தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10296 topics in this forum
-
சரத், ராதிகாவிடம் வரித்துறை துருவி துருவி விசாரணை நடிகை ராதிகா மற்றும் கணவர் சரத்குமாரிடம், வருமான வரித்துறை அதிகாரிகள், ஐந்து மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர்; பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமியிடம், ஏழு மணி நேரம், துருவித் துருவி விசாரணை நடத்தினர். மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் குவாரி தொழிலில், பங்குதாரராக இருந்து வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, நண்பர்கள், உதவியாளர்கள் வீடுகள், தொழில் நிறுவனங்களிலும், 7ம் தேதி வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஆர்.கே.நகர் தொகுதியில், ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின; மேலும், 5 க…
-
- 0 replies
- 409 views
-
-
முதல்வர், 10 அமைச்சர்கள் 'டிஸ்மிஸ்' : கவர்னரிடம் ஸ்டாலின் சார்பில் கடிதம் சென்னை: 'முதல்வர் பழனிசாமி உட்பட, 10 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளார். தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவை, தி.மு.க., முதன்மைச் செயலர் துரைமுருகன், ராஜ்யசபா எம்.பி.,க்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகிய மூவரும், மும்பையில் சந்தித்தனர். அப்போது, கவர்னருக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, வித்யா சாகர் ராவிடம் வழங்கினர். கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: ஆர்.கே. நகர் தொகுதி யில், முதல்வர் பழனிசாமி மற்றும் அவரதுஅமைச்…
-
- 0 replies
- 314 views
-
-
அரசு விழாவில் பங்கேற்க விஜயபாஸ்கருக்கு தடை பதவியை பறிக்கவும் பழனிசாமி ஆலோசனை அமைச்சர் பதவியில் இருந்து, விஜயபாஸ்கரை நீக்க, முதல்வர் ஆலோசித்து வருகிறார். சென்னையில், நேற்று நடந்த, அரசு மருத்துவமனை கட்டடங்கள் திறப்பு விழாவில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதிலாக, அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் வழங்கப்பட்டதற்கான ஆவணங் கள் சிக்கின.அந்த பணத்தை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மூலம் வழங்கியதும், ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த, …
-
- 0 replies
- 1.1k views
-
-
ரூ.89 கோடி எப்படி வந்தது? - ஐ.டி ரெய்டுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டவர்கள்! ஜூவி லென்ஸ் ‘ஆபரேஷன் வி.’ இதுதான் அமைச்சர் விஜயபாஸ்கரை குறிவைத்து நடந்த ரெய்டுகளுக்கான சங்கேத வார்த்தை. சேகர் ரெட்டி குரூப் இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடவடிக்கை எடுப்பதற்கு முன் ரகசியமாகத் தயாரிக்கப்பட்ட லிஸ்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர், ஓ.பன்னீர்செல்வம் குடும்பப் பிரமுகர்... இப்படி சிலரின் பெயர்கள் இருந்தன. கடைசி நிமிடத்தில் டெல்லி ரெட் சிக்னல் காட்டியதால், விஜயபாஸ்கர் தப்பித்தார். ஆனாலும், அவர் மீது எப்போதும் கண்காணிப்பு இருந்தது. ‘கூவத்தூர் சொகுசு விடுதியில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது ஒவ்வொருவருக்கும் சுமார் மூன்று கோடி ரூபாய் பணம், ஒர…
-
- 0 replies
- 941 views
-
-
வேள்வியும் கேள்வியும்: யார் இந்த விஜயபாஸ்கர்? அமைச்சர் விஜயபாஸ்கர் படம்: க.ஸ்ரீபரத். அவ்வளவு தத்ரூபமாக ஜெயலலிதாவின் படத்தை அதற்கு முன் யாரும் வரைந்திருக்க முடியாது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் வரையப்பட்டிருந்த அந்த கோலமாவு ஓவியத்தை பார்த்து மகிழ்ந்த ஜெயலலிதா அப்போது அதிமுகவில் முக்கிய இடத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் ரகுபதியிடம் யார் இந்த ஏற்பாட்டையெல்லாம் செய்தது என்று கேட்கிறார், அதற்கு இந்த ஏற்பாடுகளை மருத்துவ மாணவரான தனது மகன் அண்ணாமலையும், அவரது நண்பரும் மருத்துவ மாணவரான விஜயபாஸ்கரும் ஏற்பாடு செய்ததாக கூறுகிறார். அப்போது தொடங்கியது, விஜயபாஸ்கரின் அரசியல் அத்தியாயம். …
-
- 0 replies
- 698 views
-
-
ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்தது ஏன்? 29 பக்க அறிக்கையில் தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம். நூதன வழியில் பணப்பட்டுவாடா நடந்ததால் ஆர்.கே.நகர் தொகுதிில் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்து, தேர்தல் ஆணையம் வெளியிட்ட 29 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பண பட்டுவாடாவால்தான் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அதில் கூறியுள்ளதாவது: ஆர்.கே.நகரில் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் தற்போது இல்லை. தொகுதியில் அதிகமான பணப்பட்டுவாடா நடந்தது வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முறைகேடுகளை தடுக்க மேற்கொண்ட முயற்சிகளை தடுத்து நூதன முறையில் …
-
- 8 replies
- 840 views
-
-
எடப்பாடி பழனிசாமியும் 7 அமைச்சர்களும்! -தினகரனை குறி வைக்கும் தோட்டா #VikatanExclusive ' தேர்தல் ரத்துக்கு அஞ்சாத ரத்தத்தின் ரத்தங்கள்' என்ற தலைப்பில் இன்று சென்னை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதேநேரம், வருமானவரித்துறையின் சோதனை வளையம் அமைச்சர்களை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. ' ஆய்வில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு ஆதாரத்தைக் கொடுக்க இருக்கிறார் விஜயபாஸ்கர். அதன்பிறகே மற்ற அமைச்சர்கள் வளைக்கப்படுவார்கள்' என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில். 'ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து' என்ற அறிவிப்பைவிடவும், அமைச்சர்களை நோக்கிப் பாயும் வருமான வரித்துறை சோதனைகளால் கலக்கம் அடைந்துள்ளனர் கார்டன் தரப்பினர். சுகாதாரத்துறை அமைச்சர் …
-
- 0 replies
- 281 views
-
-
ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானது முதல் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து வரை...பி.ஜே.பி-யின் பின்னணி என்ன? தமிழகத்தில் ஜெயலலிதா மரணம் முதல் ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தல் ரத்து வரை கடந்த 4 மாதங்களில் நடந்த எத்தனையோ அரசியல் நிகழ்வுகளுக்கும் பி,ஜே.பி-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. அதிரடியான அரசியல் நிகழ்வுகளுக்கும் பி.ஜே.பி அல்லது மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வரை எத்தனையோ பி.ஜே.பி தலைவர்கள் பலமுறை தங்கள் கருத்துகளை உறுதிபடத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசி…
-
- 0 replies
- 276 views
-
-
தேர்தல் செலவினப் பட்டியல் விவகாரம்! எடப்பாடி பழனிசாமிடம் விசாரணை? சென்னை ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ம் தேதி நடப்பதாக இருந்த இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியில், வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம், பரிசுப் பொருட்கள் வழங்கியது, குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியது என்று தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு பல காரணங்களை தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. அனைத்துக்கும் உச்சமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் முதல்வர் உள்பட அமைச்சர்களுக்கு ரூ.89 கோடி பணம் வழங்கியதற்கான ஆவணங்கள் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது. வருமான வர…
-
- 0 replies
- 212 views
-
-
மிஸ்டர் கழுகு: ஆட்சியைக் கவிழ்க்க அடுக்கடுக்கான அஸ்திரங்கள்! வியர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்த கழுகார், ‘‘அண்ணா சாலை போக்குவரத்து நெரிசலைத் தாண்டி ஆபீஸுக்கு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. டி.டி.வி.தினகரனின் நாற்காலிக் கனவில் விழுந்த ஓட்டை மாதிரி, மெட்ரோ ரயில் பணிகளால் அண்ணா சாலையில் பெரும் பள்ளம் விழுந்திருக்கிறது’’ என்றார். ஜில்லென மோர் கொடுத்து உபசரித்தோம். ‘‘நீர் சொன்னமாதிரியே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தள்ளிப்போய்விட்டதே?” என்று கேட்டுவிட்டு, 5.4.17 தேதியிட்ட ஜூ.வி இதழைக் காட்டினோம். ‘ஃபெரா பொறியில் தினகரன்! தள்ளிப்போகுமா ஆர்.கே. நகர் தேர்தல்?’ என்ற தலைப்பிலான கவர் ஸ்டோரியைப் புரட்டினார். பிறகு, ‘‘இப்போது ஆர்.கே. நகர் ஓவர். சனிக் கிழமையிலிருந்…
-
- 0 replies
- 2.5k views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப் பட்டதால், பழனிசாமியை பதவியிறக்கி விட்டு, தினகரனை முதல்வராக்கும் முயற்சியில், சசிகலா தரப்பு இறங்கியுள்ளது. 'கூஜா துாக்கி' களின் இந்த திட்டத்தை முறியடிக்க, சசி எதிர்ப்பு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், அமைச்சர் கள் பலர் தீவிரம் காட்டி வருகின்றனர். அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலராக அறிவிக்கப்பட்ட சசிகலா, சிறையில் அடைக்கப் பட்ட பின், கட்சியின் முழு கட்டுப்பாடும், தினகரன் கைக்கு வந்து விட்டது. சசிகலாவை ஆதரித்த அதே கும்பல், இப்போது தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அவரை நிறுத்தி வெற்றி பெற வைக்கவும், பண பலத்துடன் களமிறங்கி யது. தினகரன் வெற்றி பெற்ற பின், அவரை முதல்வராக்கவும…
-
- 0 replies
- 413 views
-
-
ஜெ., கைரேகை பெற டாக்டருக்கு ரூ.5 லட்சம்? தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, 2016 நவம்பரில், தேர்தல் நடந்தது. அப்போது, அ.தி.மு.க., பொதுச்செயலரான ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, சின்னம் ஒதுக்கக் கோரும் ஆவணத்தில், ஜெ., கையெழுத்துக்கு பதிலாக, அவரது கைரேகை வைக்கப்பட்டது. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜிமுன்னிலையில், கைரேகை பெறப்பட்டதாக, அ.தி.மு.க., விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், பல ஆவணங்கள் சிக்கின. அதில், ஜெ., கைரேகை வைத்தார் என்பதை உறுதி செய்த, டாக்டர் ப…
-
- 4 replies
- 1.2k views
-
-
டெல்லி சாலையில் மண்சோறு சாப்பிட்டு தமிழக விவசாயிகள் நூதனப் போராட்டம் Image captionஜந்தர் மந்தர் சாலையில் மண் சோறு டெல்லியில் கடந்த 29 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள், தங்களது நூதனப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்க்கிழமை மண்சோறு சாப்பிட்டனர். நேற்று திங்கட்கிழமை, பிரதமர் அலுவலகத்தில் மனுக்கொடுப்பதற்காக, காவல் துறையினர் அவர்களை அழைத்துச் சென்றனர். வெளியே வந்ததும், வாகனத்திலிருந்து குதித்த சில விவசாயிகள் தங்கள் ஆடைகளக் களைந்து நடுரோட்டில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோல தொடர்ந்து அவர்கள் நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்…
-
- 0 replies
- 419 views
-
-
ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடிகை ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெறு வந்த நிலையில், வாக்காளர்களுக்கு மிகப்பெரிய அளவில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்தன. இதையடுத்து, அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமாக செயல்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் …
-
- 1 reply
- 482 views
-
-
‘அவசரம் காட்டியதால்தான் ஆபத்து!’ - தினகரனிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர்கள் ஆளும்கட்சி வட்டாரத்தை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டிருக்கிறது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை. 'எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகும், கார்டனில் உள்ளவர்கள் அவசரப்படுவதால்தான் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது' என வெளிப்படையாகப் பேசியுள்ளனர் அமைச்சர்கள் சிலர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க இரண்டு துண்டுகளாகிவிட்டது. சசிகலா தலைமைக்கு எதிராக பன்னீர்செல்வம் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். 'அ.தி.மு.கவின் ஒன்றரைக் கோடித் தொண்டர்களும் எங்கள் பக்கம் உள்ளனர். அவகாசம் இருந்திருந்தால், அத்தனை பேரின் கையெழுத…
-
- 0 replies
- 587 views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது? - அதிரவைத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு! 'அடுத்த ஒரு வருடத்துக்குள்ளாக ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்' என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொகுதி காலியாக இருக்கும் பட்சத்தில் ஆறு மாதத்தில் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தற்போது, ஆர்.கே.நகர்த் தொகுதி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், நாளை (ஏப்ரல்-12) நடப்பதாக இருந்தது. அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர். இந்நிலையில்,…
-
- 0 replies
- 286 views
-
-
இப்போது விஜயபாஸ்கர்... அடுத்த குறி எடப்பாடி, 29 அமைச்சர்கள்! 2016-ம் ஆண்டு, கரூர் அன்புநாதன் வீட்டில் தொடங்கிய ரெய்டு சூறாவளி, தமிழகத்தை விட்டு இன்னும் நகரவில்லை. நத்தம் விசுவநாதன், சேகர் ரெட்டி, ராம மோகன ராவ், மணல் ராமச்சந்திரன் என்று பெரிய தலைகளை வாரிச்சுருட்டிய அந்தச் சூறாவளி, தற்போது தமிழ்நாடு சுகாதாரத் துறையை அதகளம் செய்துள்ளது. இந்த ரெய்டுகளுக்குப் பின்னணியில் அரசியல் காரணம், அலுவல் காரணம் என்று இரண்டு காரணங்கள் உள்ளன. அரசியல் காரணங்கள்... அ.தி.மு.க என்ற கட்சியைவிட்டு சசிகலா குடும்பத்தினர் மொத்தமாக ஒதுங்கிவிட வேண்டும் என்பதுதான் மத்தியில் உள்ள பி.ஜே.பி அரசின் ஒரே நோக்கம். இதற்கு ஒப்புக்கொள்ளாதவரை, சசிகலா குடும்பத்தையும் அந்தக் குடும்பத்…
-
- 0 replies
- 2.3k views
-
-
விஜயபாஸ்கருக்கு அடுத்த நெருக்கடி! கல்குவாரியில் மத்திய பொதுப்பணித்துறை அதிரடி ஆய்வு! புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசலில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான கல் குவாரியில் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் காலை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தனர். விஜயபாஸ்கரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சரத்குமாரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை நடந்த அதே நேரத்தில் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டவர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையை நடத்தினர். ஏற்கெனவே புதுக்கோட்டை உள்ளிட்ட 30-க்கும…
-
- 0 replies
- 223 views
-
-
தடை? தேர்தலில் போட்டியிட தினகரனுக்கு தேர்தல் கமிஷன் தீவிர ஆலோசனை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த காரணத்திற்காகவும், வரம்பு மீறி செலவு செய்ததற்காகவும், தேர்தலில் போட்டியிட முடியாமல், தினகரனை தகுதி நீக்கம் செய்வது குறித்து, தேர்தல் கமிஷன் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். வெற்றி பெற்றால் தான், அரசியல் எதிர்காலம் என்பதால், பணத்தை வாரி இறைத்தார்.சசிகலா மீதுள்ள அதிருப்தி காரணமாக, தினகரன் அணியினரின் பிரசாரத்திற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். செருப்பு வீச்சு, தக்காளி வீச்சு போன்ற சம்பவங்க…
-
- 0 replies
- 456 views
-
-
பல கோடி பணம் எப்படி? அமைச்சரிடம் கிடுக்கிப்பிடி பல கோடி பணம் பட்டுவாடா மற்றும் தேர்தல் பேரம் தொடர்பாக, வருமான வரித்துறை அலுவலகத்தில், நேற்று, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் சரத்குமாரிடம், அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், எம்.எல்.ஏ., விடுதி உள்ளிட்ட, 38 இடங்களில், சமீபத்தில், வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அதில், அவரது கணக்காளர் சீனிவாசன் வீட்டில் இருந்து, வாக்காளர்களுக்கு தலா, 4,000 ரூபாய் தரப்பட்ட பட்டியல் கிடைத்தது. அதன் மூலம், அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன் மற்றும் முதல்வர் பழனிசாமி மூலமாக, 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்ததது த…
-
- 0 replies
- 418 views
-
-
விஜயபாஸ்கர் உறவினர்கள் தங்கியுள்ள விடுதியிலும் ரெய்டு! ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதையடுத்து இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகினர். விஜயபாஸ்கரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சரத்குமாரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டவர்கள் இடங்களில் வருமான வரித்துறையின் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கெனவே புதுக்கோட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அவரின் உதவியாளர்கள், உறவினர்கள் ஆகியோர் தங்கியிருந்த இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை பூக்கடையில் உள்ள ஒரு விடுதியில் வ…
-
- 0 replies
- 485 views
-
-
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து தேர்தல் ஆணையத்தின் தோல்வி: என்.ராம் சாடல் ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில், ஏப்ரல் 12 ஆம் தேதி நடக்கவிருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது, தேர்தல் ஆணையத்தின் தோல்வியே எனறு மூத்த பத்திரிகையாளர் என்.ராம் பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவித்தார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption'இடைத்தேர்தல் ரத்து தேர்தல் ஆணையத்தின் தோல்வியே' ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து குறித்து ராம் கூறுகையில், '' இடைத்தேர்தலை ரத்து செய்வது நல்ல விஷயமல்ல. ஆனால் , வேறு வழியில்லாமல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்'' என்று தெரிவித்தார். ''ஒரு வாக்குக்கு 4000 ரூபாய் வரை தரப்படுவ…
-
- 0 replies
- 381 views
-
-
ஆர்.கே.நகர் தேர்தல் நடக்குமா... முடிவு யார் கையில்?! ஆர்.கே.நகர் தேர்தல் நடக்குமா... நடக்காதா என்பது டெல்லியில் இன்று (08-04-17) மாலை நடைபெற உள்ள தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் தரப்பு, வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதாகத் தொடர் குற்றச்சாட்டு எழுந்துவந்தது. மேலும், பணத்துடன் ஆர்.கே.நகரில் சிலர் பிடிபடவும் செய்தார்கள். ஆர்.கே.நகர் தேர்தலை பணமில்லாத் தேர்தலாக நடத்த வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் ஆணையம் இருந்தாலும் பணம் கொடுப்பதைத் தடுக்கமுடியாமல் கையைப் பிசைந்து நின்றது. வாக்காளர்களுக்குப் பணம்வரும் வழிகளை எல்லாம் தீவிரமாக ஆராய்ந்து வந்த தேர்தல் ஆணையம், தமிழக அமைச்சர்கள…
-
- 12 replies
- 1.7k views
-
-
'தீபா கணவன் மாதவன் வந்திருக்கேன்' கடைசிநாள் பிரசாரக் காட்சிகள் ! #SpotReport #VikatanExclusive சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு நடைபெறவிருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நேற்றிரவு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக, அரசியல்கட்சிகளின் நிர்வாகிகள், பிரமுகர்கள் என பகலிலும், இரவிலும் பாதுகாப்பற்ற சூழலில் இருந்த அந்தத் தொகுதி மக்களுக்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்துள்ளது. துணை ராணுவப்படையினர் எங்கும் காணப்படவில்லை, கட்சிக் கொடிகள் இல்லை; வேட்பாளர்களை வரவேற்க மேளச் சத்தம் இல்லை; கரைவேட்டி கட்டியவர்களின் நடமாட்டம் இல்லை; வெளிமாவட்ட பதிவெண் க…
-
- 0 replies
- 488 views
-
-
‘தமிழகத்தில் இடைத்தேர்தல் அல்ல; பொதுத்தேர்தலே வரும்!’ - அமித் ஷா-வின் அடுத்த ஆபரேஷன் நுங்கம்பாக்கம் ஆயக்கர் பவனில், வருமான வரித்துறை அதிகாரிகளின் கேள்விகளை எதிர்கொண்டுவருகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ‘கடந்த 100 நாட்களாக நடந்து வந்த வருமான வரித்துறை ஆய்வுகளின் அடிப்படையில் விஜயபாஸ்கர் வளைக்கப்பட்டிருக்கிறார். ஜூன் மாதம் வரையில் அமைச்சர்களுக்கு நிம்மதியான உறக்கம் வரப்போவதில்லை’ என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டை அடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்து அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். ‘நான் நிரபராதி. என் மீது எந்தக் குற்றமும் இல்லை’ என அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகையாளர்கள்…
-
- 0 replies
- 1.2k views
-