Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எம்.எல்.ஏ.,க்களை மீட்க கவர்னரிடம் ஸ்டாலின் மனு சென்னை:'சிறை வைக்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ.,க்களை மீட்க வேண்டும்' என, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். சென்னை, ராஜ்பவனில், நேற்று இரவு, கவர்னரை ஸ்டாலின் சந்தித்தார். தமிழக அரசு நிர்வாத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார்.பின், ஸ்டாலின் அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தலை நடத்த, தமிழக அரசுக்கு விருப்பமில்லை என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்தில், ஒன்பது மாதங்களாக, அரசு பணிகள் முடங்கியுள்ளன. தேர்தல் முடிந்து, இதுவரை எந்தப் பணிகளும் நடக்கவில்லை. …

  2. சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது: ஆளுநர் அறிக்கையில் தகவல் தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசு அறிக்கை அனுப்பியுள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை: தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள், காவல்துறை அளித்த தகவலை அறிக்கையில் குற…

  3. விடுமுறையில் முதல்வரின் பாதுகாப்பு எஸ்.பி., : யாரை ஆதரிப்பது என்பதில் குழப்பம் முதல்வர் பன்னீர்செல்வம் - சசிகலா, இருவரில் யாரை ஆதரிப்பது என தெரியாமல், போலீசார் குழப்பத்தில் உள்ளனர். அதனால், முதல்வரின் பாதுகாப்பு பிரிவு, எஸ்.பி., திடீரென விடுமுறையில் சென்றார். முதல்வர் பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பு பிரிவு, எஸ்.பி., சுதாகர்; மதுரையை சேர்ந்த இவர், 2015 முதல், இப்பொறுப்பில் உள்ளார். முதல்வரின் வாகனம் புறப்படும் முன், அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் கவனிக்க வேண்டிய, முக்கிய பொறுப்பில் உள்ளவர். விசாரணை : ஜெயலலிதா இருக்கும் வரை, பொது நிகழ்ச்சி களில், இவர் தலை …

  4. ஜெயலலிதா மரண விசாரணைக் கமிஷனில் இந்தக் கேள்விகள் இடம்பெறுமா...? #OPSvsSasikala முதல்வர் பன்னீர்செல்வம், மெரினாவில்... நேற்று (7-2-17) ஜெயலலிதாவின் நினைவிடத்தின் முன்பு, 40 நிமிடங்கள் தியானம் மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து, தனது மன உந்துதலால்தான் சில உண்மைகளைச் சொல்ல வெளிவந்ததாகக் கூறினார். சசிகலா கட்டாயப்படுத்தியதன் பேரிலேயேதான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறிய அவர், சசிகலா முதல்வராகப் பதவியேற்பதில் தனக்கு இருந்த அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து சசிகலாவால் நீக்கப்பட்டார் ஓ.பி.எஸ். இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை மீண்டும் சந்தித்த பன்னீர்செல்வம், ''ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த அந…

  5. ஆளுநருடன் டி.ஜி.பி. - தலைமைச் செயலாளர் திடீர் சந்திப்பு தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் ஆணையர் ஜார்ஜ், உளவுப்பிரிவு கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் ஆகியோரும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை: தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும், எம்.எல்.ஏ.க்கள்…

  6. பன்னீருக்கு 35 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு? சென்னை: முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு, ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., சண்முகநாதன், கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி உள்ளிட்ட 5 எம்.எல்.ஏ.,க்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும் பல எம்.எல்.ஏ.,க்கள் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் கூவத்தூர் அருகே தனியார் ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரிசார்ட்டில் உள்ள எம்.எல்.ஏ.,க்களில் 30 பேர் முதல்வர் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், மேலும் 15 பேர் தி.மு.க.,வை தொடர்பு கொண்டுள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 35 ஆக அதிகரித்துள்ளது. இ…

  7. பின் வாங்குகிறாரா சசிகலா? #OPSVsSasikala அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்குப் பதில், மன்னார்குடி குடும்பத்தினரில் வேறுநபர் ஒருவரை முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானத்துக்குப் பின்னர், கடந்த 5-ம் தேதி, சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துகளை, சசிகலா தரப்பு தொடர்ந்து மறுத்து வந்த போதிலும், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்களிடையே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருவதைத் தடுக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இர…

  8. பிப்.10-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் இடது: சசிகலா, வலது: ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படங்கள்: எம்.வேதன் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) தனித்தனியாக சந்தித்துப் பேசினர். இதையடுத்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால், தமிழக அரசியலில் உச்சகட்ட குழப்ப நிலை நீடிக்கிறது. 7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரப்பாகியுள்ள நிலையில் இன்று 4-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறிவருகின்றன. அவற்றின் தொகுப்பு: 11.00 am: கிருஷ்ணராயப…

  9. கவர்னரை சந்திக்கிறார் ஐகோர்ட் தலைமை நீதிபதி சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கவர்னர் வித்யாசாகர் ராவை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் சற்று நேரத்தில் சந்திக்க உள்ளார். தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலையில், இருவரது சந்திப்பு நிடைபெற உள்ளது. முன்னதாக காலையில், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி., ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகளை கவர்னர் சந்தித்து பேசியிருந்தார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1708170

  10. அன்று மகிழ்ச்சி... இன்று அதிர்ச்சி...! தீபாவின் இந்த நிலைக்கு இதுதான் காரணம்? ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டில் சில நாட்களாக ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அவரது தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளரான சசிகலாவின் தலைமையை ஏற்காதவர்கள் தீபாவின் பின்னால் அணிவகுத்தனர். தீபாவின் வீடு அமைந்துள்ள தி.நகருக்கு தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க.வினர் குவிந்தனர். தொடர்ந்து தீபா பேரவையும் தொடங்கப்பட்டு பேனர்களும் வைக்கப்பட்டன. தொண்டர்களைச் சந்தித்த தீபா, ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதி அரசியல் பயணம் குறித்து அறிவிப்பதாக தெரிவித்தார். இதற்கிடையில் சசிகலா, முத…

  11. ‘ஐ விட்னஸ்’ சண்முகநாதன்! - சசிகலாவுக்கு ‘355’ செக் வைக்கும் ஆளுநர் #OPSVsSasikala 'தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆளுநரே முடிவு எடுப்பார்' என அறிவித்துவிட்டார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 'அரசியல் சூழல்கள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு ஆளுநர் அறிக்கை அனுப்பினாலும், நேற்றைய சந்திப்பில் ஹைலைட்டே சண்முகநாதனின் ஸ்டேட்மெண்ட்தான்' என்கின்றனர் ஆளுநர் மாளிகை வட்டாரத்தில். அ.தி.மு.க எம்.எல்.ஏக்களின் நிலை பற்றி, தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் ஆலோசித்து வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். நேற்று மாலை ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் பன்னீர்செல்வம், மிகுந்த உற்சாகத்தோடு வெளியில் வந்தார். 'தர்மம் வெல்லும்' என மீடியாக்களிடம் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டார். அ…

  12. ஆளுநரிடம் என்ன பேசினார் சசிகலா...? கோட்டை வாசலில் அவிழ்த்து விடப்போகும் 'அரசு' என்னும் காளையை யார் பிடிப்பது என்கிற 'மல்லுக்கட்டு' போட்டியால் ஒட்டுமொத்த தமிழகமும் தறிகெட்டுக் கிடக்கிறது. ஓர் இரவில் இதுவரை இல்லாத புது மனிதராக மாறி நிற்கிறார் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம். 128 சட்டமன்ற உறுப்பினர்களும் என் பக்கம்தான்' என்கிறார் சசிகலா. இருவரையும் அழைத்துப் பேசி ஒரு முடிவுக்கு வர முடியாமல் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறார் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ். இனி தமிழகத்தில் என்ன நடக்கும்? மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? இதுவே தமிழகம் முழுவதும உள்ள மக்கள் அனைவரிடமும் உள்ள கேள்வி. சசிகலா - ஆளுநர் சந்திப்பு! மும்பை…

  13. சசிகலா முகாமிலிருந்து பன்னீர்செல்வத்துக்கு தூது அனுப்பிய எம்.எல்.ஏ-க்கள்! #VikatanExclusive #OPSVsSasikala சசிகலா முகாமிலிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் தரப்பிலிருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் தூது விட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பலம் 13 ஆக உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கொட்டும் உறைப்பனியிலும் தமிழக அரசியலின் பரபரப்பு கடும் உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்துக்கு நேற்று வருகைத் தந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதலில் சந்தித்தார். அடுத்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, சந்தித்தார். இதன்பிறகு குடியரசுத் தலைவர், பிரதமர் அலுவலகம், மத்திய உள்துறை அமைச்சகம…

  14. ஜெயலலிதா சிகிச்சை விஷயத்தில் அப்போலோ சொன்னது உண்மையா? வெடிக்கும் சர்ச்சை! #Jayalalithaa #Apollo தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதத்தில் நடந்த பரபரப்பான நிகழ்வுகளைப் போன்று இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் நடந்தேயில்லை. இந்தியாவே மிரண்டு போகும் அளவுக்கு தமிழ்நாட்டில் எழுச்சிகளும், மர்மங்களும், அரசியல் சண்டைகளும் நடந்தேறி வருகின்றன. இவற்றில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சை என்பதுதான் மிகப்பெரிய மர்மமாக இன்றுவரை தொடர்கிறது. "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவ்வப்போது புகைப்படம் அல்லது வீடியோ வெளியிட்டு இருக்கலாமே" என்ற மக்களின் கேள்விக்கு, "அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ஐ.சி.யு பிரிவில் சி.சி.டி.வி. கேமாரா இல்லை" என அப்போலோ ந…

  15. சசிகலாவை பொ.செ.,வாக நியமிக்க வழியில்லை: தேர்தல் ஆணையம் புதுடில்லி: அதிமுக பொது செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் சசிகலா புஷ்பா மற்றும் சிலர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வந்தது.இந்நிலையில், இடைக்கால பொது செயலாளரை நியமிப்பதற்கான வழிகள் அதிமுக சட்ட விதியில் இல்லை. சட்ட விதிகளை மாற்றினால், மட்டுமே பொது செயலாளராக நியமிக்க முடியும் என தேர்தல் ஆணையம் வட்டாரங்கள் கூறியுள்ளது. இது குறித்து அதிமுக விரைவில் பதில் அளிக்கும் என தெரிகிறது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1706953

  16. 'ஆஸ்பத்திரியைவிடக் கொடுமையா இருக்கு!' - ரிசார்ட் உற்சாகத்தில் உதறும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் #VikatanExclusive தமிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்ட பதற்றத்தில் இருக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப் பாய்ந்து கொண்டிருக்க, அரசியல் ஜல்லிக்கட்டை முடிவுக்குக் கொண்டு வராமல் தவித்துக் கொண்டிருக்கிறார் சசிகலா. 'பீச் ரிசாட்டில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தனி வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. பல எம்.எல்.ஏக்கள் கதறியடியே கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றனர்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனி ஆவர்த்தனத்தைத் தொடங்கிய கணத்தில் இருந்து, அவருக்கான…

  17. எம்.எல்.ஏ.க்களை மீட்கக் கோரிய வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு விடுதிகளில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் எம்.எல்.ஏ.க்களை மீட்கக் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தையும் அளித்துள்ளார். ஆனால், சசிகலாவை ஆதரித்துள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் விடுதிகளில் தங்க…

  18. காளையுடன் செல்ஃபி, காஃபி-டீ, சாப்பாடு... எப்படி இருக்கிறது ஓ.பன்னீர்செல்வம் வீடு? #SpotReport #VikatanExclusive சென்ற மாதம் அதிகம் விமர்சிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் இன்று சிக்ஸர் நாயகனாக மாறி இருக்கிறார். ஒட்டு மொத்த இந்தியாவையும் தன் ஸ்டைலில் திரும்பிப் பார்க்க வைத்து, சசிகலா தரப்பை இரவு ஒரு மணிக்கு வெளியில் வரவைத்து விட்டார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ளது முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு. கடந்த இரண்டு நாட்களாக மக்கள் வெள்ளத்தில் திளைத்து வரும் அந்த வீடு எப்படி இருக்கிறது? 1. முதல்வரின் வீட்டைப் பார்க்க பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர்.அவரது வீட்டின் கேட்டில் உள்ள முதலமைச்சர் பன்னீர்செல்வம் என்கிற போர்டுக்கு பக்கத்தில் ந…

  19. சொகுசு விடுதியில் இருந்து வெளியேற முடியாததால் கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தவிப்பு? கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சொகுசு விடுதிக்கு செல்லும் சுழல் விளக்கு பொருத்தப்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்கள் | படங்கள்: கோ.கார்த்திக் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற முடியாமல் தவிப்பதாக கூறப்படுகி றது. அப்பகுதியில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டதால் செல்போனில் கூட தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாக தெரிகிறது. அதிமுக பொதுச்செயலாளர் மீது புகார் தெரிவித்து முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதையடுத்து அதிமுகவில் பல்வேறு திருப்பங் க…

  20. பலப்பரீட்சையில் சசி தோற்றால் அடுத்தது என்ன? சட்டசபையை முடக்க கவர்னர் உத்தரவிட வாய்ப்பு தமிழகத்தில், 1988க்குப் பின், தற்போது, ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க, சசி தரப்போ அல்லது பன்னீர்செல்வம் தரப்போ தவறினால், கவர்னர் ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. சட்டசபையில், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, 234. ஒருவர் நியமன உறுப்பினர்; அவருக்கு ஓட்டுரிமை இல்லை. ஆட்சி அமைக்க, மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில், பாதிக்கும் மேல் ஒரு உறுப்பினரின் ஆதரவு தேவை. அதாவது, 118 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு வேண்டும். சசிகலா, தனக்கு, 120க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளார். ஆனால், ஒவ்வொருவராக அங்கிருந்து சென்று கொண…

  21. அ.தி.மு.க., கட்சியை முதல்வர் பன்னீர்செல்வம்... கைப்பற்றுகிறார்!: நாளுக்கு நாள் ஆதரவு அதிகரிப்பதால் உற்சாகம்: அணி தாவினார் அவைத்தலைவர் மதுசூதனன்: சசிகலா தரப்புக்கு அடுத்தடுத்து பின்னடைவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆதரவு காரணமாக, உற்சாகம் அடைந்துள்ள முதல்வர் பன்னீர்செல்வம், விரைவில் அ.தி.மு.க.,வை கைப்பற்றுவார் என, எதிர்பார்க்கப் படுகிறது. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான, அவைத் தலைவர் மதுசூதனன், நேற்று உடனடியாக அணி மாறியதால், சசிகலா தரப்புக்கு, அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார். முதல்வர் பன்னீர்செல்வம், அவரது ஆதரவு நிர்வாகிகள், சசிகலாவின் …

  22. அதிகார போட்டியில் வெல்லப் போவது யார் ஒட்டு மொத்த தமிழக மக்களும் காத்திருப்பு சென்னை:''அ.தி.மு.க.,வில் நடக்கும் அனைத்து விபரங்களையும், கவர்னரிடம் தெரிவித்தோம்; அவர் நல்ல முடிவை அறிவிப்பார். நமக்கு நல்லதே நடக்கும்,'' என, கவர்னரை சந்தித்த பின், முதல்வர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவும், கவர்னரை சந்தித்து பேசியுள்ளார். எனவே, இரு தரப்புக்கும் இடை யிலான இந்த அதிகாரப் போட்டியில், வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆளும், அ.தி.மு.க.,வில், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில், சசிகலா தரப்பு…

  23. ஆட்சி அமைக்க சசிகலாவை அழைக்க மறுப்பு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் கவர்னர் பெரும்பான்மையை நிரூபிக்க, ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என, முதல்வர் பன்னீர்செல்வமும்; ஆட்சி அமைக்க, அழைப்பு விடும்படி சசிகலாவும், தமிழக கவர்னரை சந்தித்து, மனு கொடுத்தனர். இரு தரப்பு கோரிக்கையையும் கேட்ட கவர்னர், மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். அவர் எந்த பதிலும் தெரிவிக்காததால், தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதில், 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.இம்மாதம், 5ம் தேதி நடந்த, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டார். மறுநாள், கவர்னர், தமிழகம் வருவார்; அவரை சந்தித்து, கடிதத்தை கொடுத்து, முதல்வராக பொறுப்பேற்கலா…

  24. சசிகலாவுக்கு நடராசனின் காதல் பரிசு! ப.திருமாவேலன் `ஓர் உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது’’ என்றார் ஜெயலலிதா. ``இருக்க முடியும்’’ என்றார் ம.நடராசன். ``ஓர் உறையில் இரண்டு கத்திகள் இருக்கவே முடியாது’’ என்று மீண்டும் சொன்னார் ஜெயலலிதா. `இருக்க முடியும்... என்பதற்கு உதாரணம் உங்களிடமே இருக்கிறதே’ என்று போயஸ் கார்டனுக்கு உள்ளேயே கலைப்பொருள்கள் வரிசையில் இருந்த ஒன்றை எடுத்துவந்தார் நடராசன். ஜெயலலிதா நடிகையாக இருந்த காலத்தில் தரப்பட்ட பொருள்களில் அதுவும் ஒன்று. அந்த உறையின் பக்கவாட்டில் இருக்கும் க்ளிப்பை லாகவமாக நகர்த்தினால், இரண்டு பக்கங்களில் இருந்தும் கத்தி வரும். எடுத்துக்காட்டினார் நடராசன். இதோ போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கே தெரியா…

  25. கோட்டைக்கு ‘செக்’ வைக்கும் கோர்ட்! - சுப்ரீம் ஷாக் அ.தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலா தேர்வான மறுநாளே, ‘சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்துக்குள் தீர்ப்பு வழங்கப்படும்’ என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாகச் சொல்லியிருப்பது அ.தி.மு.க தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா, 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து நீதிபதி மைக்கேல் டி குன்ஹா 2014 செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதையடுத்து, முதல்வர் பதவியை ராஜின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.