2 weeks ago
அண்ணை எனக்கும் ஒரு பிரச்சினையையுமில்லை. மேலே சொன்னது போல் Categorize மட்டுமே பண்ணுகிறேன். கருத்து சொல்பவனின் Credibility ஐ மட்டுமே அலசுகிறேன். Doubt இருந்தால் அண்ணன் கிட்டதானே இந்த தம்பி கேட்க முடியும்.
2 weeks ago
தந்தையுடன் செல்லம் விளையாடும் வயதை தொலைத்த ஒரு மகளின் ரணவலி… பதினாறு ஆண்டுகள் அருகில் இல்லாத அப்பாக்கு தவித்த குரல்… தமிழ் தேசியத்தின் பெயரால் நாலு குறுப்,நாலுபேர் வாழ்வுக்கு சிறைவாசம் இருக்கும் கைதியின் பிள்ளையின் கோவம்… தமிழர்கள் விழா என தென்னிந்திய கூத்தாடிகளை கூப்பிட செலவு செய்யும் பணத்தில் ஒருவீதம் இவர்களுக்கும் செலவு செய்யலாம்… எவரிடமும் பதில் இல்லாத கேள்விகள் 👌 https://www.facebook.com/share/v/1A1pbW9429/?mibextid=wwXIfr சிறுமியின் சிற்றுரையை சிறிதுநேரம் செவிமடுத்து கேழுங்கள்.
2 weeks ago
உங்களுக்கு என்னையா பிரச்சனை. நான் விஜை ரசிகர், அல்லது அவரின் அரசியல் ஆதரவாளர் என நினைத்துகொண்டு யாரும் இல்லாத இருட்டு அறையில் முரட்டு குத்து குத்துகிறீர்கள்😂. நான் இரெண்டுமே இல்லை. தமிழ் நாட்டு அரசியலில் நான் யாருக்கும் ஆதரவு இல்லை. ஒரே எதிரிதான். யார் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.
2 weeks ago
நோ டெபினெட்லி நோ நான் Categorize பண்ணுகிறேன் அம்புட்டுத்தே. வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே
2 weeks ago
அவரேதான். உங்களுக்கு நான் எழுதாததை வாசிக்கும் ஹலுசினேஷன் பிரச்சனை ஏதும் உள்ளதா? நான் அவர் உத்தமர் என்றோ, அவரின் கருத்துடன் உடன்படுகிறேன் என்றோ எங்கே எழுதினேன்? மேலே நான் பலரின் கருத்துக்களை இணைத்தது போலவே இதையும் இணைத்துள்ளேன்.
2 weeks ago
மாற்றுக்கருத்தில்லை தமன்னாவை பார்க்க பனையேறிய குஞ்சுகள் நமது Production . இன்னும் கடக்க வேண்டிய தூரம் உள்ளது.
2 weeks ago
கொஞ்சம் சோம்பேறித்தனம் என்று நீங்கள் சொல்கிறீர்களா. ஜயகோ. நீங்கள் சொல்லும் விடயங்களை வைத்துக் கணக்குப் போட்டால் சோம்பலுக்கும் உங்களுக்கும் காததூரம் என்பது என்முடிவு. விளையாட்டுகளோடேயே நின்று கொள்ளுவம் என்று பார்க்கிறேன். இங்கு எழுதப்படும் விடயங்களை, அளிக்கப்படும் எதிர்வினைகளைப் பார்த்துப் பார்த்து, தள்ளியே இருப்பதே மேல் என்று நினைக்கிறேன். வேறு இடங்களில் எழுதுவதற்கு உண்மையிலேயே பயமாக்கிடக்கு. ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி.
2 weeks ago
Published By: Vishnu 29 Sep, 2025 | 09:43 PM ஆர்.ராம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியானது தனது முதலாவது வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த முதலாவது ஆண்டானது, அரசாங்கத்தின் முயற்சிகள், எச்சரிக்கையான செயற்பாடுகள், முக்கிய பொருளாதார விடயங்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான வியூகங்கள் என்று பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியதொரு காலகட்டமாகும். இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அநுரகுமாரவின் முதலாவது ஆட்சிக்காலத்தினை நோக்கும்போது அரசியல் ரீதியாக அதன் அடைவுமட்டங்களை பார்ப்பதிலும், பொருளாதார ரீதியான அடைவுமட்டங்களில் கவனம் செலுத்துவது தான் பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால் அரசாங்கம், அரசியல் ரீதியான விடயங்களை விடவும், சமூக, பொருளாதார ரீதியான விடயங்களுக்கே தாங்கள் முக்கியத்துவம் அளிப்பாக ஆட்சியைப் பொறுப்பெடுத்த முதல்நாளில் இருந்தே தெரிவித்து வந்திருந்தது. பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, சுற்றுலா, ஏற்றுமதிகள், தொழிலாளர் பணப்பரிமாற்றங்கள் மற்றும் கையிருப்பு ஆகியவற்றுடன் சில காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. அந்தவகையில், முதலாவதாக, பணவீக்க விடயத்தினைப் பார்க்கின்றபோது, பணவீக்கம் என்பது சாதாரணமாக குடும்பம் மிக விரைவாக உணரக்கூடியதான விடயமாகும். அந்தவகையில், 2024ஆம் ஆண்டு நெருக்கடியான கலகட்டத்தில் ஜூலையில் 2.4சதவீதமாக இருந்தது. அக்காலப்பகுதியுடன் ஒப்பீடும்போது, உணவுப் பொருட்களின் விலைகள் 0.8சதவீதம் உயர்வடைந்துள்ளன. உணவு அல்லாத பொருட்களின் விலைகள் 0.4சதவீதம் உயர்வடைந்துள்ளன. மாதாந்த அடிப்படையில், பார்க்கின்றபோது 1.85 சதவீதம் குறைவாக காணப்படுகின்ற அதேசமயம் பணவீக்கம் 4.4 சதவீதத்திலிருந்து 3.6 சதவீதமாகக் குறைந்ததுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் பணவீக்கமான குறுகிய காலத்தில் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் பின்னர் இலக்கை நோக்கி படிப்படியாக நகரும் என்றும் எதிர்பார்த்தது. எனினும் நாட்டின் பணவீக்கத்தின் போக்கானது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மாறியிருக்கின்றது. ஒருவருட இடைவெளி காணப்படுகின்றபோதும் பணவீக்கம் 1.2 சதவீதமாக நேர்மறையாக மாறியுள்ளது. இதனால், ஜூலையில் இருந்த விலைகளில் 0.3 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, உணவுப்பொருட்களின் விலைகள் 2 சதவீதமாக உயர்ந்ததுள்ளதோடு உணவு அல்லாத உணவுப் பொருட்கள் அல்லாதவற்றின் விலைகள் 0.8 சதவீதமாக நேர்மறையாக மாறியது. மாதாமாதம் குறியீடு சற்று குறைந்தாலும், உணவு அல்லாத பொருட்கள் சிறிய உயர்வைச் சந்தித்தன. முக்கிய பணவீக்கம் 2 சதவீதமாக அதிகரித்தது. இதனடிப்படையில், 2024 இல் வீழ்ச்சியடைந்த விலைகள் 2025 இல் மீண்டும் மிதமான அளவில் உயரத் தொடங்கியுள்ளன. ஆகவே பணவீக்கத்தின் அடிப்படையில் குடும்பங்கள் மகிழ்ச்சியான மாற்றத்தினைக் காணவில்லை. அடுத்ததாக மொத்த உள்நாட்டு உற்பத்தியை எடுத்துக்கொண்டால், 2024இன் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.5சதவீத வளர்ச்சி கண்டது. விவசாயம் 3சதவீதமாகவும், தொழில் 10.8சதவீதமாகவும், மற்றும் சேவைகள் 2.6சதவீதமாகவும் வளர்ச்சியைக் கண்டன. கட்டுமானத் துறை, சுரங்கத் தொழில் மற்றும் பல்வேறு உற்பத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்ட வளர்ச்சியால் தொழில்துறை உயர்வுக்கு வந்தது. தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் வர்த்தகத்தின் மூலம் சேவைகள் துறைகளும் வளர்ந்தன. எனினும், 2025இன் இரண்டாம் காலாண்டில் மெத்த உள்நாட்டு உற்பத்தியானது, 4.9சதவீதமாகவே வளர்ந்துள்ளது, இது பொருளாதா மீட்சிக்கான விரிவாக்கத்தின் எட்டாவது தொடர்ச்சியான காலாண்டாகும். அதன்படி, விவசாயம் 2சதவீதம், தொழில்துறை 5.8சதவீதம், மற்றும் சேவைகள் 3.9சதவீதம் அதிகரித்தன. ஆடை, உலோகங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியம் உள்ளிட்ட பல துறைகளில் உற்பத்தி வளர்ந்தது. ஒட்டுமொத்தமாக, 2024 இன் பிற்பகுதியில் 5.5சதவீதமாக இருந்த இருந்த வளர்ச்சி 2025 இன் நடுப்பகுதியில் 4.9சதவீதமாக சற்றுக் குறைவாக வெளிப்படுத்தப்பட்டாலும் கட்டுமானம், உற்பத்தி மற்றும் விரிவடையும் சேவைகள் ஆகியவற்றால் தொடர்ந்து பலமாக இருந்து வருகின்றது. இவ்வாறான நிலையில் நாட்டின் வருமாணத்தில், சுற்றுலா, வேலைவாய்ப்பு ஆகியன அந்நிய செலாவணிக்கான முக்கியமான மூலமாக காணப்படுகின்ற நிலையில் இந்தாண்டில் அவற்றின் முன்னேற்றம் காத்திரமாக உள்ளது. 2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 1.3 மில்லியனாக இருந்தது. ஆனால் 2025 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை 1.5 மில்லியனை கடந்துவிட்டது. இத்துறை 2025ஆம் ஆண்டிற்கான இலக்கை மூன்று மில்லியன் பார்வையாளர்களாக நிர்ணயித்துள்ளமை முக்கிய விடயமாகும். விசேமாக, 2025 ஆகஸ்ட்டில் முதல் 13 நாட்களில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 17.1சதவீதமாக அதிகரித்திருந்தது. இவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதோடு அதைத் தொடர்ந்து இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகியவை அடுத்த இடத்தில் உள்ளன. அடுத்ததாக, 2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் ஆடைத்துறை, தேயிலை, இறப்பர் சார்ந்த பொருட்கள், தேங்காய் சார்ந்த பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவற்றின் உதவியுடன் மொத்த ஏற்றுமதி 10.6 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. 2024 ஆகஸ்ட்டில் ஆடைத்துறை இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 500 மில்லியன் டொலர்கள் என்ற வரம்பைக் கடந்துள்ளது. அதேபோன்று 2025 ஆகஸ்டில் ஏற்றுமதி வலிமையடைந்ததை அடுத்து பொருட்கள் மற்றும் சேவைகளை ஆகிய இரு துறைகளையும் இணைத்து மொத்த ஏற்றுமதி 1,607.58 மில்லியன் டொலர்களை கடந்துள்ளது. 2024 ஆகஸ்ட்டை விட 2.57சதவீதம் அதிகமாகும். அடுத்ததாக, பணப்பரிமாற்றங்கள் மற்றும் வெளிநாட்டு கையிருப்பு விடயத்தினைப் பார்கிக்கின்றபோது, ஜனவரி முதல் 2024 ஆகஸ்ட் வரையில் தொழிலாளர் பணப்பரிமாற்றங்கள் மொத்தம் 4,288 மில்லியன் டொலர்களாகும். இது 2023 இல் இதே காலகட்டத்தில் 3,863 மில்லியன் டொலர்களில் இருந்தை விடவும் அதிகரிப்பாகும். இவ்வாறான நிலையில் 2025 ஜூலை வரையிலான தரவுகள் தொழிலாளர் பணப்பரிமாற்றங்கள் ஆண்டு இன்றுவரை 4,435.2 மில்லியன் டொலர்களைக் காட்டுகின்றன. மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 2025 ஜூலையின் இறுதியில் 6.1 பில்லியன் டொலர்களாக இருந்தது. அந்தவகையில், புதிய ஆட்சி நிர்வாகத்தின் முதலாண்டைப் பற்றி கருத்துவெளியிட்டள்ள பெஸ்ட் கப்பிற்றலின் தலைமையாராய்ச்சி மற்றும் மூலோபாய அதிகாரியான திமந்த மாத்யூ, ஸ்திரத்தன்மை அடையப்பட்டிருந்தாலும், முக்கிய சவால்கள் இன்னும் உள்ளன என்று குறிப்பிட்டார். அத்துடன் சீர்திருத்தங்களின் நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சி ஓரளவுக்கு அடையப்பட்டுள்ளது. முடிக்கப்பட வேண்டிய மறுசீரமைப்பு செயன்முறை தொடரப்பட்டு, அதன் மூலம் ஒருவித ஸ்திரத்தன்மை அடையப்பட்டுள்ளது. கையிருப்பு இலக்குகள் போன்ற பெரும்பாலான பொருளாதார குறிகாட்டிகளும் அதிகநிலையான மட்டத்தில் நிலைபெற்றுள்ளன. என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், முன்னேற்றத்தைப் பொறுத்தவரை, வரவுசெலவுத் திட்டத்தின் செலவினப் பக்கத்தில் மூலதனச் செலவினத்தில் மந்தநிலை இருப்பதாகத் தெரிகிறது, என்றும் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து வெளியே வருவதால், வளர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு சில அரசாங்க ஆதரவு தேவையாக உள்ளது என்றும் கூறினார். ஆவரின் கூற்றுப்படி, மூலதனச் செலவினத்தின் மந்தநிலை வளர்ச்சியைப் பாதிக்கத் தொடங்குகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சற்றுக் குறைந்து வருகிறது, மேலும் இது வரவிருக்கும் காலாண்டுகளில் மிகவும் தெளிவாகத் தெரியக்கூடும். அதனை உரியவாறு கையாள வேண்டும் என்று அவர் எச்சரித்தார். சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, குறிப்பாக அரச நிறுவனங்களில் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் அவசியமாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார். இலங்கை மின்சார சபையில் சில சீர்திருத்தங்கள் நடந்துள்ளன, ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்பாட்டிற்கு ஏற்ப இன்னும் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. இதை வெற்றிகரமாக அடைவது, நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், பொருளாதாரம் மீண்டும் நெருக்கடிக்குள் செல்லாமல் இருக்கவும் பாதுகாப்புகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், அடுத்த ஆண்டுக்கான சவால், இந்த வேகத்தை மேலும் கட்டியெழுப்புவதாக உள்ளதோடு பணவீக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதுடன், பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திய அதிக வேலைவாய்ப்புகள், அதிக வருமானம் ஈட்டுவதற்கான துறைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் தான் தங்கியுள்ளது. ஆக மொத்தத்தில் அநுரவின் முதலாவது ஆண்டு பொருளாதார ரீதியாக முதலாவது படியை அடைந்திருந்தாலும் அது அழுத்தமாக பதிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. https://www.virakesari.lk/article/226442
2 weeks ago
வீதியில் நிக்கும் காலையும் கையையும் மறைத்து கொண்டு பிச்சை எடுக்கும் நடிப்பு பிச்சை காரன் போல் உள்ள மோடிக்கு ட்ரம் பல பக்கத்தாலும் கலைத்து கலைத்து சூட்டு குறி இழுக்குறார் பாப்பம் யார் வெல்லுகினம் என்று . இந்த கேட்டுக்குள் இந்திய யுடுப் கூட்டம்கள் அலப்பறை தாங்க முடியலை .
2 weeks ago
பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, கரூர் பரப்புரையை வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. 29 செப்டெம்பர் 2025, 09:50 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாகவும் அனுமதியின்றி ரோட் ஷோ நடத்தியதாகவும் தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் அறிவுரையையும் மீறி தவெக நிர்வாகிகள் அசாதாரண செயல்களில் ஈடுபட்டதாகவும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது. காவல்துறையும் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன? இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) தற்போது வெளியாகியுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்ய அனுமதி கேட்டு செப்டம்பர் 26-ஆம் தேதி தவெக சார்பில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதோடு பரப்புரை தினமான சனிக்கிழமை 500 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டதாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, தவெகவின் அனுமதி விண்ணப்பத்தில் 10,000 தொண்டர்கள் வருவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில்25,000-க்கும் மேற்பட்டோர் வந்ததாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. சனிக்கிழமை மதியம் 12:00 மணிக்கு விஜய் கரூர் வர இருப்பதாக காலை 9 மணிக்கு தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டது, இதனால் காலை 10 மணி முதலே கூட்டம் கூடியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. "இதனால் வேலுச்சாமிபுரம் மெயின்ரோடு, கோவை சாலை, முனியப்பன் கோவில் ஜங்சன், கோவை சாலை, திருக்காம்புலியூர், ரவுண்டானா, மதுரை சேலம் பைபாஸ் ரோடு ஆகிய இடங்களில் கூட்டம் அதிகளவில் வர தொடங்கினார்கள்." என எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெகவின் அனுமதி விண்ணப்பத்தில் 10,000 தொண்டர்கள் வருவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் 25,000-க்கும் மேற்பட்டோர் வந்ததாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. கரூரில் பரப்புரை மேற்கொள்ள 12 மணிக்கு அனுமதி வாங்கியிருந்த நிலையில் நாமக்கலில் இருந்து புறப்பட்ட விஜய் மாலை 04:45 மணிக்கு கரூர் மாவட்ட எல்லையை அடைந்ததாக எஃப்.ஐ.ஆர் கூறுகிறது. காவல்துறையால் விதிக்கப்பட்ட கட்டாய நிபந்தனைகளை வேண்டுமென்றே மீறி வரவேற்பு நடத்தியதாகவும் விஜயின் வாகனத்தை நிறுத்தி கால தாமதம் செய்ததாகவும் காவல்துறை தெரிவிக்கிறது. "வேண்டுமென்றே காலதாமதம் செய்து தெருவில் அனுமதி இல்லாமல் ரோட்ஷோ நடத்தி போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தினர்." என எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக விஜயின் வாகனம் மாலை 06.00 மணிக்கு முனியப்பன் கோவில் ஜங்சனில் ராங்ரூட்டில் (தவறான வழியில்) பயணித்ததாகவும் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, காவல்துறையால் விதிக்கப்பட்ட கட்டாய நிபந்தனைகளை வேண்டுமென்றே மீறியதாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "வேலுச்சாமிபுரம் ஜங்சனில் தொண்டர்களின் கூட்டத்திற்கு நடுவே வாகனத்தை நிறுத்தி வேண்டுமென்றே காலதாமதம் செய்தனர். அதே இடத்தில் அளவுக்கு அதிகமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்." என எஃப்.ஐ.ஆர் கூறுகிறது. "காவல்துறை அறிவுரையை தவெகவினர் புறக்கணித்தனர்" மாவட்ட செயலாளர் மதியழகன், என். ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பலரிடமும் "அசாதாரண சூழல்கள் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சு திணறல் கொடுங்காயம் உயிர் சேதம் ஏற்படும்" என எச்சரித்ததாக காவல்துறை எஃப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளது. "மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் எவரும் தொண்டர்களை சரிவர ஒழுங்குபடுத்தவில்லை. ரோட்டில் அருகிலுள்ள கடைகளுக்கு நிழல் தரவேண்டி அமைக்கப்பட்டிருந்த குறுகிய சரிவான தகர கொட்டகைகளிலும் மற்றும் அருகிலிருந்த மரங்களிலும் கட்சி தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர். தகர கொட்டகை உடைந்ததாலும் மரம் முறிந்ததாலும் அதில் உட்கார்ந்திருந்த தொண்டர்கள் கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்தனர். இதனால் பொதுமக்களில் பெரும்பாலோனோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது." என எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி ஏற்பட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் கரூருக்கு வருவதை நான்கு மணிநேரம் தாமதப்படுத்தியதாகவும் காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நீண்ட காலதாமதத்தால் காத்திருந்த மக்கள் வெயிலின் தாக்கத்தால் சோர்வடைந்து தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் உடல் நிலை சோர்வடைந்தனர் என்றும் காவல்துறை எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9dx4pw8w6lo
2 weeks ago
தன்பாலினத்தவர்களுக்குரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு சுற்றுலாத்துறை அதிகார சபை அறிவித்துள்ளமை முறையற்றது; நாமல் ராஜபக்ஷ 29 Sep, 2025 | 04:27 PM (இராஜதுரை ஹஷான்) சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தன்பாலினத்தவர்களுக்குரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு சுற்றுலாத்துறை அதிகார சபை அறிவித்துள்ளமை முறையற்றது. இந்த தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் திங்கட்கிழமை (29) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரச நிர்வாகத்தில் இடம்பெறும் முறைகேடுகள் அனைத்தையும் கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்துவதை ஆட்சியாளர்கள் பிரதான கொள்கையாக கொண்டுள்ளார்கள். ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நிறைவடைந்துள்ளது ஆகவே இன்றும் கடந்த காலங்களை விமர்சித்துக் கொண்டிக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக்கொள்கிறோம். போதைப்பொருள் குற்றச்சாட்டையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.கைப்பற்றப்படும் போதைப்பொருள் பற்றி மாத்திரமே பேசப்படுகிறது. ஆனால் சர்வதேச புலனாய்வு பிரிவினரால் முன்கூட்டியதாகவே தகவல் வழங்கப்பட்ட 2 கொள்கலன்களை விடுவித்தவர்கள் பற்றி ஏதும் குறிப்பிடப்படுவதில்லை. அதேபோல் 232 கொள்கலன்களை விடுவித்தது யார் என்பது தொடர்பில் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை. தமது பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் எம்மீது பழிசுமத்துகிறது. சுற்றுலாத்துறைறை மேம்படுத்துவதற்காக தன்பாலினத்தவர்களுக்குரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு சுற்றுலாத்துறை அதிகார சபை அறிவித்துள்ளமை முறையற்றது. இது இலங்கையின் கலாசாரத்துக்கு பொருத்தமற்றது. ஆகவே அரசாங்கம் இந்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். 16 வயது பிள்ளை சுய விருப்பத்தின் அடிப்படையில் உடலுறவில் ஈடுபட்டால் என்ன பிரச்சினை உள்ளது என்று அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். ஹன்சாட் பதிவிலும் இது உள்ளது. பிள்ளைகள் உள்ள பெற்றோர் எவ்வாறு இப்படி பேசுகிறார்கள் என்பதை அறிய முடியவில்லை என்றார். https://www.virakesari.lk/article/226412
2 weeks ago
தமிழ்நாட்டு சினிமா நடிகர்களின் மீதும், அரசியல் தலைவர்களின் மீதும், சாமியார்களின் மீதும் கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்களுக்கு இலங்கைத் தமிழர்களும் ஒரு காரணம் தானே, அக்னி. இன்றைய இணைந்த இணைய உலகில் எல்லாமுமே சேர்ந்து தானே தங்களை கடவுள்கள் என்று சிலரை நினைக்கவைக்கின்றது. தன் தலைவன்/நடிகன், தன் குரு போன்றோர் எதற்கும் அப்பாற்பட்டவர் என்று நினைக்கும் ஈழத் தமிழர்களும் இருக்கின்றார்கள் தானே. முதல் நாள் முதல் காட்சிக்கு போகும் ஈழத் தமிழர்களும் இருக்கின்றார்கள். ஈழத் தமிழர்கள் தீக்குளிப்பு போன்றவற்றில் ஈடுபடுவதில்லை. ஆனால் இந்த தனிநபர் மீதான மோகங்கள் பரவ நாங்களும், நாங்கள் காவிச் செல்லும் செய்திகளும் உடைந்தை ஆகின்றன அல்லவா.
2 weeks ago
29 Sep, 2025 | 04:26 PM (எம்.மனோசித்ரா) உலகில் நீண்ட வரலாற்றைக் கொண்ட தனியார் வங்கியொன்று இலங்கையில் அதன் அனைத்து செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளமை சாதாரண விடயமல்ல. இது இலங்கையில் வங்கி கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பில் எதிர்மறையான ஒரு போக்கினையே காண்பிக்கிறது. எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் தலையிட்டு இதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மறைக்கப்பட்ட நெருக்கடியொன்று உருவாகியுள்ளது. பொருளாதார நிபுணர்கள், நாட்டிலுள்ள முதலீட்டாளர்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் இன்னும் சில ஆண்டுகளில் இலங்கை செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன்களை மீள செலுத்தாவிட்டால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளன. எமக்கு கற்பனை உலகில் வாழ முடியாது. கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் உரிய நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுக்காததால் நாடு பாரிய நெருக்கடிகளை ஏற்பட்டு, இறுதியில் ஆட்சியும் கவிழ்ந்தது. இவ்வாண்டின் 5 ஆண்டு ஆட்சி காலத்திலேயே மீண்டும் வெளிநாட்டு கடன்களை மீள செலுத்த வேண்டிய காலம் ஆரம்பமாகிறது. வருடத்துக்கு சுமார் 5 பில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் நாட்;டில் ஒட்டுமொத்த அந்நிய செலாவணி இருப்பு 6 – 7 பில்லியன் டொலர் மாத்திரமே. வெளிநாட்டு கடன் மீள் செலுத்தலுடன் ஏனைய செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு நாட்;டின் அந்நிய செலாவணி இருப்பு ஆகக் குறைந்தது 12 பில்லியன் டொலராவது காணப்பட வேண்டும். ஆனால் பொருளாதார வளர்ச்சி வேகம் அதற்கு ஏற்றதாக இல்லை. எனவே அரசாங்கம் இதற்கு அரசியல் ரீதியான பதிலை வழங்காமல் பொருளாதார ரீதியிலான தீர்வினை முன்வைக்க வேண்டும். உலகில் நீண்ட வரலாற்றைக் கொண்ட தனியார் வங்கியொன்று இலங்கையில் அதன் அனைத்து செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளமை சாதாரண விடயமல்ல. இது இலங்கையில் வங்கி கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பில் எதிர்மறையான ஒரு போக்கினையே காண்பிக்கிறது. எனவே இந்த வங்கி நாட்டில் அதன் செயற்பாடுகளை நிறுத்துவரத தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/226417
2 weeks ago
இந்த தருணத்திலாவது சொல்ல வேண்டும் போல இருந்தது, கோஷான், அதனாலேயே சொன்னேன். எப்போதும் எல்லாமுமே அரசியல் என்றவுடன் வேதனையும், கோபமும் தான் வருகின்றது........... ஒரு நல்ல தலைவன் கூட இல்லாத இனமாகிப் போய் விட்டோமே............ நீங்கள் சொல்வது சரியே, ஜஸ்டின். சில ஊடகங்களை தவிர்ப்பது போலவே, வேறு சில ஊடகங்களின் பிரச்சாரப் போக்கில் நம்பிக்கை இழந்தது போலவே, நீங்கள் சொல்வதும் நடக்கும். ஆனாலும் பொய்ச் செய்திகள் பரவும் வேகம் மிக அதிகம். பொய்ச் செய்திகள் மிகவும் திட்டமிட்டே உருவாக்கப்படுபவை, அதி தீவிர உணர்வுகளை தூண்டுவதே அந்தச் செய்திகளின் நோக்கம். அதன் விளைவுகள் தற்கொலைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.
2 weeks ago
நிச்சயமாக இதற்கு நாங்கள் பொறுப்பல்ல இந்தியா இலங்கை இரண்டு வேறுபட்ட கொள்கை கொண்ட நாடுகள் என்று புரிந்து கொள்ள மறுப்பவர்களால் மட்டுமே இந்த முட்டாள்தனம் அரங்கேறுகிறது. இந்தியாவில் தமிழ் நாட்டில் நடந்த எந்த ஒரு அநீதிக்கும் இலங்கை தமிழர்கள் எவரும் தீக்குளிக்கவில்லை . ஆனால் இந்தியாவில் தங்களாால் கட்டுப்படுத்த முடியாத/ கையாள முடியாத ஒரு விடயத்திற்காக சடுதியாக உயிரை மாய்ப்பதென்பது ஒரு மன நோயாக இருக்குமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. First day first show பார்க்க முடியவில்லை என்பதால் நாக்கை அறுத்தவர் கூட இந்த பட்டியலில் தானே வரக்கூடும். உண்மையில் தமிழ்நாட்டில் இருக்கும் கடைக்கோடி மக்களுக்கு இந்த Counseling மிக அவசியம். இதற்கு நாம் எவ்வகையிலும் காரணமில்லை. சீமான் அவரது வியாபாரத்திற்காக ஈழ தமிழர்களை நம்மிடம் விற்கிறார் என்றால் ஈழத்தில பிடித்ததவன் கொள்வனவு செய்யட்டும். இந்தியாவில் பிடித்தவன் இந்தியாவில் கொள்வனவு செய்யட்டும். இதில் உயிரை மாய்க்கும் அவசியம் எங்கிருந்து வருகிறது.
2 weeks ago
ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிதி அமைச்சருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை Published By: Vishnu 29 Sep, 2025 | 08:18 PM ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜப்பான் நிதி அமைச்சர் கதோ கசுனொபுவிற்கும் (KATO Katsunobu) இடையில் திங்கட்கிழமை (29) பிற்பகல் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஜப்பான் உதவி/JICA ஒத்துழைப்பின் கீழ் தற்போது செயல்படுத்தப்படும் மற்றும் செயல்படுத்த எதிர்பார்க்கப்படும் புதிய திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர், பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/226440
2 weeks ago
மன்னாரில் காற்றாலை அமைத்தல், பொலிஸாரின் அராஜகத்தை எதிர்த்து அணி திரண்ட மக்கள்!; பொது முடக்கல் போராட்டம் 29 Sep, 2025 | 03:42 PM மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக, மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மன்னார் மாவட்டம் முழுவதும் இன்றைய தினம் பொது முடக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போராட்டக்குழு இணைந்து இந்த அழைப்பினை விடுத்திருந்தன. அதற்கமைய, இன்றைய தினம் காலை முதல் மன்னார் பஜார் பகுதி உள்ளடங்கலாக அனைத்து பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பல்வேறு கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை. இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடியிருந்தனர். காற்றாலை திட்டம் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டனப் பேரணி ஆரம்பமானது. மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை கோபுரங்களை அமைத்தல், மன்னாரில் கனிம மணல் அகழ்வு மற்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் அருட்தந்தையர்கள் உட்பட பொதுமக்கள் தாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்களை கண்டித்து இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் இருந்து போராட்டக்குழு ஒன்று மன்னாருக்குச் சென்றிருந்தது. மேலும் வடக்கில் உள்ள சில மாவட்டங்களில் இருந்தும் ஆதரவு தெரிவித்து, சமூக செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான இப்பேரணி பொது வைத்தியசாலை வீதியூடாக சென்று மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை அடைந்தது. பின்னர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடிய மக்கள் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது. பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மக்கள் ஒன்றுகூடிய இடத்துக்குச் சென்றார். இதன்போது போராட்டக்குழு சார்பாக ஜனாதிபதிக்கு அனுப்பவேண்டிய கடிதமொன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. கடிதத்தை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் உடனடியாக மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெறும் இடத்துக்குச் சென்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் தாக்கிய நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முருகல் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கலகம் அடக்கும் பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டனர். பின்னர் தொடர்ச்சியாக முருகல் நிலை ஏற்பட்ட நிலையில் மத தலைவர்கள் அவ்விடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி, பின், அவ்விடத்தில் இருந்து அனைவரையும் அகற்றினர். அதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் பஜார் பகுதியில் நின்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர். தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். இப்போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், ஆயிரக்கணக்கான மக்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226418
2 weeks ago
எப்படி இருக்கின்றீர்கள் அக்னி.................... தமிழ்நாட்டில் நீட் பரீட்சையில் தோற்று விட்டோம் என்று தொடர் தற்கொலைகள் நடந்த வன்ணமே இருக்கின்றது. வெவ்வேறு தலைவர்களுக்காக, காரணங்களுக்காக தீக்குளிப்புகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. இப்போது இன்னொரு வகை தற்கொலை.......... இந்தச் செய்திகளும், நாங்களும் இவை தொடர்வதற்கு பொறுப்பாகின்றோம் அல்லவா..........
2 weeks ago
இவர் ஒரு காலத்தில் சீமானுக்கு காவடி தூக்கிய கோமாளி அல்லவா..? இன்று அணிலுக்கு காவடி தூக்குவதால் மனிதருள் மாணிக்கமாகி விட்டாரா..? ஓ போண்டா மணி அந்தர் பல்ட்டி, அடுத்தது கஞ்சா சவுக்கும் அவனோட கோ ப்ரோடியுஸர் Red Flix பீலிக்ஸ்சும், வலை பேச்சு வாடகை வாய் பிஸ்மியும் தான் பாக்கி. ஒரே நைட் ஓவர் பில்டப் காலி. அதை விட ஒரு காலத்தில் சீமானுக்கு காவடி தூக்கிய கோமாளி மன்சூர் அலிகான் வாந்தியெல்லாம் அரங்கம் ஏறுது . அணில் அணில்தான் ஆமை ஆமை தான்
2 weeks ago
மனம்பேரியின் வாக்குமூலத்தில் வௌியான மேலும் பல தகவல்கள் மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியிடம் விசாரணை அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை செய்துள்ளதுடன், இதன் போது ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல உண்மைகள் தெரியவந்துள்ளன. ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு நாள் கழித்து அவை ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக சம்பத் மனம்பேரி விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அதுவரை தனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றும் சந்தேகநபர் கூறியுள்ளார். வட்ஸ்அப்பில் பெக்கோ சமனின் அறிவுறுத்தலின் பேரில் இரண்டு கொள்கலன்களும் மித்தேனிய பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது பெக்கோ சமன், "அண்ணா, இரண்டு கொள்கலன்கள் உள்ளன. அவற்றை விடுவிக்க வேண்டும். அதை செய்து தர முடியுமா? என்று சம்பத் மனம்பேரியிடம் கேட்டிருந்தார், அதற்கு அவர், "தம்பி பிரச்சினை ஏதும் வருமா?" என்று கேட்டிருந்தார். இதன்போது, பெக்கோ சமன், "அப்படி ஒன்றுமில்லை, அண்ணா. சில கற்கள் வருகின்றன. அவை துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன" அதை எடுத்துச் செல்லவே வேண்டும் என்று மனம்பேரி கூறியிருந்தார். அதன்படி, சம்பத் மனம்பேரி வேறொரு நபருடன் சென்று இரண்டு கொள்கலன்களையும் பொறுப்பேற்று மித்தேனிய பகுதிக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், அது குறித்த ஆவணங்களை பெக்கோ சமன் வட்ஸ்அப் மூலம் சம்பத் மனம்பேரிக்கு அனுப்பியிருந்தார். இதற்கு சம்பத் மனம்பேரியின் சகோதரரான பியல் மனம்பேரியும் உதவியுள்ளார். இருப்பினும், கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பிறகு, அச்சத்திற்கு உள்ளான சம்பத் மனம்பேரி, தனது சகோதரருடன் சேர்த்து அந்த இரசாயன தொகையை புதைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். பின்னர், அவர் மித்தேனிய பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாகக் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதற்கிடையில், பெக்கோ சமன் மற்றும் தரூன் என்பவர் மூலம் அறிமுகமான மன்னார் பகுதியில் கேரள கஞ்சா கடத்தல்காரரான டைகர் என்பவரின் உதவியுடன் அவர் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், குற்றக் கும்பல் உறுப்பினர்களுடனான தொடர்புகளை வெளிப்படுத்த சம்பத் மனம்பேரியின் கையடக்க தொலைபேசியை கண்டுபிடிக்க விசாரணை அதிகாரிகள் முயற்சித்த போதிலும், அவர்களால் இன்னும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாகவும் பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர் "சேர், நான் ஒரு முன்னாள் பொலிஸ் அதிகாரி. எனவே, மொபைல் போன் பிடிபட்டால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் வெள்ளவத்தையில் தண்டவாளத்தில் வைத்து அதனை அழித்தேன்," என்று மனம்பேரி அதற்கு பதிலளித்துள்ளார். பெக்கோ சமனுக்குச் சொந்தமான துப்பாக்கிகளைக் கொண்டு செல்வது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது, கேரள கஞ்சா கடத்தல் மற்றும் வியாபாரம், கொலை உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதாக சம்பத் மனம்பேரி ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைக் கொல்ல தம்மால் வழங்கப்பட்ட துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக சம்பத் மனம்பேரி ஒப்புக்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர்களுடன் அவர் நெருங்கிய உறவைப் பேணி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், அது குறித்தும் விசாரணைகள் நடந்து வருகின்றன. மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவின் பணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் அந்த பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் டி சில்வா ஆகியோரின் தலைமையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. https://adaderanatamil.lk/news/cmg4x410000qao29nkf6nkdnn
Checked
Mon, 10/13/2025 - 21:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed