Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கேஸினோவில் சூதாடும் ரஜினி : சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் கடும் தாக்கு நடிகர் ரஜினிகாந்த்தை தொடர்ச்சியாக விமர்சித்துவரும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, ரஜினியை அமலாக்கத் துறை விசாரிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0, ரஞ்சித் இயக்கத்தில் காலா என இரண்டு படங்களில் நடித்துவரும் ரஜினிகாந்த், தற்போது அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார். காலா படத்தின் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். உடல்நலம் கு…

  2. ‘பன்னீர்செல்வமே முதல்வராக இருந்திருக்கலாம்!’ -‘கொங்கு லாபி’யை கதிகலக்கும் தினகரன் #VikatanExclusive பெங்களூரு சிறையில் நேற்று சசிகலாவைச் சந்தித்துப் பேசினார் டி.டி.வி.தினகரன். இந்தச் சந்திப்பில் அரசியல்ரீதியான விஷயங்கள் பேசப்பட்டதாகத் தகவல் வெளியானாலும், குடும்ப நிலை பற்றியே சசிகலா அதிகம் கவலைப்பட்டிருக்கிறார். ‘எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்தும் குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கை பற்றியும் சசிகலாவிடம் விரிவாக எடுத்துரைத்தார் தினகரன்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். முதல்வர் ஜெயலலிதா குறித்தும் கட்சியில் தன்னுடைய செயல்பாடுகள் குறித்தும் சசிகலாவின் கணவர் நடராசன் அளித்த பேட்டி அ.தி.மு.கவுக்குள் அதிர்வலையை ஏற்படுத்தியு…

  3. 58% ஜிஎஸ்டி.. நாளை முதல் எல்லா திரையரங்களும் வேலை நிறுத்தம். தீர்வை எட்டுமா? தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து திரையரங்குகளும் மூடப்படும். 58 சதவீத ஜிஎஸ்டியை எதிர்த்து திரையரங்க உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்தியா முழுவதும் நேற்று முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 58 சதவீதி ஜிஎஸ்டியை எதிர்த்து நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர். அது திட்டமிட்டப்படி நாளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரி…

    • 2 replies
    • 585 views
  4. மோடியையும், பிக்பாஸ் நிகழ்ச்சியையும், நாக்கை பிடுங்கும் விதமாக கேள்விகேட்ட - மன்சூர்அலிகான்.

    • 0 replies
    • 379 views
  5. அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த், சூதாட்ட கிளப்பில் இருப்பது போன்ற படம் சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து, நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர். காலா, 2.0 படங்களில் நடித்துவரும் ரஜினி, மருத்துவம் பார்ப்பதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஒரு சூதாட்ட கிளப்பில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் இணையதளங்களில் வெளியானது. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் தமிழ் திரையுலகமே ஸ்தம்பித்துள்ள நிலையில் ரஜினிகாந்த் சூதாட்ட கிளப்பில் ஜாலியாக இருக்கிறாரே என்ற கோபத்தில் நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை முன் வைக்கின்றனர். “அமெரிக்க சூதாட்டக் கிளப்பில் பச்சைத் தமிழன் ரஜினி போருக்கு தயாரானபோது கிளிக்கியது” என்று இன்னொருவர் அந்தப் புகைப்படத்துடன் கருத்துப் பதிவு செய்துள்ளார்…

  6. தினகரன் திட்டத்துக்கு சசிகலா தடை! spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60% பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, அவரது உறவினர்கள் தினகரன், வெங்கடேஷ் மற்றும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி வேல், க…

  7. தமிழக சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு... நடக்குமா? புதுடில்லி:முதல்வர் பழனிசாமி அரசு நடத்திய நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என, அறிவிக்கக் கோரியும், புதிதாக ரகசிய ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது. இவ்வழக்கு, வரும், ௧௧ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அ.தி.மு.க., வில் ஏற்பட்ட பிரச்னைகளால், முதல்வர் பதவியில் இருந்து விலகினார், பன்னீர்செல்வம். சசிகலா அணி சார்பில், பழனிசாமி முதல்வரா…

  8. மிஸ்டர் கழுகு: எடப்பாடி ‘அஸ்திரம்’ தினகரன் ‘திடுக்’ ‘‘ஜனாதிபதி வேட்பாளர்கள் ராம்நாத் கோவிந்த், மீரா குமார் இருவரும் தமிழகத்தின் தலைநகரை முற்றுகையிட்டதுதான் கடந்த வார பரபரப்பு’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். “பி.ஜே.பி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் அமர்க்கள வரவேற்பு கொடுத்திருக்கின்றனவே?’’ என்றோம். ‘‘ஆமாம்! அவருடைய பயணத்திட்டம் டெல்லியில் தயாரானபோதே ‘அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளுடனும் தனித்தனியாக எப்படிப் பேசுவது... என்ன பேசுவது’ என்பதும் முடிவானது. வழக்கம் போல, ஓ.பி.எஸ் அணிக்குத்தான் முன்னுரிமை. ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ, எம்.பி-க்கள் அந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். ராம்நாத்திடம் பன்னீர் காட்டிய பவ்யத்தைக் கண்டு, அவருடன்…

  9. தலைவர் எடப்பாடி பழனிசாமி; பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்! - திருத்தப்படும் அ.தி.மு.கவின் சட்டவிதிகள்? #VikatanExclusive அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவது குறித்து மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாக நேற்று பேட்டியளித்தார் நிதி அமைச்சர் ஜெயக்குமார். இந்த அறிவிப்பு தினகரன் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 'அணிகள் இணையாமல் இருப்பதைக் காரணம் காட்டித்தான், முதலமைச்சருக்குக் கெடு விதித்தார் தினகரன். பன்னீர்செல்வம் வந்தாலும், நிபந்தனையற்ற இணைப்பைத்தான் முதல்வர் விரும்புகிறார்' என்கின்றனர் அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகிகள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி என மூன்று துண்டுகளாகப் பிளவுபட்…

  10. அ.தி.மு.க., பொதுச் செயலராக இருந்த, முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் தோழி சசிகலா தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில், நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த மனு தள்ளுபடியாகும் என்பதால், அவரது சிறைத் தண்டனை ரத்தாக வாய்ப்பில்லை. அவர் நான்காண்டு, 'உள்ளே' இருப்பது உறுதி யாகும் என,சட்ட நிபுணர்கள் கருத்து தெரி வித்து உள்ளனர். அவர் வெளியே வந்தால், கட்சிக்கும், ஆட்சிக்கும் சிக்கல் ஏற்படும் என்ப தால், அ.தி.மு.க.,வினரும் பீதியுடன், தீர்ப்பை எதிர்பார்த்தபடி உள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில்,ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை, கர்நாடக உயர…

  11. சினிமாவைக் காப்பாற்ற ரஜினி ஏன் முன்வரவில்லை? டி.ராஜேந்தர் சுளீர் கேள்வி தமிழ் சினிமாவைக் காப்பாற்ற ரஜினி என் முன்வரவில்லை என்று திரைப்பட நடிகரும், லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது... ஜி.எஸ்.டி இந்த சரக்கு - சேவை வரி விதிப்பு என்பது, இந்தியாவின் கனவென்று, இந்த மத்திய அரசு கூறிவிடும். ஆனால் என்னை கேட்டால், எல்லா துறைகளிலும் விலைவாசி ஏறிவிடும். நடுத்தர ஏழை மக்களின் வாழ்வு நாறி விடும். இதிலே நாட்டின் முன்னேற்றம் எங்கே மாறிவிடும்? இந்த அரசு வந்ததிலிருந்தே எந்த திட்டத்தால் நாட்டிற்கு வந்திருக்கிறத…

  12. இந்திய மீனவர்களின் வலையில் சிக்கிய மர்ம படகு : பொலிஸார் தீவிர விசாரணை நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விசைப்படகின் வலையில் சிக்கிய மர்ம படகு குறித்து இந்தியப் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 300 க்கும் குறைவான படகுகளில் மீனவர்கள் மின்பிடிக்கச் சென்றனர் தங்கச்சிமடத்தை சேர்ந்த ரொனால்ட் என்பவரது படகில் மின்பிடிக்கச் சென்ற முத்துராமலிங்கம், பாதாளம், சீனிவாசன், சேகர் முருகேசன் உள்ளிட்ட ஐந்து பேர் தனுஷ்கோடிக்கும் மன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நள்ளிரவில் மீன்பிடி வலையில் ஏதோ ஒரு மர்மப்பொருள் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மீனவர்கள் …

  13. யார் தான் ஆட்சி நடத்துகின்றனர்? இது அரசியலே கிடையாது, ஆட்சியே கிடையாது, கட்சியே இல்லை! இப்போ இருக்கும் மந்திரிகள் யார் பேச்சை கேட்பார்கள்? தொழில் வளர்ச்சி மோசமாக போக காரணம் என்ன? உண்மையில் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் இருக்கிறாரா இல்லையா? மேலும் பல கேள்விகளும் அதற்கான விடைகளும்.

  14. தினகரனை வீழ்த்திய செங்கோட்டையன்! - எம்.எல்.ஏக்களை திசைதிருப்பிய பின்னணி #VikatanExclusive அ.தி.மு.க அம்மா அணிக்குள் நடக்கும் உள்கட்சி மோதலை முடிவுக்குக் கொண்டு வர இருக்கிறது எடப்பாடி பழனிசாமி அணி. ‘தினகரனின் ஆதிக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டார்கள். சொத்துக் குவிப்பு வழக்கின் மறுசீராய்வு மனுவின் தீர்ப்பும் சசிகலாவுக்குச் சாதகமாக வருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது' என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள். குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் டெல்லி சென்றன. ‘எங்கள் ஆதரவை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்' என வலியச் சென்று ஆதரவு கொடுத்தனர். இதில், தன்னுடைய வலிமையைக் கா…

  15. கொதிப்பில் "கதிராமங்கலம்".... சென்னை மெரீனாவில், திடீர் போலீஸ் குவிப்பு ! சென்னை மெரினாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறாமல் தடுக்க அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடபட்டுள்ளனர். கதிராமங்கலத்தில் 12 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக எண்ணெய் கொண்டு செல்லப்படும் குழாய்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கதிராமங்கலம் பகுதியில் குழாய்களில் நேற்று எண்ணெய் கசிவு ஏற்பட்டது.இதனை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்யக்கோரி கிராம மக்கள் நேற்று…

  16. மிஸ்டர் கழுகு: ஆகஸ்ட்-15 - “கொடியேற்ற விடுவேனா?” - சவால் தினகரன் ‘‘ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தில் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றுவாரா?’’ என்றபடியே வந்து அமர்ந்தார் கழுகார். எடப்பாடி - தினகரன் மோதல் செய்தியைத்தான் கழுகார் சொல்ல வருகிறார் எனப் புரிந்து கொண்டு கழுகாரைப் பார்த்தோம். ‘‘எடப்பாடி அணியும் டி.டி.வி.தினகரன் அணியும் வெளிப்படையாக மோதி வருகிறார்கள். டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் என்ன பேசினாலும் அதற்கு அமைதி காத்து வந்தார் எடப்பாடி. ஆனால், நடவடிக்கைகளில் தினகரனுக்கு மௌனமாக ‘செக்’ வைத்துக் கொண்டே இருந்தவர், இப்போது அந்தக் கட்டத்தைத் தாண்டிவிட்டார். எடப்பாடி அணியைச் சேர்ந்த கோ.அரி எம்.பி, ‘குற்றவாளியா…

  17. அ.தி.மு.க., ஆட்டத்தில் அடுத்த மாதம் உச்சகட்டம்! ஜெயிக்க போவது யார்; தினகரனா... பழனிசாமியா? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் பக்கம் இழுக்கும் பணியில், முதல்வர் மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க.,வில், தற்போது உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது. ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. தற்போது, சசிகலா அணியில், முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, பிளவு ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஒதுக்கிவிட்டு, கட்சியைய…

  18. தி.மு.க., பவள விழாவில் அ.தி.மு.க., மும்மூர்த்திகள்! தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினை, அ.தி.மு.க., கூட்டணி, எம்.எல்.ஏ.,க்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய மும்மூர்த்திகளும், மூன்று முறை சந்தித்து பேசியுள்ளனர். இந்த மும்மூர்த்திகளும், ஆகஸ்ட்டில் நடக்க உள்ள, 'முரசொலி' நாளிதழ் பவள விழாவில் பங்கேற்று, தி.மு.க., ஆதரவாளர்களாக அணி மாறுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. வெற்றி கடந்த, 2016ல் நடந்த, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், கருணாஸ் தலைமை யிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சியும், தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை கட்சியும், தமிமுன் அன்சாரி த…

  19. ஆயிரம் ஓல்ட் மின்சாரமும் அண்ணாசாலையில் நடந்த பதவியேற்பும்... எம்.ஜி.ஆர் எனும் ஓட்டு வேட்டைக்காரன்! தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர் பொறுப்பேற்ற நாள் இன்று. தமிழக அரசியல் வரலாற்றில் ஜூன் 30-ம் தேதி மறக்கவியலாத தினம். 1977-ம் ஆண்டு இதே தினத்தில்தான் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வராக முதன்முறை பொறுப்பேற்றார். சுதந்திரம் பெற்றுத்தந்த கட்சி என்ற பாரம்பர்யத்தோடு இந்தியா முழுக்க மக்களிடையே பெரும் வரவேற்போடு தன் ஆளுகையைப் பரப்பியிருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி 1967-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைப்பிடித்தவர் அண்ணாதுரை. காங்கிரஸ் கட்சி என்ற ஆலமரத்தை ஒரே ஒரு மாநிலத்தில் விரவியிருந்த திராவிடக்கட்சி ஒன்று வீழ்த்திக்கிடத்தியது இந்திய வரலாற்றில் பெ…

  20. சண்டை நீக்கி இணையவிருக்கும் குடும்பங்கள்?! சசிகலாவின் மாஸ்டர் ப்ளான்! சிறையில் இருக்கும் சசிகலா, கட்சிக்குள் நிலவும் குழப்பங்களை நினைத்து வேதனையில் இருக்கிறார். கட்சி நிர்வாகிகளுக்குள் நாளுக்குநாள் விரிசல் அதிகமாகிக் கொண்டு இருப்பது கட்சிக்கும் ஆட்சிக்கும் ஆபத்தாகிவிடும் என்று குடும்ப உறவுகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் சசிகலா. கசப்புகளை மறந்து ஒன்றுசேர்வதற்கான இணைப்பு வேலைகளில் மன்னார்குடி குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில், வருமான வரித்துறையின் ரெய்டில் சிக்கிய அமைச்சர்கள் கிலியில் இருக்கும்போதே... 'இரட்டை இலைச் சின்னத்தை மீட்க பணம் கொடுக்க முயன்றார்' என்ற வழக்கில் டி.டி.வி.தினகரனைச் சுற்றிவளைத…

  21. "வருவான்டி, தருவான்டி மலையாண்டி" புகழ் சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்! சூலமங்கலம் சகோதரிகளில் இளையவரான ஜெயலட்சுமி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. பெசன்ட்நகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தில் பிறந்த சூலமங்கலம் சகோதரிகள் ராஜலட்சுமி, ஜெயலட்சுமி பாடிய பக்தி பாடல்கள் மிக பிரபலம். இவர்கள் இருவரும் இணைந்து பாடிய கந்த சஷ்டி கவசம் முருக பக்தர்களால் விரும்பி கேட்கப்பட்டு வருகிறது.கந்த சஷ்டி கவசம் பக்திப் பாடலை இணைந்து பாடியவர்கள், சூலமங்கலம் சகோதரிகள் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி. சினிமா படங்களில் பல பக்திப் பாடல்களை இணைந்து பாடியுள்ள அவர்கள், பிறகு தனித்தனியாகவும் பாடியிருக்கின்றனர். 'தெய்வம் படத்தில் ஜ…

    • 3 replies
    • 713 views
  22. நாற்காலிகள் காட்டிய நாகரிகம்! - சரித்திரம் படைத்தது சட்டப் பேரவை ஜூன் 23-ம் தேதி - தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் மட்டுமல்ல; தமிழக அரசியல் வரலாற்றிலும் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க முக்கியமான நாள். அரசியல் ஜனநாயக மாண்பை ஆளும் அ.தி.மு.க-வும் எதிர்க்கட்சியான தி.மு.க-வும் ஒருசேரக் காப்பாற்றி, தமது உன்னதக் கடமையை ஒருசேர ஆற்றியிருந்தன. செய்த தவறுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டதும், பரந்த மனதோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதை ஏற்றுக்கொண்டதும் அரசியல் ஆச்சர்யங்கள். ஜெயலலிதாவும் கருணாநிதியும் பேரவைக்குள் இருந்திருந்தால் இந்த நிகழ்வு நடந்திருக்குமா என்பது ஐயமே. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், இன்று முதலமைச்சர் நாற்கால…

  23. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளே... டி.டி.வி.தினகரன் வெளியே... சென்னை நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடந்த களேபரம் #VikatanExclusive சென்னையில் நடந்த தளவாய்சுந்தரத்தின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் வருவதையறிந்த டி.டி.வி.தினகரன், அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். இது, கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியும் முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. அதில் பங்கேற்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு தள…

  24. தினகரன் அணியுடன் மோதல் முற்றுகிறது: வாரிசு அரசியலை சசிகலா உருவாக்கியதை ஏற்க மாட்டோம் - முதல்வர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் திட்டவட்டம் நாடாளுமன்ற துணைத் தலைவர் தம்பிதுரை மற்றும் வெற்றிவேல் எம்எல்ஏ ஆகியோரின் செயல்பாடுகளைக் கண்டித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும் முதல்வர் கே.பழனிசாமி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் | படம்: ம.பிரபு வாரிசு அரசியலை சசிகலா உருவாக் கியதை நாங்கள் ஏற்கவில்லை. எனவேதான் நாங்கள் புறக்கணிக் கிறோம் என்று அதிமுகவில் முதல்வர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளதால், முதல்வர் பழனிசாமி - தினகரன் இடையில் மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. முன்னாள்…

  25. ‘பொதுச் செயலாளர் நானா? தினகரனா?’ - சிறையில் கொந்தளித்த சசிகலா #VikatanExclusive எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்குத் தயாராகி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ‘கட்சி அதிகாரம் யார் கையில் இருக்கிறது?’ என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் வலம் வருகிறது. ‘தினகரனின் செயல்பாடுகளால் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் சசிகலா. ‘இனியும் தினகரனுக்காக அணி திரட்டும் வேலைகளைத் தொடங்கினால், விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்' என நிர்வாகிகளிடம் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சசிகலா’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். ‘பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவை, கட்சிப் பதவியில் இருந்து யாராலும் நீக்க முடியாது. கட்சியின் தலைமைப் பத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.