தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
சசிகலாவின் மூலதனம் ஜெயலலிதா... ஜெயலலிதாவின் முகமூடி சசிகலா! ப.திருமாவேலன் - ஓவியம்: ஹாசிப்கான் வடக்கு நோக்கி வணங்கத் தோன்றுகிறது. தெற்கைக் காப்பாற்றியிருக்கிறது வடக்கு. நேர்மையற்ற மனிதர்கள் எந்தத் திசையில் இருந்தாலும், நீதியின் சுத்தியல் உச்சந்தலையில் நச்சென இறங்கும் என்பதை உச்ச நீதிமன்றம் நிரூபித்துள்ளது. ‘மை லாட்’ என்று நீதிபதிகளைப் பார்த்துச் சொல்வதில் அர்த்தம் உள்ளது என்பதை, பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகிய இருவரும் மெய்ப்பித்துள்ளார்கள். ‘வேதனையான மௌனம் வெகுகாலம் நீடித்ததால், கவலை தரக்கூடிய தகவல்களை இங்கு மேடையேற்ற வேண்டியிருக்கிறது’ என்ற தீர்ப்பின் சொற்களுக்குள், தமிழ்நாட்டின் கால் நூற்றாண்டுகால அசிங்கம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதன்…
-
- 0 replies
- 2.2k views
-
-
ஜெயலலிதா என்னை ஒதுங்கியிருக்கச் சொன்னார்! டி.டி.வி.தினகரன் பேட்டி 'நான், திடீரென்று வந்திருக்கிறேன் என்று சிலர் சொல்கிறார்கள். ஜெயலலிதா என்னை சில காலம் ஒதுங்கியிருக்கும்படி கூறினார். அவரது கட்டளையை ஏற்று, ஒரு போர்வீரனாக இன்றைக்கும் நான் எனது பணியைச் செய்துகொண்டிருக்கிறேன்' என அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 'எம்ஜிஆர் மறைந்த காலத்திலேயே ஜெயலலிதாவால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டவன் நான். பிறகு, ஜெயலலிதாவால் 1999-ம…
-
- 2 replies
- 656 views
-
-
ஜெயலலிதா மரண வழக்கில், அப்போலோ முக்கிய பதில் மனு தாக்கல்! புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என ஜெயலலிதா கேட்டுக்கொண்டதால், அவரது படத்தை வெளியிடவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை பதில் மனு தாக்கல்செய்துள்ளது. சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இரவு மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியும், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர்நீதி…
-
- 1 reply
- 432 views
-
-
உள்ளாட்சி தேர்தலில் பலத்தை காட்டுவாரா பன்னீர் மதுரை:தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலை, வரும் மே 14க்குள் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், சசிகலா அணி மீதான பொதுமக்கள் அதிருப்தியை ஓ.பி.எஸ்., அணி அறுவடை செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்கு பின், முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றார். சிறப்பாக செயல்பட்ட அவரை சசிகலா குடும் பத்தினர் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பன்னீர்செல்வம் பதவியை இழந்தாலும், பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் ஆதரவை பெற்றார். அதுவரை அ.தி.மு.க.,வை எதிர்த்து வந்தவர்கள் கூட, பன்னீர்செல்வத்தை ஆதரிக்க துவங்கினர். தற்போது அவருட…
-
- 0 replies
- 311 views
-
-
'கைதி'க்கு கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு : ஜெ., பிறந்த நாள் பேனரில் சசி படத்துக்கு 'தடா' பெங்களூரு சிறை கைதி சசிகலாவுக்கு, அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொண்டர்களை திருப்திபடுத் தும் வகையில், ஜெ., பிறந்த நாள் பேனர்களில், சசிகலா படமின்றி, அச்சிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, அ.தி.மு.க., பொது செயலர் பதவியை சசிகலா கைப்பற்றினார். இதற்கு, கட்சியில் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு அதிகரித்தது. குறிப்பாக, பெண்கள், ஜெயலலிதாவின் மரணத்துடன் சசிகலாவை ஒப்பிட்டு பேசத் துவங்கினர். 'சதி'கலா …
-
- 0 replies
- 540 views
-
-
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு http://www.dinamalar.com/ சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட 3 பேரும் குற்றவாளி! உச்ச நீதிமன்றம் அதிரடி சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. 1991-1995 வரையிலான காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் பெயர்கள் சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணையை கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. அதன் அடிப்படையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்…
-
- 67 replies
- 7.4k views
-
-
“அவைக்குள் நுழைந்த ஐ.பி.எஸ்.கள்... இனி போலீஸ் வேலை பார்க்க முடியாது!” நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க எம்.எல்.ஏ-க்களை வெளியேற்றுவதற்காக, தமிழக சட்டசபைக்குள் அவைக் காவலர்களின் சீருடையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் நுழைந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ‘தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றுவதற்காக சபாநாயகர் தனபால் உத்தரவின் பேரில், ஒன்பது போலீஸ் அதிகாரிகளை தமிழக சட்டசபைக்குள் அவைக் காவலர்களின் சீருடையில் நுழைய அனுமதிக்கிறேன்’ என தமிழக சட்டமன்றச் செயலாளர் ஜமாலுதீன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு அனுப்பிய கடித நகல் வெளியானது. இதில், மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் ஸ்ரீதர், இணை கமிஷனர்களான சந்தோஷ்குமார், ஜோஷி நிர்மல்குமார், துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர…
-
- 0 replies
- 1.2k views
-
-
'முதல்வர் பதவியேற்க சசிகலாவை அழைக்காதது ஏன்?'- ஆளுநர் வித்யாசாகர் ராவ்! அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவருக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்காதது ஏன்? என்பதற்கு தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, www.dailyo.in என்ற ஆங்கில இணையதளத்தில் வித்யாசாகர் ராவ் தெரிவித்திருப்பதாவது:- "அண்மையில், தமிழகத்தில் நடைபெற்ற அரசியல் சூழ்நிலைகளின் போது, ஊடகங்களிலும், செய்திகளிலும் பரபரப்பாக எனது பெயர் விமர்சனத்திற்கு உள்ளானதைப் போன்று, 45 ஆண்டுகால எனது அரசியல் வாழ்வில் இதுவரை விமர்சிக்கப்…
-
- 0 replies
- 388 views
-
-
சசிகலாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்காதது ஏன்? பரபர பின்னணி #VikatanExclusive சிறையிலிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவை, முதல்வராக பொறுப்பு ஏற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. இதற்கு சில காரணங்களை சொல்கின்றனர் பழனிசாமியின் ஆதரவாளர்கள். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க.வில் நிகழ்ந்த களேபரங்களால் கலக்கத்தில் இருந்தனர் கட்சியினர். ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி, முதல்வராகிவிட்டார். அதே நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவும் சிறைக்குச் சென்று விட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போது தமிழகத்தில் கண்ணீர் காவியத்தை அரங்கேற்றிய அ.தி.மு.க.வினர், சசிகலாவுக்காக ஒரு சொட்டு கண்ணீ…
-
- 0 replies
- 897 views
-
-
சசிகலாவுக்கு பக்கத்து அறை 'சயனைடு' மல்லிகா, வேறு சிறைக்கு ஏன் மாற்றப்பட்டார்? சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். இதே சிறையில்தான் 'சயனைடு ' மல்லிகா என்ற பெண் கொலையாளியும் அடைக்கப்பட்டிருந்தார். பரப்பன அக்ரஹாரா சிறையில் முதல் நாள் சசிகலா அடைக்கப்பட்டபோது, அடுத்த அறையில் சயனைடு மல்லிகா இருந்தார். சயனைடு கலந்த தண்ணீரைக் கொடுத்து பெண்களைக் கொலை செய்து நகைகளை அபேஸ் செய்வது மல்லிகாவின் ஸ்டைல். இதனால் மல்லிகா என்ற பெயருடன் 'சயனைடு' ஒட்டிக் கொண்டது. கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை 6 பெண்களை 'சயனைடு' மல்லிகா கொன்றுள்ளா…
-
- 1 reply
- 791 views
-
-
சந்தி சிரித்த சட்டசபை : 18 கேள்விகள் !
-
- 0 replies
- 404 views
-
-
நெருப்பாய் கொதிக்கும் தொகுதி மக்கள் நெருங்க முடியாத எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி தொகுதியில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில் அவரது போட்டோ வுடன் விமர்சனம் வந்துள்ளது. செங்கோட்டையன் படத்தின் மேல், 'கண்ணீர் அஞ்சலி' என, குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 'செங்கோட்டையன், தொகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி, வேலைக்காரியின், வேலைக் காரனுக்கு ஆதரவாக ஓட்டளித்த தால், தொகுதி மக்களின் சார்பாக, அரசியல் வாழ்வில் அகால மரணம் அடைந்து விட்டதை கோ…
-
- 0 replies
- 465 views
-
-
ராஜாவின் பதிலடியால் கிடுகிடுத்த கோர்ட் '2ஜி' வழக்கல், நீதிபதியின் சரமாரியான கேள்விகளால், திணறிய, சி.பி.ஐ., வழக்கறிஞர், ''அதிர்ஷ்டம் இருப்பவர்கள் வெற்றி பெறட்டும்,'' என, கூறியதும்,''ஆவணங்களையும், சட்டத் தையும் நம்புகிறேன்; அதிர்ஷ்டத்தை அல்ல,'' என, தி.மு.க.,வைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, ராஜா பதிலடி தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. '2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு தொடர் பாக, சி.பி.ஐ., தரப்பிலும், குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தரப்பிலும், வாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், டில்லி பாட்டியாலா கோர்ட்டில், இறுதிகட்டமாக, சுருக்கமான வாத பிரதிவாதங் கள், துவங்கியுள்ளன. நேற்று நடந்த வ…
-
- 0 replies
- 500 views
-
-
தி.மு.க போராட்டத்தில் முதல்வர் பங்கேற்பு தி.மு.க சார்பில் புதுச்சேரியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். பிப்ரவரி 18--ம் தேதி தமிழக சட்டப்பேரவையில், நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்களை அவைக்காவலர்கள் வலுக்கட்டாயமாக பேரவையில் இருந்து வெளியேற்றினர். இதனைக் கண்டித்து, தி.மு.க சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தலைமையில், அந்தந்த மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான தி.மு.க தொண்டர்களும், தி.மு.க தலைவர்களும் மாநிலம் முழுவதும் போராட…
-
- 4 replies
- 2.5k views
-
-
சென்னை: உச்ச நீதிமன்றத்தால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர், புகைப்படங்களை, அரசு திட்டங்களில் இருந்து நீக்கவும், அரசு அலுவலகங்களில் பயன்படுத்தவும் தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு, நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின், 2016 டிச., 5ல் மறைந்தார்.ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், பிப்., 14ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா இறந்து விட்டதால், மற்ற …
-
- 0 replies
- 322 views
-
-
சேகர் ரெட்டி... எடப்பாடி... ஊழல் டீலிங்! - ‘அறப்போர்’ அதிரடி! சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைத்தண்டனைப் பெற்ற சூழலில், அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார், எடப்பாடி பழனிசாமி. அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்ததாக அறிவிக்கப்பட்ட சூழலில், அவர்மீது அதிரடி ஊழல் புகார் ஒன்று பரபரப்பாக வலம் வரத் தொடங்கியுள்ளது. கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டவுடன், அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். இதைத் தொடர்ந்து ராவுக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் பற்றி தகவல் வெளியானது. அதோடு, சேகர் ரெட்டிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இருந்த தொடர்பு உள்ளிட்ட விவகாரங்…
-
- 0 replies
- 929 views
-
-
ஜெ. வைத்த துளசி மாடம்... சுற்றிவந்த சசிகலா... டி.வி பார்க்கும் இளவரசி... மிரட்டும் சுதாகரன்! பரப்பன அக்ரஹாரா ஜெயில் வாழ்க்கை தமிழகத்தைத் தாண்டி பெங்களூருவிலும் ஆயிரம் வாட்ஸ் கேள்வியாக இருப்பது, ‘சிறைக்குள் சசிகலா என்ன செய்துகொண்டிருக்கிறார்’ என்பதுதான். ‘‘ஆடைகளும் இடமும் மட்டுமே சக கைதிகளுக்கு வழங்கப்பட்டிருப்பவை போல இருக்கின்றன. இவை தவிர, ‘சிறப்பு ஏற்பாட்டில்’ எல்லா வசதிகளும் இவர்களுக்குக் குறைவில்லாமல் கிடைக்கின்றன’’ என்கிறார்கள், இந்தச் சிறையை நன்றாக அறிந்தவர்கள். சசிகலா சிறைக்குள் சென்ற முதல் நாளில், கடுமையாக நடந்துகொள்வதைப் போல சிறைத்துறை காட்டிக்கொண்டது. ஒரே நாளில், சிறையின் நெளிவு சுளிவுகளை சசிகலா தரப்பு கண்டுகொண்டது. அதன்பின், அவர்களுக்கான …
-
- 0 replies
- 864 views
-
-
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான மனு: வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்க ஸ்டாலின் தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம். தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி திமுக செயல்தலைவர் ஸ்டாலின் செய்திருந்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் இம்மாதம் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஸ்டாலின் தன் மனுவில், கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அவைத்தலைவரின் அறிவிப்பு சட்ட விரோதமானது; நம்பிக்கை தீர்மானத்தின் மீதான அவைத்தலைவரின் முடிவு செல்லாது. ஆளுநரின் செயலர், தலைமைச் செயலர், தேர்தல் ஆணைய அதிகாரி ஆகியோர் …
-
- 0 replies
- 245 views
-
-
கூவத்தூர் கும்மாளம்! விதிமீறிய போலீஸ்... வதைக்கப்பட்ட மாணவர்கள்... மலையாகக் குவிந்த மதுபாட்டில்கள்... ஜல்லிக்கட்டுக் காக பல லட்சம் பேர் திரண்ட மெரினா கடற்கரையில் சேர்ந்த குப்பையில், ஒரே ஒரு காலி மதுபாட்டில்கூட இல்லை. ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக’ தங்கியிருந்த கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்ஸில், மூட்டை மூட்டையாக காலி மது பாட்டில்களை குப்பை களிலிருந்து அகற்றினார்கள். கூவத்தூரில் இத்தனை நாட்களாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தமிழக அரசு, மீண்டும் சென்னைக்கு வந்துவிட்டது. பூட்டியக் கதவுகளுக்குப் பின்னால், அடியாட்கள் கடுங்காவல் இருந்த காம்பவுண்ட் சுவர்களுக்குப் பின்னால் என, அங்கு நடந்த சமாச்சாரங்கள் ஒவ்வொன்றாக வ…
-
- 0 replies
- 643 views
-
-
தமிழக ஆளுநரின் முடிவு சரியா? சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது, கட்சித் தாவல் தடைச் சட்டத்தையே மீறுவதாகத்தான் அமையும். எனவே, ஆளுநர் இந்த முறைகளைக் கடைப்பிடிக்காதது வரவேற்புக்குரியது! தமிழகத்தில், அதிமுகவில் உருவான பிளவின் விளைவாக பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் ஆட்சி அமைக்கும் உரிமை கோரியபோது பலரும் பல்வேறு யோசனைகளை முன்வைத்தனர். ‘முன்னதாக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துவிட்ட பன்னீர்செல்வத்துக்கு முதல் வாய்ப்பு அளிக்க வேண்டும். இரண்டு பேருக்குமே பெரும்பான்மையை நிரூபிக்க ஒரே நேரத்தில் வாய்ப்பளிக்க வேண்டும்’ என்கிற யோசனைகள் அவற்றில் முக்கியமானவை. ஆனா…
-
- 0 replies
- 333 views
-
-
இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு கமல் | கோப்பு படம்: எல்.சீனிவாசன் தனது இயக்கப் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வன்மத்தைக் காட்டுகிறது என கமல் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக அரசியலில் நிலவி வரும் சூழல் குறித்து உடனடியாக கருத்துகளைத் தெரிவித்து வருபவர் கமல். அரசியலில் நிலவிவுள்ள மாற்றத்துக்கு ஆளுநரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஆதங்கத்தை அனுப்புமாறு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் கமல். இதற்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிமுக கட்சியினரை கடுமையாக சாடினார். இது தொடர்பாக,…
-
- 0 replies
- 360 views
-
-
Share this video : spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, அறிக் ஜனாதிபதியிடம் சட்டசபை நிகழ்வுகள் அறிக்கை …
-
- 0 replies
- 270 views
-
-
பெங்களூரு சிறையில் இருந்து தமிழக சிறைக்கு சசிகலாவை மாற்றுவதை அனுமதிக்க முடியாது: கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா திட்டவட்டம் பி.வி. ஆச்சார்யா | கோப்புப் படம் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை அங்கிருந்து தமிழக சிறைக்கு மாற்றுவதை அனுமதிக்கமாட்டோம் என்று கர்நாடக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறினார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கடந்த 15-ம் தேதி அடைக்கப்பட்டனர். …
-
- 0 replies
- 367 views
-
-
மிஸ்டர் கழுகு: செத்தது ஜனநாயகம்... இது பச்சைப் படுகொலை! கழுகார் வந்ததும், இந்த இதழ் ஜூ.வி அட்டையை எடுத்துப் பார்த்தார். புருவத்தை உயர்த்தினார். ‘‘கடந்த 18-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்களை இதைவிட சரியாக எப்படிச் சொல்ல முடியும்? சமீப நாட்களில் மத்திய அரசும், பி.ஜே.பி தலைமையும், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவும், சபாநாயகரும், ஆளும் கட்சியான அ.தி.மு.க-வும், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வும் இணைந்து நடத்தியவற்றை என்னவென்று சொல்வது?” என்ற கேள்வியுடன் நம்மை நோக்கி நிமிர்ந்தவர், ‘‘திரைமறைவுக் காட்சிகளை மட்டும் சொல்கிறேன்’’ என ஆரம்பித்தார். ‘‘ஓ.பன்னீர்செல்வம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டுக் கத்தினாலும் அவருக்கு 11 எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் செல்வாக்கு இல்லை…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜெயலலிதா, சசிகலா இல்லாத போயஸ் கார்டன் எப்படி இருக்கிறது? #VikatanExclusive ஜெயலலிதா, சசிகலா இல்லாத போயஸ் கார்டன் வேதா நிலையத்தில், இரவில் மயான அமைதி நிலவுகிறது. பகலில் மட்டும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் வருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. சென்னை போயஸ் கார்டன் என்றதும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 81, வேதா நிலையம் நினைவுக்கு வரும். ஏனெனில் அந்தளவுக்கு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். ஜெயலலிதா, வீட்டிலிருந்து தலைமை செயலகம் அல்லது வெளியூர் செல்ல புறப்பட்டால், அந்தப் பகுதியில் காக்கிகள் அணிவகுத்து நிறுத்தப்படுவர். ஜெயலலிதாவின் இசட் பிளஸ் பாதுகாப்போடு செல்லும் கான்வாயில், அவரது காரைப் பார்த்த…
-
- 0 replies
- 391 views
-