புதிய பதிவுகள்2

இலங்கை இன்னும் பொருளாதார மீட்சியில் முழுமை அடையவில்லை - உலக வங்கி

4 days 22 hours ago
இலங்கையின் சமீபத்திய பொருளாதார செயல்திறன் வலுவாக இருந்த போதிலும், மீட்சி இன்னும் முழுமையடையாமல் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது இன்னும் நெருக்கடிக்கு முந்தைய நிலையை அடையவில்லை என்பதுடன் கணிசமாக வறுமையும் உயர்ந்துள்ளதாக உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மீட்சியை வலுப்படுத்துவதற்கு தொடர்ச்சியான பாரிய பொருளாதார ஸ்திரத்தன்மை, அவசர கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பொது செலவினம் தொடர்பான சிறந்த இலக்கு என்பன தேவைப்படும் என உலக வங்கி கூறியுள்ளது. இலங்கை பொருளாதாரமானது 2025 ஆம் ஆண்டில் தொழில்துறையின் வளர்ச்சியினால் 4.6 சதவீதமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக 2026 ஆம் ஆண்டு இலங்கை பொருளாதாரமானது 3.5 சதவீதமாக குறைவடையும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இன்னும் 2018 அளவை விடக் குறைவாகவே உள்ளது. வறுமை குறைந்து வந்தாலும், 2019 ஐ விட இரு மடங்கு அதிகமாகவே உள்ளது. தொழிலாளர் சந்தை மீள்வது மெதுவாக உள்ளது மேலும் பல குடும்பங்கள் நெருக்கடியின் போது இழந்த வாழ்வாதாரங்களை இன்னும் மீட்டெடுக்கவில்லை. சனத்தொகையில் 10 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு சற்று மேலே வாழ்கின்றனர். மேலும் ஊட்டச்சத்து குறைபாடு ஒரு தீவிரமான பிரச்சினையாகவே உள்ளது. நீண்டகால வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், நிதிக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வறுமையைக் குறைப்பதற்கும், தனியார் துறை தலைமையிலான வளர்ச்சியை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பரந்த சீர்திருத்தத்தை வலியுறுத்தியுள்ளது. முக்கிய முன்னுரிமைகளில் வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான தடைகளைத் தளர்த்துவது, வணிகச் சூழலை மேம்படுத்துவது மற்றும் நிலம் மற்றும் தொழிலாளர் சந்தைகளை நிர்வகிக்கும் வரி நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறைகளை நவீனமயமாக்குவது என்பன அவற்றில் முக்கியமானதாகும் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmggabvq600vgo29naafgfem0

பொலிஸாருக்கு எதிராக யாழ்.வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்

4 days 22 hours ago
வடமாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண சட்டத்தரணிகள் இன்று (7) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் இணைந்து போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டமானது யாழ்ப்பணத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் முன்னிலையில் இன்று காலை (07) ஆரம்பமானது. இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmgg8e8rn00uwqplp60eq8khr

எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி 1,000 பேர் தவிப்பு: சீன மீட்புப் படையினர் தீவிரம்!

4 days 23 hours ago
எவரெஸ்ட் பனிப்புயலில் சிக்கி ஒருவர் பலி ; 137 பேர் பத்திரமாக மீட்பு Published By: Digital Desk 3 07 Oct, 2025 | 02:40 PM உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் மலை சரிவுகளில் பனிப்புயல் நிலவி வருகிறது. இந்த மலைச்சரிவுகளில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் முகாம்களை அமைத்து தங்கியிருந்த நிலையில் இந்த பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. இந்த பனிப்புயலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கினர். இந்நிலையில் பனிப்புயலில் சிக்கி சீனாவை சேர்ந்த 41 வயது மலையேற்ற வீரர் உயிரிழந்தார். இதுவரை 137 பேர் மீட்கப்பட்டனர். எவரெஸ்ட் பனிப்புயலில் சிக்கி தவித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. https://www.virakesari.lk/article/227120

பொலிஸாருக்கு எதிராக யாழ்.வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்

4 days 23 hours ago
நீங்கள் உங்கள் டிப்பாட்மெண்டில் களவு செய்யிறீங்கள். நாங்கள் எங்கள் டிப்பாட்மெண்டில் களவு செய்கின்றோம். எனவே எங்களை விசாரிக்க நீங்கள் யார் என்பதுதான் போராட்டம்.

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

4 days 23 hours ago
இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு! 2025 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகளான ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சர்க்யூட்களில் மைக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் டனல் மற்றும் ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச்.டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் இன்று ஸ்டாக்ஹோமில் அறிவித்தது. நூற்றாண்டு பழமையான குவாண்டம் இயக்கவியல் தொடர்ந்து புதிய ஆச்சரியங்களை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குவாண்டம் மெக்கானிக்ஸ் அனைத்து டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கும் அடித்தளமாக இருப்பதால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நோபல் பரிசு குழுவின் தலைவர் ஓலே எரிக்சன் கருத்து தெரிவித்தார். மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றவர்கள் குறித்த அறிவிப்பு நேற்று முதல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இவ்விருது அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தங்க பதக்கம், பட்டயம், ரொக்கப் பரிசு 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் அதாவது இலங்கை மதிப்பில் 3 கோடி ரூபா உள்ளிட்டவை ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10-ம் திகதி வழங்கப்படும் என்பதும் குறிப்பிடதக்கது. https://athavannews.com/2025/1449789

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அவதானம்

4 days 23 hours ago
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாத உரிமைச் சட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அவர்களது பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் கருத்திற்கொள்ளப்படமாட்டாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (7) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். சில முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்திய வாகனங்களை தற்போது ஒப்படைத்துள்ளனர். எனினும் அது அந்த சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதால், வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிற விடயங்கள் தொடர்பாக ஏதேனும் கோரிக்கை விடுக்கப்பட்டால், அது குறித்து நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். https://adaderanatamil.lk/news/cmgg7ozar00utqplpzcgwqiha

சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!

4 days 23 hours ago
பண்டார வன்னியன் காலத்திலிருந்து... காட்டிக் கொடுத்த எட்டப்பன் காக்கை வன்னியன் ஈறாக, தேசியத் தலைவர் பிரபாகரன் வரை... டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் என்று... தமிழனை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்து வயிறு வளர்த்துக் கொண்டே வந்திருப்பது தமிழ் இனத்தின் சாபக்கேடு. மற்றைய இனங்களில்.... அந்த இனத்திற்கு ஒரு ஆபத்து வரும் போது... தமது மொழியின் எதிர்கால நலன் கருதி மொத்த இனமும் ஒரு அணியில் ஒற்றுமையாக திரண்டு தம் இனத்திற்காக குரல் கொடுக்கும். ஆனால் உலகின் மூத்த இனமான தமிழ் இனத்தில் மட்டும்.... அற்ப சலுகைகளுக்காகவும், எதிரி போடும் எலும்புத் துண்டிற்காகவும்... மதம் மாறியும், இனம் மாறியும்.. இனத்தை காட்டிக் கொடுப்பவர்களும், காட்டிக் கொடுப்பவர்களுக்கு வெள்ளை அடித்து... முட்டுக் கொடுப்பவர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து இனத்தை கருவறுத்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களை ஓட்டுக் குழுக்கள் என்றும், வெள்ளை வேட்டி கள்ளர் என்றும், செம்பு தூக்கிகள் என்றும்... காலத்திற்கு காலம் ஒவ்வொரு அடைமொழியுடன் அழைத்தாலும்... எருமை மாட்டின் மீது மழை பெய்த மாதிரி ஒரு அசுமாத்தமும் இல்லாமல் இருப்பது இவர்களின் தனிக் குணம். மற்றைய இனங்களில் இப்படி சோரம் போகின்றவர்களுக்கு, முதுகில் பச்சை மட்டையால் நாலு சாத்து சாத்தி... உப்புக்கருவாடு போட்டிருப்பார்கள்.

இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்தது

4 days 23 hours ago
ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்த இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான 60/L.1/Rev.1 தீர்மானம் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நேற்று (6) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் வாக்கெடுப்பு இல்லாமல் இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இலங்கையில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் (OHCHR) அலுவலகத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் திருத்தப்பட்ட ஐ.நா. தீர்மானத்திற்கு 22 நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன. குறித்த புதுப்பிக்கப்பட்ட வரைவு கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டது. தீர்மானத்தின் முக்கிய அனுசரணையாளர்களாக பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா உள்ளிட்ட நாடுகள் காணப்படுகின்றன. இந்நிலையில் குறித்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதனை நிராகரிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் மனித உரிமைகள் உறுதி செய்யப்பட்டு வருவதுடன், இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. மிகக் குறுகிய காலத்திற்குள், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் குறித்து அரசாங்கம் தொடர்ச்சியான உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனவே, உள்நாட்டு செயல்முறைகள் மூலம் தனது சொந்த மக்களின் உரிமைகளை முன்னேற்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது. அத்துடன் இலங்கையில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் (OHCHR) அலுவலகத்திற்கு கடந்த 4 வருடங்களில் அதிகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனால் இலங்கை மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்பதை உயர் ஸ்தானிகரின் அறிக்கையிலும் தௌிவாகின்றது. இதன் அதிகாரத்தை நீடிப்பதால் இலங்கையில் உள்ள சமூகங்கள் பிளவுபடுவதற்கும் சுயநலன்களுக்குமான வாய்ப்பை உருவாக்கும். அதேபோன்று ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இலங்கை அரசாங்கம் குறித்த தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmgg5ycm300uqqplp5ic43eti

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

4 days 23 hours ago
2025ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு Published By: Digital Desk 3 07 Oct, 2025 | 10:40 AM 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்படுகின்றன. உலக அளவில் மருத்துவம், பௌதிகவியல், இரசாயனவியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் பணப்பரிசு அடங்கியது. இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு 2025-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/227086

பொலிஸாருக்கு எதிராக யாழ்.வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்

4 days 23 hours ago
செய்யாத குற்றத்திற்காகவா சட்டத்துறையைச் சார்ந்தவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்/... ,இல்லைத் தானே..அப்படி இருக்கையில் ஏன் இந்த வேலை நிறுத்தப் போராட்டம்.

ஐஸ் போதைப்பொருள் குழுக்களின் பின்னணியில் நாமல் ராஜபக்ச குழுவினர்.. பிரபு எம்பி வெளியிட்ட தகவல்

5 days 1 hour ago
நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுக்கள் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போன்ற போதைப்பழக்கங்களை ஏற்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "உலக குடியிருப்பாளர் தினத்தினை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட முதல் கட்டமாக 70வீடுகளும் இரண்டாம் கட்டமாக 28வீடுகளும் அமைக்கப்பதற்கான நிதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. முதல்கட்டதாக 70மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வீடுகளை வீட்டின் உரிமையாளர்களிடம் கையளித்திருக்கின்றோம். அதனைவிட இந்த நாட்டில் இளைஞர்கள் போதைபாவனை தொடர்பான விடயங்களில் உள்ளீர்க்கப்பட்டு அதன்மூலம் அவர்களின் வாழ்க்கை இல்லாமல் செய்யப்பட்டு வருகின்றது" என குறிப்பிட்டுள்ளார். Tamilwinஐஸ் போதைப்பொருள் குழுக்களின் பின்னணியில் நாமல் ராஜபக்ச கு...நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுக்கள் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போன்ற போதைப்பழக்கங்களை ஏற்படுத்துவதாகதேசிய மக்கள் சக்தி நாடாள...
Checked
Sun, 10/12/2025 - 12:00
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed