1 month ago
அமெரிக்க வரிவிதிப்பு: ஜனாதிபதி அவசர கலந்துரையாடல் Editorial / 2025 ஜூலை 10 , மு.ப. 11:01 அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள முக்கிய அதிகாரிகளுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் ஒரு கலந்துரையாடலில், வியாழக்கிழமை (10) ஈடுபட்டார். முன்மொழியப்பட்ட அமெரிக்க இறக்குமதி வரிகள் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது, இது ஆரம்பத்தில் இலங்கை ஏற்றுமதிகளில் 44 சதவீதத்தை பரிந்துரைத்தது, பின்னர் அது 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. https://www.tamilmirror.lk/செய்திகள்/அமெரிக்க-வரிவிதிப்பு-ஜனாதிபதி-அவசர-கலந்துரையாடல்/175-360822
1 month ago
1 month ago
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை 30 ஆண்டு நினைவேந்தல்! adminJuly 10, 2025 யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைறைய தினம் புதன்கிழமை (09.07.25) மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல் ,விமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் (Leap forward ) எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர். அன்றைய காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின. இக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்தனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். https://globaltamilnews.net/2025/217721/
1 month ago
சர்வதேச விசாரணை குறித்து நீதி அமைச்சருக்கு விளக்கிய சாணக்கியன்! செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு உடனடி சர்வதேச விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். எனினும் சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசியலமைப்பில் இடமில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்திருந்தார். அவரது கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாணக்கியன் தெரிவித்த கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” ‘மாண்புமிகு நீதி அமைச்சர் அவர்களே, இலங்கையின் சட்டத்தின் கீழ், சர்வதேச விசாரணை நடைபெறக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான வழிகள் உள்ளன. இதற்கான OMP ச ட்டம் நிறைவேற்றப்பட்டது .அதை நீங்கள் சென்று படித்துப்பாருங்கள். விஜயதாச ராஜபக்ஷ எதிர்க்கட்சியில் இருந்தபோது, அவர் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார் ஆனால் அது நிறை வேற்றப்படவில்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றபோது, ஒரு நீதிபதி நீக்கப்படும்போது வெளிநாட்டு விசாரணையாளர்கள் அல்லது வெளிநாட்டு நீதிபதிகள் நீதிபதி நீக்கப்படுவது சரியா இல்லையா என்பதை விசாரிப்பில் ஈடுபட வேண்டும் என்று மசோதா கூறியது. இது அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்ல என்றும், அவர்கள் தொடர்ந்து செயல்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. எனவே உங்கள் துறையில் இவ்வாறான சட்டம் பற்றிய உங்கள் அறிவு போதுமானதாக இருக்காது,இல்லையா? ஒருவேளை நீங்கள் இந்த அவையில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு ஒரு சில ஜனாதிபதி மன்றங்களுடன் பேசி சில ஆலோசனைகளைப் பெற வேண்டும். சரியான தகவல் இல்லாமல் தெளிவில்லாமல் எனது தீர்மானத்தின் அடிப்படையை நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். சர்வதேச பங்கேற்பைக் கொண்டிருக்க இலங்கையின் சட்ட கட்டமைப்பிற்குள் போதுமான இடம் உள்ளது. எனவே உங்களுக்கு இவை பற்றி தெரியாவிட்டால், அதைச் சொல்லாதீர்கள். மேலும் நான் உங்கள் சுயாதீன வழக்கறிஞர்களுடன் என்னைக் குழப்பிக் கொள்ளவில்லை, நான் மனித உரிமை மீறல்களுக்கான சிறப்பு வழக்கறிஞர் அலுவலகத்தைப் பற்றிப் பேசுகிறேன்” இவ்வாறு சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்திருந்தார். https://athavannews.com/2025/1438664
1 month ago
செம்மணியில் இரண்டாவது புதைகுழியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்! adminJuly 10, 2025 யாழ்ப்பாணம் செம்மணியில் இரண்டாவது புதைகுழி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் புதிய தடயவியல் அகழ்வாய்வு தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்துப்பாத்தி மயானத்தில் மனிதப் புதைகுழியாக ஏற்கனவே ஒரு புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டு அங்கு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த புதைகுழியில் இருந்து நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (08.07.25) வரையில் 56 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 50 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அந்நிலையில், செய்மதி படங்களின் அடிப்படையில் அருகிலுள்ள ஒரு பகுதியும் புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதியே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என அடையாளப்படுத்தப்பபட்டுள்ளது. குறித்த பகுதியிலும் மனித எலும்பு சிதிலங்கள் சிக்கலான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலதிக அகழ்வு பணிகளின் பின்னரே அவை தொடர்பிலான தகவல்களை தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/217712/
1 month ago
அதிகரித்து வரும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை! நாட்டின் சிறைச்சாலைகளில் அதிகளவிலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்” சிறைச்சாலைகளில் 12,000 கைதிகளை மட்டும் அடைக்கும் வசதி உள்ளபோதும், தற்போது 33,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.” கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது ” சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பற்றாக்குறை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், 65% போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு சிறைவாசம் குறைக்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் இந்த நாடு மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். அதேசமயம் ”சிறைச்சாலை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக சிறப்பாக பணியாற்றுகிறார்கள் எனவும், ஒரு சிலரால் செய்யப்பட்ட சில தவறுகள் நம்பிக்கையை சேதப்படுத்தியிருக்கலாம் எனவும், இலங்கையில் உள்ள பல சிறைச்சாலைகள் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் அமைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், சிறைச்சாலை ஒட்டுமொத்தமாக நல்ல நிலையில் உள்ளது எனவும், தொலைபேசிகள் குறைவாகவே உள்ளன எனவும் தற்போது முடிந்தவரை பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438652
1 month ago
நிலவிவரும் வறட்சியான காலநிலை! நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை. தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. நிலவும் வறட்சியான காலநிலையினால் முக்கிய நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதோடு நீரின் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், எனவே, அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான நீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. எனவே, குடிநீர் விநியோகம் குறைவாக இருப்பதால், அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு தண்ணீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, அத்தியாவசிய அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை கேட்டுக்கொள்கிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு 1939 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438657
1 month ago
பால்மாவின் விலை அதிகரிப்பு! இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரித்துள்ளது. இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, 400 கிராம் பால் மா பொதியொன்றின் புதிய விலை 1,200 ரூபாயாகும். அதேபோல், 1 கிலோ கிராம் பால் மாவின் விலை 250 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438673
1 month ago
செம்மணி மனிதப் புதைகுழி: 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம். யாழ் – அரியாலை சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இன்று 14வது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் மேலும் 7 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438665
1 month ago
குஜராத்தில் இடிந்து வீழ்ந்த பாலம்; 09 பேர் உயிரிழப்பு, பலர் மீட்பு! குஜராத்தின் வதோதராவில் வதோதரா மற்றும் ஆனந்த் நகரங்களை இணைக்கும் காம்பிரா பாலம் இன்று (10) காலை இடிந்து விழ்ந்துள்ளது. இதன்போது, பாலத்தில் பயணித்த 05 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். அதேநேரத்தில் பலர் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கம்பீரா பாலம் கடந்த ஆண்டுதான் பழுதுபார்க்கப்பட்டதாகவும், பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு மாநில முதலமைச்சர் ரூ.212 கோடி மதிப்பிலான புதிய பாலத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். எவ்வாறெனினும், விபத்தின் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுக்கள் மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர். வதோதரா மாவட்டத்தின் பத்ராவில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்ததை சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் காட்டுகின்றன. https://athavannews.com/2025/1438581
1 month ago
அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுப்போம்! – பிரேசில் ஜனாதிபதி. அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா ( Lula da Silva) தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரேசிலில் இருந்து வரும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா, தங்களது இறையாண்மை நிலையை வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பிரேசிலில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது” ‘பிரேசில் ஒரு இறையாண்மை நாடு. நாங்கள் வெளியில் இருந்து வரும் எந்தவொரு கட்டுப்பாடு அல்லது அழுத்தத்தையும் ஏற்கமாட்டோம். பிரேசில் டிஜிட்டல் வலைதளங்களில் வரும் வெறுப்பு பேச்சு, இனவெறி, சிறுவர்கள் துஷ்பிரயோகம், மோசடிகள், மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களை ஏற்காது. பிரேசிலில் பேச்சுரிமை என்பது எந்தவொரு வன்முறையையும் ஊக்குவிக்காது. பிரேசிலில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும், இங்கே இயங்குவதற்கு பிரேசில் சட்டத்தை பின்பற்ற வேண்டும். பிரேசில் உடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை கூற்றுகள் தவறானவை. கடந்த 15 ஆண்டுகளில், பிரேசில் உடனான அமெரிக்காவின் வணிக உபரி 410 பில்லியன் டொலர்கள் என்று அமெரிக்காவின் தரவுகள் காட்டுகின்றன. அமெரிக்கா எங்கள் மீது புதிய வரிகளை விதித்தால், பிரேசில் அதற்கான பதிலடியை பிரேசிலின் பொருளாதார பரஸ்பர சட்டம் மூலம் கொடுக்கும். பிரேசில் இறையாண்மை,பரஸ்பர மரியாதை, மற்றும் உலகளாவிய உறவுகளில் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை மதிக்கிறது’ இவ்வாறு பதிவிட்டுள்ளார். https://athavannews.com/2025/1438672
1 month ago
இந்தக் கட்டுரையின் தரவுகளில் பல தவறுகள் இருக்கின்றன. முதலாவது கிருசாந்தி குமாரசாமி கைதுசெய்யப்பட்ட இடம், கால, வயது என்பன முற்றிலும் தவறானவை. இரண்டாவது 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் குருக்கள்மடத்தில் புலிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் என்று இங்கு குறிப்பிடப்படும் சம்பவம் என்பது ஒருபோதும் நடக்கவில்லை. ஆனால், ஜூலை 1990 இற்குப் பின்னர் முஸ்லீம்கள் மீது பல தாக்குதல்களை புலிகள் நடத்தியிருக்கின்றனர் என்பது உண்மையே. இலங்கை அரசுக்குச் சார்பாக எழுதும் முஸ்லீம் எழுத்தாளர் (எஸ் எம் எம் பஸீர்) ஒருவரால் பதியப்பட்ட முஸ்லீம்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் எனும் பட்டியலில் இங்கு குறிப்பிடப்படும் சம்பவம் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது. Catalogue of LTTE atrocities on the Muslims in the East in 1990. • On 23 July 1990 5 Muslims who were staying in the Jariya Mosque in Sammanthurai were killed by the LTTE and three others injured. • On 29 of June 1990 the LTTE killed 6 Muslims including the chief Trustee of the Hijar Mosque, Oddamavadi . • On 2 July 1990 14 farmers were shot and hacked to death at Akkaraipatttu. • On the 3rd July 1990, (on the eve of Eid- Ul- Fithr) UL Dawood , the member of Citizen Committee of the Batticaloa District, and the Cluster Principal of Alighar Central school , Eravur, Al Haj M.L.A Gafoor .J.P and Quazi and his father in law U.L.Ali Mohamed were kidnapped and killed by the armed LTTE cadres. • On 7 July 1990, !7 Muslims were killed at Puthur , a border Muslim village in Polonnaruwa • On the 14th July 1990 , 69 Muslims who were on their way back from Hai pilgrimage were kidnapped and killed by the LTTE at Onthachimadam in the Battiucaloa District.. • On 19th July 1990 , Muslim passengers were abducted and killed at Ampilanthurai in the Batticaloa District. • On the 3 August 1990, 140 Worshippers at Kattankudy Meeraniya and Hussainiya mosques were murdered and sixty six were injured. • On 11th August 1990 (Early morning of 12th August 1990) 127 Muslims were massacred at Eravur. • On 12 August 1990 four farmers who were working in the paddy fields in Sammanthurai were killed by the LTTE. • 1n August 1990 eight Muslims were shot to death at Akkraipattu. Town.
1 month ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
1 month ago
சிங்கள பேரினவாதத்துக்கு எதிரான படங்களில் சத்தியராஜ் அவர்கள் நடிக்கவில்லை என்று எழுதியிருக்கிறீர்கள். அவர் நடித்த ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படம் பற்றி முன்பு யாழில் வந்த கருத்துக்களை பார்வையிட IMDb▶️ Uchithanai Muharnthaal - Uchithanai Muharnthaal (2011)...Watch Trailer | 1:41
1 month ago
அட இதை சொல்ல்வதற்குத்தான் இந்த பிடப்பு...ஜபினா முசுலிம் செய்தியை காவி ...இங்கு போட்டால் ..உள்ள வாந்தி எல்லாம் வெளியில் வரும் ...அதிலை மிகப்பெரும் சந்தோசமடையலாம் ...எப்பிடியும் அரசுக்கு குடைபிடித்து .. நாலு அமைச்சர் பதவி எடுக்கவேணும் என்ற நப்பாசைதான்
1 month ago
குறைந்தது தனக்குப்பின் கட்சியை கொண்டுசெல்ல ஒருவரை தயார் படுத்தாமல் யமனோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு கடைசிவரை தலைவர் பதவியில் குந்திக்கொண்டிருந்தவர். கட்சியின் கொள்கை ஒழுக்கத்தை கைவிட்டவர். இப்போ; பதவிக்காக அடிபாடு நடக்கிறது. இதில சம்பந்தரை யார்? ஏன் நினைவு கூரவேண்டும் ?சுமந்திரன் எனும் கொள்ளிக்காம்பை செருகியவரே இந்த ராஜ தந்திரிதான் கட்சியை சிதிலமாக்க.
1 month ago
தகவலுக்கு நன்றி.
1 month ago
அப்ப யாரை நம்புவது ? எனக்கு மூத்தவர் நீங்கள் சொல்லுங்கள் .
1 month ago
விடயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதனை பற்றியதல்ல சொந்த நாட்டு மக்களுக்கு அவர்கள் வழங்கலில் ஆதிக்கம் இல்லாமல் வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் ஆளுமை செலுத்துகின்றன. அமெரிக்க பண்புகளுக்காக அமெரிக்க கடன்முறிகளை மற்ற நாடுகள் வாங்குகின்றன என்பது போன்ற ஒரு கருத்தினை நீங்கள் கூறியிருந்தீர்கள், அதற்கு அமெரிக்க பணமுறி தங்கத்தினை விட திரவத்தன்மை அதிகம் அத்துடன் தங்கத்தினை விட மேலதிகமாக வட்டி எனும் வகையிலான வருமானம் வருவதால் ம்ற்றும் இருப்பு, நாணய வலுக்குறைப்பு போன்ற காரணங்களுக்காக வாங்குவதாக கூறியிருந்தேன். அத்துடன் 2032 இல் அமெரிக்கா தனது உலகின் முதனிலையினை இழந்து விடும் என்பதற்காக 2022 இல் இருந்த கடன் அடிப்படையில் அதற்கு செலுத்தப்படும் வட்டி மற்றும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தினடிப்படையில் ஒரு மாதிரி கணிப்பீட்டினையும் பதிந்திருந்தேன் அதற்கு கூறிய காரணம் அப்போது கடன் மொத்த தேசிய வருமானத்தினை விட அதிகமாக இருந்தததன் அடிப்படையில் 2032 இல் கடன் தொகை 250% உயர்வடைந்துவிடும் எனவும் இங்கிலாந்து 2 உலக போரின் முடிவின் பின்னர் கடன் மொத்த தேசிய வருமானத்தில் 250% இருந்த போது அது தனது காலனித்துவத்தினை கைவிட்டதனை குறிப்பிட்டிருந்தேன். அப்போது 120% இருந்ததாக கருதுகிறேன் இரண்டு ஆண்டுகளின் பின்னர் 124% உள்ளது, அமெரிக்கா சரியான பாதையிலேயே செல்கிறது, ஆனால் அமெரிக்கா உலகின் முதனிலையினை அதற்கு முன்னராகவே வேறு காரணங்களால் இழக்கலாம் அல்லது 2032 இலும் தொடர்ந்து முதனிலையினை செலுத்தலாம். கணிப்பில் ஆண்டிற்கு 5% கடனதிகரிப்பு ஏற்படலாம் என கணித்ததாக நினைவுள்ளது, தற்போது ஆண்டிற்கு 2% கடனதிகரிப்பு ஏற்படுகிறது (கடந்த 2 ஆண்டில்), 2032 இனை விட சில ஆண்டுகள் அதிகரிக்கலாம் ஆனால் அது நிகழும் என்பதாகவே நான் உணருகிறேன்.
1 month ago
தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி எங்கோ வாசித்த ஞாபகத்தில் அதனைச்சரிபார்க்காது எழுதிவிட்டேன்.
Checked
Sun, 08/10/2025 - 09:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed