Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ‘இப்படி இருந்தால் என்னதான் செய்வது?!’ - சிறையில் நொந்து புலம்பிய சசிகலா #VikatanExclusive அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும், இணைப்பு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. 'ஜெயலலிதா இருந்த நேரத்தில் அமைச்சரவை எப்படி இருந்ததோ, அதைப்போல நிதியமைச்சராக பன்னீர்செல்வம் தொடர வேண்டும் என்பதுதான் அமைச்சர்களின் விருப்பம். இப்படியொரு இணைப்பு நடந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் உள்ளடி வேலைகளும் தொடங்கிவிட்டன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். ‘சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருக்கக் கூடாது’ என்ற நிபந்தனையை முன்வைத்து, பன்னீர்செல்வம் அணியினர் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களது குழுவில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சி.பெ…

  2. மிஸ்டர் கழுகு: பெரியகுளத்தில் விழுந்த குருவும் சிஷ்யனும்! நமக்கு முன்பாகவே ஆபீஸுக்கு வந்து காத்திருந்த கழுகார், தன் லேப்டாப்பில் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார். எழுத்தாளர் மாதவ ராஜ், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்ததைக் காட்டினார். ‘அந்த சதுரங்க ஆட்டத்தின் ஒரு பக்கம் ஒன்றிரண்டு காய்களே இருந்தன. ராஜாவே இல்லை. மறுபக்கம் ஒன்றிரண்டு காய்கள் மட்டும்தான் இல்லை. ராஜா, ராணி, குதிரைகள், யானைகள் என படை பட்டாளங்களோடு இருந்தன. முடிந்த விளையாட்டை வைத்து ஒரே ஆள் யோசித்துக் கொண்டு இருந்தான். இரண்டு பக்கமும் அவனே காய்களை நகர்த்தினான். சிரித்துக்கொண்டான். வெட்டினான். கைதட்டிக்கொண்டான். எல்லாக் காய்களும் கருப்பு நிறத்திலேயே இருந்தன. இதையும் …

  3. ``கர்நாடக மக்களை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்`` - சத்யராஜ் தன்னுடைய வார்த்தைகள் கர்நாடக மக்களை புண்படுத்தி இருந்தால், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக தமிழ் நாட்டின் திரை நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமை facebook ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால், காவிரி நதிநீர் பிரச்சனையின்போது, நடிகர் சத்யராஜ் பேசியபோது சில வார்த்தைகள் கர்நாடக மக்களின் மனங்களை புண்படுத்தின என்பதால், அவர் மன்னிப்பு கேட்கும்வரை சத்யராஜூம் நடித்துள்ள பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று கர்நாடக …

  4. டெல்லி போலீஸ்முன் இன்று ஆஜர்.. சென்னையில் இருந்து புறப்பட்டார் டி.டி.வி. தினகரன்! இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார் டி.டி.வி. தினகரன். இன்று டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகிறார். இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவுசெய்தனர். இந்த வழக்கில், கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸார் கைதுசெய்தனர். அவரிடமிருந்து ஒருகோடியே 30 லட்சம் ரூபாயும், இரண்டு சொகுசு க…

  5. முதன்முறையாகத் தமிழகம் தவிர்த்த இந்தி பேசாத மாநிலங்களின் அரசியல்வாதிகளும்கூட அச்சப்படக்கூடியதாக அது இருந்தது. தனது முயற்சியில் மனம் தளராத மோடி அரசு மிகப் பெரிய கொத்துக்குண்டு ஒன்றை இந்தி பேசாத மாநிலங்களின் மீது வீசியிருக்கிறது. ஆட்சிமொழிக்கான நாடாளுமன்றக் குழு என்கிற மத்திய அரசுக் குழு ஒன்றின் பரிந்துரைகளைக் கடந்த மார்ச் 31, 2017-ல் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்று ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்தப் பரிந்துரைகள் நமது வேலைவாய்ப்பு, கல்வி, மொழி உரிமைகள் மீதான கொடூரமான தாக்குதலாக அமைந்திருக்கின்றன. குடியரசுத் தலைவர், அமைச்சர்கள் எல்லோரும், அவர்களுக்கு இந்தி எழுதப் பேசத் தெரியும் என்கிற பட்சத்தில், நாடாளுமன்றத்தில் இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்று பரிந்த…

  6. பெசன்ட்நகரில் குப்பை தொட்டியில் ரூ.11½ லட்சம் இலங்கை பணம்: துப்புரவு தொழிலாளி போலீசில் ஒப்படைத்தார் குப்பை தொட்டியில் ரூ.11½ லட்சம் இலங்கை நாட்டு பணம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவான்மியூர்: பெசன்ட்நகரை சேர்ந்தவர் உமா. மாநகராட்சி துப்புரவு ஊழியர். இவர் பெசன்ட்நகர் எல்லியட்ஸ் கடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்டார். அங்குள்ள குப்பை தொட்டியை பார்த்த போது ஒரு பையில் கட்டு கட்டாக இலங்கை நாட்டு பணம் இருந்தது. இந்திய ரூபாய…

  7. சிறுநீர் குடிக்கும் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்! அதிர்ந்த டெல்லி டெல்லி ஜந்தர்மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள், இன்று சிறுநீர் குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு அளித்துள்ள வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக அளிக்கவில்லை என்றால் மலம் திண்ணும் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரித்துள்ளனர். டெல்லியில் 40வது நாளாக தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்க…

  8. எம்.ஜி.ஆர் இதை செய்திருந்தால் பன்னீர்செல்வம், சசிகலா எங்கிருந்திருப்பார்கள் தெரியுமா மக்களே? அதிமுகவின் பிளவுபட்ட இரு அணிகள் இணையுமா இல்லையா என்பதுதான் அரசியலின் இன்றைய 'வெரி ஹாட்' டாபிக். ஆனால் சுமார் 38 வருடங்களுக்கு முன் எம்.ஜி.ஆர் அதிமுகவை திமுகவுடனேயே இணைக்கும் ஒரு அதிரடி முடிவெடுத்த விஷயம், இன்றைய தலைமுறை அறிந்திராத சேதி. 1979 ம் ஆண்டு தமிழக அரசியல் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. தமிழக அரசியலில் 1976ம் ஆண்டு கருணாநிதியின் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு அடுத்துவந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி 2 ஆண்டுகள் கடந்திருந்தது. பிரதமர் இந்திராவின் வெற்றிக்கு எதிராக ராஜ்நாராயணன் தொடுத்த வழக்கில் இந்திர…

  9. முகநூலில் திவாகரன் மகனுக்கு இளவரசி மகன் பதிலடி: சசிகலா குடும்பத்தில் வலுக்கும் கருத்து யுத்தம் - குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமா ஜெயானந்த் திருமணம்? டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து வெளியேற்றும் அமைச்சர்களின் முடிவு குறித்து சசிகலா குடும்பத்தினருக்குள் கருத்து யுத்தம் நடைபெற்று வரு கிறது. இதுதொடர்பாக முகநூலில் திவாகரன் மகன் பதிவுக்கு இளவரசி மகன் பதிலடி கொடுத்துள்ளார். கட்சி, ஆட்சியின் நலன் கருதி டிடிவி தினகரன் உள்ளிட்ட சசி கலா குடும்பத்தினரை அதிமுக வில் இருந்து நீக்க முடிவு செய்துள் ளதாக கடந்த 19-ம் தேதி அமைச்சர் கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அறிவித்தனர். இந்நிலையில், சசி கலாவின…

  10. பழனிசாமியா... பன்னீர்செல்வமா..?! தீவிர ஆலோசனையில் பா.ஜ.க. தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமியையே அந்தப் பதவியில் தொடர வைப்பதா அல்லது ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் முதல்வர் பதவியில் அமரவைப்பதா என்ற ஆலோசனையில் பாஜகவின் டெல்லி மேலிடம் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.கவுக்குள் நடக்கும் பதவி,அதிகாரப்பகிர்வு மோதலில் தங்களுக்கு ஏதாவது பயன் கிடைக்குமா என்று தி.மு.க. எதிர்பார்ப்பதைவிட பா.ஜனதா எதிர்பார்ப்பதுதான் அதிகம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க.கட்சிக்குள்ளும் நடக்கும் உச்சக்கட்ட குழப்பங்கள், தமிழகத்தின் மாநில ஸ்திரத்தன்மையை பாதிக்கும் வகைய…

  11. பொட்டாஷியம்... மெக்னீஷியம் சல்பேட்...! - ஜெயலலிதா மரணத்தின் 14 ரகசியங்கள்! #VikatanExclusive தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்கள் எதுவும் முடிவுக்கு வரவில்லை. அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதில் முட்டுக்கட்டையாக உள்ள வாக்குறுதிகளில் மிக முக்கியமானது, 'ஜெயலலிதா மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை கோர வேண்டும்' என்பது. இதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு தடையாக உள்ளதாக குற்றம் சுமத்துகின்றனர் பன்னீர்செல்வம் அணியினர். "ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு என்ன ஆனது என்ற உண்மையைக்கூட பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இதன்பின்னணியில் உள்ள மர்மங்களும் படிப்படியாக விலகி வருகின்றன. எங்கள் ஆய்வில் ஏராளமான உண்மைகளைக் கண்டறிந்து…

  12. அ.தி.மு.க. அணிகள் இணைப்பு: ஓ.பன்னீர் செல்வம் 3 முக்கிய நிபந்தனை அ.தி.மு.க. இரு அணிகளை இணைப்பதற்கு ஓ.பன்னீர் செல்வம் 3 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார். இதையடுத்து இரு அணியினரும் சந்தித்து பேசுவது பற்றி தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சென்னை: அ.தி.மு.க.வின் சக்தி வாய்ந்த தலைவராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு தமிழகம் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது தொடங்கிய அரசிய…

  13. ரஜினிகாந்த், திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, தனது மகள் திருமண அழைப்பிதழை அளித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் சூழல் மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறது. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். அதனால் ரஜினி அரசியலுக்கு வர உள்ளாரா? என்று ஊடகங்களில் செய்திகள் பரபரப்பாயின. இதையடுதது ரஜினி ரசிகர்களுடனான சந்திப்பை ரத்து செய்தார். இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார். செப்டம்பர் மாதம் நடக்கவுள்…

  14. எம்.ஜி.ஆர் முதல் ஈ.பி.எஸ். வரை... அ.தி.மு.க-வும், மூன்றெழுத்தும்! ஏப்ரல் 10-ம் தேதிக்கு முன்புவரை ஆர்.கே.நகர்த் தொகுதி வேட்பாளராக, மக்களுக்கு அறிமுகமானாலும், 'முதல்வர்' என்றே தினகரனின் நெருங்கிய வட்டாரங்கள் அழைத்து வந்தன. அப்படி அழைப்பவர்களிடம், 'என்னப்பா இன்னும் தேர்தலே நடக்கல, ஜெயிக்கவுமில்லை. அதுக்குள்ளேவா' என சிரித்தபடியே தினகரன் கூறிவந்தாலும், 'ரிசல்ட் என்பது மத்தவங்களுக்குத்தான். எங்களைப் பொறுத்தவரை, நீங்க எப்பவோ முதல்வர் ஆகிட்டீங்க.' என்று உசுப்பேத்தி வைத்திருந்தனர் நெருக்கமான புள்ளிகள். இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பூக்களைத் தூவி வரவேற்பு, திரும்பிப் பார்த்தால் பொன்னாடை போர்த்திய வாழ்த்துரை, கலைந்த முடியை சரி செ…

  15. 'ஒ.பி.எஸ் இடத்தில் இ.பி.எஸ்'- பவர்சென்டரை மாற்றும் டெல்லி லாபி! “கோழி குருடாக இருந்தால் என்ன, குழம்பு ருசியாக இருக்குதானு பாக்கணும்” என்ற காமெடி வரிகள் போல தான் அ.தி.மு.கவின் நிலையும் இப்போது உள்ளது. பன்னீர் இருந்தால் என்ன?, பழனிசாமி இருந்தால் என்ன? நம் கண் அசைவுக்கு சரியான நபராக இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு மத்திய அரசு வந்துவிட்டது தான் அ.தி.மு.க இணைப்பு தள்ளி போவதற்கு காரணம் என்கிறார்கள். தமிழக அரசியலில் காலுான்றுவதற்கு இந்த வாய்ப்பை விட்டால் வேறு வாய்ப்பில்லை என்ற முடிவில் பி.ஜே.பி மேலிடம் உறுதியாக உள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்ததையே ஆரம்பித்தில் பி.ஜே.பி விரும்பவில்லை. ஆனால், அது…

  16. பெங்களூர் சிறையில் ஆங்கிலம் கற்க விரும்புகிறாராம் சசிகலா? பெங்களூர்: அடுத்த 4 ஆண்டுகளுக்கு பெங்களூர் சிறையில் நேரத்தை வீணடிக்காமல் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளாராம் வி.கே. சசிகலா. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ் - ஆங்கிலம் இரண்டிலுமே புலமைப் பெற்றவர். அவருடன் பல ஆண்டு காலம் தங்கி இருந்து அரசியல் கற்றுக் கொண்ட சசிகலா, ஆங்கிலம் கற்கத் தவறிவிட்டார். கான்வென்ட்டில் படித்த ஜெயலலிதாவுக்கு ஆங்கிலம் அத்துப்படி. அவரது அரசியல் வாழ்க்கைக்கு ஆங்கிலமும் மிகப் பெரிய பலமாக இருந்தது. அவருக்கு உற்றத் தோழியாக இருந்த சசிகலா, பெங்களூர் சிறையில் தனது மொழித் திறனை பட்டைத் தீட்டிக் …

  17. சசி குடும்பம் நாடகம்: இ.பி.எஸ்., தந்திரம்! இரட்டை இலை சின்னத்திற்கான ஏமாற்று வேலை இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற, இடைத் தரகர் மூலம் மேற்கொண்ட முயற்சி, தோல்வி அடைந்ததால், சசிகலா குடும்பம் கட்சியை விட்டு விலகுவது போல நடித்து, அ.தி.மு.க.,வினரையும், மக்களையும் ஏமாற்ற, இ.பி.எஸ்., தரப்பினர் போட்ட தந்திரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தேர்தல் அறிவிப்பு அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரி, பன்னீர் அணி சார்பில், தேர்தல் கமிஷனில், மனு கொடுக்கப்பட்டது. இம்மனு மீதான விசாரணை துவங்கும் முன், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட…

  18. இரட்டை இலையின் மூச்சு மூவர் கையில்! ‘சின்ன அம்மன்’ எனப் பாராட்டிப் போற்றப்பட்ட சசிகலா, பரப்பன அக்ரஹாராவில் சிறை வைக்கப்பட்டுள்ளார். `ஆர்.கே.நகரில் வென்று, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும்' என்ற கனவில் இருந்த ‘திடீர் தலைவர்’ தினகரன், அனைத்தும் சிதைந்து மனச்சிறையில் மாட்டிக்கொண்டுவிட்டார். யாரோ ஒரு ஜெயலலிதாவின் வளர்ச்சிக்கு 28 ஆண்டுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய நடராசனால், சொந்த மனைவிக்கு 28 நாள்கள்கூட உதவ முடியாத நிலையில் உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ளது. `வளர்ப்பு மகன்' என ஆராதிக்கப்பட்டு, ‘சின்ன எம்.ஜி.ஆர்’ எனத் தன்னைத்தானே உருவகப்படுத்திக் கொண்டு, கோயில் கோயிலாகச் சென்று, யாகம் யாகமாக நடத்திவந்த வி.என்.சுதாகரன் சிறையில் சிக்கிக் கொண்டார். …

  19. ‘டி.டி.வி.தினகரனை ஏன் விட்டுச்சென்றது டெல்லி போலீஸ்?’ - வெளிவராத பரபர பின்னணி டி.டி.வி.தினகரனிடம் சம்மனை கொடுத்த டெல்லி போலீஸார், சுகேஷ் சந்திரசேகர் குறித்து சில கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதற்கு டி.டி.வி.தினகரன், அவர் யார் என்று கேட்டுள்ளார். இதையடுத்து, வரும் 22-ம் தேதி விசாரணைக்கு டெல்லிக்கு வரச் சொல்லிவிட்டு புறப்பட்டுள்ளனர். இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, புரோக்கர் சுகேஷ் சந்திரசேகருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக, டெல்லி போலீஸார் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை பறிமுதல்செய்ததுடன் அவரையும் கைதுசெய்தது டெல்லி போலீஸ். அடுத்து, நேற்றிர…

  20. ஆளுநருடன், தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் திடீர் சந்திப்பு! ஆளுநர் வித்யாசாகர் ராவை, பழனிசாமி அணியை சேர்ந்த தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இன்று திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. மூன்றாக பிரிந்த நிலையில், சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்தது முதல்வர் பழனிசாமி அணி. இதனை வரவேற்றது பன்னீர்செல்வம் அணி. இந்நிலையில், இருஅணியினரை ஒன்றும் சேர்க்கும் வகையில் குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு விரைவில் அமைக்கப்பட்டு இணைவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையியில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமா…

  21. முதலில் முதல்வர்; அடுத்து சட்டப்பேரவைச் செயலாளர்- விஜயபாஸ்கர் அடுத்தடுத்து சந்தித்ததால் பரபரப்பு! முதல்வர் பழனிசாமியைத் தொடர்ந்து, சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீனை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திடீரெனச் சந்தித்துப் பேசினார். வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்குப் பின்னர் நடந்த சந்திப்பு என்பதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த 7-ம் தேதி சோதனை நடத்தினர். அந்தச் சோதனையின்போது, முக்கிய ஆவணங்கள் மற்றும் கோடிக்கணக்கான ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்…

  22. அமைச்சர்கள் எதிர்ப்பு, பொது மக்கள் வெறுப்பு, வழக்குகள் குவிப்பு என, பல முனை தாக்குதலால், அ.தி.மு.க.,வில் இருந்து, தினகரன் ஓட்டம் பிடித்தார். போட்டி, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கைவிட்டு, கட்சியில் இருந்தே ஒதுங்கி விட்டதாக அறிவித்தார். சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த பின், துணை பொதுச் செயலர் பதவியை துறக்கவும் முடிவு செய்துள்ளார். அவருக்கு கூஜா துாக்கிய, கூவத்துார் புகழ், எம்.எல்.ஏ.,க்கள், இப்போது பன்னீர் புகழ் பாடத் துவங்கி உள்ளனர். சசிகலா சிறைக்கு சென்றதும், அவரால், அ.தி.மு.க., துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட தினகரன், கட்சியை தன் வசம் கொண்டு வந்தார். முதல்வராக ஆசைப்பட்ட அவர், பொது மக்கள் எதிர்ப்பை மீறி, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் …

  23. ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன? திரண்டதோர் சுற்றம் என்ன? அதிமுகவை கால்நூற்றாண்டுகாலமாக குத்தகைக்கு எடுத்தவர்களாக ஆட்டம் போட்ட சசிகலா கோஷ்டிக்கு குட் பை சொல்லப்பட்டுவிட்டது. சென்னை: கவியரசர் கண்ணதாசனின் ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன? திரண்டதோர் சுற்றம் என்ன? என்ற பாடல் வரிகள் அப்படியே சசிகலா கோஷ்டிக்குத்தான் கனகச்சிதமாக பொருந்துகிறது. எம்ஜிஆர் எனும் மக்களால் நேசிக்கப்பட்ட தலைவரால் உருவாக்கப்பட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். நாவலர் நெடுஞ்செழியன், ஆர்.எம். வீரப்பன், எஸ்.டி. சோமசுந்தரம், ராகவானந்தம், ஹண்டே என பழுத்த அரசியல்வாதிகள் பலரும் நிறைந்து இருந்த இயக்கம்.. இளைய தலைமுறை அரசியல்வாதிக…

  24. அதிமுகவில் இருந்து ஒதுங்கினார் டிடிவி தினகரன்: பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஓபிஎஸ் - பழனிசாமி - கட்சிப் பொறுப்புகள், அமைச்சரவை குறித்து விரைவில் முடிவு ஓ.பன்னீர்செல்வத்துடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை. (கோப்புப் படம்) அதிமுகவில் இருந்து ஒதுங்கிவிட் டதாக டிடிவி தினகரன் அறிவித்து விட்டதால் அதன் இரு அணிகளும் இணைவதில் இருந்த தடைகள் நீங்கின. இதையடுத்து கட்சி இணைப்பு மற்றும் பொதுச்செயலாளர், முதல்வர், அமைச்சர் பதவிகள் தொடர்பாக இரு தரப்பும் இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. தேர்தல் ஆணையத்தால் தற்காலிகமாக முடக்கி வைக்கப் பட்டுள்ள அதிமுக பெயர் மற்ற…

  25. அமைச்சர்கள் அதிரடிக்கு காரணம் என்ன? சென்னை: சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்த லில், அ.தி.மு.க., - சசி அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக, தேர்தல் பணியாற்ற, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சென்றனர். அப்போது, சசிகலா குடும்பத்தினருக்கு, கட்சி தொண்டர்களிடமும், பொது மக்களிடமும், கடும் எதிர்ப்பு இருப்பதை கண்கூடாக பார்த்தனர். மேலும், தினகரன் வெற்றி கேள்விக் குறியானதை தொடர்ந்து, பணத்தை வாரி இறைத்ததால், தேர்தல் கமிஷன், தேர்தலை ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து, அவரது தீவிர ஆதரவாளரான, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரி சோதனையில் சிக்கினார். இதெல்லாமே, சக அமைச்சர்களை யோசிக்க வைத்தது. இனிம…

    • 2 replies
    • 854 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.