2 weeks ago
ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிதி அமைச்சருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை Published By: Vishnu 29 Sep, 2025 | 08:18 PM ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜப்பான் நிதி அமைச்சர் கதோ கசுனொபுவிற்கும் (KATO Katsunobu) இடையில் திங்கட்கிழமை (29) பிற்பகல் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஜப்பான் உதவி/JICA ஒத்துழைப்பின் கீழ் தற்போது செயல்படுத்தப்படும் மற்றும் செயல்படுத்த எதிர்பார்க்கப்படும் புதிய திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர், பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/226440
2 weeks ago
மன்னாரில் காற்றாலை அமைத்தல், பொலிஸாரின் அராஜகத்தை எதிர்த்து அணி திரண்ட மக்கள்!; பொது முடக்கல் போராட்டம் 29 Sep, 2025 | 03:42 PM மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக, மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மன்னார் மாவட்டம் முழுவதும் இன்றைய தினம் பொது முடக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போராட்டக்குழு இணைந்து இந்த அழைப்பினை விடுத்திருந்தன. அதற்கமைய, இன்றைய தினம் காலை முதல் மன்னார் பஜார் பகுதி உள்ளடங்கலாக அனைத்து பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பல்வேறு கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை. இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடியிருந்தனர். காற்றாலை திட்டம் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டனப் பேரணி ஆரம்பமானது. மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை கோபுரங்களை அமைத்தல், மன்னாரில் கனிம மணல் அகழ்வு மற்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் அருட்தந்தையர்கள் உட்பட பொதுமக்கள் தாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்களை கண்டித்து இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் இருந்து போராட்டக்குழு ஒன்று மன்னாருக்குச் சென்றிருந்தது. மேலும் வடக்கில் உள்ள சில மாவட்டங்களில் இருந்தும் ஆதரவு தெரிவித்து, சமூக செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான இப்பேரணி பொது வைத்தியசாலை வீதியூடாக சென்று மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை அடைந்தது. பின்னர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடிய மக்கள் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது. பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மக்கள் ஒன்றுகூடிய இடத்துக்குச் சென்றார். இதன்போது போராட்டக்குழு சார்பாக ஜனாதிபதிக்கு அனுப்பவேண்டிய கடிதமொன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. கடிதத்தை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் உடனடியாக மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெறும் இடத்துக்குச் சென்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் தாக்கிய நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முருகல் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கலகம் அடக்கும் பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டனர். பின்னர் தொடர்ச்சியாக முருகல் நிலை ஏற்பட்ட நிலையில் மத தலைவர்கள் அவ்விடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி, பின், அவ்விடத்தில் இருந்து அனைவரையும் அகற்றினர். அதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் பஜார் பகுதியில் நின்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர். தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். இப்போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், ஆயிரக்கணக்கான மக்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226418
2 weeks ago
எப்படி இருக்கின்றீர்கள் அக்னி.................... தமிழ்நாட்டில் நீட் பரீட்சையில் தோற்று விட்டோம் என்று தொடர் தற்கொலைகள் நடந்த வன்ணமே இருக்கின்றது. வெவ்வேறு தலைவர்களுக்காக, காரணங்களுக்காக தீக்குளிப்புகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. இப்போது இன்னொரு வகை தற்கொலை.......... இந்தச் செய்திகளும், நாங்களும் இவை தொடர்வதற்கு பொறுப்பாகின்றோம் அல்லவா..........
2 weeks ago
இவர் ஒரு காலத்தில் சீமானுக்கு காவடி தூக்கிய கோமாளி அல்லவா..? இன்று அணிலுக்கு காவடி தூக்குவதால் மனிதருள் மாணிக்கமாகி விட்டாரா..? ஓ போண்டா மணி அந்தர் பல்ட்டி, அடுத்தது கஞ்சா சவுக்கும் அவனோட கோ ப்ரோடியுஸர் Red Flix பீலிக்ஸ்சும், வலை பேச்சு வாடகை வாய் பிஸ்மியும் தான் பாக்கி. ஒரே நைட் ஓவர் பில்டப் காலி. அதை விட ஒரு காலத்தில் சீமானுக்கு காவடி தூக்கிய கோமாளி மன்சூர் அலிகான் வாந்தியெல்லாம் அரங்கம் ஏறுது . அணில் அணில்தான் ஆமை ஆமை தான்
2 weeks ago
மனம்பேரியின் வாக்குமூலத்தில் வௌியான மேலும் பல தகவல்கள் மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியிடம் விசாரணை அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை செய்துள்ளதுடன், இதன் போது ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல உண்மைகள் தெரியவந்துள்ளன. ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு நாள் கழித்து அவை ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக சம்பத் மனம்பேரி விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அதுவரை தனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றும் சந்தேகநபர் கூறியுள்ளார். வட்ஸ்அப்பில் பெக்கோ சமனின் அறிவுறுத்தலின் பேரில் இரண்டு கொள்கலன்களும் மித்தேனிய பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது பெக்கோ சமன், "அண்ணா, இரண்டு கொள்கலன்கள் உள்ளன. அவற்றை விடுவிக்க வேண்டும். அதை செய்து தர முடியுமா? என்று சம்பத் மனம்பேரியிடம் கேட்டிருந்தார், அதற்கு அவர், "தம்பி பிரச்சினை ஏதும் வருமா?" என்று கேட்டிருந்தார். இதன்போது, பெக்கோ சமன், "அப்படி ஒன்றுமில்லை, அண்ணா. சில கற்கள் வருகின்றன. அவை துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன" அதை எடுத்துச் செல்லவே வேண்டும் என்று மனம்பேரி கூறியிருந்தார். அதன்படி, சம்பத் மனம்பேரி வேறொரு நபருடன் சென்று இரண்டு கொள்கலன்களையும் பொறுப்பேற்று மித்தேனிய பகுதிக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், அது குறித்த ஆவணங்களை பெக்கோ சமன் வட்ஸ்அப் மூலம் சம்பத் மனம்பேரிக்கு அனுப்பியிருந்தார். இதற்கு சம்பத் மனம்பேரியின் சகோதரரான பியல் மனம்பேரியும் உதவியுள்ளார். இருப்பினும், கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பிறகு, அச்சத்திற்கு உள்ளான சம்பத் மனம்பேரி, தனது சகோதரருடன் சேர்த்து அந்த இரசாயன தொகையை புதைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். பின்னர், அவர் மித்தேனிய பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாகக் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதற்கிடையில், பெக்கோ சமன் மற்றும் தரூன் என்பவர் மூலம் அறிமுகமான மன்னார் பகுதியில் கேரள கஞ்சா கடத்தல்காரரான டைகர் என்பவரின் உதவியுடன் அவர் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், குற்றக் கும்பல் உறுப்பினர்களுடனான தொடர்புகளை வெளிப்படுத்த சம்பத் மனம்பேரியின் கையடக்க தொலைபேசியை கண்டுபிடிக்க விசாரணை அதிகாரிகள் முயற்சித்த போதிலும், அவர்களால் இன்னும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாகவும் பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர் "சேர், நான் ஒரு முன்னாள் பொலிஸ் அதிகாரி. எனவே, மொபைல் போன் பிடிபட்டால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் வெள்ளவத்தையில் தண்டவாளத்தில் வைத்து அதனை அழித்தேன்," என்று மனம்பேரி அதற்கு பதிலளித்துள்ளார். பெக்கோ சமனுக்குச் சொந்தமான துப்பாக்கிகளைக் கொண்டு செல்வது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது, கேரள கஞ்சா கடத்தல் மற்றும் வியாபாரம், கொலை உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதாக சம்பத் மனம்பேரி ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைக் கொல்ல தம்மால் வழங்கப்பட்ட துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக சம்பத் மனம்பேரி ஒப்புக்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர்களுடன் அவர் நெருங்கிய உறவைப் பேணி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், அது குறித்தும் விசாரணைகள் நடந்து வருகின்றன. மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவின் பணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் அந்த பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் டி சில்வா ஆகியோரின் தலைமையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. https://adaderanatamil.lk/news/cmg4x410000qao29nkf6nkdnn
2 weeks ago
கள்ளசாராய மரணத்தில் கண் கலங்கலையா ஸ்டாலின் ? என எடப்பாடியும். அன்பில் மகேஷ் அழுகைக்கு ஆஸ்கார் கொடுக்கலாம் என அன்புமணியும் இறங்கி அடிக்கிறார்கள் திமுகவின் மாய்மாலத்தை. இதில் எனக்கு துளியும் ஏற்பில்லை. ஆனால் இந்த லைனை எடுத்து, அதிமுக+தாவெக+பாஜக+பாமக+தேமுதிக ஒரே அணியில் நின்றால் - திமுகவுக்கு டப்பா டான்ஸ் ஆடிவிடும். சபரி அண்ணனுக்கு கொடுத்த 100 கோடியும் விழலுக்கு இறைத்த நீர் ஆகிவிடும்.
2 weeks ago
ஜப்பான் பிரதமர் - ஜனாதிபதி அநுர முன்னிலையில் இரு முக்கிய திட்டங்கள் கைச்சாத்து 29 Sep, 2025 | 05:10 PM (இணையத்தள செய்திப் பிரிவு) "அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி (OSA) திட்டம்" மற்றும் "பால் பண்ணைத் துறையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான திட்டம்" குறித்த குறிப்புகள் பரிமாற்றத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதர் அதிமேதகு அகியோ இசொமதா மற்றும் இலங்கை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹெரத் ஆகியோர் ஜப்பான் பிரதமர் அதிமேதகு ஷிகெரு இஷிபா மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவர் அதிமேதகு அனுர குமார திசாநாயக்க ஆகியோரின் முன்னிலையில் செப்டம்பர் 29 ஆம் திகதி கையெழுத்திட்டனர். இலங்கைக்கான ஜப்பானின் முதல் OSA, பாதுகாப்பில் இருதரப்பு ஒத்துழைப்பு ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்பதைக் குறிக்கிறது. 2023 இல் தொடங்கப்பட்ட OSA, ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளின் பாதுகாப்பு மற்றும் தடுப்பு திறன்களை வலுப்படுத்த ஜப்பானின் புதிய மானிய உதவி ஒத்துழைப்பு கட்டமைப்பாகும். வளரும் நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கான "அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவி (ODA)"-யிலிருந்து வேறுபட்டு, ஆயுதப் படைகள் ஒரு பெறுநராக இருக்க OSA உதவுகிறது. இந்த OSA திட்டத்தின் கீழ், 500 மில்லியன் யென் (அண்ணளவாக 1 பில்லியன் ரூபாய்) தொகையில், அவதானிப்பு, கண்காணிப்பு மற்றும் பேரிடர் நிவாரணத்திற்காக இரண்டு வகையான அதிநவீன ஜப்பானிய தயாரிக்கப்பட்ட ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV-கள்) இலங்கை கடற்படைக்கு வழங்கப்படும். இந்த திட்டம் இலங்கையின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பால் பண்ணைத் துறையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான மானிய உதவித் திட்டத்தின் கீழ், 463 மில்லியன் யென் (தோராயமாக 945 மில்லியன் ரூபாய்) தொகையில், நிகழ்நேர பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (PCR) உபகரணங்கள், விந்து இயக்கம் பகுப்பாய்வு அமைப்பு மற்றும் நான்கு சக்கர டிராக்டர் போன்ற உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவை மத்திய மாகாணம், வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், வட மத்திய மாகாணம் மற்றும் வடமேற்கு மாகாணத்தில் உள்ள கால்நடை வசதிகளுக்கு வழங்கப்படும். இந்த திட்டம் பால் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதையும், அதன் மூலம் இலங்கையில் உள்ள சிறு அளவிலான பால் விவசாயிகளின் மேம்பட்ட வாழ்வாதாரத்தின் மூலம் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மைல்கல் திட்டங்கள் இலங்கையை ஆதரிப்பதற்கான ஜப்பானின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வளர்ப்பதற்கும் பங்களிக்கின்றன. https://www.virakesari.lk/article/226416
2 weeks ago
2 weeks ago
https://x.com/pttvnewsx/status/1972570347741544705?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A https://x.com/idumbaikarthi/status/1972613192007446637?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A
2 weeks ago
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அசம்பாவிதம் நடந்ததற்கு சதிச் செயல் காரணமா என்ற விவாதம் சமூக ஊடகங்களில் நடக்கிறது. இந்த விவகாரத்தை தொடக்கத்திலிருந்து பின்பற்றுபவன் என்ற வகையிலும், விகடன் பத்திரிகையாளர் புண்ணியமூர்த்தி களத்திலிருந்து கொடுத்த Ground Report அடிப்படையிலும், பல்வேறு சந்தேகங்களுக்கு விடை தேடுவதே இந்த கட்டுரை. 1. விஜய் தாமதமாக வந்தது - கரூரில் 12 மணிக்கு விஜய் பேசியிருக்க வேண்டும். ஆனால் விஜய் சென்னையில் இருந்து தாமதமாக கிளம்பி கரூரில் இரவு 7.30 மணிக்கு பேசுகிறார். கரூரில் ஜவுளி நிறுவனங்களில் சனிக்கிழமை சம்பள நாள். வேலை முடிந்து வந்தவர்கள், பள்ளி சிறப்பு வகுப்பு முடிந்து வந்த மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என பலதரப்பினர் மாலை கூட்டத்துக்கு வந்திருக்கின்றனர். 12 மணிக்கு அல்லது அதிகபட்சம் 3-4 மணிக்குள் விஜய் பேசியிருந்தால் கூட்டத்தில் கணிசமான அளவு இருந்திருக்காது. விஜய்யின் வருகை பிரச்னையின் தொடக்கமாக வருகிறது. 2. விஜய் வருகைக்காக 3 மணியிலிருந்து ரசிகர்கள் வரத் தொடங்குகின்றனர். 5 மணியளவில் வேலுசாமிபுரம் சாலை நிரம்பி வழிகிறது. மதியத்திலிருந்து காத்திருந்தவர்கள், சோர்வாகத் தொடங்கினர். வெளியேற நினைத்த பெண்களால் வெளியேற முடியவில்லை. விஜய் வருகிறார் என புதிய கூட்டம் உள்ளே வரத் தொடங்கியது. விஜய் நெடுஞ்சாலையில் இருந்து வேலுசாமிபுரம் பயிண்ட்டுக்கு வர 2 மணி நேரம் ஆகிறது. 7 மணியளவில் தண்ணீர் இன்றி மக்கள் மயக்கம் போடத் தொடங்குகின்றனர். அந்த நேரத்தில் விஜய்யின் வேன் உள்ளே வருகிறது. வேனுக்கு வழிவிட கூட்டம் பின்னே செல்கிறது. ஆனால் பின்னால் செல்ல இடமில்லை. அப்போதுதான் அசம்பாவிதம் ஏற்படுகிறது. இரு பக்கங்களிலும் பேனர் வைத்திருந்ததால் அதுவும் இடத்தை அடைத்துவிடுகிறது. அப்போதே நெரிசலில் மிதிபடத் தொடங்கிவிட்டனர். இதெல்லாம் நடக்கும்போது விஜய் வேனைவிட்டு வெளியே வரவே இல்லை. அவர் வெளியில் வராததும் கூட்டத்தில் ஆர்வமிகுதியைக் கூட்டுகிறது. 3. விஜய் வந்துபேசுவதற்கு முன்பே ஆம்புலன்ஸ்கள் அலர்ட் செய்யப்பட்டுவிட்டன. அவர் பேச ஆரம்பித்தவுடன் 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன. அதில் ஒன்று தவெக ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ். தவெக கொடியும் அதில் இருந்தது. அந்த ஆம்புலன்ஸ் தவெகவினருக்கு தெரியாமல் வந்திருக்க வாய்ப்பில்லை. விஜய் பேசத் தொடங்குவதற்கு முன்பே அங்கே அசம்பாவிதம் நடந்திருக்கிறது என தவெக நிர்வாகிகளுக்கு நிச்சயம் தெரிய வந்திருக்கும். 4. விஜய் பேசும்போது தண்ணீர் கேட்பவர்களுக்கு, பாட்டிலை எடுத்து வீசுவார். மறுபுறம் தண்ணீர் கேட்டவர்கள் பக்கமிருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அதைப் பார்த்தால் அங்கு ஏற்கெனவே சிலர் கீழே மயங்கி விழுந்திருப்பது தெரிகிறது. இருட்டாக இருந்ததாலும், கூட்டம் மறைத்திருந்ததாலும் அது விஜய்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விஜய் தொடர்ந்து பேசுகிறார். 5. அங்கு நிலைமை சரியில்லை என்பது ஒரு கட்டத்தில் விஜய்க்கு தெரிகிறது. ஆதவ் அர்ஜுனிடம் தொடர்ந்து பேசலாமா என விஜய் கேட்கிறார். டாக்டர் பிரபுவை வரச் சொல்கிறார் விஜய். சிறிது நேரத்தில் பேச்சு அவசர அவசரமாக முடிகிறது. 6. பவர்கட் ஆனதா? - களத்தில் விகடன் பத்திரிகையாளர் புண்ணியமூர்த்தி நேரடி சாட்சிகளிடம் நடந்ததை கேட்டு பதிவு செய்திருக்கிறார். அதில், அப்பகுதியில் குடியிருப்போர், பவர் கட் ஆகவில்லை என்கின்றனர். தவெக தரப்பில் மின்விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. அதற்கு மின்சாரம் ஜெனரேட்டரிலிருந்து வந்தது. அந்த ஜெனரேட்டரை சுற்றி தகரம் வைத்து தடுப்பு ஏற்படுத்தியிருந்தார்கள். தள்ளு முள்ளு ஏற்பட்டதில், தகரத்தை தகர்த்து ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குள் பலர் சென்றனர். அப்போதுதான், ஜெனரேட்டரிலிருந்து வந்த மின்சாரம் கட் ஆகிறது. நெரிசலோடு சேர்ந்து, மின் தடையும் ஏற்பட்டதால், இருட்டில் பதற்றம் அதிகரித்து பலர் மிதிபட்டிருக்கின்றனர். யார் சிக்கியிருக்கிறார்கள் என்பது கூட தெரியாத அளவுக்கு ஏறி மிதித்துச் சென்றிருக்கிறார்கள். விஜய் வருவதற்கு முன்பு மரத்தில் சிலர் ஏறினார்கள் என்பதால் சிறிது நேரம் பவர் கட் செய்தோம் என்கிறார் மின்வாரிய தலைமை பொறியாளர். அவர்களை இறங்கச் செய்த பிறகு, மின் இணைப்பை கொடுத்தோம் என்றும் அவர் சொல்கிறார். அப்படியே பவர் கட் செய்திருந்தாலும், அதில் திட்டமிட்ட சதியில்லை. ஏனெனில், தவெக மாவட்டச் செயலாளர், விஜய் வரும்போது பாதுகாப்பு கருதி பவர் கட் செய்ய வேண்டும் என 26-ம் தேதி மனு கொடுத்துள்ளார். ஆனால் அதை கரூர் மின்வாரியம் நிராகரித்திருக்கிறது. 7. இடம்: தவெக கேட்ட லைட்ஹவுஸ் ரவுண்டானா சாலை, வேலுசாமிபுரத்தைவிட பெரிய சாலை இல்லை. கிட்டத்தட்ட ஒரே அளவுதான். ஆனால், லைட்ஹவுஸ் பகுதியில் 5 சாலைகள் பிரிகின்றன. வேலுசாமிபுரத்தில் ஒரே சாலை, சில குட்டி சந்துகள் மட்டுமே உள்ளன. அந்த சந்துகளிலும் பைக்குகளை நிறுத்தியிருந்ததால் இடைஞ்சலாக இருந்திருக்கிறது. வெளியேற முயன்றவர்கள் மீது பைக் சாய்ந்ததில் பலர் காயமடைந்திருக்கின்றனர். இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், ரவுண்டானாவில் இடம் கொடுத்திருந்தால், மக்கள் வெளியேற வழி இருந்திருக்கும். இதையும் கள ஆய்வில் உறுதிபடுத்தியிருக்கிறார் பத்திரிகையாளர் புண்ணிய மூர்த்தி. ஆனால், ஏடிஜிபி தேவாசிர்வாதம், ரவுண்டானா பகுதியில் பெட்ரோல் பங்க், அமராவதி ஆற்றுப் பாலம் இருப்பதால் ரிஸ்க் ஏரியா என்பதால்தான் அனுமதி கொடுக்கவில்லை என்கிறார். அவர் சொல்வதில் ஒரு அடிப்படை காரணம் இருந்தாலும், வேலுசாமிபுரத்திலும் டிரான்ஸ்பார்மர் இருக்கிறது, சாலையில் மக்கள் வெளியேற கிளை சாலைகள் இல்லை. அதை ஏன் போலீஸ் ரிஸ்க்காக கருதவில்லை? இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியின் கூட்டம் வேலுசாமிபுரத்தில் சுமுகமாக முடிந்ததாக ஏடிஜிபி சொல்கிறார். உண்மைதான். ஆனால் அந்த கூட்டம் வேறு, விஜய்க்கு வந்த கூட்டம் வேறு. அதை மனதில் வைத்துதானே ரிஸ்க்கை கணித்திருக்க வேண்டும்? இடத் தேர்வு குறித்து போலீஸ் இன்னும் தெளிவான விளக்கத்தை கொடுக்க வேண்டும். 8. பாதுகாப்பு குறைபாடு - போலீஸே இல்லை என்கிறார்கள் அங்கிருந்த மக்கள். 500 பேரை காவல் பணியில் ஈடுபடுத்தினோம் என்கிறார், ஏடிஜிபி. விஜய்யும் போலீஸுக்கு நன்றி சொல்லியே பேச்சை தொடங்குகிறார். போலீஸில் ஒரு சிலர் சொல்லும் கருத்தையும் கவனிக்க வேண்டும். கூட்டத்துக்குள் 500 போலீஸை நிறுத்தினால், அதுவே பெரிய கூட்டமாக இருக்கும். இன்னும் சிக்கல் அதிகமாகியிருக்கும். அப்படியே போலீஸ் இருந்திருந்தாலும், இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்தியிருக்க முடியாது. கட்டுப்படுத்த முயற்சித்திருந்தால், அது வன்முறையாகவும் மாறி, இன்னும் பெரிய சிக்கல் ஆகியிருக்கும் வாய்ப்பும் இருக்கிறது. 9. போலீஸ் பாரபட்சமாக செயல்படுவதாகவும், தவெகவுக்கு மட்டும் அதிக கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அதில் உண்மை இருக்கலாம். ஆனால், களத்தில் என்ன நடக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். விஜய் நாமக்கல்லிலிருந்து வரும்போது, அவரது வேனை விரட்டி வந்த பல இளைஞர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். பலர் டிரான்ஸ்பார்மரில், மின் கம்பத்தில் ஆபத்தான வகையில் ஏறுகின்றனர். இதையெல்லாம், கட்டுப்படுத்த எவ்வளவுதான் போலீஸ் பாதுகாப்பு கொடுத்தாலும், கட்சியின் பங்களிப்பும் தேவை. Mob Mentality என வரும்போது எந்த கட்சியினராக இருந்தாலும் துள்ளத்தான் செய்வார்கள். போலீஸை வைத்து மட்டும் அதை அடக்கிவிட முடியாது. தன் தலைவனை பாதுகாப்பதில் முதலில் கட்சித் தொண்டன், பிறகுதான் போலீஸ் என்றே அனைத்து கட்சிகளும் இயங்கும். ஆனால் தவெகவில் மட்டும் தொடக்கத்திலிருந்தே, கட்சியினர் அந்த ரோலை சரியாக செய்யவில்லை. கட்சியினரின் இடத்தை பவுன்சர்கள் எடுத்துக் கொண்டனர். போலீஸ் சொல்வதை கேட்காதவர்கள் கூட கட்சி நிர்வாகிகளோ, விஜய்யோ சொன்னால் கேட்பார்கள். அப்படி சொல்லியும் கேட்கவில்லை என்றால், கட்சி கட்டுபாட்டோடு இல்லை என்று அர்த்தம். கட்சித் தலைமைக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளியும், இந்த கடுப்பாடற்ற தன்மைக்கு ஒரு காரணம். 10. உதவிக்கு சென்ற ஆம்புலன்ஸ்களையும் தடுத்து தவெகவினர் அடித்து நொறுக்கியிருக்கின்றனர். அப்படிச் செய்தவர்களை போலீஸார் தடுத்து அடித்து விரட்டியிருக்கிறார்கள். இங்கு வன்முறையாளர்கள் யார்? 11. செருப்பு வீச்சு நடந்திருக்கிறது. உண்மைதான். ஆனால் கல்வீச்சு, கும்பல் புகுந்ததாக எந்த வலுவான ஆதாரமும் கிடைக்கவில்லை. மாவட்ட செய்தியாளர்களுக்கும் அப்படியொரு ஆதாரம் கிடைக்கவில்லை. இவ்வளவு பேர் இருக்கும் கூட்டத்தில், யாராவது சதி செய்ய நினைத்தால் நிச்சயம் ஒரு வீடியோவிலாவது அது பதிவாகியிருக்கும். இப்போதுவரை ஒரு வீடியோவும் அப்படி வெளியாகவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், கரூரில் நடந்த சம்பவத்துக்கு விஜய், தவெக, போலீஸ், அரசு என அனைத்து தரப்பினர் செயல்பாட்டிலும் குறைபாடு இருப்பது தெளிவாகிறது. இதற்கு பொறுப்பேற்று சரியான விளக்கத்தை கொடுக்க வேண்டிய பொறுப்பு விஜய்க்கும், போலீஸுக்கும், அரசுக்கும் நிச்சயம் இருக்கிறது. பொறுப்பை உணர்ந்து அவர்கள் பதிலளிக்க வேண்டும். கரூர்: 41 பேரை பலி வாங்கிய கூட்ட நெரிசல் - தவெக-வா காவல்துறையா? யார் பொறுப்பு? | what is the reason behind stampede that leads to 41 deaths in karur - Vikatan
2 weeks ago
இலங்கையில் LGBTQ சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு அனுமதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சித்த கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அத்தகைய நடவடிக்கை நாட்டின் கலாச்சாரத்தை அழித்துவிடும் என்றார். "தங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஆசைகளை நிறைவேற்ற இங்கு வரும் வெளிநாட்டினரால் இலங்கையின் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பலியாக அனுமதிக்கக்கூடாது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதை அறிந்திருக்கிறாரா என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் அவர் பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொள்வார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று கர்தினால் ரஞ்சித் ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டில் கூறினார். "ஓரினச்சேர்க்கை மனப்பான்மையுடன் பிறந்தவர்களை நாம் துன்புறுத்தக்கூடாது. அவர்களை கருணையுடன் நடத்த வேண்டும். இருப்பினும், அத்தகைய மனப்பான்மையுடன் பிறக்காதவர்களை மாற்றும்படி கட்டாயப்படுத்தக்கூடாது," என்று அவர் மேலும் கூறினார். Tamilmirror Online || ”LGBTQ சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டாம்”
2 weeks ago
பத்தையாக கிடந்த காணியை… துப்பரவு செய்து தந்த அதிரடிப் படையினருக்கு கோடானு கோடி நன்றி. 😂 - இங்ஙனம், காணி உரிமையாளர். - 🤣
2 weeks ago
வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக பதவியேற்கவுள்ள சிவாஜி வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் ஒருவர் பதவி விலகியுள்ள நிலையில். எம்.கே.சிவாஜிலிங்கம் விரைவில் உறுப்பினராக பதவி ஏற்க உள்ளார் என்று தெரியவருகின்றது. 16 உறுப்பினர்களைக் கொண்ட வல்வெட்டித்துறை நகரசபைக்கு கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார ரீதியாகப் போட்டியிட்ட ஏழு உறுப்பினர்கள் வெற்றி பெற்று தமிழ்த்தேசியப் பேரவை ஆட்சி அமைத்துள்ளது. தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் தெரிவு செய்யப்பட்ட அப்புலிங்கம் உதயசூரியன் கடந்த மாதம் 27ஆம் திகதி தனது பதவி விலகல் தொடர்பில் தேர்தல் திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்தப் பதவி விலகல் தேர்தல் திணைக்களத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அந்த வெற்றிடத்துக்கு தமிழ்த் தேசியக்கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணம் கடந்த வாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதும் விரைவில் எம்.கே.சிவாஜிலிங்கம் நகரசபை உறுப்பினராக பதவி ஏற்பார் என்றும் தெரியவருகின்றது. வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக பதவியேற்கவுள்ள சிவாஜி
2 weeks ago
கட்டுப்பாட்டை இழந்த மோ.சைக்கிள்; 5 வயது சிறுமி பரிதாப மரணம் கட்டுப்பாட்டை இழந்த மோ.சைக்கிள்; 5 வயது சிறுமி பரிதாப மரணம் சங்குப்பிட்டிப் பாலமருகே சோகம் சங்குப்பிட்டிப் பாலமருகே கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 5 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார்சைக்கிளைச் செலுத்தி வந்த இளைஞர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்றுக் காலை நடந்துள்ளது. சுடரொளியன் தனுஷ்கா (வயது - 5) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். மந்துவிலைச் சேர்ந்த குடும்பம் ஒன்று பூநகரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு விட்டுத் திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது. ஒரு மோட்டார்சைக்கிளில் உயிரிழந்த சிறுமியின் தாய், சித்தி மற்றும் இளைஞர் என நால்வர் பயணித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. மோட்டார் சைக்கிள் சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகே மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கடும் காற்று மற்றும் கவனக்குறைவால் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும், சிறுமி தலைக்கவசம் அணியவில்லை என்றும் கூறப்படுகின்றது. விபத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்ல அந்தவழியால் சென்ற எவரும் உதவவில்லை என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தற்செயலாக அந்த வழியால் வந்த யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்ததுடன், அம்புலன்ஸ்களுக்கு அறிவித்துள்ளார். வாகனம் ஒன்றில் சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருந்த நிலையில், சாவகச்சேரியில் இருந்து அம்புலன்ஸ் வந்ததை அடுத்து சிறுமி அம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அதேவேளை, பூநகரியில் இருந்து வந்த அம்புலன்ஸ் மூலம் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். சிறுமியின் உடல் சாவகச்சேரி மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. விபத்துச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த மோ.சைக்கிள்; 5 வயது சிறுமி பரிதாப மரணம்
2 weeks ago
29 Sep, 2025 | 11:01 AM நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்கள் வேலணைக்குச் சென்றே தமக்கான எரிபொருட்களை பெற்றுக்கொள்கின்றனர். நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவானுக்கு சுமார் ஒரு மணிநேரம் படகில் கடல் பயணம் மேற்கொண்டு, குறிகாட்டுவானில் இருந்து, வேலணை பகுதிக்கு தரை வழியாக சென்று எரிபொருட்களை கொள்வனவு செய்து, மீண்டும் நெடுந்தீவுக்கு கொண்டுசெல்லவேண்டிய நிலையிலேயே அப்பகுதி மக்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில், நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக அங்கு வாழும் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், தற்போது எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு போன்றே ஏனைய கடல் கடந்த தீவுகளுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என தீவுகளில் வசிக்கும் மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் ; ஒக்.4இல் ஒப்பந்தம்! - இளங்குமரன் | Virakesari.lk
2 weeks ago
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணியொன்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடி, விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை (29) நீதிமன்ற உத்தரவுக்கமைய அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இக்காணியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்துள்ளது. அந்த காலப்பகுதியில் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து, மறைத்து வைத்துள்ளதை அகழ்ந்து எடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற உத்தரவு பெற்று மண் அகழ்வும் இயந்திரமான பக்கோ இயந்திரம் மூலம் அகழ்வுப் பணியை இன்று முன்னெடுத்தனர். இதன்போது வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கல்லடி விசேட அதிரடிப்படை பொறுப்பாளர், கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வுப் பணியை இன்று காலை 9 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை மேற்கொண்டபோதும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதையடுத்து, அங்கிருந்து விசேட அதிரடிப்படையினர் வெளியேறினர். இதேவேளை குறித்த பகுதி கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளதுடன் அங்கு அக்காலகட்டத்தில் புலிகளின் முகாம் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், தங்கத்தைத் தேடி மட்டக்களப்பு காயங்குடா காணியில் விசேட அதிரடிப்படையினர் அகழ்வு நடவடிக்கை! | Virakesari.lk
2 weeks ago
சங்கு கல் மண்டபம் ......மக்களை எச்சரிக்கும் மண்டபம் . ......! 🤡 Tamil Creativity 🟰 Tamil Comedy Memes & video’ s 🤡 · Cini Mini ·otrSposdnel671u6aa3h34m45hh8ta5l40269tfm73103 011tltii40culh · வெள்ளக்காரன் வந்து தான் அறிவியலை கற்று கொடுத்தான்ணு சொல்லும் தற்குறிகளின் கவனத்திற்கு ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..? ஏதோ அழகுக்காக தமிழன் கட்டிவைத்தான் என நினைக்கத் தோன்றும்.. ஆனால்... நவீன வெள்ள அபாய எச்சரிக்கை இருக்கும் முன்னரே, தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம். இந்த மண்டபம் எதற்கு என யோசித்தது உண்டா..? தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது. அதன் உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் சத்தத்தால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்பட்டு சத்தம் மக்களை அடையும்.... இதனை வெள்ள அபாய அறிவிப்பாக மக்கள் அறிந்து, மக்கள் மேடான இடங்களுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வர். வெள்ளம் மிக அதிகமானால் மண்டபத்தின் சங்கு அமைப்பினை மூழ்க செய்யும்... பின்பு வெள்ளம் வடிகின்ற போது, சங்கு சத்தத்தினை வெள்ளத்தால் ஏற்படுகின்ற காற்று உண்டாக்கும். சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி என மக்கள் அறிந்து, பின்னர் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.. பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன. ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை, ஏனெனில் அந்த காலத்தில் பராமரிப்பு இருந்தது.. இந்த காலத்தில் இதன் பயனே பலருக்கு தெரியாது, ஏதோ அழகுக்காக தமிழன் கட்டிவைத்தான் என பலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால் உண்மையில் இது அறிவியலுக்காக..பயனுள்ள தகவல்கள் ✍️"
2 weeks ago
2015ஆம் ஆண்டு தவிர 2014 முதல் 2022ஆம் ஆண்டு வரையில் இலங்கை மின்சார சபையின் நஷ்டம் ரூ.594,368 மில்லியன் என்பது அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) தெரியவந்தது. இலங்கை மின்சார சபையின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர அதன் தலைவர் தலைமையில் புதன்கிழமை (24) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தெரியவந்தது. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நஷ்டத்திற்குப் பல காரணங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய கோப் குழு, நிறுவனத்தில் ஊழியர்கள் இருக்கும்போது சபையின் சில செயற்பாடுகள் வெளித்தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது. இதுபோன்ற தொடர்ச்சியான நஷ்டங்கள் காரணமாக 2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் மின்சாரக் கட்டணங்கள் அதிகளவில் அதிகரித்ததாகவும், இதன் காரணமாக மக்கள் மிகவும் சிரமங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இருப்பினும், 2023க்குப் பின்னர் மின்சார சபை இலாபம் ஈட்டும் நிலைக்குச் சென்றது என்பதும் இங்கு தெரியவந்தது. கடந்த காலத்தில் சுமார் 18 மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டதற்கு கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணம் அல்ல என்றும், மாறாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் செலுத்தவேண்டிய கடன் செலுத்த முடியாமையே காரணம் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 2014ஆம் ஆண்டு முதல் மின்சாரக் கட்டணம் போதுமானளவு திருத்தத்திற்கு உள்ளாகாமையால், திடீரென மின் கட்டணத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது என்றும் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் 24 மணிநேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். எல்.ரி.எல் நிறுவனத்தின் பங்குகள் பிரிக்கப்பட்ட விதம் தெளிவாக இல்லை என்றும், இந்த நிறுவனத்தை மறுசீரமைக்கும்போது இது மேலும் சிக்கலாக அமையலாம் என்றும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். எல்.ரி.எல். நிறுவனம் (லங்கா ட்ரான்ஃபோமர் நிறுவனம்), வெஸ்ட் கோஸ்ட் நிறுவனம் மற்றும் ஈசொட் (Esot) நிறுவனம் ஆகிய நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் செயல்பாடு குறித்து சிக்கல்கள் இருப்பதாக தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்த நிறுவனத்தின் பங்குப் பிரிப்புக்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் மிகவும் தெளிவற்றதாக இருப்பதாகக் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். எனவே, சட்டப் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குழு தெிவித்தது. அத்துடன் ஒக்டோபர் 24ஆம் திகதி எல்.ரி.எல். நிறுவனத்தை கோப் குழுவிற்கு அழைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. புத்தளம் அனல் மின் நிலையத் திட்டத்திற்காக ரூ. 124.30 மில்லியன் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 6 வாகனங்களை ஒப்பந்ததாரர் இன்னும் வழங்கவில்லை என்பதும் தெரியவந்தது. தொடர்புடைய ஒப்பந்தத்தின்படி, திட்டம் முடிந்த பிறகு இந்த வாகனங்கள் மின்சார சபையிடம் ஒப்படைக்கப்படவிருந்த போதும், அவை இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை. இதனால், பொதுச் சொத்து தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது மேலும், இலங்கை மின்சார சபை ஊழியர் சேமலாப நிதிய விதிகளுக்கு முரணாக ரூ.64 மில்லியன் கல்விக் கடன் மற்றும் ரூ.6,618.3 மில்லியன் சொத்துக் கடன்களாக 2024ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருப்பதாகவும் புலனானது. இந்தக் கடன்கள் பணிப்பாளர் சபை, தொழிலாளர் ஆணையாளர் மற்றும் உள்நாட்டரசிறை ஆணையாளர் நாயகம் ஆகியோரின் ஒப்புதல் இல்லாமல் 2003ஆம் ஆண்டு ஊழியர் சேமலாப நிதி விதிமுறைகளைத் திருத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடாமல் இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், 11 மாதங்களாக பதில் உள்ளகக் கணக்காய்வாளர் ஒருவர் பணியாற்றி வருகின்றமை குறித்தும் கோப் குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இலங்கை மின்சார சபையில் குறிப்பாக அதிக அளவு பணம் புழக்கத்தில் உள்ள ஒரு நிறுவனமாக, நிரந்தர உள்ளகக் கணக்காய்வாளர் இல்லாதது வருந்தத்தக்கது என்று குழு சுட்டிக்காட்டியது. இந்தப் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான நேர்காணல்கள் எதிர்காலத்தில் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அனுமதி இல்லாமல் வழங்கப்பட்ட பல கொடுப்பனவுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. பதவியணி ஆணைக்குழு மற்றும் பொதுநிர்வாக சேவை ஆணைக்குழு ஆகியவற்றின் ஒப்புதல் இல்லாமல் 2008 ஏப்ரல் 9 அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளின் பட்டியலில் சேர்க்கப்படாத கொடுப்பனவுகளுக்காக 2023ஆம் ஆண்டில் ரூ. 507.47 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. தொழில்முறை கொடுப்பனவைப் பெற உரிமையுள்ள அதிகாரிகளுக்கு தக்கவைப்பு கொடுப்பனவு வழங்கப்படக்கூடாது என்றாலும், தொழில்முறை கொடுப்பனவைப் பெற உரிமையுள்ள 517 அதிகாரிகளுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான தக்கவைப்பு கொடுப்பனவாக ரூ. 99.85 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க குழு பரிந்துரைகளையும் வழங்கியது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரஹ்மான், சுஜீவ சேனசிங்க, அசித நிரோஷன எகொட விதான, சந்திம ஹெட்டியாராச்சி, சட்டத்தரணி நிலாந்தி கொட்டஹச்சி, ருவன் மாபலகம, எம்.கே.எம். அஸ்லம், திலின சமரகோன், ஜகத் மனுவர்ண, தர்மப்பிரிய விஜேசிங்க, தினேஷ் ஹேமந்த, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர். 2014 முதல் 2022 வரை இலங்கை மின்சார சபைக்கு ரூ.594,368 மில்லியன் நஷ்டம் – கோப் குழுவில் தெரிவிப்பு | Virakesari.lk
2 weeks ago
29 Sep, 2025 | 05:35 PM (எம்.நியூட்டன்) மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது மீண்டும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என தமிழ் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு எதிரான அம்மாவட்ட மக்களது உண்மையான நீதியான போராட்டத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அது சட்ட விரோதமானது என கருதியிருந்தால் அதில் ஈடுபட்ட மக்களை சட்ட ரீதியாக கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களை தாக்குவதற்கும் காயங்களை ஏற்படுத்துவதற்கும் அரசுக்கு எந்த அதிகாரமும் இருக்க முடியாது. அனுர தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு வருடம் நிறைவுக்கு வரும் இந்த சூழ்நிலையில், அரசு நடத்தியிருக்கிற இந்த காட்டு தர்பார் என்பது அரசுக்கு எதிரான ஜனநாயக ரீதியான போராட்டங்கள், பாரிய அளவில் பரந்து விரிவடையும் பொழுது அரசு அவை தொடர்பிலே எத்தகைய அணுகுமுறையை கையாளும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகவே நாங்கள் கருதுகிறோம். அத்துடன் இந்த அடாவடியை அங்கீகரிக்கவோ அல்லது ஆமோதிக்கவோ ஜனநாயகத்தை மக்களது அடிப்படை உரிமைகளை மதிக்கின்ற எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் கடந்த காலத்தில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில், காற்றாலை திட்டம் தொடர்பில் ஒரு பரந்த அளவிலானதும் அந்த திட்டத்திற்கு எதிராக மன்னார் தீவில் எழுந்திருந்த நிலையில், 80 நாட்களாக இந்த போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், அதை நசுக்க இந்த அரசு முயற்சிக்கின்றது. இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வரை சென்று போராடும் மக்கள், இந்த திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள். இந்த பின்னணியிலே அரசாங்கம் இந்த பிரச்சினையை நிதானமாக கையாள இந்த அரசு முனைந்திருக்க வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்திருக்க வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை இரவிரவாக காற்றாலை உபகரணங்கள், உதிரிப்பாகங்கள், இயந்திரங்கள் எல்லாம் மன்னார் தீவுக்குள் கொண்டுவரப்பட்ட போது அதற்கு மக்களுடைய எதிர்ப்பலை எழுந்திருந்த நேரத்தில், அதை நிதானமாக கையாள அரசு முயற்சித்திருக்க வேண்டிய நிலையில், அரசு காட்டுமிராண்டித்தனமான முறையில் அந்த மக்களை அடித்து துவைத்திருக்கிறது. இதனால் சிலர் காயமடைந்து இருக்கிறார்கள். இதன் ஊடாக ஜனநாயக போராட்டங்களில் ஈடுபடுகிற மக்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கும் கூட இந்த அரசாங்க ஒரு செய்தியை சொல்லி இருப்பதாகத்தான் கருத வேண்டி இருக்கிறது. குறிப்பாக அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் ஒரு எல்லையைத் தாண்டுமாக இருந்தால் அரசாங்கம் தன்னுடைய பலத்தை மக்கள் மீது பிரயோகிக்க தயங்காது என்பதை அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என கோருகின்றேன். இப்பொழுது கூட நேரம் கடந்து விடவில்லை. அரசாங்கம் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி தன்னுடைய நிலைப்பாட்டில் கூட அவர்களுக்கு எடுத்துரைத்து ஒரு நிதானமாக தீர்வுக்கு வர முடியும். ஆனால் நசுக்க முடியும் என்ற எண்ணத்திலே அரசாங்கம் செயற்படுமாக இருக்கின்றது. குறிப்பாக தமிழ் தேசியம் சார்ந்த அரசியல்வாதிகள் இந்த உண்மைகளை உணர வேண்டும். முழு இலங்கை தீவிலும் வாழ்கிற தமிழ் மக்கள் ஏன் ஜனநாயக உரிமைகளை மதிக்கிற சிங்கள மக்கள் கூட உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த சந்தர்ப்பத்திலே நான் சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றார். மன்னார் மக்கள் மீதான வன்முறை அடக்குமுறையானது தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்படும் அரச பயங்கரவாதத்தின் வெளிப்பாடு - ஸ்ரீகாந்தா | Virakesari.lk
2 weeks ago
(எம்.மனோசித்ரா) மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால் எம்மைப் போன்றவர்களை இலக்கு வைக்கின்றனர். எனது கடவுள் பிரபாகரன் என்பதை அச்சமின்றி கூறுகின்றேன். ஆனால் சிங்கள மக்கள் தமக்காக சேவையாற்றிய மஹிந்த ராஜபக்ஷவை காட்டிக் கொடுத்துள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். திங்கட்கிழமை (29) நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரபாகரன் எனது கடவுள் என்பதே எனது நிலைப்பாடாகும். எனக்காக உயிர் நீத்தவர்களுக்காக நான் முன்னிற்கின்றேன். ஆனால் இந்நாட்டு மக்கள் தமக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காக முன்னின்ற தமது தலைவரை காட்டிக் கொடுத்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் தலைவர் அல்ல., ஆனால் அவர் சிங்கள மக்களின் தலைவராவார். ஆனால் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை காட்டிக் கொடுத்துள்ளனர். நாமல் உள்ளிட்டோர் கள்வர்கள் எனக் கூறிய போது நானும் அவற்றை நம்பினேன். முழு நாடும் அதை நம்பியது. பொய் கூறியவர்களை மேலாக பாரிய பொய்களைக் கூறுபவர்கள் வந்ததும் அனைவரும் அவர்களை நம்பினர். ஆனால் இறுதியில் அவர்களது பொய்கள் அனைத்தும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. எனக்காக முன்னிலையானமைக்காக நாமலுக்கு மதிப்பளிக்கின்றேன். நாமல் தவறிழைத்துள்ளார் எனில் அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதனை விடுத்து சிறுபிள்ளைத்தனமாக செயற்பட வேண்டாம். தும்புத்தடி எழுந்து பாராளுமன்றத்தில் உரையாற்றுவதாக சில எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர். நான் தும்புத்தடியாக இருக்கின்றேனா அல்லது அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் அவ்வாறு இருக்கின்றார்களா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால் எம்மைப் போன்றவர்களை இலக்கு வைக்கின்றனர். ஒன்றில் என்னைக் கைது செய்வர். அல்லது சாமர சம்பத் தசநாயக்கவை கைது செய்வர். நாமிருவரும் இல்லை என்றால் ஆளுங்கட்சிக்கு அரசியலும் இல்லை. பிரபாகரன் எனது தலைவர் என்பதை நான் அச்சமின்றி கூறுகின்றேன். அவர் பயங்கரவாதியா என பல முறை கேள்வியெழுப்பியும் யாரும் அதற்கு பதிலளிக்கவில்லை. அந்த கேள்விக்கு பதிலளித்தால் வடக்கில் வாக்கு வங்கி வீழ்ச்சியடையும் என்பதை அங்கிருப்போருக்கு தெரியும். என்னை பைத்தியம் என்று கூறுவதால் எனக்கு கவலையில்லை. ஆனால் நான் ஓரினச் சேர்க்கையாளன் அல்ல என்றார். சிங்கள மக்கள் தமது தலைவரைக் காட்டிக் கொடுத்துள்ளனர் எனது கடவுள் பிரபாகரன் - இராமநாதன் அர்ச்சுனா | Virakesari.lk
Checked
Tue, 10/14/2025 - 00:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed