உலக நடப்பு

சுறாவின் ரம்பம் போன்ற பற்களில் சிக்கி உயிர் பிழைத்த ஆய்வாளரின் திகில் அனுபவம்

1 month ago

வெவ்வேறு சுறா இனங்கள் குறித்து கடந்த 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார் ஹோயோஸ்

பட மூலாதாரம், Mauricio Hoyos

படக்குறிப்பு, வெவ்வேறு சுறா இனங்கள் குறித்து கடந்த 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார் ஹோயோஸ்

கட்டுரை தகவல்

  • ரஃபேல் அபுசைடா

  • பிபிசி நியூஸ் முண்டோ

  • 12 நவம்பர் 2025, 08:40 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

(எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உங்களுக்கு சங்கடம் தரும் விவரிப்புகள் இருக்கலாம்.)

தன்னுடைய மண்டை ஓட்டின் மீது சுமார் 3 மீட்டர் (10 அடி) நீளமுடைய பெண் கலாபகோஸ் சுறாவின் தாடை ஏற்படுத்திய அழுத்தத்தை மௌரிசியோ ஹோயோஸ் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்.

தனது கழுத்து நரம்பை காப்பாற்றிக் கொள்வதற்கான கடைசி முயற்சியில் தலையை சாய்க்கக் கூட நேரமில்லாத வகையில் அது அவரை நோக்கி திடுக்கிடும் வேகத்தில் வந்தது.

"அது தன் தாடையை மூடிக் கொண்டபோது, சுறா கடித்த அழுத்தத்தை உணர்ந்தேன், பின் ஒரு நொடியில் மீண்டும் தாடையை திறந்து என்னை தப்பிச் செல்ல அனுமதித்தது," என மெக்ஸிகோவின் பாஜா கலிஃபோர்னியாவில் உள்ள தன் வீட்டிலிருந்து ஹோயோஸ் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். அச்சமயத்தில், சுறாவின் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்து ஒருமாதமே ஆகியிருந்தது.

கடல் உயிரியலாளரான ஹோயோஸ், சுறாக்களை அதன் இயற்கை வாழ்விடங்களுக்கு சென்று ஆராய்வதில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். கடந்த செப்டம்பர் மாதம் கோஸ்டா ரிக்காவில் (Costa Rica) ஆராய்ச்சிக்காக பயணம் மேற்கொண்டிருந்த போது அவரை சுறா ஒன்று தாக்கியது.

முகத்தில் ஏற்பட்ட காயத்தை இன்னும் தாங்கிக் கொண்டிருக்கும் அவர், தான் மீண்டு வந்தது "நம்ப முடியாததாக உள்ளது" என்றும், தன்னை தாக்கிய சுறாவை தான் மீண்டும் பார்ப்பேன் என நம்பிக்கையுடன் உள்ளதாகவும் கூறினார்.

சுறா கடித்ததால் ஏற்பட்ட காயத்தை, "செவுள்கள் போன்று தோன்றும் விழுப்புண்" என கூறுகிறார் ஹோயோஸ்

படக்குறிப்பு, சுறா கடித்ததால் ஏற்பட்ட காயத்தை, "செவுள்கள் போன்று தோன்றும் விழுப்புண்" என கூறுகிறார் ஹோயோஸ்

கொக்கோஸ் தீவில் (Cocos Island) ஹோயோஸுக்கு நடந்தது, ஆபத்து என தான் நினைக்கும் ஒன்றை எதிர்கொள்ளும்போது விலங்குகளின் இயல்பான நடத்தையின் விளைவு அது.

"நாய் கடித்தது போன்று இருந்தது," என்கிறார் அவர்.

"ஒரு நாய் தனக்கு அருகில் வரும்போது மற்றொரு நாய் அதை விரைந்து கடிப்பதை பார்த்திருக்கிறீர்களா? அது அந்த நாய்க்கு வலிக்காது, ஆனால் நெருங்கி வரும் நாயை அமைதிப்படுத்தும்."

ஹோயோஸ் சகாக்களுடன் இணைந்து தன் வேலையின் ஒரு பகுதியாக சுறாக்களின் இனச்சேர்க்கை மற்றும் முட்டையிடும் பகுதிகளை அடையாளம் காண்பதற்காக அவற்றுக்கு ஒலிப்புலன் சார்ந்த பட்டைகளை (acoustic tags) பொருத்திக் கொண்டிருந்தார். அப்போது, நீரில் சுறா இருப்பது குறித்து சுற்றுலாப் பயணிகள் அவருக்கு எச்சரித்தனர்.

அது 40 மீட்டர் ஆழத்தில் இருந்தது, தான் வந்த படகை செலுத்தியவரிடம் "தான் அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே அங்கு இருப்பேன்" என கூறியுள்ளார்.

பின்னர் நீருக்குள் மெல்ல மூழ்க ஆரம்பித்தார்.

கலாபகோஸ் சுறாக்கள் 3 மீட்டர் நீளம் வரை வளரும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கலாபகோஸ் சுறாக்கள் 3 மீட்டர் நீளம் வரை வளரும்

சுறாவை எதிர்கொண்டது குறித்து ஹோயோஸ் கூறினார்: "3-3.5 மீட்டர் (11.5 அடி) நீளமுடைய அந்த பெண் சுறா நீந்தி அடிப்பகுதியை நோக்கிச் சென்றது, நான் அதன் முதுகெலும்பு துடுப்பில் டேக்-ஐ பொருத்துவதற்கு ஏற்றபடி இருந்தேன்."

ஆனால், தனது பல தசாப்த பணியில் பலவித சுறாக்களுக்கு டேக் பொருத்தியிருக்கும் ஹோயோஸ், இந்த சுறா மற்றவற்றைவிட வித்தியாசமாக நடந்துகொண்டதாக கூறுகிறார்.

"அந்த டேக்கின், ஆய்வுக்கருவியில் இணைக்கப்பட்டுள்ள கேபிளுடன் உள்ள உலோகத்தாலான கூர்முனையை உள்ளே செலுத்தியவுடன் மற்ற சுறாக்கள் உடனடியாக அங்கிருந்து சென்றுவிடும், மாறாக இந்த சுறா என்னை திரும்பி பார்த்தது," என அவர் நினைவுகூர்கிறார்.

"அதன் சிறிய கண்கள் என்னை பார்ப்பதை நான் கண்டேன், அது அமைதியாக திரும்பியதை நான் பார்த்தேன்."

ஹோயோஸும் அவருடைய சகாக்களும் இத்தகைய டேக்குகளை சுறாக்களுக்கு பொருத்துகின்றனர்.

படக்குறிப்பு, ஹோயோஸும் அவருடைய சகாக்களும் இத்தகைய டேக்குகளை சுறாக்களுக்கு பொருத்துகின்றனர்.

சுறா நீந்திச் சென்றபோது அதன் கண்களை பார்த்ததாக கூறும் ஹோயோஸ், திடீரென அது தன்னை நோக்கி வந்ததாக கூறுகிறார்.

"நான் என் தலையை தாழ்த்திக்கொண்டேன், அதன்பின், அதன் கீழ் தாடை என் கன்னத்தையும் மேல் தாடை என் தலையையும் துளைப்பதை உணர்ந்தேன். அதன் தாடைக்குள் நான் இருப்பதாக நினைத்தேன், பின் மீண்டும் அது தன் தாடையை திறந்தது."

"சுறா தன் தாடையை மூடியதும், அது கடித்ததன் அழுத்தத்தை உணர்ந்தேன். பின் அது என்னை அங்கிருந்து செல்ல அனுமதித்தது," என ஆச்சர்யப்படுகிறார்.

கலாபகோஸ் சுறாவின் ரம்பம் போன்ற 29 பற்கள், ஹோயோஸுக்கு அவரின் தலை மற்றும் முகத்தில் மட்டும் காயத்தை ஏற்படுத்தவில்லை, மாறாக அவருடைய டைவிங் கருவியின் ஆக்சிஜன் குழாயையும் துண்டித்தது.

சுறாவின் தாக்குதலில் இருந்து அவர் உயிர் பிழைத்தாலும் அவர் மரண ஆபத்தில் தான் இருந்தார்.

நீச்சலின் போது அணியக்கூடிய கண் பாதுகாப்பு கண்ணாடியையும் கிழித்துவிட்டது, தவிர ஏற்கெனவே மங்கலான அவரின் பார்வை, ரத்தம் கலந்த நீரால் மேலும் மங்கலானது.

"டைவிங் கருவியிலிருந்து ஆக்சிஜன் வரவில்லை என்பதை உணர்ந்ததும், எங்களிடம் இருந்த மற்றொரு கருவியை எடுத்துக்கொண்டேன், அதை நாங்கள் ஆக்டோபஸ் என அழைக்கிறோம், மூச்சுக்காற்று தேவைப்படுபவர்களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது," என அவர் பிபிசி முண்டோவிடம் கூறினார்.

"பின்னர்தான் அக்கருவியின் ரெகுலேட்டர் வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்தேன், காற்றை ஒழுங்குபடுத்துவதற்கு பதிலாக அதை வெளியேற்றிக் கொண்டிருந்தது, எனவே நான் என்னுடைய பயிற்சியை நினைவில் வைத்து, என் உதடுகள் மூலம் அதை ஒழுங்குபடுத்தினேன்."

ஒருபுறம் ரத்தம், மங்கலான பார்வை, காற்று இல்லாத நிலை என, மேற்பரப்புக்கு வர ஒரு நிமிடத்திற்கும் குறைவாக இருப்பதை ஹோயோஸ் கணக்கிட்டார்.

"என்னால் எதையும் பார்க்க முடியாததால், வெளிச்சத்திற்காக மேற்பரப்புக்கு வர முயற்சித்தேன். எனவே, மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மேல்நோக்கி நீந்தினேன், ஏனெனில் சுறாவை கவரும் வகையிலான ஒருங்கற்ற நகர்வுகளை நான் தவிர்க்க விரும்பினேன்."

இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க இத்தனை ஆண்டுகால டைவிங் பயிற்சியில் கற்ற பாடங்களை பிரயோகிக்க வேண்டியிருந்தது.

பட மூலாதாரம், Mauricio Hoyos

படக்குறிப்பு, இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க இத்தனை ஆண்டுகால டைவிங் பயிற்சியில் கற்ற பாடங்களை ஹோயோஸ் பிரயோகிக்க வேண்டியிருந்தது.

ஹோயோஸ் மேற்பரப்புக்கு வந்ததும் இளைஞர் ஒருவர் அவரை இழுத்து படகில் அமரவைத்தார், படகை செலுத்தியவர் அவரின் நிலைமையை பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

சிறிது நேரத்திற்கு அந்த காயத்தின் வலியை தான் அவ்வளவாக உணரவில்லை என விவரிக்கிறார் ஹோயோஸ்.

"உண்மையில் நான் பதற்றத்தில் இருந்தேன், அந்த காயம் எனக்கு அவ்வளவாக வலிக்கவில்லை. அதன் தாக்கம் தான் என்னை அதிகமாக காயப்படுத்தியது. 3 மீட்டர் நீளம் கொண்ட ஒரு விலங்கு, அந்த வேகத்தில் என்னை கடித்தது, கார் என் மீது மோதியது போன்று இருந்தது. என் தாடை முழுக்க பெரிய காயம் இருந்தது, அது உடைந்துவிட்டது என்றே நினைத்தேன்."

பின்னர், அவருக்கு மருத்துவ உதவியாளர்கள் அவசர சிகிச்சை செய்தனர்.

ஹோயோஸ் அதிர்ஷ்டக்காரர். சுறாவின் தாக்குதல் மற்றும் அதைத்தொடர்ந்து மேற்பரப்புக்கு நீந்தியபோதும் அவருடைய காயத்தில் தொற்று ஏற்படவில்லை, யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத குறைவான காலத்தில் காயம் குணமடைய தொடங்கியது.

"இது அதிசயம் என மருத்துவர்கள் என்னிடம் கூறினர்: செப்டம்பர் 27-ஆம் தேதி சுறா என்னை தாக்கியது, அதன்பின், நான் 34 மணிநேரம் பயணம் செய்தேன், மருத்துவர்கள் எனக்கு சேதமடைந்த திசுக்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினர், இரு தினங்கள் கழித்து எனக்கு மறுசீரமைப்பு சிகிச்சை செய்யலாமா என்பது குறித்து அவர்கள் பரிசோதித்தனர்."

இந்த தாக்குதல் ஹோயோஸுக்கு மிக மோசமான நிலையை ஏற்படுத்தியிருக்கும். மருத்துவர்களின் கூற்றின்படி, 2017-ஆம் ஆண்டில் அதே பகுதியில் கலாபகோஸ் சுறாவால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு ஏற்பட்ட காயங்கள் சரிவர ஆறவில்லை என்பதால், சுமார் ஒருமாத காலம் அவர் ஹைபர்பேரிக் சேம்பரில் (hyperbaric chamber - இது அழுத்தப்பட்ட சூழலில் 100% ஆக்ஸிஜனை சுவாசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பிரத்யேக கலன்) இருக்க வேண்டியிருந்ததாக கூறினர்.

"என் காயங்கள் ஆறிய விதம் நம்ப முடியாததாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொற்று குறித்து தாங்கள் எப்படி கவலையடைந்தோம் என மருத்துவர்கள் கூறினர், ஏனெனில் முகத்தில் காயம் இருந்ததால் அது மூளைக்கான நேரடி பாதையாக இருந்தது."

ஹோயோஸ்

பட மூலாதாரம், Mauricio Hoyos

மீண்டும் அதே நீருக்குள் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக சிரித்துக்கொண்டே கூறிய ஹோயோஸ், நவம்பர் 14-ஆம் தேதி அங்கு டைவிங் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார்.

இத்தகைய தாக்குதலுக்கு ஆளான பின்பு, தான் ஆராய்ச்சி செய்யும் விலங்குகள் மீது தனக்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

"சுறாக்கள் இல்லாமல் கடல் சிறப்பாக இருக்கும் என பலரும் நினைக்கின்றனர், ஆனால் கடலின் சிக்கலான சமநிலையை பராமரிக்க சுறாக்கள் ஆற்றும் முக்கிய பங்கு குறித்து புரியாமல் அவர்கள் இதை கூறுகின்றனர்."

தன் கன்னத்தில் உள்ள பெரிய காயத்தை சுட்டிக்காட்டிய அவர், "அந்த பெண் சுறா என் உயிரை காப்பாற்றியது என்பதற்கு இதுவே சான்று. இது, சுறாக்கள் குறித்து நன்றாக பேசுவதை தொடரவும் எதிர்காலத்தில் அதன் பாதுகாப்புக்கான பணிகளை மேற்கொள்வதற்கும் என்னை அனுமதிக்கும்."

இதனிடையே, ஹோயோஸை தாக்கிய கலாபகோஸ் சுறா நீரின் ஆழத்தில் தன் வாழ்க்கையை தொடர்ந்து வருகிறது, அதை மீண்டும் சந்திப்பேன் என நம்பிக்கை கொள்கிறார் அவர். தன்னை தாக்குவதற்கு முன்பு அவர் சுறாவின் மீது டேக்-ஐ பொருத்திவிட்டதால் மீண்டும் அதை சந்திப்பதற்கான சாத்தியம் உள்ளது.

"ஜனவரி மாதம் நான் கொக்கோஸ் தீவுக்கு செல்லவிருக்கிறேன். ஜன. 20 முல் 27 வரை நாங்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளோம், நிச்சயமாக (தாக்குதல் நடந்த) ரோகா சுசியாவுக்கு (Roca Sucia) சென்று ஆழ்கடலில் டைவ் செய்வேன்," என மன உறுதியுடன் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce3k75239j0o

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை - டிசம்பர் 10 முதல் சட்டம் அமுல்!

1 month ago

12 Nov, 2025 | 04:06 PM

image

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னப்செட் போன்ற சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதால், அவர்களின் உடல், உள நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குறிப்பிட்டுள்ளார். 

நிகழ்நிலையில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலேயே அவர்களின் சமூக ஊடக பாவனைக்கு தடை விதித்திருப்பதாக அந்தோணி அல்பனீஸ் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/230168

துருக்கி இராணுவ விமானம் மலையில் மோதி விபத்து – 20 பேர் உயிரிழப்பு

1 month ago

74703458_1004.webp?resize=750%2C375&ssl=

துருக்கி இராணுவ விமானம் மலையில் மோதி விபத்து – 20 பேர் உயிரிழப்பு.

துருக்கி சி-130 ராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியதில் விமானத்தில் பயணித்த 20 பேரும் உயிரிழந்துள்ளனர்

துருக்கி இராணுவத்திற்கு சொந்தமான சி-130 ரக சரக்கு விமானம் நேற்று அசர்பைஜானில் இருந்து புறப்பட்டது. துருக்கி வந்து கொண்டிருந்த அந்த இராணுவ விமானத்தில் 20 பேர் பயணித்தனர்.

இந்நிலையில் ஜோர்ஜியா நாட்டின் எல்லைக்குள் பறந்துகொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 20 பேரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து விபத்து நடந்த பகுதியில் மிட்புபணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.  இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜர்பைஜான்- ஜார்ஜியா எல்லையில் பறந்து கொண்டு இருந்த போது திடீரென கீழே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது.

விமானத்தில் எத்தனை பணியாளர்கள் இருந்தனர் என்பது தெளிவாக தெரியவில்லை. அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சி-130 ராணுவ சரக்கு விமானங்கள் துருக்கியின் ஆயுதப் படைகளால் பணியாளர்களை கொண்டு செல்லவும் தளவாடங்களை கையாளுவதற்கும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

https://athavannews.com/2025/1452588

புவி வெப்பமாதல் என்பது கட்டுக்கதையா? காலநிலை மாற்றம் பற்றிய 5 கூற்றுகளும் அறிவியல் உண்மையும்

1 month ago

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,புவி வெப்பமடைதல் இருக்கும் போதிலும், துருக்கியின் இஸ்தான்புல்லில் இதுபோன்ற குளிர்காலங்களும் பனிப்பொழிவு நாட்களும் தொடர்ந்து ஏற்படும்

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,மார்க்கோ சில்வா

  • பதவி,பிபிசி வெரிஃபை

  1. 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரேசிலில் 30வது ஐநா காலநிலை உச்சிமாநாடு நடைபெறும் நிலையில், காலநிலை மாற்றம் குறித்த தவறான கூற்றுகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவி வருகின்றன. அப்படிப்பட்ட ஐந்து தவறான தகவல்களையும் உண்மை என்ன என்பதையும் இங்கு விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

கூற்று 1: காலநிலை மாற்றம் மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல

மனிதர்களால் காலநிலை மாறவில்லை எனும் வகையில் சமூக ஊடகங்களில் சிலரால் பதிவிடப்படுகின்றன.

பூமியின் வரலாறு முழுவதும் வெப்பமாதல் மற்றும் குளிர்ச்சியடைதலின் சுழற்சிகளைக் கடந்து வந்துள்ளது என்பது உண்மைதான். அது பெரும்பாலும் எரிமலை செயல்பாடு அல்லது சூரிய செயல்பாட்டில் நிகழ்ந்த மாறுபாடுகள் போன்ற இயற்கைக் காரணிகளால் நடந்துள்ளன. ஆனால், இந்த மாற்றங்கள் நீண்டகால அளவில், அதாவது ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்தவை.

உலக வானிலை அமைப்பின் தகவல்படி, கடந்த 150 ஆண்டுகளில் பூமி சுமார் 1.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பமடைந்துள்ளது. இந்த வெப்பமயமாதல் விகிதம் முந்தைய ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காணப்படவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அமைப்பு (IPCC), இது "சந்தேகத்திற்கு இடமின்றி" மனித நடவடிக்கைகளால், முதன்மையாக நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படுவதாகக் கூறுகிறது.

விளம்பரம்

ஐபிசிசி என்பது காலநிலை ஆய்வை மதிப்பாய்வு செய்வதற்கும், பூமி மீது நடப்பது என்ன என்பது குறித்த சான்றுகள் சார்ந்த அறிக்கைகளை வழங்குவதற்கும் விஞ்ஞானிகளை ஒன்றிணைக்கும் ஓர் ஐ.நா. அமைப்பாகும்.

காலநிலை மாற்றம், 30வது காலநிலை உச்சி மாநாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலக்கரி என்பது புதைபடிவ எரிபொருளாகும், இதை எரிக்கும்போது அதிக பசுங்குடில் வாயுக்கள் வெளியாகின்றன.

புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்துவதால் பசுங்குடில் வாயுக்கள் வெளியாகின்றன. அவை பூமியைச் சுற்றி ஒரு போர்வையைப் போலச் செயல்படுகின்றன. வளிமண்டலத்தில் கூடுதல் ஆற்றலை கிரகித்து வைத்து வெப்பத்தை அதிகரிக்கின்றன.

"காலநிலை மாற்றம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயமல்ல. அது ஆதாரங்களின் அடிப்படையிலானது," என்று லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த காலநிலை விஞ்ஞானி ஜாய்ஸ் கிமுட்டாய் கூறுகிறார்.

"புவியின் காலநிலை அமைப்பின் ஒவ்வொரு மூலையிலும் மனித நடவடிக்கைகளின் தடங்கள் தெளிவாகத் தெரிகின்றன" என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

கூற்று 2: உலகம் சூடாகவில்லை, குளிர்ச்சியடைந்து வருகிறது

போலந்து அல்லது கனடா போன்ற இடங்களிலுள்ள சில சமூக ஊடக பயனர்கள், தங்கள் பகுதிகளில் வழக்கத்தைவிட குளிர்ச்சியான வானிலை நிலவுவதை, 'புவி வெப்பமாதல் குறித்து விஞ்ஞானிகள் பொய் சொல்கிறார்கள்' என்பதற்கான சான்றாகக் கருதுகின்றனர்.

இது தவறு.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், EPA

வானிலை என்பது பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் குறுகிய கால நிலைமைகளைக் குறிக்கும். ஆனால், காலநிலை என்பது நீண்டகாலம் நிலவும் சூழலைக் குறிக்கிறது.

"சில பகுதிகள் குறுகிய கால அல்லது உள்ளூர் குளிர்ச்சியை அனுபவித்தாலும், நீண்டகால உலக வெப்பநிலை பதிவுகள், புவியின் மேற்பரப்பு ஒட்டுமொத்தமாக வெப்பமடைந்து வருவதைத் தெளிவாகக் காட்டுவதாக" பிலிப்பைன்ஸின் காலநிலை விஞ்ஞானி முனைவர் ஜோசப் பாஸ்கான்சிலோ கூறுகிறார்.

கடந்த 1980களில் இருந்து, ஒவ்வொரு தசாப்தமும் முந்தையதைவிட வெப்பமாக இருந்து வருகிறது, இது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உலக வானிலை ஆய்வு அமைப்பு கூறுகிறது.

2024ஆம் ஆண்டு மிக வெப்பமான ஆண்டாகப் பதிவானது. உலகளாவிய சராசரி வெப்பநிலை, 1800களின் பிற்பகுதியில் இருந்த அளவைவிட 1.55 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.

கூற்று 3: கார்பன்-டை-ஆக்சைடு ஒரு மாசுபடுத்தி அல்ல

மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தை மறுக்கும் சமூக ஊடக பயனர்கள் பெரும்பாலும் கரிம வாயுவை "மாசுபடுத்தும் காரணி அல்ல" என்றும் மாறாக அதுவொரு "தாவர உணவு" என்றும் கூறுகின்றனர்.

பிபிசி, போர்த்துகீசியன் மற்றும் குரோஷிய மொழிகளில் பார்த்த பதிவுகள், வளிமண்டலத்தில் அது அதிகமாக இருப்பது இயற்கைக்கு நல்லது என்றுகூடக் கூறுகின்றன.

மாசுபடுத்திகள் அல்லது மாசுக் காரணிகள் என்பவை, சுற்றுச்சூழலில் சேரும் போது அந்த அமைப்புக்கோ அல்லது மனித ஆரோக்கியத்திற்கோ தீங்கு விளைவிக்கும் பொருட்களாகும்.

வளிமண்டலத்தில் சாதாரண மட்டங்களில், பூமியில் வாழ்வதற்கு கரிம வாயு அவசியம். கரிம வாயுவை போன்ற பசுங்குடில் வாயுக்கள் இல்லாமல் போனால், உயிர் வாழும் சூழலை உருவாக்க முடியாமல் பூமி குளிரானதாக இருக்கும் என்று நாசா கூறுகிறது.

தாவரங்கள் கரிம வாயுவை, நீர் மற்றும் சூரிய ஒளியுடன் சேர்த்து, ஆக்சிஜன் மற்றும் கரிம பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்துகின்றன. அவை பூமியின் பெரும்பாலான உணவுச் சங்கிலிகளின் அடிப்படையாக உள்ளன.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், DANIEL MUNOZ/AFP via Getty Images

படக்குறிப்பு, வளிமண்டலத்தில் உள்ள கரிம வாயு தாவர வளர்ச்சிக்கும் உணவுச் சங்கிலிக்கும் அவசியம்.

ஆனால், வளிமண்டலத்தில் அதிகமாக கரிம வாயு சேரும்போது, விஞ்ஞானிகள் அதை "மாசுபடுத்தி அல்லது மாசுக் காரணி" என்று வகைப்படுத்துகிறார்கள். ஏனெனில், அது தீங்கு விளைவிக்கத் தொடங்குகிறது.

2024ஆம் ஆண்டில் கரிம வாயு சராசரியை விட அதிக அளவை எட்டியது. அதாவது காற்றில் உள்ள பத்து லட்சம் மூலக்கூறுகளில் 280 மூலக்கூறுகள் கரிம வாயுவினுடையவை என்ற அளவில் 1750களில் இருந்தன. அந்த நிலை மாறி, தற்போது பத்து லட்சம் காற்று மூலக்கூறுகளில் 423 கரிம வாயுக்களினுடையவை என்கிற அளவுக்கு கரிம வாயுவின் அளவு அதிகரித்துள்ளதாக உலக வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

மனிதனால் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு செறிவு அதிகரிப்பிற்கும் புவி வெப்பமாதலுக்கும் தொடர்பு இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்து நிரூபித்துள்ளனர். இது சுற்றுச்சூழல் அமைப்புகளில் பரந்த அளவிலான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

"காடுகள் அதிக தீ விபத்துகளுக்கு உள்ளாகி வருகின்றன. வறட்சி அல்லது வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைகின்றன. இயற்கையான சூழலியல் அமைப்புகளின் சமநிலை குலைவதால் காட்டுயிர்கள் வாழ்விடத்தை இழக்கின்றன," என்று கனடாவை சேர்ந்த சூழலியல் நிபுணர், பாதுகாப்பு விஞ்ஞானி மற்றும் ஆலோசகர் மிச்செல் கேலமண்டீன் கூறுகிறார்.

வளிமண்டலத்தில் கரிம வாயு அதிகரிப்பது, தாவர வளர்ச்சியை மேம்படுத்த முடியும். ஆனால் இது அதனால் ஏற்படும் வெப்ப அழுத்தம் மற்றும் நீர்ப் பற்றாக்குறை உள்ளிட்ட காலநிலை மாற்றத்தின் எதிர்மறை விளைவுகளை ஈடுசெய்யப் போதுமானதாக இருக்காது என்று ஐபிசிசி கூறுகிறது.

கூற்று 4: காட்டுத்தீக்கு காலநிலை மாற்றம் காரணம் அல்ல

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா, தென் கொரியா, துருக்கியில் பெரிய காட்டுத்தீ ஏற்பட்டது. அதுபோன்ற சமயங்களில், சில சமூக ஊடக பயனர்கள், தீ வைக்கப்படுவதே இதற்கு காரணம் என்று கூறி, அதில் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளுக்கு இருக்கும் பங்கை நிராகரிக்கின்றனர்.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த ஆண்டு காட்டுத்தீயால் ஸ்பெயின் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தீ வைப்பவர்களைக் கைது செய்வது குறித்த வைரல் பதிவுகள், குறிப்பிட்ட தீயை காலநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்தும் விஞ்ஞானிகள் மற்றும் அரசியல்வாதிகளை கேலி செய்யும் பதிவுகளால் பெரும்பாலும் நிரம்பியுள்ளன.

ஆனால், பல தீ விபத்துகள் உண்மையில் மனிதர்களால் வேண்டுமென்றேவோ அல்லது தற்செயலாகவோ தொடங்கி இருந்தாலும், காட்டுத்தீயை அந்த ஒரு காரணத்துடன் குறைத்து மதிப்பிடுவது, "அடிப்படையில் தவறாக வழிநடத்தும் செயல்" என்று கொலம்பியா தேசிய பல்கலைக்கழகத்தில் தீ சூழலியல் குறித்து ஆய்வு செய்யும் முனைவர் டொலோர்ஸ் ஆர்மென்டெராஸ் கூறுகிறார்.

ஒருசில காட்டுத்தீ சம்பவங்களை காலநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்துவது கடினம். ஏனெனில், காடுகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன, நிலப்பரப்பு உள்படப் பல காரணிகளும் ஓரளவுக்கு காட்டுத் தீக்கு காரணமாகின்றன.

ஆனால், காலநிலை மாற்றம் காட்டுத்தீ ஏற்படுவதற்கும் பரவுவதற்கும் ஏற்ற நிலைமைகளை உருவாக்குவதை நாம் அறிவோம்.

வட அமெரிக்காவின் மேற்குப் குதி அல்லது தெற்கு ஐரோப்பா போன்ற பகுதிகளில், காலநிலை மாற்றம் 'தீ வானிலை' என்று அழைக்கப்படுவனவற்றின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாக ஐபிசிசி கூறுகிறது. அதாவது, நீண்டகால வறண்ட சூழல், தீவிர வெப்பம் மற்றும் அதீத காற்று ஆகியவற்றின் கலவையைக் கொண்ட வானிலை.

அந்த நிலைமைகளில், காட்டுத்தீ ஏற்படுவது, மின்னல் போன்ற இயற்கையான காரணத்தால் ஏற்படுவதாக இருந்தாலும் சரி அல்லது தீ வைப்பு, விபத்து போன்ற மனிதர்களால் ஏற்படுத்தப்படுவதாக இருந்தாலும் சரி, ஏராளமான தாவரங்களை எரித்து தீவிர காட்டுத்தீ ஏற்பட வழிவகுக்கின்றன.

"இப்போதைய கேள்வி தீ வைக்கப்படுவதா அல்லது காலநிலை மாற்றமா என்பதல்ல. அதிக தீவிரத்துடன் கூடிய வெப்பமான காலநிலை, எந்தவொரு காட்டுத்தீ சம்பவத்தின் விளைவுகளையும் எப்படி தீவிரப்படுத்துகிறது என்பதே. இந்த விளைவுதான், இப்போது நாம் பல இடங்களில் கவனிக்கும் பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ சம்பவங்களை ஏற்படுத்துகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், LUIS ACOSTA/AFP via Getty Image

படக்குறிப்பு, ஐ.நா.வின் 30வது காலநிலை உச்சிமாநாட்டை நடத்தும் பிரேசில் மற்றும் அண்டை நாடுகள் 2024இல் கடுமையான வறட்சியை எதிர்கொண்டன.

கூற்று 5: காலநிலை 'பொறியியல்' தீவிர வானிலைக்கு காரணமாகிறது

வானிலையை மாற்றியமைத்தல் அல்லது புவி பொறியியல் (geoengineering) காரணமாகக் கடுமையான மழை, வெள்ளம் அல்லது சூறாவளி ஏற்படுவதாகச் சொல்லப்படும் கருத்துகள் தொடர்ந்து இணையத்தில் பரவி வருகின்றன.

கடந்த ஆண்டு துபையில் அல்லது ஸ்பெயினின் வலென்சியாவில் திடீர் வெள்ளம் ஏற்பட்ட போது, பல சமூக ஊடக பயனர்கள் அத்தகைய நடைமுறைகளே காரணம் என்று கூறினர்.

ஆனால், வானிலையை மாற்றியமைத்துக் கையாளுதல் மற்றும் புவி பொறியியல், இரண்டுமே ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. உலகின் பல்வேறு பகுதிகள் அனுபவிக்கும் வானிலை உச்சநிலையை இவை குறிக்கவில்லை.

வானிலையை மாற்றியமைப்பது சாத்தியம். அதில், மேக விதைப்பு என்பது மிகவும் பொதுவான நுட்பங்களில் ஒன்று. சமீபத்திய ஆண்டுகளில் சீனா, மெக்சிகோ, இந்தியா உள்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இது பயன்படுத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்க அரசாங்க அறிக்கை கூறுகிறது.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, 2024ஆம் ஆண்டில் துபையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை காலநிலை மாற்றம் மோசமாக்கி இருக்கலாம் என்று ஓர் அறிவியல் ஆய்வு முடிவு செய்துள்ளது

நீராவி உறைந்து போவதை ஊக்குவிக்க, மழை அல்லது பனிக்கான வாய்ப்பை அதிகரிக்க, சிறிய துகள்களை (சில்வர் ஐயோடைட் போன்றவற்றை), ஏற்கெனவே இருக்கும் மேகங்களில் விதைப்பது இந்தச் செயல்முறையில் அடங்கும்.

"இத்தகைய வானிலை கையாளுதல் நுட்பங்கள் மிகக் குறுகிய காலத்திற்கு உள்ளூர் அளவில் செயல்படுத்தப்படுகின்றன. எனவே, கடந்த பல தசாப்தங்களாக இந்த பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் காலநிலையில் ஏற்படும் விரைவான மாற்றங்களை இந்த நுட்பங்களால் கணக்கிட முடியாது" என்கிறார் இந்திய அறிவியல் நிறுவனத்தின் வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் கோவிந்தசாமி பாலா.

மேக விதைப்பு போன்ற வானிலையை மாற்றியமைக்கும் நுட்பங்களின் செயல்திறன் குறித்து சில விவாதங்கள் இருந்தாலும், அவை மட்டுமே பெரிய வெள்ளம் அல்லது பெரிய அளவிலான புயல்களை ஏற்படுத்த முடியாது என்று விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.

மறுபுறம், புவி பொறியியல் என்பது காலநிலையை மாற்றும் குறிக்கோளுடன் சுற்றுச்சூழலைக் கையாளும் முயற்சிகளைக் குறிக்கிறது.

இதில் அடிக்கடி குறிப்பிடப்படும் ஒரு வடிவம், சூரிய கதிர்வீச்சு மாற்றம். அதாவது, சூரிய ஒளியை மீண்டும் விண்வெளியில் பிரதிபலிக்கச் செய்யவும், கோட்பாட்டளவில் பூமியை குளிர்விக்கவும், வளிமண்டலத்தில் சில பொருட்களின் நுண்துகள்களைத் தெளிப்பதே சூரிய கதிர்வீச்சு மாற்றமாகும்.

பிரிட்டன் உள்படப் பல நாடுகளில், சமீபத்திய ஆண்டுகளில் சூரிய பொறியியல் ஆராய்ச்சியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆபத்தான வெப்பமாதலைக் கட்டுப்படுத்த உதவுமா என்பதைப் புரிந்துகொள்ளும் முயற்சிகளாக இவை உள்ளன.

உலகம் அனுபவித்து வரும் சில தீவிர வானிலைகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?

காலநிலை மாற்றமே, வெப்ப அலைகள் அல்லது அதிக மழைப்பொழிவு போன்ற சில வகையான தீவிர வானிலைகள் உருவாவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாகவும், அந்த நிலைமைகளைத் தீவிரப்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwy7lx1jrv0o

""தவறான" கேள்விக்காக இத்தாலிய பத்திரிகையாளர் பணிநீக்கம், பிரஸ்ஸல்ஸ்: "அனைவருக்கும் பதிலளிக்கத் தயாராக"

1 month ago

"தவறான" கேள்விக்காக இத்தாலிய பத்திரிகையாளர் பணிநீக்கம், பிரஸ்ஸல்ஸ்: "அனைவருக்கும் பதிலளிக்கத் தயாராக"


ஏஜென்சியா நோவாவின் முன்னாள் பங்களிப்பாளரான கேப்ரியல் நுன்சியாட்டி, காசாவின் மறுகட்டமைப்புக்கு இஸ்ரேல் நிதியளிக்க வேண்டுமா என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்திடம் கேட்டார். அவர் பணிநீக்கம் செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு

என்ரிகோ பாஸ்கரெல்லா என்ரிகோ பாஸ்கரெல்லா எழுதியது

5 நவம்பர் 2025

அரசியலில்

சட்டமன்றம்

பிரஸ்ஸல்ஸ் - பத்திரிகையாளர் கேப்ரியல் நுன்சியாட்டிக்கு ஆதரவாக பிரஸ்ஸல்ஸ் மற்றும் இத்தாலியில் ஒற்றுமைக்கான செய்திகள் பெருகி வருகின்றன , நோவா செய்தி நிறுவனத்தால் அவர் " தொழில்நுட்ப ரீதியாக தவறு " என்று செய்தித்தாளின் உரிமையாளர் விவரித்த கேள்விக்கு பணிநீக்கம் செய்யப்பட்டார் . உக்ரைனின் மறுகட்டமைப்புக்கு ரஷ்யா நிதியளிக்கக் கேட்டது போல், காசாவில் மோதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கும் அது அவ்வாறே செய்யுமா என்று நுன்சியாட்டி ஐரோப்பிய ஒன்றிய ஆணைய செய்தித் தொடர்பாளர் பவுலா பின்ஹோவிடம் கேட்டிருந்தார்.

அரசியலின் எதிர்வினை

இந்த அத்தியாயத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பல இத்தாலிய MEPக்கள் நாள் முழுவதும் நிருபருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தனர். " இது மிகவும் தீவிரமான சம்பவம் , இது பத்திரிகை சுதந்திரத்தைப் பற்றி அக்கறை கொண்ட எவரையும் எச்சரிக்க வேண்டும்," என்று PD MEP Sandro Ruotolo கருத்து தெரிவித்தார். பசுமை மற்றும் இடது கூட்டணியின் இலரியா சாலிஸும் அதே தொனியைப் பயன்படுத்தினார் : "பத்திரிகை சுதந்திரத்திற்கான ஒரு ஆபத்தான சமிக்ஞை. இந்தக் கேள்வி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுக்கொள்ள முடியாத இரட்டைத் தரத்தை எடுத்துக்காட்டுகிறது ."

இந்தப் பிரச்சினை குறித்துப் பேசிய , தொழில்முறைப் பிரிவின் உச்சக்கட்டமான தேசிய பத்திரிகையாளர் கவுன்சில் கூட , "பத்திரிகையாளரின் பங்கு சங்கடமான அல்லது வரவேற்கப்படாத கேள்விகளைக் கேட்பதாகும்" என்று நினைவு கூர்ந்தது.

ஐரோப்பிய ஆணையம் , ஏதேனும் சந்தேகங்களை நீக்குவதற்கும், பணிநீக்கம் செய்யக் கோரிய சில மறுகட்டமைப்புகளை மேற்கொள்வதற்கும், செய்தித் தொடர்பாளர் அரியன்னா பொடெஸ்டா கையொப்பமிட்டு அஸ்காநியூஸால் விநியோகிக்கப்பட்ட ஒரு குறிப்பில் உண்மைகளை தெளிவுபடுத்தியது : “பத்திரிகையாளர் கேப்ரியல் நுன்சியாட்டியின் பணிநீக்கம் தொடர்பான கேள்விகள் ஏஜென்சியா நோவாவிடம் உரையாற்றுவது விரும்பத்தக்கது ,” பின்னர் “இந்த விஷயம் தொடர்பாக ஆணையம் ஏஜென்சியா நோவாவைத் தொடர்பு கொள்ளவில்லை ” என்று கூறினார். மேலும், பிரஸ்ஸல்ஸ் “பத்திரிகை சுதந்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது” என்றும் “மதியம் பத்திரிகையாளர் சந்திப்பின் பின்னணியில் எந்தவொரு கேள்விகளுக்கும் பதிலளிக்க எப்போதும் தயாராக உள்ளது” என்றும் வலியுறுத்தியது. சுருக்கமாக, இந்த விவகாரம் அனைத்து இத்தாலிய தாராளவாதத்தின் சோகமான அத்தியாயமாகத் தெரிகிறது.

 

Imagoeconomica_2324425-300x200.jpg

ஜனநாயகக் கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சாண்ட்ரோ ருடோலோ (உரிமைகள்: இமேகோஎகனாமிகா)

வழக்கு

அக்டோபர் 13 ஆம் தேதி, பிரஸ்ஸல்ஸில் சில வாரங்கள் தங்கியிருந்த நிருபர்,  ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர்  பவுலா பின்ஹோவிடம் ஒரு கேள்வியைக் கேட்டபோது இந்த வழக்கு வெடித்தது . உக்ரைனில் நடந்த போரில் ஏற்பட்ட சேதத்தை ரஷ்யா திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ஆணையம் ஏன் வலியுறுத்துகிறது, ஆனால் காசா விவகாரத்தில் இஸ்ரேலுடன் அதையே செய்யவில்லை என்று நுன்சியாட்டி கேட்டார். "இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி, ஆனால் இந்த நேரத்தில் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை," என்று செய்தித் தொடர்பாளர் மறைத்துவிட்டார், ஒருவேளை துயரத்தில் இருக்கலாம்.

சில வாரங்களுக்குப் பிறகு,  ஏஜென்சியா நோவாவின் நிர்வாகத்துடன் பலமுறை தொடர்பு கொண்ட பிறகு, அந்த ஒத்துழைப்பாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார் . ரோமை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு தகவலில் இதற்கான காரணங்கள் வெளிப்பட்டன. "எங்கள் ஒத்துழைப்பாளர் கேப்ரியல் நுன்சியாட்டி, ஐரோப்பிய ஆணைய செய்தித் தொடர்பாளரிடம் தொழில்நுட்ப ரீதியாக தவறான கேள்வியைக் கேட்டார் ," என்று அது கூறுகிறது. இரண்டு வெவ்வேறு போர் சூழ்நிலைகள் இருந்தபோதிலும், ரஷ்யாவை இஸ்ரேலுடன் ஒப்பிடுவதே தவறு என்று அந்த நிறுவனம் கூறியது. "ரஷ்யாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நிலைப்பாடுகளுக்கு இடையிலான வேறுபாடு பங்களிப்பாளருக்கு மீண்டும் மீண்டும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது," நோவா தொடர்கிறார், "ஆயினும்கூட, சூழ்நிலைகளில் கணிசமான மற்றும் முறையான வேறுபாட்டை அவர் புரிந்து கொள்ளவில்லை, மாறாக கேட்கப்பட்ட கேள்வி சரியானது என்று வலியுறுத்தினார், இதனால் சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகள் பற்றி தனக்குத் தெரியாது என்று காட்டினார்" , நோவா ஏஜென்சி சொத்து விளக்குகிறது. 

கூடுதலாக, பத்திரிகையாளர் கேள்வி கேட்ட காணொளி உடனடியாக வைரலானது. நோவாவின் கூற்றுப்படி, " ரஷ்ய தேசியவாத டெலிகிராம் சேனல்கள் மற்றும் ஐரோப்பிய எதிர்ப்பு செயல்பாட்டில் அரசியல் இஸ்லாத்துடன் தொடர்புடைய ஊடகங்கள்" ஆகியவற்றில் பரப்பப்பட்டது நிறுவனத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது, இதனால் அந்த நிருபரை நீக்க முடிவு செய்தது.

"தவறான கேள்விகள் எதுவும் இல்லை"

இத்தாலியில் பத்திரிகை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலின் கவலையளிக்கும் அறிகுறியாக இந்த சம்பவத்தை வகைப்படுத்தலாம். இன்றுதான் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இலவச பத்திரிகைக்கான அறிக்கை வழங்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில், MEP மற்றும் பத்திரிகையாளர் சாண்ட்ரோ ருடோலோ எங்கள் தகவல்களின் ஏராளமான சிதைவுகளை பட்டியலிட்டார். "2024 ஆம் ஆண்டில், இத்தாலிய பத்திரிகையாளர்களால் சுமார் 519 அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன ," என்று அவர் நினைவு கூர்ந்தார், செய்தியாளர்களின் பணி "பொழுதுபோக்கு அல்ல, மாறாக சங்கடமாக இருக்கும் கேள்விகளைக் கேட்பது " என்று வலியுறுத்தினார். 

ஒரு குறிப்பில், MEP பத்திரிகை சுதந்திரத்தின் ஒரு முக்கிய கொள்கையை ஏஜென்சியா நோவாவுக்கு நினைவூட்டியது: " தவறான கேள்விகள் எதுவும் இல்லை . ஜனநாயகத்தைப் போலவே, தகவல்களிலும், விவாதத்தை ஏற்படுத்தினாலும் கூட, பதில்களைத் தேட உதவும் கேள்விகள் மட்டுமே உள்ளன."

https://www.eunews.it/en/2025/11/05/italian-journalist-fired-for-wrong-question-brussels-willing-to-answer-everyone/

கிரேக்க அறிஞ்ஞர் சோர்கிரடீஸ் கேள்வி கேளுங்கள் என்று கூறினார், கேள்வி கேட்டதினால் ஒருவர் வேலையினை இழந்துள்ளார். 🤣

ஈக்வடார் சிறைச்சாலை கலவரத்தில் 31 பேர் உயிரிழப்பு.

1 month ago

AFP__20251110__83JZ4G3__v1__HighRes__Ecu

ஈக்வடார் சிறைச்சாலை கலவரத்தில் 31 பேர் உயிரிழப்பு.

ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர்.

எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். சிலர் மூச்சுத் திணறலால் இறந்தனர், மற்றவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மச்சாலா நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள ஒரு புதிய, உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான திட்டத்தை எதிர்த்து கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடுகள், வெடிச்சத்தங்கள் மற்றும் உதவிக்கான கூக்குரல்கள் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

உடனடியாக ஒரு சிறப்பு பொலிஸ் குழு சிறைக்குள் நுழைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.

சிறைச்சாலைக்குள் இரண்டு கும்பல்களுக்கு இடையேயான கலவரமாக இது இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக செப்டம்பர் மாத இறுதியில், அதே சிறையில் நடந்த மற்றொரு ஆயுதமேந்திய கிளர்ச்சியில் 13 கைதிகளும் ஒரு சிறைக் காவலரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1452520

இந்த குளிர்காலத்தில் நீடித்த மின் தடை காரணமாக பொதுமக்கள் எதிர்ப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உள்ளார்!

1 month ago

லண்டனில் 'விருப்பக் கூட்டணி' கூட்டம்

இந்த குளிர்காலத்தில் நீடித்த மின் தடை காரணமாக பொதுமக்கள் எதிர்ப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உள்ளார், மேலும் பழியை மாற்ற முயற்சிக்கிறார் என்று உக்ரைனின் அரசுக்கு சொந்தமான தேசிய மின்சார நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கூறினார். | கிறிஸ் ஜே. ராட்க்ளிஃப்/இபிஏ எடுத்த நீச்சல் குள புகைப்படம்

பிரத்தியேகமானது

நவம்பர் 4, 2025 காலை 4:11 CET

ஜேமி டெட்மர் எழுதியது

விளாடிமிர் புடின் உக்ரைனின் எரிசக்தி விநியோகத்தின் மீது இராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்தும் அதே வேளையில், விளக்குகள் மற்றும் வெப்பத்தை தொடர்ந்து எரிய வைக்குமாறு விமர்சகர்களிடமிருந்து வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.

இந்த குளிர்காலத்தில் நீடித்த மின்தடை காரணமாக பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்படும் என்று உக்ரைன் ஜனாதிபதி அஞ்சுவதாகவும், பழியை மாற்ற முயற்சிப்பதாகவும் உக்ரைனின் அரசுக்கு சொந்தமான தேசிய மின் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கூறினார்.

எரிசக்தித் துறையின் அரசியல் கட்டுப்பாடு குறித்த உட்பூசல்களுக்கு மத்தியில் கடந்த ஆண்டு ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் வரை உக்ரெனெர்கோவை வழிநடத்திய முப்பத்தொன்பது வயதான வோலோடிமிர் குட்ரிட்ஸ்கி, ஜனாதிபதி அலுவலகம் பலிகடாவாகப் பார்க்கிறவர்களில் ஒருவர் என்று கூறினார்.

POLITICO உடனான ஒரு பிரத்யேக நேர்காணலின் போது, உக்ரைன் இடைவிடாத ரஷ்ய குண்டுவீச்சின் கீழ் “மிகவும் கடினமான குளிர்காலத்தை” எதிர்கொள்ளும் என்று அவர் கணித்தார் - மேலும் கியேவின் அரசாங்கம் தொடர்ச்சியான தவறான செயல்கள் மூலம் அதை மோசமாக்கியுள்ளது என்று வாதிட்டார்.

ஜெலென்ஸ்கியின் அணியுடனான மோதலுக்கு எண்ணெய் ஊற்றும் வகையில், குட்ரிட்ஸ்கி மீது கடந்த வாரம் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது , இது உக்ரைனின் சிவில் சமூகம் மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து கண்டனத்தைத் தூண்டியது. 

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, உக்ரெனெர்கோவில் துணை இயக்குநராக இருந்தபோது, குட்ரிட்ஸ்கி அங்கீகரித்த நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்களில் ஒன்றான அவரது குற்றச்சாட்டு, உக்ரேனிய தலைமையின் எதிரிகளை அச்சுறுத்தவும், விமர்சகர்களை மௌனமாக்கவும், அவர்களின் சொந்த தவறுகளை மறைக்கவும் சட்ட நடவடிக்கைகளை ஆக்ரோஷமாகப் பயன்படுத்துவதற்கான ஒரு தெளிவான எடுத்துக்காட்டு என்று அவர்கள் கூறுகிறார்கள்.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஜனாதிபதி அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும், "ஜெலென்ஸ்கியின் உத்தரவின் பேரில் மட்டுமே திட்டமிடப்பட்டிருக்க முடியும்" என்றும் குட்ரிட்ஸ்கி மேலும் கூறினார். கருத்துக்காக POLITICO இலிருந்து பலமுறை கோரிக்கைகள் வந்தபோதும் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் பதிலளிக்க மறுத்துவிட்டது.

கைது செய்யப்படுவதற்கு முன்பு, குட்ரிட்ஸ்கி, "நான் நிதி மோசடி செய்ததாக பொய்யான கூற்றுகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தை ஆதரிக்கும் பெயர் குறிப்பிடப்படாத டெலிகிராம் சேனல்களால்" தான் விமர்சனத்திற்கு ஆளானதாகக் கூறினார். அவர் கடுமையான சிகிச்சைக்கு இலக்காக நேரிடும் என்பதற்கான முதல் அறிகுறியாக அதை எடுத்துக் கொண்டார்.

வெள்ளிக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட குட்ரிட்ஸ்கி, தனக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுகள் "முட்டாள்தனமானவை" என்று கூறினார், ஆனால் அவை சுமத்தப்பட்டுள்ளன, எனவே "நான் ஒரு வருடத்திற்கும் மேலாக உக்ரெனெர்கோவில் இல்லை என்ற போதிலும், வரவிருக்கும் குளிர்காலத்திற்கு எரிசக்தி அமைப்பைத் தயாரிக்கத் தவறியதற்கு நான் பொறுப்பு என்ற கருத்தை ஜனாதிபதி அலுவலகம் எளிதாக விற்பனை செய்யும்" என்று கூறினார்.

இந்த குளிர்காலத்தில் ஒரு பொது மக்கள் கண்டனக் குரல் எழுந்ததால் "அவர்கள் மரண பயத்தில் உள்ளனர்" என்று அவர் மேலும் கூறினார்.

போட்டியிடும் திட்டங்கள்

கியேவில் தலைமைக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பு ஓரளவுக்கு நியாயப்படுத்தப்படும் என்று குட்ரிட்ஸ்கி கூறினார், ஏனெனில் விளக்குகளை எரிய வைப்பதற்கான போராட்டம், மேலும் பரவலாக்கப்பட்ட மின் உற்பத்தியை வெளியிடுவதில் ஏற்படும் தாமதத்தால் அதிகரிக்கப்படும்.

குளிராக மாறும்போது உக்ரைனின் எரிசக்தி சவால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜெலென்ஸ்கியிடம் அவர் முன்வைத்த திட்டத்தில் அரசாங்கம் உடனடியாக செயல்படத் தவறியதால் மேலும் அதிகரிக்கும் என்று குட்ரிட்ஸ்கி கூறினார். இந்த திட்டம், எரிசக்தி உற்பத்தியை பரவலாக்கி, மிகப்பெரிய சோவியத் கால மையப்படுத்தப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்பிலிருந்து விரைவாக மாற்றியமைத்திருக்கும், இது ரஷ்ய தாக்குதல்களுக்கு அதிக இலக்குகளை ஈர்க்கும்.  

GettyImages-2165162866-1024x683.jpg

முப்பத்தொன்பது வயதான வோலோடிமிர் குட்ரிட்ஸ்கி, ஜனாதிபதி அலுவலகம் பலிகடாவாக்கப் பார்க்கிறவர்களில் ஒருவர் என்று கூறினார். | கிரில் சுபோடின்/கெட்டி இமேஜஸ்

ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தாங்குவதற்கு மின் உற்பத்தியைப் பரவலாக்குவதே சிறந்த வழி என்ற கருத்தை மையமாகக் கொண்டது இந்த திட்டம். சமீபத்திய வாரங்களில், ஈரானால் வடிவமைக்கப்பட்ட 500 ட்ரோன்கள் மற்றும் ஒவ்வொரு தாக்குதலிலும் 20 முதல் 30 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்ததால், அவை ஆபத்தான அளவில் இரட்டிப்பாகியுள்ளன.

பரவலாக்கத் திட்டத்தை விரைவாக அங்கீகரிப்பதற்குப் பதிலாக, "ஹைட்ரஜன் மற்றும் சூரிய ஆற்றலுக்கான நூற்றுக்கணக்கான மில்லியன் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க ஒரு பெரிய நிதியை உருவாக்க" தனது சக்திவாய்ந்த தலைமைத் தளபதி ஆண்ட்ரி யெர்மக்கால் ஆதரிக்கப்பட்ட ஒரு போட்டித் திட்டத்தை ஜெலென்ஸ்கி - குட்ரிட்ஸ்கியின் கூற்றுப்படி - அங்கீகரித்தார்.

கடந்த ஆண்டு அரசாங்கம் தனது கவனத்தை பரவலாக்கத்திற்கு மாற்றியது, இறுதியில் குட்ரிட்ஸ்கியின் திட்டத்தை எடுத்துக் கொண்டது. "ஆனால் நாங்கள் ஒரு வருடத்தை இழந்தோம்," என்று அவர் கூறினார். 

நேரடித் தாக்குதல்கள் அல்லது குண்டுவெடிப்புகளின் தாக்கத்தை சிறப்பாகத் தாங்கும் வகையில் நாட்டின் எரிசக்தி வசதிகளை வலுப்படுத்துவதில் மெதுவான வேகம் - மின் உற்பத்தி நிலையங்களில் மின்மாற்றிகளைப் பாதுகாக்க கான்கிரீட் தங்குமிடங்களைக் கட்டுவது உட்பட - "அரசாங்கத்தின் பரபரப்பான தோல்வி" என்றும் அவர் கூறினார்.

உக்ரெனெர்கோ, 2023 ஆம் ஆண்டில் மின்மாற்றிகளுக்கான வசதிகளை வலுப்படுத்தவும் கான்கிரீட் தங்குமிடங்களைக் கட்டவும் தொடங்கினார் என்று குட்ரிட்ஸ்கி கூறினார் - ஆனால் மற்ற மின் உற்பத்தி நிறுவனங்களால் சிறிய வேலைகளே செய்யப்படவில்லை.

ஜனநாயக பின்னடைவு

கடந்த ஆண்டு குட்ரிட்ஸ்கி திடீரென ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது . உக்ரைனில் உள்ள பல எரிசக்தி நிர்வாகிகள், அரசியல் அதிகாரத்தை ஏகபோகமாகக் கைப்பற்ற உறுதிபூண்டுள்ள ஜனாதிபதி உள் நபர்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு சூழ்ச்சி என்று கூறுகின்றனர்.

அவரது விலகல் பிரஸ்ஸல்ஸ் மற்றும் வாஷிங்டன், டி.சி.யில் எச்சரிக்கையை ஏற்படுத்தியது - மேற்கத்திய இராஜதந்திரிகள் மற்றும் உலகளாவிய கடன் வழங்குநர்கள் உள்நாட்டு உக்ரேனிய அரசியல் குறித்த அவர்களின் வழக்கமான பொது மௌனத்தை உடைத்து, ஒரு அரிய பொது கண்டனத்தை கூட வெளியிட்டனர் . அவர்கள் கியேவை தனது போக்கை மாற்றிக்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.

இதுவரை, சர்வதேச பங்காளிகள் குட்ரிட்ஸ்கியின் கைது மற்றும் விசாரணை குறித்து எந்த பொதுக் கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. ஆனால் நான்கு முக்கிய உக்ரைனிய சிந்தனைக் குழுக்களின் குழு, குட்ரிட்ஸ்கியின் விசாரணைக்கு அடுத்த நாள், அக்டோபர் 30 அன்று ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டது , அதிகாரிகள் "மிகவும் பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் அரசியல் நடுநிலைமையுடன்" விசாரணைகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. 

அரசியல் துன்புறுத்தல்களை நடத்துவதற்கு எதிராகவும் சிந்தனைக் குழுக்கள் எச்சரித்தன. அவர்கள் தங்கள் அறிக்கையில் கூறியது: "எந்தவொரு நாட்டிலும், குறிப்பாக போரின் மிகவும் கடினமான காலங்களை அனுபவிக்கும் ஒரு நாட்டில், அதிகாரத்தில் உள்ள நிபுணர்களுக்கு எதிராக அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது, நீதியின் வெளிப்பாடாக அல்ல, மாநிலத்திற்கு ஒரு அடியாகும்."

குட்ரிட்ஸ்கிக்கு எதிரான மோசடி வழக்கை நாட்டின் மிக முக்கியமான ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்களில் ஒருவரும், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை மையத்தின் தலைவருமான டாரியா கலெனியுக், எந்த சட்ட அர்த்தமும் இல்லாதது என்று விவரித்துள்ளார். முன்னாள் எரிசக்தித் தலைவர் எந்த வகையிலும் தன்னை வளப்படுத்திக் கொண்டதற்கான ஆதாரங்களை வழக்கறிஞர் வழங்கத் தவறிவிட்டார் என்றும், மற்ற சிவில் சமூகத் தலைவர்களுடன் சேர்ந்து, இந்த வழக்கு ஜனநாயக பின்னடைவின் மற்றொரு அத்தியாயம் என்றும் அவர் வாதிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு, ரஷ்யா உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து மேலும் தாக்குதல்களை நடத்தியது , நாடு முழுவதும் உள்ள பகுதிகளைத் தாக்கியது. ஜெலென்ஸ்கியின் கூற்றுப்படி, "இந்த வாரம் மட்டும் உக்ரைனில் உயிர்களைத் தாக்க ரஷ்யர்களால் கிட்டத்தட்ட 1,500 தாக்குதல் ட்ரோன்கள், 1,170 வழிகாட்டப்பட்ட வான்வழி குண்டுகள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன." முந்தைய போர்க்கால குளிர்காலங்களைப் போலல்லாமல், இந்த முறை ரஷ்யப் படைகள் நாட்டின் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பையும் ஒரு தொடர்ச்சியான பிரச்சாரத்தில் தாக்கி வருகின்றன. 

உக்ரெனெர்கோவிலிருந்து ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டதிலிருந்து, குட்ரிட்ஸ்கி உக்ரைனின் எரிசக்தித் துறையின் தவறான மேலாண்மை என்று தான் கூறுவதை முன்னிலைப்படுத்துவதில் வெட்கப்படவில்லை. அதற்காக அவர் தேசபக்தி இல்லாதவர் என்று சமூக ஊடகங்களில் தாக்கப்பட்டதாக அவர் கூறினார். ஆனால் அவர் அதை வித்தியாசமாகப் பார்க்கிறார்.

"போர்க்காலத்திலும் கூட தவறுகளுக்காக அரசாங்கம் விமர்சிக்கப்பட வேண்டும் என்பதை பெரும்பாலான உக்ரேனியர்கள் புரிந்துகொள்கிறார்கள், இல்லையெனில் அது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும்," என்று அவர் கூறினார்.

https://www.politico.eu/article/volodymyr-zelenskyy-volodymyr-kudrytskyi-ukraine-blackout-freezing-winter-energy-supply-criticism/

ஊழல் எதிர்ப்பு அமைப்பின் சோதனைகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஜெலென்ஸ்கியின் முன்னாள் வணிக கூட்டாளியான மிண்டிச் உக்ரைனை விட்டு வெளியேறினார் - ஆதாரங்கள்

1 month ago

ஊழல் எதிர்ப்பு அமைப்பின் சோதனைகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஜெலென்ஸ்கியின் முன்னாள் வணிக கூட்டாளியான மிண்டிச் உக்ரைனை விட்டு வெளியேறினார் - ஆதாரங்கள்

Iryna Balachuk, Mykhailo Tkach — 10 நவம்பர், 09:14

ஊழல் எதிர்ப்பு அமைப்பின் சோதனைகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஜெலென்ஸ்கியின் முன்னாள் வணிக கூட்டாளியான மிண்டிச் உக்ரைனை விட்டு வெளியேறினார் - ஆதாரங்கள்

டைமர் மிண்டிச் (இடது). புகைப்படம்: ஸ்கெமி

61003 61003 பற்றி

வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு நிறுவிய உக்ரேனிய தயாரிப்பு நிறுவனமான குவார்டல் 95 இன் இணை உரிமையாளரும் தொழிலதிபருமான டைமூர் மிண்டிச், நவம்பர் 10 அன்று உக்ரைனை விட்டு வெளியேறினார் - தேசிய ஊழல் தடுப்புப் பணியகத்தின் (NABU) தேடுதலுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு.

மூலம்: அரசியல் வட்டாரங்களில் உக்ரைன்ஸ்கா பிராவ்தா வட்டாரங்கள்

ஒரு மூலத்திலிருந்து மேற்கோள்: "தேடல்களுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, மிண்டிச் இரவில் நாட்டை விட்டு வெளியேறினார்."

விவரங்கள்: முன்னதாக, NABU துப்பறியும் நபர்கள் மிண்டிச்சின் வீட்டில் சோதனை நடத்தி வருவதாக சட்ட அமலாக்க வட்டாரங்கள் உக்ரைன்ஸ்கா பிராவ்தாவிடம் தெரிவித்தன.

உக்ரைன்ஸ்கா பிராவ்தா NABU விடம் இருந்து ஒரு கருத்தைக் கோரியுள்ளது, அது கிடைத்தவுடன் அதை வெளியிடும்.

பின்னணி:

  • ஜூலை மாதம், உக்ரைன்ஸ்கா பிராவ்தா, ஒரு செல்வாக்கு மிக்க ஊழல் எதிர்ப்பு ஆதாரத்தை மேற்கோள் காட்டி, NABU மற்றும் சிறப்பு ஊழல் எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் (SAPO) மிண்டிச் மீது வழங்க சந்தேக அறிவிப்பைத் தயாரித்து வருவதாகக் கூறியது.

  • NABU மற்றும் SAPO ஊழியர்கள் " ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்த அதே முகவரியில் உள்ள ஒரு பிளாட்டில் மிண்டிச்சைப் பதிவு செய்ய முடிந்தது " என்று வணிக வட்டாரங்களில் உள்ள உக்ரைன்ஸ்கா பிராவ்தா வட்டாரங்கள் தெரிவித்தன.

  • மிண்டிச் அமெரிக்க பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்றும், இது பணமோசடியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் உக்ரைன்ஸ்கா பிராவ்தா தெரிவித்தார்.

  • உக்ரைன்ஸ்கா பிராவ்தா வட்டாரங்களின்படி, அமெரிக்க புலனாய்வாளர்கள் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டு நிறுவனம், இங்கிலாந்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் மற்றும் "சுகர்மேன்" என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு நபர் ஆகியோரை விசாரித்து வருகின்றனர். (இந்தப் பெயர் தொழிலதிபர் மைக்கைலோ சுகர்மேனுடன் பொருந்துவதாகத் தெரிகிறது. ஹோலோஸ் (குரல்) பிரிவின் எம்.பி. யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக்கின் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சுகர்மேன் மற்றும் அவருடன் தொடர்புடைய நிறுவனங்கள் "முழு அளவிலான படையெடுப்பிற்கு முன்பு ஒடேசா துறைமுக ஆலையுடன் தொடர்புடையவை.").

https://www.pravda.com.ua/eng/news/2025/11/10/8006609/

உள்வீட்டு தகவலாக இருக்குமா?

ஜெலென்ஸ்கி: ஐரோப்பிய ஒன்றியம் ஒரு மாதத்திற்குள் 20வது ரஷ்யா தடைகள் தொகுப்பைத் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 month ago

ஜெலென்ஸ்கி: ஐரோப்பிய ஒன்றியம் ஒரு மாதத்திற்குள் 20வது ரஷ்யா தடைகள் தொகுப்பைத் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

KATERYNA TYSHCHENKO - 9 நவம்பர், 20:06

ஜெலென்ஸ்கி: ஐரோப்பிய ஒன்றியம் ஒரு மாதத்திற்குள் 20வது ரஷ்யா தடைகள் தொகுப்பைத் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி. புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம்

3185 -

ஐரோப்பிய ஒன்றியம் அதன் 20வது ரஷ்ய தடைகள் தொகுப்பை உருவாக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது என்றும், இது ஒரு மாதத்திற்குள் தயாராகும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். உக்ரைன் ரஷ்ய சட்ட நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி வளங்களிலிருந்து லாபம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் உக்ரைனிய குழந்தைகளை கடத்துவதில் ஈடுபட்டுள்ள நபர்களைச் சேர்க்க முன்மொழிந்துள்ளது.

மூலம்: ஜெலென்ஸ்கியின் மாலை உரை

மேற்கோள்: " எங்கள் EU கூட்டாளர்களுடன் சேர்ந்து 20வது தடைகள் தொகுப்பைத் தயாரித்து வருகிறோம். இந்த தொகுப்பின் உள்ளடக்கங்கள் ஒரு மாதத்திற்குள் தயாரிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், மேலும் EUவின் 20வது தடைகள் தொகுப்பில் ரஷ்ய சட்ட நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி வளங்களிலிருந்து இன்னும் லாபம் ஈட்டும் தனிநபர்களைச் சேர்க்க நாங்கள் முன்மொழிகிறோம்.

உக்ரேனிய குழந்தைகளை கடத்துபவர்கள் பற்றிய புதுப்பிப்புகளும் இருக்கும் - இது உண்மையிலேயே உலகளாவிய அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும் .

விவரங்கள்: ரஷ்ய போர் உற்பத்தியை செயல்படுத்தும் ஒவ்வொரு துறையிலும் மிக அதிக அழுத்தம் இருக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

மேற்கோள்: " ஒவ்வொரு ரஷ்ய ஏவுகணையும், ஒவ்வொரு ரஷ்ய ட்ரோனும் மற்ற நாடுகளின், குறிப்பிட்ட நாடுகளின் குறிப்பிட்ட கூறுகளைக் கொண்டுள்ளது - அவை இல்லாமல், ரஷ்ய ஆயுதங்கள் எதுவும் இருக்காது. இதற்கான பணிகள் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும், மேலும் இந்தப் பொறுப்பு குறிப்பாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சகத்திடம் உள்ளது. "

மேலும் விவரங்கள்: உக்ரைனின் எரிசக்தித் துறைக்கு கூடுதல் ஆதரவைப் பெறுவதற்காக வரும் வாரங்களில் மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் ஜெலென்ஸ்கி அறிவித்தார்.

மேற்கோள்: " சில நாடுகள் ஏற்கனவே எங்களுக்கு உதவி வருகின்றன, குறிப்பாக வடக்கு ஐரோப்பாவின் நாடுகள், மேலும் தெற்கு ஐரோப்பாவின் நாடுகளுடனும் நாங்கள் ஒப்பந்தங்களைத் தயாரித்து வருகிறோம். மேலும் அரசியல் பார்வையில், உக்ரேனியர்களுக்கு, நமது மாநிலத்திற்கு, ஐரோப்பாவிற்குள் புவியியல் ரீதியாக சமநிலையான ஆதரவு மிகவும் முக்கியமானது. "

Ukrainska Pravda
No image previewZelenskyy: EU expected to prepare 20th Russia sanctions p...
Ukrainian President Volodymyr Zelenskyy says the European Union has begun work on its 20th Russia sanctions package, which is expected to be ready within a month. Ukraine has proposed adding Russian l

மேலும் EUவின் 20வது தடைகள் தொகுப்பில் ரஷ்ய சட்ட நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி வளங்களிலிருந்து இன்னும் லாபம் ஈட்டும் தனிநபர்களைச் சேர்க்க நாங்கள் முன்மொழிகிறோம்.

பிபிசி பணிப்பாளர் நாயகம், செய்தி பொறுப்பாசிரியர் இருவரும் இராஜினாமா!

1 month ago

பனோரமா ஆவணப்பட சர்ச்சை: பிபிசி பணிப்பாளர் நாயகம், செய்தி பொறுப்பாசிரியர் இருவரும் இராஜினாமா!

10 Nov, 2025 | 11:20 AM

image

பனோரமா ஆவணப்படம் டொனால்ட் டிரம்பின் உரையைத் தவறாகத் திருத்தியதாக எழுந்த கடும் விமர்சனத்தையடுத்து, பிபிசியின் பணிப்பாளர் நாயகம் டிம் டேவி மற்றும் செய்தி பொறுப்பாசிரியர் டெபோரா டர்னஸ் ஆகியோர் இராஜினாமா செய்துள்ளனர்.

ஐந்து ஆண்டுகளாக பதவி வகித்த டேவி, பொது ஒளிபரப்பாளரைச் சூழ்ந்த தொடர்ச்சியான சர்ச்சைகள் மற்றும் சார்பு குற்றச்சாட்டுகளால் அதிக அழுத்தத்துக்கு உட்பட்டிருந்தார்.

தி டெலிகிராப் திங்களன்று வெளிவந்த பிபிசி உள்குறிப்பின் விபரங்களை வெளியிட்டது.

அதில் பனோரமா நிகழ்ச்சி டொனால்ட் டிரம்பின் உரையின் இரண்டு தனித்தனி பகுதிகளை ஒன்றாக சேர்த்து திருத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் ஜனவரி 2021இல் நடந்த கெப்பிடல் ஹில் கலவரத்தை ஊக்குவிப்பதைப் போல காணொளி தோன்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த இராஜினாமாக்கள் பிபிசியில் தேவையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்ததோடு, மேலும், டொனால்ட் டிரம்ப் இந்த முடிவை வரவேற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/229969

அமெரிக்காவிடம் எஃப்-35 போர் விமானங்களை வாங்கும் சௌதி திட்டம் பற்றி இஸ்ரேல் கவலை ஏன்?

1 month ago

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் செளதி இளவரசர் முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், Win McNamee/Getty Images

படக்குறிப்பு, மே 2025-இல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் செளதி இளவரசர் முகமது பின் சல்மான்.

கட்டுரை தகவல்

  • நஸ்ரின் ஹாதூம்

  • பிபிசி உருது செய்தியாளர்

  • 9 நவம்பர் 2025

    புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்கா மற்றும் செளதி அரேபியா இடையேயான உறவுகளில், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்துவது போன்ற பல முக்கியமான பிரச்னைகள் மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளன.

செளதி இளவரசர் முகமது பின் சல்மான் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் செளதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களை வாங்கும் விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது.

இது குறித்து இரண்டு தகவல்கள் வெளிவந்துள்ளன. முதலாவதாக, அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாவதாக, இந்த ஒப்பந்தத்தின் கீழ் செளதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து 48 விமானங்களை வாங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஃப்-35 ஒப்பந்தம் குறித்து அறிந்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

எஃப்-35, அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் செளதி அரேபியா

ஆனால், இந்த ஒப்பந்தத்திற்கான பாதை இப்போதைக்கு தெளிவாக இல்லை, இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய, அமெரிக்க அரசு, அமெரிக்க அதிபர் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய மூன்று தரப்பினரின் ஒப்புதலும் அவசியம்.

செளதி எழுத்தாளர் முபாரக் அல்-அத்தியா கூறுகையில், இதுபோன்ற ஒப்பந்தங்களுக்கு, சட்டப்படி அமெரிக்க அரசு மட்டுமின்றி நாடாளுமன்றத்தின் அனுமதியும் பெற வேண்டும் என்பதை செளதி அரேபியா புரிந்து கொண்டுள்ளது.

அவர் பிபிசி உருதுவிடம் பேசுகையில், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நாடாளுமன்றத்தை இணங்க வைக்க முடிந்தால் மட்டுமே, ஒப்பந்தத்தை அவர் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று கூறினார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக, ஜனநாயக கட்சியினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செளதி அரேபியா-இஸ்ரேல் உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுப்பார்கள் என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார்.

டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கச் சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்துள்ளார், ஏனெனில் அவர் செளதி அரேபியாவை ஒரு உத்தி ரீதியான கூட்டாளியாகக் கருதுகிறார், எனவே அதன் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் கீழ் அவசியம் என்றும் அவர் நம்புகிறார்.

செளதி அரேபியாவின் பாதுகாப்புக் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய அமெரிக்கா மறுத்தால், சீனா மற்றும் ரஷ்யா போன்ற அமெரிக்காவின் எதிரிகளை செளதி அரேபியா நாடக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் கவலை தெரிவித்துள்ளார் என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார்.

செளதி அரேபியா மீண்டும் மீண்டும் போர் விமானங்களுடன் சேர்த்து, மற்ற வகையான ராணுவ மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது பற்றிப் பேசியுள்ளது என்று அல்-அத்தியா விளக்கினார்.

எஃப் 35 போர் விமானம்

பட மூலாதாரம், SAUL LOEB/AFP via Getty Images

படக்குறிப்பு, செளதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து எஃப் 35 போர் விமானங்களை வாங்க விரும்புகிறது.

இந்த ஒப்பந்தம் குறித்த இஸ்ரேலின் கவலை

இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், அது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு முக்கிய மாற்றத்தைக் குறிக்கும். இதன் பொருள் மத்திய கிழக்கில் இஸ்ரேலின் ராணுவ சக்திக்குச் சவால் ஏற்பட வாய்ப்புள்ளது.

இருப்பினும், செளதி அரேபியாவுடனான இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலின் ராணுவ மேலாதிக்கம் இந்தப் பிராந்தியத்தில் நீடிக்கும் வகையில் நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் சேர்க்கப்படலாம்.

டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய விரும்புகிறார், ஏனெனில் செளதி தலைமையின் நோக்கங்களை அவர் புரிந்துகொள்கிறார். செளதி அரேபியாவின் இலக்கு அதன் எல்லைகளின் பாதுகாப்பைத் தாண்டி இல்லை என்று டிரம்ப் நம்புகிறார் என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார்.

இந்தப் பிராந்தியத்தில் உள்ள அதன் சில அண்டை நாடுகளைப் போலல்லாமல், செளதி அரேபியாவுக்கு விரிவாக்க விருப்பங்கள் இல்லை என்பதையும் அதிபர் டிரம்ப் அறிவார் என்று அல்-அத்தியா கூறுகிறார்.

அமெரிக்கா செளதி அரேபியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை விற்பதை இஸ்ரேல் விரும்பவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேலிய ஊடக செய்திகளின்படி, மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளுடன் அதன் உறவுகள் இயல்புக்குத் திரும்பவில்லை என்றால், இதுபோன்ற ஒரு ஒப்பந்தம் எதிர்காலத்தில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஒரு தீவிர அச்சுறுத்தலை உருவாக்கலாம்.

ஆனால், செளதி அரேபியாவைப் பொறுத்தவரை, இப்போது அது அரபு நாடுகள் விவகாரத்தில் அதன் கொள்கைகள் மற்றும் கடமைகளை மாற்ற விரும்பவில்லை என்றும் முபாரக் அல்-அத்தியா நம்புகிறார்.

இதில் ஒரு முக்கியமான பிரச்னை பாலத்தீனம் ஆகும், 1967ஆம் ஆண்டு எல்லைகளின் அடிப்படையில் ஒரு சுதந்திர பாலத்தீன தேசம் உருவாக்கப்பட வேண்டும் என்று செளதி அரேபியா நம்புகிறது. மத்திய கிழக்கின் எதிர்காலம் குறித்த எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் இதுவே அடிப்படை நிபந்தனையாகும்.

செளதி அரேபியா எஃப்-35 போர் ஜெட் தொழில்நுட்பத்தை ரஷ்யா, சீனா அல்லது இரானுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இஸ்ரேல் அஞ்சுகிறது என்று அல்-அத்தியா கூறுகிறார். அப்படி நடந்தால், இரான் பாதுகாப்பு விஷயத்தில் ஒரு படி முன்னேறி அதற்கு எதிராக இஸ்ரேலின் மேலாதிக்கம் குறைந்துவிடும்.

இதற்கு முன்னர், 2020 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற கவலை எழுந்தது, அப்போது அமெரிக்கா ஆபிரகாம் ஒப்பந்தங்களின் (Abraham Accords) கீழ் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) எஃப்-35 விமானங்களை விற்கவிருந்தது. இருப்பினும், அந்த நேரத்தில் ஒப்பந்தம் முன்னேற முடியவில்லை.

அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில், விமானங்களின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்கா பல கட்டுப்பாடுகளை விதித்தது, இதில் விமானங்களைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகளும் அடங்கும். சீனாவுடன் ஐக்கிய அரபு அமீரகம் கொண்டுள்ள ஆழமான உறவுகள் காரணமாகத் தொழில்நுட்பப் பரிமாற்றம் நடந்துவிடுமோ என்று அமெரிக்கா கவலைப்பட்டது.

செளதி-அமெரிக்கா உறவுகளின் திசை மாறுமா?

டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் செளதி அரேபியாவுக்கான ஆயுத ஒப்பந்தங்களுக்கு கதவுகளைத் திறந்தார்.

இந்த ஆண்டு மே மாதம், அமெரிக்காவும் செளதி அரேபியாவும் ஒரு முக்கியப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமாக விவரிக்கப்பட்டது.

டிரம்பின் செளதி பயணத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. டிரம்ப் செளதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

வெள்ளை மாளிகை வழங்கிய தகவலின்படி, அமெரிக்கா செளதி அரேபியாவுடன் 600 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு விரிவான ஒப்பந்தத்தைச் செய்தது. 142 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் இந்த விரிவான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இதன் கீழ் அது அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களை வாங்கும்.

எனினும், எஃப்-35 போர் விமான ஒப்பந்தத்தின் உண்மையான சோதனை அமெரிக்க நாடாளுமன்றத்தின் அரங்குகளில் தான் நடக்க உள்ளது.

செளதி இளவரசர் மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செளதி-அமெரிக்க உறவுகளில் உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால், அனைத்துக் கோப்புகளும் இரு தரப்பினராலும் விவாதிக்கப்படுகின்றன. மேலும் கருத்து வேறுபாடுகள் உறவுக்குத் தடையாக மாறுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார்.

செளதி இளவரசரின் அமெரிக்கப் பயணத்தின் நோக்கம் ஆயுத ஒப்பந்தத்தை இறுதி செய்வது அல்ல, மாறாக இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவை ஆழப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறுகிறார். இந்தக் காலக்கட்டத்தில் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்பது வெளிப்படையானது.

செளதி அரேபியா பற்றி முபாரக் அல்-அத்தியா கூறுகையில், அது எஃப்-35 போர் விமானங்களுடன் சேர்த்து, பிற விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாதுகாப்பு கொள்கையை ஏற்றுக்கொள்கிறது, என்று கூறினார்.

செளதி இளவரசரின் அமெரிக்கப் பயணத்தில் எஃப்-35 பற்றிய விவாதம் முக்கியமானது, ஆனால் அது உறவுகளை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணி அல்ல என்று அவர் கூறுகிறார்.

போர் விமானமா அல்லது பாதுகாப்பு உத்தரவாதமா?

செளதி இளவரசரின் புகைப்படம்

பட மூலாதாரம், Win McNamee/Getty Images

படக்குறிப்பு, எஃப்-35 போர் விமானங்களை செளதி அரேபியாவுக்கு விற்க டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதலை பெறவேண்டும்

செளதி அரேபியா, அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களை வாங்க உறுதிபூண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால். எந்தவிதமான தாக்குதல் நடந்தாலும் செளதி அரேபியாவை பாதுகாக்கும் வகையில் அமெரிக்காவுடன் ஒரு விரிவான பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துகொள்வதில் அதன் கவனம் இருக்கிறது.

அண்மையில், அமெரிக்கா-கத்தார் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா அறிவித்தது. இதன் கீழ் கத்தார் மீதான எந்தவொரு தாக்குதலும் அமெரிக்காவின் "அமைதி மற்றும் பாதுகாப்புக்கு" அச்சுறுத்தலாகக் கருதப்படும் என்று கூறப்பட்டது.

இந்த ஒப்பந்தம் அதிபரின் 'செயலாக்க உத்தரவாக' வெளியிடப்பட்டது, அதாவது அமெரிக்க அதிபர் மாறினால் இதைத் திருத்தலாம் அல்லது ரத்து செய்யலாம்.

கத்தாருடனான ஒப்பந்தம் சட்டரீதியாக கட்டாயமாக அமலாக்கக்கூடிய பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல, இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலும் தேவையில்லை.

செளதி அரேபியாவின் முன் உள்ள மிகப்பெரிய சவால் இப்போது இதுதான்: அதன் பாதுகாப்பை உறுதிபடுத்த, கத்தாரைப் போல அமெரிக்க நிர்வாகத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஓர் ஒப்பந்தத்தை அது ஏற்றுக்கொள்ளுமா?

அல்லது அமெரிக்காவில் அதிபர் மாறினாலும் அதன் பாதுகாப்பு உத்தரவாதத்தை பாதிக்காத வகையில், அமெரிக்காவிடம் ஒரு திடமான சட்டரீதியான பாதுகாப்பு ஒப்பந்தத்திற்காக அழுத்தம் கொடுக்குமா?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cze623487jno

அணு ஆயுதப் பரிசோதனை! ட்ரம்ப் - புட்டின், இரு துருவங்கள்.

1 month ago

அணு ஆயுதப் பரிசோதனை!

ட்ரம்ப் - புட்டின், இரு துருவங்கள்

--- ------ -------

*ஜேர்மனிய நாஜி ஆட்சியை போன்று அமெரிக்காவை மாற்ற முற்படுகிறாரா ட்ரம்ப்?

*ஆயுதப் பரிசோதனை என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல் சில மாதங்களில் அல்லது சில வாரங்களில் முடிவுக்கு வரலாம்.

*அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் உடன்படுவதாக இல்லை.

-------- -------------

மூன்றாம் உலகப் போருக்கான ஏற்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறாரா என்ற கேள்விகள் தற்போது சர்வதேச அரங்கில் பேசப்படுகின்றன. அமெரிக்க உலக அதிகாரம் என்பதைவிடவும் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய சர்வாதிகாரம் என்ற தொனியில் சில சர்வதேச ஊடகங்கள் சில வமர்சனங்களை முன்வைத்துள்ளன.

சீனா - ரசியா என்ற போட்டியில் ட்ரம்ப் புவிசார் அரசியல் செயற்பாட்டில் தேவையற்ற கருத்துக்களை விதைப்பதன் ஊடாக, ரசியா போன்ற நாடுகளை சீண்டி விடுகிறார் என்று சர்வதேச ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

சீன, ரசிய நாடுகள் மீது அவசியமற்ற முறையில், அதிகளவு கோபம் ட்ரம்பிடம் இருப்பதையே மிகச் சமீபகாலமாக அவதானிக்க முடிகிறது.

ஏனைய நாடுகளுடன் "சமமான அடிப்படையில்" (on an equal basis) அணு ஆயுத சோதனைகளை மீண்டும் ஆரம்பித்தால், உரிய திட்டங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க பென்டகனுக்கு அறிவுறுத்தியமை பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

இதனையடுத்து, அணு ஆயுத பரிசோதனைக்கு தயாராக இருக்குமாறு ரசிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மொனால்ட் ட்ரம் - புட்டின் ஆகியோரின் இத் தகவலை சிபிஎஸ் (cbsnews) செய்தித் தளம் வெளியிட்டுள்ளது.

அதேநேரம், அமெரிக்கா செய்தி நிறுவனமான சிபிசியின் 60 மினிட்ஸ் (60 Minutes) இதழுக்கு டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய நேர்காணலில், அணு ஆயுதங்களை பரிசோதனை செய்யும் ஒரு சில நாடுகளில் ரசியாவும் ஒன்று என ட்ம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதேநேரம், சென்ற புதன்கிழமை ரசிய பாதுகாப்பு சபையுடன் ஒரு கூட்டத்தில், அணு ஆயுத சோதனைகளைத் தடைசெய்யும் சர்வதேச விரிவான அணுசக்தி-சோதனை-தடை ஒப்பந்தத்தை (Comprehensive Nuclear-Test-Ban Treaty - CTBT) கடைப்பிடித்து வருவதாக ரசிய ஜனாதிபதி விளாடிமின் புடின் கூறியுள்ளார்.

ஆனால், அமெரிக்கா அல்லது ஒப்பந்தத்தில் உள்ள வேறு எந்த ஒரு நாடும் அத்தகைய சோதனைகளை நடத்தினால், ரசியா பரஸ்பர நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என்றும் புட்டின் கூறியதாக சிபிஎஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அதேவேளை, ரசியாவின் அணு ஆயுத பரிசோதனை, சீனாவின் சோதனை, ஆனால் சீனா அதைப் பற்றிப் பேசுவதில்லை என்று. ட்ரம்ப் சிபிஎஸ் செய்தி நிருபர் நோரா ஓ டோனலிடம் (Norah O'Donnell) குற்றம் சுமத்தியுள்ளார்.

ரசியா அணு ஆயுத பரிசோனை செய்யவுள்ளது. வட கொரியா சோதனை செய்து வருகிறது. பாகிஸ்தான் சோதனை செய்து வருகிறது. ஆகவே, அமெரிக்கா அணு ஆயுத பரிசோதனை செய்யும் என்று டொனால்ட் ட்ரம் எச்சரித்துமுள்ளார்.

ஆனால் ட்ரம்ப் கூறுவது போன்று ரசியாவோ, வடகொரியாவோ அணு ஆயுத பரிசோதனைகளை செய்யவில்லை. நிறுத்தியுள்ளன. ஆனால் ட்ரம்ப் எச்சரிக்கை விடுவதால், இந்த நாடுகள் அணு ஆயுத பரிசோதனைக்கு முயற்சிக்கக் கூடும் என்று ரசியமற்றேர்ஸ் (russiamatters) என்ற ஆங்கில செய்தி ஆய்வுத் தளம் எதிர்வு கூறியுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மன் இராணுவத் தலைமையால் ஆரம்பிக்கப்பட்டு, நாஜி ஆட்சியின் கீழ் முழு சமூகத்தையும் போருக்குத் தயார்படுத்தியது.

“ஒட்டுமொத்தப் போர்” என்ற கோட்பாட்டின் கீழ், அன்று நாஜி ஜேர்மனியின் தலைவர்கள் கிழக்கு ஐரோப்பாவில் ஒரு அழித்தொழிப்பு போரை நடத்தியது போலவே, ஜேர்மன் மக்கள் மீதும் பேரழிவை ஏற்படுத்தினர்

இன்று, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சார்பாகப் பேசும் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இராணுவ வன்முறைக்கும் நாஜி ஆட்சியை ஒரு முன்மாதிரியாகக் கருதுகிறார் என்ற முடிவுக்கு வர முடிகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப், உடனடியாக ஒரு அதிநவீன இரும்புத் திரை போன்ற ஏவுகணை பாதுகாப்பு கேடயத்தை அமெரிக்கா நிர்மாணிக்கத் தொடங்கும் என்று அறிவித்தார். சவாலும் விடுத்திருந்தார்.

இதன் காரண - காரியமாக அமெரிக்காவின் அணு ஆயுதப் படைகளின் தொடர்ச்சியான கட்டமைப்பின் ஒரு பகுதியாக, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்க ட்ரம்ப் கடுமையாக முயற்சிக்கிறார்.

2019 ஆம் ஆண்டும் தனது முதலாவது பதவிக் காலத்தில் இவ்வாறான அணு ஆயுதப் பிரிசோதனை ஒன்றுக்கு ட்ரம்ப் முயற்சித்திருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபரில், அமெரிக்கா அணு ஆயுத பரிசோதனை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் என்று எச்சரித்தும் இருந்தார்.

அணு ஆயுதப் பரிசோதனை என்பது, வளிமண்டலத்தில் கொடிய கதிர்வீச்சைப் பரப்பும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தும்.இதன் காரணமாகவே அணு ஆயுதப் பரிசோதனை தடுப்பு ஒப்பந்தம் கூட அன்று தயாரிக்கப்பட்டது.

குறிப்பாக 1963 இல், அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கியூபா ஏவுகணை நெருக்கடியில், அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு வந்த ஒரு வருடம் கழித்து, கென்னடி நிர்வாகம் அணு ஆயுத சோதனைகளை தடை செய்யும் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தியது.

இது நில கீழ் சோதனைகளைத் தவிர அனைத்து அணு ஆயுத சோதனைகளையும் தடை செய்தது. 1992 ஆம் ஆண்டில், சோவியத் யூனியன் பிரிந்து ஒவ்வொரு மாநிலங்களும் தனிநாடாகியதைத் தொடர்ந்து, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ், அணு ஆயுத சோதனைக்கு ஒருதலைப்பட்சமான தடையை அறிவித்தார்.

இந்த சோதனை தடை செய்யப்படுவதற்கு முந்தைய தசாப்தங்களில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அணுக்குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகள் அமெரிக்காவின் மேற்கு மற்றும் தெற்கு பசுபிக் முழுவதிலும் உள்ள சமூகங்களை நோய்வாய்ப்படுத்தி, முழுப் பகுதிகளையும் வாழத் தகுதியற்ற இடமாக மாற்றியதை இலகுவாக மறந்துவிட முடியாது.

ஆகவே, இந்த அழிவுகளின் பின்னணி தெரிந்த ஒரு நிலையில் தானா டொனால்ட் ட்ரம், மீண்டும் அணு ஆயுத பரிசோதனை என்ற ஆபத்தான கதையை மீண்டும் கிளறுகிறார் என்ற கேள்வி எழுகிறது.

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் குறித்து தென் கொரியாவில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை கடந்த ஒக்ரோபர் மாதம் சந்தித்த போது, ட்ரம்ப் தனது அணு ஆயுத சோதனை பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதனை சீன ஊடகங்கள் கண்டித்திருந்தன.

உலக அரங்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு வழிமுறையாக, அமெரிக்க அணு ஆயுதக் களஞ்சியத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ட்ரம்ப், அணு ஆயுதப் போர் மூலம் அழித்தொழிக்கும் அச்சுறுத்தலை உலகில் உருவாக்கி வருகிறார்.

ரசியா மற்றும் சீனா இணைந்து செலவிடுவதை விட, உலகின் மிகப்பெரிய அணு ஆயுத திட்டத்தைக் கொண்டுள்ள அமெரிக்கா, இரண்டு மடங்குக்கு அதிகமாக அணு ஆயுதங்களுக்காக செலவிடுகிறது.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் சோவியத் ஒன்றியத்தை அச்சுறுத்துவதற்காக, ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் உள்ள பாதுகாப்பற்ற மக்களை அழித்த ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே ஆகும்.

ட்ரம்பின் அறிவிப்பைப் பற்றி செய்தி வெளியிடும் போது, அமெரிக்க பிரதான ஊடகங்கள் (Mainstream Media) எந்தவொரு வரலாற்று சூழலையும் அல்லது அதற்கு முந்தைய நிகழ்வுகளையும் முன்வைக்கத் தவறுகின்றன..

ஆனால், திடீரென நிகழ்ந்த ஒரு செயலாக இருக்காமல், அமெரிக்க இராணுவ நடவடிக்கையை திட்டமிடுபவர்கள், குறைந்தது 2020 முதல் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.

வேறு எந்த ஒரு நாட்டையும் விட அமெரிக்காவில் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. இதனை எவரும் மறுக்க முடியாது.

ஒரு நிலையற்ற புதிய அணு ஆயுத யுகத்திற்கான நவீன ஆயுதக் களஞ்சியத்தை உருவாக்குவதன் மூலம், அமெரிக்காவை அணு ஆயுத சக்தியாக மாற்றுவதற்கான ரகசியத் திட்டம் குறித்து நியூ யோர்க் ட்ரைம்ஸ் ஒரு சிறப்புக் கட்டுரையை கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் வெளியிட்டது.

நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கும் இடத்திலோ அல்லது ஏவுகணை குழிகள் தோண்டப்படும் இடத்திலோ நீங்கள் வசிக்கவில்லை என்றால், அது நடக்கிறது என்பதை நீங்கள் அறியாமல் இருக்க வாய்ப்புள்ளதாக நியூயோர்க் ட்ரைம்ஸ் (New York Times) சுட்டிக்காட்டியிருந்தது.

அமெரிக்க மத்திய அரசு, இத் திட்டத்தைப் பற்றி பகிரங்கமாக, அமெரிக்க காங்கிரசின் விசாரணைகள் மற்றும் மூலோபாய ஆவணங்களுக்கு வெளியே, அல்லது பெருமளவிலான தொகை இதற்கு செலவழிக்கப்படுவதைப் பற்றி அதிகம் கூறவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க காங்கிரஸ் 895 பில்லியன் டொலர் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்திற்கு (NDAA) ஒப்புதல் அளித்தது, இது மனிதகுல வரலாற்றில் எந்தவொரு நாட்டையும் விட மிகப்பெரிய இராணுவ வரவு-செலவுத் திட்டமாகும். இதில் அணு ஆயுத நவீனமயமாக்கல் முயற்சிகளுக்கான சாதனை நிதியும் அடங்குகின்றது.

அதேவேளை, அணுசக்தி சொற்பொழிவுப் போரில் மற்றொரு சுற்றுக்கு வழிவகுத்த ரசிய ஜனாதிபதி புடின், ஒக்டோபர் 29 ஆம் திகதி போஸிடான் அணுசக்தியால் இயங்கும் நீருக்கடியில் ட்ரோனின் வெற்றிகரமான சோதனையை அறிவித்துள்ளார்.

அதை “வேகத்திலும் ஆழத்திலும் ஒப்பிடமுடியாது" மற்றும் "தடுக்க இயலாது" என்று அழைத்தார். இது ட்ரம்ப் நிர்வாகத்துக்கு ரசியா கொடுத்த பெரும் சவால்.

ஆனாலும், அமெரிக்க அரசியல் - இராணுவ நிர்வாகம், ட்ரம்ப் கட்டளையிடும் அனைத்துக்கும் செவிசாய்த்து செயற்படும் என்று கூற முடியாது. இக் கருத்தை ரொய்டர்ஸ் செய்தி சேவை வெளியிட்டிருந்தது.

அதேநேரம் அமெரிக்காவில் உள்ள சில பொறுப்புள்ள அச்சு ஊடகங்கள் ட்ரம்பின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிடவும், அமெரிக்க தேசிய நலன் என்பதில், செய்திகளை வெளியிடும் முறைமைகளில் மிகக் கவனமாக கையாண்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

ஆகவே, இந்த அணு ஆயுதப் பரிசோதனை என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல் சில மாதங்களில் அல்லது சில வாரங்களில் முடிவுக்கு வரலாம். ஆனால், அது உறுதியான மனித குலத்துக்கு ஆபத்தில்லாத புரிந்துணர்வாக இருக்க வேண்டும் என்பதே வல்லரசு அல்லாத நாடுகளின் வேண்டுதலாகும்.

அத்துடன் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் ட்ரம்ப்புடன் பல விடயங்களில் உடன்படுவதாக இல்லை என்பதும் ஆரோக்கியமான செய்திதான்.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://www.facebook.com/share/p/1BUWbCk2Fs/

ஜப்பானில் 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

1 month ago

Published By: Digital Desk 3

09 Nov, 2025 | 03:18 PM

image

வடக்கு ஜப்பானின் கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09)  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.  இதனால் இவாட் மாகாணம் முழுவதும் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 5:03 மணிக்கு (உள்ளூர் நேரம்) 6.7 ரிச்டர் அளவில் ஏற்பட்டதாகவும், அதன் மையப்பகுதி பசிபிக் பெருங்கடலில் சான்ரிகு அருகே சுமார் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கடலில் அலைகள் ஒரு மீட்டர் (மூன்று அடி) வரை உயர வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவாட் மாகாணத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் 4 ரிச்டர் அளவிலான நில அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/229917

அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி

1 month ago

Published By: Digital Desk 3

09 Nov, 2025 | 12:20 PM

image

சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா சனிக்கிழமை (08) அமெரிக்காவைச் சென்றடைந்தார். 

அமெரிக்கா அவரை பயங்கரவாத தடுப்புப்பட்டியலில் இருந்து நீக்கிய ஒரு நாளுக்குப் பின்னர் அமெரிக்காவைச் சென்றடைந்தார் என சிரிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் நீண்டகால ஆட்சியாளர் பஷார் அல்-அசாத்தை பதவி நீக்கம் செய்த கிளர்ச்சிப் படைகளின் தலைவரான அல்-ஷாரா, திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.

1946 ஆம் ஆண்டு சிரியா சுதந்திரம் பெற்றதன் பின்னர் சிரிய ஜனாதிபதி ஒருவர் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

செப்டம்பர் மாதம் நியூயோர்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அல்-ஷாரா உரையாற்றினார்.

மே மாதம் ட்ரம்பின் மத்திய கிழக்கு சுற்றுப்பயணத்தின் போது இடைக்காலத் தலைவர் ட்ரம்பை முதன்முறையாக ரியாத்தில் சந்தித்தார்.

இந்த மாத தொடக்கத்தில், சிரியாவிற்கான அமெரிக்க தூதர் டாம் பராக், அல்-ஷாரா இஸ்லாமிய அரசுக்கு எதிரான சர்வதேச அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் "நம்பிக்கையுடன்" கையெழுத்திடும் என தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அல்-ஷாராவை உலகளாவிய பயங்கரவாதி பட்டியலில் இருந்து நீக்க அமெரிக்க வெளிவிவகார அமைச்சு  எடுத்த தீர்மானம் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயமாகும்.

https://www.virakesari.lk/article/229897

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்

1 month ago

அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

08 Nov, 2025 | 03:33 PM

image

DNA கட்டமைப்பைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் தனது 97 ஆவது வயதில் காலமானார்.

அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் 1953 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரான்சிஸ் கிரிக் (Francis Crick) உடன் இணைந்து DNAயின் இரட்டைச் சுருள் கட்டமைப்பைக் கண்டுபிடித்தார்.

இது 20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய திருப்புமுனையாக இருந்தது. 

DNAயின் இரட்டைச் சுருள் கட்டமைப்பைக் கண்டுபிடித்ததற்காக அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சனுக்கு 1962 ஆம் ஆண்டில் நோபல் பரிசும் கிடைத்தது. 

அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் 1928 ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதம் சிகாகோவில் பிறந்தார்.

ஜேம்ஸ் வாட்சன்  தனது 15 வயதில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் படிக்க புலமைப்பரிசில் பெற்றார். 

DNA கட்டமைப்பு குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர ஜேம்ஸ் வாட்சன்  கேம்பிரிட்ஜுக்குச் சென்றார், அங்கு அவர் பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரான்சிஸ் கிரிக்கை சந்தித்து தனது கண்டுபிடிப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/229849

10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி - ஜேர்மனியில் சம்பவம்!

1 month ago

10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி - ஜேர்மனியில் சம்பவம்!

08 Nov, 2025 | 02:08 PM

image

ஜேர்மனியின் வூர்ஸ்பர்க் (Würzburg) நகரில் உள்ள வைத்தியசாலையில் இரவு நேரக் கடமையின் மன அழுத்தத்தைக் குறைக்கத் தனது பராமரிப்பில் இருந்த 10 நோயாளிகளுக்குத் தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி கொலை செய்த ஆண் தாதிக்கு ஜேர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் வூர்ஸ்பர்க் நகரில் உள்ள வைத்தியசாலையில் கடமைபுரியும் குறித்த தாதி, தனது பராமரிப்பில் இருந்த வயதான மற்றும் தீவிர நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் இவ்வாறு கொலை செய்துள்ளார்.

இரவுப் பணியின் போது ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவே அவர் இந்தச் செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது. நோயாளிகளுக்குத் தேவையற்ற அதிகப்படியான தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி அவர் இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளார்.

டிசம்பர் 2023 முதல் மே 2024 வரை இந்த இறப்புகள் பதிவாகி உள்ளன. விசாரணையில், அவர் 10 நோயாளிகளைக் கொலை செய்ததுடன், மேலும் 27 நோயாளிகளை அதே முறையில் கொல்ல முயன்றார் என்றும் தெரியவந்தது.

குற்றம் சாட்டப்பட்ட ஆண் தாதியின் பெயர் வெளியிடப்படாத நிலையில், வழக்கு விசாரணையின் இறுதியில், குற்றத்தை உறுதிசெய்த நீதிமன்றம், அந்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இருப்பினும், அவர் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் தாதியர்களால் அரங்கேற்றப்படும் தொடர் கொலைச் சம்பவங்கள் இது முதல் முறையல்ல. வடக்கு ஜேர்மனியில் 1999 முதல் 2005 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், நீல்ஸ் ஹோஜெல் (Niels Högel) என்ற ஆண் தாதி இரண்டு வைத்தியசாலைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளைக் கொலை செய்தார் என்பது 2019 ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்தது. இவர் ஜேர்மனியின் நவீன வரலாற்றில் மிகவும் கொடூரமான தொடர் கொலைகாரராகக் கருதப்படுகிறார்.

தற்போது அதே பாணியில், இரவுப்பணி அழுத்தத்தைக் காரணம் காட்டி மற்றொரு தாதியர் நிகழ்த்திய கொடூரக் கொலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளமை, ஜேர்மன் சுகாதாரத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/229845

அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம் எதிரொலி: 40 விமான நிலையங்களில் சேவை குறைப்பு!

1 month ago

New-Project-1-7.jpg?resize=600%2C300&ssl

அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம் எதிரொலி: 40 விமான நிலையங்களில் சேவை குறைப்பு!

அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதால் நாட்டின் முக்கிய 40 விமான நிலையங்களில், விமானங்கள் சேவையை 10 சதவீதம் குறைப்பதாக அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், முந்தைய ஜனாதிபதி ஜோ பைடன் அரசின் பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் மாற்றி அமைத்து வருகிறார்.

இதனால், அமெரிக்க பாராளுமன்றத்தில் டிரம்ப் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அரசு துறைகளுக்கான நிதியை விடுவிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நிதி முடக்கத்தால், 6.70 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளனர். அதே நேரத்தில், 7.30 லட்சம் பேர் ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர்.

இதனால், அரசின் முக்கிய துறைகள் அனைத்தும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

அதில் விமான போக்குவரத்து துறையும் ஒன்று.

நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லான்டா என முக்கிய விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களிலும், 50 சதவீத ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறையால் விமான தாமதங்கள், ரத்து போன்ற அசௌகரியங்கள் பெருமளவில் ஏற்படுகின்றன.

இதனால் பயணியர் பாதிக்கப்படுவதை தடுக்கவும், பாதுகாப்பு நடவடிக்கையாகவும், 40 முக்கிய விமான நிலையங்களில், 10 சதவீதம் விமான சேவைகளை குறைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1452288

துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?

1 month ago

கிரேட் எகிப்திய அருங்காட்சியம், துட்டன்காமன் அருங்காட்சியகம், எகிப்து

பட மூலாதாரம், Photo by AMIR MAKAR/AFP via Getty Images

படக்குறிப்பு, துட்டன்காமனின் தங்க முகமூடி உட்பட அவரது கல்லறையின் 5,000 பொக்கிஷங்கள் முதல் முறையாக ஒன்றாகக் காட்சிப்படுத்தப்படும்

கட்டுரை தகவல்

  • கெய்ன் பியரி

  • பிபிசி நியூஸ்

  • 6 நவம்பர் 2025

பண்டைய உலகின் கடைசி எஞ்சியிருக்கும் அதிசயமான பிரமாண்டமான கிசா பிரமிடின் அருகில் கட்டப்பட்ட, உலகமே ஆவலுடன் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் இறுதியாக திறக்கப்பட்டது.

120 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தளம் - பிரான்சின் லூவர் அருங்காட்சியகத்தை விட இரண்டு மடங்கு பெரியது.

பாய் கிங் (சிறிய வயதில் அரசரானவர்) என்று அழைக்கப்பட்ட துட்டன்காமன் உடன் புதைக்கப்பட்ட இதுவரை உலகத்தின் பார்வைக்கு காட்டப்படாத பொக்கிஷங்கள் உட்பட 70,000 முதல் 100,000 பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரம்மாண்ட அருங்காட்சியகம் 2002-இல் அறிவிக்கப்பட்டது. 2012-இல் திறப்பதாக திட்டமிடப்பட்ட இந்த அருங்காட்சியகம், பெரும் செலவு, அரசியல் குழப்பங்கள், கோவிட்-19 தொற்றுநோய், பிராந்திய மோதல்கள் என தொடர்ந்து பலமுறை தாமதங்களை எதிர்கொண்டது.

இந்த மெகா திட்டத்திற்கு சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகை செலவாகியுள்ளது, இதில் பெரும்பகுதி ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கடன்களால் மேற்கொள்ளப்பட்டது.

கிரேட் எகிப்திய அருங்காட்சியம், துட்டன்காமன் அருங்காட்சியகம், எகிப்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சலீமா இக்ராம் கடந்த இருபது வருடங்களாக கிரேட் எகிப்திய அருங்காட்சியகத்துடன் இணைந்து பணியாற்று வருகிறார்.

மர்மங்களுக்குப் பெயர் போன இடம்

இந்த அருங்காட்சியகத்தை எகிப்தின் "உலகிற்கான பரிசு" எனக் குறிப்பிடுகிறார் அந்நாட்டின் பிரதமர் மொஸ்தபா மட்பௌலி.

இந்த அருங்காட்சியம் எகிப்திய கலாசாரத்தின் முக்கியத்துவத்தையும் செல்வாக்கையும் எடுத்துக்காட்டுவதுடன், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கெய்ரோ பல்கலைக்கழக பேராசிரியரான சலீமா இக்ராம் கடந்த இருபது வருடங்களாக கிரேட் எகிப்திய அருங்காட்சியகத்துடன் இணைந்து பணியாற்று வருகிறார்.

"பண்டைய எகிப்து, அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது" என்று கூறும் சலீமா, "கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் போனீஷியர்கள் கூட எகிப்தை மர்மம் மற்றும் அறிவு நிறைந்த நிலமாக நினைத்தார்கள்" என்றார்.

நவீன கால எகிப்தியர்களை அவர்களின் பாரம்பரியத்துடன் மீண்டும் இணைக்க இந்த அருங்காட்சியகம் உதவும் என்று நம்பப்படுகிறது.

வீடு திரும்பும் துட்டன்காமன்

கிரேட் எகிப்திய அருங்காட்சியம், துட்டன்காமன் அருங்காட்சியகம்

பட மூலாதாரம், Grand Egyptian Museum

படக்குறிப்பு, கிரேட் எகிப்திய அருங்காட்சியம்

1922-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் எகிப்தியலாளர் ஹோவர்ட் கார்ட்டர் துட்டன்காமன் கல்லறையைக் கண்டுபிடித்ததிலிருந்து, அவரைப் பற்றிய செய்திகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

உலகெங்கிலும் பல நகரங்களில் பல தசாப்தங்களாக காட்சிப்படுத்தப்பட்ட பின்னர், துட்டன்காமனின் தங்க முகக் கவசம், சிம்மாசனம் மற்றும் அவருடன் புதைக்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட பொக்கிஷங்கள் (இதுவரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படாதவை உட்பட) முதல் முறையாக முழுமையாக காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

"துட்டன்காமனின் கல்லறையில் கிடைத்த பொருட்களை ஒரே இடத்தில் வைப்பது அற்புதமானது" என்கிறார் சலீமா.

"எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் துட்டன்காமனின் காட்சியகங்களில் கவனம் செலுத்துவார்கள் என்று நினைக்கிறேன்." என்கிறார் மான்செஸ்டர் அருங்காட்சியக எகிப்து மற்றும் சூடான் காப்பாளரான கேம்பல் பிரைஸ். இவர் ஏற்கனவே இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளார்.

"முக்கிய காட்சியகங்கள் அனைத்துமே கண்களை கொள்ளை கொள்ளக்கூடியவை, ஒவ்வொரு பொருளும் வியப்படையச் செய்கிறது. எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது, என்னை உணர்ச்சிவசப்படச் செய்தது." என்று அவர் தெரிவித்தார்.

கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம், ராமேசஸ் தி கிரேட் சிலை, கெய்ரோ

பட மூலாதாரம், REUTERS/Mohamed Abd El Ghany

படக்குறிப்பு, 3,200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ராமெசஸ் தி கிரேட் என்ற பிரமாண்டமான சிலை

கிங் டுட்டின் பொக்கிஷங்களுடன், அருங்காட்சியகத்தின் பிரதான மண்டபத்தில் 3,200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ராமெசஸ் தி கிரேட்-இன் பிரமாண்டமான சிலை உட்பட பிற குறிப்பிடத்தக்க படைப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.

கிமு 7000 ஆம் ஆண்டு வரையிலான பல பொக்கிஷங்களைப் போலவே, இந்த சிலையும் இங்கு வந்த கதை சுவராஸ்யமானது.

கெய்ரோவின் பிரதான ரயில் நிலையத்தின் முன் 51 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த இந்த சிலை, புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பாக நகர் முழுவதும் காட்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

உலகின் பழமையான மற்றும் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்ட கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படும், 4,600 ஆண்டுகள் பழமையான, கிங் கூஃபுவின் 'சூரிய ஒளிப் கப்பலுக்காக' பிரத்யேக சிறப்புப் பிரிவு ஒன்றும் உள்ளது.

கிரேட் எகிப்திய அருங்காட்சியம், துட்டன்காமன் அருங்காட்சியகம், எகிப்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எகிப்தியவியலாளர் ஜாஹி ஹவாஸ் (நடுவில்), கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் தொடங்கப்பட்டதிலிருந்து நிதி திரட்டவும் அதை மேம்படுத்தவும் உதவியுள்ளார்.

"எகிப்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும்"

இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழா என்பது பொக்கிஷங்களை காட்சிப் பொருளாக வைப்பது மட்டும் அல்ல, அதற்கும் அப்பாற்பட்டது என்கிறார் எகிப்தின் இந்தியானா ஜோன்ஸ் என்று அழைக்கப்படும் தொல்பொருள் ஆய்வாளர் ஜாஹி ஹவாஸ்.

மேலும், இது எகிப்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.

"நமது நினைவுச் சின்னங்களை ஆராயும் விஞ்ஞானிகளாக நாம் மாற வேண்டிய நேரம் இது" என்று கூறும் அவர், "அரசர்களின் பள்ளத்தாக்கில், 64 அரச கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்றாலும், அதில் ஒன்றைக் கூட எகிப்தியர்கள் தோண்டி எடுக்கவில்லை" என்றார்.

துட்டன்காமனின் கல்லறை உட்பட எகிப்தின் பெரும்பாலான முக்கிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தது வெளிநாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் என்பதை ஹவாஸ் சுட்டிக்காட்டுகிறார்.

எகிப்தியர்கள் தங்கள் சொந்த பாரம்பரியத்தை அறிந்து கொள்வதிலும், தேடி பாதுகாப்பதிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்று கூறும் அவர், அவற்றை உறுதி செய்வதை தனது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.

இந்த அருங்காட்சியகம் அனைத்து எகிப்தியர்களுக்குமான இடமாக கருதப்பட்டாலும், சிலருக்கு நுழைவுக் கட்டணம் அதிகமாகத் தோன்றலாம். வயது வந்த எகிப்தியர்களுக்கான டிக்கெட் 200 எகிப்திய பவுண்டுகள் (சுமார் ரூபாய் 354) ஆகும்.

இந்தக் கட்டணம், வெளிநாட்டு பார்வையாளர்களிடம் வசூலிக்கப்படும் 1,200 பவுண்டுகளுடன் (சுமார் ரூபாய் 2100) ஒப்பிடும்போது மிகவும் குறைவானதுதான் என்றாலும், பல உள்ளூர் குடும்பங்களுக்கு இந்தக் கட்டணம் மிகவும் அதிகமானதாக தோன்றக்கூடும்.

"இறந்தவர்களை மட்டும் கவனித்துக் கொண்டிருக்காமல், உயிருள்ளவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும்," என்று பேராசிரியர் சலீமா கூறுகிறார். "இது அனைவருக்கும் பொதுவானது, இருப்பினும் சில எகிப்தியர்களுக்கு நுழைவுக் கட்டணம் சற்று அதிகம் என்றே தோன்றும்."

கிரேட் எகிப்திய அருங்காட்சியம், துட்டன்காமன் அருங்காட்சியகம், எகிப்து

பட மூலாதாரம், Mohamed Elshahed /Anadolu via Getty Images

படக்குறிப்பு, இந்த அருங்காட்சியகம் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

தொல்பொருளியலின் புதிய சகாப்தம்

ஹவாஸைப் பொறுத்தவரை, கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகத்தின் திறப்பு விழா கடந்த காலத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எகிப்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதும் ஆகும்.

நினைவுச்சின்ன காட்சியகங்களுக்கு அப்பால், இந்த வளாகத்தில் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன. அவை, எகிப்திய மற்றும் சர்வதேச குழுக்கள் பல தசாப்தங்களாக தொடர்ந்து ஆய்வு செய்து, மீட்டெடுத்து, புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் இடங்கள் ஆகும்.

"இப்போது கிங்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள லக்சர் மற்றும் சகாராவில் அகழாய்வு செய்து வருகிறேன். எங்கள் நினைவுச்சின்னங்களில் 30% மட்டுமே நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் - இன்னும், 70% மணலுக்கு அடியில் உள்ளது," என்கிறார் ஹவாஸ்.

அருங்காட்சியகம் அதன் பரந்த அரங்குகளை பொதுமக்களுக்குத் திறந்தாலும், எகிப்தின் மிகப்பெரிய பொக்கிஷங்கள் இன்னும் அதன் பாலைவனங்களுக்கு அடியில் காத்திருக்கின்றன - எகிப்தின் தொல்பொருளியலின் புதிய சகாப்தம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

கூடுதல் செய்தி சேகரிப்பு: பிபிசி நியூஸ் அரபிக்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg1135klrxo

உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகும் முதல் நபராக எலான் மஸ்க்!

1 month 1 week ago

உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகும் முதல் நபராக எலான் மஸ்க்!

07 Nov, 2025 | 12:38 PM

image

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப் பெரிய பணக்காரருமான எலான் மஸ்க், உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலர் சொத்துடைய முதல் நபர் என்ற பெருமைக்குரியவராகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்திடம் தனக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் ஊதியம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்துள்ளார். 

இந்நிலையில், அவருக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் ஊதியத்தினை வழங்க, டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். 

மொத்தமாக உள்ள நிறுவனத்தின் பங்குதாரர்களில் 75 வீதமானோர் இந்த சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், எலான் மஸ்க் இந்நிறுவனத்தில் மேலும் 7 ஆண்டுகள் சேவையை தொடர்வது உறுதியாகியுள்ளது. 

தற்போது 1.5 ட்ரில்லியன் டொலராக உள்ள  டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பினை, 8.5 ட்ரில்லியன் டொலராக உயர்த்தவேண்டும் என்ற நிபந்தனையோடு எலான் மஸ்க்கின் சம்பள உயர்வுக்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். 

இந்த சம்பளத்தை பணமாக அல்லாமல் அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எலான் மஸ்க் உலகின் முதல் ட்ரில்லியன் டொலர் பணக்காரராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக எலான் மஸ்க்கின் அரசியல் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களால் டெஸ்லா கார்களின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும், அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகமாகவே காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையிலேயே எலான் மஸ்க்  அதிகப்படியான ஊதியமாக, ஒரு ட்ரில்லியன் டொலரை கேட்டு நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

அவரது கோரிக்கைக்கு நிறுவன பங்குதாரர்கள் இணங்கியுள்ள நிலையில், கேட்டபடி ஊதியத்தை எலான் மஸ்க் பெற்றுவிட்டால், அவர்,  உலகிலேயே ஒரு ட்ரில்லியன் சொத்துக்கு சொந்தக்காரராகும் முதல் நபராக கருதப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.https://www.virakesari.lk/article/229703

இப்போது எப்படி இருக்கிறது காஸா? - போரின் பேரழிவை நேரில் கண்ட பிபிசி

1 month 1 week ago

இப்போது எப்படி இருக்கிறது காஸா? - போரின் பேரழிவை நேரில் கண்ட பிபிசி

இரண்டு ஆண்டு போருக்குப் பிறகு காஸாவின் நிலை - பிபிசி நேரில் கண்டது என்ன?

கட்டுரை தகவல்

  • லூசி வில்லியம்சன்

  • மத்திய கிழக்கு செய்தியாளர், காஸா

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

காஸா நகரை நோக்கி இருக்கும் கரையிலிருந்து காணுகையில் போரின் விளைவுகளை மறைக்க முடியாது.

வரைபடங்கள் மற்றும் நினைவுகளிலிருந்து காஸா நகரம் அழிந்துவிட்டது. ஒருபுறம் பெயிட் ஹனூன் முதல் மறுபுறம் காஸா சிட்டி வரை தரை மட்டமாக ஒரே நிறத்தில் காட்சியளிக்கும் இடிபாடுகளே நினைவில் உள்ளன.

இன்னும் தொலைதூரத்தில் நின்றுகொண்டிருக்கும் கட்டடங்களை தவிர, காஸா நகரில் நீங்கள் பயணிப்பதற்கோ அல்லது பல பத்தாயிர மக்களின் இருப்பிடங்கள் அமைந்திருந்ததற்கான அடையாளங்களை காண்பதற்கோ உங்களுக்கு எதுவும் இல்லை.

போரின் ஆரம்ப வாரங்களில் இஸ்ரேலிய தரைப்படையினர் நுழைந்த பகுதிகளில் இதுவும் ஒன்று. இதையடுத்து, தங்களின் வலுவான பகுதிகளில் ஹமாஸ் மீண்டும் இணைந்ததால், இஸ்ரேலிய படையினர் பலமுறை திரும்பி வந்துள்ளனர்.

காஸாவிலிருந்து செய்தி நிறுவனங்கள் சுயாதீனமாக செய்தி சேகரிக்க இஸ்ரேல் அனுமதிப்பதில்லை. புதன்கிழமையன்று, பிபிசியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் உட்பட சிலரை காஸா முனையில் இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு அழைத்துச் சென்றது.

குறுகிய நேரம் நீடித்த இந்த பயணம் தீவிரமாக கட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது, இதில் பாலத்தீனர்களையோ அல்லது காஸாவின் மற்ற பகுதிகளையோ அணுக முடியவில்லை.

செய்திகள் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே அவை ராணுவ அதிகாரிகளால் பார்க்கும் வகையில் இஸ்ரேலின் ராணுவ தணிக்கை சட்டங்கள் உள்ளன. எனினும் இந்த செய்தியாக்கம் மீதான தனது கட்டுப்பாட்டை பிபிசி உறுதி செய்தது.

காஸா நகரத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள ஷெஜையாவில் காணப்பட்ட  இடிபாடுகள்

படக்குறிப்பு, காஸா நகரத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள ஷெஜையாவில் காணப்பட்ட இடிபாடுகள்

நாங்கள் சென்றுவந்த பகுதியில் அழிவு எந்தளவுக்கு உள்ளது என இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் நாடவ் ஷோஷானியிடம் கேட்டபோது, "எங்கள் இலக்கு அதுவல்ல" என பதிலளித்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

"பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதுதான் எங்களின் இலக்கு. கிட்டத்தட்ட அனைவரின் வீட்டிலும் பதுங்குக்குழி அல்லது கண்ணி பொறி அல்லது ராக்கெட் மூலம் செலுத்தப்படும் எறி குண்டு அல்லது குறிபார்த்து துப்பாக்கி சுடும் அமைப்பு உள்ளது," என அவர் தெரிவித்தார்.

"இங்கிருந்து நீங்கள் வேகமாக வாகனத்தை இயக்கினால், ஒரு நிமிடத்திற்குள் இஸ்ரேலிய மூதாட்டி அல்லது குழந்தையின் வீட்டின் அறைக்குள் இருப்பீர்கள். அதுதான் அக்டோபர் 7 அன்று நடந்தது."

2023ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் 1,100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

அப்போதிலிருந்து, காஸாவை சேர்ந்த 68,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக, ஹமாஸ் நடத்தும் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சாம்பல் நிற இடிபாடுகள்

இந்த பகுதியில் பணயக்கைதிகள் சிலரின் உடல்கள் கண்டறியப்பட்டதாக கூறும் லெப்டினன்ட் கர்னல் ஷோஷானி, அதில் இந்த வாரம் ஹமாஸால் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட இடாய் சென்னின் உடலும் அடங்கும் என்றார். மற்ற ஏழு பணயக்கைதிகளின் உடல்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நாங்கள் சென்ற இஸ்ரேலிய ராணுவ தளமானது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அமைதி திட்டத்தின் படி அமைக்கப்பட்ட தற்காலிக எல்லையான மஞ்சள் கோட்டிலிருந்து சில நூறு மீட்டர்களில் அமைந்திருந்தது, இந்த பகுதி காஸாவில் ஹமாஸ் கட்டுப்படுத்தும் பகுதிகளில் இருந்து இன்னும் இஸ்ரேலிய படைகளால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளை பிரிக்கிறது.

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மற்றும் பொதுமக்களை எச்சரிக்கும் விதமாக, அந்த மஞ்சள் கோட்டு பகுதியில் படிப்படியாக தடுப்புகளை அமைத்து இஸ்ரேலிய ராணுவம் குறியிட்டு வருகிறது.

கோட்டின் இந்த பகுதியில் எந்த எல்லைகளும் இன்னும் வரையறுக்கப்படவில்லை எனக்கூறிய இஸ்ரேலிய படையை சேர்ந்த ஒருவர், கட்டடங்களின் சாம்பல் நிற இடிபாடுகளுக்கு இடையில் ஒரு சிறிய மணல் பகுதியை வழிகாட்டியாகப் பயன்படுத்தி சுட்டிக்காட்டினார்.

காஸா நகரத்தில் புதன்கிழமை காணப்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினர்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, காஸா நகரத்தில் புதன்கிழமை காணப்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினர்

போர் நிறுத்தம் ஏற்பட்டு ஒரு மாதமாகிவிட்டது, ஆனால் மஞ்சள் கோட்டு பகுதியில் ஹமாஸ் துப்பாக்கிதாரிகளுடன் "கிட்டத்தட்ட தினமும்" தாங்கள் சண்டையிடுவதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர். காஸா நகரத்தை நோக்கியிருக்கும் கரைகளில் உள்ள துப்பாக்கிச் சூடு நிலைகள் வெண்கல நிற தோட்டா உறைகளின் குவியல்களால் குறிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் "நூற்றுக்கணக்கான முறை" போர் நிறுத்த விதிகளை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது, மேலும் அதன் விளைவாக 240க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவால் வழிநடத்தப்பட்ட அமைதி திட்டத்துக்கு இஸ்ரேலிய படைகள் உறுதி பூண்டுள்ளதாக கர்னல் ஷோஷானி கூறுகிறார், ஆனால் இஸ்ரேலிய குடிமக்களுக்கு ஹமாஸ் இனியும் ஓர் அச்சுறுத்தலாக இருக்காது என்பதை தாங்கள் உறுதி செய்வோம் என்றும், தேவையானவரை தாங்கள் இருப்போம் என்றும் கூறினார்.

"ஹமாஸ் ஆயுதங்களை வைத்துள்ளது மற்றும் காஸாவை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது என்பது எல்லோருக்கும் மிக தெளிவாக தெரியும்," என்கிறார் அவர். "இதற்கு தீர்வு காணத்தான் நாம் முயற்சிக்கிறோம், ஆனால் அது வெகு தொலைவில் உள்ளது" என ஷோஷானி தெரிவித்தார்.

காஸா நகரின் கட்டடங்கள் சாம்பல் நிற இடிபாடுகளாக உள்ள காட்சி

பட மூலாதாரம், Moose Campbell/ BBC

படக்குறிப்பு, காஸா நகரின் கட்டடங்கள் சாம்பல் நிற இடிபாடுகளாக உள்ள காட்சி

அடுத்த கட்டம் என்ன?

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தின் அடுத்த கட்டத்தின்படி, ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு, அதிபர் டிரம்ப் உட்பட சர்வதேச தலைவர்கள் உள்ள பாலத்தீன குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், அதிகாரம் மற்றும் ஆயுதங்களை கைவிடுவதற்கு பதிலாக, ஹமாஸ் அதற்கு எதிரானதை செய்துவருவதாக கர்னல் ஷோஷானி கூறுகிறார்.

"காஸா மீதான கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கத்தை நிறுவுவதற்காக, ஹமாஸ் தன்னை ஆயுதமயப்படுத்தி கொள்ள முயற்சிப்பதாக," அவர் என்னிடம் கூறினார். "பொதுமக்களை பயமுறுத்துவதற்காகவும் காஸாவில் யார் தலைமை வகிக்கிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்வதற்காகவும் ஹமாஸ் மக்களை பட்டப்பகலில் கொலை செய்கிறது. ஹமாஸ் தங்கள் ஆயுதங்களை கைவிடுவதை உறுதி செய்ய இந்த ஒப்பந்தம் போதுமான அழுத்தத்தை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்."

இஸ்ரேலியப் படையினர், இடிபாடுகளுக்கு அடியில் கண்டுபிடித்ததாகக் கூறும் சுரங்கப்பாதைகளின் வரைபடத்தை எங்களுக்குக் காட்டினர். "சிலந்தி வலை போன்ற பெரியளவிலான சுரங்கப்பாதைகளை" தாங்கள் கண்டதாக அவர்கள் தெரிவித்தனர், அதில் பல ஏற்கெனவே அழிந்துவிட்டன, சில அப்படியே உள்ளன, இன்னும் சில சுரங்கப்பாதைகளை படையினர் தேடிவருகின்றனர்.

இந்த அமைதி ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்தில் என்ன நடக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்த ஒப்பந்தம் காஸாவை பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. சூழல் எந்தளவுக்கு நிலையற்றதாக உள்ளது என்பதை அமெரிக்கா அறிந்துள்ளது, மேலும் போர் நிறுத்தம் ஏற்கெனவே இருமுறை தோல்வியடைந்துள்ளது.

இந்த நிலையற்ற மோதலில் இருந்து நீடித்த அமைதியை நோக்கி முன்னேற அமெரிக்கா கடுமையாக முயற்சித்து வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுக்கு அமெரிக்கா அனுப்பிய வரைவு தீர்மானம் பிபிசியால் பார்க்கப்பட்டது, அதில் காஸாவின் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தவும் ஹமாஸ் ஆயுதங்களை கைவிடவும் ஒரு சர்வதேச ஸ்திரப்படுத்தும் படைக்கு (International Stabilisation Force - ISF) இரண்டு ஆண்டு கால அதிகாரத்தை வழங்குகிறது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்டம் குறித்து அதிக தகவல்கள் தெரியவில்லை: ஹமாஸ் ஆயுதக் குறைப்புக்கு முன்னதாக காஸாவைப் பாதுகாக்க எந்த நாடுகள் படைகளை அனுப்பும், இஸ்ரேலிய படைகள் எப்போது திரும்பப் பெறப்படும் அல்லது காஸாவின் புதிய தொழில்நுட்ப நிர்வாகத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு நியமிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

எதிர்காலத்தில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்து காஸாவை மத்திய கிழக்கு மையமாக கட்டமைக்கும் ஒரு தொலைநோக்குப் பார்வையை அதிபர் டிரம்ப் கோடிட்டுக் காட்டியுள்ளார். காஸா இன்று இருக்கும் சூழலில் அந்த நோக்கம் வெகு தொலைவில் உள்ளது.

சண்டையை யார் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பது மட்டுமல்லாமல், காஸா இஸ்ரேலால் பெரும்பாலும் அழிக்கப்பட்டு டிரம்பால் முதலீடாகக் கருதப்படும் நிலையில், காஸா மக்கள் தங்கள் நகரங்கள் மற்றும் நிலங்களின் மீது எதிர்காலத்தில் எவ்வளவு செல்வாக்கு செலுத்துவார்கள் என்பதும் கேள்வியாக உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c62e0z9166do

Checked
Sun, 12/14/2025 - 04:34
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe