தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் வெடிகுண்டு..! - அதிர்ச்சியில் அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணி தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகே இன்று (28-07-2017) காலை வெடிகுண்டு போன்றதொரு பொருள் கண்டெடுக்கப்பட்டதால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா தொடர்புடைய வழக்குகளில் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டு, அ.தி.மு.க-வில் நெருக்கடி ஏற்பட்டபோது இரண்டு முறையும், ஜெ. மறைவைத் தொடர்ந்து ஒரு முறையும், ஆக மொத்தம் மூன்றுமுறை முதலமைச்சர் பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். பின்னர் சசிகலா குடும்பத்தைவிட்டு பிரிந்து தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். ஓ.பி.எஸுக்கு ஆதரவு தெரிவித்துவரும் எம்.ப…
-
- 0 replies
- 389 views
-
-
'சோதனை என்ற பெயரில்...' - சிறையில் உறவுகளிடம் கலங்கிய சசிகலா #VikatanExclusive டி.டி.வி.தினகரனின் மாமியார் சந்தானலட்சுமியின் இறுதி அஞ்சலியில் சசிகலா பங்கேற்க சிறைத்துறை அனுமதி மறுத்ததால், அவர் சோகத்தில் உள்ளார். மேலும், சோதனை என்ற பெயரில் நடத்தப்படும் சிறைத்துறை அதிகாரிகளின் கெடுபிடிகளால், சசிகலா மனவேதனையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திட்டமிட்ட சதி சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி, சந்தானலட்சுமி. இவரின் மகளைத்தான் டி.டி.வி.தினகரன் திருமணம் செய்துள்ளார். சந்தானலட்சுமி, நேற்று சென்னையில் மரணமடைந்தார். அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி, தஞ்சாவூரில் இன்று நடைபெறுகிறது. பரோலில் சசிகலா செல்ல சிறைத்துறையிடம் அனுமத…
-
- 0 replies
- 1k views
-
-
சசிகலா விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது: முன்னாள் டிஐஜி ரூபா திட்டவட்டம் ரூபா டி.மவுட்கில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறை யில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப் படுகிறது. இதற்காக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் சசிகலா விடம் ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றுள்ளனர் என சிறைத்துறை டிஐஜி ரூபா டி.மவுட்கில் கடந்த 13-ம் தேதி புகார் தெரிவித்தார். அதை மறுத்த முன்னாள் டிஜிபி சத்தியநாராயண ராவ், “நான் சசி கலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. 30 ஆண்டுகளுக்கும் மேலாக காவல் து…
-
- 0 replies
- 322 views
-
-
கலக்கம்! பன்னீருடன் மோடி சந்திப்பு பழனிசாமி அணி கலக்கம் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணி நிர்வாகிகளை, பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து பேசியது, பழனிசாமி மற்றும் தினகரன் அணியினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர் அணி, தினகரன் அணி என, அ.தி.மு.க., மூன்றாக பிளவுபட்டுள்ளது. பன்னீர் அணிக்கு, பா.ஜ., ஆதரவு உள்ளது. இந்நிலையில், முதல்வர் பழனிசாமி அணியினர், பிரதமருடன் நெருக்கம் காட்டினர். கலந்துரையாடல்: முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவ்வப்போது டில்லி சென்று, பிரதமரை சந்தித்தனர்; மத்திய…
-
- 0 replies
- 580 views
-
-
“இவர் வழி... தனி வழியா..?” ரஜினியின் அரசியல் ரூட்! - பாகம் 1 2016...தமிழக அரசியலில் மிகமுக்கியமான ஆண்டு! ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. தொடர்ந்து இரண்டாவது முறையாக அரியணையில் அமர்ந்து வரலாறு படைக்கப்பட்ட வருடம். அந்த சாதனையைப்படைத்த ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பரில் இறந்தும் போனார். 2016 டிசம்பர் 5-ம் தேதிக்குப் பிறகு தமிழக அரசியலே மாறிப்போனது. அதுவரை ஊமைகளாக இருந்த ‘மாண்புமிகுக்கள்’ எல்லாம் மீடியா முன்பு பேச ஆரம்பித்தார்கள். அமைச்சர்கள் பேட்டி தர மாட்டார்களா என மைக்குடன் பத்திரிகையாளர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து ஓடிய காலம்போய், பைட் கொடுப்பதற்காக, மைக்கைத் தேடி அமைச்சர்கள் அலையத் தொடங்கினார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எதிர்த்த மத்திய…
-
- 11 replies
- 3.4k views
-
-
எல்லா ஊழல்களையும் கூறாதது தவறு தான்: நடிகர் கமல் காட்டம் சென்னை: 'அனைத்து விதமான ஊழல்களை பற்றி கூறாதது என் தவறுதான்' என, நடிகர் கமல், 'டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 'தமிழகத்தில், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது' என, நடிகர் கமல் விமர்சித்தார். அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலை யில், 'டெங்கு பாதிப்பை கவனியுங்கள்; உங்களை நாங்கள் கவனிக்கிறோம்' என, டுவிட்டரில் பதிவு செய்தார். அடுத்தடுத்து, அவர் வெளியிட்டு வரும் கருத்து, அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், 'அனைத்து விதமான ஊழல்களை யும் கூறாதது தவறுதான்' என, நேற்று, கமல் தெரி வித்து…
-
- 1 reply
- 411 views
-
-
'நமது எம்.ஜி.ஆர்', இனி 'எனது' எம்.ஜி.ஆர்!... அதிமுக அதிகாரப்பூர்வ நாளேட்டின் தனி ஆவர்த்தனம்! கட்சிகள் உடைந்து அணிகளாக மாறுவதை தமிழக அரசியல் வரலாற்றில் கண்டிருக்கிறோம். ஆனால் கட்சிக்கான அதிகாரப்புர்வ நாளேடு தனி அணியாக இயங்குவதை அதிமுகதான் அறிமுகப்படுத்தியிருக்கிறது இப்போது. அண்ணா திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக இயங்கிவருகிறது நமது எம்.ஜி.ஆர். இதன் நிறுவனர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது கட்சிக்கென அதன் செயல்பாடுகள் தலைவர்களின் சுற்றுப்பயண அறிக்கைகள் நிர்வாக மாறுதல்கள் உள்ளிட்டவைகளை கட்சித்தொண்டர்களிடம் தெரிவிப்பதற்காக அண்ணா நாளிதழைத் தொடங்கினார். இதுவன்றி கே.ஏ.கிருஷ்ணசாமியின் தென்னகம் உள்பட பல பெயர்களில் கட்சிக்கெ…
-
- 0 replies
- 714 views
-
-
மிஸ்டர் கழுகு: கூடாரம் காலி! - பன்னீருக்கு வெந்நீர் ஊற்றும் எடப்பாடி... ‘‘எடப்பாடி ஆட்சி நடக்கிறது’’ என்றபடி வந்தமர்ந்தார் கழுகார். ‘‘எடப்பாடிதானே ஆட்சி நடத்துகிறார். அதை ஏன் புதிதாகச் சொல்கிறீர்?’’ என்றோம். ‘‘கட்சியிலும் ஆட்சியிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குச் சுக்கிர திசை நடக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில், உள்துறை மானியக் கோரிக்கை என்பது தலைமேல் தொங்கும் கத்தியைப் போன்றது. கருணாநிதி, ஜெயலலிதா முதலமைச்சர்களாக இருந்த காலத்தில்கூட அது இவ்வளவு அமைதியாக நடந்ததில்லை. ஆனால், எடப்பாடி அதைக்கூடச் சிறு சலசலப்பு இல்லாமல் நடத்தி முடித்துள்ளார். ஒவ்வொரு விஷயத்திலும் எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தும் சாமர்த்தியத்தைப் பார்த்து அதிகம் க…
-
- 0 replies
- 2.4k views
-
-
“கைகுலுக்கிய வைகோ.. கட்டியணைத்த துரைமுருகன்!” கவிக்கோ நினைவேந்தல் நெகிழ்வுகள் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களும், இலக்கிய ஆளுமைகளும் சென்னை காமராஜர் அரங்கின் மேடையை தன்வசமாக்கிக்கொண்ட நிகழ்வு அது. இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட கவிக்கோ அப்துல் ரகுமானின் நினைவேந்தல் நிகழ்ச்சி, புதிய விதையாக அரங்கேறியுள்ளது. இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சி. இலக்கிய நண்பர்கள் ஓர் அமர்விலும், அரசியல் நண்பர்கள் இன்னோர் அமர்விலும் பேசினார்கள். கவிக்கோவுடனான சுவாரஸ்ய அனுபவங்கள், அவரது ஆசைகள், கோபங்கள், ஆற்றல்கள் என வந்திருந்த அனைவரும் அவரைப்பற்றிய தருணங்களை சிலாகித்தனர். முதல் அமர்வில், கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், அறிவும…
-
- 0 replies
- 660 views
-
-
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்த எஸ்.ஐ.: விசாரணை அதிகாரிக்கு வந்த கடிதத்தால் பரபரப்பு சசிகலாவுக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்த காவல் உதவி ஆய்வாளருக்கு டிடிவி தினகரனும், இளவரசியின் மகன் விவேக்கும் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக விசாரணை அதிகாரி வினய்குமாருக்குப் புகார் கடிதம் வந்துள்ளது. பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்தது பற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் விசாரித்து வருகிறார். இந்நிலையில் வினய்குமார், சிறைத்துறை கூடுதல் டிஜிபி மேக்ரிக் ஆகியோருக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் பணியாற்றும் அதிகாரிகள் பெயர் குறிப்பிடாமல் கூட்டாக புகார் கடிதம் அனுப்பி…
-
- 0 replies
- 244 views
-
-
ரஜினியை ஓரம்கட்ட தான் கமல் களமிறங்குறாரா ? | Socio Talk | Rajinikanth vs Kamal Haasan நடிகர் கமல் ஹாசன் அரசியலுக்கு வரலாமா? ரஜினி அரசியல் பேசிய பிறகு தான் கமல் திடீர் களத்தில் குதிக்க என்ன காரணம்? இருவரில் யார் முதலில் அரசியலுக்கு வருவார்? மத்திய அரசுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தது சரியா? அன்று முதலே ஜெயலலிதாவுக்கு பிடிக்காத மனிதர் கமல். இன்னும் பல கேள்விகளும் விடைகளும்.
-
- 1 reply
- 407 views
-
-
‘மூன்று நாளில் நல்ல செய்தி!’ - மர்மம் கலைக்கும் டி.டி.வி.தினகரன் #VikatanExclusive ‘மூன்று நாள்களுக்குள் நல்ல முடிவை அறிவிப்பேன்' என்று டி.டி.வி.தினகரன், தன்னுடைய ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தீபா, திவாகரன் என அணிகளின் பட்டியல் நீள்கின்றன. அ.தி.மு.க-வில் உருவான அணிகளால் தொண்டர்களின் நிலைமை மதில்மேல் பூனையாக உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தைரியத்தைப் பார்த்து மன்னார்குடி குடும்ப உறவுகளும் அ.தி.மு.க-வினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். …
-
- 0 replies
- 507 views
-
-
கலைக்கப்படும் சகாயம் கமிஷன்... புதைகுழியில் கிரானைட் வழக்குகள்! ‘விலைமதிப்புமிக்க கனிமவளம், பொதுவான சமூகச் சொத்து - தேசச் சொத்து. அதை, தனிநபர்களும் நிறுவனங்களும் சுரண்டுவதை, சூறையாடுவதை அனுமதிக்க முடியாது. ஏழை விவசாயிகளின் - கிராம மக்களின் வாழ்வாதாரங்களை அழித்துவிட்டு, ஒரு சில தனியார் நிறுவனங்கள் பெரும் பலன்களை அடைவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது!’ - கிரானைட் கொள்ளை பற்றி 2012-ம் ஆண்டு தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பிய அன்றைய மதுரை கலெக்டர் சகாயம், தனது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு, முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்தன; கிரானைட் அதிபர்கள் அடித்த கொள்ளைகள் வெடித்துக் கிளம்பின; அவர்கள் வெட்டிச் சிதைத்த மலைகளின் அள…
-
- 0 replies
- 545 views
-
-
சசிக்கு ஆம்புலன்ஸ் மூலம் வெளி உணவு: சிறை ஏட்டுவின் 'சாம்ராஜ்யம்' பெங்களூரு: 'அ.தி.மு.க.,வின் சசிகலாவுக்கு தேவையான பொருட்கள், சிறை வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஏட்டு ஒருவரின் உதவியுடன், ஆம்புலன்ஸ் மூலமாக சிறைக்குள் செல்வது வாடிக்கையாக உள்ளது' என தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு சிறை உயர்அதிகாரிகளுக்கு, சிறை அதிகாரி மற்றும் ஊழியர்கள் சிலர் எழுதிய மொட்டை கடிதம் ஒன்று நேற்று வெளியானது. அதன் விபரம்:பெங்களூரு சிறையின், புற வாசல் பாதுகாப்புக்கு, கர்நாடக தொழில் பாதுகாப்பு பிரிவு ஏட்டு கஜராஜ மாகனுாரு என்பவரை, அரசு நியமித்திருந்தது. சிறையிலுள்ள கைதிகளை சந்திக்க வரும் உறவினர்களை, சோதனை செய்வ…
-
- 0 replies
- 640 views
-
-
மிஸ்டர் கழுகு: நள்ளிரவில் பணத்தை திருப்பிக் கொடுத்த அமைச்சர்! உள்ளே நுழைந்த கழுகார், இந்த இதழுக்காகத் தயாராகிவரும் அட்டையைப் பார்த்துச் சிரித்தார். “ஐயோ பாவம், எடப்பாடி! அவர் என்ன செய்வார்? எத்தனை நாள்களுக்கு ஆட்சியோ... அதுவரை அமைதியாக ஓட்டுவோம் என்று சைலன்ட் ஆக்டிங் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அவரை அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லையாம்!” என்றபடி செய்திகளைக் கொட்டத் தயாரானார் கழுகார். “தமிழகத்தைத் திரைமறைவில் ஆள்வது மத்திய அரசுதான் என்பது பழைய செய்திதான். ஆனால், மிரட்டல்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்களே?” என்று இடைமறித்தோம். “இதெல்லாம் அரசியலில் சகஜம்தானே? பி.ஜே.பி அல்லாத அரசுகள் ஆளும் மாநிலங்களில், …
-
- 0 replies
- 980 views
-
-
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு அனைத்து சலுகைகளும் ரத்து: கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேக்ரிக் தகவல் என்.எஸ்.மேக்ரிக் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட் டுள்ள அதிமுக (அம்மா) பொதுச்செய லாளர் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட அனைத்து சிறப்பு சலுகைகளும் பறிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக சிறைத்துறையின் கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேக்ரிக் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக் கப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறைத் துறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சமாக கொடுத்துள்ளார். இதனால் சசிகலாவுக்கு சிறப்பு சமையலறை, சமையலர், உதவியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக அப்போதைய டிஐஜி…
-
- 0 replies
- 300 views
-
-
மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்டு நளினி வழக்கு மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல் கேட்டு நாளை சென்னை உயர்நீதிமன்றில் நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட உள்ளதாக அவரது சட்டதரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய பெண்கள் சிறையில் உள்ளார். : 26வயதான மகள் லண்டனில் உள்ள நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரோல் கேட்டு நளினி, தமிழக அரசுக்கு மனு அனுப்பிய போதும் பரோல் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், மகளின் திருமணத்திற்காக 6 மாதம் விடுப்பில் செல்ல பரோல…
-
- 0 replies
- 565 views
-
-
சசி சொகுசுக்காக ஹவாலா மூலம் ரூ.2 கோடி கைமாறியது...அம்பலம்! பெங்களூரு:அ.தி.மு.க., சசிகலா, பெங்களூரு சிறையில் சொகுசு வசதிகளை அனுபவிக்க, ஹவாலா முறையில், இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாக தந்தது அம்பலமாகி உள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கூடுதல் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டதை, டி.ஐ.ஜி., ரூபா, மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, கர்நாடகா தலைநகர் பெங்களூரில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தாலும், தனி அறை, பார்வையாளர்களை சந்திக்க வரவேற்பு அறை, பிடித்த உணவுகளை சமைத்து வழங்க கைதிகளிலே உதவியாளர்…
-
- 0 replies
- 634 views
-
-
'சசிகலா தப்பிக்கவே முடியாது': அடித்துச் சொல்லும் ரூபா! சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் இன்னும் சில வி.வி.ஐ.பி-களுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்படுவதாக ரூபா ஐ.பி.எஸ் துணிச்சலாகத் தெரிவித்தார். சசிகலா சிறை அறையில் சமையலறை, குளிர்சாதனப் பொருள்கள் இருப்பதாகத் தெரிவித்தார். இதற்காக, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ரூபா தெரிவித்தார். இது, கர்நாடக அரசியலிலும் ஐ.பி.எஸ் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜ…
-
- 0 replies
- 521 views
-
-
'உலக்கை நாயகனா..? உலகம் சுற்றும் வாலிபனா..?' - நமது எம்.ஜி.ஆரில் விளாசல் கவிதை! நடிகர் கமல்ஹாசனுக்கும் அ.தி.மு.க அமைச்சர்களுக்கும் அறிக்கை யுத்தம் நடந்துகொண்டு இருக்கிறது. கமலுக்கு ஆதரவாகவும் ஆளூம் கட்சிக்கு ஆதரவாகவும் அறிக்கைகள், பேட்டிகள் வந்துகொண்டு இருக்கின்றன. இந்நிலையில், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான 'நமது எம்.ஜி.ஆரில் கமல்ஹாசனைக் கடுமையாக விமர்சித்து சித்ரகுப்தன் என்ற பெயரில் கவிதை வந்துள்ளது. 'உலக்கை நாயகனா..? உலகம் சுற்றும் வாலிபனா..?' - இதுதான் தலைப்பு. அக்கவிதையின் வரிகளைப் பார்ப்போம். ''வழிசொல்லத் தெரியாதவனுக்கு பழி சொல்ல மட்டுமே தெரியும் என்பார்கள். இதற்கு மெத்தப் பொருத்தமாகிறார், மொத்தமும் வில்லன். ஏழைக்…
-
- 0 replies
- 746 views
-
-
சசிகலாவின் சிறை முறைகேடு விவகாரம்: லட்சக்கணக்கில் விலை போகும் வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் - சேனல்களுக்கு இடையேயான போட்டியில் பணம் சம்பாதிக்கும் அதிகாரிகள், தாதாக்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கையில் பையுடன் வண்ண உடையில் வலம் வரும் சசிகலா. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவின் சிறை முறைகேடு தொடர்பான வீடியோ, புகைப்பட ஆதாரங்களை அதிகாரிகளும், தாதாக்களும் 10 லட்சரூபாய்க்கு தனியார் தொலைக்காட்சி சேனல்களிடம் விற்றது தெரியவந்துள்ளது. சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சசிகலா கடந்த பிப்ரவரி 16-ம் தேதி முதல் பெங்களூரு பர…
-
- 0 replies
- 270 views
-
-
சசிக்கு சலுகைகள் உண்மைதான்: புதிய சிறைத்துறை அதிகாரிகள் ஒப்புதல் பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறயைில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் உண்மைதான் என சிறைத்துறை உயர் அதிகாரிகள் இன்று ஒத்துக்கொண்டனர். சசிக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதாக டி.ஐ.ஜி., ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதற்கென ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிறைதுறை டி.ஜி.பி., சத்தியநாராயணன், ரூபா ஆகியோர் இட மாற்றம் செய்யப்பட்டனர்.இந்நிலையில் கர்நாடக சட்டசபை வளாகத்தில் சட்டசபை பொதுக்கணக்கு குழு கூட்டம் நடந்தது. குழு தலைவர் ஆர். அசோக் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., என்.எஸ் மேக்ரட், டி.ஐ.ஜி., ரேவண்ணா ஆகிய…
-
- 0 replies
- 329 views
-
-
“'மெஷின்கன்னால் சுட்டுவிடும் எண்ணம் வந்தால் அரசியலுக்கு வந்துவிடுவேன்!" கமல் மனசு என்ன சொல்லுது? கமலஹாசனின் தசாவதாரம் துவங்கிவிட்டது என்றே சொல்கிறார்கள். அரசியல் பற்றி அப்படியும் இப்படியும் குழப்பிக்கொண்டிருந்தவர் அப்போது ஊழல் என்ற வார்த்தையை அதிகார வர்க்கத்தை நோக்கி வீசி அதிர்ச்சி அலைகளை படரவிட்டிருக்கிறார். முளையிலேயே கிள்ளி எறிய நினைத்து ஆளும்கட்சியினர் லேசாக பயமுறுத்தப் பார்த்தால் அது விபரீதத்தில் கொண்டு போய்விட்டது. பேச்சிலிருந்து அறிக்கைக்கு புரமோஷன் ஆகியிருக்கிறார் கமலஹாசன் . கமல் அரசியலுக்கு வருவாரா என மக்களும் ஊடகங்களும் ஆருடம் பார்த்துக்கொண்டிருக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போதே தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக தனது அறிக்கையில் தகவ…
-
- 0 replies
- 654 views
-
-
‘சசிகலா சிறை விவகாரத்தில் சென்னை அ.தி.மு.க. பிரமுகருக்குச் சிக்கல்!’ ஏ.சி, பிரிட்ஜ், இண்டக்ஷன் ஸ்டவ் சப்ளை செய்தது அம்பலம் #VikatanExclusive சென்னை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான எலக்ட்ரானிக்ஸ் கடை பெங்களூரில் உள்ளது. அங்கிருந்துதான் சசிகலா சிறை அறைக்கு குளிர்சாதன பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைக்குழுவுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக பெங்களூரு போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தவுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் இன்னும் சில வி.வி.ஐ.பி.களுக…
-
- 0 replies
- 467 views
-
-
அதிமுக அரசின் செயல்பாடுகள் பற்றிய கமலின் துணிச்சலான விமர்சனம் பாராட்டுக்குரியது: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வரவேற்பு அதிமுக அரசு மீதான கமல்ஹாச னின் கருத்துகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது.கமல்ஹாசனுக் கும் தமிழக அமைச்சர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல்கள் இருந்து வரு கின்றன. பிஹாரை விட தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக கமல்ஹாசன் குற்றம்சாட்ட, அதிமுக அமைச்சர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். ஊழலுக்கான ஆதாரத்தை வெளியிடத் தயாரா? என்று கமலுக்கு அவர்கள் சவால் விடுத்தனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டு களுக்கான ஆதாரங்களை இ-மெயில் மூலம் அமைச்சர் களுக்கு அனுப்புமாறு தனது ரசிகர்களுக்கும், பொது…
-
- 0 replies
- 291 views
-