5 hours 43 minutes ago
எயர் ரைக் போட்டு அனுப்புகிறார்களோ?
5 hours 46 minutes ago
இன்றைய தாக்குதலில் மொத்தமாக, இரண்டு சி-130 இராணுவ விமானங்கள் மற்றும் இரண்டு அமெரிக்க பிளாக் ஹாக் உலங்குவானூர்திகளை அழித்ததாகக் இரான் அறிவித்துள்ளது.
6 hours 3 minutes ago
அறவே இல்லை…கரூர் சம்பவத்தின் பின்னான விஜையின் பதுங்குதலை கூட மன அளுத்தமாக இருக்கலாம் என benefit of the doubt கொடுக்க யோசித்த நான்… விஜையை அறவே கை கழுவியது…இந்த வர்த்தே இல்லை…. மொமெண்ட்டின் பிந்தான். அதுவும் அந்த உடல்மொழி…அநாகரீகத்தின் உச்சம். இங்கே மனைவியை மட்டும் அல்ல, தன் 27 வருட குடும்பவாழ்வை, பிள்ளைகளையும் சேர்த்தே அவர் அவமதித்துள்ளார். நான் முன்பே சொல்லிவிட்டேன் அண்ணா, பலவாறு சிந்தித்ததில் எனக்கு வாக்கு இருப்பின் இந்த முறை என் வாக்கு திமுகவுக்க்கு போகவே வாய்ப்பு அதிகம். ஆனால்….(இன்னும்) திமுக, அதிமுக அளவுக்கு விஜை திருடன் இல்லை. 11%
6 hours 40 minutes ago
· Suivre sSrpenootd2:14609gvf802l l04415t04h7g23af3 e i69r 8Lg7l5àll0 · கடுமையாக மழை பெய்துக்கொண்டு இருந்தது.. வீட்டில் அத்தனை காரியங்களையும் கவனித்து கொண்டிருந்த மஞ்சன் என்கிற காரியஸ்தர் மழையில் வங்கியில் இருந்து வீட்டு செலவுக்கு பணம் எடுக்க போனவர் திரும்பவில்லை. வீட்டில் இருந்த எஸ் ஏ பி அவர்களுக்கு நிலைக்கொள்ளவில்லை. இந்த கொட்டும் மழையில் அவரை வங்கிக்கு அனுப்பியது தவறோ? என்று எண்ணினார். மஞ்சன் காரியஸ்தான். ஆனால் அண்ணன் என்று தான் அவரை எஸ் ஏ பி அழைத்து வந்தார். அவரது அன்னை தன் பிள்ளை படும் பாட்டைக்கண்டு மஞ்சன் பத்திரமாக திரும்பி விடுவார். கவலை வேண்டாம் என்று ஆறுதல் கூறினார்.. அம்மாவின் கூற்றுப்படியே சற்று நேரத்தில் மஞ்சன் வங்கியில் எடுத்த 500 ரூபாய் பணத்தோடு திரும்பி விட்டார்.. ஆனால் மஞ்சனின் முகத்தில் ஏதோ ஒரு வருத்தம் தெரிந்தது. மவுனமாகவே இருந்தார்.. சற்று நேரம் சென்ற பின் எஸ் ஏ பி அமைதியாக இருந்து விட்டு மஞ்சண்ணா! என்ன விஷயம்? என்று கேட்க, கொட்டி தீர்த்து விட்டார் காரியஸ்தர். எந்த நாளும் இல்லாத திருநாளாக அன்று வங்கி அதிகாரி ஒரு கேள்வி கேட்டு விட்டார். அவர் கேட்க கூடாது தான். ஆனால் கேட்டு விட்டார். எப்போதும் உங்கள் செட்டியார் கணக்கில் இருந்து பணம் எடுக்கிறார். கணக்கில் ஒரு முறை கூட பணம் போடுவதில்லை. ஏன் அவர் சம்பாதிப்பது இல்லையா? என்று கேட்டிருக்கிறார். அந்த கேள்வி ஒரு வகையான குத்தல்.. ஒரு தனிப்பட்ட எஸ் ஏ பியை கேலி செய்யும் பேச்சு அல்ல. நகரத்தார் இனத்தை சேர்ந்த ஒருவர் இப்படியும் உட்கார்ந்து சாப்பிடுவாரோ என்று தொனிக்கும் படியான குத்தல். அது காரியஸ்தர் மஞ்சனை வெகுவாக பாதித்து இருக்கிறது. அந்த வங்கி அதிகாரியின் கேலி எஸ் ஏ பியை உறுத்தவில்லை. ஆனால் காரியஸ்தர் மஞ்சண்ணனை அந்த வங்கி அதிகாரியின் குத்தல் உறுத்தியிருக்கிறது என்பது எஸ் ஏ பிக்கு வருத்தத்தை தந்தது. வெகு நேரம் யோசித்தார். வக்கீலுக்கு படித்திருக்கிறார்.ஆனால் அந்த தொழிலில் நாட்டமில்லை. வேறு என்ன செய்ய? எழுத்தில், இலக்கியத்தில் மிகுந்த நாட்டம் இருக்கிறது. தன்னுடன் கல்லூரியில் படித்த பார்த்த சாரதியை பங்குதாரராக சேர்த்துக்கொண்டு ஒரு பத்திரிக்கையை ஆரம்பித்து நடத்த முடிவு செய்கிறார். அன்னை, மனைவி.. இருவர் சம்மதத்தையும் பெறுகிறார். முனைப்புடன் காரியத்தில் இறங்குகிறார். அந்த வங்கி அதிகாரி குத்தலாக உங்கள் செட்டியாருக்கு சம்பாதிக்க தெரியாதா? என்று கேட்டது 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம். அதே ஆண்டில் நவம்பர் 15 ஆம் நாள் குமுதம் முதல் இதழ் வெளி வந்தது. நினைத்ததை முடிப்பவன் என்று எஸ் ஏ பி அவர்களையும் அழைக்கலாம். குமுதத்தின் முதல் இதழின் அட்டை படத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன். இந்த தகவல் 1994 ஆம் ஆண்டு குமுதம் இதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. இந்த செய்தி வெளியான இதழை எனக்கு கொடுத்து உதவியவர் முகநூல் நண்பர் திரு.சந்தானம் அவர்கள்.. அப்புறம் இந்த முதல் இதழ் குமுதத்தை யாரேனும் பத்திரமாக வைத்திருந்தால் குமுதம் அலுவலகத்திற்கு அனுப்பி 100 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என்று 1967-68ஆம் ஆண்டு வாக்கில் குமுதத்தில் ஒரு அறிவிப்பு வந்தது. இரண்டு பேர் அட்டை படம் இல்லாத குமுதத்தை அனுப்பினார்கள். ஒருவர் mint condition இல் அந்த முதல் இதழை அனுப்பினார். அவருக்கே 100 ரூபாய் பரிசு கிடைத்தது. அப்போது ராஜமுத்திரை வெளி வந்துக்கொண்டு இருந்தது.. அதற்கு ஒரு அத்தியாயத்திற்கு 100 ரூபாய் சன்மாணம் திரு. சாண்டில்யன் அவர்களுக்கு அனுப்பி கொண்டிருந்தார்களாம் குமுதத்தில் இருந்து. Voir la traduction......!
7 hours 23 minutes ago
அல்லாவை செல்லாக் காகாசாக்குவதில் பாகிஸ்தானும் முன்னணியில்.
7 hours 23 minutes ago
காணாமல் போன இரண்டாவது விமானப்படை விமானியும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது. காணாமல் போன அமெரிக்க விமானப்படை வீரரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானத்தை ( C-130 ) சுட்டு வீழ்த்தி உள்ளதாக ஈரான் அறிவித்து புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
7 hours 24 minutes ago
இதில் வரும் திருநாவுக்கரசு என்பவர் புங்குடுதீவை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். இலங்கை வடபகுதி சர்வோதய சங்கத்தின் தோற்றுவிப்பாளரான இவர் தனது கடைசி காலத்தில் அவரது சுவாமிகள் அருளிய வழியில் சுவாமிகளின் அதே மரநிழலில் இளைப்பாறியதாக அறிய முடிந்தது.
7 hours 32 minutes ago
தவத்திரு யோகர் சுவாமிகளின் பாதங்களே சரணம் ..........! 🙏 நன்றி சிறியர் .......!
7 hours 33 minutes ago
சுமே அவர்களுக்கு மனங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!🙌 ..பிறந்த நாளுக்கும் புட்டவித்து விருந்தினரை பேக்காட்டிவிடாதீர்கள்... இதனை எவர் எப்போது சொல்லி உங்களை வாழ்த்தியிருப்பார்கள்? ஞாபகம் உள்ளதா??🤔
7 hours 33 minutes ago
இதுவரை காலமும் திறந்திருந்த ஹர்மூஸ் நீரிணையை மூட வைத்ததே இந்த முட்டாள்தான், இப்போ திறக்க வேண்டுமென எச்சரிக்கிறார். யாரோடும் ஆலோசியாமல், தெரிவிக்காமல், தான்தோன்றித்தனமாக போரை தொடக்கி, அழிவை ஏற்படுத்தி நடுத்தெருவில் கொண்டு வந்து விட்டிட்டு, கடுமையான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்று ஏலம் போட்டுக்கொண்டிருக்கிறார். தாக்கித்தான் பாருங்களேன்! விடுக்கப்படும் எச்சரிப்பு ட்ரம்பின் பயத்தை காட்டுகிறது. இவரால் அமெரிக்காவுக்கு கீழிறங்கும் காலம், ஈரானை உயர்த்தி விட்டிருக்கிறார்கள். நெஞ்சிலே செருக்குற்றவர்கள் சிதறடிக்கப்படுவார்கள். அமெரிக்காவிலுள்ள ஒரு சில முட்டாள்கள் தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துள்ளார்கள் இந்த முட்டாளை தெரிவு செய்து. ஒருபக்கம் வென்றுவிட்டோம் என்கிறார், மற்றொரு பக்கம், போர் என்றால் அழிவுகள் இருக்கத்தான் செய்யும் என்று சாதாரணமாக சொல்கிறார்.
8 hours 2 minutes ago
நற்செய்திகள் .........! 🙏 நன்றி ஏராளன் .........!
8 hours 20 minutes ago
சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கும் காலம் ஆரம்பம்: இன்று நண்பகல் 12:13 மணிக்கு 8 பகுதிகளில் தாக்கம்! Published By: Digital Desk 1 05 Apr, 2026 | 10:26 AM (இணையத்தள செய்திப் பிரிவு) சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கை நிலப்பரப்பிற்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் தரவுகளின்படி, இன்று நண்பகல் 12:13 மணியளவில் தொட்டந்துவ, ரத்கம, யக்கலமுல்ல, அக்குரஸ்ஸ, முல்கிரிகல, ரன்ன, கலமெட்டிய, உஸ்ஸன்கொட ஆகிய பகுதிகளில் சூரியன் மிக நெருக்கமாக உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த காலப்பகுதியில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். https://www.virakesari.lk/article/242769
8 hours 24 minutes ago
இரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி அமெரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இரண்டு அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இரான் கூறுகிறது. அமெரிக்காவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான சிஎன்என் இந்தச் சம்பவம் பற்றி வெளியிட்டுள்ள செய்தியில், "இரானுடனான போர், அமெரிக்க பொதுமக்கள் மத்தியில் ஏற்கெனவே அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது புதிய மற்றும் மேலும் சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளது." எனத் தெரிவித்துள்ளது. இரான் வான் பரப்பில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக முதலில் தகவல் வந்தது எனக் கூறப்பட்டுள்ள அந்தச் செய்தியில் வெள்ளியன்று மேலும் ஒரு அமெரிக்க போர் விமானத்தை இரான் இலக்கு வைத்ததாக தகவல் கிடைத்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "அமெரிக்கா ராணுவ மேலாதிக்கம் கொண்டுள்ள ஒரு மோதலில், இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது இந்த சமச்சீரற்ற போரின் ஆபத்துகளைச் சுட்டிக்காட்டுகிறது. அதன் செலவினங்கள் அமெரிக்க பொதுமக்களால் ஏற்கனவே ஏற்றுக்கொள்ள முடியாததாக மாறிவிட்டது," என்று சிஎன்என் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தியில், "இந்தச் சம்பவங்கள், இரான் மீது முழு வான் மேலாதிக்கம் கொண்டிருப்பதாக டிரம்ப் நிர்வாகம் கூறி வருவதை கேள்விக்குள்ளாக்குகிறது. கடந்த மாதம் முழுவதும் அமெரிக்கா கட்டமைத்து வந்த ஊடுருவ முடியாத பாதுகாப்பு என்கிற பிம்பத்தையும் உடைத்துள்ளது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. "அமெரிக்க ஆதிக்கம் என்கிற கருத்தை சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது" பட மூலாதாரம்,STATE MEDIA படக்குறிப்பு,சமூக ஊடகங்களில் பரவும் இந்த சிதறல் புகைப்படம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக கூறப்படும் அமெரிக்க போர்விமானத்தைச் சேர்ந்தது தான் எனக் கூறும் வல்லுநர்களிடம் பிபிசி வெரிஃபை பேசியுள்ளது. இரானின் கூற்றைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ள என்பிசி நியூஸ், "சமீபத்திய மோதலில் இரானுக்குள் ஒரு அமெரிக்க விமானம் விழுந்திருப்பது இதுவே முதல்முறை. இரானின் வான்பரப்பு மீதான அமெரிக்காவின் ஆதிக்கம் என்கிற கருத்தை சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது" மேலும் அந்த செய்தியில், "இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக்கொள்வதற்கு இரானுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறி இந்தப் போரில் டிரம்ப் வெற்றியை அறிவித்துள்ளார். ஹோர்மூஸ் நீரிணையை இரான் திறக்கவில்லை என்றால் இந்தப் பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக அச்சுறுத்துவதோடு மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு புதிய படைகளை அனுப்பியுள்ளார்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்க விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக இரான் கூறுகிறது என்றும் இது இரான் வான்பரப்பு மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ஆதிக்கம் பற்றிய தகவல்கள் மீது சந்தேகத்தை எழுப்புவதாகவும் அதில் எழுதப்பட்டுள்ளது. "இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு நடவடிக்கையின் முதன்மையான நோக்கம் என்பது இரானின் வான் பாதுகாப்பு அமைப்பை அழிப்பது மற்றும் பலவீனப்படுத்துவதாக இருந்தது. ஆனால் இந்தப் பிராந்தியம் முழுவதும் பதில் தாக்குதல் நடத்தும் திறனை இரான் தக்கவைத்துள்ளது" என்றும் என்பிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... "டிரம்ப் நிர்வாகம் மீது எழும் கேள்விகள்" சேதமடைந்ததாகக் கூறப்படும் அமெரிக்க போர் விமானத்தின் புகைப்படத்தை இரானிய அரசு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்டதாக ஃபாக்ஸ் நியூஸ் தெரிவிக்கிறது. ஆனால் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை என்றும் ஃபாக்ஸ் நியூஸ் கூறுகிறது. ஒரு போர்க்களத்தில் வான்பரப்பை கட்டுப்படுத்துவது என்பது ஆபத்தே இல்லை என அர்த்தமாகாது என வல்லுநர்கள் கூறுவதாக குறிப்பிடும் ஃபாக்ஸ் நியூஸ், விமானப்படையின் எஃப்-15இ போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பது இரான் வான் பரப்பின் மீது மேலாதிக்கம் செலுத்துவதாக டிரம்ப் நிர்வாகம் கோரி வருவது பற்றி கேள்விகளை எழுப்புவதாகவும் பதிவு செய்துள்ளது. "வரலாற்று ரீதியாகவும் பார்த்தால் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் நான்கு வார சண்டைக்குப் பிறகு ஒரு போர் விமானத்தை இழப்பது என்பது அசாதாரணமானது அல்ல," என ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டேவிட் டெப்டுலா வெள்ளிக்கிழமை ஃபாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். "இது, நீங்கள் விரும்பும் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும், எந்த தடையும் இல்லாமல் உங்கள் வேலையை செய்வதற்கான திறன் உங்களுக்கு இருப்பதையே உணர்த்துகிறது," என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரின் கூற்றுப்படி, ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்மில், 43 நாட்கள் சண்டையின்போது கூட்டணி படைகள் தினமும் ஒரு விமானத்தை இழந்துவந்தன. 1990-இல் குவைத் மீதான இராக்கின் தாக்குதலுக்குப் பிறகு இராக்கிற்கு எதிராக ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்ம் தொடங்கப்பட்டது. "டிரம்புக்கு அரசியல் சவாலாக மாறலாம்" பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,கோப்புப் படம் இரானின் திறன்கள் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் டிரம்ப் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தொடர்ந்து கூறி வந்ததாக ஏபிசி நியூஸ் தெரிவிக்கிறது. இரானின் வான் பாதுகாப்பு அமைப்பு அமெரிக்க ராணுவத்தால் அழிக்கப்பட்டது என அவர் கூறியதாக ஏபிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வெள்ளிக்கிழமை, இரான் பகுதிக்குள் அமெரிக்க போர் விமானமான எஃப்-15இ சுட்டு வீழ்த்தப்பட்டதாக பல அமெரிக்க அதிகாரிகள் கூறுவது அவரின் கருத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இந்தச் சம்பவம் பற்றி செய்தி வெளியிட்டுள்ள வாஷிங்டன் போஸ்ட், "காணாமல் போன அமெரிக்க வீரரைத் தேடுவது அமெரிக்க ராணுவத்திற்கு மிகவும் ஆபத்தான தருணமாக மாறிவிட்டது. இது காணாமல் போனவரை மட்டுமல்லாது அவரை மீட்கும் பணியில் உள்ள குழுவினரையும் இரானிய தாக்குதல் ஆபத்தில் நேரடியாக இட்டுள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த மோதலில் எதிரியின் பகுதிக்குள் அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்றும் இந்தச் சம்பவம் டிரம்புக்கு அரசியல் ரீதியாக சவாலாக மாறலாம் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form "இரான் போரை எதிர்ப்பவர்கள் மட்டுமல்லாது தனது ஆதரவாளர்கள் மத்தியிலும் டிரம்ப் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார். இந்த வாரம் நிகழ்த்திய உரையில் போர் 'அதன் முடிவை நெருங்கி வருவதாக' டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சமீபத்திய நிகழ்வுகளை அந்தக் கருத்தை கேள்விக்கு உள்ளாக்குகின்றன," என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. சண்டைக்கு நடுவே தேடுதல் மற்றும் மீட்பு பணி என்பது அமெரிக்க ராணுவத்தின் மிகவும் ஆபத்தான நடவடிக்கைகளுள் ஒன்று. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஹெலிகாப்டர்களும் விமானமும் தரைக்கு மிகவும் நெருக்கமாக பறக்கும். இதில் எதிரியின் தாக்குதல்களுக்கு இலக்காகும் வாய்ப்பை மேலும் அதிகரிக்கும். "இது மிகவும் ஆபத்தான பணி," என்கிறார் விமான மீட்பு பணிகளில் அனுபவம் பெற்ற முன்னாள் அமெரிக்க தளபதியாக ஜேம்ஸ் ஸ்லிஃப். "எதிரி நிலப்பரப்பில் ஒருவர் எவ்வளவு நேரம் இருக்கிறாரோ அவ்வளவு தூரம் அவரை பாதுகாப்பாக மீட்டெடுப்பது கடினமானது." என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர், "தகவல் முழுமையாக இல்லையென்றாலும் இத்தகைய பணிகள் உடனடியாக தொடங்கப்படுகின்றன. ஏனெனில் அந்த வீரர் பிடிக்கப்பட்டால் எதிரி அதனை பரப்புரைக்காக பயன்படுத்தலாம்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn0wrve5gx0o
8 hours 26 minutes ago
நாடாளாவிய ரீதியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் 05 Apr, 2026 | 11:30 AM நாடாளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (05) கிறிஸ்தவ மக்கள் மிகுந்த பக்தியுடன் இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம் உயிர்ப்பை நினைவுகூறும் முகமாக உயிர்த்த ஞாயிறு தினத்தை கொண்டாடுகின்றனர். மன்னார் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மறுதினம் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் உயிர்த்த ஞாயிறு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சனிக்கிழமை (04) இரவு நாடளாவிய ரீதியில் மக்கள் உயிர்த்த ஞாயிறு வழி பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம்பெற்றதுடன் தேவாலயங்களுக்கு பாதுகாப்புக்கு பலப்படுத்தப்பட்டிருந்தது. இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று (04) சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. திருவிழா திருப்பலி இடம்பெற்ற போது ஆலயத்தை சூழ பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது. இதன் போது ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தனர். மட்டக்களப்பு இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூறும் ஈஸ்டர் பண்டிகையினை உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் சனிக்கிழமை (04) இரவு இடம்பெற்ற ஈஸ்டர் ஆராதனை வழிபாட்டு திருப்பலியினை தொடர்ந்து நினைவு கூர்ந்தனர். மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பிரதான ஈஸ்டர் ஆராதனை வழிபாட்டு திருப்பலி புனித மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. ஆலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து விசேட ஆராதனைகள் நடைபெற்று பாஸ்காதிரி நீரில் நனைக்கப்பட்டு நீர் ஜெபிக்கப்பட்டு மக்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்டது. இதன்போது உயிர்த்த ஞாயிறு விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் பக்தர்களுக்கு ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது. அத்துடன் 2019 ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளின்போது உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் அவரது ஆத்மசாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டன. இந்த விசேட திருப்பலியில் பங்கு மக்கள் கலந்து சிறப்பித்துத்தடன் நண்பர்கள் ,குடும்ப உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டனர். இன்றைய தினம் வழிபாடுகள் ஆலயத்தில் பலத்த பாதுகாப்புடன் முன்னெடுக்கப்பட்டது. ஆலயத்திற்கு முன்பாக பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் விமானப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மலையகம் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மறுதினம் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் உயிர்த்த ஞாயிறு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது அந்த வகையில் கிறிஸ்தவ பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் பிரதான ஈஸ்டர் ஞாயிறு ஆராதனை, ஞாயிற்றுக்கிழமை (05) அன்று ஹட்டன் மற்றும் நுவரெலியா பகுதியில் உள்ள முக்கிய தேவாலயங்களில் நடைபெற்றது . சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் நடைபெற்ற இந்த ஆராதனைக்கு, ஹட்டன் ஸ்ரீ குருச தேவாலயத்தின் தலைமை குருவான அருட்தந்தை எட்வின் ரொட்ரிகோ தலைமை தாங்கினார் மேலும் நுவரெலியா புனித பிரான்சி சவேரியார் தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றது அத்துடன் நானுஓயா புனித ரீட்டா அம்மாள் தேவாலயத்தில் பங்குத் தந்தை சற்குண ராஜா தலைமையில் உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது ஈஸ்டர் பண்டிகை ஆராதனை பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து திருப்பலியை ஒப்புக்கொடுத்துள்ளனர். மேலும், இராணுவம், காவல்துறை மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினரால் தேவாலயத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242751
8 hours 34 minutes ago
ஈரானில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட இருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம் Published By: Digital Desk 3 05 Apr, 2026 | 12:20 PM ஈரானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது, இராணுவத் தளமொன்றைத் தாக்கி ஆயுதங்களைக் கொள்ளையடிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப் 05) மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. முகமதுஅமின் பிக்லாரி மற்றும் ஷாஹின் வாஹெத்பராஸ்ட் ஆகிய இருவருக்கே இவ்வாறு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. "கிளர்ச்சியாளர்கள்" எனக் குறிப்பிடப்பட்ட இவர்கள், இராணுவத் தளவாடங்களைத் திருடி மனிதாபிமானமற்ற முறையில் பாரிய கொலைகளைச் செய்ய முயன்றதாக ஈரான் உயர் நீதிமன்றம் இவர்களது தண்டனையை உறுதிப்படுத்தியது. கடந்த வாரம் இதே வழக்கின் கீழ் 18 வயதான அமீர்ஹொசைன் ஹதாமி என்பவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தண்டனைகள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பலவந்தமாகப் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இந்தத் தண்டனைகள் வழங்கப்பட்டதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற மேலும் 11 நபர்களுக்கு எந்த நேரத்திலும் மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானில் நிலவும் தற்போதைய சூழல்அமெரிக்காவுடனான போர் பதற்றம் ஒருபுறம் இருக்க, உள்நாட்டில் வெடித்துள்ள ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க ஈரான் அரசாங்கம் முன்னெடுத்து வரும் இந்தத் தீவிர நடவடிக்கைகள் அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய அடக்குமுறையாகக் கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/242785
8 hours 34 minutes ago
நன்றி விரிவான விளக்கம் மற்றும் நேரத்திற்கு. எந்த சீற்றும் கிடைக்கவில்லை என்றால் சீமான் இல்லையென்று வைத்துக் கொண்டால் கட்சி மற்றும் தொண்டர்கள் தொடருவார்களா? அதேபோல எந்த சீற்றும் கிடைக்கவில்லை என்றால் விஜய் இல்லையென்று வைத்துக் கொண்டால் கட்சி மற்றும் தொண்டர்கள் தொடருவார்களா???
8 hours 41 minutes ago
https://www.threads.com/@mohan.ka.rulz/post/DWvAHTYFUtp?xmt=AQF09du0obrnGcP4-RR0j1esZjdwtoF53KWkXYWuTH7qbhMYQSD_6Ix9OlI2eMjAoCFx7-A&slof=1
8 hours 45 minutes ago
ஒழுங்காக தடுப்பூசி செலுத்திய நம்பிக்கையில் விட்டிருக்கலாம்! என்றாலும் ஆபத்தான செயல் தான்.
8 hours 49 minutes ago
இரானில் எஃப்-15 போர் விமானம் வீழ்ந்த இடத்தில் தேடப்பட்ட 2வது அமெரிக்க வீரரும் மீட்பு - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,CHRIS RADBURN/AFP via Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் 5 ஏப்ரல் 2026, 05:32 GMT புதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் (இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 போர் விமானத்தில் இருந்து இரண்டாவது வீரரையும் தேடிக் கண்டுபிடித்து மீட்டுவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எஃப்-15 போர் விமானம் இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் காணாமல் போன விமானப்படை வீரரைத் தேடும் பணியில் இரானும் அமெரிக்காவும் போட்டிபோட்டு ஈடுபட்டிருந்தன. இந்தச் சூழலில் தேடப்பட்டு வந்த விமானப்படையின் இரண்டாவது வீரர் கிடைத்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த தகவலை தனது ட்ரூத் சோசியல் பதிவு மூலம் உறுதிப்படுத்தினார். அந்த அதிகாரி எவ்வாறு மீட்கப்பட்டார் என்பது பற்றி முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. எனினும் இந்த நடவடிக்கையை நெருக்கமாக கண்காணித்த ஒருவர், தெற்கு இரானில் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்பு பணி நடத்தப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார். இந்த மீட்பு பணியின்போது அமெரிக்க மற்றும் இரானிய படைகள் இடையே சண்டை நடைபெற்றதாக பிபிசிக்கு தகவல் கிடைத்தது. விமானத்திலிருந்து வெளியேறிய போது விமானி காயமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தேடுதல் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள் முன்னதாக காணாமல் போன அமெரிக்க வீரரை கண்டுபிடிக்க உதவுபவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இரான் ராணுவத்துடன் பொதுமக்களும் அமெரிக்க வீரரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். காணாமல் போன அமெரிக்க வீரரை கண்டுபிடித்து மீட்டு விட்டதாக டிரம்ப் உறுதி செய்வதற்கு முன்பாக இரானிய பொதுமக்களும் தேடுதல் பணியின் இணைந்திருந்தனர். சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் தென்மேற்கு இரானில் உள்ள மலைப்பகுதி நோக்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது. வான் தாக்குதல்களில் 4 பேர் கொல்லப்பட்டதாக இரான் தகவல் காணாமல் போன அமெரிக்க வீரர் இருந்ததாக நம்பப்பட்ட பகுதியில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. உள்ளூர் ஆளுநர் ஒருவரை மேற்கோள்காட்டி தஸ்னிம் செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியின்படி, தென் மேற்கு இரானில் உள்ள போயர்-அஹமது மாகாணத்திலும் கோகிலுயேவின் மலைப்பகுதிகளிலும் நடந்த தாக்குதல்களில் 3 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஆளுநர் குற்றம் சுமத்தியிருந்தார். அதன் பிறகு மாகாணத்தின் துணை ஆளுநரான ஃபட்டா முகமது உள்ளூர் இரானிய ஊடகங்களிடம் பேசுகையில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது எனத் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தாக்குதல்கள் அமெரிக்க வீரர் மீட்புப் பணிகளுடன் தொடர்புடையதா என்பதில் தெளிவில்லை. அமெரிக்க டிரோன் வீழ்த்தப்பட்டதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் இரானிய ஊடகங்களில் வந்துள்ள செய்தியின்படி, இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த தேடுதல் பணியின்போது அமெரிக்க டிரோன் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஃபார்ஸ் செய்தி முகமை மற்றும் புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி முகமை ஆகியவற்றை மேற்கோள்காட்டி அதன் செய்தித் தொடர்பு அலுவலகம் கொடுக்கும் தகவல்களின்படி, அந்த டிரோன் இரானின் தெற்கு இஸ்ஃபஹான் மாகாணத்தில் விழுந்தது. ஆனால் இந்த தகவல் அமெரிக்க தரப்பிலிருந்து உறுதி செய்யப்படவில்லை. டொனால்ட் டிரம்ப் கூறியது என்ன? இந்த தகவலை உறுதிபடுத்திய டொனால்ட் டிரம்ப், தனது பதிவில் மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். "அமெரிக்க ராணுவம் வரலாற்றில் மிகவும் சவாலான தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டது. இது மிகவும் மதிக்கத்தக்கவரும் மிகச் சிறந்த அதிகாரியுமான கர்னல் ஒருவருக்காக நடத்தப்பட்டது. அவர் பாதுகாப்பாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது." எனத் தெரிவித்திருந்தார். தனது பதிவில், "இந்த தைரியமிக்க அதிகாரி இரானின் ஆபத்தான மலைகளில் எதிரிகளால் சூழப்பட்டிருந்தார். ஒவ்வொரு மணி நேரமும் இரானிய ராணுவம் தன்னை நெருங்கி வருவதை அவர் பார்த்து வந்தார். ஆனால் அவர் ஒருபோதும் தனியாக இருக்கவில்லை. முப்படைகளின் தளபதியான நான் மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர், கூட்டு படை தளபதிகள் மற்றும் சக வீரர்கள் அவரது இருப்பிடத்தை 24 மணி நேரமும் கண்காணித்து மீட்புப் பணி திட்டமிடப்பட்டது." என்றார். பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty Images படக்குறிப்பு,டிரம்ப் எனது உத்தரவின்பேரில் அவரை மீட்க, உலகின் மிகவும் நவீன ஆயுதங்களைக் கொண்ட விமானத்தை அமெரிக்க ராணுவம் அனுப்பி வைத்திருந்தது எனக் கூறுகிறார் டிரம்ப். அந்த வீரர் காயமடைந்துள்ளதாகக் கூறிய டிரம்ப் அவர் மீண்டு வருவார் என்றும் தெரிவித்தார். "நேற்று நாம் நடத்திய வெற்றிகரமான ஆபரேஷனைத் தொடர்ந்து இந்த மீட்புப் பணி நடைபெற்றது. ஆனால் மற்ற அதிகாரிகள் ஆபத்தில் சிக்காமல் இருப்பதற்காக நாம் பொதுவெளியில் அதனை தெரிவிக்கவில்லை," என்றும் அவர் குறிப்பிட்டார். எதிரியின் பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களிலிருந்து இரண்டு அமெரிக்க விமானிகள் மீட்கப்பட்டது இதுவே முதல்முறை எனக் குறிப்பிடும் டிரம்ப், "எந்த அமெரிக்க வீரரையும் விட்டுவிட்டு நாங்கள் செல்ல மாட்டோம். இந்த இரண்டு மீட்புப் பணிகளிலும் எந்த அமெரிக்க வீரரும் கொல்லப்படவுமில்லை காயமடையவுமில்லை. இது இரானிய வான்பரப்பு மீது முழுமையான கட்டுப்பாட்டை நாம் அடைந்துவிட்டோம் என்பதை நிருபிக்கிறது." என்றார். அமெரிக்க அதிகாரிகள் கூறுவது என்ன? வெள்ளை மாளிகை செய்தியாளர் பெர்னட் டெபுஸ்மேன் ஜூனியர் வழங்கும் தகவல்களின்படி, அமெரிக்காவில் உள்ள முன்னாள் மற்றும் இந்நாள் அதிகாரிகள் மீட்புப் பணி வெற்றியடைந்ததைக் கொண்டாட தொடங்கிவிட்டனர். "எவரையும் கைவிடுவதில்லை என்பதே அமெரிக்க ராணுவத்தின் கொள்கையாக உள்ளது," என்றார் மத்திய கிழக்கிற்கான பாதுகாப்பு துணை உதவி செயலாளர் மிக் முல்ராய். "இன்றைய தினம் அந்த முக்கிய அர்ப்பணிப்பிற்கான சிறந்த எடுத்துக்காட்டு." என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர், "அமெரிக்க ராணுவம், உளவு அமைப்புகள் மற்றும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் அமெரிக்க மக்களின் நன்றிக்கு உரித்தானவர்கள்." என்றார். கடந்த கால மீட்பு நடவடிக்கைகள் 2009-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் போவி பெர்க்டால் என்கிற அமெரிக்க வீரர் சிறைபிடிக்கப்பட்டிருந்தார். அவரை விடுவிக்க 2014-இல் அப்போதைய அதிபர் பாரக் ஒபாமாவின் நிர்வாகம் குவாண்டநாமோ விரிகுடா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 5 தாலிபன் சிறைவாசிகளை விடுவித்தது. Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form 1979-இல் அமெரிக்க ராஜதந்திரிகள் இரானால் 444 நாட்கள் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை மீட்கும் ராணுவ முயற்சி தோல்வியடைந்த நிலையில், இரான் மீதான சில பொருளாதார தடைகளை நீக்கியும் 8 பில்லியன் டாலர் மதிப்பிலான இரானின் சொத்துகளை விடுவித்ததன் மூலமும் தனது ராஜதந்திரிகளின் விடுதலையை அமெரிக்கா உறுதி செய்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c070pr14z7ro
9 hours 16 minutes ago
இந்தியாவுக்கு, பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை! இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்துள்ள நீண்ட எச்சரிக்கைப் பட்டியலில் கொல்கத்தா அண்மையில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, இந்தியா எதிர்காலத்தில் ஏதேனும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால், கொல்கத்தா மீது தாக்குதல் நடத்தி இஸ்லாமாபாத் பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தானின், சியால்கோட்டில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், இந்த முறை இந்தியா ஏதேனும் போலித் தாக்குதல் நடத்த முயன்றால், எல்லாம் வல்ல இறைவனின் அருளால், நாங்கள் தாக்குதலை கொல்கத்தாவிற்கு எடுத்துச் செல்வோம். இந்தியா தனது சொந்த உளவாளிகளையோ அல்லது பாகிஸ்தானிய கைதிகளையோ பயன்படுத்தி ஒரு சம்பவத்தை அரங்கேற்றி, அதன் பழியை இஸ்லாமாபாத்தின் மீது சுமத்தக்கூடும் என்றும் அவர் கூறினார். எனினும், இந்தக் கூற்றை நிரூபிப்பதற்கு அவர் எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. இந்த நிலையில், முன்பைப் போலவே இந்த அச்சுறுத்தல்களும் எந்தவித ஆதாரமும் இன்றிய போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே விடுக்கப்பட்டுள்ளதாக இந்தியர தரப்பினர் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகமாகவே உள்ளது. அந்தத் தாக்குதலில், பயங்கரவாதிகளால் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளான 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், மே 7 முதல் 10 வரை இரு அண்டைய நாடுளுக்கு இடையே ஒரு குறுகிய, தீவிரமான இராணுவ மோதலைத் தூண்டியிருந்தது. https://athavannews.com/2026/1471022
Checked
Sun, 04/05/2026 - 15:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed