூர பகுதிகளில் கூட நிகழலாம். சிஎஸ்ஏஆர் பணிகள் பெரும்பாலும் ஹெலிகாப்டர்கள் மூலம் நடத்தப்படுகின்றன, அவற்றுக்கு ஆதரவாக எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் அந்தப் பகுதியில் தாக்குதல்களை நடத்தவும் ரோந்துப் பணியில் ஈடுபடவும் மற்ற ராணுவ விமானங்கள் தயார் நிலையில் இருக்கும். இரானில் நடந்ததாகக் கூறப்படும் மீட்பு நடவடிக்கை போன்ற ஒன்றில், பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களில் அந்தப் பகுதியில் தேடும் பணியில் குறைந்தது 24 'பாராரெஸ்க்யூ ஜம்பர்ஸ்' (Pararescue Jumpers - வான்வழி மீட்பு வீரர்கள்) ஈடுபடுவார்கள் என்று பாராரெஸ்க்யூ ஸ்குவாட்ரனின் முன்னாள் தளபதி ஒருவர் சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தார். தேவைப்பட்டால் அவர்கள் விமானங்களில் இருந்து குதிக்கத் தயாராக இருப்பார்கள் என்றும், தரையிறங்கியதும் காணாமல் போன ராணுவ வீரரைத் தொடர்பு கொள்வதே அவர்களின் முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் கூறினார். அவர்களைக் கண்டுபிடித்தவுடன், பாராரெஸ்க்யூ ஜம்பர்ஸ் தேவைப்பட்டால் மருத்துவ உதவி வழங்குவார்கள், எதிரியிடமிருந்து தப்பித்து, தாங்கள் மீட்கப்படக்கூடிய ஒரு இடத்திற்குச் செல்வார்கள் என்று சிபிஎஸ் நியூஸ் கூறுகிறது. "இது மிகவும் திகிலூட்டக்கூடிய மற்றும் அபாயகரமான ஒரு பணி என்று சொல்வது கூட அதை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கும்," என்று அந்த முன்னாள் தளபதி சிபிஎஸ் நியூஸிடம் கூறினார். "உலகம் முழுவதும் இதைச் செய்வதற்காக தான் அவர்கள் பயிற்சி பெறுகிறார்கள். அவர்கள் விமானப்படையின் 'சுவிஸ் ஆர்மி நைஃப்ஸ்' (Swiss Army knives - பன்முகத் திறன் கொண்டவர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள்." என்கிறார் அவர். வெள்ளிக்கிழமை இரானில் இருந்து வெளிவந்த சரிபார்க்கப்பட்ட வீடியோ ஒன்றில், இரானின் குசெஸ்தான் மாகாணத்திற்கு மேலே அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு எரிபொருள் நிரப்பும் விமானம் இயங்குவதைக் காண முடிந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க ராணுவ வீரர்களைக் கண்டறிந்து மீட்பதற்கான முதன்மைப் பொறுப்பு அமெரிக்க விமானப்படையிடமே உள்ளது. (விளக்கப் படம்) சிஎஸ்ஏஆர் குழுக்கள் யாரை மீட்க முயல்கின்றனரோ, அதே அமெரிக்க வீரர்களைக் கண்டறிய எதிரிப் படைகளும் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்க வாய்ப்பிருக்கும் என்பதால், இந்தப் பணிகள் கடுமையான நேரக் கட்டுப்பாடுகள் கொண்டவை. முன்னாள் அமெரிக்க கடற்படை சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் நிபுணர் ஜொனாதன் ஹாக்கெட், பிபிசியின் 'வேர்ல்ட் டுநைட்' (World Tonight) நிகழ்ச்சியில் பேசுகையில், ஒரு மீட்புக் குழுவின் முன்னுரிமை 'உயிர் இருப்பதற்கான அறிகுறிகளைத் தேடுவதாக' இருக்கும் என்று கூறினார். "தேடப்படும் அந்த நபர் கடைசியாக இருந்ததாகத் தெரிந்த இடத்திலிருந்து, அவர்கள் பின்னோக்கிச் சென்று தேடுவார்கள்; ஒரு கடினமான நிலப்பரப்பில் வெவ்வேறு சூழ்நிலைகளின் கீழ் அந்த நபர் நகரக்கூடிய வேகத்தின் அடிப்படையில் அவர்கள் தேடுதல் வேட்டையை விரிவுபடுத்துவார்கள்," என்று ஹாக்கெட் கூறினார். "இந்த வகையான மீட்புப் பணி வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றாமல், சிறப்பு உதவி தேவைப்படும் ஒரு நடவடிக்கையாக இருக்கும்," என்று ஹாக்கெட் கூறினார். "இதில் அந்தப் பகுதியில் உள்ள உள்ளூர் குழுக்களுடன் முன்னதாகவே தொடர்பு கொள்ளப்பட்டிருக்கலாம், இது ஏதேனும் மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் அவசரகாலத் திட்டங்களைச் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது." படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... சிஎஸ்ஏஆர் நடவடிக்கைகளின் வரலாறு வான்வழிப் போர்க்கால மீட்புப் நடவடிக்கைகளுக்கென நீண்ட வரலாறு உள்ளது. முதலாம் உலகப் போரின்போது, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களின் சக வீரர்களை மீட்பதற்காக பிரான்சில் விமானிகள் தன்னிச்சையாக விமானங்களைத் தரையிறக்கிய காலத்திலிருந்து இது தொடங்குகிறது. அமெரிக்க ராணுவத்தின் பாராரெஸ்க்யூ பிரிவுகளின் வரலாறு 1943-ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. அப்போது, இரண்டு போர்கால மருத்துவர்கள் காயமடைந்த வீரர்களுக்கு உதவ அப்போதைய பர்மாவுக்குள் (தற்போது மியான்மர்) பாராசூட் மூலம் குதித்தனர். உலகின் முதல் ஹெலிகாப்டர் மீட்பு ஒரு வருடம் கழித்து நடந்தது, அப்போது ஒரு அமெரிக்க லெப்டினன்ட் ஜப்பானியப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து நான்கு வீரர்களை மீட்டார் என்று ஸ்மித்சோனியனின் ஏர் & ஸ்பேஸ் இதழ் கூறுகிறது. இந்தச் சம்பவம் போரில் முதன்முதலாக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதையும் குறித்தது. மோதல்கள் முடிந்த உடனேயே அமெரிக்காவில் முறையான தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவுகள் முதன்முதலில் நிறுவப்பட்டன. ஆனால் நவீன சிஎஸ்ஏஆர் வியட்நாம் போரின் போதுதான் தொடங்கியது. பேட் 21 (Bat 21) என்று அழைக்கப்படும் ஒரு நடவடிக்கையில், வட வியட்நாமியப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குள் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு விமானத்தின் விமானியை மீட்க முயன்றபோது பல விமானங்கள் மற்றும் பல அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். அந்தப் போரின் காரணமாக, சிஎஸ்ஏஆர் நடவடிக்கைகள் பெருமளவில் விரிவுப்படுத்தப்பட்டன, அவை மேலும் பெரிய அளவிலும் சிக்கலானதாகவும் மாற்றப்பட்டன. அந்த அனுபவம் ராணுவத்தின் யுக்திகளையும் நடைமுறைகளையும் மேம்படுத்த உதவியது, அவையே பிற்காலத்தில் நவீன மீட்பு நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக அமைந்தன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தென்கிழக்கு ஆசியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான மீட்புப் பணிகள், நவீன போர்க்காலத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வடிவமைக்க உதவின. (1975-இல் கம்போடியாவில் ஹெலிகாப்டரை நோக்கி ஓடும் அமெரிக்க பாராரெஸ்க்யூ குழுவினர்) அமெரிக்க விமானப்படையின் பாராரெஸ்க்யூ குழுக்கள் ஒவ்வொரு அமெரிக்க ராணுவப் பிரிவும் தங்களுக்கு என வரையறுக்கப்பட்ட சிஎஸ்ஏஆர் திறன்களைக் கொண்டிருந்தாலும், ராணுவ வீரர்களைக் கண்டறிந்து மீட்பதற்கான முதன்மைப் பொறுப்பு அமெரிக்க விமானப்படையிடமே உள்ளது. முக்கியமாக இந்தப் பணி ராணுவத்தின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் ஒரு பகுதியான 'பாராரெஸ்க்யூ ஜம்பர்ஸ்' என்று அழைக்கப்படுபவர்களால் நடத்தப்படுகிறது. பாராரெஸ்க்யூவின் அதிகாரப்பூர்வ முழக்கம் 'மற்றவர்கள் வாழ்வதற்காகவே நாம் இவற்றைச் செய்கிறோம்' (These Things We Do, That Others May Live) என்பதாகும்; அவர்களின் பணி, அமெரிக்கப் படை வீரர்களுக்கு அவர்கள் கைவிடப்பட மாட்டார்கள் என்று வழங்கப்பட்ட பரந்துபட்ட வாக்குறுதியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இவர்கள், போர் வீரர்களாகவும் மருத்துவ உதவியாளர்களாகவும் உயர்தர பயிற்சி பெற்றவர்கள், மேலும் அமெரிக்க ராணுவத்திலேயே மிகவும் கடினமானதாகக் கருதப்படும் தேர்வு மற்றும் பயிற்சிப் பாதைகளில் ஒன்றைக் இவர்கள் கடந்து வருகிறார்கள். ஆரம்பம் முதல் முடிவு வரை சுமார் இரண்டு ஆண்டுகள் எடுக்கும் இந்தத் தேர்வு மற்றும் பயிற்சி செயல்பாட்டில், பாராசூட் மற்றும் டைவிங் பயிற்சி, அத்துடன் நீருக்கடியில் அழித்தல் (underwater demolition) தொடர்பான அடிப்படை பயிற்சி, கடினமான சூழல்களில் உயிர் பிழைத்தல், எதிர்ப்பு மற்றும் தப்பித்தல் பயிற்சி மற்றும் முழுமையான சிவில் மருத்துவ உதவியாளர் படிப்பு ஆகியவை அடங்கும். போர்க்கள மருத்துவம், சிக்கலான மீட்பு நடவடிக்கைகள் மற்றும் ஆயுதங்கள் குறித்த சிறப்புக் கல்வி மற்றும் பயிற்சிகளையும் அவர்கள் பெறுகிறார்கள். களத்தில், இந்த அணிகள் சிறப்புப் போர்கால மீட்பு அதிகாரிகளால் வழிநடத்தப்படுகின்றன; மீட்புப் பணிகளைத் திட்டமிடுவது, ஒருங்கிணைப்பது மற்றும் செயல்படுத்துவது இவர்களின் பொறுப்பாகும். Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form சமீபத்திய அமெரிக்க மீட்பு நடவடிக்கைகள் இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் முழுவதும் பாராரெஸ்க்யூ குழுக்கள் விரிவாகப் பயன்படுத்தப்பட்டன. காயமடைந்த அல்லது வெளியேற்றப்பட வேண்டிய அமெரிக்க மற்றும் நட்பு நாட்டுத் துருப்புகளை மீட்பதற்காக ஆயிரக்கணக்கான நடவடிக்கைகளை இவை மேற்கொண்டன. 2005-ஆம் ஆண்டில், ஒரு அமெரிக்க நேவி சீல் வீரரை மீட்பதில் விமானப்படையின் பாராரெஸ்க்யூ குழுக்கள் ஈடுபட்டன; தனது குழு திடீரென தாக்கப்பட்டு, குழுவின் பிற மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்ட பிறகு ஆப்கானிய கிராமம் ஒன்றில் அந்த வீரர் தஞ்சம் புகுந்திருந்தார். அவரை மீட்ட இந்தச் சம்பவம் பின்னர் 'லோன் சர்வைவர்' (Lone Survivor) என்ற ஹாலிவுட் திரைப்படமாக எடுக்கப்பட்டது. சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானங்களின் விமானிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் சமீபத்திய தசாப்தங்களில் அரிதாகவே நிகழ்ந்துள்ளன. 1999-ஆம் ஆண்டில், செர்பியாவின் வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-117 (F-117) ஸ்டெல்த் போர் விமானத்தின் விமானி பாராரெஸ்க்யூ வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார். 1995-ஆம் ஆண்டில் போஸ்னியாவில் நடந்த ஒரு புகழ்பெற்ற சம்பவத்தில், அமெரிக்க விமானி ஸ்காட் ஓ'கிராடி, தனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகும் ஆறு நாட்கள் பிடிபடாமல் தப்பித்தார். பின்னர் விமானப்படை மற்றும் கடற்படைப் படையின் கூட்டு சிஎஸ்ஏஆர் நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czxrp13pkk6o

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

1 day 3 hours ago
பிரேமலதா ஒப்பந்தம் கைஎழுத்தான கையோடு புதுக்காருடன் போஸ் கொடுத்தது எதைக்காட்டுகிறது. 12 வீதத்துக்குமேல் நான் தயார் உங்கள் கணிப்பையும் சொல்லிவிடுங்கள்.நாதக எவ்வளவு ,தவெக எவ்வளவு?

அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது

1 day 3 hours ago
இதை நான் எழுத நினைத்தேன்… வெறும் வாயை மெல்லும் அங்கிள்களுக்கு அவல் கிடைத்தது போல் ஆகிவிட கூடாது என தவிர்த்துவிட்டேன். நீங்கள் எழுதலாம்…குரு…கு…குறட்டை விட்டால் குற்றமில்லை😂

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

1 day 3 hours ago
பிரேமலதா திமுக கூட்டணிக்கு வாக்கு கொண்டு வருவார் எனவே அவருக்கு பெரிய பெட்டி. சீமான் திமுக எதிர்வாக்குகளை பிரிப்பார் எனவே அவருக்கு சிறிய பெட்டி. பிரேமலதா பெட்டி வாங்குவதால் சீமான் பெட்டி வாங்குவதை யாரும் கண்டுகொள்ள கூடாது என்கிறீர்களா? நீங்கள் பிரேமலதா பெட்டி வாங்கியதை பக்கதில் இருந்து பார்தீர்களா? அல்லது இது சீமானின் களவை மறைக்க மட்டும் நீங்கள் பாவிக்கும் பிரத்யேக முட்டா?😂 நாதக 15% எடுக்கும் என்கிறார்கள் பலர். வாத்தியார் அண்ணை பெட் கட்டியுள்ளார். உங்களிடம் பலமுறை கேட்டு விட்டேன். 12% என பெட் கட்டுவீர்களா?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

1 day 4 hours ago
கருத்துத்திணிப்புகள் இப்பொழுதும் நாதகவை மற்றவர்களுக்குள் அடக்குகிறார்கள். அவர்களின் கருத்துத்திணிப்புகள் படி நாதக 4.5 வீதத்தை தாண்டாதாம். இன்னும் ஒரு மாதத்தில் முடிவுகள் வரும் அப்பொழுது பார்ப்போம்.விஜையின் வருகை திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பதால் திமுகவுக்கு சாதகமான நிலை போன்று இருக்கிறது. ஆனால் கடைசி நேர வாக்காளர்கள் திமுக அகற்ற வேண்டும் என்றால் அதிமுகவையை தமது தெரிவாக எடுத்துக்கொள்வார்கள். விஜை இந்தத் தேர்தலுடன் நடிக்கப் போய்விடுவார். நாதக தனது 8 வீத வாக்கு வங்கியைத் தக்கவைத்தால் அதற்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும். பக்கத்தில் நின்று பெட்டியை வாங்கிக் கொடுத்தவர்கள் எழுதுகிறார்கள். இவர்களுக்கும் ஒன்றிரண்டு பெட்டி கிடைத்திருக்காதா?பெட்டியைுயும்வாங்கி தம்பிக்கு ராஜியசபா பதவியையும் வாங்கிலாண்ட்றோவர் காரினையும் வாங்கி முன்னால் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து அம்மா மகனுக்கு சீற் கொடுத்து விட்டு தொண்டர்களுக்கு அல்வா கொடுத்த கட்சிகளை எல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லை.

அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது

1 day 4 hours ago
இதை முன்பு அருமையாக 1-2 தரம் பாவித்ததாக தகவல் இருக்கிறது. இரானின் சொந்த தயாரிப்பா அல்லது ரசிய / சீன உதவியா? சீனா, ருசியா முதலில் இரானுக்கு இழப்பு என்றாலும் (எவ்வளவு )நின்று பிடிக்கும், அதாவது எவ்வளவு தூரம் us / மேட்ற்கு / இஸ்ரேல் ஐ இரானால் சிக்கவைக்க முடியும் என்பதை பொறுத்தும் / அறிந்தும் உதவிகள்

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 day 4 hours ago
ஒரு கோவில் திருவிழாவின் போது 25 குடும்பங்களு வீடு கட்டி குடுத்துள்ளார் என்று வேறு ஒரு பதிவில் பார்த்தேன்.உபயகாரர்கள் போய் சாதரண ஒரு மாம்பழம்தை 2 லட்சம் 3 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கும் காலத்தில் இவரது செயல் மிகவும் பாராட்டத்தக்கது.உங்கள் பணியும் தொடரட்டும்.நான் சும்மா வேலை தடங்கலின்றி நடக்கட்டும் என்பதற்காக ஏதாவது சொல்வேன்.கண்டு கொள்ள வேணாமே.🖐

குட்டிக் கதைகள்.

1 day 4 hours ago
Ssproedtonc989 m9v0iLg6 921r05ii7cf9cgm5f 9g3à geh:5t0laa602 · *அருமையான பதில்!* ஒரு வகுப்பறையில், ஆசிரியர் குழந்தைகளிடம், "உலகிலேயே 'காதலின் சிகரம்' என்று அழைக்கப்படும் இடம் எது?" என்று கேட்டார். 🥰" வகுப்பு முழுவதுமே ஒரே குரலில், "தாஜ் மஹால்!" என்று முழங்கியது. ஆனால், ஒரே ஒரு மாணவன் மட்டும் *ராமர் சேது* (Ram Setu) என்று பதிலளித்தான். ஆசிரியர் அவனை எழுந்து நிற்குமாறு கூறினார். "நீ என்ன சொல்ல வருகிறாய்...?" 👇" அந்தச் சிறுவன் எழுந்து நின்று பின்வருமாறு கூறினான்: 👉" "ராமர் சேதுவானது, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் தன் மனைவியின் சடலத்தைப் புதைப்பதற்காக அல்ல; மாறாக, தன் மனைவியை மீட்டு வருவதற்காகவே ஸ்ரீராமரால் கட்டப்பட்டது!!! 👉"ஸ்ரீராமர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு மனைவிக்கு மட்டுமே விசுவாசமாக இருந்து, பெண்களின் கண்ணியத்தைப் போற்றிக் காத்தார்; ஆனால், ஷாஜகானுக்கோ பல மனைவியரும், துணைவியரும், அடிமைப் பெண்களும் இருந்தனர். 👉" ராமர் சேதுவானது, ஸ்ரீராமரின் படையில் இருந்த வீரர்களால் கட்டப்பட்டது; ஆனால் தாஜ் மஹாலோ, ஒரு பெரும் பஞ்ச காலத்தில் முகலாயர்களால் அடிமைகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களால் கட்டப்பட்டது. 👉" மேலும், அந்தச் சேதுப்பாலத்தைக் கட்டியவர்களுக்கு ஸ்ரீராமர் முழுமையான மரியாதையை அளித்தார். 👉"'இனி உலகில் இது போன்றதொரு அதிசயம் வேறெங்கும் நிகழ்ந்துவிடக் கூடாது' என்பதற்காக, ஸ்ரீராமர் அந்தத் தொழிலாளர்களின் கைகளைத் துண்டிக்கவில்லை." 👌" ஆசிரியரும் மற்ற மாணவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இந்திய வரலாறு ஒரு புதிய கண்ணோட்டத்தில் 'மீண்டும் எழுதப்பட' வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய வரலாற்றை 👉" மீண்டும் எழுதுவதற்குத் துணைபுரியும் வகையில், தயவுசெய்து இதை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.! [[ பகிர்வு பதிவு ]] Voir la traduction......!

அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது

1 day 4 hours ago
தேடிய உலங்கு வானூர்தி வீழ்த்தப்படும் காட்சி. பார்வைக்கு நம்பமாக இருக்கிறது. உறுதிப்படுத்தப்படவிவில்லை.

ஆடல் - கிரிசாந்

1 day 4 hours ago
காமத்தின் அத்தனை விருப்பங்களையும் வார்த்தைகளில் உதிர்த்து விட்டு நுரை முட்டைகளைத் தாவித் தாவி பிடித்து மகிழும் சிறுவர்கள் போல் திரும்புகிறார்கள் ..........! 🙂 சுவையான விவாதங்கள் ...... நன்றி கிருபன் .......!

அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது

1 day 5 hours ago
ஈரான் இன்று அடித்த ஏவுகணையும் சென்ற வாரம் இஸ்ரேலுக்கு அடித்த Khorramshahr-4 (குஹ்யபேர்) உலகில் இதுவரையில் பாவனையில் இல்லாதா தொழில்நுட்பம் சீனா ஈரானுக்கு இதை கொடுத்து இருக்க வேண்டும் புதிய passive - Radar system மும் பாவிக்க தொடக்கி இருக்கிறார்கள் இதும் ரசியா அல்லது சீனா கொடுத்து இருக்கலாம் இன்று அடித்த ஏவுகணை ரேடார்களின் உதவி இன்றி தானியங்கியாக இயங்க்கி இலக்கை அழிக்க கூடியது

'அவரு போயி 2 வருசம் ஆச்சு சார்!' உள்துறை செயலாளருக்கு பதில் மணிப்பூர் கவர்னருக்கு கடிதம் எழுதிய தவெக

1 day 5 hours ago
https://tamil.oneindia.com/news/puducherry/vijay-wrongly-mention-bjp-candidate-name-instedad-of-tvk-candidate-in-puducherry-787081.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cardsதிடீரென பாஜகவுக்கு ஓட்டு கேட்ட விஜய்.. ஷாக்கான தவெக வேட்பாளர்.. பாவம்யா அவரே ‘கன்ஃபியூஸ்' ஆகிட்டாரு! By Nantha Kumar R Published: Saturday, April 4, 2026, 15:09 [IST] Subscribe to Oneindia Tamil புதுச்சேரி: சட்டசபை தேர்தலையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை முதல் புதுச்சேரியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது விஜய் தனது தவெக வேட்பாளருக்கு பதில் அவரை எதிர்த்து களமிறங்கி உள்ள பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த சம்பவம் நடந்தது. புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் வரும் 9 ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கிவிட்டதால் அனைத்து கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தை போலவே புதுச்சேரியில் தனித்து களமிறங்கி உள்ளது. Also Read "இனி நீங்க முதல்வரா? உங்க ஜோடி நடிகை முதல்வரா? கேள்விக்கு விஜய் கேரக்டரில் நடித்த நட்டி ஓபன்" இதையடுத்து விஜய் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று காலை முதல் புதுச்சேரியில் திறந்த வாகனத்தில் நின்று விஜய் தனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். மணவெளி வேட்பாளருக்கு ஆதரவாக.. புதுச்சேரியின் மணவெளி சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் ராமு போட்டியிடுகிறார். தவளக்குப்பம் பகுதியில் இன்று விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திரண்டு நின்ற தொண்டர்கள் மத்தியில் பிரசார வாகனத்தின் மேல் நின்று விஜய் பேசினார். விஜய் அருகே மணவெளி சட்டசபை தொகுதியின் தவெக வேட்பாளர் ராமு நின்றிருந்தார். பெயரை மாற்றி சொன்ன விஜய் இந்த சமயத்தில் விஜய், ''மணவெளி தொகுதியில் செல்வத்துக்கு ஆதரவு கொடுங்க'' என்று கூறினார். இதனால் தவெக வேட்பாளர் ராமு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது பெயர் செல்வம் இல்லை. ராமு என்று கூறினார். இதையடுத்து சுதாரித்த விஜய், ''ராமுவிற்கு ஆதரவு கொடுங்கள்'' என்று கூறினார். Recommended For You Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/vijay-wrongly-mention-bjp-candidate-name-instedad-of-tvk-candidate-in-puducherry-787081.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

1 day 6 hours ago
அண்ணன் ஆட்சிக்கு வந்தால் முன்னைய ஆட்சியில் வாங்கிய கடன்களை திருப்பிக் செலுத்தமாடாராம். செலுத்த வேண்டிய எல்லா கடன்களும் தள்ளுபடி செய்யப்படுமாம். 😂

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

1 day 7 hours ago
அண்ணன் திரள் நிதியில், பெட்டி வாங்கி ஊதி கொழுக்க, இவர்கள்தான் முதலீடுகள். இதில் பலர் கடன் வாங்கி தேர்தலுக்கு செலவு செய்து, கடனாளியாகி குடும்பத்தை கஸ்டத்தில் தள்ளுவார்கள். முந்தைய பல வேட்பாளருக்கு இப்படி நடந்தது என யூடியூப்பில் பலர் கதறுகிறார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து எடுக்கும் 4-8% வாக்கை அண்ணன் ஏலம் விட்டு, பெட்டி வாங்கி விடுவார். அதில் கொஞ்சம் பாக்கியராச்னுக்கு போகும். இடும்பாவனம் போன்றோருக்கு சோறு போடப்படும். மிகுதி எல்லாம் அண்ணன் பிள்ளைகளுக்கு இங்கிலீஷ் தனியார் பள்ளி பீஸ் கட்டவும், 3 இலட்சம் மாதவாடகை கொடுக்கவும், இரெண்டு கிலோ தங்கம் வாங்கவும், 50 ஏக்கர் நிலம் வாங்கவும் பயன்படும்.

இரசித்த.... புகைப்படங்கள்.

1 day 7 hours ago
இரண்டு வீடுகளுக்கு உள்ள வேலியின் கீழ்... குனிந்து நுழைந்து அடுத்த வீட்டிற்கு செல்ல, முன்னைய யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இந்தப் பொட்டு அமைத்து இருப்பார்கள். எங்கள் வீட்டிலும் இப்படி ஒன்று இருந்தது. இப்போ... மதில்கள் எல்லாம் வந்து, அயல் வீடடையும் அந்நியமாக்கி விட்டது. ###################### ################# போர்க் காலத்தில் நாம் அவசரத்திற்கு ஓட... கை கொடுத்த பொட்டு, கடப்பு... இன்றும் சில இடங்களில் உள்ளது. வேலியின் கீழ்ப் பகுதியை வெட்டி அதற்குள்ளால் போனால் அது பொட்டு. வேலியின் மேல் அரைப் பகுதியை வெட்டி அதற்கு மேலாகக் கடந்து போனால் அது கடப்பு. Babu Babugi

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

1 day 7 hours ago
இல்லை. துணை கொ.ப.செ பதவியும் இன்னும் கொடுக்கப்படவில்லை. இவர் மட்டும் அல்ல திமுகவில் ரஜீவ் காந்தி, அதிமுகவில் க.சுந்தரம் என முன்னாள் தம்பிகள் எவருக்கும் சீட் இல்லை. காளியம்மாள் நாதகவில் இருந்து வெளியேறிய உடனே தவெகவில் இணைந்திருக்கலாம். காலம் தாழ்த்தி அதிமுகவில் இணைந்ததால் தேர்தலுக்கு அண்மையில் இணைந்தவருக்கு சீட் கொடுக்க இவர் அப்படி ஒன்னும் அப்பாடக்கர் இல்லை என எடப்பாடி நினைத்திருக்கிறார்.

ஆடல் - கிரிசாந்

1 day 7 hours ago
ஆடல் - கிரிசாந் “காமம் என்ற எளிய திரையைத் தாண்டி ஒரு ஆணால் பெண்ணை பார்க்க முடிவதில்லை. இல்லையா?” என்றாள். இரண்டு பிளேட்கள் போன்ற அவளது சிறிய உதடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நிமிர்ந்துஅவளின் விழிகளின் கருமணிகளைப் பார்த்தேன். மண்ணிறமான தொட்டாச் சிணுங்கியின் மலர்களைப்போல விரிந்திருந்திருந்தன. சில கணங்கள் அவளது கண்களையே பார்த்து விட்டு விலத்தி தூரத்தில்தெரிந்த ஆமை போன்ற சிறிய தீவைப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னேன். “முடியும் என்று தான் தோன்றுகிறது. குருதி உறவுகள், அணுக்கமானவர்கள் என நெருங்க நெருங்ககாமத்தின் எளிய திரைகள் உதிர்கின்றன” என்றேன். “அதற்கு வெளியே அத்தனை பெண்களும் ஒன்று தான் இல்லையா?” “ரசனை, மானுட நிலமைகள், உடல் நோய்கள், உளச் சிக்கல்கள், தன்னறங்கள் என பல அடுக்குகள்இருக்கின்றன இல்லையா?” “அவை அளவைக் குறைத்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி போதாது இல்லையா?” “ம்ம்.. போதும். ஆனால் அது ஒரு சாத்தியம் மட்டும் தான். பெரும்பாலானவர்களுக்கு அது சாத்தியமில்லை. மனிதன் கற்பனையால் வாழும் விலங்கு. கற்பனை போல நுணுக்கமான ஒன்று இருப்பதிலேயே ஆழமானசிக்கல். கற்பனையே நம் வேட்கையின் தீவிரத்தை தீர்மானிக்கிறது. பெரும்பாலான ஆண்களின் கற்பனைக்காமங்கள் பகற்கனவுகள். அதற்கு மிஞ்சி அவர்களால் நிகர்வாழ்வில் ஒன்றையும் புரிய முடியாது. காமம்மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகம் என நம்மைச் சொல்லும் பொழுதே துலக்கமாகத் தெரிவது என்ன? ஒடுக்கப்படும் ஒவ்வொன்றும் கனவாய் மாறும் தன்மை கொண்டது. கனவுகள்! நாம் எல்லோரும் கனவுகளின்தீராத அலைக்கழிப்புகள்“ “காமமும் காதலும் ஒன்றின் இரண்டு தோற்றங்கள் தானே?” “இல்லை. காதலும் காமமும் இரண்டு வேறு வேறு திசைகளில் இருப்பவை. சூரியன் உதிப்பதும்அஸ்த்தமனமாவதும் போல“ இருவரும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தோம். அவள் ஒரு சிங்கள – ஜெர்மானிய கலவை. அவளது அப்பா சிங்களவர், அம்மா ஜெர்மானிய தூதரகத்தில் பணியாற்றியிருந்தார். அப்பா இறந்ததும்ஜெர்மனிக்கே திரும்பிச் சென்று விட்டார். இவள் இங்கே ஒரு துணிக்கடையும் நாயும் வைத்திருக்கிறாள். அவளது கணவன் என் தோள்களில் கைவைத்தபடி மதுவில் நெளிந்து கொண்டிருந்தான். அவன் ஒருசிங்களவன். அவளுடன் உரையாடத் தொடங்கும் போதே என்னை எச்சரிக்கை செய்திருந்தான். “அவள்பேசும் பேச்சுகளை ஊக்கப்படுத்தாதே நண்பா, பிறகு வருந்துவாய்“. இந்த வினோத எச்சரிக்கை யாரைத்தான் விலகி ஓட வைக்கும். “உன் கண்களிலும் காமம் கொப்பளிக்கிறதே, உன்னை எப்படி நம்புவது?” என்றாள். பச்சை வண்ணஆடையில் மயில் போலிருந்தாள். நான் சிகரெட்டை எடுத்து மூட்டினேன். “நீ சிகரெட்டை எப்போதும் இவ்வளவு வசீகரமானதாகத் தான் பற்ற வைப்பாயா?” “இல்லை. அழகான பெண்கள் முன்னால் இருக்கும் போது மட்டும்” என்றேன். வலக்காலால் நான் அமர்ந்திருந்த வெண்ணிற பெயிண்ட் அடித்த இரும்புக் கதிரையை எட்டி உதைத்தாள். நான் பாதாளத்திற்குள் விழுந்து மீண்டு வந்து திடுக்கிட்டு நேராகினேன். சிரித்தாள். குழந்தையினுடையவைபோல வெண்ணிறப் பற்கள். நாங்கள் அமர்ந்திருந்த விருந்து முற்றத்தில் பழைய தேவாலயமொன்றில்பிடுங்கப்பட்டவை போன்ற கற்சிலைகளை வைத்திருந்தார்கள். நடன அரங்கில் ஆங்கிலப் பாடல்கள்ஒலித்துக் கொண்டிருந்தன. கொக்டெயில்கள் விரும்பிய அளவு பெருக்கெடுத்தன. குஷ்ஷின் வாசனைபழங்கால அரண்மனை போலிருக்கும் அந்த கட்டடத்தினை இன்னும் வெகுகாலம் பின்னே கொண்டுசென்றிருந்தது. பெரும்பாலானவர்களின் விழிகள் சிவந்த படலம் போல மினுங்கி மேலும் ஆழத்திற்கெனஅலைந்தன. இரண்டு கற்சிறகுகளை விரித்தபடி ஏரியை நோக்கி வலக்கை விரலை நீட்டியபடியிருந்த ஆண்தேவதையொன்றின் சிலையின் விரல் நுனியில் ஒரு நட்சத்திரம் ஒளிரத் தொடங்கியது. அவளுக்கு அதைக்காட்டினேன். முழு போதையும் அகன்று துள்ளிக் குதித்து போனை எடுத்து அதைப் படம் பிடித்தாள். “ஒரு குட்டி மீனைக் காட்டி குழந்தையை ஈர்ப்பதைப் போல என்னை நீ மயக்கப் பார்க்கிறாய்” என்றாள். “தன்னைக் குழந்தையாக உணரச் செய்யும் ஆண்களைத் தானே பெண்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்” “இல்லை” என்றாள். சிறிது நேரம் யோசித்து விட்டு தலையை மெல்லச் சரித்து ஆட்டி விட்டு என் தோளில்அடித்து சிரித்தாள். மேலும் அழகு கூடி வந்தது. காது வரை குறுகத் தரித்த அவளது சிகை விம்மித்தழைந்தது. “உண்மையைச் சொல். என்னை உனக்குப் பிடிக்கவில்லையா? கோபமும் ஆக்ரோஷமுமான பெண்ணைஆண்கள் விரும்புவதில்லை” “சிலர் விரும்புவார்கள். மூளையுள்ள பெண்களை விரும்பும் ஆண்களும் இருக்கிறார்கள். அவர்கள் ரசனைஅப்படி” “தன்னறம் என்றாயே, அதுக்கும் காமத்துக்கும் என்ன இணைப்பு. விளங்கவில்லை?” “ஒருவனுக்கு ஒருத்தியென்பது ஒரு அறம். அது இலக்கியங்களால் உருவாக்கி அளிக்கப்பட்டது. மதங்களால் நெறிப்படுத்தப்பட்டது. மானுட குலம் வரலாறு நெடுக காமத்தை என்ன செய்வதென்றுவிளங்காமல் திகைத்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு மதத்தையும் அது ஏளனம் செய்கிறது. தன் வளைந்தவாலை நேராக்க முடியாத நாயைப் போல அது காமத்துடன் அலைகிறது. விரும்பினாலும் இல்லையென்றாலும் மண்ணுக்கு அடியில் வேரைப் போல காமம் அனைத்தையும் தொட்டுவிட மென்மையான நுண் விரல்களால் துழாவிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் கோடிக்கணக்கானவர்கள். அவர்களை ஒரு போதும் ஒன்றென ஆக்கவே இயலாது. நாம் ஆணின் பெண்ணின் காமங்களிற்கு அப்பால்குயர்களையும் அல்லவா வரலாறு நெடுகிலும் பார்க்கிறோம். அது அத்தனை நுட்பமான அடுக்குகள்கொண்ட இழைப்பு. நீ ஒன்றென ஆக்கும் தோறும் அது இன்னொன்றை விரித்துக் கொள்ளும் மலர். அறத்திற்கும் தன்னறத்திற்கும் உள்ள வேறுபாடு அதனால் முக்கியமானது என நினைக்கிறேன். அறம்பொதுவாக நிறுவப்பட்டது. மலைகளைப் போல நெடுங்காலம் வளர்ந்து நிற்பது. ஆனால் அதுஅனைவருக்கும் பொதுவென ஆக முடியாது. எல்லாக் காலங்களிற்குமான பொது அறம் என ஒன்றில்லை. அதை நீயே அறிவாய். காமத்தை ஒழுங்குபடுத்துவதின் சிக்கல் நாளுக்கு நாள் பெருகுவது. கற்பனையைப்போல. ஆகவே தான் தன்னறம் என அதை வகுக்க வேண்டியிருக்கிறது. ஒருவர் பொது அறத்தை மீறமுடியும். அது ஏற்புள்ளது. தன்னறமும் மாறக் கூடியது தான். ஆனால் அது அடிப்படையானது. ஒருவரின்சொந்த அழிவும் மீட்பும் தன்னறத்தில் தான் நிலை கொண்டுள்ளது. ஆகவே தான் காமத்தில் ஒருவரின்தன்னறம் முக்கியமானது. அதை அவர் பிறரிடம் வெளிப்படுத்தத் தேவையில்லை. அது மனசாட்சி. அதன்முன் நிற்பது அந்த ஒருவர் மட்டுமே“ பனி மெல்ல மெல்ல அடர்ந்து வந்தது. நடன அரங்கில் பாயும் பலவர்ண விளக்கு வெளிச்சங்கள்இருட்டைச் சுழன்று விரட்டின. “வா, ஏரிக்கரையின் விளிம்பில் நின்று புகைக்கலாம்” என்றாள். அவனது கணவன் ‘என்னை விட்டுவிடுங்கள்‘ என மன்றாடினான். அவனுக்கு ஒரு உதட்டு முத்தம் கொடுத்து விட்டு பேப்பரையும் சிறு துண்டுகுஷ்ஷையும் அவனது ஜீன்ஸ் பொக்கற்றுக்குள் இருந்து எடுத்துக் கொண்டாள். செவ்வியல் நாடகத்திற்கானஅரங்கைப் போல ஏரிக்கரையின் தனிமை மெளன வெளியில் திரை விலகியிருந்தது. கரிய தீவின்மரங்களில் இருள் அசைந்தது. “நீ தமிழன் தானே, உங்கள் பெண்களில் இல்லாத எது என்னிடமிருக்கிறது?” என்றாள். “தெரியவில்லை. பெண்ணென்றால் பெண் தான். எங்கு பிறந்தாலும் என்ன செய்தாலும். நான் அப்படித்தான் பார்க்கிறேன். மேற்பரப்பினால் ஏரி அழகாவதில்லை. ஆழத்தினால் உண்டாகும் மாயமே அதைவசீகரிக்கிறது” “நீ கவிஞன் தான். ஒத்துக் கொள்கிறேன். அதற்காக சொற்களால் விளையாடாதே” “அப்படியென்றால் நீயே சொல், நீ அறிந்த சிங்களப் பெண்களுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்? உடைஉடுத்தும் முறையா? ஆபரணங்களா? நீளமான அருவிக் கூந்தல்களா? சொல்?” “அது எல்லாம் வித்தியாசம் தானே?” “வெறும் விவாதத்திற்காக முரண்டு பிடிக்காதே, நீ அறிவாய். இங்கிருக்கும் எல்லோருக்கும் ஒருவரைஇன்னொருவருக்குத் தெரியும். அனைவருக்கு அடியிலும் இருப்பது எதுவோ அதுவே அனைத்திற்கும்அடியிலும் இருக்கிறது. மேற்பரப்பை அறியாதவர்கள் இருக்கலாம், ஆனால் ஆழம் அனைவரும் அறிந்ததுதான்“ அவள் சற்றுச் சீற்றமானாள். பூவரசம் இலையை நொடியில் மடித்து குழல் செய்யும் சிறுமியின்கைநயத்துடன் குஷ்ஷை மடித்து பேப்பரில் உருட்டினாள், பற்ற வைத்து இழுத்துக் கொண்டு தன் சிறியகறுப்பு ஸ்வெட்டரை எடுத்து தோளில் போட்டுக் கொண்டாள். பின்னால் அலறிக் கொண்டிருந்த பாடலின்இரைச்சல் மெல்ல மெல்ல நீருக்கடியிலென அமிழ்ந்து கொண்டிருந்தது. “ஆக இங்கு நடப்பதெல்லாம் நாடகம் என்று சொல்கிறாய், எல்லாம் நடிப்பு இல்லையா?” என்றாள். புகையைக் கையில் தந்தாள், ஒரு கைமாற்றைப் போல. “இல்லை. மேற்கு இலக்கியங்களில் தான் இதுவொரு நாடகம், கீழைப் பண்பாட்டில் இதுவொரு ஆடல்” என்றேன். “ஆடலென்றால், ஆடுவதா?” “ஆங்கிலத்தில் இதை விளக்கிச் சொல்ல முடியாது. ஆனால் ஆடினால் உனக்கு விளங்க வைக்க முடியும்” என்றேன். “இத்தனை நேர்மையான தந்திரத்துடன் எவனும் என்னை ஆட அழைத்ததில்லை. நீயொரு கள்வன்” என்றாள். புன்னகையுடன் “நீ தமிழ் ஆணிடம், குறிப்பாக கவிஞனை இதற்கு முன் சந்தித்தது இல்லை அல்லவா? அவர்கள் அப்படித் தான். குலத் தொழிலே பாடி மகிழ்வித்தல், பெண் நாடல்” என்றேன். அடிவயிற்றைப் பிடித்தபடி சிரித்தாள். “அயோக்கியர்கள்!” என்றாள். “எல்லா மொழிகளிலும் ஒரு கவிஞனின் முதன்மைத் தொழில் அது தான். சொற்களைச் சாணை பிடிக்கும்கல்லைப் போன்றது காமம். கவிதை என்பது மயங்கச் செய்து நம்ப வைப்பது. அது உண்மை இல்லை எனசொல்பவரும் கேட்பவரும் அறிவார்கள். ஆனால் அது அப்போதைக்கான பெரிய உண்மை என இருவரும்நம்புவார்கள். கவிதை என்பதை இருவர் நம்பும் ஒரு பொய் எனச் சொல்லலாம்” என்றேன். என் கண்களை நேராகப் பார்த்து “உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது” என்றாள். “சந்தேகமேயில்லாமல், நானும் நீயும் நேற்று மாலை சந்தித்துக் கொண்ட போதே உனக்கு இது தெரியும்தானே. எனக்கும் அது தெரியும். அது தான் நான் சொன்ன ஆழம்” என்றேன். நிச்சலனமாக ஏரியைப் பார்த்தாள், தலையைச் சரித்துத் தூக்கி ஆகாயத்தைப் பார்த்தாள். “நீ உண்மையாக யாரையாவது காதலித்திருக்கிறாயா? அப்படி ஒரு உணர்வு உனக்கு வந்திருக்கிறதா?” என்றாள். அவளது கண்களில் இரண்டு விண்மீன்கள் நீந்தி என்னை நெருங்கின. அத்தனை தீவிரமான பார்வை. தொடமுடியாமல் கண்களைத் தாழ்த்திக் கொண்டே சொன்னேன். “யெஸ். நான் ஒரு முறை வாழ்வில் காதலை உணர்ந்திருக்கிறேன். ஒரே ஒரு முறை“ அவள் கைகளைத் தட்டி ஆகாயத்திற்கும் ஏரிக்குமிடையில் தேவதை போலக் காற்றில் துள்ளிக் குதித்தாள். “யெஸ். நான் நினைத்தேன், நான் நினைத்தேன். உன் கண்களில் காதலை அறிந்தவனின் நிதானம்இருக்கிறது. என்னிடம் நீ வெறுமனே விளையாடுகிறாய். உன் திறமைகளைப் பரிசோதித்துப் பார்க்கிறாய். பொம்மைக் கடையில் சிறுவனைப் போன்ற உன் கண்களில் அனைத்தும் உள்ளது” என்றாள். “யெஸ்.. இது ஒரு ஆடல்” “Ahhh.. சொல், ஆடலென்று என்னைக் கொல்லாதே, எங்கிருக்கிறது அதன் முடிச்சு?” “நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது“ “வாலைப் பிடித்துக்கு கொண்டு தலையை விட்டு விடுகிறாய். சரி, உனக்கு காதல் வந்ததை எப்படி நீநம்பினாய்?” “அவளை நான் பார்த்து பல காலங்களுக்குப் பின்னர், என்றுமே நான் அவளைக் காதலிக்கும் எண்ணம்இருக்கவில்லை. குறிப்பாகச் சொன்னால் காதலையே நான் மறுப்பவனாக அப்போது இருந்தேன். அவளுக்கும் எனக்கும் இடையில் இருந்த ஆடலே அது தான். அவள் காதலை மட்டுமே உண்மையானஒன்றென நம்புபவள், நான் அதன் மறு அந்தத்தில் நின்றேன். இருவரது எந்த விவாதமும் உச்சகோபத்திலோ உச்ச சிரிப்பிலோ தான் முடியும். கோபம் தான் அதிகம். இரண்டு நம்பிக்கைகள் மோதிக் கொள்வது கோபத்தின் ஆற்றலிலே மட்டும் தான் சாத்தியம். அவள் எங்கள்இலக்கியங்களின் ஆதார கதாபாத்திரங்களின் கனவின் திரண்ட உரு. நான் ஓஷோவின் மாணவன். அவரதுகாதல், காமம் பற்றிய பார்வைகளே எனக்கிருந்தன. இரண்டு வலிமையான தரப்புகள் மோதிக் கொள்வதேமெய்யான விவாதம். தர்க்கங்கள் ஐஸ் கட்டிகளை எறிந்து முட்டிக் கொண்டு வெடித்தன. பளிச்சென்றமுனைகள். உடைகையில் துண்டு துண்டாகத் துமித் துமியாகச் சிதைபவை. என்றுமே இருவரும் ஒருவரைஇன்னொருவர் தர்க்கத்தால் வெல்ல முடியாது திகைத்தோம். ஒரு பின்மாலைப் பொழுதில் என்னதென்று இன்று விளக்க முடியாத உவகையில் மனம் திளைத்திருந்தது. கனியப் போகும் கனிக்குள் உள்ள இனிப்பைப் போல, கனிந்து ஊறப் போகும் அதன் உள்ளுணர்வேகனியாவதைப் போல. ஒரு குளக்கரையில் நான் அமர்ந்திருந்தேன். அவள் அவளது வீட்டில். இருவரும் உரையாடிக்கொண்டிருந்தோம். தர்க்கங்கள் கரைந்த பின்னர் எஞ்சும் நீரில் இரண்டு மீன்களைப் போல என இப்போதுசொல்லத் தோன்றுகிறது. தீவிரமாகப் போரிட்ட இணையான வீரர்கள் களைத்து சாய்ந்து அமர்ந்திருக்கும்பொழுது இருவர் மட்டுமே உணரும் அந்தரங்க நெருக்கம் அது. அதைச் சொற்களால் என்னால் விவரிக்கமுடியவில்லை. ஆகவே தான் உவமைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்” எனச் சொல்லி அதற்கு மேல்சொற்கள் எழாமல் திக்கித்தவன் போல நின்றேன். திடீரென்று விழித்துக் கொண்ட தபஸ்வியைப் போன்றுகுலைந்து சுற்றையும் பார்த்தேன். மகத்தானதை மட்டுமே அப்படிப் பார்க்க முடியும் எனும் நோக்கால் அவள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். விழுங்கி விடும் பார்வை. அரிதானதை நோக்கும் நுண்மை கூடியது. புன்னகையுடன்எனக்கு புகையை நீட்டினாள். வாங்கி இழுத்து அந்த மனநிலையிலிருந்து இறங்க விரும்பினேன். பாதத்தின் உறுதியான இருப்பைப் போல அந்த உணர்ச்சிகரம் என்னை விட்டு நீங்காமல் அப்படியேஇருந்தது. அப் பாதத்திலிருந்து ஏறும் குளிர் போல காதல் என்னுள் ஓங்கி வளர்ந்தது. சிரித்தபடி “காதலை நான் உணர்ந்தேன்” என்றேன். “எப்படி?” “அவளுடன் உரையாடி முடித்து எழுந்தேன். கால்களால் நடக்கவே முடியவில்லை. நரம்புகள் பின்னிக்கொண்ட பாம்புகளைப் போலக் குழைந்தன. என் மூச்சு எனக்கே அந்நியமானது போல இருந்தது. காதலைப் போல தாங்கிக் கொள்ள முடியாத உணர்வு உடலுக்கு மிகவும் புதிதானது. உண்மையாகவேதாங்க முடியாதது. உலகை மறந்து அதைப் பிளந்து காற்றைப் போல நடந்தேன். எல்லாம் எனக்கென வழிபிரிந்து விலகின. என் மேல் விழுந்தனவும் எனக்குப் பொருட்டே இல்லாமல் இருந்தன. கொஞ்சத்தூரத்திற்கு மேல் நடக்க முடியாமல் நகரத்தின் வீதிக்கரையில் விழுந்து படுத்து விட்டேன். புன்னகைமட்டுமே உடலாக ஆக முடியும் என்பதை அன்று அறிந்தேன். தித்திப்பது எத்தனை தாங்க முடியாதுஎன்பதை அறிந்த முதற்கணம் அது. காதல் உண்மையாகவே நிகழ்வது உள்ளத்தில் அல்ல. உடலில். உடலும் உள்ளமும் இரண்டில்லை” என்றேன். நடன அரங்கின் ஓசை நீருக்குள்ளிருந்து எழுந்து வரும் செவியைப் போல கேட்கத் தொடங்கியது. நான்முன்னர் கேட்டேயிராத பாடல்கள் தான் அங்கே ஒலித்துக் கொண்டிருப்பதால் எனக்கு ஒரு குறையும்இல்லை. “எப்படி இது சாத்தியம்! ஹோலி ஷிட்! எப்படி இது நிகழ முடியும்?” எனக் கூவினாள். “என்ன ஆயிற்று?” “வா, இங்கே வா, ஒரு சொல்லும் சொல்லாதே, உலகிலேயே எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் இது தான். மிகச் சரியாக இந்த நொடியில் இது எப்படி ஒலிக்கிறது” என்று சொல்லிய பின்னர் ஏரியில் ததும்பும்மென்னலை ஆட்டத்துடன் ஒத்திசைந்து தன் உடலை அசைய விட்டாள். நான் என் பாட்டுக்குக் கோணலாக அசைந்தேன். காற்று விட்ட திசைக்கு பாய்மரம் போல என் பெரியசேர்ட் ஆடியது. அது நான் ஆடுவது போலிருக்கவே நான் அதில் பொதிந்து கொண்டேன். குளிரானபனிக்காற்றும் குஷ்ஷின் கதகதப்பும் சேர அசைந்தேன். அவள் உடல் நடுங்கத் தொடங்கியது. வரிவரியாகஅவளது பிளேட் உதடுகள் அப்பாடலின் சொற்களை மிகத் துல்லியாமாக அசைத்தன. சொல் ஓசையின்றிஉதடுகளில் துடித்துக் கொண்டிருந்தது. திரும்பி நடன அரங்கைப் பார்த்தேன். நிழல்களும் உடல்களும் வேறு வேறு காலங்களில் ஆடிக்கொண்டிருந்தன. ஒரு நிழல் இன்னொரு நிழலைத் தழுவி விலகியது. இன்னொரு நிழலின் அபிநயம்இன்னொன்றிற்கு மிகச் சரியாக ஈடு கொடுத்தது. சிலர் அதன் ஓரங்களில் சாய்ந்து படுத்திருந்தனர். ஒருபக்கத்தில் குவிந்திருந்த சாறமும் சேர்ட்டும் அணிந்த சிப்பந்திகள் இந்த மேட்டுக் குடிக்கொண்டாட்டத்தை அசையாத உறைந்த முகங்களுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். “நீ ஏதோ விளங்க வைக்கப் போகிறாய் என்றாயே? அது என்ன?” “நீ ஆடுவது உனக்குப் பிடித்திருக்கிறதா?” ஓம் எனத் தலையசைத்தாள். சூரியகாந்தி சுழல்வதைப் போல தலையை ஆட்டினாள். கைவிரல்களில்நளினம் அசைந்தது. ஒரு துள்ளல் துள்ளி ஈரம் படிந்த புற்களில் கால்களை வைத்து சிறகைப் போலகைகளை விரித்தாள். “ஆட விரும்பும் எண்ணத்தை உனக்குள் தோன்றச் செய்வது எது? இந்தப் பாடலா? அதன் இசையா? வரிகளா? அதில் உள்ள காதல் பற்றிய மிகையான கற்பனைகளா? சொல்?” “நானும் உன்னைப் போலத் தான் நண்பா, என் உடலில் காதலை உணர்கிறேன். ஆனால் பெரிய தனித்தகாதல். ஒரு போதும் அது நிறையவே இல்லை” என்றாள். “பெருகிக் கொண்டிருக்கும் மலையருவியின் ஊற்றைப் போல, தொடங்கும் இடத்தில் குளிர்ந்து தளிர்போன்ற தீ நீர். பெருகுகையில் ஆங்காரமான பேரிரைச்சலுடன் கொந்தளிப்பான அக்கினிப் பெருக்கு” என்றேன். “யெஸ்.. நீ சரியாகத் தான் சொல்கிறாய். ஆனால் ஏன் என்னால் முழுமையை நோக்கி செல்லமுடியவில்லை?” “உன்னிடம் ஆன்மீகமில்லை. ஆன்மீகமில்லாத காதல் நிறைவடையாது. தகித்துக் கொண்டிருக்கும்எரிமலையின் உடல் அது” “ஆன்மீகமா, ஓ ஷிட். நீ ஓஷோவின் ஆள் இல்லையா, அந்த தாடி வைத்த செக்ஸ் சாமியாரின் சீடன்“ “ம்ம். செக்ஸும் ஆன்மீகமென்று அவர் சொல்லியிருக்காவிட்டால் அது வெறும் விலங்குணர்ச்சி எனநம்பியிருப்பேன். எந்த ஒரு மானுட உணர்ச்சியும் ஆன்மீகத்தைத் தொடாமல் நிறைவை அளிக்காது“ “இப்பொழுது நான் தியானம் செய்ய வேண்டுமா!” எனச் சொல்லி சின் முத்திரை பிடித்துக் கொண்டுநடித்துக் காட்டினாள். உதறலான ஒரு பர்ர்ர் ஒலியை குறட்டையைப் போலச் செய்து காட்டி விட்டு“கண்ணை மூடி அமர்ந்தால் நான் உறங்கி விடுவேன். தியானம் எல்லாம் ஏமாற்றிக் கொண்டே உறங்கும்வேலை” “நீ ஒரு குறையைச் சொன்னாய் நான் அது நிறையும் வழியைச் சொன்னேன். மிகுதி உன் விருப்பம். ஆனால்நான் உண்மையாகவே உணர்ந்த ஒன்றைச் சொன்னேன். புத்தகங்களில் வாசித்ததை அல்ல“ அமைதியாக ஆனாள். ராட்சத பலூன் போல ஊதிய இருக்கை ஒன்றில் அமர்ந்தாள். எண்ணையில் நீரெனஅதில் ஆடினாள். ஒரு வைன் கிண்ணத்தில் சோடாவைக் கொணர்ந்து கொடுத்தேன். ஒரு மடக்கு குடித்து விட்டு உதடுகளைஉரசி மினுக்கினாள். பளபளவென்ற இளஞ்சிவப்பு நிறமென்பது அது மட்டும் தான் எனத் தோன்றியது. ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே கைகளை என் நெஞ்சை நோக்கி நீட்டி “அப்படியென்றால்எனக்குக் காதல் நிறையவே நிறையாதா?” என்றாள். “அதற்கு நீ தியானமெல்லாம் செய்யத் தேவையில்லை. தியானமென்பது என்ன? உன்னை நீயென அறிதல், நீயாகவே மட்டும் இருக்கும் நிலையை எய்தல். மனமோ உடலோ இதயமோ இல்லை, தியானம் உன்னைக்கூட்டிச் செல்வது துரியத்திற்கு என்று ஓஷோ சொல்வார். அனைத்து உயிரின் ஆழமும் தழுவியோடும்மாபெரும் நதி அது” “எனது தத்துவங்கள் வாழ்க்கையை இப்படியும் அப்படியும் கத்தரிக்கோலால் அறுப்பவை. துயரத்தைஅடிப்படையான உண்மை என நிறுவுபவை. மேற்கின் எல்லாக் குப்பையும் என் தலைக்குள் தான்இருக்கின்றன” “உண்மை தான், அவை ஆன்மீகத்தை ஒரு மீட்பெனக் கருதுபவை, ஓஷோ அந்தப் புள்ளியைத் தான் தன்கூர்மையான வாதங்களால் தகர்த்தார். கீழை உலகம் மகிழ்ச்சியை அடிப்படையான ஆன்மீகமாக என்றோகொண்டு விட்டது. காலனித்துவம் யானைக் கூட்டம் நுழைவது போல இந்தப் பண்பாட்டின் ஆழங்களைக்குலைத்து விட்டது. சேற்றுக் கலங்கலெனவே இங்கு இப்போது ஆன்மீகமும்” “ஹ்ம்ம்..” என்றாள். சொற்கள் விடாய் போலப் பெருகுபவை, சொற்களின் ஆழத்தை உணர உணர தாகம்அடங்கி விடுகிறது. “நீ ஞானியா?” “இல்லை. கவிஞன்” “ஆன்மீகமான கவிஞர்களும் இருக்கிறார்கள் தானே, கபீரைப் போல ரூமியைப் போல” “ஒரு நாள் அப்படி நான் ஆகலாம். ஆனால் காதலை என் வாழ்க்கையில் உணர்ந்து உலகியலில் நிறைந்துவிட்டேன். இதுவும் ஒரு பேறே. இங்கிருந்தும் நான் அடையக் கூடியவை நிறையவே உண்டு” சிரித்தாள். “யெஸ். நீ ஞானியில்லை. உன் கண்களில் இருப்பது காதலின் குறுகுறுப்பு. நுண்ணியதாக, ஒருகனவின் வால் நுனி போல” “நீயும் கவிஞை தான்” உரக்கச் சிரித்தாள். “உனக்கு நெஞ்சம் பதறத் தொடங்கி விட்டதா, பயப்படாதே நான் உன்னை விழுங்கி விட மாட்டேன். நீயொன்றும் அத்தனை மகத்தான காதலனில்லை” “நானும் அறிவேன். இங்கு யாரும் அத்தனை மகத்தான காதலனில்லை“ “பிறகு எதற்கு என்னை மயக்க இத்தனை பிரயத்தனப்படுகிறாய்?” “ஆடலின் நிமித்தம்” என்றேன். “என்ன?” “சரி, நேற்று மாலை உன்னை நான் பார்த்த முதற் கணம் உனக்கு நினைவிருக்கிறதா?” நான் பார்த்துக் கொண்டிருந்த நேரத்திலேயே ஏதோவொரு இமை வெட்டுக் கணத்தில் அநாயசமாகச்சுற்றிய புகையை நீட்டினாள். “இது உனக்காக” என்றாள். அவளது நாவிளிம்பின் எச்சில் பேப்பரின் முடிச்சை பிணைத்து மின்னியது. “ம்ம்.. சொல். நினைவிருக்கிறதா?” தலையை இடமும் வலமும் ஆட்டி விரல்களாலும் No என காட்டி ‘அதற்கு என்ன?’ என்பது போல புருவத்தைதூக்கி வினவினாள். “இது தான் ஆடல், நானறிவேன், வானுக்கு இடக்கை சுட்டுவிரல் உயர்த்திய பெண் தேவதையின்சிலையின் முன்னிருந்த தடாகத்தின் பிம்பத்தில் பார்த்துக் கொண்டோம். தேவதையின் பின்னேஉரோமாபுரி அரண்மனைகளின் உயர்ந்த தூண் போன்ற மரமொன்று நின்றது. அந்தச் சிலையின் பின்னால்சூரியன் காட்டுக்குள் இறங்கியபடி இருந்தது. போர்வையைப் போல மாலைப்பனி அணைத்தது. வெய்யிலின் இளஞ்சூடும் இருந்தது. நான் நீரில் விழுந்த என் பிம்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அசைவில்லாத நீர்மேற்பரப்பில் சில ஊதா நிற மலர்கள் விழுந்திருந்தன. சில ஊதா நிற அல்லிகள்அவிழ்ந்திருந்தன. பெரிய ஆழமில்லாத அந்தத் தடாகத்தின் மறுமுனையில் அந்த தேவதை தலைகுனிந்திருந்தாள். நீ என்னருகில் வந்து நின்றாய், நீர்ப்பரப்பை பார்த்து விட்டு தேவதையை உற்றுப்பார்த்தாய். நான் உன்னை நீரில் விழுந்த உன் பிம்பத்தில் பார்த்தேன். அத்தனை அழகான பெண்ணைகவனிக்காது விடும் அளவிற்கு எனக்கு முட்டாள்த்தனமில்லை. நானும் தேவதையை நிமிர்ந்து பார்த்தேன். நீஎன்னருகில் ஐந்து நிமிடத்திற்கு மேல் தொடுகையே இல்லாமல் பறந்து கொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சியைப் போல மிதந்து கொண்டிருந்தாய். நீ எனக்கு அருளினாய், எல்லா பெண் தெய்வங்களும் எளியபக்தனுக்கு காட்டும் சிறிய அருளலை. அதுவே நம் ஆடலின் துவக்கம்” என்றேன். “நீயொரு கள்வன், மோசமானவன், அயோக்கியன். எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறாய்” என்றாள். “முதல் மூன்றும் நான் தான், ஆனால் நீ என்னை விடக் கள்ளி, மோசமானவள், அயோக்கியை. உனக்குஎன்னை விட அந்தக் கணம் அதிகம் நினைவிருக்கும்“ சீண்டப்பட்ட பூனையைப் போல விலகி நகர்ந்தாள். சோடாவைக் குடித்து முடித்து “கொண்டு வா, போ” என அதட்டினாள். அவளது கணவனைப் பார்த்தேன். மேசையின் மீது கவிழ்ந்து நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். திருமணத் தம்பதிகள் இருவரும் நடன அரங்கில் காதல் பாடலொன்றுக்கு ஆடிக்கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி வைன் கிண்ணத்தை உயர்த்தி சியேர்ஸ் சொன்னேன். அவளிடம்திரும்பி நடந்த போது கற்சுவரில் அமர்ந்திருந்தாள். அவளது கால்கள் இரண்டும் மெழுகுத் துண்டுகள்போல ஒளிவீசின. கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். துமித்துத் தூறும் மழையைப் போலஅழுதழுது ஏரியைப் பார்த்தாள். பல்லாயிரம் கால்களில் காற்று ஏரியின் மீது நடக்கும் தடங்கள் தோன்றிவந்து எங்களையும் உழக்கியபடி நகர்ந்து சென்றது. உடல் மயிர்கள் புல்லரித்தன. சிகரட்டைப் பற்றவைத்து அவளிடம் நீட்டினேன். உதடுகள் நடுங்க வாயில் வைத்து இழுத்து ஊதினாள். அந்தப் புகையைக்குடிக்க வேண்டும் போலிருந்தது. கேட்டிருந்தால், மறுத்திருக்க மாட்டாள். இமைகளைத் திறக்காமல், “உண்மையைச் சொல், உன்னால் உண்மையாகவே என்னைக் காதலிக்கமுடியாது இல்லையா, என்னை மட்டுமே காதலி என மூர்க்கமாகச் சொல்லும் பெண் என மாறிவிடுவேன் எனநினைக்கிறாய் இல்லையா? குடித்து விட்டு புலம்பும் ஒரு பொறுக்கிப் பெண் என நினைக்கிறாய்? யெஸ். நான் அறிவேன். நான் சுதந்திரமானவள், ஆனால் கோபக்காரி. எனக்குக் கோபம் அடிவயிற்றில் பிறந்தது. இங்கிருக்கும் அனைத்திலும் அது எதிரொலிக்கிறது“ “கோபம் பெண்ணுக்கு ஒரு வரம். அதுவே அவளை வெல்லுதற்கு அரியவள் ஆக்குகிறது. அனைத்திலும்அனல் உண்டென்கிறது ஒரு இந்து நம்பிக்கை. ஆடும் சிவனென்பது தீயின் நெளிவு, பெருக்கு. பிரபஞ்சமேஒரு ஆடல் என்கிறது இன்னொரு நம்பிக்கை” அவள் அமைதியானாள். அடிவயிற்றை மெல்லிதாக தடவிக் கொண்டாள். “தண்ணீர்?” என்றாள். எடுத்துவந்து கொடுத்தேன். கற்பரப்பில் படுத்திருந்து கைகளை தலைக்கு அடியில் கோர்த்திருந்தாள். அவளதுமுகத்துக்கு நேரில் வந்து நின்று நீரைக் கொடுத்தேன். நீரில் இத்தனை நிறைவுடன் தான் விழுந்துகிடந்தாய் எனச் சொல்ல விரும்பினேன். அவள் என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என எண்ணம்தோன்றவும் சிரித்தேன். அவள் சந்தேகமான இனிய புன்னகையை அருளினாள். நீரைக் குடித்து விட்டுஏரியை நோக்கி ஒரு கை தலைக்குக் கொடுத்து சயன அமர்வில் திரும்பினாள். அருகில் அமர்ந்துகொண்டேன். மீண்டும் சிகரெட். மீண்டும் புகை. “எனக்குத் தெரியவில்லை. எது என்னை இந்தக் காதலை நம்பச் செய்கிறது, மடத்தனமான இந்தக் காதல்எங்கிருக்கிறதென்று தெரியவே இல்லை. புத்தகங்களில் வாசித்தேனா, வாழ்க்கையில் பார்த்தேனா, கனவாதெரியவில்லை. உனக்குத் தெரியுமா?” “தெரியும்” என்று சொல்லி நிறுத்தினேன். “ஆடலா?” எனச் சொல்லிச் சிரித்தாள். அவளது தேகம் சயன அமர்வில் வெல்வெட் பூச்சியைப் போல மிருதுகாட்டியது. “இல்லை, உண்மையாகவே தெரியும். நான் கவிஞன்” “உன்னிடம் நான் கெஞ்ச வேண்டுமா? சொல், இல்லையென்றால் நரகத்திற்குப் போ” “உலகின் அழகான ஒவ்வொன்றும் காலமின்மையில் இருக்கிறது. காலத்திற்கு உள்ளே வாழ்ந்து மடியும்ஒவ்வொரு அழகும் காலமின்மையில் சென்று சேர்கிறது. மழைத்துளி கடலிலென. காதல் மிக மிக அழகானது, ஆனால் அதுவும் காலமின்மையில் நின்று கொண்டிருப்பது. காலமின்மையின்சிக்கல் என்னவென்றால் அது காலத்திற்குள் பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்த மட்டுமேமுடியும். மேகம் மண்ணில் மிதக்க முடியாதது போல, துளித்துளியாக மண்ணைத் தொட்டு விடுவதைப்போல, தொட்டுத் தொட்டு நிறைவதைப் போல, நானும் நீயும் எல்லோரும் ஒவ்வொரு சின்னஞ்சிறு துளிகள், நாம் பூமியெங்கும் காதலைப் பெய்கிறோம். ஆகவே நாம் பூரணத்தை அடைய முடியாது. அந்தத்துளிக்கணத்தில் விரியும் வேகமும் அடையும் நிறைவும் நம்மில் எஞ்ச முடியும். பெண்ணால் அதை ஒருபோதும் ஏற்க முடியாது. அவள் ஆழத்தில் கடல் எனத் தன்னை எண்ணிக் கொள்பவள். ஆணுக்கு காதல்ஒரு நிமித்தம் தான், ஆடலே பொருட்டு. பெண்ணுக்கு காதலே பொருட்டு. இதை ஒரு வகையில் இந்தஆடலின் நியதி எனச் சொல்லலாம்” “என்ன உளறுகிறாய், எங்கிருந்து இந்தக் குப்பைச் சிந்தனைகளை அள்ளி வருகிறாய்” சிரித்தேன். “ஆடலின் மிக முக்கியமான சிக்கல் எதுவெனத் தெரியுமா?” என்றேன். “தெரியும்” என்றாள். அவளைப் பார்த்தேன். பிடரி முடிகள் உலைந்து கொண்டிருக்க தியானத்தில் இருப்பவள் போல அமர்ந்துகொண்டாள். “சொல்” நடன அரங்கு வெறிச்சென்று இருந்தது. காதில் பாடலோ சிறிய பேச்சுக் குரல்களோ கூடக்கேட்கவில்லை. அவளது மூக்கு நுனியின் வாளிப்பைப் பார்த்தேன். அகன்ற பொன்னிற நெற்றியில் சிகைதவழ ஏரியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது மூக்கைத் தொட்டால் எவ்வளவு குளிருமோ அவ்வளவுகுளிர் என் நெஞ்சில் இருந்ததை உணர்ந்து கொண்டிருந்தேன். சிகரெட்டை எடுத்து மூட்டினேன். மார்புமயிர்கள் சூடாகி வந்தன. அவளால் அந்தக் குளிரைத் தாங்க முடியாது என மூளை ஒரு கணம் அதிர்ந்தது. “போகலாம் வா, ஒரு போர்வை வேண்டும் உனக்கு” என்றேன். ஏரி நீரின் நிச்சலனத்துடன் அவளது குரல் கேட்டது, “அது ஆடலென்பதை நாம் அறியவே கூடாது. புறவயமாக நாம் அதைச் சொல்லாக மாற்றக் கூடாது. இப்போது இக்கணம் என் இதயம் உணரும் ஒன்றைப்போல” நான் கற்சுவரிலிருந்து இறங்கினேன். இடுப்பில் கையை ஊன்றி ஒரு கையால் சிகரட்டை இழுத்தபடிஅவளைப் பார்த்தேன். அவள் ஏரியை நோக்கியிருந்தாள். நான் அவளது முதுகைப் பார்த்தேன். மெல்லியகூன் விழுந்தது போல வளைந்திருந்தாள். தலை கவிழ்ந்திருந்தது. “சரி தான், என்னுடன் ஆட வருகிறாயா?” எனக் கேட்டேன். உண்மையில் வாயால் அந்தச் சொற்களை நான்உச்சரித்தேனா? அவள் மறுப்பாள் என என்னுள் உறுதியாகச் சொல்லியது எது? அவளது உடல் சுருங்கி வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். விதைக்குத் திரும்ப பூ விரும்புவதைப்போல. அவளில் நிறைந்து ததும்பும் தனிமையை நெருக்கமாக உணர்ந்தேன். அருகருகே உரசும் மேனிமயிர்களின் தொடுகையென. அவளது பிளேட் உதடுகள் கூர்மையாக அச்சொல்லை உச்சரித்துப் பார்த்தன. “ஆடல்“. தனக்குள் அது இல்லையெனச் சொல்வது போல தலையை ஆட்டி மறுத்தாள். விம்மினாள். கண்ணீர்பெய்யும் விழிகளை மூடிக் கொண்டு நெஞ்சைப் பிடித்தபடி குறண்டினாள். தொட்டு வருடி விட்டிருக்கவேண்டும் நான். அதைச் செய்யக் கூடாது. விரல்களின் நுனியில் எழாத தொடுகை வெறும் காமம். நான்புகையை எடுத்து மூட்டினேன். இழுத்து நுரையீரலை நிறைத்து ஊதினேன். அவளைக் கடந்து அப்பால்இருந்த தீவின் மரங்கள் காற்றை ஊதின. ஏரியின் மார்பில் பட்டு எழுந்த குளிர்காற்று எங்களைத் தழுவிச்சென்று கொண்டிருந்தது. https://mayir.in/short-stories/kirishanth300gmail-com/4494/
Checked
Sun, 04/05/2026 - 15:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed