3 months 2 weeks ago
இவர்கள் பாசிச பாஜக்கா கூட கூட்டனி வைக்காதது வரவேற்க்க தக்கது................உண்மை நீங்கள் சொல்வது கப்டனை போல் மக்களுக்கு நிறைய நல்லது செய்யனும் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னுக்கு போய் நிக்கனும்.............இப்படியே போனால் இவருக்கு அரசியலில் நல்ல எதிர் காலம் இருக்கு............தடிச்ச வார்த்தை பாவிக்காம மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு அன்பை பெறனும்..............
எனது ஆதரவு எப்பவும் அண்ணன் சீமானுக்கு
கப்டன் ஈழ மக்களுக்கு செய்த நல்லதுகளை நினைத்து அவரின் கட்சி அழிந்து போகாம உயிர்ப்போடு இருக்கனும் எப்பவும் அது தான் எனது விருப்பம்..........................
3 months 2 weeks ago
RCB இற்கு பக்கச் சார்பான ஆக்கம் இது…
ஆனாலும் CSK 💪💪💪💪
3 months 2 weeks ago
RCBய சென்னையில் இருந்து விரட்டி அடிச்சாச்சு
நியுசிலாந் அறிமுக தொடக்க இளம் வீரர் கலக்கள் ஆட்டம்.................
3 months 2 weeks ago
நாளை வாழ்வோம்
நாளை வாழ்வோம்
இன்று ஓடுவோம்
இன்றே தேடுவோம் என்றிருக்க
வாழ்க்கை ஓடியே போக
காலம் முடிந்து விடுகின்றது.....!
இவைதான் நிதர்சனமான உண்மைகள்........! 👍
நன்றி ரசோதரன்.......!
3 months 2 weeks ago
நடத்தியது இந்தியா. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
ரணில் மைத்திரி அரசு தமிழ் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை ஓரளவுக்கு முன்னேறி புதிய அரசியல் அமைப்பு, ஒன்று பட்ட இலங்கைக்குள் ஓரளவுக்கு சமஷ்டி அமைப்புடன் தீர்வு என்று நகர்ந்த பொழுது அதை குழப்ப இந்தியா செய்த வேலை அது.
3 months 2 weeks ago
இதில் கனிமொழி, ஆ.ராசா, செல்வ கணபதி ஆகியோருக்கு தான் வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மிகுதி பேரில் யார் டெபாசிட் வாங்குவது என்பதில் கடும் போட்டி நிலவலாம்.
... விஜயகாந்தின் மகனைப் பார்க்கத்தான் பாவமாக இருக்கு.
3 months 2 weeks ago
எனக்குத் தெரியும் சொல்ல மாட்டேனே .....
......மைத்திரி. 😄😁
3 months 2 weeks ago
பின்னர் ஒரு நாளில்
ஊர் மண்ணை போய் சேர
மீண்டு வரும் சொர்க்கம் என்று
எண்ணி எண்ணி இருக்க
அந்த நாள் என்றும் வருவதில்லை
இது தான் உண்மை .
( வந்தவர் எல்லாம் தங்கி விடடால் இந்த
மண்ணில் இடம் எது ....
வாழ்கை என்பது வியாபாரம்
வருவதும் போவதும் செலவாகும்.
.....போனால் போகட்டும் போடா........... )
3 months 2 weeks ago
தனஞ்சய, கமிந்துவின் சதங்கள் கைகொடுக்க இலங்கை சிறந்த நிலையில் : முதல் நாளில் 13 விக்கெட்கள் சரிவு
22 MAR, 2024 | 08:32 PM
(நெவில் அன்தனி)
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் குவித்த சதங்களினால் இலங்கை சிறந்த நிலையை அடைந்துள்ளது.
கமிந்து மெண்டிஸ் தனது கன்னி டெஸ்ட் சதத்தைப் பூர்த்திசெய்தமை விசேட அம்சமாகும்.
இரண்டு போட்டிகளைக் கொண்ட ஐசிசி டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் ஆரம்பத் தினமான இன்றைய தினம் 13 விக்கெட்கள் சரிந்த போதிலும் ஆட்ட நேர முடிவில் இலங்கை 248 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.
அப் பொட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 280 ஓட்டங்ளைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இலங்கையின் முன்வரிசை துடுப்பாட்டம் மிக மோசமாக இருந்தது.
ஆரம்ப வீரர் நிஷான் மதுஷ்க 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அதனைத் தொடர்ந்து திமுத் கருணாரட்னவும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 43 ஓட்டங்களாக உயர்த்தினர்.
ஆனால், குசல் மெண்டிஸ் (16), திமுத் கருணாரட்ன (17), ஏஞ்சலோ மெத்யூஸ் (5), தினேஷ் சந்திமால் (9) ஆகிய நால்வரும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க இலங்கை 5 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது.
இதன் காரணமாக இலங்கை அணி குறைந்த மொத்த எண்ணிக்கைக்கு சகல விக்கெட்களையும் இழந்துவிடுமோ என்ற சந்தேகம் எழுந்தது.
எனினும், தனஞ்சய டி சில்வா, 20 மாதங்களின் பின்னர் டெஸ்ட் அணிக்கு மீளழைக்கப்பட்ட கமிந்த மெண்டிஸ் ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 202 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்து சிறப்பான நிலையில் இட்டனர்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றில் 6ஆவது விக்கெட்டில் பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை சார்பாக பகிரப்பட்ட அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும்.
தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கமிந்து மெண்டிஸ் மிகுந்த அனுபவசாலிபோல் துடுப்பெடுத்தாடி 127 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 102 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
தனஞ்சய டி சில்வா 131 பந்துகளில் 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 102 ஓட்டங்களைப் பெற்றனர்.
அவர்கள் இருவரும் கூட்டாக 204 ஓட்டங்களைப் பெற்றிராவிட்டால் இலங்கையின் நிலை தர்மசங்கடமாகியிருக்கும்.
அவர்கள் இருவரும் சதங்கள் குவித்த பின்னர் தொடர்ந்து பொறுமையுடன் துடுப்பெடுத்தாடியிருந்தால் அணிக்கு இன்னும் நலமாக அமைந்திருக்கும்.
அவர்கள் இருவர் உட்பட இலங்கையின் கடைசி 5 விக்கெட்கள் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டன.
பந்துவீச்சில் காலித் அஹ்மத் 72 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நஹித் ரானா 87 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
பந்துவீச்சில் விஷ்வா பெர்னாண்டோ 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கசுன் ரஜித்த 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இன்றைய தினம் சரிந்த13 விக்கெட்களில் ஒன்றைத் தவிர்ந்த மற்றைய 12 விக்கெட்களையும் வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தியிருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டம் சனிக்கிழமை (23) தொடரும்போது விஷ்வா பெர்னாண்டோ, கசுன் ராஜித்த ஆகியோரும் லஹிரு குமாரவும் சரியான இலக்குளை நோக்கி பந்துவீசி பங்களாதேஷை நெருக்கடிக்குள்ளாக்குவது இலங்கைக்கு சாதகத் தன்மையை ஏற்படுத்தும்.
https://www.virakesari.lk/article/179466
3 months 2 weeks ago
ஆச்சரியமாக இருக்கிறது. தரமான ஒரு படைப்பு எங்களவர்களிடம் இருந்து வந்திருக்கிறது. பாராட்டப்பட வேண்டிய விடயம். ஒரு கதையை பாடலாக்கி அழகான முறையில் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். பங்குபற்றிய கலைஞர்களின் பெயர்களை கொஞ்சம் ஆறுதலாகக் காட்டி இருக்கலாம்.
3 months 2 weeks ago
😀...
உங்களின் நிலை தான் எங்கள் எல்லோருடையதும்.
Peer Pressure என்று சொல்வது போல. இதில் இருந்து வெளியில் வருவதற்கே நிறைய சக்தி தேவைப்படுகின்றது...........🤣
3 months 2 weeks ago
பாமக கட்சி தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த வேட்பாளரை மாற்றி விட்டு, இப்பொழுது அன்புமணியின் மனைவியான சௌமியா அன்புமணியை புதிய வேட்பாளராக அறிவித்திருக்கின்றார்கள்.
பாஜக கட்சியினரின் அழுத்தமே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது. பாஜக தரப்பிலிருந்து அவர்களின் தமிழ்நாட்டு தலைவர்களும், பிரபலமானவர்களும் போட்டியிடும் அதே வேளையில் பாமக தரப்பிலிருந்து பாமக தலைவர்கள் எவரும் போட்டியிடாதது தங்களுக்கு சாதகமாக இருக்காது என்று பாஜக நினைத்திருக்கக்கூடும்.
வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்று காங்கிரஸையும், திமுகவையும் பாஜக குற்றம் சாட்டிக் கொண்டிருந்தது. பாஜகவின் கூட்டணியும் இன்று அதே பாதையில் தான்...........
3 months 2 weeks ago
என்னைப் பற்றி சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
உடலுறவு கொள்ளும் வயதை 14 ஆக குறைக்கும் திருத்த வர்த்தமானியை இடைநிறுத்துங்கள் - பாராளுமன்ற பெண் உறுப்பினர் ஒன்றியம்
Published By: DIGITAL DESK 3 22 MAR, 2024 | 09:55 PM
(எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்)
1995 ஆம் ஆண்டு தண்டனைச் சட்டக் கோவைக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய, 16 வயதுக்குட்பட்ட பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும், அது கற்பழிப்பாகக் கருதப்படும். எனினும், நீதி அமைச்சரால் தண்டனைச் சட்டக் கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் மூலம் அந்த வயதெல்லை 14 வயதாக குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த திருத்தத்தை உடன் நிறுத்துமாறு பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
1995 ஆம் ஆண்டு தண்டனைச் சட்டக் கோவைக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய, 16 வயதுக்குட்பட்ட பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும், அது கற்பழிப்பாகக் கருதப்படும். எனினும், நீதி அமைச்சரால் தண்டனைச் சட்டக் கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் மூலம் அந்த வயது எல்லையை 14 வயது வரை குறைக்கப்படவுள்ளது.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் என்ற வகையில் தண்டனைச் சட்டக் கோவையின் 364 ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் தனது கடுமையான கவலையை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ள ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே, 364 ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் கருத்திற்கொள்ளவேண்டிய விடயங்கள் குறித்த விபரங்களை கடிதம் மூலம் முன்வைப்பதாக அறிவித்துள்ளார்.
தண்டனைச் சட்டக் கோவையின் 364 ஆம் பிரிவை திருத்துவதற்கான உத்தேச சட்டமூலத்தை மீளப்பெறுமாறு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்நாட்டின் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குமாறும் இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக நீதியை உறுதிப்படுத்துமாறும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சார்பில் மிகவும் ஆர்வத்துடன் கேட்டுக்கொள்வதுடன் இது தொடர்பில் மேலதிகத் தகவல்கள் அல்லது மாற்று முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமது ஒன்றியம் எந்த நேரத்திலும் தயாராக உள்ளதாக கடிதம் மூலம் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
https://www.virakesari.lk/article/179445
3 months 2 weeks ago
கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடும் மழை! 31ஆம் திகதி வரை மழை தொடருமாம்!
22 MAR, 2024 | 06:09 PM
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையையடுத்து இன்று (22) கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் கடும் மழை பெய்துவருகிறது.
குறிப்பாக கொழும்பு நகரின் பல பகுதிகளில் கடும் மழை பெய்வதால் வெள்ள நீர் நிரம்பியுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 31ஆம் திகதி வரை மழை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்கது.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றம் காரணமாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என இன்று வெள்ளிக்கிழமை (22) மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய இணைப்பாளர் சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பல தடவை மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடய மழையோ பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வானிலை தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் மேலான பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பனி மூட்டம் காணப்படும்.
அதேவேளை இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புக்களை பொறுத்தளவில் திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு அம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடல் பரப்புக்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
நாட்டை சூழவுள்ள கடல் பரப்புக்களில் காற்றானது கிழக்கு அல்லது மாறுபட்ட திசையில் வீசுவதுடன் மணிக்கு 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.
புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புக்களுக்கு அப்பாற்பட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது 40 தொடக்கம் 45 கிலோமீற்றர் வரை அவ்வப்போது அதிகரிக்கக்கூடும்.
புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றார்.
இதேவேளை திடீர் காலநிலை மாற்றம் காரணமாக கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் நேற்று வியாழக்கிழமையில் இருந்து அவ்வப்போது மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/179458
3 months 2 weeks ago
ஊரான் வீட்டுப்பிள்ளையென்ற்றூ..உதாசீனம் செய்வதில்லை நாம்.. உங்களைபோல இன்னுமொரு இனத்துக்காக நின்று நியாயம் கதைப்பதில்லை நாம்...உணர்வாளர் களை வாழ்த்தி வாழ்விடுங்கல்..உங்கள் உழைப்புக்காக அவர்களை தடுக்காதீர்கள்..
3 months 2 weeks ago
பாலியல் செயற்பாட்டுக்காக சிறுமிகளின் வயதெல்லையை குறைக்கும் குற்றவியல் சட்டத்தின் பிரிவுகளை மீளப்பெற வேண்டும் - சஜித்
Published By: DIGITAL DESK 3 22 MAR, 2024 | 05:37 PM
(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
குற்றவியல் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் ஊடாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய பெண் பிள்ளைகளின் வயதை 14 வருடங்களாக குறைக்க மற்றும் ஆண் குற்றவாளிகளின் வயது 22க்கு குறைவாக இருந்தால் தண்டனையை தளர்த்த வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ள குற்றவியல் சட்டத்தின் 363 மற்றும் 364 பிரிவுகளை திரும்பப் பெறுமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை வடுத்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
2024 பெப்ரவரி 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட தண்டனைச் சட்டத்தின் 363 மற்றும் 364 ஆவது சரத்தின் 19 ஆம் அத்தியாயத்தின் திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை ஆளும் கட்சி பிரதமகொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
இந்த சட்டமூலத்தின் மூலம், பாலியல் செயற்பாட்டிற்காக சிறுமிகளின் வயதை 16 இலிருந்து 14 ஆகக் குறைப்பது, 22 வயதுக்குட்பட்ட ஆண் குற்றவாளிகளுக்கான தண்டனையைக் குறைப்பது, அதேபோன்று தண்டனைச் சட்டத்தின் பிரிவு 363 ஆண் மற்றும் பெண் பலாத்காரத்தை ஒன்றாக வைப்பதற்குப் பதிலாக , பெண் பலாத்காரத்திற்கான தனிச்சட்டங்களும் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி சட்டங்கள், தனித் திருத்தங்கள் மூலம் ஆண்களுக்கு இருக்க வேண்டிய சட்டங்களும் முன்வைப்பது மிகவும் முக்கியமான விடயங்களாகும்.
அதனால் குற்றவியல் சட்டத்தின் 363 மற்றும் 364 பிரிவுகளை திரும்பப் பெறுமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளிக்கையில்,
எதிர்கட்சித்தலைவரின் கோரிக்கையை நீதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இது எதிர்க்கட்சிகளின் கருத்தா என்று எனக்குத் தெரியவில்லை. ஜே.வி.பி விபசாரத்தை சட்ட பூர்வமாக்க முயற்சிப்பதால், அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. இது ஒரு சிக்கலான பிரச்சினை. இது கலந்துரையாட வேண்டிய விடயம். எனவே, அதைச் செய்வதில் இரண்டு நிலைப்பாடுகள் இல்லை என்றார்.
https://www.virakesari.lk/article/179443
3 months 2 weeks ago
LIVE
1st Match (N), Chennai, March 22, 2024, Indian Premier League
Royal Challengers Bengaluru (19.6/20 ov) 173/6
Chennai Super Kings
RCB chose to bat.
Current RR: 8.65 • Last 5 ov (RR): 71/1 (14.20)
3 months 2 weeks ago
நாங்கள் புலம் பெயர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஊரில் வாழ்ந்த காலத்தை விட, வெளியில் வாழ்ந்த காலமே அதிகம் என்றாகிவிட்டது. தெரிந்தவர்கள் பலர் வாழ்க்கை முடிந்து போகவும் ஆரம்பித்துவிட்டார்கள்.
என்னதான் வெளிநாடுகளில் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும், மனங்கள் என்றும் ஊரையும், அந்த நினைவுகளையுமே அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் என்றும் புலம் பெயரவே இல்லை என்னும் அளவிற்கு ஊர் நினைவுகள் அப்படியே ஒட்டியிருக்கின்றன.
சில வேளைகளில் பார்த்தால், உண்மையில் கடைசிப் புகை மட்டும் தான் புலம் பெயர்ந்தது, அந்தந்த நாடுகளில் கலந்து விடுகிறதோ என்று தோன்றுகின்றது.
********************
புலம் பெயர்ந்த புகை
----------------------------------
இங்கு வந்த நாங்கள்
இப்பொழுது
இறக்க தொடங்கி விட்டோம்
கடைசியில்
ஒரு இடு வீட்டில்
ஒரு வாரம் விறைப்பாக கிடந்து
அங்கிருக்கும் புகை போக்கியால்
எரிந்த மெய்
புகையாக போகின்றது
நாளை வாழ்வோம்
நாளை வாழ்வோம்
இன்று ஓடுவோம்
இன்றே தேடுவோம் என்றிருக்க
வாழ்க்கை ஓடியே போக
காலம் முடிந்து விடுகின்றது
இன்றே ஏன் வாழக்கூடாது
எவருக்கும் சொல்லத் தெரியவில்லை
இன்று அவர் ஓடுகின்றார்
ஆகவே இவரும் ஓடுகின்றார்
இன்று அவர் வாங்குகின்றார்
ஆகவே இவரும் வாங்குகின்றார்
பின்னர் ஒரு நாளில்
ஊர் மண்ணை போய் சேர
மீண்டு வரும் சொர்க்கம் என்று
எண்ணி எண்ணி இருக்க
அந்த நாள் என்றும் வருவதில்லை
திடீரென பெய்த மழையில்
கொத்தாக குருவிகள் ஒதுங்கின
வீட்டுக் கூரைக்குள்
கிச் கிச் கீச்சென்று
ஒன்றையொன்று தள்ளி இடம் பிடித்தன
துளி விழுந்து
துள்ளி ஓடி வந்தது
வெளியே போன குஞ்சு ஒன்று
அகமும் விழியும் இருந்தால்
இந்த வாழ்க்கை சமமே
இங்கும் அங்கும்.
Checked
Mon, 07/08/2024 - 12:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed