Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ‘வா ராசா.. வா ராசா கமலஹாசா’: நடிகர் கமல்ஹாசன் நாளை அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நிலையில், யூரியூபில் கமலின் அரசியல் பயணத்தை வரவேற்கும் வகையில், ‘வா ராசா.. வா ராசா கமலஹாசா’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் நாளை தனது அரசியல் பயணத்தை துவக்குகிறார். ராமேசுவரத்தில் இருந்து தனது பயணத்தைத் அவர் தொடங்குகிறார். பின்னர், மாலையில் மதுரையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கு கட்சியின் கொடியையும், பெயரையும் அவர் அறிமுகப்படுத்தவுள்ளார். முன்னதாக, தான் அரசியல் பயணத்தை துவக்குவதை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன…

  2. ராஜம்மாள்... ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை உடைப்பாரா? #VikatanExclusive ஜெயலலிதா மரணத்தின் சல்லி வேரை தேடிக்கொண்டிருக்கிறது ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன். டாக்டர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்த விசாரணைக் கமிஷன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஜெயலலிதா வீட்டில் பணி செய்யும் ஊழியர்களை விசாரணைக்கு அழைத்திருக்கிறது. போயஸ் கார்டன் வீட்டில் சமையல் செய்யும் ராஜம்மாளை நாளை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பனை 23-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே கார்டனில் வேலை பார்த்த சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனை விசாரணை செய்திருக்கிற…

  3. இடைவெளியில்லாத 14.30 மணிநேரம்... வெளியேறாத மக்கள் கூட்டம்... இது மே 17 ஸ்டைல்! ''இலங்கை இனப்பிரச்னை குறித்தான விவாதம் வருகிற மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெறவிருக்கிறது. இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில், லட்சக்கணக்கிலான ஈழத் தமிழர்களை ராணுவம் கொன்றொழித்தது. இந்த இன அழிப்பு குறித்தான விவாதங்களை ஐ.நா மனித உரிமை ஆணையம் நடத்தி வருகிறது. ஆனால், இலங்கையில் இனஅழிப்பு நடத்தப்பட்டதையும், தமிழர்களுக்கான உரிமை பறிக்கப்பட்டு வருவதையும் ஐ.நா மனித உரிமை ஆணையம் இன்றுவரை ஏற்க மறுக்கிறது. அங்கு நடந்தது போர்க்குற்றம்கூட அல்ல என்று உலகநாடுகளை இந்தியா, அமெரிக்கா, சீனா, இலங்கை ஆகிய நாடுகள் நம்…

  4. போரூர் ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு மரண தண்டனை குற்றவாளி தஷ்வந்த், தூக்குக்கயிறு - கோப்புப் படம் போரூர் சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கொடூர குற்றவாளியான தஷ்வந்த் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அறிவித்திருந்தார். தீர்ப்பு வெளியாவதை அடுத்து தஷ்வந்தை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். கடந்த முறை பொதுமக்கள், மாதர் அமைப்பினர் தஷ்வந்தை தாக்கியத…

  5. அதிமுக அரசை வீழ்த்த தயாராகிவிட்டதா பாஜக?- எதிர்க்கும் ஓபிஎஸ்.. வலுக்கும் மோதல் அதிமுக தலைமை அலுவலகம் | கோப்புப் படம் அதிமுக அரசை வீழ்த்த பாஜக தயாராகிவிட்டதை தெரிந்து கொண்டுதான் அக்கட்சிக்கு எதிராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசி வருவதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிலும் ஆட்சி நிர்வாகத்திலும் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. தலைமைச் செயலகத்தில் வருமானவரித் துறை சோதனை, சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி, இரட்டை இலை சின்னம் முடக்கம், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது, அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை, ஆர்.கே.நகர் இடைத்தேர்…

  6. அழிவை நோக்கி 40-க்கும் அதிகமான மொழிகள்: தமிழகத்திலும் 2 வட்டார மொழிகள் உள்ளன கோப்புப் படம் நாட்டில் வட்டாரங்களில் பேசப்பட்டுவரும் 40-க்கும் மேற்பட்ட மொழிகள் அழிவை நோக்கி இருக்கின்றன என்று மத்திய புள்ளியியல் துறை தெரிவிக்கிறது. இந்த மொழிகள் குறிப்பிட்ட சில ஆயிரம் மக்களால் மட்டுமே பேசப்பட்டு வருகிறது இது குறித்து மத்திய புள்ளியியல் துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: நாட்டில் மொத்தம் 22 பட்டியலிடப்பட்ட மொழிகளும், பட்டியலிடப்படாமல் 100 மொழிகளும் உள்ளன. இந்த 100-க்கும் மேற்பட்ட மொழிகளை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பேசி வருகின்றனர். …

  7. அரசியல் ஒரு சாக்கடை.. இதில் யார் வந்தால் என்ன?- அழகிரி கருத்து திருமண விழாவில் அழகிரி அரசியல் ஒரு சாக்கடை.. இதில் யார் வந்தால் என்னவென்று திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த தாயில்பட்டியில் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் அழகிரி இன்று (திங்கள்கிழமை) கலந்து கொண்டார். விழாவில் கலந்துகொண்டுவிட்டு அவர் காரில் ஏற முற்பட்டபோது செய்தியாளர்கள் அவரிடம் திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுபினர். அதற்கு அழகிரி, "அரசியல் ஒரு சாக்கடை.. இதில் யார் வந்தால் எ…

  8. ஏரியில் மிதந்து வந்த 7 உடல்களால் பரபரப்பு !!! இந்தியா - திருப்பதி அருகே ஏரியில் 7 உடல்கள் நேற்று மிதந்து வந்ததைத் தொடர்ந்து உடல்களை மீட்ட பொலிஸார் தீவிர விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். இந்தியா - ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா என்ற இடம் திருப்பதி மலைப்பகுதியையொட்டி உள்ளது. இங்குள்ள மலை அடிவாரத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. நேற்று இந்த ஏரி வழியாக சென்றவர்கள் ஏரிக்குள் 7 உடல்கள் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த ஒண்டிமிட்டா பொலிஸாரும், தீயணைப்புத்துறையினரும் அந்த ஏரிக்கு விரைந்து சென்று ஏரியில் மிதந்து வந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள வைத்திய சாலை…

  9. கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். #kamalhaasan #karunanidhi #gopalapuramhouse சென்னை: நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறார். வருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்த…

  10. 'கமல் பாணி வேறு; என்னுடைய பாணி வேறு' - ரஜினிகாந்த் சினிமாவைப் போல அரசியலிலும் என்னுடைய பாணி வேறு கமல்ஹாசனுடைய பாணி வேறு என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 21ம் தேதி அரசியல் சுற்றுப் பயணத்தை ராமநாதபுரத்தில் தொடங்க இருக்கிறார் கமல்ஹாசன். அன்றே மதுரையில் பொதுக்கூட்டத்தையும் நடத்த உள்ளார். அரசியல் பயணத்தை தொடங்க உள்ள நிலையில் தனக்கு பிடித்தமான மனிதர்களை சந்திக்கிறேன் என்று கூறி நேற்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்த கமல்ஹாசன் தொடர்ந்து, இன்று (18.2.2018) நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். சென்னை போயஸ் இல்லத்தில் உள்ள வீட்டில் நடைபெற்ற சந்திப்பில் மதுரைப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு…

  11. சசிகலா குடும்பத்தினரின், தமிழக சொத்து களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வரும்,வருமான வரித்துறை,அவர்கள் நடத்திய போலி நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு கள் குறித்தும், விசாரணையை துவக்கியுள்ளது. இது தொடர்பாக, அமலாக்கத் துறையும், விரைவில் களத்தில் இறங்குகிறது. அதனால், சசி உறவுகளுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் நிழலாக, 25 ஆண்டுகளாக வாழ்ந்த சசிகலா மற்றும் அவர்களது உறவினர்கள், தமிழகத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து களை வாங்கி குவித்துள்ளனர். இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள், சசிகலா, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என, சென்னையில், 117 இடங்…

  12. மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் ரகசியமும் வைகோ பிரகடனமும்! “அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் இருக்கிறேன். போட்டோகிராபரை அனுப்பி வைக்கவும்’’ என்று செய்தி அனுப்பினார் கழுகார். அடுத்த அரை மணி நேரத்தில் நம்முன் ஆஜரானார் கழுகார். ‘‘அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் என்ன விசேஷம்?” என்றோம். “ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி, அவரது உருவச்சிலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை பகுதியில் தயாரிக்கப்பட்ட இந்தச் சிலை, இரண்டு மாதங்களுக்கு முன்பே சென்னை வந்துவிட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அளவுக்கே ஜெயலலிதாவின் சிலையும் வைக்கப்பட உள்ளது. சிலையில் கண் பகுதி சரியாக அமையவில்லையென்று, தயாரித்த இட…

  13. மோடி அறிவுரையின் பேரில்தான் அதிமுகவின் இரு அணிகளை இணைக்க ஒப்புக்கொண்டேன்: ஓபிஎஸ் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம். பிரதமர் மோடி கூறியதால்தான், அதிமுகவின் இரு அணிகளை இணைக்க ஒப்புக்கொண்டதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது, ஓபிஎஸ் பதவி விலக நேரிட்டது. ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி தனியாகப் பிரிந்தார். சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரண்டு அணிகளாகப் பிரிந்தது.…

  14. தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி: காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு- தமிழகம், கர்நாடகாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் கர்நாடகா, தமிழகம் இடையே நீண்ட காலமாக தொடரும் காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் கர்நாடகாவில் மைசூரு, மண்டியா, கிருஷ்ணராஜசாகர் அணை உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இது தொடர்பாக மெட்ராஸ் - மைசூரு மாகாணங…

  15. சிறையில் சசிகலா - விதிமுறை மீறல்களின் முழுவிவரம் #RTI சசிகலா சிறைக்குச் சென்ற நாளான 15.2.2017-லிருந்து 12.06.2017 வரை சிறையிலிருந்த போது யார் யாரெல்லாம் வந்து பார்த்தார்கள். எத்தனை முறை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. என்னென்ன விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன என்ற தகவல்கள் ஆர்டிஐ மூலம் வெளிவந்துள்ளன. ஆர்டிஐ ஆர்வலரான நரசிம்ம மூர்த்தி பெற்ற ஆர்டிஐ தகவல்கள் இதோ... ஆர்டிஐ தகவல்கள் பெறப்பட்ட நாள்களின் அளவு 117 நாள்கள். கர்நாடக உயர்நீதி மன்ற விதிகளின் படி இந்தக் காலத்தில் 15 நாள்களுக்கு ஒரு சந்திப்பு என்ற அடிப்படையில் 8 முறை மட்டுமே நபர்கள் பார்க்க அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் 32 பார்வையாளர் அனுமதி வ…

  16. ‘இது ஒரு நல்ல கேள்வி?’ - முதல்வர் பதவிகுறித்த கேள்விக்கு பன்னீர்செல்வம் சொன்ன தத்துவம் 'தமிழகம், பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது' என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதற்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பதலடிகொடுக்கும் விதமான பதில் அளித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகம் முன்பு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘ இந்தியாவிலும் சரி தமிழகத்திலும் சரி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் பிறந்தநாளை மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடுகிற நேரத்தில், ஜெயலலிதா எங்களுக்கு சொன்னது என்னவென்றால், 'என் பிறந்தநாள் அன்று என் இல்லம் தேடி வராதீர்கள். ஏழை எளிய மக்களின் இ…

  17. "வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு. ”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாட்டினை பிப்ரவரி 18 அன்று சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம் தமிழீழ விடுதலைப் பயணத்தில் நாம் இப்போது எங்கு நின்று கொண்டிருக்கிறோம், தமிழகம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, இலங்கையின் புதிய அரசியல் சாசனம் சொல்வது என்ன, தமிழீழ விடுதலை எனும் இலக்கினை நோக்கி நகர்ந்திட நாம் எவ்வாறெல்லாம் பயணத்திட வேண்டியிருக்கிறது என அனைத்தையும் குறித்த விரிவான விளக்க உரையாடல்கள் நடைபெறும். மலேசியாவின் பினாங்கு மாகாணத்தின் துணை முதல்வரான திரு.ராமசாமி அவர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். தமிழீழத்திலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்…

  18. மௌன விரதம்... சீக்ரெட் சந்திப்புகள்... சிறப்புச் சலுகைகள்... - சசிகலாவின் ஓராண்டு சிறைவாசம் #Sasikala ஜெயலலிதா மரணம், ஓ.பி.எஸ் ராஜினாமா, தர்ம யுத்தம், கூவத்தூர் கலாட்டா எனப் பரபரப்பாகத் தமிழகத்தை வைத்திருந்த சசிகலாவை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி எனக் கூறி தீர்ப்பளித்தது. சசிகலா சென்ற வருடம் இதே நாளில் சிறை சென்றது துவங்கி இன்று வரை ஒரு வருடத்தில் சசிகலாவின் டைம்லைன் இதோ... சசி சரணடைதலும், தாக்குதலும் `உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி நான் சரணடைய பெங்களூர் வரும்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் என்னைத் தாக்க சதித்திட்டம் தீட்டியுள்ளனர்' என்று …

  19. மிஸ்டர் கழுகு: அல்வா கொடுத்த ‘பக்கோடா’ மோடி! கோட்டையிலிருந்து பறந்து வந்தார் கழுகார். ‘‘நான் சொன்னதுபோலவே நடந்ததா?” என்றபடி சிரித்தார். ‘ஆமாம்’ என்று தலையாட்டியபடியே கடந்த இதழின் அட்டைப் படத்தை எடுத்துக் காட்டினோம். ‘‘ஜெயலலிதாவின் படத்தைத் திறந்து வைக்கப் பிரதமர் மோடி மறுத்த நிலையில், அவசர அவசரமாக இவர்களே திறந்துவைத்து விட்டார்கள்!” ‘‘இதைத்தான் நீர் சொல்லியிருந்தீரே!” ‘‘ஆமாம்! எப்படியாவது மோடியை வரவைத்து விட பகீரத முயற்சிகளை எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் செய்தார்கள். ஆனால் அவர்களது ஆசையில் மொத்தமாக மண் விழுந்துவிட்டது. கடந்த ஏழு மாதங்களாகப் பிரதமரை வரவைப்பதில் குறியாக இருந்தார் எடப்பாடி. 2017 மே 24-ம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்…

  20. நளினியை விடுவிக்க முடியாது! - தமிழக அரசின் திடீர் விளக்கம் Chennai: எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு 10 ஆண்டு, 20 ஆண்டு தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை வரும் 25-ம் தேதி விடுவிக்க கடந்த1-ம் தேதி தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. அதில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை அனுபவித்த கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல்கள், நிபந்தனைகள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. தமிழக அரசின் அரசாணையைத் தொடர்ந்து தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறை அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்த…

  21. எடப்பாடி அரசைக் காப்பாற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்! - ஸ்லீப்பர் செல்களால் உறைந்த மேலிடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திறப்பு விழாவை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு உருவாகியுள்ளது. `அ.தி.மு.க-வின் விசுவாசியாகவே மாறிவிட்டார் விஜயதரணி. உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவர் பேசியது எந்தவகையிலும் சரியானது அல்ல. இதற்காக அவர் ராகுல்காந்தியைத் துணைக்கு அழைத்திருப்பது ஏற்புடையதல்ல' எனக் கொதிக்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். தமிழக சட்டமன்றத்தில் நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'மறைந்த முதல்வர…

  22. ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 | பகுதி 01 ‘டாப் 10 மனிதர்கள்’ நாளைய தமிழகத்தின் பல்வேறு துறை நம்பிக்கை மனிதர்களை ‘டாப் 10 நம்பிக்கைகள்’ ஆகிய பிரிவில் விருதுகள் விகடனின் சார்பில் வழங்கப்படுகிறது. அது போல ஒவ்வொரு ஆண்டும் வெளியான புத்தகங்களில் துறைவாரியான மிகச்சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்கப்படுகிறது. ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 | பகுதி 02 ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 | பகுதி 03

  23. பரிசு திருப்பப் பெறப்பட்டதால் மாணவர்கள் ஏமாற்றம்

  24. சட்டசபையில் ஜெயலலிதா படம்: ஆதரவும், எதிர்ப்பும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் நாளை (பிப்ரவரி 12) திறக்கப்படவுள்ள நிலையில், அந்த நிகழ்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்ற பேரவை செயலாளர் க.பூபதி அளித்துள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் எடப்பாடி பழனி…

  25. புதிய இணையதளம் துவங்கினார் கமல்ஹாசன்! நடிகர் கமல்ஹாசன் இந்த மாதம் தீவிர அரசியலில் களமிறங்கவுள்ளார். அதற்கு முன்னதாக அவர் அமெரிக்காவில் பலவேறு துறை சார்ந்த நிபுணர்களிடம் பேசி வருகிறார். இன்று அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்திலும் உரையாற்றினார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து, கமலும் புதிய இணையதளம் ஒன்றை துவங்கிவுள்ளார். 'நாளை நமதே' எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் உறுப்பினராக பதிவு செய்துகொள்ளலாம். ரசிகர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் இணையும் வகையில் இணையதளத்தை தொடங்கியுள்ளார். இந்த மாதம் கமல் மக்களை சந்திக்கும் திட்டத்துக்கும் ’நாளை நமதே’ என்று தான் பெயரிட்டிருந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.