உலக நடப்பு

உலகத் தாய்மொழிகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

1 month 3 weeks ago
  • ஜோ மகேஸ்வரன்
  • பிபிசி தமிழ்
21 பிப்ரவரி 2022
புதுப்பிக்கப்பட்டது 21 பிப்ரவரி 2024
தாய்மொழி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக கடைப்பிடிக்கிறது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு என்று இரண்டு பகுதிகளாக இருந்தது. இதில், கிழக்கு பாகிஸ்தான், தற்போதைய வங்கதேசம். வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானில், உருது மட்டுமே தேசிய மொழியாக இருந்தது. ஒரே மதத்தினராக இருந்தாலும், மேற்கு பாகிஸ்தானில் அதிகம் பேசப்படும் உருது மொழியானது, கிழக்கு பாகிஸ்தானில் திணிக்கப்படுவதை, மக்கள் ஏற்கவில்லை.

இதையடுத்து கிழக்கு பாகிஸ்தானில் தேசிய மொழியாக வங்க மொழியே வேண்டும் என்று 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி 'வங்க மொழி இயக்கம்' உருவானது. இதையடுத்து வங்க மொழி இயக்கத்தைச் சார்ந்த மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையின் நடவடிக்கையால், மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரமாக பரவியது. கடந்த 1956ம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தான் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, டாக்காவில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும், பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் 1998ம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார். தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்கள், அதற்கான இயக்கத்தை நினைவுகூறி, அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ 1999ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

 

யுனெஸ்கோவின் அறிக்கையில், தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், ''அனைத்து தரப்பும் தாய்மொழியில் கல்வி கற்பதை உறுதி செய்ய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. பெரும்பான்மையானவர்கள் தாய்மொழி தவிர பிற மொழிகளில் கற்பிக்கப்படுகிறார்கள்.

உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு அவர்கள் பேசுகின்ற மொழி அல்லது அவர்களுக்கு புரிகின்ற மொழியில் கல்வி கிடைப்பதில்லை. இன்றைக்கு உலகம் முழவதும் 7 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. பல மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. ஒரு மொழி அழிந்து விட்டால், ஒரு கலாச்சாரமும், அறிவு சார் பாரம்பரியமும் அத்தோடு போய்விடுகின்றன. இன்றைய டிஜிட்டல் உலகில் மொழிகளை இணைப்பதும் கற்றல் உள்ளடக்கத்தை உருவாக்குவதும் இன்றியமையாதது. தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட தொலைநிலைக் கல்விக் கற்றல் முறைகள் இணைக்கப்பட வேண்டும்'' என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப்போராட்டம்

மொழிப்போராட்டம்

பட மூலாதாரம்,DMK

படக்குறிப்பு,

1965ல் இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டம்

இதைப்படிக்கின்ற போது, வங்கதேசத்தைப் போல் இந்தியாவில், தமிழ்நாட்டில் 1938, 1965ம் ஆண்டுகளில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் பலருக்கும் நினைவிற்கு வரலாம். இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில், நடைபெற்ற போராட்டத்தில் 1939ம் ஆண்டு நடராசன், தாளமுத்து இருவரும் உயிரிழந்தனர். தொடர்ந்து 1965ம் ஆண்டு இரண்டாம் கட்ட போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி, பொதுக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

ஆனால், இது ஏன் உலக அளவில் கவனம் பெறவில்லை? என்கிற கேள்வி எழும். வங்க தேசம் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த போது உள்நாட்டில் அந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, வங்கதேசம் தனி நாடாகவும் உருவாவனது. அந்நாட்டின் பிரதிநிதி உலக தாய்மொழிகள் தின, தீர்மானத்தை முன்மொழிந்தார். அதை, யுனெஸ்கோவும் அங்கீகரித்தது. ஆனால், தமிழ் மொழி காக்கும் போராட்டம் கவனத்தை பெறவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் மொழிப்போரில் பங்கேற்றவர்கள்.

தாய்ப்பாலும் தாய்மொழியும் உயிர்ப்பானவை
கவிஞர் அறிவுமதி

பட மூலாதாரம்,ARIVUMATHI

படக்குறிப்பு,

கவிஞர் அறிவுமதி

கவிஞர் அறிவுமதி பிபிசி தமிழிடம் கூறுகையில், ''வங்கதேசத்தில் நடைபெற்றதை விட பன் மடங்கு வீரியமான போராட்டம், தமிழ்நாட்டில் நடைபெற்றது. ஆனால், வழக்கமான நம்முடைய பெருந்தன்மையால், மொழிப் போராட்ட வரலாறு யுனெஸ்கோ வரை செல்லவில்லை. பதிவு செய்யப்படவில்லை. ஆனால், இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஈகம் பெரும் வணக்கத்திற்குரியது. ஈடு, இணையற்றது. உலகத்தில் உள்ள மொழிகளைக் காக்க வேண்டும் என்று யுனெஸ்கோ உலக தாய்மொழி தினத்தை அறிவித்துள்ளது.

ஒரு குழந்தை முதலில் அறிகின்ற ருசி தாய்ப்பால். அந்த குழந்தை முதலில் உணர்கின்ற மொழி தாய் மொழி. எனவே, தாய்ப்பாலை போல் தாய்மொழியும் நம் உயிர்ப்பானது. உணர்வோடு கலந்தது. தாய்மொழி என்பதும் ஒரு மொழிதானே என்று கடந்து போய்விட முடியாது. நம்முடைய 3 ஆயிரம் ஆண்டு மரபு, பண்பாடு, கலாச்சாரத்தை நினைவு அடுக்குகளில் கடத்தி வருகிறது. கருவில் இருக்கும் போதே தாய்மொழிச் சொற்களை குழந்தை கேட்கத் தொடங்கி விடுகிறது. நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம். அதுதான் ஒரு அறிவார்ந்த சமூகத்தை தொடரச் செய்யும்.'' என்கிறார்.

பன்மொழிக் கற்றலுக்கு தொழில்நுட்பத்தின் பயன்பாடு
பொன்னவைக்கோ

பட மூலாதாரம்,PROF. PONNAVAIKO

படக்குறிப்பு,

முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ பிபிசி தமிழிடம் கூறுகையில், ''பன்மொழிக் கற்றலுக்கு தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்கிற கருதுகோளை யுனேஸ்கோ அறிவித்துள்ளது. இன்றைய தொழில்நுட்பத்தில் யுனிகோட்-டில் அனைத்து மொழிகளையும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும். பல மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கு இன்றைய தொழில்நுட்பம் பெரும் பயனாக இருக்கிறது. அதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, பள்ளிகளில் அடிப்படைக் கல்வி மட்டுமல்ல, கல்லூரிகளில் மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட அனைத்தும் தாய்மொழியில் வழங்கப்பட வேண்டும்.

இதற்கான பரிந்துரையை கடந்த 2006ம் ஆண்டு எனது தலைமையிலான, கல்வியாளர் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதில் சிலவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். காரணம், ஒரு மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்றால், எந்த சாதனையையும் படைக்க முடியாது. சாதனையாளராக வளர தாய்மொழி வழிக் கல்வி மிக அவசியமானது. அடிப்படையானது. குறிப்பாக, ஜப்பான், கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் தாய்மொழி வழிக்கல்வியை வழங்கி பல கண்டுபிடிப்புகளை, சாதனைகளை நிகழ்த்தி வருவதைக் காணலாம். மாறாக வேற்றுமொழியில் பயிற்றுவிக்கப்படும் கல்வி எதிர்மறை விளைவுகளைத்தான் தரும். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை மூலம் இணைய வழியில் நேரடியாக கல்வி நிறுவனங்களுக்குச் செல்லாமல், உலகம் முழுவதும் இருந்தும் படிக்க வாய்ப்புள்ளது'' என்கிறார்.

தாய்த் தமிழ் பள்ளிகளுக்கு அரசு உதவி கிடைக்குமா?

சிவ காளிதாசன்

பட மூலாதாரம்,SIVA KALIDASAN

படக்குறிப்பு,

அம்பத்தூர் தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளி தாளாளர் சிவ காளிதாசன்

தமிழ்நாட்டில் தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்கக் கோரி, கடந்த 1999ம் ஆண்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழண்ணல் தலைமையில் 102 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவரும் அம்பத்தூர் தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளியின் தாளாளருமான சிவ.காளிதாசன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''அடிப்படை மொழி அறிவு அனைவருக்கும் முக்கியம். கருவில் இருக்கும் போதே 10 ஆயிரம் கலைச்சொற்களை உள்வாங்கி வைத்துள்ளது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். தாய்மொழியில் அடிப்படை வலுவாக அமையும் போது, எத்தனை மொழிகளையும் எளிதில் கற்றுக் கொள்ள முடிகிறது. இதை தாய்மொழி வழிக் கல்வியின் மூலமே இந்த அடிப்படை வலுவாகும். ஆனால், குழந்தையின் பெற்றோர் பேசும், குழந்தை கேட்கும் வார்த்தைகளை வேறு மொழியில் பள்ளியில் கற்பிக்கும் போது குழந்தை குழப்பமடைகிறது. குறிப்பாக, அம்மா, அப்பா, பூனை என்று சொல்லி, கேட்டதை பள்ளியில் மம்மி, டாடி, கேட் என்று படிக்கும் போது குழந்தை குழப்பமடையும்.

தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளியை 1993ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறோம். இதுபோல் தமிழ்நாடு முழுவதும் 21 தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளிகள் உள்ளன. ஆனால், பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்று கூறி, 2006ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தமிழ்நாட்டில் 23, 968 அரசுப் பள்ளிகள் தமிழ் வழிக் கல்வியில் இருந்து ஆங்கில வழிக் கல்விக்கு மாறியுள்ளன. இது பெரும் வருத்தமாக இருக்கிறது. ஆனால், தனியார் சுயநிதிப் பள்ளிகளில், 45, 000 மாணவர்கள் தமிழ் வழியில் பயின்று வருவது ஆறுதலாக இருக்கிறது. எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். தனியாரால் நடத்தப்படும் தாய்த் தமிழ் பள்ளிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளாக்க வேண்டும். இந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசு உதவ வேண்டும்.''என்கிறார்.

https://www.bbc.com/tamil/global-60454435

சவர்க்காரங்கள் மற்றும் சலவைத்தூள்களில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்

1 month 3 weeks ago

சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான சவர்க்காரம், கிருமிநாசினிகள், சலவைத்தூள்கள் மற்றும் துணிகளில்  உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதாக சுற்றுச்சூழல் நீதி மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த இரசாயனங்களால் சிறுநீரகநோய், புற்றுநோய், தைராய்ட், கர்ப்பம் தொடர்பான உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதோடு இரத்தம் மற்றும் தாய்ப்பாலின் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு இந்த இரசாயனங்கள் பரவ வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் செக் குடியரசில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுத் துறை நடத்திய ஆய்வில் நீரை வடிய விடும் துணியால் செய்யப்பட்ட ஏப்ரன்கள், ரெயின்கோட்கள் போன்றவற்றிலும் மோசமான இரசாயனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/292667

வாக்னர்: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் தங்கம், யுரேனியம் சுரங்கங்களை கைப்பற்றி என்ன செய்கிறது?

1 month 3 weeks ago
‘வாக்னர்`: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் வேறு பெயரில் செயல்படுவது எப்படி?

பட மூலாதாரம்,AFP

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜோ இன்வுட் & ஜேக் டாச்சி
  • பதவி, பிபிசி நியூஸ்நைட் & பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன்ஸ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

தங்கம், யுரேனியம் போன்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொண்டு, அதற்கு ஈடாக ஆப்பிரிக்காவில் உள்ள அரசாங்கங்களின் "ஆட்சி தொடர்வதற்கான" வழிவகையை ரஷ்யா மேற்கொள்வதாக, சமீபத்தில் வெளியான முக்கிய அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது.

மேற்கத்திய நிறுவனங்களை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலிருந்து வெளியேற்றும் இலக்குடன், மேற்கு ஆப்பிரிக்காவில் சுரங்கச் சட்டங்களை மாற்றுவதற்கு ரஷ்யா எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் பிபிசிக்குக் கிடைத்த ரஷ்ய அரசாங்க ஆவணங்கள் விவரிக்கின்றன.

கடந்த ஆண்டு ஜூனில் ரஷ்யாவில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த பிறகு, ’வாக்னர்’ கூலிப்படையின் வணிகங்களை ரஷ்ய அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் செயல்முறையின் ஒரு பகுதியாகும் இது.

`வாக்னர்` குழுவின் பல பில்லியன் டாலர் மதிப்பிலான நடவடிக்கைகள், தற்போது `ரஷ்யன் எக்ஸ்பெடிஷனரி கார்ப்ஸ்` எனும் பெயரில் செயல்படுகின்றன. பிரிட்டன் தெருக்களில் நோவிசோக் எனும் ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தி செர்ஜேய் ஸ்க்ரிபாலைக் கொலை செய்யும் முயற்சியின் பின்னணியில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரால் இவை நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால், இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

 

ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் தரைவழிப் போர் நிபுணரும் இந்த அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவருமான ஜாக் வாட்லிங் கூறுகையில், "இது ரஷ்ய அரசு அதன் ஆப்பிரிக்கக் கொள்கையின் நிழலில் இருந்து வெளிப்படுவதைக் காட்டுகிறது" என்றார்.

ஜூன் 2023-ல், யெவ்ஜெனி ப்ரிகோஜின் அநேகமாக உலகில் மிகவும் அஞ்சப்படும் பிரபலமான கூலிப்படை தலைவராக இருந்திருக்கலாம். அவரது வாக்னர் குழு, பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள நிறுவனங்கள் மற்றும் திட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. அதேநேரத்தில், அக்குழுவின் போராளிகள் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு மையமாக இருந்தனர்.

பின்னர், அவர் மாஸ்கோவில் அணிவகுத்துச் செல்ல முடிவு செய்தார் பிரிகோஜின். பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவத்தின் தலைவரை அகற்ற வேண்டும் என்று வெளிப்படையாக அவர் அழைப்பு விடுத்தார். ஆனால் உண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அதுவரை யாரும் தராத அச்சுறுத்தல் அது.

சில வாரங்களுக்குள் அவர் மிகவும் சந்தேகத்திற்கிடமான விமான விபத்தில் இறந்தார். வாக்னர் குழுவுக்கு என்ன நடக்கும் என்பது பற்றி அந்த நேரத்தில் பரவலான ஊகங்கள் இருந்தன. இப்போது, அதற்கு பதில் இருக்கிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

கிரெம்ளினில் நடைபெற்ற கூட்டம் என்ன?

டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, "ப்ரிகோஜினின் கலகத்திற்குப் பிறகு கிரெம்ளினில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் வாக்னரின் ஆப்பிரிக்க நடவடிக்கைகள் ரஷ்ய ராணுவ உளவுத்துறையான GRU-ன் கட்டுப்பாட்டின் கீழ் நேரடியாக வரும் என்று முடிவு செய்யப்பட்டது" என்றார்.

யூனிட் 29155-ன் தலைவரான ஜெனரல் ஆண்ட்ரே அவெரியனோவிடம், 'குறிவைக்கப்பட்ட கொலைகள்' மூலம் வெளிநாட்டு அரசாங்கங்களை நிச்சயமற்றதாக மாற்றுவதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு ரகசிய நடவடிக்கையாக ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், ஜெனரல் அவெரியனோவின் புதிய பணி, அரசாங்கங்களை நிச்சயமற்றதாக மாற்றுவதாக இல்லை. மாறாக, தங்களுக்குப் பணம் செலுத்தும் வரை ஆப்பிரிக்க ஆட்சியாளர்களின் அரசைப் பாதுகாப்பதாகத் தெரிய வருகிறது.

செப்டம்பர் தொடக்கத்தில், துணை பாதுகாப்பு அமைச்சர் யூனுஸ்-பெக் யெவ்குரோவ் உடன், ஜெனரல் அவெரியனோவ் ஆப்பிரிக்காவில் முன்பு நடந்த வாக்னர் குழுவின் நடவடிக்கைகள் குறித்து அறிய சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

அவர்கள் லிபியாவில் போர்த் தளபதி ஜெனரல் கலீஃபா ஹஃப்தாரை சந்தித்தனர். அடுத்ததாக புர்கினா ஃபாசோவில் 35 வயதான தலைவர் இப்ராஹிம் ட்ரேரே அவர்களை வரவேற்றார்.

அதன் பிறகு, அவர்கள் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு சென்றனர். ஆப்பிரிக்க கண்டத்தில் மிகவும் நன்கு நிறுவப்பட்ட வாக்னர் நடவடிக்கைகள் அங்குதான் செயல்பட்டதாக கருதப்படுகிறது. பின்னர், மாலிக்கு சென்று அங்குள்ள ராணுவ ஆட்சித் தலைவர்களைச் சந்தித்தனர்.

 
‘வாக்னர்`: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் வேறு பெயரில் செயல்படுவது எப்படி?

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் உள்ள இந்த பேனரில், `ரஷ்யா வாக்னர், நாங்கள் ரஷ்யாவை நேசிக்கிறோம், வாக்னரை நேசிக்கிறோம்` என எழுதப்பட்டுள்ளது.

இன்னும் ஆழமான நடவடிக்கைகள்

அடுத்த பயணத்தில், கடந்த ஆண்டு நைஜரில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவ வீரர்களில் ஒருவரான ஜெனரல் சாலிஃபோ மோடியையும் அவர்கள் சந்தித்தனர்.

ப்ரிகோஜினின் மறைவு அவரது வணிக ஒப்பந்தங்களின் முடிவைக் குறிக்கவில்லை என்று, வாக்னரின் கூட்டாளிகளுக்கு இருவரும் உறுதியளித்தனர் என்பதை பல்வேறு சந்திப்புகள் நிரூபிக்கின்றன.

புர்கினா ஃபாசோவின் தலைவர் இப்ராஹிம் ட்ரேரே உடனான சந்திப்பு பற்றிய அறிக்கைகள், "விமானிகள் உட்பட அனைத்து மட்டங்களிலும் ராணுவ பயிற்சிக்கான" ஒத்துழைப்பு தொடரும் என்பதை உறுதிப்படுத்தியது.

சுருக்கமாக, ப்ரிகோஜினின் மரணம் ரஷ்யாவுடனான ராணுவ ஆட்சிக்குழுவின் உறவின் முடிவைக் குறிக்கவில்லை. சில வழிகளில், அது இன்னும் ஆழமாகியுள்ளது.

வாக்னருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மூன்று மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான மாலி, நைஜர் மற்றும் புர்கினா ஃபாசோ, அனைத்தும் சமீபத்திய ஆண்டுகளில் ராணுவ ஆட்சிக்குள் சென்றன. பின்னர் அவர்கள் பிராந்திய அமைப்பான எக்கோவாஸ் (Ecowas) எனப்படும் மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திலிருந்து விலகுவதாகவும் தங்களுக்கென சொந்தமாக "சஹேல் நாடுகளின் கூட்டணியை" உருவாக்குவதாகவும் அறிவித்தன.

கூலிப்படையினருடன் மிகவும் பின்னிப்பிணைந்த மாலிக்கு, முன்னதாக, பிரெஞ்சு ராணுவத்தின் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கையுடன் மினுஸ்மா எனப்படும் ஐ.நா. திட்டத்தின் வடிவத்தில் பாதுகாப்பு உதவி வந்தது.

ஆனால் முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்ஸ் மீது மாலி ஆட்சியாளர்களுக்கு விருப்பம் இல்லை. எனவே, ரஷ்ய ஆதரவுடன் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாற்ற வாக்னர் குழு முன்வந்தபோது, அந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

’ஆம்பர் அட்வைசர்ஸ்’-க்காக பணிபுரியும் ஆப்பிரிக்க அரசியல் குறித்த ஆய்வாளர் எட்விஜ் சோர்கோ-டெபக்னே கூறுகையில், "பிரெஞ்சுக்காரர்கள் வரவேற்கப்படுவதற்குப் பதிலாக பொறுத்துக் கொள்ளப்பட்டனர்” என்றார்.

"சஹேலில் பயங்கரவாத நெருக்கடிக்கு உதவுவதற்கான பிரெஞ்சு திட்டம், குறிப்பிட்ட காலக்கெடுவைக் கொண்டது. எனவே, நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழியைக் கண்டுபிடிக்காமல் பிரெஞ்சுக்காரர்கள் நீண்ட காலம், அதாவது 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருப்பது பயன்படவில்லை" என அவர் தெரிவித்தார்.

 
‘வாக்னர்`: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் வேறு பெயரில் செயல்படுவது எப்படி?

பட மூலாதாரம்,TELEGRAM

படக்குறிப்பு,

எவ்ஜெனி ப்ரிகோஜின் மற்றும் டிமிட்ரி உட்கின் ஆகியோரின் நினைவாக இந்த மலர்கள் CAR-ல் உள்ள ரஷ்ய கூலிப்படையினரின் நினைவுச்சின்னத்தில் வைக்கப்பட்டன.

மனித உரிமை மீறல்கள்

மாலியில் நடைமுறைக்கு அப்பால், ஏக்கமும் இருந்தது. "இந்த நாடுகளில், ரஷ்யா ஒரு புதிய கூட்டாளி அல்ல. முன்பு 1970 மற்றும் 1980களில் இங்கு இருந்திருக்கிறது" என்கிறார் அவர்.

"இது பெரும்பாலும் ரஷ்யாவுடனான உறவுடன் தொடர்புடையது” என எட்விஜ் சோர்கோ கூறுகிறார்.

ஆனால், இந்த நாடுகளை இயக்கும் ராணுவ ஆட்சிக்குழுக்களுக்கு, ரஷ்யாவின் ராணுவ பரவல் வெளிப்படையான நன்மைகள் இருக்கின்றன.

"ஆரம்பத்தில், இந்த ஆட்சியாளர்கள் இடைநிலைத் தலைவர்களாக இருந்தனர். அவர்கள் தேர்தல்களை ஒழுங்கமைத்து ஜனநாயக நடைமுறைக்கு திரும்பக் கொண்டு வர வேண்டும்" என்கிறார் அவர்.

"ஆனால், இப்போது ரஷ்யக் கூலிப்படைகள் கொண்டு வரப்பட்டு, அவர்கள் விரும்பும் வரை தங்குவதற்கு அனுமதிக்கின்றனர்."

பிரெஞ்சுப் படைகளை வெளியேறுமாறு மாலி ராணுவ ஆட்சிக் குழு உத்தரவிட்டது. இப்போது அதன் உள்நாட்டுப் பாதுகாப்புக்காக வாக்னரைச் சார்ந்துள்ளது. இது சாதாரண மாலியர்கள் மீது உடனடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

"ரஷ்யா மேம்பட்ட திறன்கள் மற்றும் வலுவான தாக்கும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்களுடன் கூடிய அதிரடிப் படையை வழங்கியது" என்கிறார் டாக்டர் வாட்லிங்.

"அவர்கள் பாரம்பரிய சோவியத் முறைகளைப் பயன்படுத்துகின்றனர். போராளிகளையும், போராளிகளுடன் தொடர்புடைய பொதுமக்களையும் தூக்கிலிடப்படுவதை நீங்கள் காணலாம்" என்கிறார் அவர்.

ஆப்பிரிக்க கண்டத்திலும், யுக்ரேன் மற்றும் சிரியாவிலும் வாக்னர் படைகள் மனித உரிமை மீறல்களை நடத்தியதாக பல கூற்றுகள் உள்ளன.

மிகவும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்களில் ஒன்று, மத்திய மாலி நகரமான மௌராவில் நடந்தது. ஐ.நா அறிக்கையின்படி, குறைந்தது 500 பேர் மாலி துருப்புக்களால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. "தெரியாத மொழி" பேசிய "ஆயுதமேந்திய வெள்ளையர்களால்" இவை நிகழ்த்தப்பட்டதாக, நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்”.

இதற்கு சுயாதீன சரிபார்ப்பு சாத்தியமில்லை என்றாலும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறியப்படாத தாக்குதல்காரர்களை ரஷ்ய கூலிப்படையினர் என்று அடையாளம் கண்டுள்ளது.

 
‘வாக்னர்`: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் வேறு பெயரில் செயல்படுவது எப்படி?

பட மூலாதாரம்,TELEGRAM

படக்குறிப்பு,

நூறு ரஷ்ய ராணுவ வல்லுநர்கள் கடந்த மாதம் உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களுடன் புர்கினா ஃபாசோவிற்கு வந்தனர், மேலும் பலர் விரைவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளங்களின் மூலம் வருவாய்

மாலி, பல ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே, மரம் மற்றும் தங்கம் முதல் யுரேனியம் மற்றும் லித்தியம் வரையிலான இயற்கை வளங்கள் நிறைந்தது. சில மதிப்புமிக்கவை. மற்றவை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தவை.

டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, வாக்னர் கூலிப்படை நன்கு கட்டமைக்கப்பட்ட பாரம்பரியத்தில் இயங்குகிறது: "ஒரு நிலையான ரஷ்ய செயல் முறை உள்ளது. செயல்பாட்டுக்கான செலவுகளை வணிக நடவடிக்கைகள் மூலம் ஈடு செய்வது. ஆப்பிரிக்காவில், அவை சுரங்கங்களால் ஈடுசெய்யப்படுகின்றன” என்றார்.

வாக்னர் குழு செயல்படும் ஒவ்வொரு நாட்டிலும், மதிப்புமிக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, செலவுகளை மட்டும் ஈடுசெய்யாமல், கணிசமான வருவாயையும் ஈட்டுவதாக தெரிகிறது. பிளட் கோல்ட் ரிப்போர்ட்டின் படி, (Blood Gold Report) ரஷ்யா கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் இருந்து 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்கத்தை பிரித்தெடுத்துள்ளது, இது யுக்ரேனில் நடந்த போருக்கு நிதியளித்திருக்கலாம்.

இந்த மாதம், முன்பு வாக்னர் கூலிப்படையினராக இருந்த ரஷ்ய போராளிகள், புர்கினா ஃபாசோவின் எல்லைக்கு அருகில் உள்ள மாலியின் இன்டஹாகா தங்கச் சுரங்கத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர். வடக்கு மாலியின் மிகப்பெரிய சுரங்கம், இப்பகுதியில் செயல்படும் பல்வேறு ஆயுதக் குழுக்களால் பல ஆண்டுகளாக சர்ச்சைக்குள்ளானது.

ஆனால், புவிசார் அரசியல் முக்கியத்துவத்துடன் வேறு ஒன்று உள்ளது.

"முக்கியமான கனிமங்கள் மற்றும் வளங்களுக்கான அணுகல் மீதான மேற்கத்திய கட்டுப்பாட்டை யுக்தி ரீதியாக இடமாற்றம் செய்ய ரஷ்யர்கள் முயற்சிப்பதை நாங்கள் இப்போது கவனித்து வருகிறோம்" என்று டாக்டர் வாட்லிங் கூறுகிறார்.

மாலியில், இயற்கை வளங்கள் மீது ராணுவ ஆட்சிக்கு அதிகக் கட்டுப்பாட்டை வழங்குவதற்காக சுரங்கக் குறியீடு சமீபத்தில் மீண்டும் எழுதப்பட்டது. அந்த செயல்முறை ஏற்கனவே ஒரு ஆஸ்திரேலிய லித்தியம் சுரங்கம், குறியீட்டை செயல்படுத்துவதில் நிச்சயமற்ற தன்மையைக் காரணம் காட்டி, அதன் பங்குகளின் வர்த்தகத்தை இடைநிறுத்தியுள்ளது.

லித்தியம் மற்றும் தங்கச் சுரங்கங்கள் முக்கியமானவை என்றாலும், டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, இன்னும் பெரிய மூலோபாய தலைவலி இருக்கலாம் என்கிறார் அவர். "நைஜரில் ரஷ்யர்கள் இதேபோன்ற சலுகைகளைப் பெற முயற்சிக்கின்றனர். இது யுரேனியம் சுரங்கங்களை பிரான்ஸ் பயன்படுத்துவதை தடுக்கும்" என்கிறார் அவர்.

 
‘வாக்னர்`: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் வேறு பெயரில் செயல்படுவது எப்படி?

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,

மாலி நாட்டில் பலர் தங்க சுரங்கம் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

"தீவிர அச்சுறுத்தல்"

மாலியில் செய்யப்பட்டதை நைஜரில் அடைய முயற்சி செய்வதில் கவனம் செலுத்திய ரஷ்ய குறிப்புகளை இந்த அறிக்கை விவரிக்கிறது. மேற்கு ஆப்பிரிக்காவின் யுரேனிய சுரங்கங்களின் மீதான கட்டுப்பாட்டை ரஷ்யா பெற முடிந்தால், ஐரோப்பா மீண்டும் ரஷ்ய "எனர்ஜி பிளாக்மெயில்" என்று அழைக்கப்படுவதை அம்பலப்படுத்தலாம்" என்றார்.

உலகின் மற்ற எந்த நாட்டையும் விட பிரான்ஸ் அணுசக்தியை அதிகம் சார்ந்துள்ளது, 56 உலைகள் நாட்டின் ஆற்றலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கை உற்பத்தி செய்கின்றன. அதன் ஐந்தில் ஒரு பங்கு யுரேனியம் நைஜரில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நைஜர் போன்ற நாடுகளை முன்னாள் காலனித்துவ சக்தி சுரண்டுகிறது என்ற கருத்துகளுடன், வர்த்தக விதிமுறைகள் குறித்து முன்பு புகார்கள் வந்துள்ளன.

"மேற்கத்திய நாடுகள் தங்கள் அணுகுமுறை அடிப்படையில் காலனித்துவமாக இருக்கின்றன என்ற கருத்தை ரஷ்யா முன்வைக்கிறது" என்று டாக்டர் வாட்லிங் கூறுகிறார். "இது மிகவும் முரண்பாடானது, ஏனெனில் இந்த ஆட்சிகளைத் தனிமைப்படுத்துவது, அவர்களின் இயற்கை வளங்களைப் பிரித்தெடுப்பது போன்ற ரஷ்ய அணுகுமுறை தான் மிகவும் காலனித்துவமானது" என்றார்.

உண்மையில், "எக்ஸ்பெடிஷனரி கார்ப்ஸ்" என்பது ரஷ்ய வெளியுறவுக் கொள்கைக்கான தீவிரமான புறப்பாட்டைக் காட்டிலும் "வாக்னர் 2.0" என்பது போலவே தோன்றுகிறது. ப்ரிகோஜின் ஆப்பிரிக்க கண்டத்தில் ஆழமான அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ உறவுகளை உருவாக்கினார். எனவே, இந்த சிக்கலான வலையை அகற்றுவது கடினமாக இருக்கும்.

"எக்ஸ்பெடிஷனரி கார்ப்ஸ்" அதே நாடுகளில், அதே கருவிகளுடன் அதே இறுதி இலக்குடன் செயல்படுகிறது.

டாக்டர் வாட்லிங்கின் கூற்றுப்படி, அடிப்படை மாற்றம் "ரஷ்யா தனது கொள்கையைப் பின்பற்றும் வெளிப்படையான தன்மையில்" உள்ளது. ப்ரிகோஜினின் வாக்னர் குழுமம் எப்போதும் ரஷ்யாவிற்கு செயல்பாடுகள் மற்றும் வெளிநாட்டில் செல்வாக்கு ஆகியவற்றில் நம்பத்தகுந்த உதவியை வழங்கியது.

யுக்ரேனின் முழு அளவிலான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, மேற்கத்திய பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள பலர் ரஷ்யாவின் முகமூடி நழுவிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

"அவர்கள் செய்ய விரும்புவது சர்வதேச அளவில் நமது நெருக்கடிகளை அதிகப்படுத்துவதாகும். அவர்கள் வெவ்வேறு இடங்களில் தீயை மூட்ட முயற்சிக்கின்றனர், மேலும் ஏற்கனவே உள்ளவற்றை தீவிரப்படுத்தி பாதுகாப்பில்லாத உலகத்தை உருவாக்குகிறார்கள்," என்கிறார் டாக்டர் வாட்லிங்.

"இறுதியில், நாம் தற்போது எதிர்கொள்ளும் உலகளாவிய போட்டியில் இது நம்மை பலவீனப்படுத்துகிறது. அதனால் தாக்கம் உடனடியாக உணரப்படாது. ஆனால் காலப்போக்கில், இது ஒரு தீவிர அச்சுறுத்தலாக மாறும்" என்றார் வாட்லிங்.

https://www.bbc.com/tamil/articles/crg9771dg6ko

வடகொரிய அதிபருக்கு ரஷியாவில் தயாரிக்கப்பட்ட சொகுசு காரை பரிசளித்த அதிபர் புதின்

1 month 3 weeks ago
kim.jpg

ரஷியாவும், வடகொரியாவும் நட்பு நாடுகளாக திகழ்கின்றன. வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷியா சென்றார். இந்த பயணத்தின்போது அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பில் ரஷிய அதிபர் புதின், தான் பயன்படுத்தும் ரஷிய தயாரிப்பு சொகுசு காரான அன்ரூஸ் செனட் காரை வடகொரிய அதிபருக்கு காட்டினார். அந்த காரில் வடகொரிய அதிபர் கிம், பின் இருக்கையில் இருந்து பயணம் செய்தார்.

இந்நிலையில், வடகொரிய அதிபருக்கு ரஷிய அதிபர் புதின் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். ரஷியாவில் தயாரிக்கப்பட்ட அந்த கார் வடகொரிய அதிபரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பரிசளிக்கப்பட்டுள்ளது. பரிசளிக்கப்பட்ட கார் எந்த வகையானது? எவ்வாறு வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது? என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

அதேவேளை, கார் பரிசளித்த ரஷிய அதிபருக்கு வடகொரிய அதிபரின் தங்கை கிம் யொ ஜாங் நன்றி தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/292500

கழுதைகளை சீனா வாங்குவது ஏன்?

1 month 3 weeks ago
ஆப்ரிக்கா, பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கான கழுதைகளை சீனா வாங்குவது ஏன்?
வேலை செய்யும் கழுதைகள் குவாரியில் வண்டியை இழுக்கின்றன

பட மூலாதாரம்,THE DONKEY SANCTUARY

படக்குறிப்பு,

வேலை செய்யும் கழுதைகள் குவாரியில் வண்டியை இழுக்கின்றன

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விக்டோரியா கில் மற்றும் கேட் ஸ்டீபன்ஸ்
  • பதவி, அறிவியல் குழு, பிபிசி செய்திகள்
  • 18 பிப்ரவரி 2024

இளமையை நீட்டிக்கும், கருத்தரிக்க உதவும், இரத்தத்தை வலுப்படுத்தும், தூக்கம் வர உதவும் என பல நன்மைகள் இருபதாக நம்பப்படும் ஒரு சீன பாரம்பரிய மருந்து தயாரிக்க கழுதைத் தோலில் உள்ள ஒரு ரசாயனம் தேவைப்படுகிறது. இதற்காகச் சீனாவுக்கு ஏறுமதி செய்ய, ஆப்பிரிக்கா முதல் பாகிஸ்தான் வரை பல நாடுகளில் கழுதைகள் தோலுக்காகக் கொல்லப்படுகின்றன. இது ஒரு பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.

தண்ணீர் விற்று தனது வாழ்க்கையை நடத்துபவர் ஸ்டீவ். அதறகாக அவர் தனது கழுதைகளையே முழுமையாக நம்பியிருந்தார். 20 தண்ணீர் கேன்களுடன் அவரது வண்டியை அவைதான் வியாபாரத்துக்கு இழுத்துச் செல்லும்.

இந்நிலையில், ஸ்டீவின் கழுதைகள் தோலுக்காக திருடப்பட்டபோது, அவர் மனமுடைந்துபோனார். அவரால் வேலை செய்ய முடியவில்லை.

அந்த நாளும் சாதாரணமாகத்தான் தொடங்கியது. காலையில், அவர் நைரோபியின் புறநகரில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி தனது கழுதைகளை அழைத்து வர வயலுக்குச் சென்றார்.

"ஆனால் என் கழுதைகளைக் காணவில்லை. இரவு பகலாக அவற்றைத் தேடினேன். மறுநாளும் தேடினேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, அவற்றின் எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்ததாக ஒரு நண்பர் அவரிடம் சொன்னார்.

"அவை கொல்லப்பட்டிருந்தன. அவற்றின் தோல் எடுக்கப்பட்டிருந்தது," என்றார்.

ஆப்பிரிக்காவிலும், மற்றும் கழுதைகள் அதிகம் உள்ள உலகின் பிற பகுதிகளிலும் இப்படியான கழுதைத் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. கழுதைத் தோலைக் கொண்டு நடைபெறும் ஒரு உலகலாவிய சர்ச்சைக்குரிய வர்த்தகத்தில், ஸ்டீவ் மற்றும் அவரது கழுதைகளும் பாதிக்கப்பட்டனர் என்றே சொல்ல வேண்டும்.

காய வைக்கப்பட்டுள்ள கழுதைத் தோல்கள்

பட மூலாதாரம்,THE DONKEY SANCTUARY

படக்குறிப்பு,

ஆப்பிரிக்கா முழுவதும் கழுதை தோல்களை அறுப்பது மற்றும் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்படலாம்

ஒவ்வொரு ஆண்டும் கொல்லப்படும் 56 லட்சம் கழுதைகள்

இந்த வர்த்தகம், கென்யாவில் உள்ள அந்த வயலில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் துவங்கப்பட்டது. சீனாவில், கழுதை தோலில் உள்ள ஜெலட்டின் மூலம் தயாரிக்கப்படும் பாரம்பரிய மருத்துவத்திற்கு அதிக தேவை உள்ளது. இது எஜியாவோ (Ejiao) என்று அழைக்கப்படுகிறது.

இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் இளமையை நீட்டிக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. ஜெலட்டின் பிரித்தெடுக்க கழுதை தோல்கள் வேகவைக்கப்படுகின்றன. பிறகு தூள், மாத்திரைகள் அல்லது திரவமாக மாற்றப்படுகின்றன. சில சமயங்களில் உணவில் சேர்க்கப்படுகிறது.

இந்த வர்த்தகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்கள், ஸ்டீவ் போன்றவர்கள் - மற்றும் அவர்கள் சார்ந்திருக்கும் கழுதைகள் - எஜியாவோவின் பாரம்பரிய மூலப்பொருளுக்கான நீடித்த தேவையால் தாம் பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

ஒரு புதிய அறிக்கையில், 2017 முதல் இந்த வர்த்தகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் கழுதை சரணாலயம், உலகளவில் குறைந்தபட்சம் 59 லட்சம் கழுதைகள் ஒவ்வொரு ஆண்டும் படுகொலை செய்யப்படுவதாக மதிப்பிடுகிறது. பிபிசியால் அந்த புள்ளிவிவரங்களை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை என்றாலும், கழுதைகளின் தேவை அதிகரித்து வருவதாக தொண்டு நிறுவனம் கூறுகிறது.

எஜியாவோ தொழிற்துறைக்கு வழங்குவதற்காக எத்தனை கழுதைகள் கொல்லப்படுகின்றன என்ற துல்லியமாக தெரிந்துகொள்வது மிகவும் கடினம்.

எஜியாவோ

பட மூலாதாரம்,THE DONKEY SANCTUARY

படக்குறிப்பு,

எஜியாவோ என்பது உணவு, திரவம் அல்லது மாத்திரைகள் வடிவில் வரும் ஒரு பழங்கால தீர்வாகும்

உலகம் முழுதும் குறைந்து வரும் கழுதைகள்

உலகில் வாழும் 5.3 கோடி கழுதைகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆப்பிரிக்காவில் இருக்கின்றன. ஆனால் அந்நாட்டின் விதிகளில் சில சிக்கல்கள் உள்ளன.

கழுதை தோல்களை ஏற்றுமதி செய்வது சில நாடுகளில் சட்டப்பூர்வமாகவும், சில நாடுகளில் சட்டவிரோதமாகவும் உள்ளது. ஆனால் அதிக தேவை மற்றும் தோலுக்கான அதிக விலை கழுதைகளின் திருட்டை தூண்டுகிறது. மேலும் வர்த்தகம் சட்டப்பூர்வமாக இருக்கும் இடங்களுக்குச் செல்ல விலங்குகள் சர்வதேச எல்லைகள் வழியாக கடத்தப்படுவதை கண்டுபிடித்துள்ளதாக கழுதை சரணாலயம் கூறுகிறது.

ஆனால், கழுதைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அவை கொல்லப்படுவதைத் தடை செய்ய ஒவ்வொரு ஆப்பிரிக்க மாநில அரசாங்கமும், பிரேசில் அரசாங்கமும், தயாராக இருக்கின்றன. இதனால் விரைவில் இவ்விவகாரத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படலாம்.

நைரோபியில் உள்ள கழுதை சரணாலயத்தில் பணிபுரியும் சாலமன் ஒன்யாங்கோ, “2016 மற்றும் 2019-க்கு இடையில், கென்யாவின் கழுதைகளில் பாதி (தோல் வர்த்தகத்திற்காக ) படுகொலை செய்யப்பட்டதாக நாங்கள் மதிப்பிடுகிறோம்," என்றார்.

மக்கள், பொருட்கள், தண்ணீர் மற்றும் உணவை சுமந்து செல்லும் அதே விலங்குகள் - ஏழை, கிராமப்புற சமூகங்களின் முதுகெலும்பாக உள்ளன. எனவே தோல் வர்த்தகத்தின் அளவு மற்றும் விரைவான வளர்ச்சி பிரச்சாரகர்களையும் நிபுணர்களையும் கவலையடையச் செய்துள்ளது. மேலும், கென்யாவில் பலரை தோல் வர்த்தக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க தூண்டியுள்ளது.

பிப்ரவரி 17 மற்றும் 18 தேதிகளில் ஆப்பிரிக்காவின் அனைத்து மாநிலத் தலைவர்களும் சந்தித்த ஆப்பிரிக்க யூனியன் உச்சிமாநாட்டில் ஆப்பிரிக்கா முழுவதும் கழுதைத் தோல் வர்த்தகத்துக்கான காலவரையற்ற தடையை கொண்டுவரும் முன்மொழிவு நிகழ்ச்சி நிரலில் இருந்தது.

கழுதைகள்

பட மூலாதாரம்,FAITH BURDEN

படக்குறிப்பு,

ஒரு கழுதை சில குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திற்கும் வறுமைக்கும் உள்ள வேறுபாட்டைக் குறிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன

கழுதை இறைச்சிக் கூடங்கள்

ஆப்பிரிக்கா முழுவதும் தடை செய்யப்படுவதைப் பற்றி ஸ்டீவ் பேசுகையில், இது விலங்குகளைப் பாதுகாக்க உதவும் என நம்புகிறார், "இல்லை என்றால், அடுத்த தலைமுறைக்கு கழுதைகள் இருக்காது," என்கிறார்.

ஆனால் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் உள்ள தடைகள் வர்த்தகத்தை வேறு இடத்திற்கு மாற்றுமா?

எஜியாவோ தயாரிப்பாளர்கள் சீனாவில் இருந்து பெறப்படும் கழுதைகளின் தோல்களைப் பயன்படுத்தினர். ஆனால், அங்குள்ள வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டில் கழுதைகளின் எண்ணிக்கை 1990 இல் 1.1 கோடியில் இருந்து 2021-இல் 20 லட்சத்திற்கும் கீழே குறைந்தது. அதே நேரத்தில், எஜியாவோ பிரபலமானது.

சீன நிறுவனங்கள் தங்கள் தோல் பொருட்களை வெளிநாடுகளில் தேடத் தொடங்கின. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் கழுதை இறைச்சிக் கூடங்கள் நிறுவப்பட்டன.

ஆப்பிரிக்காவில், இது வர்த்தகத்தில் கடுமையான இழுபறிக்கு வழிவகுத்தது.

கழுதை

பட மூலாதாரம்,THE DONKEY SANCTUARY

படக்குறிப்பு,

ஒரு கழுதை என்பது ஏழை, கிராமப்புற சமூகங்களில் உள்ள பலருக்கு வாழ்வாதாரத்திற்கும் ஏழ்மைக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிக்கும்

பாகிஸ்தானுக்கு மாறிய கழுதை வர்த்தகம்

எத்தியோப்பியாவில், கழுதை இறைச்சி சாப்பிடுவது தடைசெய்யப்பட்ட நிலையில், பொதுமக்களின் எதிர்ப்புகள் மற்றும் சமூக ஊடகங்களின் கூக்குரலுக்கு பதிலளிக்கும் விதமாக, நாட்டின் இரண்டு கழுதை இறைச்சிக் கூடங்களில் ஒன்று 2017-இல் மூடப்பட்டது.

தான்சானியா மற்றும் ஐவரி கோஸ்ட் உள்ளிட்ட நாடுகள் 2022-ஆம் ஆண்டில் கழுதை தோல்களை அறுப்பதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதித்தன, அதனால், இந்த வர்த்தகம் பாகிஸ்தானுக்கு மாறியது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில், 'சில சிறந்த கழுதை இனங்களை' வளர்ப்பதற்காக அந்நாடு 'அதிகாரப்பூர்வ கழுதை வளர்ப்பு பண்ணை' ஆகிவிட்டதாக என அங்குள்ள ஊடகங்கள் விமர்சித்தன.

சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீனா-ஆப்பிரிக்கா உறவுகள் அறிஞர் பேராசிரியர் லாரன் ஜான்ஸ்டன் கருத்துப்படி, சீனாவின் எஜியாவோ சந்தையின் மதிப்பு 2013-இல் சுமார் 320 கோடி டாலராக இருந்தது, 2020இல் 780 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

இது பொது சுகாதார அதிகாரிகள், விலங்கு நல பிரசாரகர்கள் மற்றும் சர்வதேச குற்ற புலனாய்வாளர்களுக்கு கூட கவலையாக உள்ளது. மற்ற சட்டவிரோத வனவிலங்கு பொருட்களை கடத்துவதற்கு கழுதை தோல்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

கழுதைகள்

பட மூலாதாரம்,THE DONKEY SANCTUARY

படக்குறிப்பு,

தோல் வர்த்தகத்திற்கு எதிரான பிரச்சாரகர்கள் இது மனிதாபிமானமற்றது மற்றும் நீடித்து நிலைக்க முடியாதது என்று கூறுகிறார்கள்

'எங்கள் கழுதைகள் படுகொலைக்காக அல்ல'

"எனது சமூகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் சிறிய அளவிலான விவசாயிகள் மற்றும் அவர்கள் தங்கள் பொருட்களை விற்க கழுதைகளைப் பயன்படுத்துகிறார்கள்," என்கிறார் ஸ்டீவ். மருத்துவம் படிக்க பள்ளிக் கட்டணம் செலுத்த தண்ணீர் விற்று பணத்தை சேமித்து வந்தார், ஸ்டீவ்.

கழுதை சரணாலயத்தில் கால்நடை மருத்துவராக இருக்கும் ஃபெயித் பர்டன், உலகின் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற வாழ்க்கைக்கு விலங்குகள் 'முற்றிலும் அவசியமானவை' என்று கூறுகிறார். இவை வலிமையான, எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய விலங்குகள். "ஒரு கழுதை 24 மணிநேரம் தண்ணீர் குடிக்காமல் நடக்கும். எந்த பிரச்சனையும் இல்லாமல் மிக விரைவாக நீரேற்றம் செய்ய முடியும்." என்றார் அவர்.

கழுதைகள் எளிதில் அல்லது விரைவாக இனப்பெருக்கம் செய்யாது. எனவே வர்த்தகம் குறைக்கப்படாவிட்டால், கழுதைகளின் எண்ணிக்கை தொடர்ந்து சுருங்கி, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தையும் துணையையும் இழக்க நேரிடும் என்று பிரச்சாரகர்கள் அஞ்சுகின்றனர்.

"நாங்கள் எங்கள் கழுதைகளை படுகொலைக்காக வளர்க்கவில்லை," என்கிறார் ஒன்யாங்கோ.

பேராசிரியர் ஜான்ஸ்டன் கூறுகையில், “கழுதைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏழைகளைச் சுமந்துள்ளன. அவை குழந்தைகளை, பெண்களை சுமக்கின்றன," என்றார் அவர்.

கழுதை

பட மூலாதாரம்,THE BROOKE

படக்குறிப்பு,

Some worry that, if the trade is not curbed, the next generation will not have access to a donkey

பெண்களும் சிறுமிகளும், ஒரு கழுதை திருடப்படும்போதுஏற்படும் இழப்பின் சுமைகளைத் தாங்குவதாக அவர் கூறுகிறார்.

"கழுதை போய்விட்டால், பெண்கள் மீண்டும் கழுதையாக மாறுகிறார்கள்," என்று அவர் விளக்குகிறார். அதில் ஒரு கசப்பான முரண் உள்ளது, ஏனெனில் எஜியாவோ, முதன்மையாக பணக்கார சீனப் பெண்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு தீர்வாகும், இது இரத்தத்தை வலுப்படுத்துவதில் இருந்து தூக்கத்திற்கு உதவுவதற்கு, கருவுறுதலை அதிகரிப்பதற்கு என பல நன்மைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், 2011-ஆம் ஆண்டு சீனத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'எம்பிரஸ் இன் தி பேலஸ்' - ஒரு ஏகாதிபத்திய நீதிமன்றத்தின் கற்பனைக் கதை - இது மருந்தின் மதிப்பை உயர்த்தியது.

"நிகழ்ச்சியில் உள்ள பெண்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஒவ்வொரு நாளும் எஜியாவோ-ஐ உட்கொண்டனர். அது உயரடுக்கு பெண்மையின் தயாரிப்பாக மாறியது. முரண்பாடாக, அது இப்போது பல ஆப்பிரிக்க பெண்களின் வாழ்க்கையை அழித்து வருகிறது," என்றார் பேராசிரியர்.

24 வயதான ஸ்டீவ், தனது கழுதைகளை இழந்தபோது, தனது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகக் கவலைப்பட்டார். "நான் இப்போது வழியின்றித் தவிக்கிறேன்," என்கிறார் அவர்.

கழுதைகள் சரணாலயத்தைச் சேர்ந்த ஜன்னெக் மெர்க்ஸ், கழுதைகளைப் பாதுகாக்க எத்தனை நாடுகள் சட்டம் இயற்றுகிறதோ, கழுதைத் தோல் வர்த்தகம் அவ்வளவு கடினமாக மாறும் என்று அவர் கூறுகிறார்.

கழுதை சரணாலயத்தில் கழுதை ஒன்றுடன் ஜன்னெக் மெர்க்ஸ்

பட மூலாதாரம்,VICTORIA GILL/BBC

படக்குறிப்பு,

டெவோனில் உள்ள சரணாலயத்தில் கழுதை ஒன்றுடன் ஜன்னெக் மெர்க்ஸ்

"நாங்கள் பார்க்க விரும்புவது என்னவென்றால், எஜியாவோ நிறுவனங்கள் கழுதை தோல்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு நிலையான மாற்று வழிகளில் முதலீடு செய்ய வேண்டும் - செல்லுலார் விவசாயம் (ஆய்வகங்களில் உற்பத்தி செய்தல்) போன்றவற்றில் ஏற்கனவே பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழிகள் உள்ளன," என்கிறார் அவர்.

கழுதை சரணாலயத்தின் துணை தலைமை நிர்வாகியான ஃபெயித் பர்டன், கழுதை தோல் வர்த்தகம் 'நிலையற்றது மற்றும் மனிதாபிமானமற்றது' என்று கூறுகிறார்.

"அவை திருடப்படுகின்றன. நூற்றுக்கணக்கான மைல்கள் நடக்கக்கூடும், நெரிசலான இடத்தில் வைக்கப்பட்டு பின்னர் மற்ற கழுதைகளின் பார்வையில் படுகொலை செய்யப்படுகின்றன. இதற்கு எதிராக நாம் பேச வேண்டும்," என்றார் அவர்.

ஸ்டீவ் தனது புதிய கழுதை ஜாய் லக்கியுடன்

பட மூலாதாரம்,BROOKE

படக்குறிப்பு,

ஸ்டீவ் இப்போது ஒரு புதிய கழுதையை வைத்திருக்கிறார், அது அவருடைய கனவுகளை அடைய உதவும் என்று அவர் நம்புகிறார்

ப்ரூக் இப்போது ஸ்டீவ்விற்கு ஒரு புதிய கழுதையைக் கொடுத்துள்ளார், அதற்கு அவர் ஜாய் லக்கி என்று பெயரிட்டார், ஏனெனில் அவர் அதை பெற்றதற்கு அதிர்ஷ்டமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறார்.

"என் கனவுகளை அடைய அவள் எனக்கு உதவுவாள் என்று எனக்குத் தெரியும். அவள் பாதுகாக்கப்பாக இறுப்பதை நான் உறுதி செய்வேன்,” என்கிறார் ஸ்டீவ்.

https://www.bbc.com/tamil/articles/cldqx7nw4qlo

ரஸ்யாவிலிருந்து உக்ரைனிற்கு தப்பிச்சென்ற விமானி ஸ்பெயினில் சடலமாக மீட்பு – உக்ரைன் புலனாய்வு பிரிவினர் தகவல்

1 month 3 weeks ago
ரஸ்யாவிலிருந்து உக்ரைனிற்கு தப்பிச்சென்ற விமானி ஸ்பெயினில் சடலமாக மீட்பு – உக்ரைன் புலனாய்வு பிரிவினர் தகவல் 10-13.jpg

கடந்தவருடம் இடம்பெற்ற இரகசிய நடவடிக்கையின் போது உக்ரைனிற்கு தப்பிவந்த ரஸ்ய விமானி ஸ்பெயினில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர். தெரிவித்துள்ளனர்.

மாக்சிம் குஸ்மினோவ் என்ற விமானியே உயிரிழந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

தொடர்மாடியொன்றின் வாகனத்தரிப்பிடத்தில் இவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக  உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.அலிகண்டோவில் உள்ள வில்லாஜோயோசா நகரில் இவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் அருகில் உள்ள பகுதியில்கார் ஒன்று எரியுண்ட நிலையில்மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலில் இது குற்றவாளிகும்பலின் நடவடிக்கை என ஸ்பெய்ன் பொலிஸார் கருதியுள்ளனர் எனினும் பின்னரே இது ரஸ்ய உக்ரைன் மோதல் தொடர்பான விவகாரம் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் குஸ்மினோவ் இரண்டு தளங்களிற்கு இடையிலான விமானபறத்தலின் போது ரஸ்ய தரப்பிலிருந்து உக்ரைனிற்கு தப்பிவந்தார்.

ஹெலிக்கொப்டரில் எஸ்யு 27- எஸ்யு 30 போர்விமானங்களி;ற்கான உதிரிப்பாகங்களை கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இவர் தனது ஹெலிக்கொப்டர் மூலம் உக்ரைனின் கட்டுப்பாட்டு பகுதியில் தரையிறங்கினார்.

ஆறுமாத இரகசிய நடவடிக்கையின் பயனாக இவரை உக்ரைனின் பக்கம் வரச்செய்ததாக உக்ரைனின் புலனாய்வுபிரிவினர் தெரிவித்திருந்தனர்.

அதற்கு முன்னதாக அவரது குடும்பத்தினர் ரஸ்யாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

குஜ்மினோவ் மரணம் உறுதி செய்யப்பட்டால் அதற்கு ரஸ்ய அரசாங்கமே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் வெளியாகலாம்.

கடந்தகாலங்களில்அதன் கொலையாளிகள் ஐரோப்பாவில் பல கொலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

https://akkinikkunchu.com/?p=269046

முன்னாள் மனைவியைக் கொன்ற நபருக்கு 45 ஆண்டுக்குப் பிறகு தண்டனை - எப்படி தெரியுமா?

1 month 3 weeks ago
முன்னாள் மனைவியை கொன்ற நபரை 45 ஆண்டுக்குப் பிறகு காட்டிக் கொடுத்த விந்தணு - எப்படி தெரியுமா?
பிரெண்டா பேஜ் மற்றும் அவரது கணவர்

பட மூலாதாரம்,NEWSLINE MEDIA

படக்குறிப்பு,

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரெண்டா பேஜ், தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற ஒரு வருடத்தில் கொலை செய்யப்பட்டார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரெபேக்கா கர்ரான், கென் பேங்க்ஸ்
  • பதவி, பிபிசி ஸ்காட்லாந்து
  • 19 பிப்ரவரி 2024, 06:58 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஸ்காட்லாந்தில் தனது முன்னாள் மனைவியை கொன்று 45 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவரை கைது செய்த துப்பறியும் நபர் ஒருவரின் வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால், கைது செய்யப்பட்ட நபர் தன்னைத் தானே புத்திசாலி என நினைத்துக்கொண்டிருந்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் வட-கிழக்கு மாநிலமான அபெர்டீனைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஹாரிசன். இவர், 32 வயதான தனது மனைவி பிரெண்டா பேஜிடம் இருந்து விவாகரத்து பெற்று ஒரு ஆண்டுக்கு பிறகு, 1978 ஆம் ஆண்டு தன் மனைவியை கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்தவர்களில் ஒருவரான ஜேம்ஸ் காலண்டர், பிரெண்டா பேஜின் கொலை குற்றவாளியை எப்படி கண்டுபிடித்தனர் என்பதை விளக்கினார்.

“அவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துகொண்டதாக நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், விசாரணையில், அவரையே அறியாமல், அவர் அதனை ஒப்புக்கொண்டார்,” என்றார் ஜேம்ஸ்.

பிரெண்டா பேஜ் இறந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் கைது செய்யப்பட்டு, குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விசாரணை அதிகாரி ஜேம்ஸ் காலண்டர்,
படக்குறிப்பு,

பிரெண்டா பேஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த அதிகாரி ஜேம்ஸ் காலண்டர், குற்றவாளி தன்னை ஒரு புத்திசாலி என நினைத்துக்கொண்டிருந்ததாகக் கூறினார்.

கொலை நடந்து 30 ஆண்டுகளுக்கு பின் மறு விசாரணை

இந்தக் கொலைக் குற்றத்தை மையமாகக் கொண்டு, பிபிசியின் ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தி கில்லிங் ஆஃப் டாக்டர் பிரெண்டா பேஜ் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த ஆவணப்படம், 2020இல் ஹாரிசன் கைது செய்யப்படும் காட்சிகளுடன் தொடங்குகிறது.

ஆவணப்படத்தை தயாரித்தது. 2020 இல் ஹாரிசன் கைது செய்யப்பட்ட காட்சிகளுடன் ஆவணப்படம் தொடங்குகிறது. ஆரம்பக்காட்சியில், ஹாரிசனை போலீஸ் தேடி வரும்போது, ‘அவர் இங்கே கொல்லப்படவில்லை,’ எனக் கூறுவது கேட்கிறது.

மரபியல் நிபுணரான டாக்டர் பிரெண்டா பேஜ், ஜூலை 14, 1978 அன்று தனது படுக்கையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

அவரை அவரது முன்னாள் கணவர் ஹாரிசன் கொலை செய்திருக்கக்கூடும் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே அவரை போலீசாரும் கைது செய்தனர்.

ஆனால், அந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்தபோதும், அவர் தான் கொலை செய்தார் என்பதற்கான எந்த ஆதரமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

இந்தக் கொலைக்கான ஆதரங்களை, ஸ்காட்லாந்து போலீசாரும், ஊடகங்களும் தொடர்ந்து தேடி வந்தன. ஆனால், நீண்ட காலத்திற்கு கொலை தொடர்பாக எந்த ஆதரமும் கிடைக்கவில்லை.

அதன் பிறகு இந்த வழக்கை, கிடப்பில் போட்டனர். பின், 32 ஆண்டுகளுக்குப் பிறகு, 2015-இல் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசாருக்கு உத்தரவு வந்தது.

 
கொலை செய்யப்பட்ட மருத்துவர் பிரெண்டா பேஜ்

பட மூலாதாரம்,PAGE FAMILY

படக்குறிப்பு,

பிரெண்ட பேஜ் கொலை வழக்கில், எந்த ஆதரமும் கிடைக்காத நிலையில், வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

மறுவிசாரணையில் சிக்கிய புதிய ஆதாரம்

வழக்கை மீண்டும் விசாரித்த போலீசார், பிரெண்டா பேஜின் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தடயங்களை சேகரித்திருந்தனர். அப்போது, ஒரு போர்வையில் விந்துக் கறை காணப்பட்டது. அந்த விந்து, ஹாரிசனின் டிஎன்ஏ,வுடன் ஒப்பிடப்பட்டது.

ஆய்வின் முடிவில், போர்வையில் காணப்பட்ட விந்துவும், ஹாரிசனின் டிஎன்ஏ,வும் ஒத்துப்போனது. ஆனால், அதற்கு முன் நடந்த விசாரணையில், தான் பிரெண்டாவுடன் உடலுறவு கொள்ளவில்லை என ஹாரிசன் கூறியிருந்தார்.

ஆனால், அந்த விந்து அவருடையது தான் என்பதற்கு வலுவான ஆதாரம் இருப்பதாக போலீசார் முடிவு செய்தனர். அதேபோல, பிரெண்டாவின் அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட சில உடைந்த ஓவியங்களும், ஹாரிசனின் காரில் கண்டெடுக்கப்பட்டது.

கொலை நடந்த மூன்று தசாப்தத்திற்கு பிறகு, மார்ச் 27, 2020 அன்று ஹாரிசனை மீண்டும் கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால், ஹாரிசன், தொடர்ந்து தனக்கும் தனது முன்னாள் மனைவின் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வாதிட்டு வந்தார். ஆனால், ஆதாரங்கள் வலுவாக இருந்ததால், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இறுதியாக, மார்ச் 2023 இல், 10 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடந்தது. அந்த விசாரணைக்கு பின், ஹாரிசன் தான் அவரது முன்னாள் மனைவி பிரெண்டா பேஜை கொலை செய்தார் என நிரூபிக்கப்பட்டது. அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரிவிட்டது. சிறையில் அடைக்கப்பட்ட ஹாரிசன், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தான் பரோலுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி காலண்டர், வழக்கு குறித்து பிபிசியிடம் பேசினார். அப்போது அவர், ஹாரிசன் அவரது முன்னாள் மனைவி பிரெண்டா பேஜ் கொலை வழக்கில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கவில்லை.

“அவரத அதீத புத்திசாலித்தனமே அவர் வீழ்ச்சிக்கு காரணம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், 45 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை கைது செய்வார்கள் என அவர் நினைக்கவில்லை,”என்றார் காலண்டர்.

மேலும், வழக்கு விசாரணையின்போது, அவரே குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அவரே வழக்கில் சிக்கிக்கொண்டதாகவும் காலண்டர் பிபிசியிடம் கூறினார்.

"வீடியோ கேமராக்களுக்கு முன்னால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய விதத்தை நீங்கள் பார்த்தால், அவரே குற்றத்தை ஒப்புக்கொள்வது உங்களுக்கு புரியும். அவரேதான் இந்த வழக்கில் சிக்கினார்,”என்றார்.

தான் எல்லோரையும் விட புத்திசாலி என்றும், வழக்கில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும் என்றும் அவர் தன்னை நம்பியிருந்ததாக காலண்டர் கூறினார்.

 
ஹாரிசன்
படக்குறிப்பு,

திருமணம் நடந்த மூன்று ஆண்டுகளில் தனது மனைவியை விவாகரத்து செய்த ஹாரிசன், விவாகரத்து நடந்த ஒரே ஆண்டில் அவரை கொலையும் செய்துள்ளார்.

ஹாரிசன் மற்றும் பிரெண்டாவின் வாழ்க்கை

ஹாரிசன் மற்றும் பிரெண்டா பேஜ், 1972 இல் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், தனது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை என்று பிரெண்டா தனது நெருங்கிய நண்பர்களிடம் கூறி வந்தார். தன்னுடைய கணவனைக் கண்டால், பயமாக இருப்பதாகவும் சொல்லிக்கொண்டே இருந்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் பிரிந்தனர். பிரெண்டா பேஜ், அடுக்குமாடி குடியிருப்பில் சொந்தமாக ஒரு வீடு வாங்கினார்.

விவாகரத்துக்குப் பிறகும் ஹாரிசன், பிரெண்டாவை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்ததாக பிரெண்டா பேஜின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர் மற்ற ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஹாரிசன் சந்தேகிப்பதாக பிரெண்டா தங்களிடம் கூறியதாக பிரெண்டாவின் குடும்ப உறுப்பினர்கள் கூறினர்.

பிரெண்டாவின் 59 வயதான மருமகன் கிறிஸ் லிங், வழக்கு விசாரணையின்போது, தினமும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

"நீதிமன்றத்திற்கு வருவது மிகவும் விசித்திரமான உணர்வு. எனது அத்தையைக் கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பல ஆண்டுகளாக எங்களுடனே இருந்தார். அவர் எங்கள் கண் முன்னே தான் இருந்தார்," என லிங் பிபிசியிடம் கூறினார்.

டிஎன்ஏ தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாக, குற்றம் சாட்டப்பட்டவர்களை தற்போது அடையாளம் காண முடிந்ததற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணைக்காக, 40 ஆண்டுகளில் 4 ஆயிரம் சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மூன்று ஆயிரம் பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. வழக்கு விசாரணைக்கு பிறகு சுமார் 500 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

https://www.bbc.com/tamil/articles/cq57pn33q4xo

ரஷ்யாவுக்கு எதிராக, இங்கிலாந்துக்கு சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை நகர்த்துகிறதா அமெரிக்கா?

1 month 3 weeks ago
அமெரிக்கா vs ரஷ்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாட் பிரேசி
  • பதவி, பிபிசி நியூஸ், சஃபோல்க்
  • 30 நிமிடங்களுக்கு முன்னர்

இங்கிலாந்தின் சஃபோல்க்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்திற்கு மீண்டும் அணு ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 ஆண்டுகளுக்குப் முன் சஃபோல்க் தளத்தில் இருந்து அனைத்து அணு ஆயுதங்களையும் திரும்பப் பெற்றுக் கொண்டது அமெரிக்கா.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட 'லிட்டில் பாய்' என்ற அணுகுண்டை விட பன்மடங்கு சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான வசதிகள் சஃபோல்க்கின் ஆர்ஏஎப் லேகன்ஹீத் (RAF Lakenheath) தளத்தில் உருவாக்கப்பட்டு வருவதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்காவின் திட்டங்கள்
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,GOOGLE EARTH

படக்குறிப்பு,

அமெரிக்க விமானப்படையால் மட்டுமே பயன்படுத்தப்படும் லேகன்ஹீத் தளம் மீண்டும் அணு ஆயுதங்களை சேமிக்க தயாராகி வருவதாக அமெரிக்க அரசாங்க ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்தில் தற்போது 48வது ஃபைட்டர் விங் எனும் அமெரிக்க விமானப்படைப் பிரிவு உள்ளது. இந்தப் பிரிவு லிபர்ட்டி விங் என்றும் அழைக்கப்படுகிறது. F-35A லைட்னிங் II எனும் அதிநவீன போர் விமானங்கள் இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய அமெரிக்க விமானப்படை (United States Air Force- யுஎஸ்ஏஎப்) அறிக்கைப்படி, போர்க்களத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, குறுகிய தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ஆயுதமான B61-12 தெர்மோநியூக்ளியர் குண்டை இந்த போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல வெற்றிகரமாக சோதனைகள் செய்யப்பட்டன.

ஆர்ஏஎப் லேகன்ஹீத்தின் 'எதிர்கால அணுசக்தி திட்டத்திற்கு' தேவையான பாதுகாப்பான தங்குமிடங்களை கட்டுவதற்கான ஒப்பந்தம் குறித்து விவரிக்கும் ஆவணங்கள் அமெரிக்க பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்டன. பின்னர் அவை திரும்பப் பெறப்பட்டன .

இந்த விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கான தங்குமிடங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் அவை.

கூடுதலாக, அமெரிக்க இராணுவத் துறை பட்ஜெட் ஆவணத்தின்படி , இந்த சஃபோல்க் தளத்தின் அடித்தளத்தில் 'ஷுரிட்டி டார்மிட்டரி' (surety dormitory) எனப்படும் வசதியை உருவாக்க லட்சக்கணக்கான டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அணு ஆயுதங்களுக்கான சேமிப்பு வசதிகள் என கூறப்படுகிறது.

ஆர்ஏஎப் தளம் 1941இல் லேகன்ஹீத்தில் திறக்கப்பட்டு, இரண்டாம் உலகப் போரின் போது செயல்பட்டது.

நேட்டோவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பனிப்போர் தீவிரமடைந்ததால், அமெரிக்க விமானப்படை 1951இல் தளத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது .

தளத்தில் 4,000 அமெரிக்க இராணுவ வீரர்களும் மேலும் 1,500 பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க சிவிலியன் ஊழியர்களும் உள்ளனர்.

ஆயுதங்கள் சஃபோல்க்கிற்கு கொண்டு வரப்படுமா?
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பேராசிரியர் சர் லாரன்ஸ் ஃப்ரீட்மேன்

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுகள் துறையின் பேராசிரியரான சர் லாரன்ஸ் ஃப்ரீட்மேன், "இந்த திட்டங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இருக்கலாம்" என கூறினார்.

"ஒருவேளை ஐரோப்பாவில் உள்ள தளங்களில் இருந்து மற்ற ஆயுதங்கள் அகற்றப்பட்டால், தங்குமிடங்கள் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கலாம்" என்கிறார் அவர்.

"சேமிப்பு வசதியை உருவாக்குவது ஒரு விஷயம் என்றால், அமெரிக்க ஆயுதங்கள் பிரிட்டனில் இருக்கப் போகிறது என்ற உண்மையை மறைப்பது மற்றொரு விஷயம். எனவே இந்த நடவடிக்கை என்பது நாடுகளுக்கிடையேயான ஆயுதப் போட்டியில் ஏதோ ஒரு பெரிய மாற்றமாக இல்லாமல், ஒரு சாதாரணமான நடவடிக்கையாகவும் கூட இருக்கலாம்" என அவர் கூறினார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் அணு ஆயுதங்கள் இருப்பதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ கூடாது என்ற கொள்கையை நீண்ட காலமாக இங்கிலாந்து மற்றும் நேட்டோ கடைபிடித்து வருகிறது.

 
ரஷ்யாவுக்கு பதிலடியாக அமெரிக்கா நடவடிக்கையா?
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,USAF

படக்குறிப்பு,

B61-12 தெர்மோநியூக்ளியர் வெடிகுண்டு மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்தின் விமானத்தில் ஏற்றப்படுகிறது

அமெரிக்கா vs ரஷ்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் F-35A லைட்னிங் II எனும் அதிநவீன விமானம்

"இந்த திட்டங்கள் யுக்ரேனில் நிலவும் சூழ்நிலையுடன் தொடர்புடையவை என்று நான் நினைக்கவில்லை" என்கிறார் சர் லாரன்ஸ்.

"ரஷ்யாவுடன் அதிகரித்து வரும் பதற்றத்தின் காரணமாக இது இருக்கலாம்," என்று அவர் கூறினார்.

ஆனால் நேட்டோவின் முன்னாள் மூத்த அதிகாரியான வில்லியம் அல்பர்கி கூறுகையில், "ரஷ்யாவின் நடவடிக்கைகளால் ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வரும் ஆபத்தான அச்சுறுத்தல் சூழலுக்கு இது ஒரு பதிலடி" என்கிறார். இவர் இப்போது சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

பெலாரஸில் ரஷ்ய அணுசக்தி படைகள் நிலைநிறுத்தப்பட்டது, உக்ரைன் மீதான படையெடுப்பு மற்றும் விளாடிமிர் புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல்கள் பெருமளவில் அதிகரித்தது போன்றவற்றை அவர் மேற்கோள் காட்டினார்.

அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,WILLIAM ALBERQUE

படக்குறிப்பு,

முன்னாள் மூத்த நேட்டோ அதிகாரி வில்லியம் அல்பர்கியின் கூற்றுப்படி, ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளம் ஏற்கனவே ரஷ்ய இலக்காக மாறிவுள்ளது

'இந்த தளம் ரஷ்யாவின் இலக்காக மாறும்'
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,HANS KRISTENSEN

படக்குறிப்பு,

அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டென்சன் ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கான அமெரிக்க பாதுகாப்புத் துறையின் திட்டங்களைக் கண்காணித்து வருகிறார்.

அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் ஹான்ஸ் கிறிஸ்டென்சன். அணு ஆயுதங்கள் ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கு மீண்டும் கொண்டு வரப்படுவதற்கான சாத்தியங்கள் குறித்து குரல் எழுப்பிய முதல் நபர்களில் இவரும ஒருவர்.

"ஒரு தளத்தில் அணு ஆயுதங்கள் இருந்தால், அந்த தளம் ரஷ்யாவுடனான அணுசக்தி மோதலில் இலக்காகக் கூடும் என்பதில் சந்தேகமில்லை" என்று அவர் கூறினார்.

"ஒரு நாடு அணு ஆயுதங்களை வைத்திருந்தால், பின் அது ஒரு வித்தியாசமான போர் விளையாட்டாக மாறும் என்பதில் சந்தேகமில்லை" என்றும் கிறிஸ்டென்சன் கூறுகிறார்.

ஆனால், "இந்த தளம் இப்போதே ரஷ்யாவின் இலக்காக மாறியிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன" என்று அல்பர்கி கூறினார்.

"நான் ஒரு ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த திட்டமிடும் நிபுணராக இருந்தால், இந்த தளத்தை தாக்க முன்பே முடிவு செய்திருப்பேன். நீங்கள் ரஷ்ய தொலைக்காட்சிகளைப் பார்த்தால், இங்கிலாந்தைப் பற்றியும் இங்கிலாந்தைத் தாக்குவது பற்றியும் அதிகம் பேசுகிறார்கள்" என்கிறார் அவர்.

இங்கிலாந்திற்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அங்கீகாரம் அளிப்பார் என்று அல்பர்கி நம்புகிறார்.

மேலும், "அவர் திறமையானவர் என்று சொல்வது மிகையாக இருக்கும். பிரச்னைக்கான தீர்வு இல்லை என்றோ அல்லது பின்விளைவுகள் வராது என நினைத்தாலோ, அவர் இதைச் செய்வார் என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.

 
அடுத்து என்ன நடக்கும்?
அணு ஆயுதங்களை இங்கிலாந்திற்கு அனுப்பும் அமெரிக்கா

பட மூலாதாரம்,JOHN FAIRHALL/BBC

படக்குறிப்பு,

அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசார அமைப்பைச் சேர்ந்த கேட் ஹட்சன், சஃபோல்க்கில் அணு ஆயுதங்கள் நிலை நிறுத்தப்படக்கூடாது என விரும்புகிறார்

அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசார அமைப்பு (Campaign for Nuclear Disarmament- சிஎன்டி) ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தது.

சிஎன்டி பொதுச் செயலாளர் கேட் ஹட்சன் பேசுகையில், "இங்கே அணு ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டால், நாங்கள் அதை அகற்ற வலியுறுத்துவோம்." என்றார்.

'ஷுரிட்டி டார்மிட்டரி' தங்குமிடத்தை கட்டுவது சட்டப்பூர்வமானதா என்பதை ஆராய சட்ட நிறுவனமான லீ டேக்கு (Leigh Day) இந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

வழக்கறிஞர் ரிக்கார்டோ காமா இதுகுறித்து பேசுகையில், "லேகன்ஹீத் தளத்தில் அணுகுண்டுகளை சேமிப்பது குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தாது என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. ஆனால், அந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் விமானப்படை தளத்தில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதன் சாத்தியமான சுற்றுச்சூழல் விளைவுகளை அவர்கள் புறக்கணித்ததாக வாதிடுகின்றனர் சிஎன்டி அமைப்பினர். அணுசக்தி விபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் உட்பட" என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cw540x9nkl5o

அமெரிக்காவை அச்சுறுத்தும் ரஷ்யாவின் புதிய ஆயுதம் - நவீன போர்க்களமாக மாறுகிறதா விண்வெளி?

1 month 3 weeks ago
ரஷ்யா உருவாக்கும் புதிய ஆயுதத்தால், அமெரிக்கா கவலை

பட மூலாதாரம்,EPA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜெஆர்
  • பதவி, பிபிசி செய்திகள், வாஷிங்டன்
  • 17 பிப்ரவரி 2024

ரஷ்யா ஒரு புதிய ஆயுதத்தை உருவாக்கி வருவதாகவும், அது தனக்கு கவலையளிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. எனினும், அந்த ஆயுதத்தை ரஷ்யா இன்னும் பயன்படுத்தவில்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரின் அறிக்கைக்கு ஒரு நாள் பிறகு, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி இதனைத் தெரிவித்தார்.

இந்த ஆயுதம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் என குடியரசுக் கட்சி எம்.பி., ஜான் கிர்பி, பிரதிநிதிகள் சபையில் எச்சரித்துள்ளார்,

இந்த ஆயுதத்தை விண்வெளியில் பயன்படுத்த முடியும் என சிபிஎஸ் செய்தி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் அணுசக்தி பொருத்தப்பட்டு செயற்கைக்கோள்களை தாக்க பயன்படுத்த முடியும். இந்த தகவலை ஜான் கிர்பி உறுதிப்படுத்தவில்லை. மேலும், இந்த அச்சுறுத்தல் குறித்த கூடுதல் தகவல்களை வழங்க அவர் மறுத்துவிட்டார்.

ரஷ்யா உருவாக்கும் புதிய ஆயுதத்தால், அமெரிக்கா கவலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மறுபுறம், அமெரிக்காவின் கூற்றை மறுத்துள்ள ரஷ்யா, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமெரிக்க காங்கிரஸை கட்டாயப்படுத்தி, உக்ரைனுக்கு கூடுதல் நிதியை எப்படியாவது ஏற்பாடு செய்வதற்கான கூட்டுச்சதி இது என ரஷ்யா கூறியுள்ளது.

சமீபத்தில், ஜான் கிர்பி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்த ஆயுதம் குறித்து பேசிய அவர், அமெரிக்க மக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

“நாங்கள் மனிதர்களைத் தாக்கும் ஆயுதம் அல்லது பூமியில் ஏதேனும் தீங்கு விளைவிக்கக் கூடிய ஆயுதம் குறித்து பேசவில்லை,” என்று கூறினார்.

இது குறித்து அதிபர் ஜோ பைடனுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறும், ஜான் கிர்பி, பைடன் தலைமையிலான அரசு இந்தப் பிரச்னையை 'மிகவும் தீவிரமாக' எடுத்துக் கொண்டதாகக் கூறினார்.

இந்த விவகாரத்தில் ரஷ்யாவுடன் நேரடி இராஜ தந்திர தொடர்பை ஏற்படுத்த அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 
ரஷ்யா உருவாக்கும் புதிய ஆயுதத்தால், அமெரிக்கா கவலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுக் குழுத் தலைவர் மைக் டர்னர் புதன்கிழமை அன்று தேசிய பாதுகாப்பு எதிர்கொள்ளும் கடுமையான சவால்கள் குறித்த சமிக்ஞைகளை எச்சரித்தார்.

அவரது அறிக்கைக்குப் பிறகு, அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் வசந்திகள் பரவத் தொடங்கின.

இருப்பினும், விண்வெளி ஆயுதங்களைப் பற்றி பேசும் போதெல்லாம், ஒரு அறிவியல் புனைகதை நாவல் குறிப்பிடப்படுவது போல் தெரிகிறது.

ஆனால், தொழில்நுட்பத்தை சார்ந்து இருக்கும் உலகில் விண்வெளி அடுத்த போர்க்களமாக இருக்கும் என்று ராணுவ வல்லுநர்கள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர்.

அமெரிக்க இதை எப்படி அணுகுகிறது?
ரஷ்யா உருவாக்கும் புதிய ஆயுதத்தால், அமெரிக்கா கவலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜான் கிர்பியின் கருத்துகளைத் தவிர, அமெரிக்க அரசு அதிகாரிகள் இந்த அச்சுறுத்தல் பற்றிய எந்த உறுதியான தகவலையும் இன்னும் வெளியிடவில்லை.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், அமெரிக்க அரசு தெரிந்தே மெளனமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அச்சுறுத்தல் பற்றிய தகவல்களை சேகரிக்க அமெரிக்க உளவு அமைப்புகள் செயல்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நியூயார்க் டைம்ஸ், ஏபிசி மற்றும் சிபிஎஸ் போன்ற செய்தி நெட்வொர்க்குகள் தங்கள் அறிக்கைகளில், இந்த அச்சுறுத்தல் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் ஆயுதத்தால் வந்ததாகக் கூறியது. இது விண்வெளியில் அமெரிக்க செயற்கைக்கோள்களைத் தாக்க பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் அமெரிக்கா இந்த அச்சுறுத்தலை 'மிக தீவிரமாக' எடுத்துக் கொள்கிறது என்றார்.

 
ரஷ்யா உருவாக்கும் புதிய ஆயுதத்தால், அமெரிக்கா கவலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பல ஆண்டுகளாக ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவுடன் போட்டியிட விண்வெளியில் தங்கள் ராணுவத் திறன்களை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்க அதிகாரிகளும், விண்வெளி நிபுணர்களும் கூறி வருகின்றனர்.

அமெரிக்காவின் சிந்தனைக்குழுவான ஸ்ட்ராடிஜிக் அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ்(Strategic and International Studies), கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில், ரஷ்யா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்களை உருவாக்கி வருவதாகக் கூறியிருந்தது. நவம்பர் 2021 இல், செயலிழந்த ஒரு சோவியத் கால செயற்கைக்கோளுக்கு எதிராக ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட ஒரு சம்பவத்தையும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

இந்த அறிக்கையின் ஆசிரியர்களின் ஒருவரும், அமெரிக்க பாதுகாப்புத்துறையின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியுமான பிங்கன் பிபிசியிடம் பேசுகையில், உக்ரைனுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யா ஏற்கனவே பல வழிகளை முயற்சித்துள்ளதாகக் கூறினார்.

அவர்களின் முயற்சியில் செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை சீர்குலைக்க சைபர் தாக்குதல் நடத்துவதும் அடக்கும் என்றார் பிங்கன்.

"இவை அனைத்தும் ஏற்கனவே ரஷ்யாவின் தாக்குதல் முறைகளில் உள்ளன,"என்றார் அவர்.

 
ரஷ்யாவின் புதிய ஆயுதத்தால் அமெரிக்காவுக்கு என்ன அச்சுறுத்தல்?
மைக் டர்னர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அமெரிக்கப் புலனாய்வுக்குழுத் தலைவர் மைக் டர்னர், ரஷ்யாவின் புதிய ஆயுதம் குறித்து ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் உள்ளிட்ட அமெரிக்க காங்கிரஸின் மூத்த தலைவர்கள், மக்களை இப்போதே எச்சரிக்க வேண்டியதற்கான அவசியம் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

மைக் டர்னர் மக்களை எச்சரித்ததற்காக விமர்சனங்களை எதிர்கொள்கிறார். அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த ஆண்டி ஓகல்ஸ் இது அலட்சியம் என்று கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்க செயற்கைக்கோள்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமானால் அது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்களும், முன்னாள் அரசு அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க ராணுவம் செயற்கைக்கோள் தகவல் தொடர்பைத்தான் பெருமளவு நம்பியுள்ளது.

அதில், கண்காணிப்பு, ஏவுகணை ஏவுதல்களைக் கண்டறிதல், வான் மற்றும் கடல் தாக்குதல் முதல் ஜிபிஎஸ் வழிகாட்டுதல் மூலம் இலக்கை தாக்கும் குண்டுகள் மற்றும் போர்க் களத் தொடர்பு வரை அனைத்திற்கும் செயற்கைக்கோள்களைத்தான் அமெரிக்கா பயன்படுத்துகிறது.

 
ரஷ்யா உருவாக்கும் புதிய ஆயுதத்தால், அமெரிக்கா கவலை

பட மூலாதாரம்,REUTERS

காரி பிங்கன் அமெரிக்க பாதுகாப்புத் துறையில் இரண்டாவது உயர் மட்ட உளவுத்துறை அதிகாரியாக இருந்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,"இன்று நமது ராணுவம் போராடும் விதம் மற்றும் நாம் முதலீடு செய்யும் ஆயுதங்கள் அனைத்தும் நமது விண்வெளி திறன்களைப் பொறுத்தது. அது இல்லாவிட்டால், நாம் ஒரு கடினமான சூழ்நிலையில் இருப்போம். நாங்கள் இப்படி போராடக் கற்றுக்கொண்டோம். எங்களால், அது இல்லாமல் போராட முடியாது,” என்றார்.

இருப்பினும், ராணுவத் தேவைகளைத் தவிர, ஜிபிஎஸ் போக்குவரத்து சேவை, உணவு விநியோகம் மற்றும் வானிலை தகவல் போன்ற பல இடங்களில் செயற்கைக்கோள்களும் பயன்படுத்தப்படுகின்றன.

விவசாயம் முதல் சிக்னல் சார்ந்த நிதி பரிவர்த்தனைகள் வரை அனைத்திலும் இது தேவைப்படுகிறது.

தொடர்ந்து பேசிய காரி பிங்கன்,"செயற்கைக்கோள்கள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். அமெரிக்கர்களும் உலகெங்கிலும் உள்ள மக்களும் விண்வெளியை நம்பியிருக்கிறார்கள்," என்றார்.

 
விண்வெளி ஆயுதங்கள் தொடர்பாக உள்ள விதிகள் என்ன?
ரஷ்யா உருவாக்கும் புதிய ஆயுதத்தால், அமெரிக்கா கவலை

பட மூலாதாரம்,AIRBUS

கோட்பாட்டளவில் அவர்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாது என்றாலும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ள செயற்கைக்கோள்களை தாக்கும் திறன் உள்ளது.

மூன்று நாடுகளும் 1967 விண்வெளி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன, அதன் மூலம் ஆயுதம் ஏந்திய எதையும் பூமியின் சுற்றுப்பாதையில் அனுப்ப முடியாது.

தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், இந்த ஒப்பந்தம் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை என்று முன்னாள் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரியான மிக் முல்ராய் கூறினார்.

"ரஷ்யா தான் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை முற்றிலும் புறக்கணித்துள்ளது. அது அனைத்து சர்வதேச விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறி உக்ரைனுக்கு எதிராக ராணுவ பலத்தை பயன்படுத்தியது. அந்த நாடு தனது சொந்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை,"என்றார் அவர்.

நவீன போர்க்களமாக மாறுகிறதா விண்வெளி?

அமெரிக்க மூலோபாய விவகார காங்கிரஸின் உறுப்பினரும், முன்னாள் அதிபர்களான புஷ், ஒபாமா மற்றும் டிரம்ப் ஆகியோரின் காலத்தில் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரியாக இருந்த மேத்யூ குரோனிங் பிபிசியிடம் பேசினார். அப்போது அவர், உலகெங்கிலும் உள்ள ராணுவ சக்திகள் விண்வெளியில் ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியமில்லை என்று கூறினார்.

"ஒரு காலத்தில், மனிதர்கள் விண்வெளியை ஆராய்ந்தனர். இப்போது நாம் விண்வெளியை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு சகாப்தத்தில் நுழைகிறோம், நாம் இன்னும் அதன் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம்," என்றார்.

இந்தக் கட்டத்தில், உலகெங்கிலும் உள்ள சக்திகள் விண்வெளியில் தங்கள் கட்டுப்பாட்டை நிறுவுவதில் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.

"வானமும் கடல்களும் இலவசம் மற்றும் வணிக ரீதியாக நாம் விரும்பியபடி பயன்படுத்த முடியும் என்பதை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்கிறோம்,” என்றார் மேத்யூ குரோனிங்.

"வரவிருக்கும் 30 ஆண்டுகளில் இதேபோன்ற இடத்தை நாம் பார்க்க விரும்புகிறோம், அங்கு சுதந்திரமான இருக்க முடியும், வர்த்தகம் செய்ய முடியும் மற்றும் அதை வாழக்கூடியதாக மாற்றவும் முடியும்." என்று கூறிய அவர், அது பாதுகாப்பான இடமாக இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cqedjjpj9p3o

நம் முன்னோர்கள் நரமாமிசம் உண்டது ஏன்? நாம் ஏன் அதைக் கைவிட்டோம்?

1 month 3 weeks ago
தி ஸ்னோ சொசைட்டி

பட மூலாதாரம்,NETFLIX

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜோஸ் லூயிஸ் குயில் குரேரோ
  • பதவி, தி கன்வர்ஷேசன்
  • 18 பிப்ரவரி 2024, 07:40 GMT

கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ’.

இந்தப் படம், அதீதமான ஒரு சூழ்நிலையில் மக்கள் நரமாமிசம் உண்பதைப் பற்றிப் பேசுகிறது.

ஆண்டிஸ் மலைத்தொடரில் விமான விபத்தில் சிக்கிய உருகுவே நாட்டு மக்கள் குழுவின் உண்மைக் கதை அது. அந்தக் குழுவினர், தங்களுடன் பயணித்த தோழர்களின் சடலங்களை உண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால், படத்தில் வரும் பனிக்கட்டிகளின் பின்னணியில் நமக்குள் நாமே எதிர்கொள்ளும் ஒரு கேள்வியும் எழுகிறது: நாம் எப்போது, எந்த நேரத்தில், மனித மாமிசத்தை சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்?

ஹோமினிட் ஆகிய நாம், நமது பரிணாம வரலாற்றின் பல்வேறு காலக்கட்டத்தில் அதைச் செய்துள்ளோம். ஒரு வேளை, அது அந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட தேவையின் காரணமாகக் கூட நாம் அதைச் செய்திருக்கலாம்.

 
நரமாமிசம், மனித பரிணாமத்தின் ஒரு பகுதி

சுமார் 14.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, கென்யாவில், நம் முன்னோர்கள் ஒருவரை ஒருவர் அறுத்துக் கொன்றனர் என்பதற்கான மிகப் பழமையான ஆதாரம் உள்ளது. கால் முன்னெலும்பில் உள்ள வெட்டுக் குறியின்படி, நம் முன்னோர்கள் ஒருவரை ஒருவர் சாப்பிட்டுள்ளனர்.

ஆனால், நரமாமிதத்தைப் பற்றிய மற்றொரு தகவல் என்னவென்றால், இந்தப் பழக்கம், தென்னாப்பிரிக்காவில் ப்ளியோ-ப்ளீஸ்டோசீன் காலத்தில், அதாவது சுமார் 25 முதல் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்த பழைய மனித இனத்திடமிருந்து வந்திருக்கலாம்.

இவர்களைத் தொடர்ந்து, பெரும்பாலான ஹோமினிட் இனத்தினர் (மனிதர்களை உள்ளடக்கிய குரங்குகளின் பரிணாமக் குடும்பம்), அடாபுர்காவின் ஹோமோ முன்னோர்கள் முதல், நியண்டர்தால்கள் முதல் வெவ்வேறு ஹோமோ சேபியன்ஸ் சமூகங்கள் வரை அனைவரும் நரமாமிசம் உண்டவர்கள் எனத் தெரிகிறது.

உதாரணமாக, அமெரிக்காவில் கொலம்பஸ் பார்த்த முதல் பழங்குடியினர் நரமாமிசம் உண்பவர்கள் என்பதற்காக சான்றுகள் உள்ளன. சில பசிபிக் தீவுகள் உட்பட பிற புவியியல் பகுதிகளில், நரமாமிசம் சமீப காலம் வரை நடைமுறையில் இருந்தள்ளது.

 
நரமாமிசம், மனித பரிணாமத்தின் ஒரு பகுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அமெரிக்காவில் கொலம்பஸ் பார்த்த முதல் பழங்குடியினர் நரமாமிசம் உண்பவர்கள் என்பதற்காக சான்றுகள் உள்ளன

‘நாம் வேட்டையாடுபவர்களாக இருந்தபோது நிறைய கொழுப்பு தேவைப்பட்டது’

நம்முடைய இனங்கள் மற்றும் நமக்கு முந்தைய உறவினர்கள், எந்த வகையான வாழ்விடத்திலும் வாழ பழகிக்கொள்ள வேண்டி இருந்தது. அந்தத் தன்மை, நமது உணவு முறையில் ஒரு தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

பூமியின் துருவப் பகுதிகளில் உறைபனிக்காலங்களில், அப்பகுதியில் உள்ள விலங்குகள் உண்ணும் உணவின் விகிதம், வெப்பமான பகுதிகளில் இருக்கும் விலங்குகளின் உண்ணும் உணவின் விகிதத்த விட அதிகமாக இருந்தது. மேலும், அங்கு வாழ்வதற்கான முக்கிய ஆற்றலாக, விலங்கின் கொழுப்பு இருந்தது.

இதற்கு மாறாக, தென் பிராந்தியங்களில், கார்போஹைட்ரேட் நிறைந்த தாவர உணவுகள் அதிகம் உண்ணப்படும்.

இதில், கொழுப்பைச் சார்ந்திருப்பது எப்போதும் இருந்து வந்துள்ளது. மற்ற காரணங்களுக்கிடையில், ஓமேகா-3 மற்றும் ஓமேகா-6 கொழுப்பு அமிலங்களை உட்கொள்ள வேண்டும். ஏனென்றால், இது, தற்கால மனிதர்கள் உள்ளிட்ட ஹோமினிட்களுக்கு மூளையின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமாகிறது.

உண்மையில், ஒமேகா-3 இன் குறைபாடு பல்வேறு நோய் தொற்றுகளுக்கு வழிவகுக்கிறது.

 
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட தாவரங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குதிரைகள் மற்றும் யானைகள் மான்களை விட அதிக ஓமேகா-3 ஐ கொண்டுள்ளன

எளிய வயிற்றைக் கொண்ட பாலூட்டிகளில் (ஹோமினிட்கள், குதிரைகள், கரடிகள், யானைகள் மற்றும் மாமத்கள்) ஒமேகா-3 நிறைந்த தோலடி கொழுப்பு உள்ளது.

மாறாக, சிக்கலான செரிமான அமைப்பு அல்லது ரூமினன்ட்கள் (ஆடுகள், கலைமான், மான் மற்றும் காட்டெருமை) கொண்ட விலங்குகளின் உடல்களில் உள்ள கொழுப்பில், இந்த வகை கொழுப்பு அமிலங்கள் குறைவாகவே காணப்படுகின்றது.

இதிலிருந்து நமது முன்னோர்களின் ஊட்டச்சத்து நிலை பெரும்பாலும் அவர்களின் இரையின் தேர்வைப் பொறுத்தது.

கற்கால ஹோமினிட்கள், வாழ்வாதாரத்திற்காக ஒரு சில வகையான விலங்குகளை நெருக்கமாகச் சார்ந்திருந்தனர் என்பதையும், தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததையும் நாம் அறிவோம்.

ஒமேகா-3 அமிலங்கள் நிறைந்த இரை அதிகமாகக் கிடைக்காதபோது என்ன நடந்தது?

பதில்: ஆளி விதைகள், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஒத்த வளங்கள் போன்ற ஒமேகா-3 இன் பிற தாவர ஆதாரங்களை நம்பியிருந்திருக்கலாம்.

இருப்பினும், யூரேசியாவில், நீண்ட பனிக் குளிர்காலத்தில், தாவர வளங்களும் பற்றாக்குறையாகவே இருந்தன.

இது ஒமேகா-3 குறைபாடு நோய்கள் அடிக்கடி வெளிப்படுவதற்கு காரணமாக இருந்திருக்கும், எனவே நீண்டகாலத்தில் ஹோமினிட் குழுவின் பரிணாம வளர்ச்சி சமரசம் செய்யப்பட்டிருக்கும்.

 
ஓமேகா-3 குறைபாடுக்கும் நரமாமிசத்திற்கும் என்ன தொடர்பு?

இந்த அனைத்து காரணங்களுக்காகவும், யூரேசியாவில், கற்காலத்தில், மாமிச உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதுவும், குறிப்பாக, பனிக்காலங்களில், மனிதர்கள் அவற்றையே நம்பியிருந்தனர்.

கார்போஹைட்ரேட்டுகளின் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, விலங்குகளின் கொழுப்பை உண்பதன் மூலம் தேவையான ஆற்றல் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும்.

இந்த விலங்கின் கொழுப்பு, ஒரே நேரத்தில், தேவையான ஆற்றல், ஒமேகா-3, மற்றும் ஒமேகா-6 ஆகியவற்றையும் வழங்கியது.

இருப்பினும், வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்தில், ஹோமினிட்கள், அதிக இரைப்பை கொண்ட விலங்குகளை சர்ந்திருந்தனர். ஆனால், அவற்றில் தேவையான, ஒமேகா-3 இல்லை.

இத்தகைய கடினமான சூழலில், ஹேமினிட்கள், ஒருவரையொருவர் சாப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டது. அது ஒமேகா-3 அளவை அவர்களுக்கு கூடுதலாக வழங்கியது.

சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு, நியண்டர்தால்களும் நவீன மனிதர்களும் ஒருவரையொருவர் வேட்டையாடி சாப்பிட்டிருக்கலாம், அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்த ஹோமினிட்கள் ஒருவரையொருவர் சாப்பிட்டிருக்கலாம்.

உண்மையில், இந்தச் சூழ்நிலையில் மிகவும் சுவையான ஒன்றாக ஹோமினிட்களின் மூளை இருந்திருக்கக்கூடும். அளவில் பெரிதாக இருந்த அது, தேவையான டி.எச்.ஏ-வை வழங்கியிருக்கக்கூடும். இது ஒரு வகை ஒமேகா -3 கொழுப்பு அமிலமாகும்.

எனவே, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நரமாமிசம் உண்ணப்பட்டிருக்கக் கூடியதன் சாத்தியத்தை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம் என்றே தோன்றுகிறது.

 
நரமாமிசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பூமியின் எல்லா பகுதியிலும் நரமாமிசம் உண்ணும் பழக்கம் இருந்ததா?

கற்கால யூரேசியாவில் ஒமேகா-3 அமிலத்தின் தேவைக்காக மனிதர்கள் நரமாமிசம் உண்டனர்.

சரி.

ஆனால் ஒமேகா-3 அமிலங்கள் அதிகமாகக் கிடைத்த பிற சூழல்களிலும் நரமாமிசம் உண்ணப்பட்டிருக்குமா?

ஆம் என்பதே பதில்.

பூமியின் தெற்குப் பகுதிகளில் ஒமேகா-3 அமிலங்களின் மூலங்களை அதிக அளவில் கிடைத்தாலும், மீன் அல்லது கொட்டைகள் போன்ற அமிலங்கள் நிறைந்த உணவுகள் எப்போதும் சரியான அளவில் கிடைத்திருக்காது.

ஊட்டச்சத்து மூலம் என்ற வகையிலும், எளிதில் பெறக்கூடிய ஒரு உணவு என்ற வகையிலும் மனித உடல் இருந்ததால், நரமாமிசம் உண்ணும் வழக்கம் எப்போதும் ஹோமினிட்களின் உயிர்வாழ்விற்கு பரிணாம ரீதியாகச் சாதகமாகவே இருந்திருக்கும்.

ஆனால், இதனால் நாம் வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பு சார்ந்த இனம் என்பது பொருளல்ல. மாறாக நாம் ‘நிபந்தனைகள் சார்ந்து வன்முறையாக’ இருந்திருக்கிறோம். அதாவது, கிடைக்கக்கூடிய ஆதாரங்களைப் பொறுத்து நமது நடத்தை மாறியிருக்க வேண்டும்.

அடுத்த முறை நீங்கள் ஒரு பல்பொருள் அங்காடிக்குச் சென்று, மீன், வால்நட், அல்லது ஆளி எண்ணெய் போன்ற ஒமேகா-3 நிறைந்த உணவுகள் உட்பட பல்வேறு வகையான உணவுகளைப் பார்க்கும்போது, நம் முன்னோர்களின் வள பற்றாக்குறையின் நீண்ட வரலாற்றை சில நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள்.

* ஜோஸ் லூயிஸ் குயில் குரேரோ, அல்மேரியா பல்கலைக்கழகத்தில் உணவு தொழில்நுட்பப் பேராசிரியராக உள்ளார்.

https://www.virakesari.lk/article/176674

சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்: டொனால்ட் ட்ரம்பிற்கு 355 மில்லியன் டொலர்கள் அபராதம்

1 month 3 weeks ago

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு 355 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்து நியூயோர்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்களை அளித்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னுடைய சொத்து மதிப்பு குறித்து தவறான தகவல்களை வழங்கி வந்ததாக ட்ரம்ப் மீது சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் நிறைவில், பெருந்தொகை அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப், அவருடைய இரு மூத்த மகன்கள், அவருடைய நிறுவனம், நிர்வாகிகள் ஆகியோர் திட்டமிட்டு தங்கள் சொத்துகள் பற்றி பொய்யான நிதி விபரங்களை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அளித்து, தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர்.

இந்த தீர்ப்பு காரணமாக ட்ரம்ப் குடும்பத்தினர் நடத்தி வரும் வணிக நிறுவனம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதுடன், நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் செயற்பட வேண்டிய கட்டாயமும் நேர்ந்திருக்கிறது.

மேலும், இதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடக் கூடிய வகையில் முன்னேறிவந்த டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ட்ரம்ப்க்கு அபராதம் 355 மில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ள போதும், அமெரிக்க சட்டப்படி அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பதால், அவர் சுமார் 450 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/292285

உலகம் முழுவதும் நடக்கும் விவசாயிகள் போராட்டம் - எதற்காக?

1 month 3 weeks ago
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் நடக்கும் விவசாயிகள் போராட்டம் - எதற்காக?
விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

17 பிப்ரவரி 2024

இந்தியாவில் மீண்டும் ஒருமுறை மத்திய அரசுக்கெதிரான விவசாயிகள் போராட்டம் தொடங்கியுள்ளது. குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இந்த முறை இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் பல்வேறு நாடுகளிலும் விவசயிகள் போராட்டட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள புதிய விதிகள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக போலந்து, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நாடுகள் அனைத்திலும் முக்கிய நகரங்களின் பிரதான சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் விவசாயிகள்.

ஆனால், எதற்காக இந்த விவாயிகள் போராடி வருகின்றனர்? அதற்கான காரணம் என்ன? ஐரோப்பியா மற்றும் இந்திய விவசாயிகளின் கோரிக்கைகள் இரண்டும் ஒன்றா?

 
விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,ERIC LALMAND/BELGA MAP/AFP

படக்குறிப்பு,

பல்வேறு நாடுகளில் விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது.

எந்தெந்த நாடுகளில் விவசாயிகள் போராட்டம் நடக்கிறது?

மேற்கு போலந்தை சேர்ந்த போஸ்னான் நகரின் சாலைகள் முழுதும் 1,400-க்கும் மேற்பட்ட டிராக்டர்களோடு விவாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே போலந்து, ஹங்கேரி, பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி, ருமேனியா ஆகிய நாடுகளில் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அவர்களது போராட்ட முறை ஒரே மாதிரியனதாக இருந்தாலும் கூட, ஒவ்வொரு நாட்டு விவசாயிகளுக்கும் கோரிக்கை வேறு வேறானதாக இருக்கிறது.

ஸ்பெயினை சேர்ந்த விவசாயிகள் சில முக்கிய நகரங்களுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். ஹங்கேரிய விவசாயிகள் யுக்ரேனிலிருந்து ஐரோப்பாவுக்குள் வரும் விவசாய பொருட்களை தடுத்து நிறுத்துவதற்காக டிராக்டர்களோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரான்ஸ் மற்றும் பாரிஸை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், ஐரோப்பா முழுவதிலும் உள்ள விவசாயிகள் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

 
விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,VILLAR LOPEZ/EPA-EFE/REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு,

விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு

ஐரோப்பிய விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் என்ன?

ஐரோப்பாவில் உள்ள விவசாயிகள் நான்கு முக்கிய பிரச்னைகளை முன்வைக்கின்றனர்.

  • விவசாயத்தில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு.
  • விவசாயத்தில் அதிகரித்து வரும் அரசின் தலையீடு.
  • பசுமை ஒப்பந்தத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியம் விவசாயிகள் மீது விதித்துள்ள விதிமுறைகள்.
  • ஐரோப்பா அல்லாத நாடுகளில் இருந்து இறக்குமதி அதிகரிப்பதால் உள்நாட்டு விளைபொருட்களின் விலை குறைவு.

ஐரோப்பாவைச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டு விவசாயிகளுக்கும் வெவ்வேறு பிரச்னைகள் உள்ளன. போலந்து மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விவசாயிகளுக்கு உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை விவசாய பொருட்களை தடுக்க வேண்டும்.

அதிக இறக்குமதியின் காரணமாக உள்ளூர் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை என்பதே அவர்களது வாதம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு எதிராக ஸ்பெயினை சேர்ந்த விவசாயிகளும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

 
விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்த விவசாயிகள் பட்டாசு வெடிப்பது மற்றும் குப்பைகளை சாலையில் கொட்டி தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

கிரீஸ் நாட்டைச் சேர்ந்த விவசாயிகள், மின்கட்டணம் குறைப்பு, டீசல் வரி ரத்து மற்றும் கால்நடைத் தீவனத்திற்கு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

இத்தாலியை சேர்ந்த விவசாயிகள் வருமான வரியில் இருந்து தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த விதிவிலக்கு ரத்து செய்யப்பட்டுள்ள முடிவை எதிர்த்து போராடி வருகின்றனர்.

போலந்து விவசாயிகள் மொத்தம் 256 இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

அங்கு விவசாயிகள் கையில் கொடிகளை ஏந்திக்கொண்டு முக்கியமான சாலைகளை முற்றுகையிட்டுள்ளனர். அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூற்றுப்படி, போஸ்னனில் மட்டும் 6,000 விவசாயிகள் கூடியுள்ளனர்.

இந்த விவசாயிகள் பட்டாசு வெடிப்பது மற்றும் குப்பைகளை சாலையில் கொட்டி தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

 
விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கிரீஸை சேர்ந்த விவசாயிகள் மின்கட்டணம் குறைப்பு, டீசல் வரி ரத்து மற்றும் கால்நடைத் தீவனத்திற்கு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்

ஐரோப்பிய ஒன்றியம் கார்பன் உமிழ்வு மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை 50% குறைக்க முடிவு செய்தது. ஆனால், விவசாயிகளின் எதிர்ப்பால் அந்த முடிவு திரும்ப பெறப்பட்டது. இருப்பினும், 2040-க்குள் கார்பன் உமிழ்வை 90% கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

ஸ்பெயினில் நான்காவது நாளாக பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடந்து வருவதால், பில்பாவ் போன்ற முக்கிய நகரங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது முக்கிய கோரிக்கைகளாக குறைந்தபட்ச ஆதாரவிலை உத்திரவாதம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை முன்வைத்துள்ளனர்.

ஒருவகையில் ஐரோப்பாவில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையில் இருந்து இது மாறுபட்டதாக உள்ளது.

 
விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

இந்திய விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?
  • குறைந்தபட்ச ஆதார விலைக்கான தனிச்சட்டம்.
  • எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.
  • 2020-2021-ஆம் ஆண்டுகளில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும்.
  • லக்கிம்பூர் கேரி வழக்கின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
  • மாசுக்கட்டுப்பாட்டு சட்டத்தில் விவசாயிகளை சேர்க்கக் கூடாது.
  • விவசாயிகளுக்கு உடனடி கடன் தள்ளுபடி வழங்க வேண்டும்.
  • 58 வயதுக்கு அதிகமான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

இந்தாண்டு (2024) இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. ஐரோப்பிய நாடுகள் இந்தியா போல விவசாயத்தை சார்ந்த நாடுகள் இல்லையென்றாலும் கூட, அங்கு விவசாயிகளால் அரசியலில் செல்வாக்கு செலுத்த முடியும்.

எனவே உலகம் முழுவதும் போராடி வரும் விவசாயிகளின் அடுத்தகட்டம் என்ன? இதனால் உலக அரசியலில் தாக்கம் ஏற்படுமா?

இந்த போராட்டங்களினால் இந்தியா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பா நாடுகளின் அரசியலில் ஏற்படும் தாக்கம் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

https://www.bbc.com/tamil/articles/cv20e2e217jo

புதினை கடுமையாக எதிர்த்த நஞ்சூட்டபட்ட அலெக்ஸி நவல்னி இறப்பு

2 months ago

புதினின் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டுவர முயன்ற, ரஷ்யாவுக்கு நல்லதை செய்ய முயன்ற  நவல்னி தளது  இலட்சியங்களுக்காக தன்னை தியாகம் செய்துள்ளார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.

காதலர் தினத்தில் திருமண பந்தத்தில் இணைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர்

2 months ago
15 FEB, 2024 | 11:41 AM
image
 

அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தனது நான்குவருடக கால தோழியுடன் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார்.

காதலர் தினத்தன்று  தனது நான்குவருடகால தோழிக்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட மோதிரத்தை வழங்கி தான் அவரை திருமணம் செய்ய விரும்புவதை தெரிவித்துள்ளார்.

பதவியிலிருக்கும் போது திருமணபந்தத்தில் இணைந்துகொண்ட முதலாவது அவுஸ்திரேலியபிரதமர் அன்டனிஅல்பெனிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அவள் ஆம் என தெரிவித்தாள் என்ற பதிவுடன் இந்த விடயத்தை அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிர்ந்து கொள்வது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். வாழ்க்கையின் ஏனைய பகுதி முழுவதும் ஒன்றாகயிருப்பது என தீர்மானித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் ஒருவரையொருவர் சந்திக்க முடிந்ததால் நாங்கள் அதிஸ்டசாலிகள் எனவும் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

அல்பெனிசிற்கு 60 வயது அவருடைய வாழ்க்கை துணையான ஹெய்டனிற்கு 40 வயது என்து குறிப்பிடத்தக்கது.

இருவரும் நான்கு வருடங்களிற்கு முன்னர் சந்தித்தனர்.

அவுஸ்திரேலிய நாடாளுமன்ற சகாக்களும் நியுசிலாந்து பிரதமர் உட்பட பலரும் வாழ்த்தியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/176428

நோயாளியை கொன்ற ‘எந்திரன்’; அறுவை சிகிச்சையில் நேரிட்ட விபரீதம்

2 months ago
கேன்சர் நோயாளியை கொன்ற ‘எந்திரன்’; அறுவை சிகிச்சையில் நேரிட்ட விபரீதம்

ரோபோ உதவியுடன் நடத்தப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சையில், அந்த எந்திரனின் தவறான செயல்பாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அமெரிக்காவில் பரிதாபமாக இறந்திருக்கிறார்.

எந்திரன்களின் அனுகூலங்கள் மருத்துவத்துறையிலும் அதிகரித்துள்ளன. மருத்துவ நிபுணரின் வழிகாட்டுதலின் பேரில், அவருக்கு வாய்த்திராத துல்லியம், ஓர்மை ஆகியவற்றுடன், ஓய்வின்றி அறுவை சிகிச்சைகளை நடத்தி முடிப்பதில் எந்திரன்கள் சிறப்பானவை. மேலும் ரிமோட் சிஸ்டம் அடிப்படையில் தொலைவில் இருந்து இந்த எந்திரனை, பயிற்சி பெற்ற மருத்துவர்கள் வழி நடத்துவது எளிது.

இப்படி நேர்மறை சாதகங்களை கொண்டிருந்தபோதும் இந்த எந்திரன்கள், மனித நுணுக்கம் மற்றும் ஆய்ந்தறியும் அறிவு இல்லாததன் காரணமாக விபரீதத்துக்கு வழி செய்கின்றன. அமெரிக்காவை சேர்ந்த ஹார்வி சுல்ட்ஸெர் என்பவர் தனது மனைவியின் பெருங்குடல் புற்று நோய்க்கு சிகிச்சை கோரி பாப்டிஸ்ட் ஹெல்த் போகா ரேடன் மண்டல மருத்துவமனையில் மனைவி சாண்ட்ரா சுல்ட்ஸெரை சேர்த்தார்.

அங்கே அறுவை சிகிச்சை மூலம் கேன்சர் பாதிப்பை அகற்றுவதற்கான மருத்துவம் பரிந்துரை செய்யப்பட்டது. பல்வேறு கரங்கள் கொண்ட ’டா வின்சி’ என்ற மருத்துவ ரோபா மூலம் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி சாண்ட்ராவின் பெருங்குடலில் பீடித்திருந்த கேன்சர், ’டா வின்சி’ எந்திரனின் மூலமாக அகற்றப்பட்டது. ஆனால் அந்த அறுவைசிகிச்சையின்போது எதிர்பாரா விதமாக, சிறுகுடலில் விழுந்த துவாரம் காரணமாக, சாண்ட்ரா மிகவும் பாதிப்புக்கு ஆளானார்.

புற்றுநோய் பாதிப்பு காரணமாக வாழ்நாளை எண்ணி வந்த சாண்ட்ராவை, முந்திக்கொண்டு சாகடித்திருக்கிறது ’டா வின்சி’ ரோபோவின் தவறான அறுவை சிகிச்சை. ஹார்வி தொடுத்திருக்கும் நீதிமன்ற வழக்கில், டா வின்சி ரோபோவின் பாதகங்கள் குறித்தும், அதன் தயாரிப்பு நிறுவனம் ரோபோவை முறையாக இயக்க வாய்ப்பில்லாத மருத்துவமனைகளுக்கும் அதனை விற்றது குறித்தும் தரவுகளோடு விளக்கி இருக்கிறார். மேலும் டா வின்சி இதற்கு முன்னதாக நடத்திய அறுவை சிகிச்சைகளால் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பான விசாரணையும் கோரியிருக்கிறார்.

https://thinakkural.lk/article/291961

அமெரிக்க கன்சாஸ்சிற்றியில் Football Parade இல் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி 20 பேர்வரை காயம்.

2 months ago

கன்சாஸ் சிட்டி சீஃப்ஸின் சூப்பர் பவுல் வெற்றிப் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் புதன்கிழமை குறைந்தது ஒருவர் இறந்தார் மற்றும் குறைந்தது 21 பேர் காயமடைந்தனர், தலைமைகளின் சமீபத்திய NFL பட்டத்தைக் கொண்டாடும் பாரிய கூட்டத்திற்கு ஒரு மகிழ்ச்சியான மதியத்தை உடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

3 பேர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை கண்டறிய அதிகாரிகள் இன்னும் பணியாற்றி வருகின்றனர் என்று கன்சாஸ் நகர காவல்துறை தலைவர் ஸ்டேசி கிரேவ்ஸ் தெரிவித்தார்.

இறப்பைத் தவிர, மேலும் 21 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று கன்சாஸ் நகர தீயணைப்புத் தலைவர் ரோஸ் கிரண்டிசன் தெரிவித்தார்.

https://www.cnn.com/2024/02/14/sport/kansas-city-chiefs-parade-super-bowl-patrick-mahomes-spt-intl/index.html

எஸ்தோனிய பிரதமரை தேடப்படுபவர்கள் பட்டியலில் இணைத்தது ரஸ்யா

2 months ago

Published By: RAJEEBAN   14 FEB, 2024 | 03:09 PM

image

உக்ரைனின் தீவிரஆதரவாளரான எஸ்தோனியாவின்  பிரதமர் காஜா காலசினை ரஸ்யா தேடப்படும் நபர் எனஅறிவித்துள்ளது.

குற்றவியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை ரஸ்யா தேடப்படும் நபராக அறிவித்துள்ளது.

எஸ்தோனியாவின் கலாச்சார அமைச்சர் உட்பட வேறு சில முக்கிய அதிகாரிகளையும் ரஸ்யா தேடப்படுபவர்களின் பட்டியலில் இணைத்துள்ளது.

வரலாற்று நினைவுகளை அவமதித்தமைக்காகவே இவர்களை தேடப்படுபவர்கள் பட்டியிலில் இணைத்துள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.

சோவியத்யூனியனின் போர்வீரர்களின் நினைவுச் சின்னங்களை அழித்தமை தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டுகளை ரஸ்யா சுமத்தியுள்ளது என ரஸ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நடவடிக்கை ஆச்சரியமளிக்கவில்லை என எஸ்தோனிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

நான் சரியான விடயங்களை செய்கின்றேன் என்பதை இது இன்னமும் வலுவாக நிரூபித்துள்ளது என தெரிவித்துள்ள அவர் உக்ரைனிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு பெரும்வெற்றி பெற்றுள்ளது. இது ரஸ்யாவிற்கு பாதிப்புகளை  ஏற்படுத்துகின்றது எனவும்தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை என்னை மௌனமாக்கும் என கிரெம்ளின் கருதுகின்றது. ஆனால் அது நடைபெறாது மாறாக இது உக்ரைனிற்கான எனது ஆதரவைமேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/176369

உலகெங்கும் தேர்தல் முறைகேடுகள் எப்படியெல்லாம் நடக்கின்றன தெரியுமா?

2 months ago
இந்தியா உள்பட உலகெங்கும் தேர்தல் முறைகேடுகள் எப்படியெல்லாம் நடக்கின்றன தெரியுமா?
ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தேர்தல் முறைகேடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், இசாரியா ப்ரைதாஞ்சியம்
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்த ஆண்டு, உலகின் இந்தியா உள்பட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் 400 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள்.

இந்தியா உள்பட உலகளவில் ஜனநாயகம் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். தேர்தல் நடைமுறைகளில் பல வழிகளில் மோசடிகள் நடக்கலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள், மேலும் அதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நேர்மையான தேர்தல் என்றால் என்ன?
ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தேர்தல் முறைகேடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் அதிகாரியான ரிக்கார்டோ செல்லேரி கூறுகையில், "வாக்காளர்களின் விருப்பங்களையும் அவர்கள் எப்படி வாக்களிக்கப் போகிறார்கள் என்பதையும் ஒரு முழு தேர்தல் செயல்முறை பிரதிபலிக்கும் போது, அதை ஒரு நேர்மையான தேர்தல் என்று அழைக்கலாம்.

அத்தகைய ஒரு தேர்தல் செயல்முறை மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும், அப்போது தான் அவர்கள் தேர்தல் நாளன்று வாக்களிக்க முன் வருவார்கள்" என்கிறார் செலேரி.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறையில், ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு பிரிவில் பணிபுரியும் செலேரி மேலும் கூறுகையில், "தேவையான அனைத்து தகவல்களையும் மக்கள் எளிதாக அணுகுமாறு இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். தேர்தல்கள் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும்" என்கிறார்.

செலேரியைப் பொருத்தவரை, "தேர்தல் என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அது வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிப்பது மட்டுமல்லாது, அனைத்து அரசியல் கட்சிகளும் பாரபட்சமின்றி இதில் பங்கேற்கவும் வன்முறை இல்லாமல் பரப்புரை செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும்" என்கிறார்.

பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஜனநாயகப் பேராசிரியரான டாக்டர். நிக் சீஸ்மேன் கூறுகையில், "வேட்பாளர்களும் குடிமக்களும் சுதந்திரமாகப் பங்கேற்று, பதிவான வாக்குகள் முறையாக எண்ணப்படுவது தான் ஒரு நல்ல தேர்தல். ஆனால் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தேர்தல் செயல்முறையின் தரம் குறைந்து வருகிறது என எனது ஆராய்ச்சியின் முடிவுகள் கூறுகின்றன" என்கிறார்.

தரம் குறைந்த தேர்தல்கள் வழக்கமாகி விடும் அபாயம் உள்ளது என்கிறார் அவர்.

டாக்டர் சீஸ்மேனின் கூற்றுப்படி, "எந்தவொரு தேர்தலும் ஆகச்சிறந்த முறையில் நடப்பதில்லை, ஆனால் நல்ல தரமான தேர்தல்கள் வாக்காளர்களுக்கு அவர்களின் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களின் தலைவர்களைக் கேள்வி கேட்பதற்கான அதிகாரத்தையும் அளிக்கின்றன."

 
தேர்தல் முறைகேடுகள் என்றால் என்ன?
ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தேர்தல் முறைகேடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு தேர்தல் முடிந்து அடுத்த தேர்தலுக்கான தயாரிப்பு வரை தேர்தல் செயல்முறை தொடர்கிறது. இந்த சுழற்சியில் எந்த நேரத்திலும் வாக்காளர்களை ஏமாற்ற முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"புதிதாக வருபவர்களே தேர்தல் நாளன்று மட்டும் மோசடிகளைத் திட்டமிடுகிறார்கள். ஆனால் இதில் வல்லுநர்களாக இருப்பவர்கள், ஒரு வருடத்திற்கு முன்பாகவே இதைத் திட்டமிடுகிறார்கள்" என டாக்டர் சீஸ்மேன் கூறுகிறார்.

தேர்தல் முறைகேடுகள் என்பது ஆளும் அரசு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்கு பெரிய அளவில் பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்துவது, எதிர்க்கட்சி செய்திகளைத் தடுக்க ஊடகங்களின் மீதான தணிக்கை மற்றும் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்குப் பதிவு செயல்முறையை மாற்றி அமைத்தல் ஆகியவை இந்த முறைகேடுகளில் அடங்கும்.

"வழக்கமாக நடப்பது என்னவென்றால், ஆளுங்கட்சி நடுநிலை இல்லாத நீதிபதிகளை நியமிக்கிறது. அதனால் இறுதி தேர்தல் முடிவுக்கு எதிரான எந்த மேல்முறையீடுகளும் நீதிமன்றங்களில் ஏற்றுக் கொள்ளப்படாது," என்கிறார் செல்லரி.

இதைப் பற்றிய பரவலான அச்சம் இருந்த போதிலும், அமெரிக்காவில் இது நடக்கவில்லை.

அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில், டொனால்ட் டிரம்ப் உச்ச நீதிமன்றத்திற்கு மூன்று நீதிபதிகளை நியமித்தார். இது உச்ச நீதிமன்றத்தில் 6-3 விகிதத்தில் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மைக்கு வழிவகுத்தது. ஆனால் 2020 ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்ததை எதிர்த்து டிரம்ப் சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது, அந்த வழக்கில் டிரம்பிற்கு உச்ச நீதிமன்றம் அதிக பெரும்பான்மையுடன் தீர்ப்பளித்தது.

ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தேர்தல் முறைகேடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தேர்தல்களில் முறைகேடு செய்வதற்கான மற்றொரு வழி, நியாயமற்ற ஆதாயங்களை அடையும் நோக்கில் தேர்தல் தொகுதிகளை மறுவரையறை செய்வது.

ஆளும் கட்சிகள் அல்லது அரசாங்கங்கள் தங்கள் பிரசாரங்களுக்காகவும், பொய்யான செய்திகளைப் பரப்பி தேர்தல் செயல்முறையை இழிவுபடுத்துவதற்கும், வாக்குகளை விலைக்கு வாங்குவதற்கும் பொது நிதியைப் பயன்படுத்துகின்றன.

"அமெரிக்காவில், தொகுதிகளை மறுவரையறை செய்தல், வாக்காளர்கள் மீதான அடக்குமுறை மற்றும் பொய்யான செய்திகள் பரவுவது ஆகியவை மிகவும் கவலைக்குரிய பிரச்னைகளாக இருக்கின்றன" என்கிறார் டாக்டர் சீஸ்மேன்.

"தேர்தலில் பிரசாரம் கூட இன்னும் தொடங்கப்படாத நிலையில், வாக்களிப்பதைப் பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஜனாதிபதியின் குரலில் ஒரு போலியான டிஜிட்டல் செய்தி வெளியானதை நாங்கள் ஏற்கனவே பார்த்தோம்" என்கிறார் அவர்.

எல் சால்வடார் மற்றும் இலங்கை தேர்தல்களின் போது பொய்யான செய்திகள் பரவுதல் மற்றும் தேர்தல் மோசடிகள், அரசியல் வன்முறைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக டாக்டர் சீஸ்மேன் கூறினார்.

 
தேர்தல் மோசடி என்றால் என்ன?
ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தேர்தல் முறைகேடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாக்களித்த பின் தேர்தல் முடிவை மாற்றும் முயற்சி இது.

வாக்குப்பெட்டியில் முன்பே நிரப்பப்பட்ட வாக்குச் சீட்டுகளை போடுவது, வாக்களித்த பிறகு எண்ணிக்கையை மாற்றுவது அல்லது எதிரணியினரின் வாக்குகளை அழிக்க வாக்குப்பெட்டிகளை அழிப்பது ஆகியவை இதில் அடங்கும்.

ரஷ்யாவின் 2021 நாடாளுமன்றத் தேர்தலின் போது நடந்த மூன்று நாள் வாக்குப்பதிவில், பரவலான தேர்தல் மோசடிகள், முன்பே நிரப்பப்பட்ட வாக்குச் சீட்டுகளை வாக்குப்பெட்டிகளில் போட்டது மற்றும் தேர்தல் பார்வையாளர்களுக்கு எதிரான மிரட்டல் போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

இணையத்தில் பலரால் பகிரப்பட்ட வீடியோக்களில் மக்கள் வாக்குப் பெட்டிகளில் காகிதங்களைத் திணிப்பதைக் காண முடிந்தது.

எவ்வாறாயினும், எந்தவொரு 'தீவிரமான தேர்தல் விதிமீறல்களையும்' பதிவு செய்யப்படவில்லை என்று கூறியது ரஷ்ய அரசாங்கம்.

"ஆனால், முழு தேர்தல் செயல்முறையும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், நீங்கள் எளிதாக 'பொய்' சொல்லலாம் அல்லவா" என்கிறார் 'How to Rig an Election' புத்தகத்தின் இணை ஆசிரியர் டாக்டர் சீஸ்மேன்.

தேர்தல் செயல்முறை மிகவும் சிறப்பாகப் பேணப்படும் நாடுகளில் கூட வாக்கு மோசடிகள் நடக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

இந்த நாடுகளின் பல வாக்குச்சாவடிகளில், வாக்குகள் பதிவாவதை கண்காணிக்கவும், தேர்தல் முடிவுகளை கணக்கிடவும் உள்நாட்டு தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் உள்ளனர்.

கானாவில் 2016இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலைக் குறிப்பிடுகிறார் டாக்டர் சீஸ்மேன், அங்கு எதிர்க்கட்சிகள் தேர்தல் முடிவுகளைக் கண்காணிக்க ஒரு கைப்பேசி செயலியைப் பயன்படுத்தின.

இதற்கிடையில், 2021இல் ஜாம்பியாவில், உள்நாட்டு தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேவாலயக் குழுக்கள் சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஒரு வாக்காளர் பட்டியலைத் தயாரித்தன. இதனால் துல்லியமான தேர்தல் முடிவுகளை வெளியிட தேர்தல் கமிஷனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த முறையை பின்பற்றுவது மிகவும் கடினமாகிவிட்டது என்று டாக்டர் சீஸ்மேன் கூறுகிறார். ஏனெனில் தேர்தலின் போது சிவில் சமூகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த சட்டங்களை இயற்றியுள்ளன சர்வாதிகார அரசாங்கங்கள்.

"தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் செயல்முறையின் கடைசி பகுதியை மட்டுமே கண்காணிக்கிறார்கள், ஆரம்ப கட்ட மோசடிகளை அவர்களால் தடுக்க முடியாது" என்கிறார் செலேரி.

ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தேர்தல் முறைகேடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

2023 டிசம்பரில், காங்கோ மக்களாட்சிக் குடியரசில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

எதிர்க்கட்சிகளால் தேர்தலில் மோசடி செய்ய முடியுமா?

டாக்டர் சீஸ்மேன் கூறுகையில், "எதிர்க்கட்சிகளும் ரகசியமான முறையில் மோசடிகளைச் செய்யலாம், அதிலிருந்து தப்பிக்கவும் அவர்களால் முடியும்.

"தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் டொனால்ட் டிரம்ப் போன்ற ஒருவர், அனைத்து வகையான குற்றச்சாட்டுகளையும் ஆளும் அரசின் மீது சுமத்தலாம். அதில் சில உண்மையானதாகவும், அதிகம் பொய்யானதாகவும் இருக்கலாம். ஆளும் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முயற்சியாக அவர் அதைப் பயன்படுத்தலாம்."

 
ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதா?
ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தேர்தல் முறைகேடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் அதிகாரியான ரிக்கார்டோ செல்லேரி கூறுகையில், "நாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள தேவையில்லை. உலக அளவில் ஜனநாயகத்தின் மோசமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜனநாயகம் சரிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்" என்கிறார்.

பலவீனமான பொருளாதாரம் மற்றும் சதி கோட்பாடுகளை பரப்புவதில் சமூக ஊடகங்களின் எதிர்மறையான தாக்கம் இதற்கு காரணம் என்று அவர் கூறுகிறார்.

ஜனநாயகத்தின் எதிர்காலம் இந்த ஆண்டு தேர்தல் முடிவுகளை சார்ந்துள்ளது என்கிறார் டாக்டர் சீஸ்மேன்.

"தொடர்ந்து தேர்தல் மோசடிகள் நடக்கும் ஒரு ஜனநாயகத்தில் மக்கள் வாழ்ந்தால், விரைவில் அல்லது பின்னர், அதன் மோசமான விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். உண்மையான தேர்தல்களை நடத்துவதற்கான உரிமையை அமைப்பு நமக்கு வழங்கவில்லை என்றால், வாக்களிப்பது அல்லது அரசியல் பங்கேற்பின் பயன் என்ன?" என்று கேள்வியெழுப்புகிறார் சீஸ்மேன்.

https://www.bbc.com/tamil/articles/c4nk4q0dkj7o

இடம்பெயரும் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பகுதி அழியும் அபாயம் - ஐ.நா. அறிக்கை

2 months ago

Published By: DIGITAL DESK 3   14 FEB, 2024 | 04:57 PM

image

காலநிலை மாற்றம் மற்றும் மனித செயற்பாடுகளின் விளைவாக உலகில் இடம்பெயரும் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்து போகும் அபாயத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின்  இடம்பெயரும் மிருகங்கள் பற்றிய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும்  100 கோடி  விலங்குகள் பாலைவனங்கள், சமவெளிகள் அல்லது பெருங்கடல்கள் வழியாக இனப்பெருக்கம் மற்றும்  உணவுகளை தேடி  இடம்பெயர்வை மேற்கொள்கின்றன.

இந்நிலையில், இடம்பெயரும் உயிரினங்களின் மீது திணிக்கப்படும் நீடிக்க முடியாத அழுத்தங்கள் அவற்றின் எண்ணிக்கையை குறைவடைய செய்வதோடு, உணவு விநியோகத்தை சீர்குலைத்து வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும்,

1979 ஆம் ஆண்டு  ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயரும் விலங்குகளை பாதுகப்பதற்கான மாநாட்டில் 1,189 இனங்கள் இருப்பதாக பட்டியலிடப்பட்டது. அதில்  44 சதவீதம் குறைவடைந்துள்ளதோடு, 22  சதவீதம் முற்றிலும் அழிந்துவிடும்.

இந்த தரவினை  1970 முதல் 5,000 க்கும் மேற்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கையை ஒருங்கிணைக்கும் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையின் நிலையைக் குறிக்கும் லிவிங் பிளானட் இன்டெக்ஸ் (எல்பிஐ)  வழங்கிய மதிப்பீடுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் பிற வகையான அதீத சுரண்டல் உள்ளிட்ட செயல்பாடுகளால், மனிதர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர், இதனால், ஐக்கிய நாடுகள் சபையின் பட்டியலில் உள்ள 70 சதவீதமான  உயிரினங்கள் பாதிப்படைகின்றன.

வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வறட்சி அல்லது காட்டுத் தீ போன்றவை வானிலையில் பாதிப்பை ஏற்படுத்திதுகிறது. இதன் காரணமாக  இடம்பெயர்வு காலத்தை சீர்குலைக்கிறது. 

இதேவேளை, வாழ்விடங்கள் அழிந்து வருவதால் 75 சதவீதமான உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தனிமைப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கு இடையே அதிக இணைப்பு தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

அணைகள், குழாய்கள் அல்லது காற்றாலைகள் போன்ற உள்கட்டமைப்பை நிறுவும் போது வாழ்விடங்கள் மற்றும் இடம்பெயர்வு பாதைகளை சீர்குலைப்பதைத் தவிர்க்குமாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய உலகளாவிய உயிர்ப்பல்வகைமை ஒப்பந்தத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகின் 30 சதவீதமான நிலம் மற்றும் கடல் பிரதேசங்களை இயற்கைக்காக ஒதுக்கி வைப்பதற்கான 2022 ஆம் ஆண்டு உறுதிமொழியை மதிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/176365

நான்கே ஆண்டுகளில் 3 மடங்கு வளர்ச்சி கண்ட நாடு - இந்திய வம்சாவளியினர் திடீர் பணக்காரர்களானது எப்படி?

2 months ago
கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL

படக்குறிப்பு,

கயானாவில் எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் பணம் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னெப்போதும் இல்லாத ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், லியாண்ட்ரோ ப்ரேஸரஸ்
  • பதவி, பிபிசி செய்தி பிரேசில்
  • 28 நிமிடங்களுக்கு முன்னர்

சகோதரர்கள் ஷிவ் மற்றும் ஹேமந்த் 1982இல் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான கயானாவை விட்டு வெளியேறி கனடாவுக்குச் சென்ற போது அவர்களது வயது 19 மற்றும் 16. ஒரு நல்ல வாழ்க்கைக்காக ஆயிரக்கணக்கான கயானா இளைஞர்கள் என்ன செய்தார்களோ அதையே அவர்களும் அப்போது செய்தனர்.

வட அமெரிக்கா சென்று தங்களுக்கென குடும்பங்களை உருவாக்கி வாழ்ந்து வந்தனர். வருமானத்திற்கு ரியல் எஸ்டேட் மற்றும் நிதித்துறையில் வேலை செய்தார்கள்.

39 ஆண்டுகளுக்குப் பிறகு 2021இல், அவர்கள் கயானா திரும்ப முடிவெடுத்தனர்.

சமீப காலங்களில் பெட்ரோலியம் மூலம் கிடைத்த வருமானத்தால் கயானாவின் பொருளாதாரம் உயர்ந்தது. இதனால் நாட்டை விட்டு வெளியேறிய சகோதரர்களின் மனம் மாறியது.

அவர்கள் கயானா நாட்டின் தலைநகரான ஜார்ஜ்டவுனில் அதிக மதிப்புள்ள சொத்துகளை விற்பனை செய்வதிலும் வாடகைக்கு விடுவதிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை உருவாக்கினர்.

ஷிவ் மற்றும் ஹேமந்த் கயானாவில் புதிதாக உருவாகியுள்ள நடுத்தர வர்க்கத்தின் இரண்டு முக்கிய பிரதிநிதிகள். இந்த புதிய நடுத்தர வர்க்கம் என்பது கயானா நாட்டில் கச்சா எண்ணெய் ஆய்வு தொடங்கியதிலிருந்து மீண்டும் நாட்டிற்கு திரும்பிய மக்களே.

2019 முதல், இந்த கச்சா எண்ணெய் ஆய்வின் காரணமாக உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மாறியுள்ளது, முன்னாள் பிரிட்டிஷ் காலனி நாடான கயானா.

கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL

படக்குறிப்பு,

ஷிவ் மிசிர், தனது 19வது வயதில் கயானாவை விட்டுச் சென்றார்.

வரலாறு காணாத பொருளாதார ஏற்றம்

கயானா என்பது தென் அமெரிக்காவின் வடக்கு பகுதியில், சூரினாம் மற்றும் வெனிசுலா இடையே அமைந்துள்ள ஒரு நாடு.

வெறும் 8,00,000க்கும் அதிகமான மக்களைக் கொண்டுள்ளது கயானா. ஆரம்பத்தில் கரும்பு உற்பத்திக்காக டச்சு காலனியாக உருவாக்கப்பட்டது.

1966 வரை ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து கயானாவிற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. 2015ஆம் ஆண்டில், அமெரிக்க எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபில் (Exxon Mobil), நாட்டின் கடற்கரையோரம் பொருளாதார ரீதியாக லாபமளிக்கக் கூடிய எண்ணெய் வயல்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது.

அடுத்தடுத்த ஆண்டுகளில், எக்ஸான் மொபில், அமெரிக்கன் ஹெஸ் கார்பரேஷன் மற்றும் சீன சிஎன்ஓஓசி நிறுவனம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பு கயானீஸ் கடற்கரையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் எண்ணெய் கிணறுகளைத் தோண்டியது.

தோராயமாக 1,100 கோடி பீப்பாய்கள் அளவிலான எண்ணெய் இருப்பு இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்திய மதிப்பீடுகள் இந்த அளவு 1,700 கோடி பீப்பாய்கள் அளவை எட்டும் என்று கூறுகின்றன.

இது 1,400 கோடி பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்ட பிரேசிலின் மொத்த எண்ணெய் இருப்பையும் விட அதிகமாக இருக்கும்.

2019 வரை, கயானா மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் விவசாயம், தங்கம் மற்றும் வைரச் சுரங்கம் மற்றும் மரம் வெட்டுதல் ஆகியவற்றைச் சார்ந்து இருந்தது.

அந்த ஆண்டு முதல், எண்ணெய் வருவாய் கயானா நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கத் தொடங்கியது.

2020ஆம் ஆண்டில், பிரேசிலின் அப்போதைய பொருளாதார அமைச்சர் பாலோ குடெஸ், கயானா நாட்டை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள நகரங்களில் ஒன்றான துபாயோடு ஒப்பிட்டார். எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் செல்வத்தின் அடையாளமாக திகழ்கிறது துபாய்.

"கயானா, நமது பிராந்தியத்தின் புதிய துபாய்" என குடெஸ் கூறினார். கச்சா எண்ணெய் இருப்பு குறித்த அளவீடுகள் உண்மையில் உலகின் கவனத்தை ஈர்க்கின்றன.

 
நான்கே ஆண்டுகளில் 3 மடங்கு வளர்ச்சி
கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சமீபத்திய ஆண்டுகளில், கயானாவின் பொருளாதாரம் உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது.

2019 மற்றும் 2023க்கு இடையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.17 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து சுமார் 3 மடங்காக அதாவது 14.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது என சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. அதாவது 184% அதிகரித்துள்ளது ஜிடிபி.

2022ஆம் ஆண்டில் மட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 62% ஆக இருந்தது. அதேபோல், தனிநபர் வருமானம் (நாட்டின் செல்வத்தை குடிமக்களின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பது) 2019இல் 6,477 அமெரிக்க டாலரில் இருந்து 2022இல் 18,199 அமெரிக்க டாலராக உயர்ந்தது.

ஒப்பீட்டளவில், அந்த எண்ணிக்கை பிரேசிலின் 2022 தனிநபர் வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும் மற்றும் குவாத்தமாலாவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

“நாட்டிற்கே லாட்டரி அடித்தது போல உள்ளது. வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு இது. நாட்டின் வளர்ச்சி குறித்து மக்களிடம் அதிக நம்பிக்கை தெரிகிறது” என்று கயானா மற்றும் சூரினாமுக்கான உலக வங்கியின் பிரதிநிதி டிலெட்டா டோரெட்டி பிபிசி பிரேசிலிடம் கூறினார்.

எண்ணெய் உற்பத்தியின் விளைவாக, நாட்டின் பொருளாதாரத்தின் பிற துறைகளும் வளர்ச்சியடைந்துள்ளன.

சர்வதேச நாணய நிதிய அறிக்கையின் படி, 2022இல் எண்ணெய் துறையைத் தவிர்த்து ஜிடிபி வளர்ச்சி 11.5% ஆகும். தலைநகர் ஜார்ஜ்டவுன் போன்ற நாட்டின் முக்கிய நகரங்களில் இதன் விளைவுகள் தெரிகிறது.

புதிய மருத்துவமனைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் துறைமுகங்கள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களிலும், அமெரிக்கன் மேரியட் மற்றும் பெஸ்ட் வெஸ்டர்ன் போன்ற சர்வதேச சொகுசு ஹோட்டல்களை நிர்மாணிப்பதிலும் கிரேன்கள் மற்றும் தொழிலாளர்கள் தீவிரமாக வேலை செய்வதைக் காணலாம்.

புதிய நெடுஞ்சாலைகளில் டஜன்கணக்கில் புதிதாக கட்டப்பட்ட கிடங்குகள் காணப்படுகின்றன. நாட்டின் கட்டுமானத் தளங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக டிராக்டர்கள், எஸ்கவேட்டர்கள் மற்றும் பிற கனரக கட்டுமான உபகரணங்களால் இந்த கிடங்குகள் நிரப்பப்பட்ட உள்ளன.

கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL

படக்குறிப்பு,

ஜார்ஜ்டவுனில் உள்ள பெஸ்ட் வெஸ்டர்ன் என்ற அமெரிக்க நட்சத்திர ஹோட்டலை சீன நிறுவனம் ஒன்று கட்டி வருகிறது.

புதிய நடுத்தர வர்க்கம்

இந்த பொருளாதார ஏற்றத்தால்தான் சகோதரர்களான ஷிவ் மற்றும் ஹேமந்த் தற்காலிகமாக கயானாவுக்குத் திரும்ப முடிவு செய்தனர்.

2021 முதல், அவர்கள் இருவரும் தங்கள் புதிய வணிகத்தை கவனித்து கொள்வதற்காக டொராண்டோ (கனடா) மற்றும் ஜார்ஜ்டவுன் இடையே அடிக்கடி பயணம் செய்கிறார்கள்.

எண்ணெய் மூலம் கிடைக்கும் பணம் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்திற்கும், நாட்டின் தற்போதைய பணக்கார வர்க்கத்திற்கும் பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

“மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். பொருளாதார ரீதியில் பயன் தரக்கூடிய ஒரு அமைப்பின் பகுதியாக தாங்கள் இருப்பதாக உணர்கிறார்கள்” என்கிறார் ஷிவ்.

மேலும், "கயானாவில் ரியல் எஸ்டேட்டில் அல்லது எண்ணெய் தொழில் விநியோகச் சங்கிலியில் பணிபுரியும் பல பணக்காரர்கள் உள்ளனர்."

அமெரிக்காவிலோ கனடாவிலோ வசித்துக் கொண்டு, எண்ணெய் வளத்தால் ஆதாயம் பெறும் நம்பிக்கையில் கயானாவில் சொத்து அல்லது நிலத்தில் முதலீடு செய்யும் மற்ற கயானிகளை தனக்குத் தெரியும் என்கிறார் ஷிவ் மிசிர்.

அவர்கள் கயானாவிற்கு வந்ததும், தானாகவே புதிய நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள்.

"நாட்டிற்கு திரும்பி வரும் பல கயானிகள் உள்ளனர். அவர்கள் உயர் சமூகங்களில், தனியார் பாதுகாப்புடன் கூடிய நவீன வீடுகளில், முன்பு இருந்த அனைத்து வசதிகளுடன் வாழ முயற்சி செய்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தவர்கள்." என்கிறார் ஷிவ்.

அதிக பொருள் வாங்கும் திறன் கொண்ட வாடிக்கையாளர்களுடன் பழகியுள்ள ஷிவ், நாட்டின் பணக்கார வர்க்கத்தின் ஒரு பகுதியினர் இன்னும் வெளிநாட்டில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்யும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.அதனால் தான் நாட்டில் இப்போதும் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இல்லை என்று கருத்துத் தெரிவிக்கிறார்.

 
கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

எண்ணெய் வளம் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றம் மற்ற துறைகளையும் உயர்த்தியுள்ளது.

துடிப்பான சந்தை

டச்சு மற்றும் ஆங்கிலேயர்களால் காலனித்துவப்படுத்தப்பட்ட போதிலும், கரீபியனில் உள்ள அதன் அண்டை நாடுகளைப் போலவே, அமெரிக்காவுடன் நெருங்கிய வணிக மற்றும் கலாச்சார உறவுகளைப் பேணுகிறது கயானா. வெறும் நான்கு மணி நேர விமான பயணத்தில் அமெரிக்காவை அடையலாம்.

ஷிவ் கூற்றுப்படி, கயானிய பணக்கார வர்க்கத்தின் பெரும் பகுதியினர் தங்கள் குழந்தைகளை அமெரிக்கா, கனடா அல்லது ஐரோப்பாவிற்கு படிக்க அனுப்புகிறார்கள் மற்றும் தங்கள் குழந்தைகளை சந்திக்கச் செல்லும்போது இந்த நாடுகளை சுற்றிப் பார்க்கவும் வாழ்க்கை முறையை அனுபவிக்கவும் செய்கிறார்கள்.

சமீபத்திய ஆண்டுகளில், பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சி, நாட்டின் உயரடுக்கினரை மையமாகக் கொண்ட வணிகங்களைத் திறப்பதை ஊக்குவித்தது என்று தொழிலதிபர் ஷிவ் மிசிர் உறுதிப்படுத்துகிறார்.

"எடுத்துக்காட்டாக, எங்கள் வணிகம் அவற்றில் ஒன்று" என்கிறார்.

மிசிர் சகோதரர்களின் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூவி டவுன் ஷாப்பிங் சென்டரில் ஒரு சிறிய இடத்தில் செயல்படுகிறது, இது ஜார்ஜ்டவுனில் 2019இல் திறக்கப்பட்டது, அதே ஆண்டில் தான் நாட்டில் கச்சா எண்ணெய்க்கான ஆய்வு தொடங்கியது.

ஒரு காலத்தில் நாட்டின் செல்வத்தின் முக்கிய ஆதாரங்களாக விளங்கிய கரும்பு மற்றும் அரிசி பயிரிடப்பட்ட ஜார்ஜ்டவுனின் புறநகர்ப் பகுதிகள், இப்போது ஆடம்பர வீடுகள் மற்றும் உயர் சமூக வாழ்விடங்களுக்கு வழிவகுக்கின்றன.

கயானா நாடு சந்திக்கும் மாற்றங்களையும், புழக்கத்திற்கு வரும் பணம் எப்படி புதிய பழக்கங்களையும் நிலப்பரப்புகளையும் உருவாக்குகிறது என்பதை இது காட்டுகிறது.

புதிதாக உருவான ஷாப்பிங் சென்டர்களில் ஒன்று அமேசானியா மால் ஆகும். இது டெமராரா ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. நகரின் மையத்திலிருந்து அரை மணி நேர பயணத்தில் இதை அடையலாம்.

இந்த ஷாப்பிங் சென்டரின் முக்கிய கடைகளில் ஒன்று ஸ்டார்பக்ஸ்.

ஏப்ரல் 2023இல் திறக்கப்பட்ட இந்த ஷாப்பிங் சென்டர், 200 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் 50 பணியாளர்களைக் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது.

பிபிசி பிரேசிலிடம் பேசிய ஸ்டார்பக்ஸ் நிறுவனம், "நாடே இப்போது 'ஒரு துடிப்பான சந்தையாக இருப்பதால்', இங்கு ஸ்டார்பக்ஸ் கடை திறக்கப்பட்டது" என்று கூறியது.

கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL

படக்குறிப்பு,

ஒரு காலத்தில் கரும்பு மற்றும் அரிசியை பயிரிட பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் இப்போது ஆடம்பர வீடுகள் மற்றும் உயர் சமூக வாழ்விடங்கள் கட்டப்படுகின்றன.

பல நாடுகளின் புதிய முதலீடுகள்

புதிய எண்ணெய் வளம் கயானாவிற்குள் எவ்வளவு விரைவாக தாக்கம் செலுத்துகிறது என்பதற்கான மற்ற அறிகுறிகளும் உள்ளன. பல தசாப்தங்களாக நாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பு பணிகள் நடக்கவில்லை. இப்போது அதற்கான ஒப்பந்தங்களை கோரும் பல நாட்டு நிறுவனங்களை கயானா நாடு ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

நாட்டில் வணிக ரீதியான எண்ணெய் ஆய்வு நடத்தப்பட்ட முதல் ஆண்டான 2019ஆம் ஆண்டில், சாலைகள் மற்றும் துறைமுகங்கள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக அரசாங்கம் 187 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2023இல், அந்த எண்ணிக்கை 650 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது, அதாவது 247% அதிகரித்துள்ளது.

“கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நான் இங்கு வசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் வெளிநாடு சென்று, திரும்பி வரும்போது வித்தியாசத்தை கவனிக்கிறேன்,” என்கிறார் உலக வங்கியின் அதிகாரி டிலெட்டா டோரெட்டி.

“புதிய சாலைகள் மற்றும் ஹோட்டல்கள் என பல உள்கட்டமைப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. நாட்டிற்கு வரும் அதிக எண்ணிக்கையிலான வணிகப் பணிகளும் கவனிக்கத்தக்கவை என்கிறார் அவர்.

எதிர்பாராத மூலவளங்கள் கிடைப்பதால், உலகளாவிய கட்டுமானத் தளமாக மாறியுள்ளது கயானா நாடு. நிதி ஒப்பந்ததாரர்களுக்கு கடன் வழங்கும் நாடுகளின் பார்வையும் கயானாவின் மீது உள்ளது.

"எங்களிடம் ஐரோப்பிய கூட்டமைப்பு, சீனா, இந்தியா, அமெரிக்கா, கனடா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் உள்ளன" என்று கயானாவின் பொதுப்பணித் துறை துணை அமைச்சருக்கு இணையான பதவியை வகிக்கும் டியோடாட் இந்தார் பிபிசி பிரேசிலிடம் தெரிவித்தார்.

சீனா அந்த குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராக தோன்றுகிறது. உதாரணமாக, சீன நிறுவனங்களின் கூட்டமைப்பு டெமராரா ஆற்றின் மீது புதிய பாலம் கட்டுவதற்கான டெண்டரை வென்றது. இந்த பணிக்கு சீன வங்கி நிதியளித்தது.

 
கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL

படக்குறிப்பு,

சீன மற்றும் கயானிய தொழிலாளர்கள் டெமராரா ஆற்றின் மீது பாலம் கட்டுகின்றனர்.

இந்த திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக கருதப்படுகிறது, ஏனெனில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள பாலத்தை மாற்றுவது இதன் முக்கிய பணி. ஒரு நாளைக்கு பல முறை கப்பல்கள் இந்த ஆற்றை கடந்து செல்கின்றன.

புதிய பாலம் ஒரு தொங்கு அமைப்பைக் கொண்டிருக்கும். மேலும் கப்பல்கள் கீழே செல்ல அனுமதிக்கும். இந்தத் திட்டத்தின் மதிப்பு 260 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

கயானா அரசாங்கத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் பல மருத்துவமனைகளின் கட்டுமானத்திற்கும் சீன வணிகர்கள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.

ஆனால் சீனாவுக்கு இங்கு போட்டியாளர்கள் உள்ளனர். 2022ஆம் ஆண்டில், நெடுஞ்சாலை அமைப்பதற்கான $106 மில்லியன் டெண்டரை வென்றார் ஒரு இந்திய ஒப்பந்ததாரர்.

கயானா அரசாங்கத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு பொது மருத்துவமனையைக் கட்டுவதற்கு அந்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ஆஸ்திரியா கடன் வழங்கியுள்ளது. திட்டத்தின் மதிப்பு 161 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

சில நிறுவனங்கள் தங்கள் சொந்த நாடுகளில் இருந்து ஊழியர்களை அழைத்து வருகின்றன. டெமராரா ஆற்றின் மீது பாலம் கட்டும் சீனக் கூட்டமைப்பு இதைத் தான் செய்கிறது. திட்டப் பணிகள் சீன மற்றும் கயானிய தொழிலாளர்களிடையே பிரித்து அளிக்கப்பட்டுள்ளன.

2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில், வெனிசுலாவிற்கும் அந்த நாட்டிற்கும் இடையே எஸ்சிகிபோ பிராந்தியம் தொடர்பாக இருந்த நீண்ட கால பிரச்னை காரணமாக சர்வதேச நாடுகளின் கவனத்திற்குள் வந்தது கயானா.

எஸ்சிகிபோ பிராந்தியம், தோராயமாக 1,60,000 சதுர கிலோமீட்டர்கள் கொண்ட பகுதி. இது கயானாவின் 70% நிலப்பரப்பைக் குறிக்கிறது. இது தங்கம், தாமிரம் மற்றும் வைரம் போன்ற கனிமங்கள் நிறைந்த பகுதியாகும். மேலும் சமீபத்தில் எண்ணெய் மற்றும் பிற ஹைட்ரோகார்பன் வளங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

எஸ்சிகிபோ, கயானாவின் 70% நிலப்பரப்பைக் கொண்ட ஒரு பிரதேசம்.

இந்திய வம்சாவளியினர் திடீர் பணக்காரர்களானது எப்படி?

கயானாவைச் சேர்ந்த டேவிட் ஹிண்ட்ஸ், கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக அமெரிக்காவிற்கும் அவரது சொந்த நாட்டிற்கும் இடையே பயணம் செய்து வருகிறார்.

அவர் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் (அமெரிக்கா) பேராசிரியராக உள்ளார். கரீபியன் மற்றும் ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் பற்றிய ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவர்.

கயானா மிகவும் குறிப்பிடத்தக்க சமூக மற்றும் வர்க்கப் பிரிவைக் கொண்ட நாடு என்று ஹிண்ட்ஸ் கூறுகிறார்.

17 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், நாடு ஐரோப்பியர்களால் காலனித்துவப்படுத்தப்பட்டது. அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களின் உழைப்பைப் பயன்படுத்தி சர்க்கரையை உற்பத்தி செய்தனர்.

1833இல் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதன் பிறகு, கிழக்கு ஆசியாவில் இருந்து, குறிப்பாக இப்போதைய இந்தியா, சீனா மற்றும் போர்த்துகீசிய பிராந்தியத்திலிருந்து கயானாவிற்கு பணியாளர்களை கொண்டுவரத் தொடங்கியது ஐக்கிய இராஜ்ஜியம்.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, மக்கள் தொகையில் 39.8% இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், 30% ஆப்பிரிக்க வம்சாவளியினர், 10.5% பழங்குடியினர் மற்றும் 0.5% பேர் சீன, டச்சு மற்றும் போர்த்துகீசியம் போன்ற பிற பூர்வீகங்களைக் கொண்டவர்கள்.

அப்போதைய பிரிட்டிஷ் பேரரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள், ஆசிய மற்றும் போர்த்துகீசிய வம்சாவளியைச் சேர்ந்த குடியேறியவர்களை நாட்டின் வர்த்தகம் மற்றும் புதிய தொழில்துறைகளில் வேலை செய்ய ஊக்குவித்ததாக ஹிண்ட்ஸ் கூறுகிறார்.

"இந்தியர்கள் மற்றும் போர்த்துகீசியர்களின் சந்ததியினர் கயானாவின் பொருளாதார உயரடுக்கின் ஒரு பகுதியாக உள்ளனர்" என்று அவர் கூறுகிறார்.

மறுபுறம், அடிமைப்படுத்தப்பட்ட ஆப்ரிக்கர்களின் சந்ததியினர், குறைந்த திறன் வேலைகளில் அல்லது பொது சேவையில் வேலை செய்யத் தொடங்கினர் என்று ஹிண்ட்ஸ் விளக்குகிறார்.

கயானாவின் 'புதிய பணக்காரர்கள்' நாட்டில் குடியேறிய அதே பொருளாதார உயரடுக்கிலிருந்து வந்தவர்கள் என்று பேராசிரியர் உறுதிப்படுத்துகிறார்.

"பொருளாதார ஏற்றத்தை சாதகமாகப் பயன்படுத்துபவர்கள் கயானாவின் உயரடுக்கில் ஏற்கனவே வேரூன்றியவர்கள்" என்கிறார் பேராசிரியர் ஹிண்ட்ஸ்.

நாட்டில் நிலவும் சமூக சமத்துவமின்மை பற்றி கயானிய அரசாங்கத்திடம் பிபிசி பிரேசில் கேட்டது, ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

 
கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

'புதிய துபாய்'

தொழிலதிபர் ரிச்சர்ட் சிங் ஜார்ஜ்டவுனில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்கிறார். நகரின் மையத்தில், தனது டீலர்ஷிப்பில் நிறுத்தப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட கார்களை தனது பணியாளர்கள் கவனமாக மெருகூட்டுவதை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சிறுவயதில் இருந்தே கார் மற்றும் தொழில்நுட்பம் மீது ஆர்வம் கொண்டவர். இவர் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்கிறார், பெரும்பாலும் ஜப்பான் போன்ற நாடுகளில் கார்கள் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்த கார்களில், கயானா கார்களில் உள்ளது போல், வலது பக்கத்தில் ஸ்டீயரிங் உள்ளது.

அவரைப் பொருத்தவரை, எண்ணெய் வளம் மூலம் பொருளாதார மாற்றம் இருந்த போதிலும், நாட்டின் பணக்கார வர்க்கத்தினர் பயன்படுத்தப்பட்ட கார்களை விரும்புகின்றனர். ஏனெனில் புதிய கார்களை இறக்குமதி செய்வதற்கான வரி மிக அதிகமாக உள்ளது. நாட்டில் இன்னும் முறையான திறனுடைய தொழிலாளர்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கான அணுகல் இல்லை. எனவே புதிய வாகனங்களை இறக்குமதி செய்து, பராமரிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது.

ஜப்பானிய உற்பத்தியாளர்களிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மேல் இருந்த வாடிக்கையாளர்களின் கவனம் இப்போது பிஎம்டபிள்யூ கார்கள் மேல் சென்றுவிட்டதாகவும், நாட்டில் எண்ணெய் ஆய்வு தொடங்கியதில் இருந்து தனது வாடிக்கையாளர்களிடம் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார் சிங்.

எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்துறையுடன் தொடர்புடைய பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு அடிக்கடி வருகிறார்கள். அந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வாகனங்களைத் இங்கு தேடுகின்றன.

"கயானிய உயரடுக்கின் நுகர்வோர் பழக்கங்களை நன்கு அறிந்த சிங், நாட்டில் ஒருவித 'புதிய நடுத்தர வர்க்கம்' உருவாகி வருவதைக் கவனிக்கிறேன்" என்கிறார் ரிச்சர்ட் சிங்.

"ஆம், ஒரு புதிய நடுத்தர வர்க்கம் உள்ளது. அது கயானாவில் உள்ள பழைய நடுத்தர வர்க்கத்திற்கு சற்று மேலே அமர்ந்திருக்கிறது" என்கிறார் சிங்.

கயானா: உலக நாடுகளை ஈர்க்கும் எண்ணெய் வளம்

பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL

படக்குறிப்பு,

தொழிலதிபர் ரிச்சர்ட் சிங் ஜார்ஜ்டவுனில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்கிறார்.

தொழிலில் வருவாய் அதிகரிப்பு தனது பிடித்தமான ஒன்றைத் தொடர சிங்கை அனுமதிக்கிறது, அது மோட்டார் ஸ்போர்ட்ஸ். கடந்த ஆண்டு மே மாதம், ஃபார்முலா 1 பார்க்க மயாமிக்குச் சென்றார் சிங்.

ஆனால், நாட்டின் பொருளாதாரம் இன்னும் அதன் உச்சத்தை எட்டவில்லை என்று தொழிலதிபர் சிங் நம்புகிறார்.

"நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். கயானா (பொருளாதார ரீதியாக) மிகப்பெரிய உயரத்தை அடையும் என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் சிங்.

துபாயுடன் கயானாவை ஒப்பிடுவதை நம்பிக்கையான தொனியில் சிங் ஒப்புக்கொள்கிறார்.

"நான் எப்பொழுதும் துபாய் பற்றிய கதைகளைப் பார்த்திருக்கிறேன். 90களில் நீங்கள் அங்கு சென்றால், அது வெறும் பாலைவனமாக இருந்தது. இப்போது சென்றால் அதை அடையாளம் காண முடியாது, முற்றிலும் மாறிவிட்டது" என்று அவர் கூறுகிறார்.

"இன்னும் 20 ஆண்டுகளில் மக்கள் இந்த நாட்டைப் பார்த்து, 'இது கயானா என்று என்னால் நம்ப முடியவில்லை' என்று சொல்வார்கள். அத்தகைய மாற்றம் இங்கேயும் நடக்கும் என்று நம்புகிறேன்" என்கிறார் ரிச்சர்ட் சிங்.

https://www.bbc.com/tamil/articles/cq5x22nq5x8o

Checked
Tue, 04/16/2024 - 14:17
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe