புதிய பதிவுகள்2

"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"

3 months 2 weeks ago
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"PART / பகுதி: 17 "பண்டைய சிந்து சம வெளி உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Indus valley people or Harappans continuing" [ஆங்கிலத்திலும் தமிழிலும் / In English and Tamil] சிந்து சமவெளி நாகரிகத்தின் மக்கள் அனைவரும் சைவ உணவு உண்பவர்கள் அல்ல என்பதும், சைவ உணவுப் பொருட்களுடன் சிந்து சமவெளி நாகரிக மக்களும் இறைச்சியை உட்கொண்டனர் என்பதும் இறந்தவர்களுக்காக வழங்கப்படும் பிரசாதங்களில் இறைச்சி சேர்க்கப்பட்டுள்ளது என்பதன் மூலம் தெளிவாகவும் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும் அங்கு மாட்டிறைச்சி, குறைந்தது சிலராவது சாப்பிட்டதற்கு சான்றுகள் உண்டு. அங்கு தோண்டி எடுக்கப் பட்ட தொல்பொருள்களில், ஒரு வேட்டையாடும் கருவியான, சுண்டுவில்லில் [கவண்வில் அல்லது கவட்டை / slingshot] பாவிக்கும் களிமண் பந்துக்கள், மற்றும் செம்பு மீன் கொக்கிகள், அம்புவின் நுனி, எறியும் கத்தி போன்றவை எடுக்கப் பட்டுள்ளது. அவை விலங்குகளை கொல்ல பாவிக்கப்பட்டு இருக்கலாம் என்பதை எடுத்துக் காட்டுவதுடன், அவை மேலும் சிந்து வெளி மக்கள் விவசாயிகளாக மட்டும் இன்றி, அவர்கள் ஆற்றல் வாய்ந்த, மற்றும் திறமையான வேட்டைக் காரர்களாகவும் மீனவர்களாகவும் இருந்தனர் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இதுபோலவே தானியங்களை அரைக்கும் கல்திருகைகள் மொகஞ்சதாரோவில் கண்டறியப் பட்டுள்ளன. லோத்தலில் தந்தூரி அடுப்பு போன்ற சுடு அடுப்புகள் காணப் படுகின்றன. இறைச்சி பொதுவாக கால்நடையில் இருந்து வந்தன. அவை ஆடு, மாடு, பன்றி, போன்ற கால் நடைகளுடன் மற்றும் கோழி, ஆமை, பறவையும் ஆகும். மேலும் எருமைகள், செம்மறியாடு, ஆடுகள், மாடுகள் போன்றவை பால் எடுப் பதற்க்காக வளர்க்கப் பட்டன. அத்துடன் காட்டுக் கோழி, காட்டு விலங்குகளான, மான், மறிமான் (Antelope), காட்டுப்பன்றி போன்றவை அங்கு வேட்டையாடப் பட்டன. ஆறு, குளம், கடலில் இருந்து பெறப்படும் உடன் மீன் [fresh fish], மட்டி போன்ற வற்றையும் அவர்கள் உண்டார்கள். அத்துடன் பல மீன்கள் காயவிடப்பட்டன அல்லது உப்பு இடப்பட்டன. மீனுடன் அவர்கள் பழங்கள், காய்கறிகள் முதலிய வற்றையும் காயவைத்து அங்கு நிலவிய கடுமையான குளிர்காலத்தில் பாவித்தார்கள். பாறை மீன், கெழுத்தி மீன் போன்ற கடல் மீன்களின் எலும்புகள் மற்றும் ஓடுகள், சிந்து சம வெளி நாகரிகத்தை சேர்ந்த ஹரப்பா வீடுகளைச் சுற்றி கண்டு எடுக்கப்பட்டன. இவை எல்லாம் அங்கு மக்கள், கடல் உணவு உட் கொண்டதை எடுத்து காட்டுகிறது. மொகஞ்சதாரோவில் கிடைத்துள்ள எலும்புக்கூடுகளின் பற்களைப் பரிசோதனை செய்த போது, அங்கு ஆண்களை விடப் பெண்கள் மிகக் குறைவாகவே உணவு உட்கொண்டிருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் உணவுப் பண்பாடு என்ற கட்டுரையில் தமிழ் அறிஞர் அ.கா.பெருமாள் ஹரப்பா நாகரிக காலகட்ட உணவு வகைகள் பற்றித் தெளிவாக விளக்கிக் கூறியிருக்கிறார். ஹரப்பன் வீடுகளில் முற்றத்தின் வெளியில் சமையலறை செங்கல்லால் கட்டப்பட்ட அடுப்பைக் கொண்டு இருந்தன. அங்கு சமையலுக்கு பல்வேறு அளவுகளில் மட்பாண்ட பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன; அதே நேரம் பணக்கார வீடுகளில் உலோக பாத்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. சில குறிப்பிட்ட விவசாய கருவிகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, அங்கு கண்டு பிடிக்கப்பட்ட தீக்கல் (Flint) அல்லது சிக்கிமுக்கிக் கல் கத்திகள் அறுவடைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என இன்று ஊகிக்கப் படுகிறது. அது மட்டும் அல்ல, பண்டைய காலத்தில் ஹரப்பன் காளிபங்கானில் [தற்கால தார் பாலைவனத்தில் பாயும் காகர் நதியின் தென்கரையில் அமைந்த சிந்துவெளி பண்பாட்டுக் கள நகரம் ஆகும்] உழவு செய்யப்பட்ட வயல் கிமு 3 ஆம் மில்லினியத்தின் தொடக்கத்தில் கலப்பை அங்கு பயன்பாட்டில் இருந்ததைக் எடுத்துக்காட்டுகிறது; மேலும் ஒன்றையொன்று கடக்கும் கோடுகளின் வடிவத்தில் [criss-cross] அமைந்த , ஒரு கலப்பை மூலம் தரையில் செய்யப்பட்ட நீண்ட, குறுகிய அகழிகள் [furrows], ஒரே வயலில் இரண்டு பயிர்களை வளர்க்கப் பயன்பட்டது என்பதைக் காட்டுகிறது. ஆச்சரியம் என்னவென்றால் இந்த நடைமுறை இன்றைய நவீன காலத்திலும் தொடர்வதே! இன்று நமது முக்கிய உணவுகளான - உருளைக்கிழங்கு, தக்காளி, மிளகாய், புளித்த ரொட்டி [ வேகவைத்த பொருட்களை பஞ்சுபோன்றதாகவும் மென்மையாகவும் மாற்றும் நுரைமம் அல்லது நொதி கொண்ட பாண் / leavened bread], சீஸ், ஆப்பிள்கள் - உலகின் பிற பகுதிகளிலிருந்து இந்தியாவிற்கு வந்தவை ஆகும். உதாரணமாக, சிந்து சமவெளி மக்களும் மற்றும் பண்டைய இடைக்கால இந்தியாவின் மக்களும் உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை அறிந்திருக்க மாட்டார்கள். அதே நேரத்தில், நம் முன்னோர்கள் ஒரு காலத்தில் சாப்பிட்டவற்றில் பெரும்பாலானவை காலப்போக்கில் நம் தட்டுகளில் இருந்து மறைந்து விட்டன. இந்த மறைந்த உணவுகளில் துணைக்கண்டத்தில் ஒரு காலத்தில் வேட்டையாடப்பட்ட அல்லது வளர்க்கப்பட்ட பல விலங்குகள் இருந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இதுவரை நாம் எடுத்துக்காட்டிய உணவுகளை நன்றாக உற்றுப் பார்த்தால், சிந்து சமவெளி நாகரிகத்தை சேர்ந்த நம் முன்னோர்கள் இன்று நாம் உட்க்கொள்ளுவதையே அதிகமாக சாப்பிட்டுள்ளனர் என்பது தெளிவாகும். மாறாக, உண்மையில், அவர்கள் சாப்பிட்டதையே நாம் அதிகமாக இன்று இன்னும் சாப்பிடுகிறோம்! "விவசாய உபரிகளை உற்பத்தி செய்து கட்டுப்படுத்தும் திறன் ஆரம்பகால சிக்கலான சமூகங்கள் மற்றும் நகரங்களின் எழுச்சிக்கு ஒரு அடிப்படை காரணியாக இருந்தது." என்பதற்கு, இந்த உண்மைக்கு, சிந்து சமவெளி நாகரிகம் [கிமு 3300-1300 க்கு இடைப்பட்ட காலத்தில்,] சந்தேகமில்லாமல் ஆதாரம் காட்டுகிறது. நன்றி. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 18 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 17 "Food Habits of Ancient Indus valley people or Harappans continuing" The fact that the people of the Indus Valley civilization were not all vegetarians and Along with the vegetarian food items the people of Indus valley civilization also consumed meat that was evident or confirmed from the fact that meat was included in the offerings made for the dead and there is also evidence that at least some people in Harappan sites ate beef. Also With the excavation of number of artefacts like sling balls of clay, copper fish hooks, the arrow heads, the flying knives etc strongly prove that these were required to kill and this also prove that, the Indus valley people were not only farmers, they were competent and efficient hunters and fishermen. Meat came mainly from cattle, but Included in this list are chicken, mutton, beef, pork. Buffaloes, sheep, goats and cows were reared for milk too. Along with that, they also hunted a wide range of wildfowl and wild animals such as deer, antelopes and wild boar. They also ate fish and shellfish from the rivers, lakes and the sea; as well as being eaten fresh, many fish were dried or salted. Along with fish, fruits & vegetables also dried for use in the harsh winters.– many bones and shells in hard form from marine fish such as jack and catfish etc has been found in and around the houses of the Indus valley civilization, at Harappa, far inland. Harappan houses had a kitchen opening from the courtyard, with a hearth or brick-built fireplace. Pottery vessels in a range of sizes were used for cooking; in wealthy households metal vessels were also used. Few certain agricultural tools have been found. Flint blades were probably used for harvesting. A ploughed field at Early Harappan Kalibangan shows that the plough was in use by the early 3rd millennium BC; its criss-cross furrows allowed two crops to be raised in the same field, a practice that has continued into modern times. Many of our staples today — potatoes, tomatoes, chillies, leavened bread, cheese, apples — came to India from other parts of the world. The people of the Indus Valley, as well as those of ancient and most of medieval India, for example, would not have known what to with a potato or a tomato. At the same time, much of what was once eaten by our ancestors has been taken off our plates over time, thanks to cultural and economic forces. Among these foods are a number of animals that were once hunted or reared in the subcontinent. If you have a good look at the food and it becomes clear that our ancestors of the Indus-Valley civilization ate a lot of what we do today. Rather, we eat a lot of what they ate! So powerful that people still continue to follow that !! An examination of the teeth of the skeletons found at mohenjo-daro revealed that women consumed much less food than men. Also, Tamil scholar A.K. Perumal has clearly explained the food types of the Harappa civilization period in his article 'Food Culture'. “The ability to produce and control agricultural surpluses was a fundamental factor in the rise of the earliest complex societies and cities.” For this fact, the Indus Valley Civilization [of the period between 3300-1300 BC,] bears unequivocal evidence. Thanks. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 18 WILL FOLLOW

மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு

3 months 2 weeks ago
வெளித்தெரியாமல் இருக்கும் இதயக் கோளாறுகள் சிலரில் உடற்பயிற்சி, உடல் உழைப்பின் போது வெளிப்படுவதுண்டு. இந்தக் காரணத்தினால் தான், முதல் எப்பொழுதும் கடின உடற்பயிற்சி செய்யாதோர், ஒரு மருத்துவ பரிசோதனை , இதய பரிசோதனை செய்த பின்னர் கடின உடற்பயிற்சியை ஆரம்பிக்க வேண்டுமென்று மருத்துவ ஆலோசனை இருக்கிறது. சாதாரணமாக இதயத்தின் இரத்தக் கலன்களில் இருக்கும் அடைப்புக் (atheroma) கூட, உடற்பயிற்சி கடினமாகும் வரை வெளித்தெரியாமல் இருக்கலாம். இதற்கு ஒரு வழி, stress test செய்து இதய இயக்கம் சரியாக இருக்கிறதா என்று கண்டறிவது. மேல் செய்தியில் இருப்பது, atrial flutter எனப்படும் பிறப்பிலேயே இருக்கக் கூடிய ஒரு நிலை. இதயப் பரிசோதனையில் கண்டறியலாம். சிகிச்சைகள் இருக்கின்றன.

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 months 2 weeks ago
நேற்று எடப்பாடியார் தாங்கள் தேதிமுகவுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும், பாமகவுடன் பேசவே இல்லை என்றும் சொன்னார். பாமக தான் எந்தப் பக்கம் போவது என்று இன்னும் முடிவு எடுக்கவில்லை போல. மேலும் எடப்பாடியார் தங்களின் கூட்டணியே மிகப் பலமான கூட்டணி என்றும் சொன்னார், ஏனென்றால் தங்களின் அதிமுக கட்சி கூட்டணி வைத்திருப்பது மக்களுடனேயே என்று ஒரு காரணமும் சொன்னார்!!

மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு

3 months 2 weeks ago
P.E. Teacher, 23, 'Felt Something Was Wrong' After First Marathon, Learns He Has Heart Disease a Week Later. நேற்று இந்த செய்தியை யாஹூவில் பார்த்தேன். மரதன் ஓட்டம் பற்றி இணையத்தில் தேடியிருப்பேன் போல, ஒரேயடியாக மரதன் ஓட்டம் பற்றிய செய்திகளே வந்து கொண்டிருக்கின்றன....😀 வைத்திய உதவி உடனே கிடைத்தால், ஓரளவிற்கு எவரும் தப்பிவிடலாம். சில மாதங்களின் முன், இங்கு கூடைப்பந்தாட்ட வீரர் LeBron James இன் மகன் Bronny James க்கு கல்லூரி (University of Southern California) கூடைப்பந்தாட்ட பயிற்சியின் போது Cardiac Arrest ஏற்பட்டது. ஆனால், உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டதால், அனர்த்தம் தவிர்க்கப்பட்டு, அவர் இப்பொழுது மீண்டும் கல்லூரிக்காக விளையாட ஆரம்பித்துள்ளார். https://www.yahoo.com/entertainment/p-e-teacher-23-felt-201013198.html

ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்

3 months 2 weeks ago
பெருமாள் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது அந்தக் கேள்வி புரியாமல் இருந்தால் கேள்வியை மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும். தப்பு தபகாக பதிலளிக்க கூடாது. எனது கேள்வி International criminal court ஶ்ரீலங்கா இல் நடந்த யுத்தக்குற்றங்களை விசாரிக்க இணங்கியதா? இணங்கி இருந்தால் ICC இன் இணையத்தளத்தில் அதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளதா? வழக்கைத் தொடுக்க இணங்கிய அதை முன்னெடுத்த நாடு எது? அந்த நாட்டின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் அது பற்றிக் அறிக்கையிடப்பட்ட அறிக்கை இணைப்பை தர முடியுமா? தமிழ் மக்களின் பிரதி நிதி என்ற ரீதியில் சுமந்திரன் வழக்கை தொடுக்க முன்வந்த நாட்டுக்கோ அல்லது அனைத்துலக நீதி மன்றுக்கோ யுத்தக் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டாம் என்றோ அல்லது தவணை வாங்கியதாகவோ வலியுறுத்தியதாக வழக்கை தொடுக்க வந்த நாட்டினாலோ அல்லது ICC யாலோ அறிக்கையிடப்பட்ட அறிக்கையை இங்கு இணைக்க முடியுமா? குமாரசாமி குறிப்பிட்டபடி அவ்வாறு சுமந்திரன் தவணை வாங்கியிருந்தால் மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்த திகதி என்ன? இவற்றை இணைப்பதன் மூலம் சுமந்திரனை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த முடியுமல்லவா? சுமந்திரன் மக்கள் பிரதிநிதி தான். அதனை சேர்தது நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முயலலாமே! நான் ICC இணையத்தளங்களில் தேடிப்பார்தேன். அவ்வாறு எதுவும் இல்லை. அதனால் தான் உங்களை கேட்டேன்.

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 months 2 weeks ago
தந்தை VS மகன் | அதிமுகவை விரும்பும் ராமதாஸ், பாஜகவுடன் செல்ல துடிக்கும் அன்புமணி 14 MAR, 2024 | 02:39 PM அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விரும்பும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை அன்புமணி நடத்தி வருவதால் பாமக யாருடன் கூட்டணி என்ற இழுபறி நீடித்து வருகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமாக வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன. அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸை 2 முறை நேரில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகும் நிலையில் இருந்தது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விருப்பம் தெரிவித்த நிலையில், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி, பாஜகவுடன் கூட்டணி வைக்கவே விரும்புவதாக கூறப்படுகிறது. அன்புமணியிடம் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய பாஜக குழுவினர் மத்திய அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அதிமுக கொடுப்பதைவிட கூடுதல் தொகுதிகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது. 2004 - 2009 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணிக்கு, மீண்டும் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்காததால், பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட இருந்த நிலையில், அன்புமணியின் இந்த முடிவு ராமதாஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோரை நேற்று காலை அன்புமணி தனியாக சந்தித்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாகவும், பாஜக - பாமக கூட்டணி உறுதியாகும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸும், பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணியும் விரும்பும் நிலையில், இறுதியில் வெற்றி பெறப்போவது தந்தையா? மகனா? என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும். https://www.virakesari.lk/article/178716

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

3 months 2 weeks ago
யாழ்க‌ள‌ம் முன்பு போல் வேக‌மாக‌ வேலை செய்யுது இல்லை அண்ணா...........நீண்ட‌ நேர‌ம் எடுக்குது க‌ருத்துக்க‌ள‌த்துக்குள் வ‌ர‌...............

ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்

3 months 2 weeks ago
ஆக, சுமந்திரனுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுடைய விக்கி ஐயாவின் சுமந்திரன் மீதான குற்றச் சாட்டுகள் தான் "உங்கள் உரித்த வாழைப்பழம்"😂? (இந்த உரித்த வாழைப் பழத்தைக் கூட இன்னொருவர் உங்களுக்கு தேடித் தர வேண்டியிருக்கு, அதைப் பிறகு பார்க்கலாம்!) இந்த அரசியல் "வாழப் பழக்" கட்டுரையில் பல வசனங்கள் ஏன் "..லாம்" என்று முடிகின்றன? இன்னும் சில இடங்களில் "..தமிழ் மக்கள் கூறியுள்ளார்கள்" என்றும் ஏன் இருக்கிறது? சுமந்திரன் இருக்கும் கட்சிக்கு கடந்த தேர்தலில் கிடைத்த ஆசனங்கள் எத்தனை, தமிழ் மக்களைக் கோடி (quote) காட்டும் விக்கி ஐயாவின் கட்சிக்கு கிடைத்த ஆசனங்கள் எத்தனை😂? எனவே, உங்களிடம் இனப்படுகொலை விசாரணை பற்றியோ, போர்க்குற்ற விசாரணை பற்றியோ சுமந்திரனின் பங்களிப்பைச் சுட்டிக் காட்ட ஒரு தகவலும் இல்லையென மறைமுகமாக ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். தமிழ் வின் போன்ற ரொய்லெற் ஊடகங்கள் தாண்டி வாசிக்கவும், யோசிக்கவும் பழகினால் நீங்கள் இன்னும் வளரலாம் என நினைக்கிறேன்! சரி, அப்படியே வைத்துக் கொள்வோம். "மக்கள் பிரதிநிதியான" சுமந்திரன் எப்படி விசாரணையைத் தள்ளிப் போட்டார் என்று ஏதாவது தகவல் இருக்கிறதா? விக்கி ஐயாவின் அரசியல் அபிப்பிராயத்தை மேற்கோள் காட்டாமல் வேறேதாவது இருந்தால் காட்டுங்கள்!

ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்

3 months 2 weeks ago
வாழைபழம் உரித்து தட்டில் வைத்து இருக்கு அவரவர் தேவைக்கு ஏற்றபடி நன்றி மீரா . சர்வதேச விசாரணை நடந்து முடிந்து விட்டதாக கூறி தமிழ் மக்களை திசைதிருப்ப முயல்கிறார்-சுமந்திரன் மீது விக்கி குற்றச்சாட்டு போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றிற்கான ஒரு சர்வதேச, சுயாதீன தீர்மானம் வெளிவந்தால் அது சர்வதேச சமூகத்தின் மீது தமிழ் மக்கள் இடையே ஒரு குடிமக்களிடையிலான வாக்கெடுப்பை நடத்த வேண்டிய ஒரு கடப்பாட்டை உருவாக்கிவிடும் என்றே சுமந்திரன் பயப்பிடுகிறார். இதற்காகவே, நடக்காத சர்வதேச விசாரணையை, நடந்து முடிந்து விட்டதாக கூறி, தமிழ் மக்களை திசைதிருப்ப முயல்கிறார் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தெரிவித்துள்ளது . போர்க்குற்ற விசாரணை முடிந்து விட்டதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்து வரும் கருத்து தவறானது என்பதை சுட்டிக்காட்டி, தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. சுமந்திரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களைத் தடம் மாற்றவும் ஏமாற்றவும் கருத்துக்கள் வெளியிடுகின்றார்கள் என்ற தலைப்பில் வெளியான அந்த அறிக்கையில், இலங்கை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட சில அறிக்கைகளையே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட குற்றங்கள் சம்பந்தமாக நடாத்தப்பட்ட சர்வதேச சுயாதீன விசாரணைகளின் அறிக்கைகள் என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார் திரு. சுமந்திரன் அவர்கள். இலங்கை சம்பந்தமான விசேட சர்வதேச குற்றவியல் மன்றமொன்றைக் கோராமலும் அல்லது இலங்கையைசர்வதேச குற்றவியல் மன்றத்திற்குப் பாரப்படுத்துமாறு கோராமலும், ஐக்கிய நாடுகளாலும் மற்றையோராலும் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கைகளை வைத்து ஊடக அறிக்கைகளின் படி திரு.சுமந்திரன் அவர்கள் சர்வதேச விசாரணையானது முடிவடைந்துவிட்டது என்று தமிழர்களை நம்பவைக்கப் பார்க்கின்றார். இது தவறானது. இலங்கை அரசினாலும் இலங்கையின் படையணியினராலும் தமிழ் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட பாரிய கொடூரச் செயல்கள் சம்பந்தமான நீதி நியாயத்தை மேற்படி அறிக்கைகள் பெற்றுக் கொடுக்கவில்லை. இவ்வறிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட பாரிய கொடூரச் செயல்களை ஆவணப்படுத்தி உள்ளன. ஆனால் இவ்வறிக்கைகளில் குறிப்பிடப்பட்டவர்கள் சம்பந்தமாக எந்தவித நடவடிக்கைகளும் இது காறும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை. குறித்த ஐக்கிய நாடுகள் அறிக்கைகளை சர்வதேச விசாரணையின் முடிவுகளே என்று திரு.சுமந்திரன் அவர்கள் சித்திரிக்கப்பார்க்கின்றார். இவ்வாறான செயலால் திரு.சுமந்திரன் அவர்கள் தமிழ் மக்களைத் தடம் மாற்ற முயன்றிருக்கின்றார். தமிழ் மக்கள நீதியைப் பெற வேண்டுமானால் மேற்படி அறிக்கையில் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையிலோ இலங்கைக்கான ஒரு விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பு மன்றம் முன்னிலையிலோ பாரப்படுத்தப்பட்டு நீதிபாற்பட்ட விசாரணைக்குள்ளாக்கி தண்டிக்கப்பட வேண்டும்.<br /> தமிழ் மக்கள் கூடிய மதிப்புடனும் தொழில்சார் மாண்புடனும் கையாளப்பட வேண்டும். திரு.சுமந்திரன் அவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடும் போது அவற்றின் ஒரே குறிக்கோள் தமிழ் மக்களைத் தடம்புரளச் செய்வதும் ஏமாற்றுவதுமேயாகும் என்றே கொள்ள வேண்டியுள்ளது. உண்மை இதோ! – நடந்தவற்றைக் கூறி தரவுகளைச் சேகரித்திருந்தன ஐக்கிய நாடுகளின் இரு அறிக்கைகளும். எனினும் அம் முயற்சி முடிவடையவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதியப்படவில்லை. தாம் குறிப்பிடும் குற்றங்களைப் புரிந்தமைக்கு யார் பொறுப்பு என்று கூறி தமது பரிந்துரைகளைப் பதியவில்லை. இறுதியாக, நீதியைப் பெறத் தாம் எடுக்கும் முயற்சிகள் ஒரு செயல்பாட்டின் முதல்ப்படியே என்று குறித்த அறிக்கைகளே ஏற்றுக் கொண்டுள்ளன. குறித்த ஐக்கிய நாடுகளின் அறிக்கைகள் உண்மையில் கூறும் சில விடயங்கள் பின்வருமாறு – 1. டாருஸ்மான் அறிக்கை எனப்படும் “இலங்கையில் பொறுப்புக்கூறல் சம்பந்தமான செயலாளர் நாயகத்தின் நிபுணத்துவக்குழாமின்” 2011ம் ஆண்டிற்கான அறிக்கையின் 1ஆ பரிந்துரையின் ஒரு பகுதி பின்வருமாறு – “செயலாளர் நாயகமானவர் உடனே ஒரு சுயாதீனமான சர்வதேச பொறிமுறையைச் செயற்படுத்த வேண்டும். அதன் ஆணைக்குட்பட்டு பின்வரும் ஒருங்கியல்பான நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். i. குற்றம்சாட்டப்பெற்ற உரித்துமீறல்களை எந்தளவுக்கு இலங்கை அரசாங்கமானது உண்மையாக விசாரிக்கின்றது என்பது உள்ளடங்கலாக உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை இலங்கை அரசு எப்படி வழிநடத்துகின்றது என்பது பற்றி கண்காணித்து மதிப்பிட்டு காலத்துக்குக் காலம் செயலாளர் நாயகத்திற்கு தமது கண்டுபிடிப்புக்களைத் தெரியப்படுத்த வேண்டும். ii. குற்றஞ்சாட்டப்பட்ட உரித்துமீறல்கள் சம்பந்தமாக சுயாதீனமாக விசாரித்தறிவது. அதன் போது நம்பத்தகுந்த மற்றும் நற்பலன் அளிக்கின்ற உள்ளக விசாரணைகளும் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும்.” 2. பெட்ரீ அறிக்கை எனப்படும் 2012ம் ஆண்டின் “இலங்கையில் நடந்த ஐக்கிய நாடுகள் செயற்பாடுகளின் செயலாளர் நாயகத்தின் உள்ளக மதிப்பீட்டுக் குழாமின்” அறிக்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பல பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அதன் செயல் நோக்கம் ஐக்கிய நாடுகள் தான் செய்த தவறுகளை உணர்ந்து தம்மைத் திருத்திக் கொள்ளுவதேயாகும். பெட்ரீ அறிக்கையின் 82ஆவது பந்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது – “நடைபெற்ற நிகழ்வுகளைக் கணிப்பதும் அவை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் இலங்கையில் எடுத்த நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதும் குழாமின் ஆணைக்கு அப்பாற்பட்டன. எனினும் ஒன்று தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது. அதாவது நடைபெற்ற கொடூரமான உரிமை மீறல்கள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்காமல் அத்துடன் இலங்கையின் பல்வேறு இனங்களின் அபிலாஷைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வினைப் பெறாமல் நிரந்தர சமாதானமும் ஸ்தீரத்தன்மையும் உதயமாகா. போருக்குப் பின்னரான மற்றும் முன்னேற்றம் சம்பந்தமான பொறுப்பினை ஐக்கிய நாடுகள் இலங்கையில் முடிவுறுத்த இவ்வாறான அடிப்படை எதிர்பார்ப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே பொறுப்புக்கூறலுக்கான நிபுணர்கள் குழாமால் வெளியிடப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஐக்கியநாடுகள் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வர வேண்டும்.” தமிழ் மக்கள் போலிச் செய்திகளை அடையாளம் காணக்கூடியவர்கள். திரு.சுமந்திரன் அவர்கள் குறிப்பிடும் ஐக்கிய நாடுகள் அறிக்கைகளில் கூட ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் தலைமைத்துவத்தின் கீழான முழுமையான விசாரணை நடைபெற்ற பின்னரே சர்வதேச நீதித்துறை செயற்பாடுகளை ஆயத்தப்படுத்த முடியும் என்றும் தமிழ் மக்களின் அபிலாஷைளை பூர்த்தி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. உள்ளக பொறிமுறைகள் நீதியை நிலைநாட்டா என்றும் இலங்கையின் இராணுவப் பணியாளர்களின் குற்றங்களை மதிப்பீடு செய்ய சர்வதேச நீதித்துறைச் செயற்பாடுகளே பொருத்தம் என்றும் தமிழ் மக்கள் கூறியுள்ளார்கள். ஒருவேளை எந்தவொரு ஐக்கியநாடுகளின் அலகும் சவேந்திர சில்வாவை எந்தவொரு குற்றத்துடனும் தொடர்புபடுத்தவில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் அங்கலாய்ப்புக்கு பதில் கூறும் வகையில் மர்சூகி டாருஸ்மானுடன் திரு.சுமந்திரன் அவர்கள் நடத்திக் கொண்ட கலந்துரையாடல்கள் அமைந்ததாகக் கருதலாம். சவேந்திர சில்வாவின் பயணத்தடையானது அவருக்குகெதிராக முதல்தோற்ற வழக்கொன்று இருப்பதை ஏற்றே விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முதற்தோற்ற வழங்கானது சர்வதேச உண்மை மற்றும் நீதி சார் செயற்றிட்ட அறிக்கை மற்றும் உண்மையைக் கண்டறியும் தூதுக்குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட வாக்குமூலங்கள் உள்ளடங்கலான பல விசாரணைகள் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதொன்று. (சில்வா சம்பந்தமான நியமனம் பற்றி மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் செயலகத்தில் இருந்து வெளிவந்த செய்தியில் “ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் சில்வாவும் அவரின் படையணியினரும் சாட்டப்பட்ட போர்க் குற்றங்களிலும் மனித இனத்திற்கெதிரான குற்றங்களிலும் ரூடவ்டுபட்டிருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளன). இன்று அவ்வாறான முதற்தோற்ற வழக்குகள் விசாரணைக்காக முன்னிறுத்தப்பட வேண்டும். ஆகவே திரு.சுமந்திரன் அவர்களின் செவ்விகள் நீதி ரீதியான செயற்பாடுகளில் சான்றாக அமையக்கூடும். ஆனால் அவரின் செவ்வி அறிக்கைகள் சட்ட வலுக்கொண்ட விசாரணையாகா. அவரின் செவ்விகள் பொறுப்புக்கூறலையோ நீதியையோ நிலைநாட்டவில்லை. இதை இன்னமும் விளக்குவதாக இருந்தால் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு சாட்சிகளின் வாக்கு மூலங்கள் முக்கியமாகத் தேவையெனினும் ருவண்டா, கம்போடியா மற்றும் முன்னைய யூகோஸ்லாவியா போன்றவற்றிற்கான சர்வதேச தீர்ப்பு மன்றம் போன்ற ஒன்றின் முன்னிலையிலேயே மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை சம்பந்தமாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க உரித்துண்டு. இலங்கையின் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் சம்பந்தமாக அதிகம் எதுவும் செய்ய முடியாது என்று தமிழ் மக்களுக்குக் கூறவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எத்தனிக்கின்றது. அவர்களின் இந்த மனப்பாங்கு அக்கட்சியினரின் கையாலாகாத தனத்தையே எடுத்துக்காட்டுகின்றது. சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து ஒரு சர்வதேச, சுயாதீன பொறுப்புக் கூறல் பொறிமுறையை அமைக்க முன்வருவதற்கான அக்கட்சியின் தயக்கத்தையும் அதற்கான தலைமைத்துவத்தை ஏற்பதற்கிருக்கும் தடுமாற்றத்தையுமே இது எடுத்துக்காட்டுகின்றது. திரு.சுமந்திரன் உண்மையில் பயப்பிடுவது எதற்காக என்று பார்த்தால் போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றிற்கான ஒரு சர்வதேச, சுயாதீன தீர்மானம் வெளிவந்தால் அது சர்வதேச சமூகத்தின் மீது தமிழ் மக்கள் இடையே ஒரு குடிமக்களிடையிலான வாக்கெடுப்பை நடத்த வேண்டிய ஒரு கடப்பாட்டை உருவாக்கிவிடும் என்பதே. வடக்கு கிழக்கில் மனித இனப்படுகொலை நடைபெற்றமை பற்றி 2009ன் பின்னர் வடக்கு மாகாணசபையில் ஒரு பிரேரணையை ஏற்றுக்கொள்ள வைத்த துணிச்சல் மிக்க முதலாவது அரசியல் தலைவர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள், அவர் தமிழ் மக்களிடையே அவர்களின் அரசியல் ரீதியான முடிவைப்பெற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். நீதியரசர் விக்னேஸ்வரனும் அவருடன் சேர்ந்தவர்களும் குற்றம் புரிந்தோர் யாவரும் விசாரணையின் பின் குற்றவாளிகளாகக் காணப்பட்டால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற கருத்தையே கொண்டுள்ளார்கள். ஆகவே முதற்கண் சர்வதேச சமூகமானது ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ அலகுகள் ஊடாக சாட்சிகளின் வாக்கு மூலங்களையும் குற்றச் செயல்கள் இழைக்கப்பட்டமை சம்பந்தமான சாட்சியத்தையும் பெற வேண்டும். இவ்வாறான நடவடிக்கை பொறுப்புக்கூறலுக்குத் தமிழ் மக்கள் ஏங்கித் தவிக்கும் அவர்களின் மனோநிலைக்கு மருந்தாகவும் தமிழ் மக்களின் வருங்காலத்திற்குரிய அபிலாஷைகளிற்கு அடிப்படையாகவும் அமைவன என குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/36210

உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!

3 months 2 weeks ago
திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலைகள் 14 MAR, 2024 | 07:29 PM தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (14) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்பட்டன. இதன்படி , ஒரு கிலோ கரட் 400 ரூபாவாகவும் , ஒரு கிலோ பயற்றங்காய் 180 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீட்ரூட் 220 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீர்க்கங்காய் 120 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. மேலும் , ஒரு கிலோ கத்தரிக்காய் 180 ரூபாவாகவும் , ஒரு கிலோ தக்காளி 300 ரூபாவாகவும் , ஒரு கிலோ பச்சை மிளகாய் 300 ரூபாவாகவும் ,ஒரு கிலோ புடலங்காய் 160 ரூபாவாகவும் , ஒரு கிலோ பூசணிக்காய் 160 ரூபாவாகவும் , ஒரு கிலோ வாழைக்காய் 200 ரூபாவாகவும் , ஒரு கிலோ தேசிக்காய் 180 ரூபாவாகவும் ,ஒரு கிலோ இஞ்சி 1,800 ரூபாவாகவும் , ஒரு கிலோ உருளைக்கிழங்கு 180 ரூபாவாகவும் , ஒரு கிலோ பாவக்காய் 180 ரூபாவாகவும் காணப்பட்டன. https://www.virakesari.lk/article/178746

மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு

3 months 2 weeks ago
ஏராளன், இன்புழுவன்சா வைரசுக்கெதிராக தடுப்பூசி (flu shot) இருக்கிறது, மேற்கு நாடுகளில் ஒவ்வொரு வருடமும் குளிர்காலம் ஆரம்பிக்க முதல் இலவசமாக எடுத்துக் கொள்ள விரும்புவோருக்கு வழங்குவர். தொற்றிலிருந்து 50% பாதுகாப்புக் கிடைக்கும் இந்த தடுப்பூசியால். மிச்ச 50% பேருக்கு தீவிரம் குறைந்த தொற்று ஏற்படும், எனவே உயிர்காக்கும், நோய்த்தீவிரம் குறைக்கும் தடுப்பூசியாக இன்புழுவன்சா தடுப்பூசி விளங்குகிறது. இலங்கையில் இது பயன்படுத்தப் படுகிறதா எனத் தெரியவில்லை. உங்கள் மருத்துவர் சொன்ன தடுப்பூசி Streptococcus pneumoniae என்ற பக்ரீரியாவின் தொற்றினால் ஏற்படும் நிமோனியாவுக்கு எதிரான தடுப்பூசியாக இருக்கலாம் என ஊகிக்கிறேன். இதுவா எனக் கேட்டுப் பாருங்கள். https://www.cdc.gov/pneumococcal/index.html

ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்

3 months 2 weeks ago
முதலில் இந்த தமிழ் இணைய செய்தியே உண்மையா என்பதை சர்வதேச ஊடகம் மூலம் உறுதிப்படுத்தமுடியுமா? இலங்கை ஜனாதிபதியின் இருபுறமும் இருப்பவர்களின் மேல் சட்டை ஓரளவிற்கு ஒத்து போவது போல உள்ளது, இலங்கை ஜனாதிபதியின் பிரத்தியேக பாதுகாப்பு ஊழியர்களின் படத்தினை மாற்றி அமைத்திருக்கிறார்களா என சந்தேகம் வருகிறது.😁

ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்

3 months 2 weeks ago
அவர் நேராகக் கேட்டார், நீங்கள் தான் அவர் "சுமந்திரன் தனி ஆளாக தடுப்பது சாத்தியமா?" என்ற அர்த்தத்தில் கேட்ட கேள்வியை "சுமந்திரன் தனி ஆளா?" என்று திசை மாற்றியிருக்கிறீர்கள். இதைத் தவிர்த்து, பதில்களை வைத்தால் உண்மையில் சுமந்திரனை தாயக வாக்காளர்கள் தூக்கியெறிய வேண்டுமா என்ற கேள்விக்கு அவசியமான தரவுகளை இங்கே பகிர வாய்ப்புகள் வருமே? அதைச் செய்யாமல் ஏன், மடைமாற்றல், சொற்சிலம்பம், யூ ரியூப் மீம் என்றி அலைய வேண்டியிருக்கிறது சுமந்திரன் எதிர்ப்பாளர்களுக்கு?

ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்

3 months 2 weeks ago
🤣😂 அனைத்துலக நீதிமன்றிற்கு இலங்கையின் போர்க்குற்ற விவகாரம் போய், தவணையும் கொடுக்கப் பட்டு, எல்லாம் யாழில் பதியப் பட்டிருக்கிறது என்கிறீர்களா? இது எனக்கு மட்டுமல்ல, பல வாசகர்களுக்கு நியூஸ்😎! எப்ப இதெல்லாம் நடந்தது பெருமாள்? எந்த நாடு கொண்டு போனது மனுவை?
Checked
Wed, 07/03/2024 - 04:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed