புதிய பதிவுகள்2

யாழில் வெகு விமர்சையாக இடம்பெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா!

3 months 1 week ago
யாழில் வெகு விமர்சையாக இடம்பெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா! யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பஞ்ச ராஜகோபுர மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் பங்குனி உத்தர நன்னாளில் நடைபெற்றது. இன்று காலை 9.25 மணி தொடக்கம் முற்பகல் 10.33 மணிவரையான சுபமுகூர்த்த வேளையில் துர்க்காதேவிக்கு பெரும் சாந்தி விழா நடைபெற்றது. காலை 6.00 மணி முதல் 7.10 மணிவரை இராஜகோபுர கும்பாபிஷேகமும் காலை 9.25 மணி முதல் 10.33 மணிவரை மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது. கடந்த 20 ஆம் திகதி காலை கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் ஆரம்பமானனதுடன் நேற்று மாலை 2.00 மணி வரை அடியார்களுக்கு எண்ணெய்க்காப்பு சாத்துவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1374782

இலங்கையில் ஏழுமலையான் கோவில் !

3 months 1 week ago
இலங்கையில் ஏழுமலையான் கோவில் ! இலங்கையில் ஏழுமலையான் கோவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறன. இதற்கமைய இலங்கையில் ஏழுமலையான் கோவில் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இலங்கையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அறக்கட்டளை ஒன்று கொழும்பில் பிரமாண்டமான ஏழுமலையான் கோவில் கட்ட உதவி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தின் ஊடாக இந்திய அரசை அனுகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இது குறித்து இந்திய அரசு சார்பில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதனையடுத்து இலங்கையில் ஏழுமலையான் கோவிலை நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1374722

56 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த இறந்த குழந்தை!

3 months 1 week ago
56 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த இறந்த குழந்தை! 56 ஆண்டுகளாக வயது முதிர்ந்த பெண்ணொருவரின் உடலில் குழந்தையொன்று இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவம் பிரேசிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 81 வயதான டேனிலா என்ற மூதாட்டியின் வயிற்றில் இருந்தே இவ்வாறு குழந்தையொன்றின் எலும்புக்கூட்டை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். குறித்த மூதாட்டிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளதாகவும், எனினும் அவர் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அண்மைக்காலமாக அவர் தீவிர வயிற்று வலியில் துடித்து வந்துள்ளார் எனவும், இதனையடுத்து அவர் வைத்தியர்களை நாடியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த வைத்தியர்கள் அதில் இறந்த குழந்தை ஒன்றின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலமாக வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புக் கூட்டை வைத்தியர்கள் நீக்கியுள்ள போதும், மூதாட்டி உடலில் ஏற்பட்ட தொற்றுக்காரணமாக உயிரிழந்துள்ளாார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1374815

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு !

3 months 1 week ago
மேல், வடமேல், தென் மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, அனுராதபுரம் மாவட்டங்களில் அதிகரித்த வெப்பம் நிலவும் ! 25 MAR, 2024 | 06:14 AM மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார், வவுனியா மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலன்நறுவை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய,சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்குஅப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/179611

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 months 1 week ago
துரை வைகோ உடைந்து அழக் காரணம் என்ன? சின்னத்துக்காக மதிமுகவை அழுத்துகிறதா திமுக? பட மூலாதாரம்,DURAIVAIKO/FACEBOOK படக்குறிப்பு, தனது அப்பா ஒரு அரசியல் சகாப்தம் என்று கூறிய துரை வைகோ, மதிமுகவின் நலனுக்காகவே அரசியலுக்கு வந்ததாக தெரிவித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மதிமுக முதன்மைச் செயலாளரான துரை வைகோ அண்மையில் திமுக நிர்வாகிகள் முன்பு உணர்ச்சிவசப்பட்டு அழுத நிகழ்வு தமிழ்நாட்டு அரசியலில் கூர்ந்து கவனிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ வேட்பாளராக களம் காண்கிறார். அதே தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி ஆகியவற்றை சேர்ந்த கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பரப்புரையில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், மதிமுக கட்சிக்கு இன்னும் சின்னமே ஒதுக்கப்படாத நிலை நீடித்து வருகிறது. இதனால், கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்துள்ளதா என்ற கேள்வியும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் தேர்தல் கூட்டம் ஒன்றில் துரை வைகோ, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்பே மேடையில் பேசிய திமுக நிர்வாகி மதிமுக உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். இந்நிலையில், இதற்கு எதிர்வினை ஆற்றிய துரை வைகோ திடீரென்று உணர்ச்சிவயப்பட்டு அழுதுவிட்டார். இதன் பின்னணி என்ன? மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதா என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம். பட மூலாதாரம்,DURAI VAIKO / X படக்குறிப்பு, 2001இல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. மதிமுக தேர்தல் சின்னம் தொடர்பான வழக்கு 1994ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து வந்த வைகோ மதிமுகவை தொடங்கினார். அதற்கு பின்னர் நடைபெற்ற 1996ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்ட மதிமுக, பம்பரம் சின்னத்தில் தேர்தலை சந்தித்தது. அதிமுக - திமுக இல்லாமல் இடதுசாரிகள் மற்றும் ஜனதா தளம் கூட்டணியில் இந்த தேர்தலில் போட்டியிட்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து 1998ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக மூன்று தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதன் பிறகு ஒரே ஆண்டில் மீண்டும் நடத்தப்பட்ட 1999 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - திமுக கூட்டணியில் இணைந்த மதிமுக நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதன் மூலம் 6% வாக்குகளையும் பெற்றது. அதன்பிறகு 2001இல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதோடு அதன் வாக்கு சதவீதம் 6 சதவிகிதத்துக்கும் கீழ் சென்றது. அதற்கு பின் மாறி மாறி அதிமுக, திமுக உள்ளிட்ட கூட்டணிகளில் இடம்பெற்றாலும் மதிமுகவால் பெரியளவிலான வாக்கு வங்கியை பெற முடியவில்லை. இந்நிலையில் 6 சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளை கொண்டுள்ள கட்சி என்று கூறி 2010ஆம் ஆண்டு மதிமுகவின் மாநில கட்சி அந்தஸ்த்தை திரும்ப பெற்றுக்கொண்டது தேர்தல் ஆணையம். இதோடு நிலையான தேர்தல் சின்னம் கிடைக்காது என்றாலும் அடுத்து வந்த தேர்தல்கள் சிலவற்றில் பம்பரம் சின்னத்தை விண்ணப்பித்து பெற்றுக்கொண்டது மதிமுக. பட மூலாதாரம்,VAIKO / X படக்குறிப்பு, 2016ஆம் ஆண்டு மக்கள்நலக் கூட்டணி அமைத்து தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியுடன் களம் கண்ட மதிமுக அந்த தேர்தலிலும் பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிட்டது. துரை வைகோ பேசியது என்ன? திமுக கூட்டணியின் தலைவரும், தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை திருச்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து தொடங்கினார். இந்நிலையில் 23.3.2024 சனிக்கிழமை அன்று திருச்சியில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் அமைச்சர் நேரு, அன்பில் மகேஷ், துரை வைகோ முன்னிலையிலேயே மேடையில் பேசிய திமுக நிர்வாகி திமுக சின்னத்தில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று குறிப்பிட்டார். இதை அங்கிருந்த திமுக தொண்டர்களும் கூச்சலிட்டு வரவேற்பது போல் செய்தனர். இதனை தொடர்ந்து பேசிய துரை வைகோ ஒருகட்டத்தில் உடைந்து அழத் தொடங்கிவிட்டார். பட மூலாதாரம்,VAIKO / X படக்குறிப்பு, 2001இல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. தனது அப்பா ஒரு அரசியல் சகாப்தம் என்று கூறிய அவர், மதிமுகவின் நலனுக்காகவே அரசியலுக்கு வந்ததாக தெரிவித்தார். அப்போது கூட்டத்தில் இருந்து என்ன சின்னம் என்று சொல்லவும் என தொண்டர்கள் கூச்சலிட, “உயிரே போனாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். அப்படி முடியாவிட்டால் விலகிக்கொண்டு திமுகவே நிற்கட்டும், நாங்கள் ஆதரவு தருகிறோம். ஆனால், ஒருபோதும் சின்னத்தை விடமாட்டோம்” என்று கூறினார். துரை வைகோவின் இந்த உரை அவர் மீது அழுத்தம் தரப்படுகிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பட மூலாதாரம்,PRIYAN படக்குறிப்பு, “வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ தனது மகனையே வேட்பாளராக நிறுத்திவிட்டாரே என மதிமுகவின் மூத்த தலைவர்கள் ஏதாவது அழுத்தம் தந்திருக்க வாய்ப்புள்ளது." உட்கட்சி அழுத்தம்? இதுகுறித்து பத்திரிகையாளர் பிரியனிடம் பேசுகையில், "அவருக்கு அவரது கட்சிக்குள் இருந்து ஏதாவது அழுத்தம் வந்திருக்கலாமே தவிர, திமுக தரப்பில் இருந்து எந்த அழுத்தமும் வர வாய்ப்பில்லை" என்று கூறுகிறார். “வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ தனது மகனையே வேட்பாளராக நிறுத்திவிட்டாரே என மதிமுகவின் மூத்த தலைவர்கள் ஏதாவது அழுத்தம் தந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஏற்கெனவே தனிச்சின்னத்தில் நிற்க ஒப்புக்கொண்ட பிறகு திமுக மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொல்லி அழுத்த தர வாய்ப்பில்லை” என்று கூறுகிறார் பிரியன். பட மூலாதாரம்,MALLAI SATHYA / X படக்குறிப்பு, “சின்னம் கிடைக்காத பட்சத்தில் பெருந்தன்மையோடு எங்களது சின்னத்தில் நில்லுங்கள் என்று திமுக கட்சியினர் சொல்கின்றனர். அதை நான் நேர்மறையாகவே பார்க்கிறேன்” ‘திமுகவுக்கு தர்மசங்கடம்’ வேட்பாளர் அறிமுகக் கூட்டமெல்லாம் முடிந்துவிட்ட நிலையில், அனைத்து கட்சிகளும் களத்திற்கு பரப்புரைக்கு சென்றுவிட்டன. இந்த நிலையில், மதிமுகவுக்கு எந்த சின்னத்தில் வாக்கு சேகரிப்பது என்பதில் தான் கூட்டணி கட்சியினரிடையே தர்மசங்கடம் நிலவுதாக கூறுகிறார் மல்லை சத்யா. “சின்னம் கிடைக்காத பட்சத்தில் பெருந்தன்மையோடு எங்களது சின்னத்தில் நில்லுங்கள் என்று திமுக கட்சியினர் சொல்கின்றனர். அதை நான் நேர்மறையாகவே பார்க்கிறேன்” என்று கூறுகிறார் அவர். “களத்தில் திமுக கட்சியினர் உறுதுணையாக நிற்கிறார்கள். தற்போது வரை சின்னம் இல்லாமல் எப்படி பிரச்சாரம் செய்வது, குறுகிய காலத்தில் சின்னத்தை மக்கள் மத்தியில் எப்படி கொண்டு செல்வது என்ற அழுத்தமே நிலவுகிறது ” என்று தெரிவித்துள்ளார் மல்லை சத்யா. பட மூலாதாரம்,MAALAN / X படக்குறிப்பு, "மதிமுகவை பொறுத்தவரை தங்களது சின்னம், கட்சி, அரசியல் எதிர்காலம் என எல்லாவற்றையும் தக்க வைத்துக்கொள்வதற்கான முக்கியமான தேர்தல் இது." மதிமுகவை இணைத்துக் கொள்ள நினைக்கிறதா திமுக? சின்னம் குறித்த பிரச்னை, கூட்டணி தலைவர்களின் கருத்துக்கள் இது ஒருபுறமிருக்க மதிமுகவின் சூழலை பயன்படுத்தி அந்த கட்சியை தன்னோடு இணைத்து கொள்ள திமுக நினைப்பதாக விமர்சிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன். “திமுகவில் இருந்துதான் வைகோ வெளியேறினார். தற்போது பலவீனமான சூழலில் திமுக கூட்டணியில் தான் இருக்கிறார். சின்னமும் இல்லை. இந்த சூழலில் தங்களது சின்னத்தில் போட்டியிட அழுத்தம் கொடுத்து அவர்களது கட்சி உறுப்பினர்களையும் திமுக தனது கட்சியில் இணைத்து கொள்ள விரும்புகிறது. எனவே இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு மதிமுகவிற்கு அழுத்தம் தருகிறது” என்கிறார். மதிமுகவை பொறுத்தவரை தங்களது சின்னம், கட்சி, அரசியல் எதிர்காலம் என எல்லாவற்றையும் தக்க வைத்துக்கொள்வதற்கான முக்கியமான தேர்தல் இது. எனவே அவர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய சூழலில் இருக்கிறார்கள் என்று கூறுகிறார் மாலன். பட மூலாதாரம்,TAMILAN PRASANNA / X படக்குறிப்பு, “நாட்டில் உள்ள எதிர்கட்சிகளுக்கெல்லாம் தேர்தல் ஆணையம் எனும் நடுநிலை அமைப்பை கொண்டு பல்வேறு வழிகளில் பாஜகவே அழுத்தம் தருகிறது” திமுக தரப்பு கூறுவது என்ன? பத்திரிகையாளர் மாலன் சொல்வது போல மதிமுகவை உதயசூரியன் சின்னத்தில் நிற்கச்சொல்லி திமுக கட்டாயப்படுத்துகிறதா என்று செய்தித்தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவிடம் கேட்டோம். இதற்கு பதிலளித்த அவர், “நாட்டில் உள்ள எதிர்கட்சிகளுக்கெல்லாம் தேர்தல் ஆணையம் எனும் நடுநிலை அமைப்பை கொண்டு பல்வேறு வழிகளில் பாஜகவே அழுத்தம் தருவதாக” கூறுகிறார். “சின்னம் குறித்த பிரச்னை திமுகவுக்கும், மதிமுகவுக்குமானது அல்ல. இது திமுகவுக்கும், பாஜகவுக்குமானது. நாட்டில் உள்ள லெட்டர்பேடு கட்சிகளுக்கும் சின்னம் மற்றும் அனுமதி வழங்கும் தேர்தல் ஆணையம், மத்திய அரசின் பேச்சை கேட்டு முக்கிய கட்சிகளுக்கு சின்னம் வழங்க மறுக்கிறது” என்கிறார் அவர். ஆனால், “திமுக தங்களது உள்நோக்கத்தை மறைப்பதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவின் மீது பழி போடுகிறது. அதற்கு பாஜகவே எளிய இலக்கு” என்று கூறுகிறார் பத்திரிகையாளர் மாலன். மதிமுக உதயசூரியன் சின்னத்தில் நிற்க திமுக தலைவர்கள் ஆலோசனை தருவது குறித்து கேட்டபோது, “வெற்றிவாய்ப்பை எந்த காரணத்திற்காகவும் இழக்கக்கூடாது என்ற குறிக்கோள் உள்ளது. சின்னம் அதில் ஒரு கூடுதல் பலன் அளிக்க கூடியது. அந்த வகையில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்." "உதாரணத்திற்கு மதிமுக தொடர்ந்து பரவலான தொகுதிகளில் நிற்கவில்லை. சின்னத்தை பயன்படுத்தவில்லை. அதனால், கூட்டணியின் நன்மைக்காக சிலர் ஆலோசனை கொடுத்திருக்கலாம். ஆனால் அதுகுறித்து இரு தலைமைகளும் முடிவெடுப்பார்கள்” என்று தெரிவித்தார் தமிழன் பிரசன்னா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ”திமுக கூட்டணி உறுதியாக அமைந்துள்ளது. பாஜக அரசை எதிர்த்து சரியான மற்றும் மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையாக முன்வைத்துள்ளோம்." என்கிறார் மதிமுகவின் மல்லை சத்யா. சின்னம் இல்லாமல் இருப்பது பின்னடைவா? தேர்தலில் களம் காணும் இதர கட்சிகள் ஏற்கனவே தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிவிட்ட நிலையில், மதிமுகவிற்கு இன்னும் சின்னமே இல்லை என்பது தேர்தலில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த மல்லை சத்யா, ”திமுக கூட்டணி உறுதியாக அமைந்துள்ளது. பாஜக அரசை எதிர்த்து சரியான மற்றும் மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையாக முன்வைத்துள்ளோம். எனவே, மக்களின் ஆதரவில் கண்டிப்பாக வெற்றிப்பெறுவோம்” என்று கூறினார். இன்னும் தேர்தலுக்கு 20 நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில், ஓரிரு தினங்களில் சின்னமும் வந்து விடும். அதனால், இது பெரியளவு திமுக அல்லது மதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தாது என்று கூறுகிறார் பிரியன். https://www.bbc.com/tamil/articles/cp9e8ymwz3ro

சீனாவிற்கு விஜயம் செய்தார் பிரதமர்

3 months 1 week ago
25 MAR, 2024 | 09:57 AM பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (24) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். சீன அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன ஐந்து நாட்களுக்கு சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது பிரதமர் சீனா இலங்கைக்கு அளித்த கடனை மறுசீரமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளார். அவர் நேற்று (24) இரவு 08.20 மணியளவில் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனாவுக்குப் புறப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து மேலும் 10 தூதுக்குழுவினர் சீனாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/179615

மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?

3 months 1 week ago
கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது? விஷம் குடிக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டது ஏன்? முழு பின்னணி கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் மற்றும் கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 24 மார்ச் 2024 ஈரோடு மக்களவைத் தொகுதியின் ம.தி.மு.க சிட்டிங் எம்.பி கணேசமூர்த்தி, உடல்நலக்குறைவு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் பரவியுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைோ, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகிய இருவருமே மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர். கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்து அவர் என்ன சொன்னார்? கணேசமூர்த்தின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வைகோ கூறியது என்ன? கணேசமூர்த்தி சாப்பிட்ட விஷம் எப்படிப்பட்டது? விஷ முறிவு மருத்துவர்கள் கூறுவது என்ன? என்ன நடந்தது? மதிமுக தொடங்கியது முதலே அதன் மூத்த தலைவராக, கட்சியின் பொதுச்செயலாளரான வைகோவுக்கு பக்கபலமாக தொடர்ந்து இருந்து வந்தவர் கணேசமூர்த்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு வழங்கப்பட்ட ஒரே தொகுதியிலும் அவரையே அக்கட்சி நிறுத்தியது. தற்போதைய ஈரோடு தொகுதி எம்.பி.யான கணேசமூர்த்திக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் சீட் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று மார்ச் 24ம் தேதி காலையில் கணேசமூர்த்தி விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி, அவரது உறவினர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே சிகிச்சைக்குப் பிறகு, உயர் சிகிச்சைக்காக கணேசமூர்த்தி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வைகோ நேரில் நலம் விசாரித்தார் கோவையில் எம்.பி. கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு வைகோ நேரில் சென்று நலம் விசாரித்தார். இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "நான் உயிராக நேசித்த, கண்ணின் மணியாக திகழ்ந்த ஆருயிர் சகோதரர் கணேச மூர்த்தி, தியாகராயர் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே தொடர்பில் உள்ளார். மாணவர் அணியிலிருந்த அவர், சட்டமன்ற உறுப்பினராகி மக்களின் அன்பை பெற்றார். நாடாளுமன்றத்திற்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் தன்னுடைய கடமைகளை சிறப்பாகவே செய்தார். இம்முறை கட்சியிலே அனைவரும் சேர்ந்து துரை வைகோவை (நாடாளுமன்றம்) அனுப்ப வேண்டும், கணேச மூர்த்திக்கு அடுத்த முறை சான்ஸ் பார்ப்போம் என்றனர். நான் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின் ஓட்டெடுப்பு எல்லாம் நடந்தது. 99% அவரை (துரை வைகோ) நிறுத்த வேண்டும் என்றனர். இது கணேசமூர்த்தி வேண்டாம் என்பதற்காக அல்ல. 2 சீட்டுகளை வாங்கி ஒன்றை துரைக்கும் மற்றொன்றை கணேசமூர்த்திக்கும் கொடுக்கலாம் என்றனர். அதன்படியே செய்ய நினைத்தேன். அப்படியே வாய்ப்பு இல்லாமல் போனாலும், சட்டசபை தேர்தல் ஒரு வருடத்தில் வருகிறது. ஒரு நல்ல தொகுதியில் அவரை எம்எல்ஏ ஆக்கி விட்டு, அதன் பிறகு தளபதி ஸ்டாலினிடம் கூறி அதைவிட ஒரு பெரிய பதவியில் வாய்ப்பு வாங்கிக் கொடுக்கலாம் என்று இருந்தேன். அதற்குள் காயம் எல்லாம் ஆறிவிடும் என்றேன். இத்தனைக்கும் பிறகும் அவர் நன்றாக பேசினார். பிரியமாகவே பேசினார். மகன், மகளிடமும் நன்றாகத் தான் பேசியிருக்கிறார். இன்று காலை 10 நிமிடம் மகளிடம் பேசியிருக்கிறார். ஆனால், அப்பொழுதெல்லாம் அவரது பேச்சில் எந்தவித பதற்றமும், சோகத்தில் இருப்பதாக அறிகுறியோ தெரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறினர். அதன் பின்னர் தான் அவர் தென்னை மரத்துக்கு போடும் நஞ்சை கலக்கி குடித்திருக்கிரார். அங்கு வந்த கபிலனிடம் 'இதை குடித்து விட்டேன், நான் போய் வருகிறேன்' எனக் கூறியுள்ளார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று செய்ய வேண்டிய முதன்மையான முதலுதவிகள் அனைத்தும் செய்து விட்டனர்." என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES மருத்துவ தலைமை நிபுணர் என்ன கூறினார்? கணேச மூர்த்தி அனுமதிக்கப்பட்டிருக்கும் கே எம் சி ஹெச் மருத்துவமனையின் தலைமை மருத்துவ நிபுணரிடம் கணேச மூர்த்தியின் உடல்நிலை குறித்து வைகோ கேட்டறிந்துள்ளார். அப்போது மருத்துவ நிபுணர் பகிர்ந்து கொண்ட தகவல்களாக வைகோ கூறுகையில், "முதலுதவி சரியாக செய்ததால் தான் நாங்கள் இங்கு வைத்து சிகிச்சை அளிக்க முடிகிறது. 50க்கு 50 வாய்ப்புள்ளது. இது மாதிரியான நிலையில் ஏற்கனவே பலரை பிழைக்க வைத்திருக்கிறோம். அதற்குரிய உபகரணங்கள் மருத்துவமனையில் உள்ளது. அவற்றை பயன்படுத்தி சிகிச்சை எடுக்கும் போதும் ரத்த அழுத்தம் குறைவதால் அவரை செடேசன் என்ற மயக்க மருந்தில் வைத்திருக்கிறோம். ஆதலால் நம்பிக்கையோடு இருப்போம். 2 நாள் சென்ற பின் எதையும் கூற முடியும். விஷ முறிவுக்கான சிகிச்சையும் எக்கோவும் கொடுக்கப்படுகிறது." என்று தெரிவித்தார். துரை வைகோ நேரில் நலம் விசாரித்தார் கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்ற தகவல் கிடைத்ததும் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ உடனே கோவை விரைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கணேசமூர்த்தியை இரவில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்தும், அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்தும் பதிலளித்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, துரை வைகோ, ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் ‘கணேசமூர்த்தி கவலைக்கிடமாக உள்ளார்’ கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்துப் பேசிய துரை வைகோ, ‘‘நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறினர். அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். 48 மணி நேரத்திற்கு பின் தான் அவரது உடல் நிலை குறித்து சொல்ல முடியுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,’’ என்றார். தேர்தலில் சீட் கிடைக்காததால் தற்கொலை முயற்சியா? கணேசமூர்த்தியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்று செய்தியாளர்கள் துரை வைகோவிடம் கேள்வியை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், "கணேசமூர்த்தியை சந்தித்த போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவரிடம் பேசினேன். தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்காதது குறித்து கணேசமூர்த்தி என்னிடம் எந்த கவலையும் தெரிவிக்கவில்லை. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லி கணேசமூர்த்திக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம். அதற்குள் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருப்பது துரதிஷ்டவசமானது" என்று துரை வைகோ தெரிவித்தார். தனியார் மருத்துவமனை கூறியது என்ன? கணேசமூர்த்தியை அவரது உறவினர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்தான் முதலில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்குள்ள மருத்துவப் பணியாளர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, "காலை 11 மணிக்கு அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது கணேசமூர்த்தி சுயநினைவுடன்தான் இருந்தார். காலை 10 மணிக்கு அவர் விஷம் குடித்தார் என்று உறவினர்கள் கூறினார்கள். விஷத்தை தண்ணீரில் கலந்து அவர் குடித்துவிட்டதாக உறவினர்கள் கூறினர். விஷம் குடித்திருந்ததால் அவரது வயிற்றை மருத்துவமனையில் சுத்தம் செய்தார்கள். அப்போது அவரது இதயத்துடிப்பு வெகுவாக குறைந்துவிட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்" என்று கூறினார். விஷ முறிவு சிகிச்சையின் போது என்ன நடக்கும்? ஒரு மனிதனின் உடலுக்குள் விஷம் நுழைந்தால், மருத்துவர்கள் அந்த விஷத்தை முறிக்க என்னென்ன செய்வார்கள் என விளக்கினார் தடயவியல் துறையின் விஷ முறிவு மேலாண்மை நிபுணர். பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறுகையில், “எம்.பி. கணேஷமூர்த்தி உட்கொண்டது மாத்திரையின் ஜெனரிக் பெயர் கிடைத்தால்தான், அதன் பண்புகள், உடலில் கலந்து விஷமாக மாற எடுத்துக் கொள்ளும் நேரம் பற்றி தெரியும். ஆயினும் பொதுவாக விஷமுறிவைப் பொறுத்தவரை நேர மேலாண்மேதான் முக்கியம்” என்றார். "ஒருவர் வாய் வழியாகவோ, ஊசி வழியாகவோ, வாய்க்குள் வைத்துக் கொள்வது உள்ளிட்ட பல முறைகளில் விஷத்தை உட்கொண்டால் உடனடி மருத்துவ கவனிப்பு அவசியம். அவர் ஒரு மணி நேரத்துக்குள் மருத்துமனைக்கு அழைத்து வரப்பட்டுவிட்டால், உணவுக்குழாய், குடல் ஆகியவை சுத்தம் செய்யப்படும். அதுவே 3 முதல் 4 மணி நேரமாக ஆகியிருந்தால், நோயாளிக்கு ஏற்படும் அறிகுறிகளைப் பொறுத்தே விஷத்தின் மாதிரி அறியப்படும். நோயாளிக்கு ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, இருதயத் துடிப்பு குறைவது, சுயநினைவு இழத்தல், வலிப்பு உள்ளிட்டவற்றை வைத்து என்ன மாதிரியான விஷம் என அறிய வாய்ப்பு உண்டு, சிறுகுடல் 8 மீட்டர் நீளம் கொண்டது. 4 மணி நேரத்துக்கும் மேல் ஆகியிருந்தால் அதில் 6 மீட்டர் அளவுக்கு விஷம் பரவி குடலில் ஓட்டியிருக்கும். இதையடுத்து நேரம் ஆக ஆக, அது பெருங்குடல் உள்ளிட்ட பல உறுப்புக்களில் பரவக்கூடும். வயிற்றைச் சுத்தம் செய்யும்போது, மெக்கானைஸ்ட் வடிவில் உள்ள சார்கோல் பயன்படுத்தும்போது, வயிற்றின் குடல்பகுதியில் விஷம் ஒட்டிக்கொள்ளாதபடி அகற்ற உதவும். இந்த முறை குடலில் ஓட்டியிருக்கும் 70-80% விஷத்தை வெளியேற்ற உதவும். அதை விட நேரம் அதிகம் கடந்து விட்டால், கூடிய விரைவில் உரிய மருந்துகளை வைத்து குடலைக் கழுவி சுத்தம் செய்வதோடு பிற வகை சிகிச்சைகளும் பின்பற்றப்படும். மலம் மற்றும் சோடா பை கார்பனேட் கொண்டு சிறுநீர் வழியாகவும் விஷத்தை முறித்து உடலில் இருந்து வெளியேற்றப்படும். ஒருவேளை சுயநினைவிழந்திருந்தாலோ, விஷமானது ரத்தத்தில் கலந்து இருந்தாலோ, ஹீமோ டயாலிசிஸ், ஹீமோ ஃபில்ட்ரேசன், ஹீமோ பர்ஃப்யூசன் ஆகிய முறைகளில் ரத்தத்தில் இருந்து அகற்றப்படும்." என்று தெரிவித்தார். யார் இந்த கணேசமூர்த்தி? ஈரோட்டைச் சேர்ந்தவரான கணேசமூர்த்தி (77), இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை சட்டம் படித்துள்ளார். விவசாயத்தை அடிப்படைத் தொழிலாக வைத்துள்ள இவர் ம.தி.மு.கவின் மூத்த தலைவர்களுள் ஒருவராக உள்ளார். கணேசமூர்த்தி கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் தி.மு.க கூட்டணியில் அக்கட்சியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது எம்.பியாக உள்ளார். பல ஆண்டுகளாக அவர் ம.தி.மு.கவில் இருந்தாலும், இவரின் அரசியல் வாழ்க்கை தி.மு.கவில் இருந்து தான் துவங்கியது. ம.தி.மு.க தொடங்குவதற்கு முன்பு பல ஆண்டுகளாக தி.மு.கவில் இருந்த கணேசமூர்த்திக்கு தி.மு.க மேலிடம் 1984ல் ஈரோடு மாவட்ட செயலாளர் பதவியை வழங்கியது. அதன்பின், படிப்படியாக அவரது செல்வாக்கு உயர்ந்த நிலையில், தி.மு.க மேலிட உத்தரவுப்படி 1989ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின், 1993ம் ஆண்டு தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறிய போது அவருக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.கவில் இருந்து வெளியேறிய கணேசமூர்த்தி, ம.தி.மு.கவில் இணைந்தார். 1998ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பழநி தொகுதியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். மூன்று முறை எம்.பி! 1998 மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப்பின், 2006ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெள்ளகோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையிலும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இவருக்கு 2009ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். இந்தத்தேர்தலில் வெற்றி பெற்ற கணேசமூர்த்திக்கு அதன்பின் நடந்த, 2014 மக்களவை தேர்தலிலும் ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் கணேசமூர்த்தி தோல்வி அடைந்தார். அதன்பின், 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும், ஈரோடு தொகுதியில் போட்டியிட ம.தி.மு.கவினர் வாய்ப்பு வழங்கிய நிலையில், அதில் வெற்றி பெற்று தற்போது ‘சிட்டிங்’ எம்.பியாக உள்ளார். மக்களவைத் தேர்தல்களில் எப்போது தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் வைகோ, கணேசமூர்த்திக்கு வாய்ப்பு கொடுத்து வந்துள்ளார். ஒரு முறை, எம்.எல்.ஏ, மூன்று முறை ஈரோடு எம்.பி பதவியை பெற்றுள்ள கணேசமூர்த்தி, கடந்த 30 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தில் ம.தி.மு.கவிற்கென தனிச்செல்வாக்கை உருவாக்கியுள்ளார். 30 ஆண்டுகளாக வைகோவின் தீவிர ஆதரவாளர்! தேர்தல்களில் வெற்றி ஒருபுறம் இருந்தாலும், ம.தி.மு.க கட்சியில் பொருளாளர் பதவியையும் வகித்து, பல ஆண்டுகளாக வைகோவின் தீவிர ஆதரவாளராக விசுவாசியாக இருக்கிறார். ம.தி.மு.கவில் இருந்து பலர் வெளியேறி தி.மு.கவில் இணைந்தபோதும் கூட, 1993 முதல் இன்று வரையில் கணேசமூர்த்தி ம.தி.மு.கவில் வைகோவின் தீவிர ஆதரவாளராகத்தான் வலம் வருகிறார். தற்போதைய தேர்தலிலும் கணேசமூர்த்தி, ம.தி.மு.க சார்பில் ஈரோடு தொகுதியி்ல போட்டியிடுவார் என, கணேசமூர்த்தியும் அவரது ஆதரவாளர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தி.மு.கவினர் இந்த முறை ம.தி.மு.கவிற்கு திருச்சி தொகுதியை மட்டுமே ஒதுக்கியதால், கணேசமூர்த்தி மனவிரக்தியில் இருந்ததாக, அந்தக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/c723jlpgkxmo

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

3 months 1 week ago
ரோகித் சர்மாவை எல்லைக் கோட்டில் நிற்கவைத்த ஹர்திக், தவறு செய்தது எங்கே? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்பை இந்தியன்ஸ் அணியை 6 ரன்களில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி 24 நிமிடங்களுக்கு முன்னர் ஐபிஎல் டி20 தொடரில் கடைசி ஓவர், கடைசிப் பந்துவரை இதுதான் முடிவு என்பதை எந்த ரசிகரும் கணிக்க முடியாது. ஒவ்வொரு பந்தும் ஒவ்வொருவிதமான ட்விஸ்ட்களோடு கொண்டு செல்லும். அதுபோலத்தான் நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆட்டமும் அமைந்திருந்தது. அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 5ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 ரன்களில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. 169 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து 6 ரன்களில் தோல்வி அடைந்தது. கேப்டன்சி மாற்றத்துக்குப்பின் சுப்மான் கில் தலைமையில் முதல்முறையாக களமாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றது. அதேபோல கோடிக்கணக்கான ரூபாய் பரிமாற்றத்துக்குப்பின், புதிய கேப்டனோடு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தனது முன்னாள் அணியிடமே தோல்வி அடைந்துள்ளார். குஜராத் அணி இக்கட்டான நேரத்தில் 45 ரன்கள் குவித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த ஆட்டத்தில் ஒரேஅணியில் இடம் பெற்ற இரு தமிழக வீரர்களும் அற்புதமாகச் செயல்பட்டனர். பந்துவீச்சில் சாய் கிஷோரும், பேட்டிங்கில் சாய் சுதர்சனும் முத்தாய்ப்பு. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 17-வது ஓவரை வீசிய ரஷித் கான் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை பேட்டர்களை நெருக்கடிக்கு ஆளாக்கினார் திருப்பங்கள் நிறைந்த 5 ஓவர்கள் கடைசி 5 ஓவர்களில் மும்பை அணி வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. 16-ஆவது ஓவரை வீசிய மோகித் சர்மா 4 ரன்கள் மட்டுமே கொடுத்து பிரிவிஸ் விக்கெட்டை சாய்த்தார். 17-வது ஓவரை வீசிய ரஷித் கான் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை பேட்டர்களை நெருக்கடிக்கு ஆளாக்கினார். கடைசி 3 ஓவர்களில் மும்பை அணி வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. 18-ஆவது ஓவரை வீசிய மோகித் சர்மா 9 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் டிம்டேவிட் விக்கெட்டை கைப்பற்றி மும்பை அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. 19-ஆவது ஓவரை வீசிய ஜான்சனின் முதல் பந்தில் திலக் வர்மா சிக்ஸர் விளாசினார். ஆனால், அடுத்த பந்தில் திலக் வர்மா விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். ஓவரின் கடைசிப் பந்தில் கோட்ஸியும் ஆட்டமிழக்க மும்பை அணி தோல்வியின் நெருக்கடியில் திக்குமுக்காடியது. கடைசி ஒரு ஓவரில் மும்பை வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. கேப்டன் ஹர்திக் பாண்டியா, பியூஷ் சாவ்லா களத்தில் இருந்தனர். உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் முதல் இரு பந்துகளில் பவுண்டரி, சிக்ஸரை விளாசி ஹர்திக் பாண்டியா ஷாக் அளித்தார். ஆனால், 3வது பந்தில் ஹர்திக் அடித்த ஷாட் லாங்ஆனில் நின்றிருந்த திவேட்டியா கைகளில் தஞ்சமடைய ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் பியூஷ் சாவ்லாவும் பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். முலானி, பும்ராவால் ரன் சேர்க்கமுடியாததால், மும்பை பரிதாபமாக தோற்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES "தவறுக்காக காத்திருந்தோம்" குஜராத் அணியின் கேப்டன் சுப்மான் கில் கூறுகையில் “ எங்கள் பந்துவீச்சாளர்கள் டெத் ஓவர்களில் செயல்பட்டவிதம் அற்புதமாக இருந்தது. பனிப்பொழிவும் இருந்தாலும் சுழற்பந்துவீச்சாளர்கள் கிஷோர், ரஷித் கான் கட்டுக்கோப்பாக பந்துவீசி பேட்டர்களுக்கு நெருக்கடி அளித்தனர். மோகித் சர்மா அருமையாகப் பந்தவீசினார் மும்பை பேட்டர்கள் தவறு செய்வதற்காக காத்திருந்தோம் அதைப் பயன்படுத்தி நெருக்கடி அளித்தோம். 170 ரன்கள் நல்ல ஸ்கோர் என்றாலும் கூடுதலாக 15 ரன்கள் சேர்த்திருக்கலாம்” எனத் தெரிவித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த 168 ரன்கள் என்பது சேஸிங் செய்துவிடமுடியாத அளவுக்கு பெரிய ஸ்கோர் அல்ல. ஆனாலும், அந்த ஸ்கோரை டிபெண்ட் செய்து, மும்பை அணிக்கு நெருக்கடி வெற்றியை பறித்தவிதம்தான் பாராட்டுக்குரியது. குஜராத் டைட்டன்ஸ் வெற்றிக்கு முழுமையாக உரித்தானவர்கள் அவர்களின் பந்துவீச்சாளர்கள்தான். ஒவ்வொரு பந்துவீச்சாளர்களும் தங்களின் பணியை உணர்ந்து சிறப்பாகச் செயல்பட்டனர். குறிப்பாக தமிழக வீரர் சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் ஒரு விக்கெட் என அற்புதமாக பந்துவீசினார். அதிலும் அறிமுகபோட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கி, அதிலும் வலுவான பேட்டர் ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்துவது எளிதானது அல்ல. அதை தமிழக வீரர் சாய் கிஷோர் சிறப்பாகச் செய்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி நடுப்பகுதி ஓவர்களில் மும்பை அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து ரன்ரேட்டை குறைக்க சாய் கிஷோர், ரஷித் கான் பந்துவீச்சு முக்கியக் காரணமாகும். ரஷித் கான் விக்கெட் இன்று பந்துவீசினாலும், அவரின் வழக்கமான டிரேட்மார்க், ரன்சிக்கனத்துடன் பந்துவீசி மும்பை பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாகத் திகழ்ந்தார். அதிலும் டெத் ஓவர்களில் ரஷித் கான் பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை அணிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரூ.10 கோடிக்கு வாங்கப்பட்ட இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனும் தனக்குரிய பணியை சிறப்பாகச்செய்து தன்னுடைய விலை தகும் என்பதை நிரூபித்தார். ஜான்சன் 2 ஓவர்களே வீசினாலும் அவர் வீசிய 19-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் ஒட்டுமொத்த ஓட்டத்தையே மாற்றினார். கிரிக்கெட்டில் “அன்சங் ஹீரோ” என்பார்கள். அதில் குறிப்பிடவேண்டியது மோகித் சர்மா. டெத் ஓவர்களை அற்புதமாகக் கையாண்ட மோகித் சர்மா தான் வீசிய கடைசி 2 ஓவர்களிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியை நிலைகுலையச் செய்தார். அதிலும் தனது 3வது ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே மோகித் சர்மா கொடுத்தது தரமான பந்துவீச்சுக்கு உதாரணம். முகமது ஷமி இல்லாத நிலையில் அனுபவ பந்துவீச்சாளராக உமேஷ் யாதவ் பணி செய்ய வேண்டியதிருந்தது. கடந்த காலசீசன்களில் டெத் ஓவர்களை உமேஷ் எவ்வாறு கையாண்டார் என்பதால், அவருக்கு டெத்ஓவர்கள் வழங்கப்படுவதில்லை. ஆனால், கேப்டன் கில் துணிச்சலாக கடைசி ஓவரை உமேஷ் யாதவுக்கு வழங்கினார். ரசிகர்கள் நினைத்தது போலவே முதல்பந்தை சிக்ஸர், 2வது பந்தில் பவுண்டரி அடிக்கவிட்டார் உமேஷ். ஆனால், 3வது, 4வது பந்தில் அவரின் பந்துவீச்சில் காண்பித்த வேரியேஷன் 2 விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்து ஆட்டத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ஓமர்சாயும் தனது பங்கற்கு சிறப்பாக செயல்பட்டு 2 விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்தார். ஒட்டுமொத்த்தில் குஜராத் அணிக்கு கிடைத்த வெற்றி என்பது பந்துவீச்சாளர்களால் கிடைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஃபினிஷர் ரோலில் கையை சுட்டுக்கொண்ட ஹர்திக் மும்பை அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனியைப் போன்று ஃபினிஷர் ரோல் எடுக்க முயன்று தோல்விஅடைந்துள்ளார். “ எல்லோரும் தோனியாகிவிட முடியாது, ஃபினிஷர் ரோல் செட் ஆகாது” என்று ஹர்திக் பாண்டியாவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். குஜராத் டை்டன்ஸ் கேப்டனாக ஹர்திக் இருந்தபோது 4வது வரிசையில் களமிறங்கி பலமுறை விளையாடியுள்ளார். அதுபோல் இந்த ஆட்டத்திலும் ஹர்திக் பேட் செய்திருந்தால், ஆங்கர் ரோல் எடுத்திருக்கலாம், ஆட்டத்தையும் கட்டுப்படுத்தி வெற்றியை வசப்படுத்தி இருக்கலாம். ஆனால், தான் கேப்டன் செய்த அணி வீரர்களை குறைத்து மதிப்பி்ட்டு கடைசி நேரத்தில் ஃபினிஷர் ரோல் செய்து ஹர்திக் கையைச் சுட்டுக்கொண்டார் என்பதுதான் நிதர்சனம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோஹித் சர்மாவை பவுண்டரியில் நில்லுங்கள் என்று சைகை செய்து ஹர்திக் பாண்டியா அனுப்பினார் ரோஹித் சர்மாவை எல்லைக் கோட்டில் நிற்கவைத்த ஹர்திக் மும்பை அணிக்கு புதிய கேப்டனாக வந்த ஹர்திக் பாண்டியா நேற்று அனைத்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டார். முந்தைய கேப்டன் ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள், ஹர்திக்கின் செயல்பாடுகளைப் பார்த்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் ரோஹித் சர்மாவை பவுண்டரியில் நில்லுங்கள் என்று சைகை செய்து ஹர்திக் பாண்டியா அனுப்பினார். இந்த காட்சிகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஹர்திக் பாண்டியாவை வறுத்தெடுத்தனர். அதேபோல பும்ரா போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை தொடக்கத்திலேயே பயன்படு்தி எதிரணிக்கு அழுத்தம் கொடுத்துவிக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ஆனால் தொடக்கத்தில் ஒரு ஓவர் மட்டுமே பும்ராவுக்கு வழங்கி, கடைசி நேரத்தில் 3 ஓவர்களை ஹர்திக் வழங்கினார். இதுவும் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. மும்பை அணியைப் பொறுத்தவரை 3வது விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா(43) பிராவிஸ்(46) கூட்டணி 77 ரன்கள் சேர்த்ததுதான் நல்ல பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. அதன்பின் களமிறங்கிய பேட்டர்கள் அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். 129 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்த மும்பை அணி அடுத்த 33 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 2 ஓவர்களில் மட்டும் மும்பை அணி 4 விக்கெட்டுகளை பதற்றத்தில் பறிகொடுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையும் முதல் போட்டி தோல்வியும் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் தோல்வியும் கடந்த 12 ஆண்டுகளாக பிரிக்க முடியாததாக இருந்து வருகிறது. கடந்த 12 சீசன்களாக அதாவது 2013ம் ஆண்டிலிருந்து ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் சந்தித்த அனைத்து முதல் ஆட்டத்திலும் தோல்வி அடைந்துள்ளது. 2013ம் ஆண்டிலிருந்து 2024 சீசன்வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி சென்டிமென்ட் தொடர்ந்து வருகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரை தமிழக வீர் சாய் சுதர்சன் அடித்த 45 ரன்களும், கேப்டன் கில் சேர்த்த 31 ரன்களும்தான் அதிகபட்சமாகும். மற்ற வகையில் எந்த பேட்டரும் பெரிதாக சோபிக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓமர்சாய்(17), மில்லர்(12) ரன்கள் மட்டுமே சேர்த்தனர். ராகுல் திவேட்டியா கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 22 ரன்கள் சேர்த்தார். குஜராத் அணி இன்னும் கூடுதலாக 20 ரன்கள் சேர்த்திருந்தால், பதற்றப்படாமல் வெற்றியை ருசித்திருக்கலாம். தோல்வி பற்றி ஹர்திக் கூறியது என்ன? மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “கடைசி 5 ஓவர்களில் 42 ரன்களை சேஸிங் செய்வது செய்யமுடிந்த ஒன்றுதான். ஆனால், அதற்கான தருணங்களை தவறவிட்டோம். அரங்கில் நிறைந்த ரசிகர்களைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. திலக் வர்மா ஒரு ரன் அடித்து டேவிட்டிடம் ஸ்ட்ரைக்கை கொடுத்திருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் திலக் செய்தது சரி.இன்னும் 13 போட்டிகள் இருக்கின்றன பார்க்கலாம்” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c29w1e5r81no

ஒரு பொய்

3 months 1 week ago
கவி ஐயா ஆகா அதுக்குள்ள இப்படி ஒரு உள்குத்து விடயமும் இருக்கோ! நான் மைக்கேலின் திறமை மற்றும் ஒருவனின் வேலைக்கு உலை வைக்காத ரசோதரனின் பெருந்தன்மை இரண்டையும் தான் சிந்தித்தேன். பேராசிரியர் சுப சோமசுந்தரம் ஐயாவின் ஆக்கங்களை அடிக்கடி படிப்பதால் அவர் வள்ளுவரது குறள்களையும் அதன் பொருளையும் வெவ்வேறு விடயங்களோடு தொடர்புபடுத்தி எழுதுவதன் தாக்கம் போல!

 கனத்தைப் பேய்க்  கவிதை…..

3 months 1 week ago
கருத்துக்கள உறவுகள் பதியப்பட்டது 2 hours ago கனத்தைப் பேய்க் கவிதை….. இந்துவில் படித்த காலம்.. இருப்பதுவோ நாரகேன்பிட்டி.. இது பொரளை மன்னிங்ரவுன்…. இது நம்ம அண்ணருடன் வாசம் சரித்திரம்..வேண்டா மே ஆடிவேல் விழாக்காலம்.. அடிபட்டு பிடிபட்டு.. அனுமதி பெற்று.. சம்மாங் கோட்டாரிடம் போயுமாச்சு.. இந்துக்கூட்டம் ஒருவம்புக்கூட்டம்.. வெள்ளவத்தை சந்து முந்து ரோட்டெல்லம் போய் கூடப் படிக்கிற பிகருகளின் வீட்டு பூந்தொட்டிகளை ரோட்டில் போட்டுடைத்து தூக்கிவைத்து…. உள்ள கடையெல்லாம் சாப்பிட்டு ஐஸ்கிறீம் குடித்துமுடிய மணி சாமம் ஒரு மணியாச்சு… என்னதான் சுத்து சுத்தினாலும் படுக்கைக்கு கட்டைக்கு வந்திடவேணும்.. இல்லையோ வீட்டிலை நிற்கின்ற மரத்து தடி பாவம்.. சரி ஒரு கரும்பு வாங்கி முழத்தில் .இரண்டாக்கியாச்சு போகும்பாதை திருடர் காடையர் உள்ள பாதையாகையால்..ஆயுதம் 154 இலக்க பஸ் எடுத்து கனத்தை சந்தியில் இறங்கி ஒரு மைல் வடக்கை நடக்கணும் கை இரண்டிலும் கரும்பு நிமிர்ந்த நடை.. கனத்தை பெரும் பேயுலாவும்..சுடலை.. என்பது அறிந்த கதை.. இனி… நடை தொடங்க மெல்லிய சலங்கைச் சத்தம்.. நிற்க கேட்கவில்லை… நடக்க சலங்கை ஒலி நிற்க இல்லை ஏம சாமம்… பேய் என்னோடை வருகுது கரும்பும் கையும் நடுங்குது.. ஓட ..சலங்கைச் சத்தம் துரத்துது நிற்க ..இல்லை. சலங்கைச் சத்தம் கேட்க கேட்க ஓடிவந்து ஒருமாதிரி அறைக் கதவை பூட்டியாச்சு.. சத்தம் இல்லை… சாரம் எடுக்கப் போக மீண்டும் சத்தம்.. கத்தியை கையிலை வைத்தபடி உடுப்பை கழட்டினால்.. சிரிப்பை அடக்க முடியவில்லை உள்ளங்கியில் (ஜட்டி)..தகடு கொழுவுப்படாமல்.. போட்ட கிணு கிணுத்த சத்தம் தான் கனத்தை பேய்… (மன்னிக்கவும்..பெண் பிரசைகள் வாற இடத்தில்…இப்படி ஒரு கிறுக்கல் போட்டதிற்கு…. எல்லாம் சிரிப்பதற்கு மட்டுமே)

கடவுள் இருக்கிறாரா.............?

3 months 1 week ago
உண்மைதான். ஆனால், மனிதர்கள் இப்படி மிருகங்களாகத் தோன்றுவது யார் செய்த பாவம்? அப்பாவிகள் அழிக்கப்படுவது யார் செய்த பாவம்? எல்லாவற்றையும் படைப்பது இறைவன் என்றால், எதற்காக மனித வடிவில் அரக்கர்களைப் படைத்து உலவ விடுகிறார்? அண்ணை, 2009 வரை கடவுள் என்றொரு சக்தி இருக்கிறதென்று நம்பியவன் நான். ஆனால், எதுவுமே அறியாத பச்சிளம் பாலகர்களும், வயோதிபர்களும், தாய்மார்களும் அடங்கலாக ஒன்றரை லட்சம் பேரைத் துடிக்கத் துடிக்கக் கொன்றபோது இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கே போய்விட்டன என்கிற கேள்வி எழுந்தது. அதன்பின்னர் கடவுளைத் தேடிச் செல்வதில்லை.

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

3 months 1 week ago
☹️ US official accused IDF of sexually abusing Palestinian women, general says By 103FM Published: MARCH 24, 2024 13:07 Updated: MARCH 24, 2024 15:14 Women mourn Palestinians killed in Israeli strikes, amid the ongoing conflict between Israel and Hamas, at Al-Aqsa hospital in Deir Al-Balah in the central Gaza Strip, March 21, 2024. (photo credit: REUTERS/Ramadan Abed) IDF Brig.-Gen. (res.) Amir Avivi: A US State Department official claimed that Israel "systematically" sexually abuses Palestinian women. IDF Brig.-Gen. (res.) Amir Avivi met with the holder of the Israeli-Palestinian portfolio at the US State Department, who accused Israel of "systematically" sexually abusing Palestinian woman, the general explained in an interview on 103FM. Recounting his meeting, he explained, "It was a meeting that shook me. We sat there, talked about the situation, and suddenly she accused Israel of systematically sexually abusing Palestinian women." Avivi described his reaction. "This is absolutely disconnected from reality. But without hesitation, she said, 'The UN presented evidence to the Israeli government.' I told her, 'Does it make sense that this phenomenon would exist and the media would never have reported on it?' I wanted there to be greater awareness... about what is really happening in the US State Department. In the end, I left there with the feeling that they simply don't talk to us and don't pass on any information." Advertisement Is it the official US position that IDF soldiers rape Palestinian women? "When we meet with a State Department official holding the Israeli-Palestinian portfolio, every word she utters, as far as I'm concerned, is an official US position. Ultimately, she is a government official. When she says, for example, 'You did not provide evidence that Hamas is stealing humanitarian aid and you are starving the population,' what is she talking about? The IDF spokesperson shows [proof] every other day that Hamas is stealing food. IDF troops operate in the Gaza Strip. March 23, 2024. (credit: IDF SPOKESPERSON'S UNIT) "You're saying, guys, wake up and sit with these officials because they have a significant influence on what happens at the decision-maker level, and you will work to bridge the gaps. "We will continue to meet with them, as we did with European Union officials, where many of the people we met said, 'This is the first time we're meeting an Israeli representative,' even though it isn't an official delegation. But we don't have a big Foreign Ministry and not a lot of officials working abroad." https://m.jpost.com/israel-hamas-war/article-793420
Checked
Fri, 07/05/2024 - 14:33
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed