புதிய பதிவுகள்2

யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.

3 months 2 weeks ago
ஆமாம்,.ஆனால் எப்படி?? ஆரம்பத்திலே அனைவரும் அனைத்து விடயங்களையும் ... கருமங்களையும். பிழை விட்டு தான் செய்ய முடியும்,.செய்வார்கள் நீங்கள் நடக்க பழகிய போது விழுந்து எழும்பித் தான் நடக்க பழகினீர்கள் இது சாதாரணமானது முதல் முறை கார் ஒடும்போது பிழைகள் விட்டு திருந்தி. சரியாக ஒட முடியும் ஆகவே இதில் எந்த பிழையுமில்லை .....பிழை எது என்றும் கற்றுக் கொள்ள வேண்டும் அப்புறம் சரி இயல்பாக தெரிந்து விடும் சிறுவர்கள் ஆரம்பத்தில் விடும் பிழைகள் பாரதூரமான விடயம் இல்லை அவர்கள் கண்டிப்பாக பிழைகள் விட வேண்டும் அது பிழை என்றும் தெரிந்து கொள்ளவும் வேண்டும் இந்த சின்ன விடயத்தை நீங்கள் ஆராயும் விதத்திலருந்து உங்களுடைய விளங்கிக் கொள்ளும் அற்றலும். கற்ப்பிக்கும் வலுவும். கள உறுப்பினர்கள் அறிய முடியும்

கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !

3 months 2 weeks ago
இலங்கையிலிருந்து கியூபாவுக்கும் வடகொரியாவுக்கும் போகாமல், காபிடலிஸ்ட் நாடுகளுக்குப் போய் அங்கிருந்து இலங்கையில் சோஷலிஸ ஆட்சியைக் கொண்டுவர முயல்வதெல்லாம் என்ன மாதிரி மனநிலை!

பிஞ்சுக் காதல்…

3 months 2 weeks ago
பிஞ்சுக் காதல்… பள்ளிப் பருவம் துள்ளித் திரிந்த காலம்.. மெள்ள எட்டிப் பார்த்தது காதல் ஆசை மெல்லத் தூண்டி விட்டான் சினேகிதம்… மெதடித்த மாணவி.. மாதவி நடிகையின் போட்டோக் கொப்பி போற வாற இடமெல்லாம் துப்புத் துலக்கியாச்சு.. என்னவென்று தொடங்குவது அய்டியாவையும் தந்தான் அந்தப் பாவிமகன் முதலில் வெற்றுத் தாளை கசக்கி காலடியில் போடு.. எடுத்தால் வெற்றி உனக்கென்றான்…. காலால் மிதிபட்டு கதியால் வேலிக்குள் கிடந்தது காகிதக் கசக்கல்… மூளையை கசக்கி பிழிந்து எப்பிடியோ பிறந்த நாள் கண்டு பிடிச்சிட்டம்.. பரிசு கொடுக்கும் அய்டியா.. பொடிநடையாய் நடந்து திருமகள் கடையில் கே.ஜி பேனையும் வாங்கியாச்சு… காலடியிலும்….போட்டு கையாலும் எடுத்துவிட்டது பிகர் இனி லைன் கிளீயர்.. அடுத்து ..கைக்குட்டை குடுக்கிற பிளான் நல்ல லேஞ்சி வாங்க நெல்லியடியில் அலைஞ்சு கண்மணியின் கையிலை கொடுத்து ஐ.லவ் யூவும் சொல்லியாச்சு… பதில் சிரிப்பே தவிர…. நோ ...வாய் மொழி… லேஞ்சி கொடுத்தால் காதல் முறியும்..என்பதை லேட்டாத்தான் வாசியாலை பேப்பரிலை…பார்த்தம் சாத்திரம் உண்மைதான்.. இரண்டாம்நாள் இன்னொருவர் மூலம் என் கையில் பேனாவும் லேஞ்சியும்.. ஏனாம் ஏற்கனவே அவவுக்கு லவ்வு இருக்காம்… அப்ப ஏன்… அவரு பசையுள்ள ஆளாம்.. நான்.. கே ஜீ ப்பேனைக்கும் லேஞ்சிக்கும் கடன் பட்ட ஆள்தானே…. எப்படி நான் மாதவிக்கு வலைவிரிக்க மூடியும் காதல் தோல்வியில் தாடி வளர்த்து வாழ்வே மாயம் பாடுவமென்றால் எட்டாம் வகுப்பு படிக்கிற எனக்கு தாடியும் வளருமோ மீசையும் வளருமோ… பிஞ்சுக்காதல்…இல்லை இது பிறரைப் பார்த்து ஆசைப்பட்ட நப்பாசை…. கூடா நட்பால் வந்தவினை பூவரசம் கம்பால் வாங்கித் தெளிந்து.. கொழும்புக்கு பெட்டி கட்டினதுதான்…மிச்சம் (கற் பனையன்றி வேறொன்றுமில்லை)

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

3 months 2 weeks ago
கண்கவர் தொடக்க விழாவுடன் ஐபிஎல் 17ஆவது அத்தியாயம் ஆரம்பம் 23 MAR, 2024 | 09:36 AM (நெவில் அன்தனி) இண்டியன் பிறீமியர் லீக் 17ஆவது அத்தியாயம் சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் நடைபெற்ற கண்கவர் தொடக்க விழாவுடன் பிரமாண்டமாக ஆரம்பமானது. வெள்ளிக்கிழமை மாலை 6.30க்கு தொடங்கிய ஆரம்ப விழா சுமார் அரை மணித்தியாலமாக அரங்கில் குழுமியிருந்த இரசிகர்களை மகிழ்ச்சிவெள்ளத்தில் மிதக்கச் செய்தது. தொடக்க விழாவின்போது தேசிய கொடியுடன் பொலிவூட் நடிகர் அக்சய் குமார் கம்பியில் தொங்கியவாறு மிதந்து வந்தார். அவரிடம் இருந்து மற்றொரு பொலிவூட் நடிகர் டைகர் ஷெரொப் தேசிய கொடியைப் பெற்றுக்கொண்டு அதனை மேடையின் உயரமான இடத்தில் நாட்டினார். தேசிய கொடி நாட்டப்பட்டதும் பொலிவூட் நடிகர்கள் இருவரும் ஹிந்தி பாடலுக்கு நடனமாடி இரசிகர்களை குதூலிக்கச் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து தனது மகன் அமீனுடன் மேடையில் தோன்றிய இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இனிமையான பாடல் ஒன்றைப் பாடி இரசிகர்களையும் பாட வைத்தார். ரகுமான், அவரது மகன் மற்றும் சுவேதா மோகன் ஆகியோர் மற்றொரு பாடலை இணைந்து வழங்கினர். இதனைத் தொடர்ந்து இந்திய சினிமா நட்சத்திரங்களால் நடத்தப்பட்ட இந்திய கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கில் நிரம்பி வழிந்த இரசிகர்களை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி இரசிகர்களையும் பிரமிக்க வைத்தன. https://www.virakesari.lk/article/179469

பிரிட்டிஸ் இளவரசி கேட்மிடில்டனிற்கு புற்றுநோய் - வீடியோ அறிக்கையில் விபரங்களை வெளியிட்டார்

3 months 2 weeks ago
Published By: RAJEEBAN 23 MAR, 2024 | 06:32 AM பிரிட்டிஸ் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளார். வீடியோ அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார் புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். கடுமையான பல மாதங்களிற்கு பின்னர் இது மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நான் நன்றாகயிருக்கின்றேன் ஒவ்வொரு நாளும் வலிமை பெற்றுவருகின்றேன் என அவர் தெரிவித்துளளார். நோய் பாதிப்பு குறித்த விபரங்கள் முழுமையாக வெளிவராத போதிலும் இளவரசி முழுமையாக குணமடைவார் என கென்சிங்டன் அரண்மணை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நான் வயிற்றில் சத்திரசிகிச்சை செய்துகொண்டவேளை நான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றேனா என்ற விபரம் தெரியவரவில்லை, ஆனால் சத்திரசிகிச்சைக்கு பிந்திய மருத்துவபரிசோதனைகளின் போது நான் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. நான் ஹீமோதெரபி சிகிச்சைக்கு என்னை உட்படுத்தவேண்டியுள்ளது. சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளேன் என கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார். பெப்ரவரியில் சிகிச்சை ஆரம்பமாகியுள்ளது – நோய் சிகிச்சை குறித்த ஏனைய விபரங்களை வெளியிடப்போவதில்லை என கென்சிங்டன் அரண்மணை தெரிவித்துள்ளது. இந்த வகையான நோயினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நான் இந்த தருணத்தில் நினைத்துப்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ள இளவரசி கேட் (42) இந்த வகை நோயினை அதன் எந்த வடிவத்தில் எதிர்கொள்பவராக நீங்கள் இருந்தாலும் நம்பிக்கை இழக்காதீர்கள் நீங்கள் தனியாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/179472

ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்

3 months 2 weeks ago
23 MAR, 2024 | 06:35 AM ரஷ்யாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் அரங்கிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குரோகஸ் சிட்டி ஹோல் என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், அங்கு பலர் கூடியிருந்தனர். அப்போது ரஷ்ய இராணுவ உடை அணிந்திருந்த மர்ம நபர்கள் 5 பேர், இசை நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்து அங்கிருந்த பார்வையாளர்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட இடத்தில் தீ வைப்பு சம்பவங்களும் இடம்பெற்றதால் அப்பகுதியில் தீ பரவியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டடுள்ளது. இணையத்தில் பரவும் பல தாக்குதல் காணொளிகளில், இசை நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் தரையில் வீழ்ந்து பாதுகாப்பைத் தேடுவதும், இருக்கைகளுக்குப் பின்னால் மறைந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதும் துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் மற்றும் கூச்சல் இடம் சந்தம் கோட்பதையும் அங்கிருந்து பலர் வெளியே பாதுகாப்புத் தேடி ஓடுவதையும் வெளிப்படுத்துகின்றது. தாக்குதலையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த ரஷ்யா பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, இந்த தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையென உக்ரைன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179471

சீன பல்கலைக்கழக பிரதிநிதிகள் கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு விஜயம் : ஒப்பந்தம் கைச்சாத்து

3 months 2 weeks ago
23 MAR, 2024 | 10:44 AM சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான யுனான் பல்கலைக்கழக பிரதிநிதிகள் (22) இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து கலாசார மற்றும் மொழி ரீதியான பரிமாற்றங்களை செய்வதற்கான நிலையம் (Confucius Unit) ஸ்தாபிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக மூதவை கட்டட தொகுதியில் இடம்பெற்றது. யுனான் பல்கலைக்கழக உப பீடாதிபதி ஹூ ஜின்மிங்க் தலைமையிலான குழுவினர் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், பிரதி உபவேந்தர், பதிவாளர் உட்பட சர்வதேச விவகாரங்கள் திணைக்கள இணைப்பாளர் ஆகியோருடன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இந்த நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் உபவேந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது. அத்துடன் சீன பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கும் இடையிலான கூட்டம் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர், பீடாதிபதிகள், பதிவாளர், நூலகர், நிதியாளர் அத்துடன் சர்வதேச விவகாரங்கள் திணைக்கள இணைப்பாளர் ஆகியோரின் பங்குபற்றலுடன் பல்கலைக்கழக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, இந்த நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. கிழக்கு பல்கலைக்கழகம் சார்பாக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், யுனான் பல்கலைக்கழகம் சார்பாக அதன் உபபீடாதிபதி ஹூ ஜின்மிங்க் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். அவ்வேளை கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டு அவரது நெறிப்படுத்தலில் இப்பல்கலைக்கழக ஊழியர் மேம்பாட்டு நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிருவாக தலைமைத்துவ பயிற்சிநெறிகளை பூர்த்திசெய்த கல்விசார் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது. ஊழியர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சிதம்பரேசன் தலைமையில் நடைபெற்ற இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஹூ ஜின்மிங்க் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார். இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், விஜயத்தின் ஓர் அங்கமாக Confucius Unit நிலையத்துக்கான உத்தேச இடம் சீன பிரதிநிதிகளால் பார்வையிடப்பட்டது. மேற்படி நிலையம் இலங்கை கொழும்பு பல்கலைக்கழகம் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179488

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் திடீர் விபத்து, அவசர சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டடம் திறப்பு!

3 months 2 weeks ago
23 MAR, 2024 | 10:42 AM பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (23) திறந்துவைக்கப்பட்டது. நெதர்லாந்து அரசின் மென்கடன் திட்டத்தின் கீழ் இந்த புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் 4000 மில்லியன் ரூபாய் செலவில் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. புதிய கட்டடத் தொகுதியில் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள், குருதி சுத்திகரிப்பு பிரிவு, கதிரியக்கப் பிரிவு, சிறுவர்களுக்கான விசேட சிகிச்சைப் பிரிவு, குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு மற்றும் நோயாளர் விடுதி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு ஆதார வைத்தியசாலைகளில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையும் ஒன்றாகும். இது “ஏ” தர ஆதார வைத்தியசாலையாக உள்ளது. ஆதார வைத்தியசாலைகளின் வசதிகள் குறைவாக காணப்படுவதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அதிகளவில் நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அவசர மற்றும் திடீர் விபத்து பிரிவின் ஊடாக பலர் நன்மையடையவுள்ளனர். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை திறந்து வைத்ததன் பின்னர், ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் சிகிச்சைப் பிரிவுகளை சென்று பார்வையிட்டனர். இந்த வைத்தியசாலையின் ஊடாக அதிகபட்ச பலனை பெற்றுக்கொள்ள வேண்டுமென வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இதன்போது தெரிவித்தார். குறிப்பாக, புதிய சிகிச்சை பிரிவில் சிடி ஸ்கேன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையானது இப்பகுதி மக்களுக்கான ஒரு வரப்பிரசாதம் எனவும் ஆளுநர் தெரிவித்தார். ஆகவே, மத்திய அரசாங்கத்தின் “அனைவருக்கும் ஆரோக்கியம்” என்ற கொள்கையை அனைத்து மக்களிடையேயும் கொண்டு செல்வதை உறுதி செய்வதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என ஆளுநர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179484

நாட்டில் 12 சதவீதமான முதியவர்களுக்கு பற்கள் இல்லையாம்

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 23 MAR, 2024 | 08:58 AM நாட்டிலுள்ள 12 சதவீதமான முதியவர்கள் அனைத்தை பற்களையும் இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இதனை உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தெரிவித்துள்ளார். பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பாடசாலை மட்டத்தில் கற்பிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் வாய் பல் ஆரோக்கியத்தை சரியாக பேணுவது முக்கியம். நாட்டில் இன்று ஏராளமானோர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற நோய்களைத் தடுக்க சரியான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுவதன் அவசியம் என வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/179475

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு !

3 months 2 weeks ago
கொழும்பு, கம்பஹா, மன்னார் மாவட்டங்களில் இன்று கடும் வெப்பம்! 23 MAR, 2024 | 06:41 AM வடமேல் மாகாணத்திலும் அத்துடன் கொழும்பு, கம்பஹா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய,சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்குஅப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 கிலோமீற்றரிலம் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/179473

நாமக்கல்: பட்டியலின சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுத்த விவகாரம் - உண்மையில் என்ன நடந்தது?

3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், சுதாகர் பாலசுந்தரம் பதவி, பிபிசி தமிழுக்காக 22 மார்ச் 2024 ஊர் கட்டுபாடு என்னும் பெயரில் தொடரும் சாதிய வன்கொடுமையால் இரண்டு பட்டியலின சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுக்கப்பட்ட விவகாரத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுத்த சலூன் கடை உரிமையாளர் உட்பட மூன்று பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முடிவெட்ட மறுத்த சலூன் கடைக்காரர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுள்ள திருமலைப்பட்டி காமராசர் காலணியைச் சேர்ந்தவர் 33 வயதான அருள்பாண்டியன். தனியார் நிறுவன ஊழியரான இவர், தன்னுடைய இரண்டு மகன்கள் மற்றும் மனைவியுடன் இந்த ஊரில் வசித்து வருகிறார். கடந்த ஞாயிறன்று, மதியம் 1 மணியளவில், தனது இரு மகன்களையும் முடிவெட்டுவதற்காக தனது ஊருக்கு அருகேயுள்ள தெவ்வாய்பட்டி கிராமத்திலுள்ள சலூன் கடைக்கு அனுப்பியுள்ளார் அருள்பாண்டியன். அங்கு சென்ற சிறுவர்களிடம், சலூன் கடையின் உரிமையாளர் சிட்டு, கோவிலுக்குப் போவதால், கடையைப் பூட்டுவுள்ளதாகக் கூறி சிறுவர்கள் இருவரையும் திருப்பி அனுப்பியுள்ளார். இந்தத் தகவலை வீட்டுக்குத் திரும்பிய சிறுவர்கள் தனது தந்தையிடம் தெரிவித்தனர். இந்நிலையில் அன்று மாலை, அருள்பாண்டியன் தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு மீண்டும் சிட்டுவின் முடிவெட்டும் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது மூடுவதாகக் கூறப்பட்ட கடை திறந்து இருந்தது. கடையின் உரிமையாளர் சிட்டு ஒருவருக்கு முடி வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது தனது மகன்களுக்கு முடிவெட்ட வேண்டும் என்று அருள்பாண்டியன் கேட்டபோது, கடை உரிமையாளர் முடிவெட்ட மறுத்துள்ளார். “எனது மகனுக்கு முடிவெட்ட வேண்டும் என்று நான் சிட்டுவிடம் கேட்டபோது, உங்களுக்கெல்லாம் முடிவெட்ட முடியாது. ஊர் கட்டுப்பாடு அப்படி இருக்கிறது. மீறி வெட்டினால் பஞ்சாயத்தில் கடையை மூடிவிடுவார்கள் என கடை உரிமையாளர் என்னிடம் சொன்னார்,” என்று பிபிசியிடம் பேசிய அருள்பாண்டியன் தெரிவித்தார். வழக்குப் பதிவு செய்த காவல்துறை சாதியை முன்வைத்து, சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுத்த விவகாரத்தில், அருள்பாண்டியன் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் கடந்த 17ஆம் தேதி புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, சலூன் கடை உரிமையாளர் சிட்டுவை கைது செய்தது. இவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தல், அவமானப்படுத்தும் நோக்கத்தோடு அவமரியாதை செய்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் பட்டியிலினத்தவர்களுக்கு முடிவெட்டக்கூடாது என்று கிராமத்தில் கட்டுப்பாடு உள்ளது என்று கூறி சலூன் கடை உரிமையாளரை மிரட்டியதாக இந்த வழக்கில் மேலும் இரண்டும் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிட்டு கைதான நிலையில், அந்த ஊரைச் சேர்ந்த ஆதிக்க சமூகத்தினரின் மிரட்டலுக்குப் பயந்து தனது கணவர் முடிவெட்ட மறுத்ததாகவும், இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று சிட்டுவின் மனைவி தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா கூறும்போது, அருள்பாண்டியன் புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவில் இவ்வழக்கு பதியப்பட்டுள்ளது. அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடிவெட்டக் கூடாது என சலூன் கடை உரிமையாளரை மிரட்டிய ஆதிக்க சாதியைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ராஜேஷ்குமார்(35), பால்காரர் செல்வராசு(52) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம மக்களிடம் பேச பிபிசி முயற்சி செய்தது. ஆனால் காவல்துறை கைது நடவடிக்கைக்குப் பயந்து யாரும் பேச முன்வரவில்லை. தொடரும் அவலம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் "சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்பும் இதுபோன்ற சாதிய வன்கொடுமைகள் நடப்பது வேதனையளிக்கிறது. இன்னொரு மனிதனுடைய சுயமரியாதையை கேவலப்படுத்துவதற்காக சக விளிம்புநிலை சமூகங்களில் இருப்பவர்களையே கருவியாகப் பயன்படுத்துவது இந்த நாடு இன்றும் ஜனநாயகப்படவில்லை என்பதையே காட்டுகிறது," என்றார் பழங்குடியின செயற்பாட்டாளர் வழக்கறிஞர் பாலமுருகன். இதுகுறித்துப் பேசிய சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், "இன்றைய காலகட்டத்தில் நேரடியான சாதிய தீண்டாமைகளுக்கு மாற்றாக நவீன தீண்டாமைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் இதுபோன்ற நேரடியான தீண்டாமை வடிவங்கள் தமிழக கிராமங்களில் இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. ஒரு மனிதன் பயன்படுத்திய பொருளை, இடத்தை, கடையை நான் பயன்படுத்த மாட்டேன் எனச் சொல்லி பட்டியிலின மக்களை ஒதுக்கி வைக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தமிழ்நாடு அரசு விரிவான ஆய்வு மேற்கொண்டு தீண்டாமை கொடுமைகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்," என்றார். ராசிபுரம் சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய ஆணையர் டாக்டர் ரவிவர்மன் பிபிசியிடம் பேசினார். தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு முடிவெட்ட மறுப்பது தொடர்பான வழக்குகள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே பதிவாகின்றன. கடந்த மாதம் சேலம் கொளத்தூர் அருகே முடிவெட்டுவது தொடர்பாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில், சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் “காவேரிபுரம் பேருந்து நிறுத்தத்தில் ரமேஷ் என்பவர் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். அவர் அப்பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு முடிதிருத்தம் செய்வதில்லை என்ற புகார் வந்தது. இதுகுறித்து விசாரணை செய்தபோது உங்களுக்கு வெட்டினால், உயர் சாதியினர் என்னிடம் முடிவெட்ட வர மாட்டார்கள் என்றார் அந்த கடைக்காரர். வேண்டுமென்றால் வழக்கு போட்டுக் கொள்ளுங்கள் என்று அலட்சியமாகக் கூறியுள்ளார்." இதுபோல பல ஊர்களின் நடந்தாலும், பெரியளவில் அந்தச் சம்பவங்கள் வெளிவருவதில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் குறித்துப் புகார் அளித்தால் மட்டுமே தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், நேரடியாக விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்று ரவிவர்மன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் திருப்பூர், கோயமுத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு நாமக்கல், கரூர், ஒரத்தநாடு, உள்ளிட்ட பகுதியில் அதிகளவில் பட்டியலின மக்களுக்கு முடிவெட்டாமல் புறக்கணிக்கப்படுவதாக தகவல் வருகின்றன. ஆனால் இங்கு யாரும் புகாரளிக்க முன்வருவதில்லை என்றார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முடிவெட்ட மறுத்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,20,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும். எஃப்.ஐ.ஆர் போட்டவுடன் 25% தொகையும், குற்றப் பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்பு 50% தொகையும், நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் 25% தொகை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார். ராசிபுரம் விவகாரத்தில், தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், நேரடியாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல முடியாது. தேர்தல் முடிந்ததும், புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்த ஆண்டில் இதுவரை முடிவெட்ட மறுத்தல் தொடர்பாக கொளத்தூர் மற்றும் நாமக்கல் என இரு வழக்குகள் மட்டுமே பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c970n3765z5o

வெளிநாட்டவர்கள் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை விமான நிலையத்திலேயே பெற்றுக்கொள்ள வாய்ப்பு - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன

3 months 2 weeks ago
22 MAR, 2024 | 08:49 PM இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின்றி உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டமும் மார்ச் 01 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். அதற்கமைய, விபத்து இடம்பெற்று ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் 05 இலட்சம் ரூபா வரையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடிவதோடு, அந்த தொகையை நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவனத்தின் எந்தவொரு கிளையிலும் பெற்றுக்கொள்ள கூடிய வசதிகள் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், "ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய வீதி விபத்துக்களை மட்டுப்படுத்தும் வகையிலான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. வீதி விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அறியப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கும் காப்புறுதி நிறுவனங்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொடர் கலந்துரையாடலின் பலனாக நீதிமன்ற நடவடிக்கையின்றி விரைவாக இழப்பீடு வழங்கும் வேலைத் திட்டம் மார்ச் 1 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. மார்ச் 1 ஆம் திகதிக்கு பின்னரான விபத்துக்கள் தொடர்பில் மாத்திரமே இத்திட்டம் செயற்படுத்தப்படும். விபத்து இடம்பெற்று ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவனத்தின் எந்தவொரு கிளையிலிருந்தும் அதிகபட்சமாக 05 இலட்சம் ரூபா வரையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும். மாறாக பாதிக்கப்பட்டவர் மேலதிகமான இழப்பீட்டுத் தொகையை பெற எதிர்பார்க்கும் பட்சத்தில் அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை நாட வேண்டும். இந்த நடவடிக்கை குறித்து இலங்கை பொலிஸார் மற்றும் பிரதேச செயலாளர்கள் கிராம சேவை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிவரவுத் திணைக்களம், விமானப் போக்குவரத்து சேவைகள் அதிகார சபை மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியன இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்தில் விண்ணப்பிப்பதற்கும் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அதன்படி மாதமொன்றுக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 25 டொலர்களும், மூன்று மாதங்களுக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 50 டொலர்களும், 6 மாதங்களுக்கு 75 டொலர்களும், ஓரு வருடத்திற்கு மேலான அனுமதி பத்திரங்களுக்கு 200 டொலர்களும் அறவிடப்படவுள்ளது. மேலும், ஏப்ரல் 10 முதல் திறன் மதிப்பீட்டு புள்ளிகள் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் வரையில், போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் செலுத்தும் தபால் நிலையங்கள், குற்றத்தின் தன்மை, உரிய பொலிஸ் நிலையம், சாரதி அனுமதிப் பத்திர விவரம் மற்றும் தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட தகவல்கள் தேசிய வீதி போக்குவரத்து அதிகார சபையின் தகவல் கட்டமைப்பின் இணைக்கப்படவுள்ளன. அந்த தரவுகளின்படி, விபத்து குறித்த குறுஞ்செய்தி மற்றும் விபத்து தொடர்பான காணொளிகள் தேசிய வீதி போக்குவரத்து பாதுகாப்பு அதிகார சபையினால் உரிய தொலைபேசி இலக்கங்களுக்கு வட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும். வீதி விபத்துகளைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். அதன்படி, கல்வி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவை இணைந்து ஏப்ரல் 3ஆம் திகதி முதல் ஒவ்வொரு பாடசாலைகளிலும் வீதி பாதுகாப்பு ஒன்றியங்களை நிறுவ தீர்மானிக்கப்பட்டளது. பல்வேறு படிமுறைகளின் கீழ் இத்திட்டத்திற்காக பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதி பதக்கம் வெள்வோர் சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்துமூல பரீட்சையிலிருந்து விடுவிக்கப்படுவர். கல்வியற் கல்லூரிகளிலும் வீதி போக்குவரத்து தொடர்பிலான ஒன்றியங்களை நிறுவி மேற்கூறியது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவும் எதிர்பார்த்திருக்கிறோம். அதற்கு மேலதிகமாக வீதி விதிமுறைகள் மற்றும் வீதி போக்குவரத்து தொடர்பிலான அறிவை பாலர் பாடசாலை மட்டத்தில் பெற்றுகொடுப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய வீதிப் போக்குவரத்து அதிகார சபை 1998 இல் நிறுவப்பட்டது. தற்போதைய நிலைமைகளுக்கமைய அதற்காக ஏற்பாடுகளை செய்ய முடியாது என்பதால் தேசிய வீதிப் போக்குவரத்து அதிகார சபையை வீதிப் போக்குவரத்து ஆணைக்குழுவாக மாற்றியமைப்பதற்கான அங்கீகாரத்தை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கொண்டுள்ளார். அதனை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/179468

யுத்தத்தின் இறுதிகாலங்களில் ஊடகவியலாளராக பணியாற்றிய சுரேன் கார்த்திகேசுவின் “போரின் சாட்சியம்”

3 months 2 weeks ago
23 MAR, 2024 | 09:32 AM முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைஇடம்பெற்றவேளை இலங்கையில் ஊடகவியலாளராக பணிபுரிந்த சுரேன் கார்த்திகேசு போரின் சாட்சியாகயிருந்த அவரின் கண்முன்னே இடம்பெற்ற சம்பவங்கiயும் அவர் எடுத்த புகைப்படங்களையும உள்ளடக்கிய போரின் சாட்சியங்கள் நூலை வெளியிடவுள்ளார். போர்க்காலத்தில் ஈழநாதம் பத்திரிகையில் பணிபுரிந்த சுரேன் கார்த்திகேசு தற்போது புலம்பெயர்ந்து வாழ்ந்;து கொண்டிருக்கின்ற நிலையி;ல் புலம்பெயர் தேசங்களில் இந்த அவர் நூலை வெளியிடவுள்ளார். இந்த நூல் ஏப்பிரல் 27 த் திகதி கனடா வன்கூவரிலும் மே 12 ம் திகதி சுவிட்சர்லாந்திலும் வெளியாகவுள்ளது. எனக்கு கிடைத்த சந்தர்ப்பம் போல வேறு போர்க்காலத்தில் ஊடகவியலாளராக பணியாற்றியவர்களுக்கு கிடைத்திருக்காது. இறுதிப்போர்க்காலத்தில் ஈழநாதம் பத்திரிகையை தவிர வேறு எந்த அச்சு ஊடகங்களும் வெளிவரவில்லை. பத்திரிகைப்பயணமும் அத்தோடு நான் எடுத்த ஒளிப்படங்களையும் உள்ளடக்கி “ போரின் சாட்சியம் ” என்ற நூலை உருவாக்கியுள்ளேன். இதில் சில இறுதிப்போர்க்காலத்தில் பணியாற்றிய சில ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 2009 போர்நடைபெற்ற காலத்தில் நீங்கள் பார்த்திருந்த ஒளிப்படங்களுக்கான கதைகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம். போரின் மூலம் இனஅழிப்புச் செய்யப்பட்டுள்ளமைக்கான சாட்சியங்களைக்கொண்ட இந்நூல் எதிர்வரும் 2024- ஏப்பிரல் 27 சனிக்கிழமை, அன்று மாலை 4 மணிக்கும் வன்கூவரிலும் வெளியிடப்படுகிறது என்பதை அறியத்தருகின்றேன். என ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179478

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

3 months 2 weeks ago
'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே: ஆர்சிபி-யின் ஓட்டைகளைப் பயன்படுத்திய கேப்டன் ருதுராஜ் பட மூலாதாரம்,IPL/TWITTER கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளைய, புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளார். அவரது கேப்டன்சி வெற்றிகரமாக அமைந்ததற்கு அறிமுக வீரர்கள் முஸ்தபிசுர் ரஹ்மான், ரச்சின் ரவீந்திரா, ரஹானே ஆகியோர் முக்கியக் காரணங்களாக அமைந்தனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த 2024ஆம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் டி20 தொடரின் முதல் ஆட்டம் தொடங்கியது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. 174 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கேப்டன் யார்? சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் எவ்வாறு செயல்படப் போகிறார் என்ற பதற்றம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், அவ்வப்போது ருதுராஜுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கிய தோனி, ஃபீல்டிங் செட் செய்வதிலும் உதவினார். கேப்டனாக முதல் போட்டி என்ற பதற்றமின்றி கெய்க்வாட் செயல்பட்டார். டிகே, ராவத் கூட்டணி திடீரென விளாசலில் ஈடுபட்டபோது அடுத்து எவ்வாறு பந்துவீச்சாளர்களை மாற்றுவது என்றபோது, தோனி வந்து ஆலோசனை கூறியது, இன்னும் சிஎஸ்கே கேப்டன் தோனிதான் என்பதை நினைவூட்டியது. ஆர்சிபியை துரத்தும் தோல்வி - சிஎஸ்கே சாதனை பட மூலாதாரம்,IPL/TWITTER சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணியின் தோல்வி 17வது ஆண்டாகத் தொடர்கிறது. 2008ஆம் ஆண்டுக்குப் பின் சேப்பாக்கத்தில் ஆர்சிபியால் இன்னமும் வெற்றி பெற முடியவில்லை என்ற அவப்பெயர் நீடிக்கிறது. அதேநேரம், சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக 8வது வெற்றியை சிஎஸ்கே அணி பதிவு செய்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு மைதானத்தில் ஒரு அணிக்கு எதிராக அதிகபட்ச வெற்றியைப் பெற்றது சிஎஸ்கே அணியாகத்தான் இருக்கும். ஆட்டம் முடிந்தபின் மைதானத்தில் “இது எங்க ஏரியா உள்ள வராதே” என்ற பாடல் ஒலித்தபோது, ஆர்சிபி அணிக்கு சிஎஸ்கே கூறுவதுபோல் இருந்தது. டிஜே-வின் சமயோஜித பாடலை ரசிகர்கள் ஏகத்துக்கும் ரசித்தனர். முஸ்தபிசுர் ‘முறுக்குப்பிழிதல்’ நுட்பம் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான், அறிமுக வீரர் ரச்சின் ரவீந்திரா, ரஹானே ஆகியோரின் பேட்டிங் முக்கியக் காரணங்கள். அதிலும் முஸ்தபிசுர் ரஹ்மானின் ஸ்லோ-பால் நுட்பம் முதல் போட்டியிலேயே நன்கு பலன் அளித்தது. “முறுக்குப் பிழிதல்” போல் கையை மடக்கி வைத்து பேட்டர்களை ஏமாற்றும் அந்த ஸ்லோ-பால் நுட்பம் அவருக்கு பவர்ப்ளேவில் 2 விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்தது. 2வது ஸ்பெலில் பந்துவீச வரும்போது, கோலி, கிரீன் என இரு பெரிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி சிஎஸ்கே பணியைச் சுலபமாக்கினார். சிஎஸ்கே அணியின் அறிமுக பந்துவீச்சாளர் “ஃபிஸ்(Fiz)” எனப்படும் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தும், அதை மற்ற பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தவில்லை. இதனால்தான் ஆர்சிபியை 100 ரன்களுக்குள் சுருட்ட முடியாமல் கூடுதலாக 95 ரன்களை சேர்க்க முடிந்தது. அறிமுக ஆட்டத்திலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முஸ்தபிசுர்(ஃபிஸ்) ரஹ்மானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பட்டையைக் கிளப்பிய ரவீந்திரா பட மூலாதாரம்,IPL/TWITTER அதேபோல மற்றொரு அறிமுக வீரர், தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா அறிமுக ஆட்டத்தைப் போல் பேட் செய்யாமல் பட்டையைக் கிளப்பிவிட்டார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் நேற்று 246 என்று மிரட்டலாக இருந்தது. 15 பந்துகளில் 37 ரன்கள் குவித்த ரவீந்திரா கணக்கில் 3 சிக்ஸர்களும், 3 பவுண்டர்களும் அடங்கும். தொடக்கத்தில் ரவீந்திரா, ரஹானே அமைத்துக் கொடுத்த அடித்தளம்தான் சிஎஸ்கேவின் வெற்றியை எளிதாக்கியது. ‘என்னுடன் தோனி இருக்கிறார்’ கேப்டனாக முதல் வெற்றியை ருசித்த கெய்க்வாட் பேசுகையில், “தொடக்கத்திலேயே கட்டுக்கோப்பாகச் செயல்பட்டோம், முதல் 3 ஓவர்கள் முடிந்து, சுழற்பந்துவீச்சாளர்கள் வந்தபின் ஆட்டம் எங்கள் வசம் வந்தது. இன்னும் 15 ரன்கள் குறைவாகக் கொடுத்திருக்கலாம். ஆர்சிபியும் கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடியது. மேக்ஸ்வெல், டூப்ளெஸிஸ் விரைவாக ஆட்டமிழந்தது எங்களுக்கு திருப்புமுனையாக இருந்தது. இதனால்தான் அடுத்த 5 ஓவர்களை கட்டுப்படுத்த முடிந்தது. கேப்டன்சியை மிகவும் ரசித்துச் செய்கிறேன், கூடுதலாக எந்த அழுத்தமும் இல்லை. ஒருமுறைகூட அழுத்தமாக இருப்பதாக நினைக்கவில்லை ஏனென்றால் என்னுடன் தோனி இருக்கிறார். பேட்டர்களுக்கு அவர்களின் பணி என்பது தெளிவாகத் தெரிந்திருப்பது வெற்றியைச் சுலபமாக்குகிறது, சேஸிங்கை எளிதாக்குகிறது,” எனத் தெரிவித்தார். சிக்ஸர் முக்கியம் டி20 போட்டிகளைப் பொறுத்தவரை ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து, ஓடி ஓடி ரன்கள் சேர்ப்பது என்பது வெற்றிக்குப் பெரிதாக உதவாது. அது ஸ்ட்ரைக்கை தக்கவைக்க உதவுமே தவிர வெற்றியின் பாதையை கடினமாக்கிவிடும். மாறாக, அவ்வப்போது அடிக்கும் சிக்ஸர்கள், பவுண்டரிகள்தான் வெற்றியின் அருகே கொண்டு செல்லும். இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி 6 சிக்ஸர்கள் அடித்த நிலையில், சிஎஸ்கே அணி ஒட்டுமொத்தமாக 9 சிக்ஸர்களை விளாசியது, 10 பவுண்டரிகள் எடுத்தது. ஆர்சிபி அணி 14 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடிக்க முடிந்தது. ஆர்சிபி-யின் ‘ஓட்டைகள்’ பட மூலாதாரம்,IPL/TWITTER பவர்ப்ளே ஓவர்களை எந்த அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்த முடியுமோ அதை சிஎஸ்கே பேட்டர்கள் சிறப்பாகப் பயன்படுத்தினர். ஆர்சிபி அணி அதிரடியான தொடக்கத்தை அளித்து 4 ஓவர்களில் 37 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி பயணித்தது. ஆனால், அடுத்த 2 ஓவர்களில் திடீரென 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது, ஆர்சிபியின் தோல்விக்கு முக்கியக் காரணம். ஆர்சிபி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ஜொலிக்கவில்லை. ஆனால், சிஎஸ்கே அணியில் அனைத்து பேட்டர்களும் பங்களிப்பு செய்ததுதான் வெற்றி, தோல்விக்கான வேறுபாடு. அதிலும் ரஹானே, டேரல் மிட்ஷெல் என அடுத்தடுத்து வந்த பேட்டர்கள் பவுண்டரி அடிப்பதைவிட, சிக்ஸர்கள் அடிப்பதிலேயே கவனம் செலுத்தியதன் நுட்பம் ஆர்சிபிக்கு புரியவில்லை. வெற்றியை எளிதாக நெருங்கும் வழியை சிஎஸ்கே கையில் எடுத்தபோது, அதைத் தடுக்கும் வகையில் பந்துவீச்சை ஆர்சிபி பலப்படுத்தவில்லை. ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசையோடு ஒப்பிடும்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை வலிமையாக இருக்கிறது. சிஎஸ்கே அணியில் தீக்சனா வரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். பட மூலாதாரம்,IPL/TWITTER ஆனால், 9 பேட்டர்களை அல்லது 10 விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவுக்கு ஆர்சிபியில் பந்துவீச்சு பலம் பொருந்தியதாக இல்லை என்பதா இருக்கின்ற பந்துவீச்சாளர்களைச் சிறப்பாகப் பயன்படுத்தவில்லை என்பதா எனத் தெரியவில்லை. ஏனென்றால், அல்சாரி ஜோஸப், கேமரூன் கிரீன் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாகச் செயல்பட்டு சிஎஸ்கே ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர். கேமரூன் கிரீன் பயன்படுத்திய “ஸ்லோவர் கட் பால்”, ஜோஸப்பின் அதிவேகம், “ஷார்ட்பால் பவுன்சர்” ஆகியவை நன்கு பலன் கொடுத்தது. “ஷார்ட் பால்” உத்தியை இன்னும் திட்டமிட்டுக் கையாண்டிருந்தால், சிஎஸ்கே ரன்ரேட்டை தொடக்கத்திலேயே மட்டுப்படுத்தி இருக்க முடியும். மேலும், சுழற்பந்துவீச்சாளர் மயங்க் டாகர் அற்புதமாகப் பந்துவீசி 2 ஓவர்களில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மேஸ்க்வெலுக்கு ஒரு ஓவர் மட்டும் வழங்கி அவரின் திறமையை டூப்ளெஸ்ஸிஸ் வீணடித்துவிட்டார். இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்பளிக்காமல் வேகப்பந்துவீச்சாளர்களையே டூப்ளெஸ்ஸிஸ் நம்பியது ரன்கள் எளிதாகக் குவியக் காரணமாக அமைந்தது. ‘சேஸிங் கிங்’ ஜடேஜா சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்திரா, ரஹானே, மிட்ஷெல் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆனால், துபே களமிறங்கியபோது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் அவரின் பேட்டிங் 13 பந்துகளுக்கு 7 ரன்கள் என மந்தமாகவே இருந்தது. பட மூலாதாரம்,IPL/TWITTER துபே ஷார்ட் பந்துகளுக்கு திணறுகிறார் எனத் தெரிந்து கேமரூனும், ஜோஸப்பும் நெருக்கடி கொடுத்தனர். ஆனால், தன்னை நிலைப்படுத்திய துபே, வழக்கமான ஆட்டத்துக்குத் திரும்பி 28 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரவீந்திர ஜடேஜா 17 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜடேஜா பேட்டிங்கில் 2 டாட் பந்துகளை மட்டுமே சந்தித்தார், பெரும்பாலான பந்துகளில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யும் விதத்தில் ரன்களை சேர்த்தது சிஎஸ்கேவின் நெருக்கடியைக் குறைத்தது. ஐபிஎல் தொடரில் சேஸிங்கில் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் இருந்து 27வது முறையாக வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இதுவரை தோனியுடன் சேர்ந்து எந்த பேட்டரும் சேஸிங்கில் இதுபோன்று வெற்றிகரமாகச் செயல்பட்டதில்லை. ஆர்சிபி அணிக்கு டூப்ளெஸ்ஸிஸ், கோலி நல்ல தொடக்கத்தை அளித்தனர். தேஷ்பாண்டே, சஹர் ஓவர்களில் பவுண்டரிகளாக டுப்ளெஸ்ஸிஸ் வெளுத்ததால், 4 ஓவர்களில் ரன்ரேட் 10க்கு உயர்ந்தது. ஆனால், முஸ்தபிசுர் 5வது ஓவரை வீச வந்தவுடன் ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. அதிரடியாக ஆடிய டூப்பளசிஸ் 21 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்த நிலையில் முஸ்தபிசுர் பந்துவீச்சில் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் சிறிது கூடுதல் பவுன்ஸரை வீசியவுடன் வந்த வேகத்தில் பட்டிதாரும் டக்-அவுட்டில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்துவந்த அதிரடி பேட்டர் மேக்ஸ்வெல் ரன் ஏதும் சேர்க்காமல் தீபக் சஹர் ஓவரில் விக்கெட்டை இழந்தார். 41 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த ஆர்சிபி அடுத்த ஒரு ரன் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பட மூலாதாரம்,IPL/TWITTER கோலியின் மந்தமான பேட்டிங் நான்காவது விக்கெட்டுக்கு கோலி, க்ரீன் ஓரளவுக்கு ரன்களை சேர்த்து அணியைக் கொண்டு சென்றனர். இதுபோன்ற நேரத்தில் “ஆங்கர்ரோல்” செய்கிறேன் எனக் கூறிக் கொண்டு ஆமைவேகத்தில் கோலி ரன்களை சேர்ப்பதுதான் அவர் மீது கிரிக்கெட் விமர்சர்கள் வைக்கும் பெரிய விமர்சனத்துக்கு காரணமாக இருக்கிறது. கோலி சேர்த்த 20 ரன்களில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடங்கும். ஆர்சிபி தடுமாறிய பின் கோலியின் மந்தமான ஆட்டத்தால், ரன்ரேட் வீதம் கடுமையாகக் குறைந்தது. கோலி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யும் விதத்தில் விளையாடியதற்குப் பதிலாக பவுண்டரி, சிக்ஸர் அடித்து சிறிய கேமியோ ஆடிச் சென்றிருக்கலாம். டிகே, ராவத் அதிரடி பன்னிரண்டாவது ஓவரை முஸ்தபிசுர் பந்துவீச வந்தபோது அந்த ஓவரில் விராட் கோலி(20) விக்கெட்டையும், கிரீன்(18)விக்கெட்டையும் வீழ்த்தி ஆர்சிபிக்கு நெருக்கடி கொடுத்தார். பட மூலாதாரம்,IPL/TWITTER ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்து தடுமாறியது. 6வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் இருவரும் ஜோடி சேர்ந்தனர். 15 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 100 ரன்களை கடந்தது. ஆனால், 15வது ஓவர்களுக்குப் பின் ராவத், டிகே இருவரும் கியரை மாற்றி ரன்வேகத்தை அதிகரித்தனர். தீக்சனா வீசிய 16வது ஓவரில் டிகே ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசினார். தேஷ்பாண்டே வீசிய 18வது ஓவரில் ராவத் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி, டிகே ஒரு சிக்ஸர் என 25 ரன்கள் சேர்த்தனர். இந்த ஓவர்தான் ஆர்சிபி அணிக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் ராவத், டிகே இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்தனர். முஸ்தபிசுர் வீசிய 19வது ஓவரில் ராவத் ஒரு சிக்ஸரும், டிகே ஒரு பவுண்டரியும் விளாசி 16 ரன்கள் சேர்த்தனர். ராவத் 48 ரன்னில் தோனியால் ரன்அவுட் ஆனார். டிகே 38 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 57 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்து ஆர்சிபி அணியைத் தூக்கி நிறுத்தினர். கடந்த ஓர் ஆண்டில் பெரிதாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த டிகே நேற்று அருமையான ஃபினிஷர் ரோலை செய்தார். அவர் கடந்த சீசனில் மோசமாக ஆடிய குறையை முதல் போட்டியிலேயே நிவர்த்தி செய்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/c515xjyjv4po

கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !

3 months 2 weeks ago
கனடாவுக்கு போன அனுரா, அனுபவமுள்ள ஒருவரை கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லையா? அல்லது அசம்பாவிதத்தை தவிர்த்துக்கொண்டாரோ? அது சரி... இலங்கையிலேயேதானே தேர்தல் வரப்போகுது, இவர் ஏன் கனடாவுக்கு பிரச்சாரம் செய்யப்போனார்? கோத்தா போல் வாக்காளர்களை இறக்குமதி செய்யபோகிறாரோ?

கோட்டாவை விரட்டியது சதியா? விதியா?

3 months 2 weeks ago
விரட்டியது, விதியோ.... சதியோ..... என்கிற விவாதத்திற்கு இடமேயில்லை, அவரை விரட்டியது சரியே! அதாவது, அவரை தெரிந்தெடுத்தவர்களாலேயே அவர் விரட்டியடிக்கப்பட்டார் கொடுத்த வாக்கை நிறைவேற்றாததால். இதில் தமிழருக்கு பங்குமில்லை பாத்திரமுமில்லை அதனால் புலி, புலம்பெயர்ஸ் புலம்பல் இங்கில்லை. வெளிநாட்டு சக்தி என்று குறிப்பிடுகிறார். தன் பிழையை ஏற்றுக்கொள்ளாமல் பிறர்மேல் பழி போடுவது இவர்களது இயல்பு, அல்லது தமிழரின் வாக்கை குறி வைத்து பழைய பல்லவியை தவிர்த்துக்கொண்டாரோ?
Checked
Mon, 07/08/2024 - 15:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed