புதிய பதிவுகள்2

இந்திய படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடற்றொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்

3 months 2 weeks ago
ஏன் கையில் போத்தல் வைத்திருக்கிரார்....தண்ணிச்சாமிகள் தான் போராடியினம் என்ற கருத்து போல நான் விளங்கி கொள்கிறேன்😘

நிலத்தடி நீரை அதிகப்படுத்தும் முறை மற்றும் நுட்பங்கள்

3 months 2 weeks ago
15 ஆவது நிமிடத்தில் பாருங்கோ ஒர் குளத்தின் ஊற்று எப்படி மூடப்பட்டுள்ளது என அறியலாம்..சரியான பாதுகாப்பு வழங்காத காரணத்தால் மக்கள் தங்களது அறிவுக்கு ஏற்ற வகையில் மூடி விட்டார்கள்

கனடாவில் கார் களவு.

3 months 2 weeks ago
ஓம் இங்கு கார் களவு மிகவும் அதிகமாக நடக்கின்றது . கடந்த சனவரி (2024) இல் மட்டும் 963 கார்கள் திருடப்பட்டன. Wheel Lock போட்டாலும், இலகுவாக அதனை வெட்டி அகற்றி விட்டு, களவு எடுக்கின்றனர். வீட்டினுள் faraday box போன்ற, திறப்புகளில் இருந்து மின் சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதை தடுக்கும் பைகளுக்குள் கார் திறப்பை போட்டு வைத்தால், காரைத் திறக்க / இயக்க முடியாவிடின் வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து, வீட்டுக்காரர்களை துப்பாக்கி முனையில் வைத்து கொண்டு, மிரட்டி கார் திறப்புகளை வாங்கி செல்கின்றனர். ஒன்ராரியோவில், வேறு நாடுகளில் இருந்து 10 நாள் விசிட்டர் வீசாவில் வந்தெல்லாம் காரைக் களவு எடுக்கின்றனர். அந்தளவுக்கு காரைத் திருடுவதற்கான ஒரு சொர்க்கபுரியாக கனடா, முக்கியமாக ஒன்ராரியோ உள்ளது. இங்கு இருக்கும் சட்டங்கள் மிக மென்மையாக (Lenient )இருப்பது இதற்கு முக்கிய காரணம். கார் திருட்டில் கைதாகின்றவர்கள் அடுத்த நாளே Bail லில் வந்து, மேலும் திருடுகின்றனர். அதிலும் அனேகமானோர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள். எனவே, சட்டப்படி அவர்களை உள்ளே வைத்து இருக்க முடியாது. கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், அவர்கள் 18 வயதை அடைந்தவுடன், அந்த குற்றம் அவர்களின் records இல் இருந்து நீக்கப்பட்டு விடும். அதன் பின் இன்னொரு குற்றம் செய்யும் வரைக்கும், அவர்கள் குற்றமே செய்யாதவர்களாக கணிக்கப்படுவர். எனவே தான் குழுக்கள் வன்முறைக் குழுக்கள் 18 வயதுக்கும் குறைந்தவர்களைக் திரட்டி இவ்வாறு திருட்டில் ஈடுபட வைக்கின்றனர். லிபரல் ஆட்சியில் இல்லாத மாகாணங்களின் முதல்வர்கள், மத்திய அரசிடம் கிரிமினல் கோட் (Criminal code) இனை மாற்றி Bail லில் வராத மாதிரி செய்யச் சொல்லி பல தடவைகள் கேட்டுவிட்டனர். ருடோ போன்ற குற்றவாளிகளுக்கு இடம் கொடுக்கும் ஒருவர் மத்தியில் ஆட்சியிலிருக்கும் வரைக்கும் இது மாறாது. ஒன்ராரியோவில் திருடப்படும் கார்கள், மொன்றியலுக்கு கொண்டு செல்லப்பட்டு, துறைமுகமூடாக மத்திய கிழக்கு நாடுகளுக்கே அதிகம் அனுப்பப்படுகின்றது. அதிலும் முக்கியமாக UAE இற்கு. இவ்வாறு வருவது அந்த நாட்டு அரசுக்கு நன்கு தெரிந்தாலும், அதை அவர்களின் பக்கம் தடுக்க எந்த முயற்சிகளையும் செய்வது இல்லை.

போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்

3 months 2 weeks ago
ம்... அதையும் வாசித்ததால் தான் சொல்கிறேன் அண்மையில் "பான் கி மூனின் றுவாண்டா" வும் படித்தேன். அகரமுதல்வன் போன்ற சிலருக்கு நல்ல சொல்வளம் இருந்தென்ன பயன் எழுத்தில் குப்பைத்தனம் இல்லாமல் இருக்க வேண்டுமே... எழுத்தாளனின் பணி குறுக்கு வழிகளில் உயரம் தொடுவதல்ல... எழுத்தின் மூலம் சிகரம் தொடுவதாக இருக்க வேண்டும்

வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.

3 months 2 weeks ago
பொலிசார்,ஆயுத படையினர் இதுகளை கண்டு கொள்வதில்லை... விளக்கெற்றல்,சிவராத்திரி கொண்டாட்ங்கள் போன்றவற்றை தடுத்து நிறுத்துவதில் முன்னுக்கு நிற்பார்கள்...

குணா கவியழகனின் ‘கடைசிக் கட்டில்’ (நூல் அறிமுகம்)

3 months 2 weeks ago
‘கடைசிக் கட்டில்’ (நூல் அறிமுகம்) — அகரன் — அவன், அவளது கண்களை தின்றுகொண்டிருந்தபோது, அவள் அவன் இதயத்தை சுவைத்துக் கொண்டிருந்தாள். அப்போது நான் அந்த உணவகத்தின் தலமைச் சமையலாளனாக இருந்தேன். அவர்களின் உணவை என் கையாலேயே பெறவேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருந்தார்கள். இருவரும் மேற்படிப்பிற்கான இடைக்காலத்தில் அந்த உணவகத்திற்கு காசு சம்பாதிக்க வந்தவர்கள். தமக்கு உணவு தருபவன் என்று என்மீது நேசம்கொண்டவர்கள். அந்த இளம் காதலர்களை பார்த்தே என் இளமையை கடத்திக்கொட்டிருந்தேன். அந்த ஆண்டு கடந்து போக இருந்தபோதுதான் அவளுக்கு மூளையில் புற்றுநோய் என்று அறிந்துகொண்டார்கள். பின்பு ஓர் ஆண்டு‌க்குள் அவள் இறந்து போனாள்‌. அவளின் இறப்பு வரை எங்கும் நகராமல் தன் கல்வியை பிற்போட்டுவிட்டு, தான்‌ நேசித்தவளுக்காக வாழ்ந்த அந்தப்பிரெஞ்சு நண்பனை எனக்கு தெரியும். அவனது அன்பும், அறனும் உலகுடன் பெறினும் கொள்ளமுடியாது. நீலக்கண்களையும் சிவந்த புன்னகையையும், மாசறு அன்பும்கொண்ட‌ அந்த இருபத்திமூன்று வயதான மார்க்கோ என்றதோழி வன்சோன் என்ற என் நண்பனின் நினைவில் மட்டுமல்ல என் நினைவில் இருந்தும் அழிக்க முடியாத உயிர். குணா கவியழகனின் ‘கடைசிக்கட்டில்’ என்ற அவரது ஆறாவது நாவலை ஐந்து ஆண்டுகளின் பின்னர் எழுதியிருக்கிறார். “எதிர்” வெளியீடாக இந்த ஆண்டு சனவரியில் வந்திருந்தது. தூக்கம் முறிந்துபோன ஓர் அதிகாலை நான்கு மணிக்கு நாவலை படிக்க ஆரம்பித்தேன். புத்தக முக அட்டையின் உருவம் என்னை யுத்தம் பற்றிய ஓர் கதையாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் முன்முடிவைத் தந்திருந்தது. என் மன ஏற்பாடும் அப்படித்தான் இருந்தது. 2009 க்கு பின்னர் யுத்தச்சிறையில் இருந்து மீண்டு வந்து தொடர்ந்து எழுத்தின் மூலம் காலத்தை பதிவு செய்பவர்கள் அரிதிலும் அரிது. அவர் எழுதிய முதல் இரண்டு நாவல்களும் போரியல் நாவல்வகைக்குள் அடக்கலாம். மீதி மூன்று நாவல்களும் போர்க்கால நாவல்கள். கடைசிக்கட்டில், முழுமையாக மின்சக்தியில் இயங்கும் “ரெஸ்லா” வண்டியைப்போல் சத்தம் இல்லாமல் ஆரம்பித்து வேகமாக நகர்ந்தது. யாழ்ப்பாண வைத்திய சாலையின் பத்தாம் இலக்க விடுதியே கதைக்களம். அவ்விடுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் விடுதி. அங்கு மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் மார்க் அன்ரனி என்பவரது காதல் கதைதான் கடைசிக்கட்டில்‌. ஐந்தாம் கட்டில் மாணிக்கவாசகம் ; அவரைப் பார்க்க வரும் மகள் வஞ்சி, அவள் அம்மா. ஆறாம் கட்டில் பரமசோதியார், கடைசிக் கட்டில் ஒற்றக்கை நாகையா, தாதி மேனகா, முதலாம் கட்டில் மூக்கன் என்ற முகிலன், வைத்தியர் வண்ணன், அதிகாரத்தை விரும்பும் கனகாம்பிகை தாதி, உடல் நோயோடு கரவுநோயும் கொண்ட இராமதாசன். இவர்களை, இந்த மனிதச்சித்திரங்களால் அரசியல்முகபாடங்களற்ற எளிய மக்களின் கதையை குணா எழுதி இருக்கிறார். வஞ்சியின் குடும்பம் யுத்தத்தில் இருந்து மீண்டு ‌வன்னியில் வாழ்கிறது. வஞ்சியின் அண்ணா யுத்தச்சிறையில் இருக்கிறார். வஞ்சியின் வருமானத்தில் நகரும் குடும்பம். மார்க் யாழ்ப்பாணதத்தில் உள்ள சிற்றூரில் இருந்து அரசாங்க வேலைக்குச் செல்லும் முதல் மகன். வஞ்சியின் தந்தை புற்றுநோயால் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவரைப் பார்க்க வரும் வஞ்சிக்காக அவள் தந்தையில் அதீத அக்கறை எடுத்துக் கொள்வது எவ்வளவு உண்மையோ அதேயளவு எல்லோருக்கும் உதவுவதுமாக, பணிபுரியும் இனிய இதயத்தை மார்க் வைத்திருக்கிறான். இங்கு வருபவர்கள் படிப்படியாக இறக்கும் விதி அவர்கள் கட்டிலில் இருக்கிறது. அங்கு இருப்பவர் ஒவ்வொருவருக்கும் தனிக்கதை இருக்கிறது. பிள்ளைகள் எல்லோரும்‌ வெளிநாடுகளில் இருந்தும் யாரும்வந்து பார்க்காத ஏக்கத்திலேயே பரமசோதி இறந்தபோது அவர் தலைமாட்டில் ஒர் கடிதம் கண்டெடுக்கப்பட்டுகிறது. அக்கடிதம் புலம்பெயர்ந்து வாழும் எல்லோரும் படிக்கவேண்டியது. மனிதர்கள் எவ்வளவு இயந்திரமாகவும் பகட்டோடும்‌ இருக்கிறார்கள்‌ என்பதை பரமசோதியின் கதைகூறும். நாகையா இறந்தபோது மூக்கனும், மார்க்கும் அழும்காட்சிகள் இந்த மனிதர்கள் எத்தனை அன்பு தோய்ந்தவர்கள் என்று ஏங்க வைக்கும். வஞ்சியின்‌ அப்பாவை வீட்டில் வைத்து பார்க்குமாறு கண்ணன் வைத்தியர் அனுப்புவதற்கும் நஞ்சு கலந்தகாரணம் உண்டு. காதலின் அத்தனை வண்ணங்களையும் காட்டிய வஞ்சி, வீடு தேடிப்போனவனை வீட்டுக்குள் இருந்தபடி அவனைப் பார்க்காது… அவள் தாயார் மொழியில் ‘தம்பி என்னதான் இருந்தாலும் ….நீங்கள் பிழையா நினைச்சிட்டீங்கபோல.. உங்களுக்கு எல்லாந் தெரியும்..’ என்ற வார்த்தைகளுக்குள் நாவலின் சொல்லப்படாத நாவல் உள்ளது. அது அத்தனை கொடியவிஷத்தை வீசக்கூடிய மரம். அதை மனங்களிடம் வீசுவதை முறையாக குணா கவியழகன் செய்துள்ளார். நாகையா மூலம் அன்பு பற்றிய தத்துவ விசாரனை, மூக்கன் என்ற முகிலன் என்ற இனிய இளைஞனின் பாத்திரங்கள் நாவலின் உயிரை கொண்டோடுகின்றன. அழகியலான சொல்லாடல்களை பல இடங்களில் எழுதியுள்ளார். • ‘ஒவ்வொரு நாளும் குளிக்கும் மனிதர்களும் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்’ • ஈவதால் மேலுலகம் இல்லை எனினும் ஈபவன் வள்ளல். • அவளின் சப்பாத்து ஒலி ஒவ்வொருவர்இதயத்துடிப்புப்போல ஆகிவிட்டிருந்தது. • வண்ணங்கள் பூத்த வாழ்வெனும் கனாக்காடு. • பணத்துக்காகவும் புகழுக்காகவும் உழைத்தவர்கள் கடைசிக் கட்டிலுக்கு வரும்போது அதை இன்னும்‌ அனுபவிக்காமல் போக விரும்பாத மனதோடு அவஸ்தையுற்றார்கள் ; உறவைச் சம்பாதித்தவர்கள் வாழ்வை அனுபவித்து முடித்த பாங்கில் பதட்டமின்றி மரணத்தை எதிர் கொண்டார்கள். • இருட்டு எங்களை பார்த்தபடி இருந்தது. தன் வாழ்நாளில் அதிகம் யுத்தகாலங்களில் வாழ்ந்தாலும் அதற்கு மாற்றாக ஒரு கதையை எழுதியதில் குணா கவியழகன் தன் எழுத்தை வலுவாக்குகிறார். தமிழில் மிகச்சிறந்த போரியல் நாவல் இன்னும் எழுதப்படவில்லை. அதற்கான காலம் கரைந்துகொண்டு‌ இருக்கிறது. அழகி மார்க்கோவிற்கு மரணம் புற்று நோய் என்ற பெயரில் இருபத்தி நான்கு வயதில் வந்தது. அவள் உருகி.. உருகி உருமாறி மறைந்ததை இரண்டு கண்களிலும் வைத்திருக்கிறேன். அப்படிப்பட்ட மனிதர்களின் கடைசிக்கட்டிலை வேகமாக உள்வாங்கிக்கொண்டேன். மதியம் உணவருந்தும் முன்னர் நாவலின் 232 பக்கங்களையும் படித்து முடித்தேன். என் மனதில் மார்க்கோ, வன்சோனின் கன்னங்களை வருடிமுத்தமிடும் காட்சி அப்படியே இருக்கிறது. அது காலத்தால் கரைக்க முடியாத காட்சி. https://arangamnews.com/?p=10559

கனடாவில் கார் களவு.

3 months 2 weeks ago
கனடாவில் கார் திருட்டு அதிகமாக இருக்கலாம், ஆனால் அமெரிக்கா தான் முதலாவதாக, இதிலும், வரும் என்று நினைக்கின்றேன்........😀 ஒரு தடவை நண்பன் ஒருவன் விடிகாலைப் பொழுது ஒன்றில் அவசரமாக கூப்பிட்டிருந்தான். ஓடிப் போய்ப் பார்த்தால், நண்பனின் கார் நான்கு சில்லுகளும் இல்லாமல் மரக்கட்டைகளில் நின்று கொண்டிருந்தது. நான்கு ஹாண்டா சில்லுகளுக்கு களவெடுத்தவர்களுக்கு ஓர்டர் வந்திருக்குது போல, நண்பனின் வீட்டை வந்து இலேசாக கழட்டிக் கொண்டு போயிருக்கினம்......😀 கோவிட் காலத்தில், எங்கும் வைரஸ் எதிலும் வைரஸ் என்ற கலக்கத்தில், பலர் காரை பூட்ட மறந்து விட்டார்கள். நானும் ஒரு நாளோ சில நாட்களோ பூட்டாமல் விட்டு விட்டேன். ஒரு நாள், என்னத்தை உடைக்கிறது, அது தானே திறந்தே இருக்குது, கார் உள்ளுக்கிருந்த சில பொருட்களை அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள். ஊரிலிருந்து 800 பாட்டுகள் அடித்துக் கொண்டு வந்த யுஎஸ்பி டிரைவ் ஒன்றும் போய் விட்டது. அது தான் பெரிய கவலை. 800 பாட்டுகளில் எத்தனை பாட்டுகளை அந்தக் 'களவாணிப் பயல்கள்' கேட்டிருப்பார்களோ... அது தான் அவர்களுக்கான தண்டனை.....😀

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!

3 months 2 weeks ago
20 MAR, 2024 | 04:40 PM அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டது. இலங்கையில் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள கடல்சார் வள மற்றும் கடலோர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுத் திறன் மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கும், அவுஸ்திரேலிய அரசின் உதவிகள் வழங்கப்படக்கூடிய இடங்களை அடையாளம் காணும் வகையிலும், கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரத்துக்கான முதல் செயலாளர் கலாநிதி போல் செக்கோலா தலைமையிலான குழுவினரே கடந்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்துள்ளனர். இதன்போது, இக்குழுவினர் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையிலான குழுவை சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பின்போது அவுஸ்திரேலிய அதிகாரிகள் குழுவில், தென்னாசிய மற்றும் இந்து சமுத்திரக் கடல் பிராந்தியப் பாதுகாப்புசார் விற்பன்னரும் அவுஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழக தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளருமான கலாநிதி டேவிற் பிரேஸ்டர், ரோயல் அவுஸ்திரேலிய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரியும், புதுதில்லியில் கடமையாற்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகருமான கப்டன் சைமன் பேட்மன், கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமெண்டா ஜோண்சன் மற்றும் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அத்தியட்சகர் வனேசா ரஃப் ஆகியோர் அடங்கினர். யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சார்பில் கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம், அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் மற்றும் பொருளியல் துறைத் தலைவர் கலாநிதி (திருமதி) கே. கருணாநிதி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகள் மற்றும் அவுஸ்திரேலிய அரசின் நலனோம்புத் திட்டங்கள் தொடர்பில் அவ்வேளை கலந்துரையாடப்பட்டது. அத்துடன், சட்ட விரோத புலம்பெயர்வு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சமூக மட்டச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது. https://www.virakesari.lk/article/179244

கனடாவில் கார் களவு.

3 months 2 weeks ago
நண்பர் ஒருவர் சொன்னார் ஒன்ராரியோ இலக்க தகட்டுடன் நைஜீரியாவில் கார் ஓடுகிறது என்று. களவேடுக்கும் கார்கள் கப்பலில் ஏற்றி ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்பபடுகிறதாம்.

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 months 2 weeks ago
தமிழிசை செளந்தரராஜன் ஆளுனர் , துணை ஆளுனர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா ஜா கா சார்பில் சென்னையில் போட்டியிடலாம் என தெரிகிறது.

நிலத்தடி நீரை அதிகப்படுத்தும் முறை மற்றும் நுட்பங்கள்

3 months 2 weeks ago
கிராமப்புறங்களில் நிலத்தடி நீர்வளத்தை உயர்த்துதல் கிராமப்புறங்களில், நீர்பிடி முகடு அமைப்பின் கீழ் மழைநீர் அறுவடை செய்யப்படுகிறது. நீர்பரவும் பரப்பு அதிகம் இருப்பதால், பெய்யும் மழையை நிலத்தின் மேற்பரப்பில் ஊடுருவச் செய்து, சேமிக்கும் வழிமுறையே கிராமங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் மூலம், சேமிக்கப்படும் நீரின் அளவும் அதிகமாகும். ஓடைகள், ஆறுகள், நிலச்சரிவுகள் போன்றவை மூலம் இழக்கப்படும் வழிந்தோடும் நீரை சேமிக்க கீழ்கண்ட நுட்பங்களை கடைப்பிடிக்கலாம். கல்லி ப்ளக் உள்ளூரில் கிடைக்கும் கற்கள், களிமண், புதர்கள் ஆகியவை கொண்டு, மலைப்பாங்கான இடங்களில் ஓடும் மழைநீரை எடுத்துச் செல்லும் சிறிய ஓடைகள், நீரோட்டம் போன்ற இடங்களில் கட்டப்படுகிறது. மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பிற்கு இந்த கல்லி ப்ளக் உதவுகிறது. நீரோட்டத்தில் ஏற்படும் இயற்கையான தடுப்பு பகுதிகளைத் தேர்வு செய்து, கல்லி ப்ளக் கட்டலாம். இதன் மூலம் தடுப்பணைகளில் அதிகளவு நீர் சேமிக்கப்படும் கற்கள், களிமண், புதர்கள் ஆகியவை கொண்டு, மலைப்பாங்கான இடங்களில் ஓடும் மழைநீரை எடுத்துச் செல்லும் சிறிய ஓடைகள், நீரோட்டம் போன்ற இடங்களில் கட்டப்படுகிறது. மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பிற்கு இந்த கல்லி ப்ளக் உதவுகிறது. நீரோட்டத்தில் ஏற்படும் இயற்கையான தடுப்பு பகுதிகளைத் தேர்வு செய்து, கல்லி ப்ளக் கட்டலாம். இதன் மூலம் தடுப்பணைகளில் அதிகளவு நீர் சேமிக்கப்படும். கான்டூர் வரப்பு நீர்பிடி முகடு பகுதிகளில், மண்ணின் ஈரப்பதத்தை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க இவை உதவுகிறது. குறைவான மழை பெய்யும் இடங்களில் இது உகந்த முறையாகும். இம்முறையில், சரிவுக்கு குறுக்கே, ஒரே உயரமுள்ள இடங்களை இணைத்து வரப்பு அமைத்து மழை நீர் சேமிக்கப்படுகிறது. சரியான இடைவெளியில் வரப்புகள் கட்டப்படுவதால், வேகமாக ஓடி மண்அரிப்பு ஏற்படுத்தும் நீரை, இந்த வரப்புகள் தடுக்கிறது. இரண்டு வரப்புகளுக்கு இடையேயான இடைவெளி, பரப்பு, சாய்வு, மண்ணின் நீர் இழுக்கும் திறன் ஆகியவற்றை பொறுத்து அமையும். மண்ணின் நீர் இழுக்கும் திறன் குறைவாக இருந்தால், இடைவெளி குறைவாக இருக்கும். சாதாரணமாக சரிவு காணப்படும் நிலங்களில் இவ்வரப்புகள் ஏற்றதாகும். கேபியன் கட்டுமானம் சிறிய நீரோடைகளில் கரைக்குள் ஓடும் நீரை பாதுகாக்க இந்தக் கட்டுமானம் உதவுகிறது. நீரோடைகளின் குறுக்கே இரு கரைகளுக்கிடையே, உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கம்பி வலைகளுக்கிடையே போட்டு, அமைப்பது தான் கேபியன் கட்டுமானம். கேபியன் கட்டுமானத்தின் உயரம் 0.5 மீட்டர் அளவாகும். நீரோடைக்கு குறுக்கே கட்டப்படும் இந்தக் கட்டுமானத்தின் அகலம் குறைந்தது 10 மீட்டருக்கு உட்பட்டது. கட்டுமானத்தினால் ஓரளவிற்கு நீர் சேமிக்கப்படும், மீதி இருக்கும் தண்ணீர் கட்டுமானத்தின் மேல் வழிந்தோடுகிறது. சேமிக்கப்படும் நீர் நீலத்தடி நீர்வளம் பெருக்க உதவும். காலப்போக்கில் நீரோட்டத்தால், கட்டுமானப் பொருட்களிடையே மண் தேங்க தொடங்கும். இந்த மண்ணின் மேல் செடிகள் வளரும்போது தடுப்பணை, கடினமான கட்டுமானமாக உருவாகிறது. இது, மேற்பரப்பில் வழிந்தோடும் நீரைத்தடுக்கிறது. பெய்யும் மழைநீரும் சேமிக்கப்படுகிறது. உறுஞ்சு குளங்கள் இது நாம் உருவாக்கும் ஒருவகை நீர்சேமிப்புக் கட்டுமானமாகும். நீர் அதிகம் இழுக்கும் நிலத்தை உள்ளடக்கி இந்த அமைப்பு கட்டப்படுகிறது. இதன் மூலம், நீர் ஊடுருவிச் சென்று, நிலத்தடி நீர்வளத்தை உயர்த்தும். நிலத்தடி ஊற்றுகளுடன் தொடர்புடைய உடையும் அல்லது உடைந்த பாறைகளாலான இரண்டாவது அல்லது மூன்றாவது வகை நீரோடையில் இந்த அமைப்பு கட்டப்படுகின்றது. இவ்வமைப்புகள் அமைந்துள்ள பகுதியின் கீழ் தட்டுகளில், கிணறுகளும், பாசனம் தேவைப்படும் நிலங்களும் இருந்தால்தான், சேமிக்கப்படும் நீரை முறையாக பயன்படுத்தலாம். உறுஞ்சு குளங்களின் அளவு, குளங்களின் அடிப்பாகத்தின் ஊடுருவும் திறன் பொறுத்தது. பொதுவாக 3 முதல் 4 மீட்டர் வரை குளத்துநீர் சேமிக்கும் அளவிற்கு தொட்டி அமைக்கப்பட வேண்டும். மண் கொண்டுதான் இக்குளங்கள் கட்டப்படுகின்றன. வழிந்தோடும் பகுதி மட்டுமே சிமெண்ட் கட்டுமானம் உடையதாக இருக்கும். இக்கட்டுமானத்தின் நோக்கமே நிலத்தடி நீர்வளத்தை உயர்த்துவதுதான். கட்டுமானத்தின் அடிப்பகுதி அதாவது தரைப்பகுதி வழியாக நீர் ஊடுருவும் வகையில் அமைக்கப்படுகிறது. 4.5 மீட்டர் உயரமுள்ள குளங்களில், வழிந்தோடும் நீருக்கான கால்வாய்கள் தேவையில்லை. நிலத்தின் தரைப் பகுதிக்கும், குளத்தின் அடிப்பகுதிக்கும் இடையே சேர்ப்பு பகுதி மட்டும் தேவை. தடுப்பணைகள் / சிமெண்ட் ப்ளக் / நளா அணை லேசான சரிவுள்ள சிறிய நீரோடையின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. தடுப்பணை கட்டப்படும் பகுதியில் சேமிக்கப்படும் நீர் இறங்கும் வண்ணம் மண்கண்டம் இருத்தல் வேண்டும். அப்போது தான், சேமித்த நீர் குறுகிய காலத்தில் நிலத்திற்குள் இறங்கும். இந்த அமைப்புகளில் சேமிக்கப்படும் நீர் நீரோடையின் நீர்மட்டத்திற்கு மட்டுமே போதுமானது. பொதுவாக, இதன் உயரம் 2 மீட்டருக்குட்பட்டது. இதற்கு மேல் வரும் நீர் வழிந்தோட அனுமதிக்கப்படும். வழிந்தோடும் நீர் நின்று செல்ல கீழ்ப்பகுதியில் வசதி செய்யவேண்டும். நீரோடையில் வேகத்தைக் கட்டுபடுத்த, வரிசையாக தடுப்பணைகள் கட்டப்பட்டு நீர் சேமிக்கப்பட்டு நீர் நிறுத்தப்படுகிறது. சிறிய நீரோடைகளை தடுத்து நிறுத்த, சிமெண்ட் பைகளில் களிமண் அடைக்கப்பட்டு, தடுப்புச்சுவர்போல் வைக்கப் படுவதும் நல்ல பயனை அளித்துள்ளது. சில இடங்களில், மேலான கால்வாய்கள் தோண்டப்பட்டு, இருபுறமும் ஆஸ்பெஸ்டாஸ் கூரைத்தகடுகள் வைக்கப்படும் போது நீர் சேமிப்பு ஏற்படுகிறது. ஆஸ்பெஸ்டாஸ் கூரைத்தகடுகளின் இடையே களிமண் நிறைக்கப்படுகிறது. இது செலவு குறைவான ஒரு தடுப்பணைகட்டும் முறை. மேற்பகுதியில் களிமண் அடைக்கப்பட்ட சிமெண்ட் பைகளை அடுக்கும்போது தடுப்பணைக்கு எவ்வித பாதிப்புமில்லாமல் பாதுகாப்பு ஏற்படுகிறது. ரீசார்ஜ் ஷாப்ட் இது ஒரு செலவு குறைந்த, ஆனால் திறன் வாய்ந்த, முறை. மண்ணின் உரிஞ்சும் தன்மை குறைவாக காணப்படும் போது, இம்முறை நீரை சேமிக்கும் ஒரு வழிமுறை. மண் உள்வாங்காத பகுதிகளில், இந்த அமைப்பினை ஆட்கள் கொண்டு வெட்டலாம். இந்த அமைப்பின் விட்டம் 2 மீட்டருக்கும் அதிகமாக இருக்கும். நிலத்தின் அடிபகுதியில், நீர் ஊடுருவா பகுதியை கடந்து நீர் உடுருவும் பகுதி வரை இந்த அமைப்பு செல்ல வேண்டும். இருந்த போதிலும் கீழுள்ள நீர்மட்டத்தை தொடாமல் காணப்படலாம். இந்த அமைப்பின் ஒரங்கள் ஜல்லி, கற்கள், மணல்கொண்டு நல்லமுறையில் அடுக்கப்பட்டு பாதிப்பில்லாதவாறு பராமரிக்கப்படுகிறது. சேமிக்கப்படும் நீர், சிறிய குழாய் மூலம் வடிகட்டும் பகுதிக்கு எடுத்து செல்லப்படுகிறது. கிராமங்களிலுள்ள சில குளங்கள் மழைகாலங்களில் நிரம்பி காணப்படும். ஆனால், குளத்தின் அடியில் வண்டல் படிந்து, நீர் பூமிக்கடியில் புகுந்து செல்லாதபடிக்கு தடை செய்யும். இதனால், குளத்தின் அருகில் காணப்படும் கிணறுகள் கூட நீரின்றி காணப்படும். குளத்தின் நீர் ஆவியாகி உபயோகமில்லாமல் போய்விடும். மேற்கூறிய சூழலில், ரீசார்ஜ் ஷாப்ட் அமைப்புகளை ஏற்படுத்தி, குளங்களில் அதிகப்படியான நீரை நிலத்தடி நீர் மேம்பாடிற்கு பயன்படுத்தலாம். ரீசார்ஜ் அமைப்புகளின் விட்டம் 0.5 லிருந்து 3 மீட்டர் வரையும், ஆழம் 10-15 மீட்டர் ஆகவும், குளத்தின் நீரளவு பொருத்து அமைக்கலாம். ஷாப்டின் மேற்பகுதி குளத்தின் தரைப்பகுதிக்குமேல் இருக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. குளத்தின் பாதி அளவு நீர்மட்டத்தின் மேல் ஷாப்டின் மேற்பகுதி இருத்தல் நலமாகும். ஷாப்ட்டின் வலுவுக்காக, அதனை சுற்றி ஜல்லி, கல், மணல் ஆகியவற்றை சுற்றி இடலாம். வலுவிற்காக, ஷாப்ட்டின் மேற்பகுதியின் 1 அல்லது 2 மீட்டர் ஆழம் வரை, செங்கல், சிமென்ட் கொண்டு சுற்றமைப்பு கட்டப்படுகிறது. இந்த நுட்பத்தின் மூலம் சேமிக்கப்படும் நீரில் 50 சதம் நிலத்தடிக்கு செல்கிறது. நிலத்தடி நீர்வளம் இதன் மூலம் அதிகரிக்கிறது. மீதி இருக்கும் நீர் குளத்திலேயே இருப்பதால் நமது அன்றாடத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம். வெட்டிய கிணறுகளில் ரீசார்ஜ் ஏற்கனவே உள்ள மற்றும் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட கிணறுகளை சுத்தம் செய்து நீரை சேமிக்கலாம். சேமிக்கப்படும் நீர் குழாய் மூலம் கிணறின் அடிப்பகுதிக்கு எடுத்து செல்லப்படுகிறது. சேமிக்கப்படும் தண்ணீர் மண் கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும். வழிந்தோடும் நீரும் வடிகட்டும் கட்டுமானம் வழியாக செல்லும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். அவ்வப்போது தொடர்ந்து க்ளோரினை தண்ணீரில் கலப்பதால், நுண்ணுயிர்களால் மாசுபடும் பிரச்சனை இருக்காது. நிலத்தடி நீர் அணைகள் நிலத்தடி நீர் அணை என்பது பூமிக்கடியில் ஓடையின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இதன் மூலம் ஓடையின் அடிமட்ட நீரோட்டம் தடுக்கப்பட்டு, நீரானது பூமிக்குள் உரிஞ்சப்பட வழி செய்யப்படுகிறது. இதனால் நிலத்தடியில் நீர் சேமிக்கப்பட்டு சரிவின் மேட்டுப்பகுதிகளில் நீர்வளம் அதிகப்படுத்தப்படுகிறது. நிலத்தடி நீர் அணை கட்டப்படும் பகுதியானது, நீர் ஊடுருவா வண்ணம் கடினமாய் காணப்படும் மண்கண்டம் குறைவாக இருத்தல் வேண்டும். சுற்றிலும் பெரிய நிலப்பரப்பு கொண்டுள்ளதாகவும், நீர் வெளிச்செல்லும் அமைப்பு சிறியதாகவும் இருக்கவேண்டும் தகுந்த இடத்தை தேர்வு செய்த பிறகு, 1-2 மீட்டர் ஓடையின் குறுக்கே நீர் ஊடுருவா மட்டம் வரை அகலமுள்ள குழியை எடுக்க வேண்டும். இக்குழியில், நிலமட்டத்திலிருந்து 0.5 மீட்டர் கீழ் வரை, களிமண், செங்கள் மற்றும் கான்கிரீட் சுவர் எடுக்க வேண்டும். நீர் முழுமையாக உட்புகுந்து செல்ல 400 - 600 காஜ் PVC சீட்டுகள் அல்லது 200 காஜ் பாலித்தீன் ஷீட்டுகளால், வெட்டிய நிலத்தடி நீர்த்தடுப்பணைகளின் முகப்பை மூடிவிடலாம். தண்ணீர் பூமியின் நீர் மட்டத்திற்குள்ளேயே சேமிக்கப்படுவதால், நிலப்பரப்பு நீரினால் மூழ்கடிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இதனால், மேற்பரப்பு நாம் எப்போதும்போல் பயன்படுத்தமுடியும். தடுப்பணையில் சேமிக்கப்படும் நீர் ஆவியாவதில்லை. மண்ணும் அதிகளவில் தடுப்பணையில் சேர்வதில்லை. பெரியளவில் இயற்கை இடர்பாடுகளினால், தடுப்பணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. நகர்புறங்களில் நிலத்தடிநீர் சேமிப்பு நகர்புறங்களில், கூரைவழியாக வரும், கட்டிடங்களில் விழும் மழை நீர் சேமிக்கப்படாமல், வீணாகிறது. இந்த நீர் பூமியின் நீர் மட்டத்தில் சேமிக்கப்படலாம். தேவை ஏற்படும்பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மழை நீர் அறுவடைக்கு அதிக பரப்பு இடம் தேவைப்படாது. நிலத்தில் முழுமையாக மழை நீர் சேமிக்க இயலும். கூரையிலிருந்து விழும் மழை நீரை சேமிக்க, ஒரு சில தொழில் நுட்பங்கள் உள்ளன. i. ரீசார்ஜ் குழி நீர் ஊடுருவும் பாறைகள் நிலமட்டத்தில் காணப்படும் பகுதிகளில், மழைநீர் சேமிப்பு இம்முறையில் செய்யப்படுகிறது. இம்முறை 100 ச.மீட்டர் கூரை பரப்புள்ள கட்டிடங்களில் விழும் மழை நீரை சேமிக்கவும் உதவுகிறது. மேலான பூமி நீர் மட்டம் உள்ள இடங்களில் நீர் சேமிப்பிற்கு ரீசார்ஜ் குழிகள் கட்டப்படுகிறது. இந்தக் குழிகளின் அளவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சாதாரணமாக, 1-2 மீட்டர் அகலம், 2-3 மீட்டர் ஆழமுள்ளதாக அமைக்கப்படும். இந்த குழிகளில் பெரிய கற்கள் (5-20 செ.மீ), ஜல்லிகள் (5-10 மி.மீ.) மற்றும் மணல் (1.5-2 மி.மீ.) போடப்படுகின்றன. கற்கள் கீழ்பகுதியிலும், அடுத்து ஜல்லிகளும், அதற்கு மேல் மணலும் போடப்படுவதால் மழை நீரோடு சேர்ந்து வரும் வண்டல்மண் மேல்பரப்பில் தங்கிவிடும். அதனை, எளிதாக அகற்றிவிடலாம். சிறிய கூறை பகுதி உள்ள கட்டிடங்களுக்கு குழியில் உடைந்த செங்கற்கள் அல்லது கூழாங்கள் போட்டால் போதுமானது. குழிக்கு கட்டிடத்தின் கூரையில் இருந்து செல்லும் மழை நீர் வடிகட்டி வழியாக சென்றால் கழிவுகள், இலைகள், தழைகள் போன்றவை குழிக்கு செல்லாமல் தடுக்கலாம். சிறிய மண்துகள்கள் குழிக்கு செல்லாவண்ணம், தடுப்பு / சேமிப்பு அமைப்பு ஒன்றும் அமைக்கலாம். குழியின் மேலுள்ள மணற்பரப்பு அவ்வப்போது சுத்தம் செய்யப்பட வேண்டும். முதல் மழை பெய்யும்போது, சேமிப்புக்குழியில் அத்தண்ணீர் விழாதவாறு மாற்று அமைப்பு இருப்பது நல்லது. ii. ரீசார்ஜ் டிரன்ச் இந்த அமைப்பு, 200-300 சதுர மீட்டர் கூரை பரப்புடைய கட்டிடங்களுக்கு ஏற்றதாகும். நீர் ஊடுருவும் மட்டம் மேல்மட்டத்தில் காணப்படும் பகுதிக்கும் இம்முறை ஏற்றதாகும். குழியின் அளவு 0.5 - 1 மீட்டர் அகலம், 1 - 1.5 மீட்டர் ஆழம், மற்றும் 10-20 மீட்டர் நீளம் உடையதாக அமைக்கலாம். சேமிப்பு நீரின் அளவைப் பொறுத்து குழியின் அளவு மாறுபடும். நீர் சேமிப்புக் குழிகளில், பெரிய கற்கள், ஜல்லிகள் மற்றும் மணல் ஆகிய மூன்றும் தட்டுகளாக போடப்பட வேண்டும். கற்கள் அடிப்பகுதியிலும், ஜல்லிகள் அதற்கு மேலும், மணல் மேல்மட்டத்திலும் போடப்படுகின்றன. மழை நீரோடு வரும் வண்டல்மண் மேற்பரப்பில் சேமிக்கப்பட்டு, அவ்வப்போது எடுத்து விடும் வகையில், இம்மூன்று அடுக்குகள் போடப்படுகின்றன. நீர் சேமிப்பு குழிக்கு கட்டிடத்தின் கூரையிலிருந்து வரும் மழைநீர், சல்லடை போன்ற அமைப்பு வழியாக சென்றால் கழிவுகள், இலைகள், தழைகள் போன்றவை சேமிப்பு குழிக்கு செல்லாமல் தடுக்கப்படும். சிறிய வண்டல்மண் குழிக்கு செல்லா வண்ணம், மேற்கூறப்பட்ட மூன்று அடுக்கு அமைப்பும் அமைத்துக் கொள்ளலாம். முதல் மழை பெய்யும் போது சேமிப்புக் குழியில் நேரடியாக நீர் விழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சேமிப்புக் குழியின் மேற்பரப்பு அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டால், நீர் சேமிப்பு முழுமையாக நடைபெறும். iii. குழாய் கிணறுகள் மேல்மட்ட நிலத்தடிநீர் விரைவில் உளர்ந்து விடுவதால், கீழ்மட்டத்தில் உள்ள நிலத்தடிநீரை உறிஞ்சும் குழாய் கிணறுகளில், மழைநீர் சேமிப்பு முறை பயன்படுத்தி, கீழ்மட்ட நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்கலாம். 10 செ.மீ விட்டமுடைய PVC குழாய்கள் மழைநீரை சேமிப்பதற்காக கூரைகளில் இணைக்கப்படவேண்டும். முதல் மழைநீர் குழாய் வழியாக வெளியேற்றப்படும். குழாயின் அடிபாகத்தை மூடிவிட்டு, 'T' வடிவ பைப் மூலம், குழாயின் வழியாக வரும் மழைநீரை PVC வடிகட்டிக்கு திருப்பிவிடவும். குழாய் கிணறுக்கு மழைநீர் சென்றடைவதற்கு முன் வடிகட்டப்படுகிறது. வடிகட்டியானது 1-1.2 மீட்டர் நீளமுடைய, PVC குழாய் கொண்டு செய்யப்படுகிறது. அதன் விட்டமானது, மேற்கூரையின் பரப்பை பொறுத்து மாறும். கூரை பரப்பு 150 சதுர மீட்டருக்கு குறைவாக இருந்தால், விட்டம் 15 செ.மீட்டர் ஆகவும், 150 சதுர மீட்டருக்கு மேல் கூரைப்பரப்பு இருந்தால் 20 செ.மீ விட்டமுடைய வடிகட்டியை பயன்படுத்த வேண்டும். வடிகட்டியின் இரண்டு பக்கங்களும் 6.25 செ.மீ அளவு சிறிய குழாய் காணப்பட வேண்டும். PVC வடிகட்டி மூன்று பாகங்களாக பிரிக்கப்படுகிறது. இதனால் கழிவுகள் எதுவும் ஒன்றோடொன்று கலக்காமல் இருக்கும். வடிகட்டியின் முதல் பகுதியில் ஜல்லிக் கற்கள் (6-10 மில்லி மீட்டர்) நடுப்பகுதியில் கூழாங்கற்கள் (12-20 மில்லி மீட்டர்) மற்றும் கடைசி பகுதியில் பெரிய கூழாங்கற்கள் (20-40 மில்லி மீட்டர்) போடப்பட்டிருக்கும் கூரை பரப்பு பெரியதாக இருக்கும் பட்சத்தில், வடிகட்டும் குழி ஒன்று போடலாம். கூரையிலிருந்து மழைநீர் நேரடியாக தரைமட்டத்தில் உள்ள சேமிப்பு குழிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. சேமிப்பு குழி குழாய் மூலம் வடிகட்டியுடன் இணைக்கப்பட்டிருக்கும். வடிகட்டும் குழியின் அளவு கூரையிலிருந்து கிடைக்கும் மழைநீரின் அளவைப் பொறுத்து மாறுபடும். வடிகட்டும் குழியானது, அடிப்பகுதியில் பெரிய கற்கள், நடுப்பகுதியில் ஜல்லிக்கற்கள் மற்றும் மேற்பகுதியில் மணற்கொண்டும் அடுக்கடுக்காக மூடப்பட்டிருக்கும். குழி இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கும். முதல் பாகத்தில் வடிகட்டும் பொருட்களும், அடுத்தபகுதி காலியாக, வடிகட்டப்பட்ட உபரி நீர் சேமிக்க பயன்படுகிறது. சேமிப்பு குழியின் கீழ்பகுதியிலிருந்து கிணறோடு இணைக்கும் குழாய் பொறுத்தப்படுகிறது. இதன் மூலம், வடிகட்டப்பட்ட மழைநீரானது குழாய் கிணற்றில் முறையாக சேர்க்கப்படுகிறது. iv. குழிகளுடன் கூடிய ரீசார்ஜ் கிணறு மேல் மண்ணிற்குள் தண்ணீர் ஊடுருவ முடியாத நிலையில், கூரையிலிருந்து வழிந்தோடும் மழைநீர் அதிகளவு காணப்படும் பகுதிகளில், குழிகளுடன் கூடிய ரீசார்ஜ் கிணறு பயன்படும். வடிகட்டிய மழைநீரை குழிகளில் சேமித்து, பின்பு, சேமிக்கப்பட்ட நீரானது நிலத்தடிக்கு செல்லும் வகையில் சிறப்பு நீர் சேமிப்பு கிணறுகள் கட்டப்படுகின்றன. இந்த அமைப்பானது, நீர் ஊடுருவிச் செல்லும் மட்டம், தரைமட்டத்திலிருந்து 3 மீட்டருக்குள்ளாக உள்ள பகுதிக்கு ஏற்றது. சேமிப்பு கிணறு, நிலத்தடி நீர்மட்டத்தின் கீழ் 3-5 மீட்டர் ஆழத்திற்கு எடுக்கப்படுகிறது. 1.5-3 மீட்டர் அகலம், 10-30 மீட்டர் நீளம் உடைய குழி, சேமிப்பு கிணற்றை நடுவாகக் கொண்டு கட்டப்படுகிறது. இது கிடைக்கும் நீரைப் பொருத்து அமைக்கப்படுகிறது. கிடைக்கும் மழை நீரின் அளவு, பகுதியின் பாறைகளின் அமைப்பு போன்றவற்றை பொறுத்து சேமிப்பு குழாய்களின் எண்ணிக்கை அமையும். குழியில், பெரியகற்கள், ஜல்லிகள், மணல் ஆகியவை அடுக்கடுக்காக, மழைநீரை வடிகட்டும் நோக்கோடு போடப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதிக ஆழத்தில், அதாவது 20 மீட்டருக்கு மேல் அமையுமானால், 2-8 மீட்டர் விட்டமுள்ள, 3-5 மீட்டர் ஆழமுள்ள அமைப்பு கட்டப்படுகிறது. வழிந்தோடும் நீரையும் இதில் கணக்கெடுத்துக் கொள்ளகிறோம். இந்த அமைப்பின் உள்ளே, 100-300 மி.மீட்டர் விட்டமுள்ள ரீசார்ஜ் கிணறு கட்டப்பட்டு, ஆழமான நிலத்தடி நீர் பகுதிகளில், தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இந்த அமைப்பின் அடிப்பகுதியில் ஒரு வடிகட்டும் அமைப்பும் உண்டு. இது சேமிப்புக் கிணற்றை கழிவுகள் மூடிவிடாமல் பாதுகாக்கிறது. https://ta.vikaspedia.in/energy/b9abc1bb1bcdbb1bc1b9abc2bb4bb2bcd/ba8bc0bb0bcd/நிலத்தடி-நீரை-அதிகப்படுத்தும்-முறை-மற்றும்-நுட்பங்கள்

கனடாவில் கார் களவு.

3 months 2 weeks ago
கனடாவில் கார் களவு.-_ அண்மையில் இரண்டு நாள் கனடா என்று புறப்பட ஆயத்தமானோம்.அயலில் உள்ள நண்பருக்கு பயணம் பற்றி சொல்லி ஏதாவது வாங்கிவரவா என்றேன். நாங்களும் அடுத்த கிழமை போக இருக்கிறோம்.ஆனபடியால் எதுவும் தேவையில்லை.காரில போறீங்கள் கவனமா போட்டு வாங்கோ. எதுக்கும் திரும்பி வரும்போது பஸ்சிலதான் வாறீங்களோ தெரியாது.கார் கொள்ளை தலைரித்தாடுது.எனது தம்பியின் றைவேயில் நின்ற புதுக்காரை சொந்த கார் எடுக்குமாப் போல கொண்டு போட்டாங்கள்.கமராவில் எல்லாம் தெளிவாக விழுகுது.முக மூடிகளை போட்டிருக்கிறார்கள்.இனி யாரைப் பிடிக்கிறது.களவு போய் 3 மாதமாச்சு எந்த தகவலும் இல்லை என்கிறார்களாம். சரி என்று கனடா(மிசிசாக்குவா) போனால் ஸ்ரேறிங் லொக் வைத்திருக்கிறீங்களோ?இஞ்சை கார் களவு சரியான மோசம். பொலிஸ்காரனே சொல்லுறான் வீட்டை உடைத்து கார் திறப்பு கேக்கிறாங்கள்.கார் திறப்புகளை முன்னுக்கே வையுங்கோ என்று. இது எப்படியான பாதுகாப்பென்றே விழங்கவில்லை. இதைவிட காருக்குள்ளேயே திறப்பை வைத்துவிட்டே வரலாமே?வீணாக உடைத்த கதவுகளை யன்னல்களையும் திருத்தத் தேவையில்லை. கனடா உறவுகளுக்கும் இதுபோல ஏதாவது நடந்ததோ? நடந்தா வெட்கப்படாம சொல்லுங்க.

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 months 2 weeks ago
கூட்டணி பேரம் பேசும் பல கட்சிகள், பாமக, தேதிமுக போன்றவை, தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டு கட்டாயமாக வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கின்றன. மக்களவைக்கு மக்கள் வாக்குகள் போட்டு இவர்களை தெரிவு செய்யா விட்டாலும், ராஜ்யசபாவிற்காவது தங்களின் குடும்ப வாரிசுகளையாவது அனுப்பலாம் என்ற எண்ணம் போலும்.

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு !

3 months 2 weeks ago
குருணாகலில் அதிக வெப்பநிலை பதிவு! இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் குருணாகல் மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதன்படி, குறித்த மாவட்டத்தில் வெப்பநிலை 36.9 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம், புத்தளம் மாவட்டத்தில் 36.7 பாகை செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் வெப்பநிலை 33.5 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/296499

பிறந்த 4 மாதங்களே ஆன குழந்தை இந்தியாவின் புதிய கோடீஸ்வரராக உருவாகியிருக்கிறார்

3 months 2 weeks ago
Costly Gity: Infosys Narayanamurthyயால் உதயமான 'குட்டி' கோடீஸ்வரர் - யார் தெரியுமா? Infosys Narayana Murthy : பிறந்த 4 மாதங்களே ஆன ஏகாக்ராஹ் ரோஹன் மூர்த்தி இந்தியாவின் புதிய கோடீஸ்வரராக உருவாகியிருக்கிறார். இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான தொழிலதிபர் நாராயணமூர்த்தியின் பேரனான ஏகாக்ராஹுக்கு, ரூ.240 கோடி மதிப்புள்ள இன்போசிஸ் நிறுவனப் பங்குகளைப் பரிசாக வழங்கியிருக்கிறார்.

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

3 months 2 weeks ago
சி.எஸ்.கே vs ஆர்.சி.பி: சென்னையை அச்சுறுத்தும் மிகப்பெரிய பலவீனம் - தோனி என்ன செய்யப் போகிறார்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் 2024ம் ஆண்டு ஐபிஎல் டி20 திருவிழா ஆர்சிபி அணிக்கும், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான முதல் ஆட்டத்துடன் கோலாகலமாகத் தொடங்க இருக்கிறது. ஒருபுறம் தோனி, மற்றொரு அணியில் விராட் கோலி என்ற இரு துருவங்கள் மோதிக்கொள்வதால் முதல் ஆட்டமே அனல் பறக்கும். அதிலும் சிஎஸ்கே அணி சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் முதல் ஆட்டம் நடப்பது அந்த அணிக்கு கூடுதலாக வலு சேர்க்கும். சிஎஸ்கே அணிக்கு இருக்கும் வரவேற்பு அளவுக்கு கோலிக்கும், ஆர்சிபிக்கும் வரவேற்பை சென்னை ரசிகர்கள் வழங்குவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. தனிச்சிறப்பு வாய்ந்த சென்னை ரசிகர்கள் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் தரமான கிரிக்கெட்டை எந்த அணி விளையாடியும் அதை ஆதரித்து, ஊக்கப்படுத்தி, ரசிக்கக் கூடியவர்கள். உலகக் கோப்பை ஆட்டம் நடந்தபோது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆட்டத்துக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்தது. ஆதலால், தோனியின் சிஎஸ்கே ஆக இருந்தாலும் சரி, கோலி இருக்கும் ஆர்சிபியாக இருந்தாலும் சரி தரமான கிரிக்கெட்டை சென்னை ரசிகர்கள் சிலாகிப்பார்கள் என்பது உறுதி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 16 சீசன்கள், 241 போட்டிகள் விளையாடியும் இதுவரை ஒரு சாம்பியன்ஷிப் கூட ஆடவர் ஆர்சிபி அணி வெற்றி பெறவில்லை. கோலியின் 16 ஆண்டு தாகம் தணியுமா? மகளிர் ஐ.பி.எல். டி20 போட்டிகள் தொடங்கப்பட்ட இரண்டாவது சீசனிலேயே ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி சாம்பியன்ஷிப் பட்டம் அசத்தியுள்ளது. ஆனால், 16 சீசன்கள் விளையாடியும் இதுவரை ஒரு சாம்பியன்ஷிப் கூட வெல்ல முடியாமல் ஆர்சிபி ஆடவர் அணி தவிக்கிறது. இந்த முறையாவது கோப்பையை வெல்லும் தீர்மானத்துடன் முதல் ஆட்டத்தை அணுகுகிறது. ஐபிஎல் ஏலத்தில் பல வீரர்களை கழற்றிவிட்டு வேகப்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்து அணியை ஆர்சிபி தேர்ந்தெடுத்துள்ளது. பேட்டிங்கில் வலுவாகத் திகழும் ஆர்சிபி பந்துவீச்சை வலுப்படுத்தி களம் காண்கிறது. ஸ்மிரிதி மந்தனா அணி இரண்டாவது சீசனிலேயே சாதித்துக் காட்டியுள்ள நிலையில், விராட் கோலிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. விராட் கோலியின் கோப்பைக் கனவு 16 ஆண்டுகளாக நனவாகாமல் கனவாகவே நீடிக்கறிது. கோலியின் அந்த 16 ஆண்டு தாகம் இம்முறை தணியுமா? வயது மூப்பு, தரமற்ற வேகப்பந்துவீச்சு அதேநேரம், சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வயது காரணமாக இந்த சீசன் அவருக்கு கடைசியாகக் கூட அமையலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த சீசனில் அவரை எதிர்பார்ப்பது கடினம் என்பதால், வெற்றியுடன் வழியனுப்ப சிஎஸ்கே அணி தீவிரமாகப் போராடும். ஐபிஎல் ஏலத்தில் பேட்டர்களையும், ஆல்ரவுண்டர்களையும் ஏலம் எடுப்பதில் கவனம் செலுத்திய சிஎஸ்கே அணி தரமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதனால், ஆர்சிபியின் வலுவான வேகப்பந்துவீச்சை எவ்வாறு சந்திக்கப் போகிறது சிஎஸ்கே என்ற கேள்வியும், எதிரணியை அச்சுறுத்தும் அளவுக்கு பெரிதாக பந்துவீச்சு இல்லாத சிஎஸ்கே என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் எழுகிறது. இதுவரை நடந்த ஐபிஎல் டி20 தொடர்களில் இரு அணிகளும் 31 முறை மோதியுள்ளன. இதில் ஆர்சிபி அணி 10 முறையும், சிஎஸ்கே அணி 20 முறையும் வெற்றி பெற்றுள்ளன. புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் சிஎஸ்கே அணியின் ஆதிக்கம்தான் இருக்கிறது. இருப்பினும், ஐபிஎல் ஏலத்துக்குப் பின் வீரர்கள் மாற்றத்தால் அணியின் பலம், பலவீனத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பட மூலாதாரம்,BCCI/IPL படக்குறிப்பு, சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் கடைசியாக மோதிய ஆட்டத்தில் 14 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வென்றது. ஒரு வெற்றிக்காக 16 ஆண்டுகள் காத்திருப்பு சிஎஸ்கே அணியும், ஆர்சிபி அணியும் கடைசியாக சேப்பாக்கம் மைதானத்தில் 2019ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் மோதியுள்ளனர். அதன்பின் 5 ஆண்டுகளுக்குப்பின் இரு அணிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் களம் காண்கிறார்கள் என்பதால் இரு அணி ரசிகர்களுக்கும் பெரிய விருந்தாக அமையும். இதுவரை 9 போட்டிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 8 ஆட்டங்களில் சிஎஸ்கே வென்றுள்ளது. அது மட்டுமல்லாமல் கடைசியாக 2008ம் ஆண்டு மே 20ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வென்றது. அதன்பின் ஏறக்குறைய 16 ஆண்டுகளாக சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி அணியால் வெல்ல முடியவில்லை. இந்த ஆட்டத்துக்குப்பின, 2010, 2011(3ஆட்டம்), 2012,2013, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்பிசி மோதினாலும் அனைத்து ஆட்டங்களிலும் தோற்றுள்ளது. ஆதலால், முதல் ஆட்டமே இரு அணிகளுக்கும் இடையிலான கவுரப்போராக அமையும். 16 ஆண்டுகளுக்குப்பின் சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றியைப் பெறுவதற்காக ஆர்சிபி அணியும் கடுமையாகப் போராடும், அதேநேரம், வெற்றியுடன் தொடங்க சிஎஸ்கே அணியும் முயலும் என்பதால் முதல் ஆட்டத்திலேயே அனல் பறக்கும். ஒரு ரன்னில் கோலி மைல்கல் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆர்பிசி நட்சத்திர வீரர் விராட் கோலி அதிகபட்சமாக 999 ரன்கள் குவித்துள்ளார். முதல் போட்டியில் ஒரு ரன் எடுத்தாலே சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமையை கோலி பெறுவார். 2வது இடத்தில் தோனி 751 ரன்களுடன் உள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிஎஸ்கே அணியின் பேட்டிங் எதிரணிக்கு சவால் விடுக்கம் வகையில் வலுவாக இருக்கிறது. சிஎஸ்கே அணியின் பலவீனம் சிஎஸ்கே அணியின் பலமே 42 வயதான கேப்டன் தோனியும், அவரின் வியூகமும்தான். கூல் கேப்டன் தோனி, எந்த நேரத்தில் எந்த பந்துவீச்சாளரைப் பயன்படுத்துகிறார், எந்த பேட்டரை களமிறக்குகிறார் என்ற வியூகமே எதிரணிக்கு பெரிய கிலியை ஏற்படுத்தும். சிஎஸ்கே அணியின் பேட்டிங் எதிரணிக்கு சவால் விடும் வகையில் வலுவாக இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணமாக முதல் பாதி விளையாடமாட்டார் என்று அறிவித்திருப்பது பலவீனம்தான். இருப்பினும் ஏலத்தில் எடுக்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் சேர்ந்து தொடக்க வீரராக களமிறங்கலாம். சிஎஸ்கே அணியின் தூண்களாக இருந்த சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு ஆகிய இருவரும் விலகிவிட்ட நிலையில் நடுவரிசைக்கு வலுவான பேட்டர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஏலத்தில் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட நியூசிலாந்து வீரர் டேரல் மிட்ஷெல் நடு வரிசையில் களமிறங்கலாம். சிஎஸ்கே அணியில் ஏற்கெனவே மிட்ஷெல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா இருக்கும் நிலையில், ரச்சின் ரவீ்ந்திராவை சிஎஸ்கே வாங்கியது வியப்பாக இருக்கலாம். ஆனால், ரச்சின் ரவீந்திரா போன்ற இளம் வீரர்களை தோனி மிகவும் சாதுர்யமாக கையாள்வார் என்பது வரும் போட்டிகளில் தெரியவரும். இது தவிர உத்தரபிரதேச இளம் வீரர் சமீர் ரிஸ்வி எனும் பேட்டரை நடுவரிசைக்காக சிஎஸ்கே அணி ரூ.8.40 கோடிக்கு வாங்கியுள்ளது. அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அம்பத்தி ராயுடு இடத்தில் ரிஸ்வி அல்லது ரஹானேவை களமிறக்கி பரிசோதிக்கலாம். இது தவிர ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா என பேட்டர்கள் தேவைக்கு ஏற்றாற்போல் உள்ளனர். பட மூலாதாரம்,SAMEER RIZVI / INSTAGRAM படக்குறிப்பு, உத்தரப்பிரதேச இளம் வீரர் சமீர் ரிஸ்வி இந்த முறை ஏலத்தில் ஷர்துல் தாக்கூரை வாங்கி, மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது சிஎஸ்கே அணி. தோனியின் செல்லப்பிள்ளைகளான ஷர்துல், தீபக் சஹர் இருவரும் தோனிக்கு துருப்புச்சீட்டாக இருக்கலாம். முக்கியமாக வங்கதேசம் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மானை சிஎஸ்கே வாங்கியுள்ளது. டெத் ஓவர்களில் பந்துவீச்சு வேகத்தை மாற்றி வீசக் கூடியதில் ரஹ்மான் வல்லவர் என்பதால் சிஎஸ்கே கேப்டன் தோனி அவரை சிறப்பாகப் பயன்படுத்துவார். தோனியைப் பொறுத்தவரை கடந்த இரு சீசன்களிலும் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. தோனியின் பெரிய ஸ்கோரைப் பார்க்க ரசிகர்கள் கடந்த இரு சீசன்களாக காத்திருந்தும் முடியவில்லை. தோனியின் பேட்டிங் ஃபார்ம் சிஎஸ்கே அணிக்கு பெரிய கவலை தரும் விஷயமாக இருக்கிறது. ஆனாலும் தோனி களமிறங்காதவரை சிஎஸ்கேவுக்கு பலமாகவும், எதிரணிக்கு பலவீனமாகவும் இருக்கும். வேகப்பந்துவீச்சில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் மட்டுமே சர்வதேச அனுபவம் அதிகம் கொண்டவர். ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர் பந்துவீச்சு எதிரணிகளுக்கு பெரிதாக தொந்தரவு கொடுக்காது என்பது கடந்த காலங்களில் தெரிந்தது. டெத்ஓவர்களில் இருவரையும் தோனி நன்றாகப் பயன்படுத்துவாரே தவிர இருவரும் தேர்ந்த, திறமையான பந்துவீச்சாளர்கள் என கூற முடியாது என்பது கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் டி20 போட்டிகளில் தீபக் சஹர் பந்துவீச்சு சராசரி 13.21 ஆகவும், ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சு சராசரி 11.24 ஆகவும் இருக்கிறது. சுழற்பந்துவீச்சில் சாண்ட்னர், ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா ஆகியோரின் பங்களிப்பு பெரிய அளவுக்கு வெற்றிக்கு கை கைடுக்கும். இந்த 3 பேரும், நடுப்பகுதி ஓவர்களில் எதிரணியின் ரன் ரேட்டைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிட்ட பங்காற்றுவர். மற்ற வகையில் பவர் ப்ளேயிலும், டெத் ஓவர்களிலும் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் சிஎஸ்கே இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்சிபி அணி இந்த முறை பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்து பெர்குஷன், கேமரூன் க்ரீன், அல்சாரி ஜோஸப் என வேகப்பந்து வீச்சாளர்களை வாங்கியுள்ளது ஆர்சிபியின் பலம் ஆர்சிபி அணி ஏறக்குறைய 16 சீசன்களாக விளையாடியும் இதுவரை ஒருமுறைகூட கோப்பையை வெல்லாதது அந்த அணிக்கு மனரீதியாக சோர்வை அளிக்கும். ஆனாலும், அந்த அணி ஒவ்வொரு முறையும் வீரர்களை மாற்றிப் பயணித்தாலும் கோப்பையை வெல்லமுடியாமல் தவிக்கிறது. இந்த முறை ஐபிஎல் தொடரில் பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்து பெர்குஷன், கேமரூன் க்ரீன், அல்சாரி ஜோஸப் என வேகப்பந்து வீச்சாளர்களை வாங்கியுள்ளது. ஏற்கெனவே பேட்டிங்கில் டூபிளெசிஸ், விராட் கோலி, பட்டிதார், மகிபால் லாம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் என வலுவாக இருக்கிறது. வேகப்பந்துவீச்சில் ரீஸ் டாப்ளி, சிராஜ், அல்சாரி ஜோஸப், பெர்குஷன், யாஷ் தயால், வைஷாக், ரஞ்சன் குமார் என 7 பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இதில் 4 மட்டுமே நல்ல அனுபவம் கொண்டவர்கள். ஆர்சிபி அணி வலுவான வேகப் பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து களமிறக்கினால், நிச்சயமாக சிஎஸ்கே அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். குறிப்பாக டெத் ஓவர்கள் ஸ்பெஷலிஸ்ட் அல்ஜாரி ஜோஸப், சிராஜ், பெர்குஷன், விஜயகுமார் என சரியான கலவையை உருவாக்க வேண்டும். நடுப்பகுதி ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீச மேக்ஸ்வெல், கரண் ஷர்மா தவிர்த்து, 3வது பந்துவீச்சாளரை தேர்ந்தெடுப்பது அவசியமாகும். சுழற்பந்துவீச்சில் ஹசரங்கா இல்லாதது பெரிய பலவீனம்தான். இருப்பினும் கரன் ஷர்மா, மேக்ஸ்வெல், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மயங்க் தாக்கர், ஸ்வப்னில் சிங் உள்ளனர். சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரை பெரிய அளவுக்கு பலமுள்ளதாக இருக்கிறது எனக் கூற இயலாது. ஏனென்றால், கரண் ஷர்மா, மேக்ஸ்வெல் தவிர்த்து மற்றவர்கள் சர்வதேச அனுபவம் இல்லாதவர்கள், ஐபிஎல் அனுபவமும் பெரிதாக இல்லாதவர்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பேட்டிங்கில் டூபிளசிஸ், விராட் கோலி, பட்டிதார், மகிபால் லாம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் என வலுவாக இருக்கிறது. ஆல்ரவுண்டர்கள் வரிசையில் உள்நாட்டைச் சேர்ந்த லாம்ரோர், ஆகாஷ் தீப், பிரபுதேசாய் ஆகியோரைத் தவிர்த்து மற்றவர்கள் மேக்ஸ்வெல், டாம் கரண், கேமரூன் கிரீன், வில் ஜேக்ஸ், என அனைவருமே வெளிநாட்டு வீரர்கள். ஒரு போட்டிக்கு 4 வெளிநாட்டு வீரர்கள்தான் சேர்க்க முடியும். இதில் டூப்ளசிஸ், மேக்ஸ்வெல், கிரீன் 3 பேர் இடம் உறுதியாகும் நிலையில் ஒருவர் மட்டுமே சேர்க்க முடியும் என்பதால், யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது பெரிய குழப்பமாக இருக்கும். நடுப்பகுதி ஓவர்களில் பந்துவீச மேக்ஸ்வெல், கரண் ஷர்மா தவிர்த்து கூடுதல் பந்துவீச்சாளர் தேவை என்பதால் கேமரூன் கிரீன் தேவை கண்டிப்பாக வேண்டும். இது தவிர்த்து வேகப்பந்துவீச்சில் ஒரு போட்டியில் அல்ஜாரி ஜோஸப் அல்லது பெர்குஷன் இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்க முடியும். அதேபோல 3வது வேகப்பந்துவீச்சாளருக்கு யாஷ் தயால், அல்லது விஜயகுமாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் அல்ஜாரி ஜோஸப், பெர்குஷன் இருவரையும் ப்ளேயிங் லெவனில் எடுத்தால் கேமரூன் கிரீனை கைவிட வேண்டும். கிரீன் அணிக்குள் வந்தால் அல்ஜாரி அல்லது பெர்குஷன் அமர வேண்டும் என்பதால் ஆடுகளத்தின் சூழலுக்கு ஏற்ப கேப்டனுக்கு முடிவெடுக்க வேண்டும். ஆர்சிபி அணியில் திறமையான வெளிநாட்டு வீரர்கள் இருப்பது அதன் பெரிய பலமாகும். ஆடுகளத்துக்கு ஏற்ப தகுதியான வெளிநாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் எளிதாக வெற்றி பெறலாம். டெத்ஓவர்களுக்கு அல்ஜாரி ஜோஸப், பெர்குஷன், விஜயகுமார், சிராஜ் என 4 பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இது தவிர டாம் கரண், டாப்ளி, வில் ஜேக்ஸ், கேமரூன் கிரீன் என ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் சரியான வெற்றிக் கூட்டணியை அமைத்தால் ஆர்சிபியின் பயணம் சிறப்பாக அமையும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த இரு சீசன்களிலும் டி.கே. பெரிய ஸ்கோரை அணிக்காக அடிக்கவில்லை என்பது நிதர்சனம். ஃபார்முக்கு வருவாரா டி.கே.? ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரோடு ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஓர் ஆண்டாக விளையாடுவதில் கவனம் செலுத்தாமல் வர்ணனைப் பணியில் தினேஷ் கார்த்திக் ஈடுபட்டதால் அவரின் பேட்டிங் ஃபார்ம் கவலைக்குரியதாக இருக்கிறது. கடந்த இரு சீசன்களிலும் டி.கே. பெரிய ஸ்கோரை அணிக்காக அடிக்கவில்லை என்பது நிதர்சனம். அதேபோல கேப்டன் டூபிளசிஸும் பெரிதாக ஃபார்மில் இல்லை. அதேபோல விராட் கோலியும் ஜனவரியிலிருந்து கிரிக்கெட் விளையாடவில்லை. இதுபோன்ற நட்சத்திர பேட்டர்களின் ஃபார்மின்றி இருந்து வருவது ஆர்சிபியின் கோப்பைக் கனவை தகர்த்துவிடும். இவர்கள் ஃபார்முக்கு வராவிட்டால், ஆர்சிபியின் கோப்பை கனவு இந்த முறையும் கனவாகவே இருந்துவிடும். https://www.bbc.com/tamil/articles/c88x77d5n23o

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 months 2 weeks ago
திமுகவில் 11 எம்.பி.க்களுக்கு சீட் மறுப்பு, 9 புதுமுகங்களுக்கு வாய்ப்பு - பின்னணி என்ன? பட மூலாதாரம்,MK STALIN / FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 20 மார்ச் 2024, 14:41 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புதன்கிழமையன்று வெளியிடப்பட்டிருக்கும் தி.மு.கவின் வேட்பாளர்களில் பல புதுமுகங்களும் இருக்கிறார்கள். அவர்களின் பின்னணி என்ன? 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.கவின் தேர்தல் அறிக்கையும் வேட்பாளர் பட்டியலும் புதன்கிழமையன்று வெளியிடப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அக்கட்சி 21 இடங்களில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 17 இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.எம்., சி.பி.ஐ. ஆகியவை தலா இரண்டு இடங்களிலும் ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய முஸ்லிம் லீக், ஆகியவை தலா ஒரு இடத்திலும் காங்கிரஸ் கட்சி ஒன்பது இடத்திலும் போட்டியிடுகிறது. புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 21 இடங்களில் 10 இடங்களில் ஏற்கனவே வெற்றிபெற்ற வேட்பாளர்களே நிறுத்தப்பட்டுள்ளனர். 11 இடங்களுக்கு புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வட சென்னையில் கலாநிதி வீராசாமி, தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னையில் தயாநிதி மாறன், அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன், வேலூரில் கதிர் ஆனந்த், திருவண்ணாமலையில் சி.என். அண்ணாதுரை, நீலகிரி தனித் தொகுதியில் ஆ. ராசா, தூத்துக்குடியில் கனிமொழி, ஸ்ரீ பெரும்புதூரில் டி.ஆர். பாலு, காஞ்சிபுரம் தனித் தொகுதியில் க. செல்வம் ஆகிய ஏற்கனவே இருந்த மக்களவை உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. தருமபுரி தொகுதியில் டாக்டர் செந்தில்குமாருக்குப் பதிலாக மணி என்பவருக்கும் சேலத்தில் எஸ்.ஆர். பார்த்திபனுக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கும் கள்ளக்குறிச்சி தொகுதியில் கௌதம சிகாமணிக்குப் பதிலாக மலையரசனுக்கும் பொள்ளாச்சியில் கு. சண்முகசுந்தரத்திற்குப் பதிலாக ஈஸ்வரசாமிக்கும் தஞ்சாவூர் தொகுதியில் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்குப் பதிலாக முரசொலி என்பவருக்கும் தென்காசி தனித் தொகுதியில் தனுஷ் எம். குமாருக்குப் பதிலாக ராணி ஸ்ரீ குமாருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளிக்கப்பட்டிருந்த கோவை தொகுதியில் இந்த முறை தி.மு.கவின் சார்பில் கணபதி ராஜ்குமார் நிறுத்தப்பட்டிருக்கிறார். கடந்த முறை பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சி இந்த முறை பா.ஜ.க. கூட்டணியில் இணைந்திருக்கிறது. ஆகவே அந்தத் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் அருண் நேரு நிறுத்தப்பட்டிருக்கிறார். கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட்ட தேனி தொகுதியில் இந்த முறை தி.மு.கவின் சார்பில் முன்னாள் அமைச்சர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். கடந்த முறை ம.தி.மு.கவின் கணேசமூர்த்தி போட்டியிட்ட ஈரோடு தொகுதியில் இந்த முறை தி.மு.கவின் சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். கடந்த முறை காங்கிரசின் விஷ்ணு பிரசாத் போட்டியிட்ட ஆரணி தொகுதியில் இந்த முறை தி.மு.கவின் தரணிவேந்தன் போட்டியிடுகிறார். தி.மு.கவின் புதிய முகங்கள் யார், அவர்கள் பின்னணி என்ன? ஆ. மணி, தருமபுரி தொகுதி: தருமபுரி தொகுதியில் கடந்த முறை பா.ம.கவின் டாக்டர் அன்புமணி ராமதாஸை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றவர் டாக்டர் செந்தில்குமார். ட்விட்டரில் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடியவராக இருந்தாலும், இளைஞரணி நியமனம் குறித்து ட்விட்டரில் வெளிப்படையாகவே முரண்பட்டதை கட்சித் தலைமை பெரிதாக ரசிக்கவில்லை. அதனால், அவருக்கு இந்த முறை வாய்ப்புக் கிடைப்பது கடினம் என்ற நிலைதான் இருந்தது. எதிர்பார்த்தபடியே ஆ. மணி என்பவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஆ. மணி பாரம்பரியமான தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை கே. ஆரிமுத்து அண்ணாவின் காலத்தில் இருந்து தி.மு.கவில் இருந்தவர். மணி 1987ஆம் ஆண்டு முதல் தி.மு.க உறுப்பினராக இருந்துவருகிறார். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து சட்டமன்ற இடைத் தேர்தலும் நடைபெற்றபோது இவருக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.கவின் ஆ. கோவிந்தசாமியிடம் சுமார் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இப்போது அவருக்கு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. தி.மு.கவின் மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார் மணி. ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி: 9 முறை அ.தி.மு.க. வென்ற தொகுதி இது. நீண்ட காலமாக அ.தி.மு.க. வசமே இருந்த அந்தத் தொகுதியை கடந்த 2019ஆம் ஆண்டுதான் தி.மு.க. கைப்பற்றியது. தி.மு.கவின் சார்பில் போட்டியிட்ட கு. சண்முகசுந்தரம் வெற்றிபெற்றார். ஆனால், இந்த முறை வேட்பாளரை மாற்ற தி.மு.க. தலைமை முடிவுசெய்ததால், அமைச்சர் சக்ரபாணிக்கு நெருக்கமானவராக அறியப்படும் ஈஸ்வரசாமிக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஈஸ்வரசாமி திருப்பூர் மாவட்டம் மைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். 2006ல் தி.மு.கவைச் சேர்ந்த இவர் மடத்துக்குளம் மேற்கு ஒன்றியச் செயலாளராக இருந்தவர். முரசொலி, தஞ்சாவூர்: தி.மு.கவில் தஞ்சாவூர் தொகுதி என்றாலே எஸ்.எஸ். பழனிமாணிக்கம்தான். 1996ஆம் ஆண்டிலிருந்து ஆறு தேர்தல்களாக தொடர்ந்து வெற்றிபெற்று வருபவர் பழனி மாணிக்கம். 2004ல் இருந்து 2012வரை மத்திய நிதித் துறை இணை அமைச்சராகவும் இருந்தார் பழனி மாணிக்கம். இந்த முறையும் அவருக்கே வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதுமுகமான முரசொலியைக் களமிறக்கியிருக்கிறது தி.மு.க. தலைமை. 46 வயதாகும் முரசொலி தஞ்சாவூர் மாவட்டம் தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். நீண்ட கால தி.மு.க. உறுப்பினர். 2014 முதல் 20வரை தி.மு.கவின் பொதுக் குழு உறுப்பினராக இருந்தவர். 2022ல் இருந்து தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலாளராக பதவிவகித்து வருகிறார். ராணி ஸ்ரீ குமார், தென்காசி - தனி: தென்காசி தனித் தொகுதியில் கடந்த முறை வெற்றிபெற்ற தனுஷ் எம். குமாருக்குப் பதிலாக இந்த முறை ராணி ஸ்ரீ குமாருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை தோற்கடித்து, தொகுதியைக் கைப்பற்றினார் தனுஷ் குமார். இருந்தபோதும் இந்த முறை வேட்பாளரை மாற்றியிருக்கிறது தி.மு.க. தலைமை. ராணி ஸ்ரீ குமார் ஒரு மருத்துவர். மயக்க மருந்து நிபுணர். சங்கரன் கோவிலில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். 2002ஆம் ஆண்டில் இருந்து தி.மு.கவில் இருந்து வருகிறார். கணபதி பி. ராஜ்குமார், கோயம்புத்தூர்: கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.ஆர். நடராஜன் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், இந்த முறை இந்தத் தொகுதியை குறிவைத்து பா.ஜ.க. கடுமையாக வேலைபார்த்து வருவதால், தி.மு.கவே போட்டியிட முடிவுசெய்தது. கணபதி பி. ராஜ்குமார் ஆரம்பத்தில் அ.தி.மு.கவில்தான் இருந்தார். கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேயராக இருந்த செ.ம. வேலுசாமி, ஒரு சர்ச்சையில் சிக்கி பதவி விலகினார். இதையடுத்து 2014ல் கோயம்புத்தூரின் மேயராக கணபதி பி. ராஜ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு மிக நெருக்கமாக இருந்தவர். ஆனால், கணபதி பி. ராஜ்குமார் மேயராக இருந்த காலகட்டத்தில் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. 2016ல் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் அ.தி.மு.கவுக்குள் ஓரம்கட்டப்பட்டார் கணபதி பி. ராஜ்குமார். இதனால், 2020ஆம் ஆண்டு டிசம்பரில் தி.மு.கவில் இணைந்தார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்பதால், கோயம்புத்தூரின் மாநகர் மாவட்ட அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்போது கோவை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அருண் நேரு, பெரம்பலூர்: 2019ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அந்த கட்சி இந்த முறை பா.ஜ.கவுக்கு சென்றுவிட்ட நிலையில், இந்தத் தொகுதியில் தற்போது தி.மு.கவே போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியின் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார். தி.மு.கவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் மகன் இவர். அருண் நேரு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். கே.என். நேருவின் தொழில்களைக் கவனித்துவந்த இவர், நேரடி அரசியலில் ஈடுபடவில்லை. இருந்தாலும், அவ்வப்போது இவருக்கு வாழ்த்துத் தெரிவித்து திருச்சியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவந்தன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொகுதி ஐ.ஜே.கேவிற்கு அளிக்கப்பட்டதால், அருண் போட்டியிடவில்லை. தந்தை அமைச்சரான பிறகு பின்னணியில் அவருடைய வேலைகளைக் கவனித்துவந்தவருக்கு இப்போது வாய்ப்பளித்திருக்கிறது கட்சித் தலைமை. கே.இ. பிரகாஷ், ஈரோடு: ஈரோடு தொகுதி கடந்த முறை ம.தி.மு.கவுக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது ம.தி.மு.கவிற்கு திருச்சி தொகுதி அளிக்கப்பட்டிருப்பதால், தி.மு.க. இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் களமிறக்கப்பட்டிருக்கும் பிரகாஷ், தி.மு.க. இளைஞரணியைச் சேர்ந்தவர். மாநில இளைஞரணியின் துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகிப்பவர். இந்தத் தேர்தலில் தி.மு.க. இளைஞரணியிலிருந்து போட்டியிடும் ஒரே வேட்பாளரும் இவர்தான். பிரகாஷ் 2012லிருந்தே ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக செயல்பட்டுவந்தவர். கடந்த ஆண்டு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொறுப்பு பிரகாசுக்கு வழங்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி தவிர, அன்பில் மகேஷ், எ.வ. வேலு ஆகியோருக்கும் நெருக்கம் என்பதால் இந்தத் தொகுதி பிரகாஷிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. எம்.எஸ். தரணிவேந்தன், ஆரணி: ஆரணி தொகுதியில் கடந்த முறை காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் விஷ்ணுபிரசாத். இந்த முறை இந்தத் தொகுதியை தி.மு.கவே எடுத்துக்கொண்டது. அந்தத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு தரணிவேந்தனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இவர் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். மலையரசன், கள்ளக்குறிச்சி: முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி போட்டியிட்டு வென்ற தொகுதி இது. இந்த முறை தி.மு.கவின் தியாகதுருகம் பேரூர் கழகச் செயலாளர் மலையரசனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மாவட்டச் செயலாளர் வசந்தம் கார்த்திகேயனின் தீவிர விசுவாசி என்பதால் இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் மலையரசன். அ.தி.மு.கவும் தே.மு.திகவும் கூட்டணி அமைத்தால், கள்ளக்குறிச்சி தொகுதி தே.மு.தி.கவுக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கள்ளக்குறிச்சி தொகுதி தே.மு.தி.கவுக்கு அளிக்கப்படவில்லை. ஆகவே, இந்தத் தொகுதியில் அ.தி.மு.கவே போட்டியிடலாம். நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், ரிஷிவந்தியம், சங்கராபுரம் மட்டுமே தி.மு.க. வசம் உள்ளது அதனால் இந்தத் தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிந்த முகங்கள், புதிய வாய்ப்பு புதிய முகங்கள் போக, ஏற்கனவே அரசியல் களத்தில் நன்கு அறிமுகமான இருவருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் புதிதாக போட்டியிடும் வாய்ப்பை அளித்திருக்கிறது அக்கட்சி. அந்த வாய்ப்பைப் பெற்ற தங்க தமிழ்ச்செல்வன், செல்வகணபதி ஆகிய இருவருமே அ.தி.மு.கவிலிருந்து தி.மு.கவிற்கு வந்தவர்கள். தங்க தமிழ்ச் செல்வன், தேனி: 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்த ஒரே இடம் தேனி தொகுதிதான். இந்த முறை இந்தத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், இந்த முறை தி.மு.கவே போட்டியிடுகிறது. தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாய்ப்பளித்திருக்கிறது தி.மு.க. தலைமை. தங்கதமிழ்ச் செல்வன், 2001, 2011, 2016 என மூன்று முறை தமிழக சட்டமன்றத்திற்கு அ.தி.மு.க. சார்பில் தேர்வுசெய்யப்பட்டனர். 2001ல் கட்சித் தலைவர் ஜெயலலிதா போட்டியிட ஏதுவாக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர். இதையடுத்து அவர், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, டிடிவி தினகரனின் அ.ம.மு.கவில் இணைந்து செயல்பட்டுவந்தார். இதனால், சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2019ஆம் ஆண்டு தேர்தலில் அ.ம.மு.கவின் சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதற்குப் பிறகு, டிடிவி தினகரனுடனான கருத்து வேறுபாடுகள் முற்றிய நிலையில், 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தி.மு.கவில் இணைந்தார். 2021ல் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு எதிராக தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்ச் செல்வன், தோல்வியடைந்தார். இப்போது மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. செல்வகணபதி, சேலம் தொகுதி: செல்வகணபதி அ.தி.மு.கவிலிருந்து தி.மு.கவுக்கு வந்தவர். 1995-96ஆம் ஆண்டுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர். 2008ஆம் ஆண்டில் தி.மு.கவுக்கு வந்த இவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டது. ஆனால், சுடுகாட்டுக் கூரை அமைப்பதில் ஊழல் செய்ததாக இவர் மீது இருந்த வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவியிழந்தார். பிறகு அந்த வழக்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பரில் இவர் விடுவிக்கப்பட்டார். இப்போது சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக 1999ல் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார் செல்வகணபதி. தற்போது தி.மு.கவின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். https://www.bbc.com/tamil/articles/c6p4e0g48q3o
Checked
Fri, 07/05/2024 - 14:33
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed