தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்! கவர்னரிடம் பன்னீர் வலியுறுத்தல் 'சட்டசபையில், நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை ரத்து செய்ய வேண்டும்; மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்' என, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், தி.முக., செயல் தலைவர் ஸ்டாலினின் பிரதிநிதி களும், அடுத்தடுத்து சந்தித்து வலியுறுத்தினர். முதல்வராக பதவியேற்ற, இடைப்பாடி பழனி சாமி, நேற்று முன்தினம், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோரினார். ரகசிய ஓட்டெடுப்பு என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை; சபையில் ரகள…
-
- 0 replies
- 354 views
-
-
ஒட்டுப்புல் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள இடைப்பாடி பழனிசாமி எங்கே சென்றாலும், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர், ஒட்டுப்புல் போல் ஒட்டிக் கொள்வதால், கட்சியினர், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று கவர்னரை சந்தித்த போதும்,அவர் உடன் இருந்ததால், முக்கிய நிர்வாகிகளும் விரக்தி அடைந்துள்ளனர். அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதா, தன்னுடன் இருந்த, சசிகலா, அவரது சொந்தங்களான டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட, 18 பேரை, 2011ல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார். 'சதிகாரர்கள், துரோகிகள்' என, முத்திரை குத்தி, வீட்டை விட்டும் விரட்டினார். மன்னிப்பு கடிதம் எழுதி க…
-
- 0 replies
- 478 views
-
-
பழனிச்சாமிக்கு ஓட்டளித்தது ஏன்? யதார்த்தத்தை சொன்னார் எம்.எல்.ஏ., மிகுந்த பரபரப்புக்கு இடையில், தமிழக சட்டசபையில், முதல்வர் பழனிச்சாமி, தனது பெரும்பான்மை பலத்தை நிரூபித்திருப்பதாக, சட்டசபை சபாநாயகர் அறிவித்திருக்கிறார். இதில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 பேர் ஓட்டளித்துள்ளதாகவும்; எதிர்ப்பாக 11 பேர் ஓட்டளித்துள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்திருக்கிறார். சபையில் இருந்தவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, இந்த எண்ணிக்கையில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், பழனிச்சாமிக்கு ஓட்டளித்தவர்களாக காட்டப்படும் எம்.எல்.ஏ.,க்களில் பாதிக்கும் அதிகமானோர், மனது மயக்கப்பட்ட நிலையில் சபைக்கு வந்து ஓட்டளித்ததாகக் …
-
- 0 replies
- 297 views
-
-
மாஃபா பாண்டியராஜனை ஆரத்தி எடுத்து வரவேற்ற தொகுதி மக்கள் அ.தி.மு.க வில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு சசிகலா அணியில் இருந்து பன்னீர்செல்வம் அணிக்கு வந்ததில் முக்கியமானவராக கருதப்படுபவர் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். குறிப்பாக 'என் தொகுதி மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக ஓ.பி.எஸ் அணிக்கு வருவதாக' அவர் கூறியிருந்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இன்று அவர் தனது ஆவடி தொகுதிக்கு சென்றிருந்தார். அப்போது ஆரத்தி எடுத்து, பூமாலை அணிவித்து, சால்வை போர்த்தி தடபுடலாக வரவேற்றுள்ளனர் மகிழ வைத்துள்ளனர் அவரது தொகுதி மக்கள். http://www.v…
-
- 0 replies
- 401 views
-
-
சபாநாயகர் இருக்கையில் திமுக எம்.எல்.ஏக்கள் அமர்ந்ததை ஏற்கவில்லை: ஸ்டாலின் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். | கோப்புப் படம். சபாநாயகர் இருக்கையில் திமுக உறுப்பினர்கள் ப.ரங்கநாதன், கு.க.செல்வம் ஆகியோர் அமர்ந்ததை ஏற்கவில்லை என்று அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஜனநாயகத்தைப் புதைகுழிக்குத் தள்ளும் வகையில் தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் (பிப்ரவரி 18) அதிமுக ஆட்சியினர் திட்டமிட்டுக் கொடுக்க, அதற்கேற்ற வகையில் ஒரு தரப்பாக சபாநாயகர் செயல்பட்ட விதத்தைக் கண்டு வாக்காளர்களான தமிழ்நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 'எங்…
-
- 0 replies
- 354 views
-
-
சட்டமன்ற ரகளை: என்ன செய்யப் போகிறார் கவர்னர்? தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய போது, ஏற்பட்ட அமளி-துமளி சம்பவங்கள் குறித்து கவர்னர் என்ன முடிவெடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்ததும் தொடங்கிய அரசியல் சித்து விளையாட்டுகள் இப்போதும் முடிந்து விடவில்லை. இனிமேல்தான் மேலும் சூடுபிடிக்கும் நிலை உருவாகியுள்ளது. "நல்லா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி!" என்று கிராமத்துப் பக்கம் ஒரு பழமொழி உண்டு. அதன்படி, தமிழகத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அரசு தொடர்ந்து நீடித்திருக்குமானால், …
-
- 0 replies
- 322 views
-
-
பேரவை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர் சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருந்தார். இதையடுத்து, சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், தாங்கள் தாக்கப்பட்டதாக ஆளுநரிடம் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் அளித்திருந்தார், அதேபோல், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் வாக்கெடுப்பு தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக பேரவை செயலாளர் ஜமாலுதீன், விளக்க அறிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இதற்கான விளக்க அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அந்த உத்தரவில் ஆளுநர் தெரிவித்துள்ளார். http://www.vikatan.com/news/…
-
- 1 reply
- 315 views
-
-
‘ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களே உங்கள் ‘சின்னம்மா’ சபதத்தை நிறைவேற்றவா வாக்களித்தோம்?!’ தமிழச்சிகளின் கடிதம் #VikatanExclusive 'ஷேம்ஃபுல்' - நேற்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ஒளிபரப்பியபோது, தேசிய சேனல்கள் பல தமிழ்நாட்டைக் குறிப்பிட்டுப் பேசிய வார்த்தை இது. இந்த வார்த்தையை எதற்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும், தமிழ்மக்களும் வாங்கிக்கொள்ள வேண்டும்? அதை நாங்கள் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குக் கொண்டுசேர்க்க விரும்புகிறோம். 'சட்டமன்றத்தில் நடந்த சம்பவங்களுக்கு 'சின்னம்மா' குடும்பத்தின் முதல்வர் நாற்காலித் திட்டம் முதல் தி.மு.க-வின் அவை நடவடிக்கைகள் வரை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, 122 பேரை விரல் சுட்டுவது ஏன்..?' என்று கேட்கலாம். ஏனெனில்,…
-
- 0 replies
- 269 views
-
-
‘யாரும் செய்யாததையா செய்துவிட்டேன்’ என்றார் ஜெயலலிதா! சொத்துக் குவிப்பு விசாரணை அதிகாரி நல்லம நாயுடு பேட்டி என்.நல்லம நாயுடு. ஜெயலலிதாவுக்கும் சசிகலா உறவுகளுக்கும் இந்தப் பெயர் சிம்ம சொப்பனம். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் எஸ்.பி-யாக இருந்து, சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை நடத்தியவர். இவரின் உறுதியான விசாரணைதான் இந்த வழக்கின் அஸ்திவாரம். உச்ச நீதிமன்றம் வரை வழக்கு உறுதியாக நின்று, நீதி கிடைக்க இதுவே காரணமாக அமைந்தது. தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், சென்னை பெரவள்ளூரில் வசிக்கும் நல்லம நாயுடுவைச் சந்தித்தோம். 79 வயதிலும் உறுதியானக் குரலில் பேசுகிறார். வழக்கு பற்றிய தகவல்களை விரல்நுனியில் வைத்திருக்கிறார். “முன்னாள் முதல…
-
- 0 replies
- 1.9k views
-
-
“ஆட்சியைப் பிடிக்க சசி குடும்பம் நடத்திய சதிகள்!” அதிர்ச்சி கிளப்பும் அட்வகேட் ஜோதி ‘‘அக்கா கோட்டைக்குக் கிளம்பி விட்டீர்களா... மதியம் சாப்பிட என்ன வேண்டும்’’ என ஜெயலலிதா விடம் கேட்ட சசிகலா, கோட்டையிலேயே உட்கார நினைத்தார். அதற்காக நடந்தவை அக்மார்க் அக்கப்போர்கள். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் அந்தக் கனவு தவிடுபொடியாகிவிட்டது. ‘‘அதிகாரத்தில் அமர வேண்டும் என்கிற சசிகலா குடும்பத்தின் சதித்திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது’’ என்கிறார் ஜெயலலிதாவின் முன்னாள் வழக்கறிஞர் என்.ஜோதி. அவரிடம் பேசினோம். ‘‘1991-ல் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்தபோதுதான், அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை அவர் பங்குதாரராக உள்ள நிறுவனம் வாங்கியது. ‘அரசுக்குச் சொந்தமான …
-
- 0 replies
- 1.6k views
-
-
உங்க ரைம் .. நல்லா அடிச்சு ஆடுங்க .. ! நன்றி தட்ஸ்தமிழ் டிஸ்கி இன்போசிஸ் நந்தன் நீல்கனி #@@$$^^...... தாவணி .. உனக்கு கார்டு வியாபரம் ஆகவேண்டும் என்றால் தெருதெருவா வித்துட்டு திரி !! 1 கிலோ அரிசி இதற்காக குப்பமவையும் சுப்பம்வையும் தொந்தரவு செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது ..? எல்லாத்தையும் விசம் வைத்து கொன்று விட்டால் எவனும் எந்த உரிமையும் தமிழ்நாட்டில் இருந்து கேட்க மாட்டான் !!!
-
- 10 replies
- 1.1k views
-
-
பிப்.19-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் ஓபிஎஸ் | கோப்புப் படம். கடும் அமளிகளுக்கு மத்தியில் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 122 எம்எல்ஏக்களும், எதிராக 11 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். சட்டப்பேரவையில் நடந்த பெரும் ரகளை, திமுகவினர் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டது, நம்பிக்கை வாக்கெடுப்பு முறை, சபாநாயகர் நடவடிக்கைகள் என பேரவை நிகழ்வுகள் குறித்த விமர்சனங்களும் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. பரபரப்பான இன்றைய தினத்தின் நிகழ்வுகளின் தொகுப்பு: இந்த பக்கத்தை அவ்வப்போது ரெப்ரஷ் …
-
- 2 replies
- 395 views
-
-
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சில கேள்விகள்..? தமிழக அரசியலில், கடந்த 7-ம் தேதி ஆரம்பித்த சூறாவளிப் புயல் நேற்றைய வாக்கெடுப்பு வைபவத்தோடு கரை கடந்துவிட்டது. இடைப்பட்ட இந்த பத்து நாட்களில்தான் எத்தனை எத்தனை திருப்பங்கள், ஆச்சரியங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள்... எது எப்படியோ... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 122 பேர் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தனது பதவியைத் தக்கவைத்துக்கொண்டுவிட்டார்.! தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அசாதாரண சூழலில் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு சில குறிப்புகள் இங்கே...அரசியல் விஷயங்களில், தாங்கள் எந்தப் பக்கம் என்று இதுவரையிலும் உறுதியான அடையாளம் காட்டிக்கொள்ளாத…
-
- 0 replies
- 370 views
-
-
முதல்வராக நீடிப்பாரா எடப்பாடி பழனிசாமி? ''முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்க இறைவன்தான் அருள் புரிய வேண்டும்'' என திருவாய் மலர்ந்திருக்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.! இதனை வாழ்த்துச் செய்தியாக எடுத்துக்கொள்வதா? அல்லது வசைமொழியாக எடுத்துக்கொள்வதா? ஏற்கெனவே, 'தமிழகத்தை காவி மயமாக்க முயற்சிக்கிறது மத்திய அரசு', என்ற குற்றச்சாட்டு சசிகலா தரப்பினரால் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், 'பி.ஜே.பியை தமிழகத்தில் கால் ஊன்ற ஒருநாளும் விடமாட்டோம். ஆர்.எஸ்.எஸ் கனவான திராவிட ஆட்சி இல்லாத தமிழகம் என்ற வசனம் எல்லாம் தமிழகத்தில் எடுபடாது. அரசியல் சட்டத்தில் இ…
-
- 0 replies
- 382 views
-
-
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக அரசின் மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை பெங்களூரு சிறை தொலைக்காட்சியில் பார்த்த சசிகலா சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வருமான வரி செலுத்துவதால் தங்களுக்கு சிறப்பு அறை ஒதுக்க வேண்டும் என்று கோரி உள்ள போதிலும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. இதனால் மகளிர் பிளாக்கில் உள்ள 2-வது அறையில் கடந்த 4 நாட்களாக இளவரசியுடன் சசிகலா தங்கியுள்ளார். பரபரப்பான அரசியல் …
-
- 0 replies
- 297 views
-
-
Chief Minister என்று எழுத தெரியாத தமிழக முதல்வர் எடப்பாடி? தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் பக்கத்தில் chief Minister of Tamilnadu என்பதற்கு பதிலாக Cheif Minister of Tamilnadu என்று குறிப்பிட்டுள்ளது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிமுக-கட்சியைச் சேர்ந்தவரான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி ஏற்றார். இவர் தலைமையில் அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் பக்கத்தில் தவறு இருப்பதாக கூறி சமூகவலைத்தளங்களில் அது தொடர்பான புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அதாவது அதில் chief Minister of Tamilnadu என்பதற்கு பதிலாக Cheif Minister of Tamilnadu என்று குறிப்பி…
-
- 0 replies
- 316 views
-
-
ஆட்சி அமைக்க அதிர்ஷ்டம் தேடி வருகிறது கதவை மூடி திருப்பி அனுப்புகிறார் ஸ்டாலின்? ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு அணிகளாக உடைந்துள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்றும் வியூகத்தை அமைக்காமல், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் இழுத்தடிக்கிறார்' என, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குமுறுகின்றனர். இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:சட்டசபையில், கூட்டணி பலத்துடன், தி.மு.க., வுக்கு, 98 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க, 18 எம்.எல். ஏ.,க்களின் ஆதரவு தான் தேவை. இதை மனதில் வைத்து தி.மு.க.,வினர் செயல்பட வேண்டும் என, தன், 93வது பிறந்த நாள் விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார். ஆதரவு தர மாட்டோம் மக்களுக்கு விரோதமான ஆட்சியாக, அ.தி…
-
- 2 replies
- 635 views
-
-
இடைப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள் ளது. மன்னார்குடி கும்பலின் பினாமி ஆட்சிக்கு உதவியதால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீது எரிச்சல் அடைந்துள்ள மக்கள், அவர்களை தொகுதிக்குள் வர விடாமல் தடுக்கப் போவ தாக, ஆவேசமாக கூறியுள்ளனர். பொது மக்களின் வெறுப்பை தங்களுக்கு சாதகமாக்க, தி.மு.க.,வும் வியூகம் அமைத்து வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றா லும், கட்சியும், ஆட்சியும் தன் குடும்பத்தினரை விட்டு போய் விடக்கூடாது என, சசிகலா முடிவு செய்தார். அதனால், சிறை செல்வதற்கு முன், தன் அக்கா மகன் தினகரனை, அ.தி.மு.க., துணை பொதுச்செயலராக அறிவித்தார். தன் விசுவாசியான, இடைப்பாடி பழனிசாமியை முதல்…
-
- 0 replies
- 425 views
-
-
ஆட்சியை இழந்தார்; தலைவராக உயர்ந்தார் சசி எதிர்ப்பால் பன்னீருக்கு கிடைத்த பலன் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக, புதிய அரசியல் தலைவராக, பன்னீர்செல்வம் உருவெடுத்துள்ளார். கடந்த, 2001ல், 'டான்சி' வழக்கு தொடர்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பதவியை ராஜினாமா செய்த நிலையில், தமிழகத்தின் முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம் அறிமுகப்படுத்தப்பட்டார். அப்போது முதல், அவ்வப்போது பிரச்னைகள் ஏற்பட்ட போதெல்லாம், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தற்காலிக முதல்வராக, பன்னீர்செல்வம் பதவி வகித்து வந்தார். இறுதியில், ஜெயலலிதா மறைந்த பின்பும், பன்னீர்செல்வமே முதல்வரானார். இந்நிலையில் அவரை, போயஸ் கார்டன் என்ற மர்ம மாளி…
-
- 0 replies
- 292 views
-
-
ஆட்சியை கலைக்க அனைத்து காரணமும் உண்டு! மாஜி' சபாநாயகர் சேடபட்டி முத்தையா பேட்டி ''சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்திய முறை அனைத்தும், சட்டவிதிகளுக்கு முரணானது என்பதால், ஆட்சியை, 'டிஸ்மிஸ்' செய்ய, கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா தெரிவித்தார். கடந்த, 1988ல், சட்டசபையில் ஓட்டெடுப்பு நடந்து, ஆட்சி கலைக்கப்பட்ட போது, ஜெயலலிதா அணியில் இருந்தவர் முத்தையா. பின், அ.தி.மு.க., ஆட்சியில், 1991 - 96 வரை, சட்டசபை சபாநாயகராக பதவி வகித்தார். சட்டசபையில், நேற்று நடந்த சம்பவங்கள், ஓட்டெடுப்பு குறித்து, நமது நாளிதழுக்கு, அவர் …
-
- 0 replies
- 311 views
-
-
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 பேரிடம் ரூ. 130 கோடி அபராதம் வசூலிக்க வழி என்ன மதுரை,:சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா உட்பட 4 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள 130 கோடி ரூபாய் அபராதத்தை, தீர்ப்பு வெளியான தேதியிலி ருந்து, 6 ஆண்டுகளுக்குள் வசூலிக்கும் நடவடிக்கையை முடிவுக்குகொண்டுவர, சட்டத்தில் வழிவகை உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, 100 கோடி ரூபாய் அபராதம், அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்த பெங்கள…
-
- 1 reply
- 366 views
-
-
சட்டசபை தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம்:சட்ட நிபுணர்கள் கருத்து சட்டசபையில், முதல்வர் கோரிய நம்பிக்கை தீர்மானம் செல்லுமா என்ற சர்ச்சை எழுந்து உள்ளது. எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றி விட்டு, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சட்டசபையில் நேற்று, முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். தி.மு.க., சார்பில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. அதற்கு, சபாநாயகர் சம்மதிக்கவில்லை. தி.மு.க.,வினரின் ரகளையை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்…
-
- 0 replies
- 228 views
-
-
தமிழக மக்கள் ஏற்று கொள்ளாத ஆட்சி! கவர்னருக்கு பறக்குது 'இ - மெயில்' கோவை : 'தமிழகத்தில், இடைப்பாடி பழனிசாமி ஆட்சியை மக்கள் முற்றிலும் புறக்கணிக்கின்றனர்; கவர்னர், தமிழகத்தை காக்க வேண்டும்' என, ராஜ்பவனுக்கு 'இ - மெயில்'கள் குவிகின்றன. தமிழக சட்டசபையில், சசிகலாவால் நியமிக்கப்பட்ட முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நேற்று தன் பலத்தை நிரூபித்து, ஆட்சியை தக்க வைத்து கொண்டார். சட்டசபையில் தங்கள் கோரிக்கை மறுக்கப்பட்டு, சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாக, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், தி.மு.க.,வினர் மனு அளித்தனர். இந்த பரபரப்பான சூழலில், 'கவர்னரின் ராஜ்பவன், இ - மெயில் முகவரிக்கு, தமிழக மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கல…
-
- 0 replies
- 375 views
-
-
சென்னை: சட்டசபையில் இன்று (பிப்.,18) நடந்த களேபரத்தில் அம்பத்துார் போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் சட்டசபை காவலராக மாறுவேடத்தில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபையில் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. ரகசிய ஓட்டெடுப்பு நடத்த கோரி தி.மு.க, எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். எதிர்கட்சியினரின் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார். இதை கண்டித்து தி.மு.க., எம்.எல்.ஏ.,கள் சபாநாயகரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால், கடுப்பான சபாநாயகர் சட்டசபை காவலர்கள் மூலம் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை குண்டு கட்டாக வெளியேற்ற உத்தரவிட்டார். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டசபை காவலர்களால் சட்டை கிழிக்கப்பட்ட நில…
-
- 2 replies
- 719 views
-
-
தொகுதிப்பக்கம் செல்ல முடியுமா சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ? அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா ஆசி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒருவழியாக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். சசிகலா தலைமையை ஏற்காத அ.தி.மு.க-வினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா ஆதரவுடன் முதல்வராகியிருக்கும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்போர் ஒரு அணியாகவும் பிரிந்து நிற்கின்றனர். இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கூடியது. எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், அரசை எதிர்த்து ஓ.பி.எஸ் உள்ப…
-
- 1 reply
- 411 views
-