3 months 1 week ago
நாம் தமிழர்களுக்கு சின்னம் பறிக்கப்பட்ட பொழுது திமுக அதைக் கொண்டாடியது.இப்போது அதன் கூட்டணிக்கட்சியான விசிக,மதிமுக சின்னத்தையும் முடக்குகியிருக்கிறார்கள் திமுக மௌனமாக இருக்கிறது.அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டி வந்தால் அது திமுகவிற்கத்தான் நன்மை.
3 months 1 week ago
என்ன தான் வைக்கோ ஜயா கூட எங்களுக்கு பல முரன் இருந்தாலும்.............நாம் தமிழர் கட்சிக்கு இழைக்கப்ட்ட அநீதி போல் இவர்களுக்கும் நடக்குது...............அண்ணன் திருமாளவனுக்கு பானை சின்னம் குடுக்காம கிரிக்கேட் மட்டை கொடுத்ததாக தகவல் வருது ஆனால் இது நூற்றுக்கு நூறு உறுதியான தகவல் கிடையாது.............
ஜயா வைக்கோ 2014விஜேப்பி கூட கூட்டனி வைச்ச மாதிரி இந்த முறையும் வைச்சு இருக்கனும் பம்பர சின்னம் கிடைச்சு இருக்கு................விஜேப்பியும் திமுக்காவும் சேர்ந்து சின்ன விடையத்தில் பல குளறு படிகள் செய்வது நம் கண் முன்னே தெரியுது...................................
3 months 1 week ago
மருத்துவர்களை தெய்வத்துக்கு சமம் என்பார்கள் அப்படி பட்ட தெய்வங்களுக்கே அங்கு உயிருக்கு பாதுகாப்பில்லை .
3 months 1 week ago
Canola Oil என்ற ஒன்றை இங்கு அதிகம் பயன்படுத்துகின்றார்கள். கனடாவே இந்தப் பயிரை முதலில் உருவாக்கியது. Canada + Ola சேர்ந்தே Canola ஆகியது. Ola என்பது Oil ஐக் குறிக்கும் ஒரு சொல்லாக இங்குள்ளது.
இந்த எண்ணெயில் Saturated fat 7% மட்டுமே உள்ளது, நல்லெண்ணெயில் இந்த கெட்ட கொழுப்பு 14% உள்ளது. மேலும் இது இன்று உள்ள சமையல் எண்ணெய்களில் சிறந்த ஒன்றாக கருதப்படுகின்றது. இது அமெரிக்காவின் ஒரு சந்தைப்படுத்தல் உத்தியாகவும் இருக்கலாம். மிகவும் நன்றாக தரவுகளை உண்டாக்கி, உற்பத்திகளை சந்தைப்படுத்தலில் அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு இணை இல்லை.
கோவிட் தொற்றின் போது, இந்த எண்ணெயின் விலை இரண்டு மடங்காகி, பின்னர் இந்த எண்ணெய் கடைகளில் இல்லாமல் போய், திரும்பவும் வரும் போது விலை மூன்று மடங்காகியது... இது இன்னுமொரு விற்பனைத் தந்திரம் போல......🤣
3 months 1 week ago
மற்றைய கட்சிகள் மைக்கை பிடிக்கவே பயப்பட போகிறார்கள் 😀
துறை வைகோ வேறை சபதமிட்டு விட்டு சிங்கன் முழித்துகொண்டு இருக்கிறார் .
3 months 1 week ago
நாம் தமிழர் தம்பிகளுக்கு என்ன வெறித்தனம்.பல நாள் பட்டினி கிடந்த புலியை இரையை நோக்கிப் பாய்வது போல சில மணி நேரங்களில் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து விட்டார்கள்.ஏன்டா பறித்தோம் என்று பாஜகவும் அதற்குத் துணை போன திமுக உபிக்களும் கதறிக் கொண்டிருக்கிறார்கள்
3 months 1 week ago
10.04 pm / 27.03.2034
Just 10.04 hrs
403K+ posts 🎙️🎙️🎙️
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி 🐯🎙️🎙️🎙️
🔥
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
#NTK_Symbol_Mike
3 months 1 week ago
இந்தக் கூத்து எப்ப நடந்தது! 😂
அந்த அழகியிண்ட படம் எங்க கிடைக்கும்?! 👀
3 months 1 week ago
Published By: SETHU 27 MAR, 2024 | 06:06 PM
ஜேர்மனியில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் குறைந்தபட்சம் ஐவர் பலியானதுடன் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளரன்.
லீப்ஸிக் நகரில் இந்த பஸ் கவிழ்ந்தது.
ஜேர்மனியின் பேர்லின் நகரிலிருந்து சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரை நோக்கி இந்த பஸ் சென்றுகொண்டிருந்ததாக பிளிக்ஸ்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்படி பஸ்ஸில் 53 பயணிகளும் இரு சாரதிகளும் இருந்தனர் எனவும் விபத்துக்கான காரணம் தெரியவில்லை எனவும் அந்நிறுவனம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
https://www.virakesari.lk/article/179843
3 months 1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
எழுதியவர், சிராஜ்
பதவி, பிபிசி தமிழ்
27 மார்ச் 2024, 02:42 GMT
இந்திய சமையலில் எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுகு எண்ணெயும், தென் பகுதியில் கடலை மற்றும் நல்லெண்ணெயும், கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் தேங்காய் எண்ணெயும் பல வருடங்களாக பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தந்த பகுதிகளின் புவியியல் அமைப்பு, சீதோஷண நிலை, கலாச்சாரம், உணவு மற்றும் சமைக்கும் முறை போன்ற அம்சங்களின் அடிப்படையில் மக்கள் இந்த எண்ணெய்களுக்கு பழகி விட்டனர்.
இவை தவிர்த்து, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தியாவிற்குள் அறிமுகம் செய்யப்பட்ட சூரிய காந்தி எண்ணெய், செம்பனை எண்ணெய் (Palm oil), ஆலிவ் எண்ணெய் போன்றவையும் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.
உணவின் சுவையை தீர்மானிப்பதே எண்ணெய் தான் என சொல்லப்பட்டாலும் கூட, பெரும்பாலானோருக்கு கொழுப்பு என்றவுடன் உணவில் சேர்க்கப்படும் எண்ணெய் தான் நினைவுக்கு வருகிறது. அதிலும் நாற்பது வயதுக்கு மேற்பட்டோர் பலர் எண்ணெய் கலந்த உணவு என்றாலே சற்று விலகி நிற்கிறார்கள்.
எண்ணெய் பயன்படுத்தாத உணவு என்பது வேகவைத்த உணவு மட்டுமே, ஆனால் அவை தினமும் எடுத்துக்கொள்வதற்கு ஏற்றதாகவும், அனைத்து வகையான சத்துக்களும் நிறைந்ததாக இருக்குமா என்றால் இல்லை என்று தான் ஆய்வுகள் சொல்கின்றன.
சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது நல்லது? எண்ணெய் என்றால் கொழுப்பு மட்டும் தானா? ரீஃபைண்டு எண்ணெயை விட செக்கு எண்ணெய் உடலுக்கு நல்லதா? எண்ணெய் கலந்த உணவுகளைப் பார்த்து அச்சம் கொள்வது அவசியமா? போன்ற கேள்விகளுக்கான விடையை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய் (Rice bran) போன்றவற்றில் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளன
எண்ணெயில் உள்ள கொழுப்புகள் உடலுக்கு என்னென்ன?
தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் என எடுத்துக்கொண்டால், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயில் ஆகியவற்றை சொல்லலாம். இந்த மூன்று எண்ணெய்களிலும் என்னென்ன கொழுப்புகள் உள்ளன, அவை உடலுக்கு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என பார்க்கலாம்.
எண்ணெய்களில் உள்ள கொழுப்பை மூன்று வகைகளாக பிரிக்கலாம், சாச்சுரேட்டட் (Saturated), மோனோ அன்சாச்சுரேட்டட் (monounsaturated), பாலி அன்சாச்சுரேட்டட் (Poly unsaturated). தேங்காய் எண்ணெய், பாமாயில், நெய், வெண்ணையில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம். மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆலிவ் எண்ணெய், சோயாபீன் எண்ணெய், கடலை எண்ணெயில் அதிகம் உள்ளது.
நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய் (Rice bran) போன்றவற்றில் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளன.
1. தேங்காய் எண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்பு மிக அதிகம் (82%), மோனோ அன்சாச்சுரேட்டட் மிகக் குறைவு (6%), பாலி அன்சாச்சுரேட்டட் இன்னும் குறைவு (2%).
தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் அதிகளவில் உள்ளது, இது HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். உயர்- வெப்ப சமையலுக்கு இந்த எண்ணெய் உகந்ததாக இருக்கும்.
அதே வேளை, தேங்காய் எண்ணெயில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புகளால், அதை அதிகம் எடுத்துக் கொண்டால் கெட்ட கொழுப்பு உருவாகி, இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. தேங்காய் எண்ணெயில் கலோரிகளும் மிக அதிகம்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் அதிகளவில் உள்ளது, இது HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
2. நல்லெண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்பு மிகக் குறைவு (14%), மோனோ அன்சாச்சுரேட்டட் மிதமான அளவு (42%), பாலி அன்சாச்சுரேட்டட் மிதமான அளவு (40%).
எள் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளும் நிறைந்துள்ளன, இது உடலின் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.
3. பாமாயிலில் சாச்சுரேட்டட் சற்று அதிகம் (49%), மோனோ அன்சாச்சுரேட்டட் மிதமான அளவு (37%), பாலி அன்சாச்சுரேட்டட் மிகக் குறைவு (9%)
பொதுவாக பாமாயிலை எடுத்துக்கொண்டால், அது மலிவானது என்றும், ஆரோக்கியமற்றது என்ற எண்ணமும் உள்ளது. ஆனால் இதில் வைட்டமின் இ எனப்படும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இந்த எண்ணெய் ஆரோக்கியமற்றது, கெடுதலானது என்பதற்கு போதிய மருத்துவச் சான்றுகள் இல்லை.
சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் ரீஃபைண்டு எண்ணெயாக பாமாயில் பெறப்படுவதால் அதற்குரிய சில சிக்கல்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. எனவே பாமாயிலை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ரீஃபைண்டு எண்ணெய் என்றால் என்னென்ன சிக்கல்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் ரீஃபைண்டு எண்ணெயாக பாமாயில் பெறப்படுவதால் அதற்குரிய சில சிக்கல்கள் உள்ளன
செக்கு எண்ணெய் Vs ரீஃபைண்டு எண்ணெய்.
செக்கு எண்ணெய் என்பது மிகவும் பழமையான முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய். பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படும் முறைப்படி, மாடுகள் கொண்டு இழுக்கப்படும் ஒரு செக்கில், எண்ணெய் விதைகள் அரைக்கப்பட்டு, எண்ணெய் எடுக்கப்படும். சில நாடுகளில் குதிரைகளும், ஒட்டகங்களும் கூட செக்கிழுக்க பயன்படுகின்றன.
இவ்வாறு செக்கில் அரைக்கப்பட்டு கிடைக்கும் எண்ணெய் கோல்ட் பிரஸ்டு ஆயில் (Cold pressed oil) என்று அழைக்கப்படுகிறது. அதாவது செக்கில் அரைக்கப்படும் போது, உள்ளிருக்கும் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு மேல் செல்லாது.
குறைவான வெப்பநிலையில் செக்கில் விதைகள் அரைக்கப்படுவதால், அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயில் இயற்கையான வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்சிடன்டுகள் (Anti oxidants) என எல்லாம் அதன் அசல் வடிவில் இருக்கும். இதனால் எண்ணெயில் மனம் மற்றும் சுவை அதிகமாக இருக்கும்.
இதனால் தான் செக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது என்று பல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த எண்ணெயின் தயாரிப்பு செலவு அதிகம். காரணம், செக்கின் மூலமாக விதைகளில் இருக்கும் 30 முதல் 40% எண்ணெயை மட்டுமே பிரித்தெடுக்க முடியும். இதனால் கழிவு அதிகமாக இருக்கும்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
செக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது என்று பல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுவே இயந்திரத்தால் அரைக்கப்பட்டு எண்ணெய் தயாரிக்கும் போது (Expeller pressed oil), 80 முதல் 90% எண்ணெயை பிரித்தெடுக்க முடியும். ஆனால் உள்ளிருக்கும் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை விட அதிகமாக இருக்கும் என்பதால் எண்ணெயின் இயற்கை தன்மை மாறிவிடும்.
இதற்கு பிறகு வந்த முறைதான், சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு. விதைகளை நன்றாக அரைத்து, பின்னர் அதனுடன் எக்சேன் (Hexane) எனப்படும் வேதியியல் பொருளைக் கலக்கப்படும். விதைகளில் உள்ள 100% எண்ணெயை இந்த எக்சேன் எடுத்துவிடும். பின்னர் அடுத்த கட்டத்தில் எண்ணையில் கலந்துள்ள எக்சேன் பிரிக்கப்படும்.
பின்னர் பல்வேறு வேதியியல் முறைகள் மூலமாக அந்த எண்ணெய் சுத்திகரிக்கப்படும். இறுதியாக மனமும் சுவையும் அதிகம் இல்லாமல், சுத்தமாக, தண்ணீர் போல நமக்கு கிடைப்பதே ரீஃபைண்டு எண்ணெய்.
கடந்த சில வருடங்களாக மக்களால் பயன்படுத்தப்படும் சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய் (Rice bran oil) போன்றவை எக்சேன் பயன்படுத்தி எடுக்கப்படும் ரீஃபைண்டு எண்ணெய்களே.
படக்குறிப்பு,
ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறையின் தலைவருமான எஸ்.சந்திரசேகர்.
செக்கு எண்ணெய் தான் நல்லதா?
“சந்தேகமே வேண்டாம், செக்கு எண்ணெய் தான் நல்லது. அறிவியல் ஆய்வுகள் மூலம் நமக்கு தெரியவருவது அதுதான்” என்கிறார் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறையின் தலைவருமான எஸ்.சந்திரசேகர்.
தொடர்ந்து பேசிய அவர், “பொதுவாகவே சீதோஷண நிலை, வாழ்வாதார நிலை, உணவுப் பொருட்களுக்கு ஏற்றவாறு எண்ணெய் வகை மற்றும் அளவு மாறும். எல்லா வகை எண்ணெய்களிலும் நல்ல கொழுப்பும் உள்ளது, அது உடலுக்கு கண்டிப்பாக தேவை." என்றார்.
"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நமது சீதோஷண நிலைக்கு ஏற்ற எண்ணெய் என்றால் அது நல்லெண்ணெய் தான். ஆனால் எவ்வளவு எண்ணெய் சேர்க்கிறோம் என்பது முக்கியம். ஒருவருக்கு இதய நோய், கொழுப்பு பிரச்னை, உயர்ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இருந்தால் எண்ணெய் அளவு மாறுபடும்” எனக் கூறுகிறார் சந்திரசேகர்.
“நல்லெண்ணெய் தவிர்த்து ஆலிவ் எண்ணெய் சிறிதளவு பயன்படுத்தலாம். பொரிப்பதற்கு ரைஸ் பிரான் எண்ணெய் பயன்படுத்தலாம், வறுப்பதற்கு கடலை எண்ணெய் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவற்றை குறைவாக எடுத்துக்கொள்ளலாம்."
"எனவே ஒரு எண்ணெய் மட்டுமில்லாமல் எல்லா எண்ணெய்களையும் குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. உதாரணமாக ஒரு நாளுக்கு ஒருவருக்கு 15 மில்லிலிட்டர் எண்ணெய் போதுமானது. ஒரு மாதத்திற்கு 450 முதல் 500 மில்லிலிட்டர் என்பது உகந்தது” என்கிறார்.
“எண்ணெய்யை அறவே தவிர்ப்பது என்பது நல்லதல்ல. அவ்வாறு தவிர்த்துவிட்டு வெறும் வேகவைத்த உணவுகளை சாப்பிடுவதால், உடலில் பல மாற்றங்களும் சத்துக்குறைபாடும் ஏற்படும். எனவே எண்ணெய் மனித உடலுக்கு என்பது மிகவும் அவசியம், ஆனால் எவ்வளவு எண்ணெய்யை எந்த உணவுப் பொருளுடன் எடுத்துக்கொள்கிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார் மருத்துவர் எஸ்.சந்திரசேகர்.
படக்குறிப்பு,
ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.
எந்த சமையல் எண்ணெய் உடலுக்கு நல்லது?
இது குறித்து பேசிய ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன், “தென்னிந்தியாவைப் பொறுத்தவரை நல்லெண்ணெய் தான் சிறந்த எண்ணெய், ஏனென்றால் அதில் தான் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளது. அதிகம் எடுத்துக்கொண்டால் நல்லதல்ல என்பதைத் தாண்டி, நல்லெண்ணெயில் ஆபத்துகள் பெரிதாக இல்லை. பெயருக்கு ஏற்றாற்போல இது நல்ல எண்ணெய் தான்” என்கிறார் அவர்.
தொடர்ந்து பேசிய அவர், “அதோடு சேர்த்து கடலை எண்ணெய் மற்றும் ரைஸ் பிரான் எண்ணெய்யையும் நான் பரிந்துரை செய்வேன். பாமாயிலையும் பயன்படுத்தலாம், ஆனால் நல்லெண்ணெய் அளவுக்கு நல்லதல்ல” என்கிறார்.
ஆனால் எந்த எண்ணெயாக இருந்தாலும், ஒரே எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் என்னவாகும் என்பதையும் அவர் விளக்கினார்.
“ஒரே எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தினால் அது நிறைவுறாக் கொழுப்புகளாக மாறும். இதனால் இதய நோய்கள், புற்றுநோயை ஏற்படுத்தும். ஒருநாளைக்கு 3 ஸ்பூன் அளவிலான எண்ணெய் என்ற அளவைத் தாண்டி அதிகமான எண்ணெய்யை தொடர்ந்து எடுத்துக்கொண்டால், நாம் எடுத்துக்கொள்ளும் கலோரிகள் அதிகரித்துவிடும். உடல் எடை கூடுவதில் தொடங்கி பல்வேறு பிரச்னைகளுக்கு அது வழிவகுத்துவிடும்” என எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.
https://www.bbc.com/tamil/articles/c8v3lqd5j2eo
3 months 1 week ago
மும்பையும் விட்ட பாடில்லை............அவையும் பட்டைய கிலப்பினம்................
3 months 1 week ago
“கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்” - சீமான் சாடல்
“கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்” - சீமான் சாடல்
சென்னை: “கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். அப்படி கூட்டணி வைத்தவர்களுக்கு சின்னங்கள் வந்துள்ளது. நான் கூட்டணி வைக்க மறுத்துவிட்டேன். எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன். இந்த நாட்டில் நல்ல அரசியலை உருவாக்க நினைக்கிறேன். எந்தச் சூழலிலும் என் வாழ்நாளில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதை கருத்தில் கொண்டு புதிய சின்னத்தை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் பணியை நாம் தமிழர் கட்சி மேற்கொண்டது.
அதன்படி, அனுப்பிய சின்னங்களில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, இன்று சின்னத்தை அறிமுகப்படுத்தி செய்தியாளர்களைச் சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
பின்னர் பேசிய அவர், “கடைசி நொடி வரை போராடி பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. அதனால் தான் மைக் சின்னத்தில் போட்டியிடுவது என்று முடிவெடுத்தோம். இவ்வளவு இடையூறுகளையும் தாங்கிக்கொண்டு நாங்கள் களத்தில் நிற்பது மக்களுக்காகதான். மக்கள் எங்களை கைவிட்டுவிட மாட்டார்கள் என்று நம்புகிறோம்.
கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். அப்படி கூட்டணி வைத்தவர்களுக்கு சின்னங்கள் வந்துள்ளது. நான் கூட்டணி வைக்க மறுத்துவிட்டேன். எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன். இந்த நாட்டில் நல்ல அரசியலை உருவாக்க நினைக்கிறேன். அதில் எந்தச் சூழலிலும் என் வாழ்நாளில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.
சின்னத்தில் மட்டும் விவசாயி அல்ல நான். உண்மையிலேயே விவசாயிதான். எனவே, நாங்கள் நம்பிக்கையோடு பயணிக்கிறோம். கொஞ்சம் தாமதம் தான். சின்னம் முதலிலேயே இருந்திருந்தால் பாதி தொகுதிக்கு சென்றிருப்பேன். இப்போது முதலில் இருந்து தொடங்க வேண்டும். நாளையில் இருந்து பிரச்சாரம் செல்கிறேன்.எங்களை சுயேச்சையாக நிறுத்தி, 40 தொகுதிகளுக்கும் 40 சின்னங்கள் கொடுக்க வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணம். ஏழு சதவிகித வாக்குக்கே பயம் என்றால், இந்தத் தேர்தலில் நான் என்ன செய்வேன் என்று யாருக்கு தெரியும்.” என்றார்.
“கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்” - சீமான் சாடல் | “If I had a partnership I would have got the symbol I asked for” - Seeman - hindutamil.in
3 months 1 week ago
பையா மும்பையும் ஸ்ராடிங் நல்லா இருக்கு இனி போகப் போகத்தான் தெரியும்......! 😂
ஆனால் நல்ல விளையாட்டு........ இந்த சீசன் இதுதான் நான் பார்க்கும் முதல் விளையாட்டு........!
3 months 1 week ago
இது வீஜேப்பின் மறு உருவம் தான் இந்த கோமாளி தேர்தல் ஆனையம்................இதில் எங்கையாவது ஜனநாயகம் இருக்கா.............சொல் அளவில் தான் இந்தியா ஜனநாயகம் ஆனால் இது பாக்கா சர்வாதிகார தேர்தல் ஆனையம்............வீஜேப்பி கூட வைக்கோ கூட்டனிக்கு போய் இருந்தால் இன் நேரம் பம்பர சின்னம் கிடைச்சு இருக்கும்.............இந்த தேர்தலில் விஜேப்பியும் திமுக்காவும் நல்லா ஒற்றுமையா செயல் படினம்.............பின் கதவால் திமுக்கா போய் மோடிட்ட சொல்ல நாங்கள் உங்களை தேர்தல் களத்தில் தாக்கிர மாதிரி தாக்குறோம் அதை எல்லாம் நீங்கள் கண்டு கொள்ளக் கூடாது.............நீங்கள் அண்ணாமலையிட்டை சொல்லி எங்களையும் தாக்க சொல்லி சொல்லுங்கோ அப்ப மக்கள் எங்களை நம்பிவிடுவார்கள்............
இதில் கவணிக்க பட வேண்டிய விடையம் என்ன என்றால் அண்ணாமலை போட்டியிடும் தொகுதியில் திமுக்கா நிப்பாட்டின வேட்பாளர் மக்களால் பெரிதும் அறியப் படாத டம்பி நபர்.............இவர்கள் உண்மையில் அண்ணாமலையை வீழ்த்தனும் பாஜக்காவை தோக்கடிக்கனும் என்றால் திமுக்காவில் பிரபலமான வேட்பாளர்களை அந்த தொகுதிக்கு போட்டு இருக்கனுமா இல்லையா.............கஞ்சா கேஸ் 2ஜீ ஊழல் மற்றும் பல குளறு படிகளை திமுக்கா செய்து இருக்கு.............அதற்காக தான் டீலிங் போட்டு டம்மி வேட்பாளர தீமுக்கா களத்தில் இறக்கு இருக்கு.............அண்ணாமலையை தோக்கடிக்கனும் என்றால்
ஆதிமுக்கா மற்றும் நாம் தமிழர் கட்சியால் மட்டும் தான் முடியும்............அண்ணாமலை வென்றால் அல்லது தேர்தல் ஆனையம் அண்ணாமலை வென்றது போல் போலி அறிவிப்பை செய்தால் இதுக்கு பேர் தேர்தல் இல்லை தேர்தல் மோசடி என்று அர்த்தம்...............அண்ணாமலை 2021சட்ட மன்ற தேர்தலிலே படு தோல்வி அடைந்தவர் ஆனால் பாராளமன்ற தேர்தல் என்றால் யோசிச்சு பாருங்கோ😁😜................
3 months 1 week ago
`மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது!' - தேர்தல் ஆணையம்
வைகோ-துரை வைகோ
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய விண்ணப்பத்தின் மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று, `ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், மதிமுக-வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது’ என மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
Tamil News Live Today: தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மைக் சின்னத்தை ஏற்றுக்கொண்டது நா.த.க! | Tamil News Live Today live updates dated 27-03-2024 - Vikatan
3 months 1 week ago
பட மூலாதாரம்,TOMAS TERMOTE
படக்குறிப்பு,
முதல் உலகப்போரில் UC கப்பல் மற்றும் அதன் குழு உறுப்பினர்கள்
27 மார்ச் 2024, 10:51 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போரின் போது காணாமல் போன ஜெர்மன் யு-படகு (நீர்மூழ்கிக் கப்பல்) இருக்கும் இடத்தை டைவர்ஸ் (ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்) கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த அதன் மர்மம் விலகியுள்ளது.
1917 ஆம் ஆண்டில், ஆங்கிலக் கால்வாயில் ராயல் கடற்படையின் 'லேடி ஆலிவ்' கப்பலுக்கும், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் UC-18 க்கும் இடையில் நடைபெற்ற போரின் போது இந்த UC-18 நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனது.
அதோடு சேர்த்து இந்த மோதலில் லேடி ஆலிவ் கப்பலும் கடலுக்குள் மூழ்கிப்போனது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளது.
அதற்கான படப்பிடிப்பு ஆழ்கடலுக்குள் நடந்து கொண்டிருக்கும் போது இந்த UC-18 நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் அதன் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த கப்பலை கண்டுபிடிக்கவும், அதை அடையாளம் காணவும் டைவர்ஸ் (ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்) குழுவுக்கு நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளன.
ஆழ்கடல் திரைப்பட தயாரிப்பாளரான கார்ல் டெய்லர், தற்போது மிகவும் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள 'The Hunt for Lady Olive and the German Submarine' என்ற பிபிசியின் ஆவணப்படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது.
பட மூலாதாரம்,THE HUNT FOR LADY OLIVE AND THE GERMAN SUBMARINE
படக்குறிப்பு,
கப்பல் தேடும் பணியில் நீச்சல் வீரர்கள்
230 அடி ஆழத்தில் நீர்மூழ்கிக் கப்பல்
UC-18 மற்றும் லேடி ஆலிவ் ஆகிய இரண்டு கப்பல்களுமே இந்த போரில் மூழ்கின. இதனால், UC-18 நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 28 பணியாளர்கள் உயிரிழந்தனர்.
பிபிசி ஆவணப்படத்திற்கான படைப்பின்போது, UC-18 இன் எஞ்சிய பாகங்கள் இருக்கும் இடத்தை அடையாளம் கண்ட நீச்சல் வீரர்கள் குழு, லேடி ஆலிவ் மூழ்கிய இடத்தையும் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய கார்ல் டெய்லர், குறைந்த வெளிச்சத்தில் கடலின் அடித்தளத்தை ஆராய்வது சவால்கள் நிறைந்தது என்று கூறினார்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள UC-18 நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்குள் 70 மீட்டர் (230 அடி) ஆழத்தில் நீச்சல் வீரர்களால் அடையாளம் காணப்பட்டது.
இந்த தேடுதல் பணியில் ஈடுபட்ட குழு, கடல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் யு-படகு நிபுணரான தாமஸ் டெர்னாட்டுடன் இணைந்து பணியாற்றியது.
பட மூலாதாரம்,THE HUNT FOR LADY OLIVE AND THE GERMAN SUBMARINE
படக்குறிப்பு,
"ஐரோப்பாவின் வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்திற்குப் பின்னால் உள்ள தியாகங்களை மக்கள் புரிந்துகொள்ள இந்த ஆவணப்படம் உதவும்"
வரலாற்றுச் சான்றுகளின்படி, ஆங்கிலக் கால்வாயில் ஜெர்சி கடற்கரையிலிருந்து 13 கிமீ தொலைவில் இந்த கப்பல்களுக்கிடையில் போர் நடந்துள்ளது.
ஆனால், UC-18 மற்றும் லேடி ஆலிவ்ஸ் ஆகிய கப்பல்கள் மேற்கில் 64 கி.மீ. தொலைவில் காணப்பட்டதாக கார்ல் டெய்லர் கூறியுள்ளார்.
ஆழ்கடல் நீச்சல் குழுவினர் தங்கள் தேடுதலின் போது, இந்த மோதலில் மூழ்கிய இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களின் எச்சங்களையும் கண்டுபிடித்தனர்.
இந்த குழுவின் கண்டுபிடிப்புகள் குறித்து பிரெஞ்சு அதிகாரிகள் மற்றும் ஜெர்மன் கடற்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் பேசிய கார்ல் டெய்லர், “இந்தக் கப்பல்களுக்குப் பின்னால் இருந்த நீண்டகால மர்மம் விலகியுள்ளது போல் தெரிகிறது. ஐரோப்பாவின் வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்திற்குப் பின்னால் உள்ள தியாகங்களை மக்கள் புரிந்துகொள்ள இந்த ஆவணப்படம் உதவும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
https://www.bbc.com/tamil/articles/c80k90w5ywzo
3 months 1 week ago
இப்படி எத்தனை வரும் இருந்து பாருங்கள்.
சும்மா இருந்த சீமானை
தேர்தல்ஆணையம் ரெண்டாக்கியுள்ளனர்.
3 months 1 week ago
சீமானின் இரு பிள்ளைகளும் ஆங்கில மொழியில் கற்பதாக ஒரு தகவல் இந்த தேர்தல் நேரத்தில் வெளியாகி உள்ளது.
3 months 1 week ago
Published By: DIGITAL DESK 3. 27 MAR, 2024 | 03:25 PM
முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று புதன்கிழமை (27) கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு இலங்கையின் இராணுவ தளபதி முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இராணுவ படை தலைமையகத்திற்கு வருகை தந்திருந்தார். அவரிடம் தமது சொந்த காணிகளை விடுவித்து தருமாறு கோரி மகஜர் கையளிக்க குறித்த இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக ஒன்று கூடி கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.
எனினும் இராணுவ தளபதியை தற்போது சந்திக்க முடியாதெனவும் இன்றைய தினம் மாலை 3 மணியளவில் 5 நபர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு மேற்கொண்டு தருவதாகவும் இராணுவத்தினால் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த கவனயீர்ப்பினை நிறைவுக்கு கொண்டு வந்திருந்தனர்.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் கடந்த 11.03.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர். இதன்போது குறித்த கடிதத்தை தான் உரிய தரப்புக்களுக்கு அனுப்பி பத்து நாட்களில் ஒரு பதிலை பெற்று வழங்குவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் திங்கட்கிழமை (25) கேப்பாபிலவு மக்கள் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடிய போது தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் உறுதியான முடிவு இதுவரை கிடைக்கவில்லை என மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக கேப்பாபிலவு மக்கள் தெரிவித்திருந்தனர்.
கேப்பாப்பிலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம், ஆலயங்கள், தேவாலயம், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட மக்களின் குடியிருப்புக்கள் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது.
குறிப்பாக மக்களின் பயன்தரு தென்னை மரங்கள் பல குறித்த காணியிலேயே காணப்படுகின்றன. 62 நபர்களின் 171 ஏக்கர் காணிகள் தற்போது விடுவிக்கப்படாது இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் பல போராட்டங்கள் செய்தும் இதுவரை தீர்வு இல்லை என்றும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்திருந்த நிலையிலே இன்றையதினம் கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/179835
3 months 1 week ago
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் பின்னர், பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கத்தை அதிகரிப்பதற்கும், போதுமான சுகாதார வசதிகளைப் பெறுவதில் சவால்களை எதிர்கொள்ளும் சிறுமிகளுக்கு உதவும் பொருட்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடையாளம் காணப்பட்ட பின்தங்கிய பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களுக்கான வவுச்சர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான சட்டமூலம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்காக அரசால் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிதி சுமார் ரூ. 1 பில்லியன் மற்றும் ஒவ்வொரு வவுச்சரின் மதிப்பும் சுமார் ரூ. 1,200 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://thinakkural.lk/article/297256
Checked
Mon, 07/08/2024 - 12:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed