புதிய பதிவுகள்2

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்

1 month ago
இந்த புகையிரத சேவைகள் கணனி மூலமாக பதிவு செய்யலாம் என்று முன்னர் கூறினார்கள். இதுபற்றி அந்த சேவையை பெற்றுக் கொண்டவர்கள் யாராவது இருந்தால் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாமே!

காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை; ட்ரம்ப் – நெதன்யாகு இடையே நடைபெற்ற சந்திப்பு!

1 month ago
இருவரும் சேர்ந்து அந்த மக்களை வெளியேற்றப் போகிறார்கள். இவர்களை மீள் குடிறேற்றுவார்கள் என்பது சந்தேகமே.

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

1 month ago
குசல் அபார சதம், பந்துவீச்சில் அசித்த, துஷ்மன்த அசத்தல்; பங்களாதேஷை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை Published By: VISHNU 08 JUL, 2025 | 10:21 PM (பல்லேகலை அரங்கிலிருந்து நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற தீர்மானம் மிக்க கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 99 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது. துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக திறமையைப் பேணி வரும் குசல் மெண்டிஸ் குவித்த அபார சதம், அணித் தலைவர் சரித் அசலன்க பெற்ற அரைச் சதம் ஆகியவற்றுடன் அவர்கள் 4ஆவது விக்கெட்டில் 117 பந்துகளில் பகிர்ந்த 124 ஓட்டங்கள் என்பன இலங்கையை வெற்றி அடையச் செய்தன. இலங்கையின் வெற்றியில் வேகபந்துவீச்சாளர்கள் அசித்த பெர்னாண்டோ, துஷ்மன்த சமீர, சுழல்பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர். குசல் மெண்டிஸ், சரித் அசலன்க ஆகியோரின் இணைப்பாட்டத்திற்கு இணைப்பாட்டத்திற்கு முன்னர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றிய பங்களாதேஷ், கடைசி 10 ஓவர்களில் 63 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் குசல் மெண்டிஸ் துடுப்பெடுத்தாடிய விதம் அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. மோசமான பந்துகள் எதையும் விட்டு வைக்காமல் சிதறடித்தவாறு குசல் மெண்டிஸ் ஓட்டங்களைக் குவித்ததுடன் சரித் அசலன்கவுடன் இணைந்து அணியை பலமான நிலையில் இட்டார். கடைசிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்களைக் குவித்தது. இந்தத் தொடரில் மூன்றாவது தடவையாக இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரர் நிஷான் மதுஷ்க (1) தொடர்ச்சியான 3ஆவது தடவையாக குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து பெத்தும் நிஸ்ஸன்க (33), குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர்செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த முன்னாள் தலைவர் குசல் மெண்டிஸ், தற்போதைய தலைவர் சரித் அசலன்க ஆகிய இருவரும் மிகத் திறமையான வியூகங்களுடன் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை இலகுவாக குவித்து அணியை பலமான நிலையில் இட்டனர். சரித் அசலன்க 68 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகளுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார். இது அவர் பெற்ற 16ஆவது அரைச் சதமாகும். இதனிடையே மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது 6அவது சதத்தைக் குவித்த குசல் மெண்டிஸ் 114 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டறிகளுடன் 124 ஓட்டங்களைப் பெற்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜனித் லியனகே 12 ஓட்டங்களுடன் துரதிர்ஷ்டவசமாக ஹிட் விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார். துனித் வெல்லாலகே ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சி செய்து 6 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். வனிந்து ஹசரங்க 18 ஓட்டங்களுடனும் துஷ்மன்த சமீர 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் மெஹிதி ஹசன் மிராஸ் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 286 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 39.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷின் முன்வரிசை வீரர்கள் திறமையை வெளிப்படுத்தத் தவறியதால் அதன் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. தன்ஸித் ஹசன் (17), நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (0), பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் (28), அணித் தலைவர் மெஹ்தி ஹசன் மிராஸ் (28), ஷமிம் ஹொசெய்ன் (12) ஆகிய ஐவரும் துடுப்பாட்டத்தில் பிரசாகிக்கத் தவறினர். (124 - 5 விக்) மறுபக்கத்தில் தனி ஒருவராக திறமையுடன் போராடிய தௌஹித் ஹிரிதோய் 51 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துஷ்மன்த சமீரவினால் போல்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து தன்ஸிம் ஹசன் சக்கிப் 5 ஓட்டங்களுடனும் தஸ்கின் அஹ்மத் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டம் இழந்தனர். பங்களாதேஷின் கடைசி துடுப்பாட்ட வீரரான ஜாக்கர் அலி 27 ஓட்டங்களைப் பெற்றார். பின்வரிசை துடுப்பாட்டத்தில் எருவரும் தாக்குப் பிடிக்கவில்லை. பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன், தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் குசல் மெண்டிஸ் வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/219524

நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்

1 month ago
இதைத் தான் "ஒற்றைப் பரிமாணப் பார்வை" என்றேன். அதையே மீண்டும் எழுதியிருக்கிறீர்கள். மீள மீள எழுதுவதால் ஒரு ஆய்வுக்கு பல பரிமாணங்களும் ஆழமும் கிடைத்து விடாது. அரசுகள் எப்படி இருந்தாலும், முன்னாள் சோவியத் குடியரசுகளாக இருந்த நாடுகளின் மக்கள் இப்போது ஐரோப்பிய ஒன்றியம் நோக்கி நகர முற்படுவதன் காரணங்கள் மனித அபிவிருத்தி சார்ந்தது. இதை எவ்வளவு விவசாயிகள் உள்நாட்டில் தொழிலை இழந்தார்கள் என்ற இலக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு தீர்ப்பிட முடியாது. சில தீமைகள் இருக்கும், பல நன்மைகள் இருக்கும். நிகர விளைவை அந்த நாடுகளின் நிலைமைகளே தீர்மானிக்கும். கடந்த இரு ஆண்டுகளாக, அமெரிக்காவின் டொலர் கடன் காரணமாக உலகில் செல்வாக்கிழக்கும் என்று கூட நீங்கள் எழுதிய நினைவு. அதுவும் ஒரு பரிமாணப் பார்வை என்று சுட்டிக் காட்டியிருந்தேன். அமெரிக்க டொலரை உலகம் நம்பி, சேமிப்பு நாணயமாக வைத்திருக்க அமெரிக்காவின் பொருளாதாரம்/கடன் நிலை மட்டும் காரணமல்ல என்று சுட்டிக் காட்டியிருந்தேன். இன்னும் உங்களுக்கு ஒட்டு மொத்தமாக ஒரு விடயத்தை அணுகும் கலை வாய்க்கவில்லையென நினைக்கிறேன்.

குஜராத்: பாலம் திடீரென இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் - என்ன நடக்கிறது?

1 month ago
பட மூலாதாரம்,UGC 9 ஜூலை 2025, 06:25 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் (இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் கம்பீரா பாலத்தின் நடுப்பகுதி இன்று காலை திடீரென உடைந்து விழுந்ததில், அதில் சென்று கொண்டிருந்த சில வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய குஜராத் பகுதியில் உள்ள பிபிசி குஜராத்தி குழுவினர், மஹிசாகர் ஆற்றில் அமைந்துள்ள இந்த பாலம் பெரியளவில் உடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த பாலம் வதோதரா மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ளது. இந்த சம்பவத்தையறிந்து, உள்ளூர் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இன்று காலை விபத்து நடந்ததுமே உயர்மட்டக் குழுவை சம்பவ இடத்திற்கு முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்." குஜராத் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல், "மஹி ஆற்றில் ஐந்து முதல் ஆறு வாகனங்கள் வரை வீழ்ந்துள்ளன. மத்திய குஜராத் மற்றும் சௌராஷ்டிராவை இணைக்கும் கம்பீரா பாலத்தின் ஒரு ஸ்லாப் (slab) விழுந்ததால் பாலம் உடைந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளன" என கூறியதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் இந்த பாலம் முக்கியமான பாலமாக கருதப்படுகிறது. தற்போது, அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து சில படங்களும் வெளியாகியுள்ளன. அவற்றில், பாலத்தின் உடைந்த பகுதிக்கு அருகே டிரக் ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதை காண முடிகிறது. மற்றொருபுறம், ஆற்றில் சில வாகனங்கள் விழுந்துள்ளதையும் பார்க்க முடிகிறது. இந்த விபத்து தொடர்பாக, ஆனந்த் மாவட்ட ஆட்சியர் பிரவீன் கௌத்ரி பிபிசியிடம் கூறுகையில், "விபத்து நடந்த வதோதரா பகுதியில் முழு அளவில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்தை மட்டும் அங்கே நிறுத்தியுள்ளோம். வதோதரா மாவட்ட எல்லைக்குள்ளும் இந்த பாலம் வருகிறது. ஆனந்த் மற்றும் சௌராஷ்டிராவிலிருந்து வதோதரா செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன." என தெரிவித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற உள்ளூர் மக்கள் சொல்வது என்ன? சம்பவ இடத்தில் சிக்கியவர்களை மீட்ட எகல்பரா கிராம தலைவர் தஞ்சிபாய் பதியார் கூறுகையில், "பாலம் இடிந்ததாக கேள்விபட்டதும் அரை மணி நேரத்தில் இங்கு வந்துவிட்டேன். நாங்கள் இங்கு வந்தபோது. நான்கு கார்களும், ஒரு பைக்கும் ஆற்றில் விழுந்திருந்தன." என்றார். பாலம் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாகவும் அதன் ஆயுட்காலம் முடிந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார். முஜ்பூர் கிராமத் தலைவர் அபேசிங் பர்மார் பாலம் மோசமான நிலையில் இருந்ததாகவும் அனைத்து இடங்களிலும் குழிகள் இருந்ததாகவும் தெரிவித்தார். பாலத்தில் கம்பிகள் வெளியே தெரிந்தன. பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் பாலம் இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்தனர். "நாங்கள் பட்கானா என்கிற பகுதிக்கு சென்று கொண்டிருந்தோம். எங்களுடன் ஆறு பேர் இருந்தனர். அவர்களில் என்னுடைய இளைய மகனும், கணவரும், மருமகனும், மைத்துனரும், மற்றவர்களும் உள்ளே இருந்தனர்." என ஒரு பெண்மணி தெரிவித்தார். பட மூலாதாரம்,@INFO_VADODARA படக்குறிப்பு,மீட்புப் பணிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் ஜக்மர் சிங் பதியா ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், "நான் 7.30 மணிக்கு விபத்து பற்றி கேள்விபட்டேன். அதன் பிறகு இங்கு ஓடி வந்தேன். ஒரு ரிக்ஷா, லாரி, ஈகோ கார் மற்றும் சரக்கு ஏற்றும் மேக்ஸ் வாகனம் ஆற்றுக்குள் இருந்தன" என்றார். "மக்கள் மற்றவர்களையும் அழைத்தனர். காவல்துறையினரும் வந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக வந்து சில சடலங்களை மீட்டனர். சில உடல்கள் இன்னும் மீட்கப்பட உள்ளன. தற்போது ஆற்றில் நான்கு அல்லது ஐந்து வாகனங்கள் உள்ளன, ஆனால் எந்த பைக்கும் இல்லை" என்றார். "இந்த விபத்தில் எனது கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சிக்கினர், அதில் ஒரு பெண்மணி மட்டுமே பிழைத்தார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என மேலும் தெரிவித்தார். மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ராஜ்தீப் பதியார் பேசுகையில், "நாங்கள் காலை எட்டு மணியில் இருந்து இங்கு உள்ளோம். நாங்கள் கார்களை கயிறு கட்டி வெளியில் இழுத்தோம். உயிருடன் இருந்த 2 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்." என்றார். முதலில் கிராம மக்கள் வந்ததாகக் கூறும் அவர் அதனைத் தொடர்ந்து மற்றவர்களும் வந்ததாகத் தெரிவித்தார். விபத்து நடந்த பகுதியை நோக்கி அதிக அளவிலான மக்களும் பாதசாரிகளும் வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் அல்லாமல் சில காவலர்களும் வாகனங்களும் பாலத்தின் மீது உள்ளது. ஒரு காணொளி சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதைப் பார்க்க முடிகிறது. பட மூலாதாரம்,UGC முதலமைச்சர் கூறியது என்ன? விபத்தில் இறந்தவர்களுக்கு குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார். "கம்பீரா பாலத்தின் ஒருபகுதி உடைந்து விழுந்தது வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு உறுதுணையாக நிற்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-ம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்." என்றார். பாலம் எவ்வளவு பழமையானது? பட மூலாதாரம்,NACHIKET MEHTA மாநில அமைச்சர் ரிஷிகேஷ் படேல் கூறுகையில், "1985-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பாலம் தொடர்ச்சியாக அவ்வப்போது பழுது பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த விபத்து துரதிருஷ்டவசமானது. ரூ. 212 கோடி செலவீட்டில், புதிய பாலம் கட்டுவதற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்தார். அதற்காக ஒப்பந்தம் கோருவது, மதிப்பீடு மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன," என்றார். சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் துறையின் முதன்மை பொறியாளர் சி.பி. படேல் பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், "இந்த பாலம் 1985ம் ஆண்டில் திறக்கப்பட்டதாக" தெரிவித்தார். இந்த விபத்து எப்படி நடந்தது என கேட்டபோது, "இதுகுறித்த விசாரணைக்குப் பிறகே காரணம் தெரியும். அனைத்துப் பாலங்களிலும் பருவமழைக்கு முன்னதாகவும் அதற்கு பின்னரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ஆவணப் பதிவுகளை ஆராய்ந்த பின்னர், இந்த பாலத்தின் நிலை குறித்த விவரங்கள் தெரியவரும்" என்றார். சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் துறையின் செயலாளர் பிஆர் படேலியா கூறுகையில், "இந்த பாலத்தின் ஒருபகுதி மஹி ஆற்றில் சேதமடைந்து விழுந்ததாக இன்று காலையில் தெரியவந்தது. இதுகுறித்து ஆராய நிபுணர்கள் குழுவினர் நிகழ்விடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்றார். பாஜகவை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் பட மூலாதாரம்,UGC மராத்தி பேசாத வணிகர்கள் மீது தாக்குதல் - மகாராஷ்டிராவை உலுக்கும் மொழிப் பிரச்னை கடலூர்: மூடிய கேட்டை ரயில் வரும் முன்பே திறக்க முடியுமா? ரயில் எவ்வளவு வேகத்தில் மோதியது? வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி? தினசரி எத்தனை முறை, எவ்வளவு நேரம் பல் துலக்க வேண்டும்? வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை டிரோன் மூலம் காப்பாற்றிய விவசாயி குஜராத் காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்தா கூறுகையில், "இம்மாதிரியான விபத்துகள் மீண்டும் மீண்டும் நிகழ்வது ஏன்? இந்த பாலம் ஆபத்தான அளவில் இருந்திருந்தால், முன்பே அது சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது மூடப்பட்டிருக்க வேண்டும். அரசின் அலட்சியத்தாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது." என்றார். ஆம் ஆத்மி கட்சி தலைவர் இசுதன் காத்வி கூறுகையில், "இந்த பால விபத்து மனித தவறால் நிகழ்ந்துள்ளது. ஒரு டிரக் உட்பட 4 வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்துள்ளன. பொதுமக்கள் வரி செலுத்தும்போது அரசாங்கமும் பாஜகவும் ஒரு வலுவான உள்கட்டமைப்பை தருகின்றனவா என்பதுதான் கேள்வி." என தெரிவித்தார். இதுதொடர்பாக பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய அவர், "ஒரு பாலத்தைக் கடந்து செல்லும் போது இன்றைக்கு ஒருவர் அச்சத்தில் உள்ளார். அந்த பாலம் சேதமடைந்த நிலையில் இருந்திருந்தால், ஏன் அப்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தவில்லை?" என அவர் கேள்வியெழுப்பினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz6gy10vvwyo

பெண்களிற்கு எதிரான ஒடுக்குமுறை - தலிபான் தலைவர்களிற்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை

1 month ago
09 JUL, 2025 | 10:33 AM பெண்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தியமைக்காக தலிபான் தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. தலிபானின் இரண்டு முக்கிய தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2021ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து தலிபானின் உயர் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சதா மற்றும் தலைமை நீதிபதி அப்துல் ஹக்கீம் ஹக்கானி ஆகியோர் பெண்கள் மற்றும் சிறுமிகளை நடத்திய விதத்தின் மூலம் மனித குலத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டனர் என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் உள்ளன சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் அவர்கள் பெண்கள் சிறுமிகளிற்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் கல்வி கற்பதற்கு தடைவிதித்துள்ளனர், பெண்கள் பல தொழில்களில் ஈடுபடுவதற்கு தடைவிதித்துள்ளனர் என ஐசிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/219541

அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !

1 month ago
ஏனைய ட்ரம்ப் பக்தர்கள் போல சோசியல் மீடியா துணுக்குகளில் இருந்து தான் நீங்கள் செய்திகள் அறிந்து கொள்கிறீர்கள் போல! கீழே கார்டியன் இதழில் மிஷேல் ஒபாமா சொன்னதன் முழுவடிவம் இருக்கிறது. மணவாழ்க்கை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று புரிகிறதா என்று பாருங்கள். https://www.theguardian.com/us-news/2022/dec/29/michelle-obama-couldnt-stand-husband-barack-10-years

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ; பாலி தீவுக்கான விமான சேவைகள் இரத்து 

1 month ago
இந்தோனேசியாவில் எரிமலை குமுறல்; சாம்பல் சூழ்ந்த மேகம் Published By: DIGITAL DESK 3 08 JUL, 2025 | 03:24 PM கிழக்கு இந்தோனேசியாவிலுள்ள லெவோதோபி லாகி லாகி எரிமலை திங்களன்று உக்கிரமாக குமுறி 18 கிலோ மீற்றர் உயரத்துக்கு சாம்பலையும் புகையையும் வெளித்தள்ளியுள்ளது. இதனையடுத்த இந்தோனேசிய பாலித் தீவுக்கான மற்றும் அந்தத் தீவிலிருந்தான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா தீவான புளோரஸிலேயே எரிமலையே குமுறியுள்ளது. பாலி சர்வதேச விமான நிலையத்துக்கான 24 விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பிராந்தியத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வந்த புளோரஸ், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், தென்கொரியாவுக்கான விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டும் தாமதப்படுத்தப்பட்டும் உள்ளன. இருப்பினும் சில செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கின. நவம்பர் மாதத்திற்குப் பின்னர் திங்கட்கிழமை காலை அந்நாட்டு நேரப்படி 11:05 மணிக்கு எழுந்த வெப்ப மேகங்கள் மிக உயர்ந்ததாக இருந்தது என புவியியல் நிறுவனத் தலைவர் முகமது வாஃபித் தெரிவித்துள்ளார். கார்கள் மற்றும் பஸ்களில் குடியிருப்பாளர்கள் ஏறி தப்பிச் செல்லும்போது எரிமலையின் சிகரங்களிலிருந்து சிவப்பு நிற எரிமலைக் குழம்பு வெளியேறுவதை இரவு முழுவதும் பகிரப்பட்ட காணொளிகள் காட்டுகின்றன. இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் அந்தப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள குடியிருப்பாளர்களுக்கு தண்ணீர், உணவு மற்றும் முகக்கவசங்கள் தேவைப்படுவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தோனேசியா பசிபிக் "நெருப்பு வளையத்தில்" அமைந்துள்ளது, அங்கு டெக்டோனிக் தகடுகள் மோதுகின்றன, இதனால் அடிக்கடி எரிமலை மற்றும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன. லெவோடோபி லக்கி-லக்கி இந்த ஆண்டு பல முறை குமுறியுள்ளது. ஆனால் இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. கடந்த நவம்பரில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. https://www.virakesari.lk/article/219491

இறந்து போன குட்டியை 3 நாள் பிரியாத யானை - விலங்குகளும் துக்கம் அனுசரிக்குமா?

1 month ago
பட மூலாதாரம்,BBC NEWS SINHALA படக்குறிப்பு, தாய் யானை இறந்த தனது குட்டியை மூன்று நாட்களாக இழுத்துச் சென்றது. கட்டுரை தகவல் சுனேத் பெரேரா பிபிசி உலக சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் காடுகளில் கரடிகள் அல்லது பெரிய பூனைகள் போன்ற சில பாலூட்டிகள், தங்களது குட்டிகளை வாயால் மெதுவாக தூக்கி, பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் எடுத்துச் செல்வதைப் பொதுவாகவே நாம் பார்த்திருக்கலாம். ஆனால் ஒரு யானை இதைச் செய்வது, அதிலும் குறிப்பாக, அது சுமந்து செல்லும் குட்டி ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில் இவ்வாறு செய்வது மிகவும் அபூர்வமானதாகக் கருதப்படுகிறது. இலங்கையின் கவுடுல்லா தேசிய பூங்காவில் ஜூன் மாத இறுதியில், தாய் யானை ஒன்று, உயிரற்ற தனது குட்டியின் உடலை பல நாட்களாக தன்னுடன் எடுத்துச் செல்லும் மிகவும் வேதனையூட்டும் காட்சி ஒன்றை ஒரு உள்ளூர் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் பதிவு செய்திருந்தார். "அந்த யானை அக்குட்டியை கைவிட தயாராக இல்லை. அதனைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது," என்று கூறுகிறார் புகைப்படக் கலைஞர் சஞ்சய மதுஷன். தன் வயிற்றில் ஏறக்குறைய இரண்டு வருடங்கள் சுமந்த, தற்போது இறந்துவிட்ட குட்டியை, அந்த தாய் யானை பிடித்துக் கொண்டிருந்தது கொஞ்ச நேரமல்ல. "தாய் யானை அதை மூன்று நாட்கள் கைவிடாமல் பிடித்துக் கொண்டிருந்தது" என்று பிபிசியிடம் கூறுகிறார் மதுஷன் . அப்போது பூங்காவில் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற தாய் யானையை அவர் கண்காணித்தார். "முந்தைய நாள் பிறந்தவுடனே அந்தக் குட்டி இறந்துவிட்டதாக பூங்கா அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள்," என்றும் அவர் கூறினார். மரணம் நிகழ்ந்தால் விலங்குகளுக்கு அது புரியுமா? 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், இலங்கையில் சுமார் 7,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நாட்டின் சிறிய பரப்பளவைக் கருத்தில் கொண்டால் உலகிலேயே அதிக யானைகள் பரவல் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது. பட மூலாதாரம்,SANJAYA MADUSHAN/CEYLON WILD TRAILS படக்குறிப்பு, யானை துக்கம் அனுசரிக்குமா என சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட Elephas maximus maximus என்ற யானை இனம், ஆசிய யானைகளில் மிகப்பெரிதாகவும், மிகக் கருமையானதாகவும் அறியப்படுகிறது. இந்த யானைகள், கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் இடமாக கவுடுல்லா தேசிய பூங்கா உள்ளது. "இங்கு 300க்கும் மேற்பட்ட யானைகள் கூடுவதை நான் பார்த்திருக்கிறேன். அதனால், யானைகள் கூட்டமாக கூடுவதை அடிக்கடி பார்த்திருந்தாலும், இதுபோன்ற உணர்ச்சிகரமான காட்சியை நான் கண்டது இதுவே முதல் முறை," என்கிறார் மதுஷன் "ஆனால் அந்த யானை ஏன் இப்படி நடந்துகொள்கிறது? அது துக்கத்தை வெளிப்படுத்துகிறதா? அல்லது இது ஒரு தற்செயலான நிகழ்வா?" என்று சமூக ஊடகங்களில் வியப்பை வெளிப்படுத்தும் பலரைப் போலவே அவரும் ஆச்சரியப்படுகிறார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பிரிட்டனில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தில் விலங்கு நடத்தை மற்றும் நலன் தொடர்பான இணைப் பேராசிரியரான முனைவர் லீன் ப்ரூப்ஸ் பேசுகையில், "இந்த கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் கடினம், இருப்பினும் இதேபோன்ற காட்சிகள் உலகம் முழுவதும் முன்னர் பதிவாகியுள்ளன" என்று கூறுகிறார். "மற்ற விலங்குகளின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை உணர்வது கடினம். அவை மரணத்தை எவ்வளவு தூரம் புரிந்துகொள்கின்றன என்பதும், மரணம் எல்லோருக்கும் வரும் ஒன்று, அது திரும்ப முடியாத ஒன்று போன்ற மரணத்தின் முக்கிய அம்சங்களையும் புரிந்துகொள்கின்றனவா என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியாது," என்று முனைவர் லீன் ப்ரூப்ஸ் பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம்,SANJAYA MADUSHAN/CEYLON WILD TRAILS படக்குறிப்பு, யானைகளின் கர்ப்ப காலம் மிக நீண்டது. இது 680 நாட்கள் நீடிக்கிறது. இலங்கையில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ துறையின் யானை நிபுணரான பேராசிரியர் அசோக தங்கொல்ல, இலங்கையில் ஒரு யானை இவ்வாறு நடந்துகொள்வதைப் பார்ப்பது இதுவே முறையாக இருந்தாலும், அது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்கிறார். "ஏனென்றால் அவற்றுக்கும் உணர்வுகள் உள்ளன. அந்த உணர்வுகளை யானைகள் பகிர்ந்து கொள்கின்றன. தாய்-குட்டி பிணைப்பு மிகவும் வலுவானது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "நான் இதை விலங்கினங்களில், குறிப்பாக குரங்குகளில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஆனால் யானைகள் இதைச் செய்வது கொஞ்சம் விசித்திரமானது," என்றும் அவர் விளக்கினார். அந்த யானை குழப்பமடைந்திருக்கலாம் என்றும் முனைவர் ப்ரூப்ஸ் கூறுகிறார். "ஆனால் யானைகள் ஒரு உயிருள்ள குட்டியை சாதாரணமாக இழுத்துச் செல்லாது. அதனால், இது ஒருவித உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினை தான் என நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறுகிறார். "விலங்குகள் இறப்புக்கு எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் பற்றி, இப்போது கம்பேரெட்டிவ் தானடோலஜி(Comparative Thanatology) எனப்படும் ஒரு புதிய அறிவியல் துறையில் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த துறையில் விஞ்ஞானிகள் இந்த நடத்தைகளை நெருக்கமாகக் கவனித்து ஆராய்கிறார்கள்" என்று அவர் விளக்கினார். "விலங்குகள் இறப்பைப் பற்றி என்ன தெரிந்துகொள்கின்றன என்பதை உணர்வதற்காக, இதுபோன்ற அறிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை ஒன்று சேர்த்து, ஒரு முறையான வழியில் ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள்," என்று அவர் குறிப்பிட்டார். மற்ற விலங்குகளிலும் இதேபோன்ற நடத்தை உள்ளதா ? யானைகள் மட்டும் இத்தகைய நடத்தையை வெளிப்படுத்துவதில்லை. விலங்குகள், திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் இறந்த அவற்றின் சக விலங்குகளின் அருகே தங்கியிருப்பது பல சந்தர்ப்பங்களில் கவனிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,KEN BALCOMB, CENTER FOR WHALE RESEARCH படக்குறிப்பு, திமிங்கலம் J35 (தஹ்லெக்வா என்று அறியப்படுகிறது) 17 நாட்களுக்கு தனது இறந்த குட்டியின் உடலைத் தள்ளிக்கொண்டிருப்பது காணப்பட்டது. தஹ்லெக்வா (Tahlequah) என்ற திமிங்கலம், 2018-ஆம் ஆண்டு, இறந்துவிட்ட தனது குட்டியின் உடலை 17 நாட்கள் தொடர்ந்து தள்ளிச் சென்றபோது, உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதே திமிங்கலம் மற்றொரு குட்டியை இழந்த பிறகு மீண்டும் துக்கத்தில் இருப்பதாக அமெரிக்காவில் உள்ள திமிங்கல ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. "அந்தத் திமிங்கலம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டது. ஏனென்றால், அது இறந்த தன் குட்டியை தனது மூக்குப் பகுதியில் (ரோஸ்ட்ரம்) சமநிலையுடன் தக்கவைக்க வேண்டியிருந்தது. அது மிகவும் கடினமானது. ஆனால், அது தனது குட்டியை இரண்டு வாரங்கள் பிடித்துக்கொண்டிருந்தது," என்கிறார் முனைவர் ப்ரூப்ஸ். இதற்கிடையில், இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், யானைக் கூட்டங்கள் இறந்த குட்டிகளை மண்ணால் மூடுவதைக் காணும் நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டன. சிலர் இதை 'புதைப்பது போன்ற செயல்பாடு' என விவரிக்கின்றனர். "யானைகள் உருவாக்கும் புதைகுழிகள் பற்றிய இந்த தகவல்களை விளக்குவது மிகவும் சிக்கலான ஒன்று என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக, எறும்புகள் மற்றும் எலிகள் போன்ற பிற இனங்கள் உள்ளன. அவையும் இறந்தவற்றை புதைக்கும்," என்று முனைவர் ப்ரூப்ஸ் கூறுகிறார். இலங்கையில் சமீப காலமாக, காடுகளை அழிப்பது மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக மனித - யானை மோதல் அதிகரித்து வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் கொல்லப்படுகின்றன, மற்றும் பல இளம் குட்டிகள் தாய் யானைகளை இழந்துவிடுகின்றன. யானைகள் தங்கள் அறிவை ஒரு தாய்வழி சமூகத்தின் ஒரு பகுதியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்து தலைமுறைக்கு கடத்துகின்றன. இளைய யானைகள் தங்கள் மூத்த யானைகளிடமிருந்து கற்றுக்கொள்கின்றன. "ஒரு குழுவில் முதிய யானைகள் கொல்லப்பட்டால், மனிதர்களைப் போலவே, யானைகளுக்கும் கற்றுக்கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள். அதனால், அவை புரிந்துகொள்ளவோ, அல்லது சரியான முறையில் நடந்து கொள்ளவோ முடியாது. அதனால், குடும்பங்கள் உடைந்துவிட்டால், அது மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தும்," என்கிறார் முனைவர் ப்ரூப்ஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c939nwgq93eo

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

1 month ago
காசாவில் வீதியோர குண்டுவெடித்து ஐந்து இஸ்ரேலிய படையினர் பலி 08 JUL, 2025 | 03:16 PM காசாவில் வீதியோர குண்டுவெடிப்பில் ஐந்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் வடபகுதியில் பெய்ட்ஹனோன் பகுதியில் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை இரண்டு குண்டுகள் வெடிக்கவைக்கப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது ஐந்து படையினர் கொல்லப்பட்டதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை இஸ்ரேலிய படையினர் தாக்கப்பட்டதால் சமாதான பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என இஸ்ரேலின் வலதுசாரி அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாங்கள் எங்கள் படையினரை கொலை செய்பவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக்கூடாது, அவர்களை துண்டுதுண்டாக்கவேண்டும் அல்லது பட்டினி போடவேண்டும் அவர்களிற்கு ஒக்சிசன் வழங்கும் மனிதாபிமான உதவிகளை வழங்க கூடாது என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/219489

சிரிக்கலாம் வாங்க

1 month ago
எனக்கும் இந்த அனுபவம் உண்டு! 5ஆம் ஆண்டிற்குள் கற்கும்போது பாடசாலையில் எல்லோருக்கும் தடுப்பூசி போட அழைத்துச் செல்ல நான் மெதுவாக சிறுநீர் கழிக்க செல்வதுபோல போய் மறைந்திருக்க நண்பர்கள் பிடித்துக்கொண்டு போய் ஊசி போடவைத்தார்கள்.
Checked
Sun, 08/10/2025 - 09:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed