Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ்நாட்டு விவசாயத்திற்கு எதிராக நடக்கும் மிகப்பெரிய சதி மற்றும் ஆபத்து..

    • 0 replies
    • 215 views
  2. பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி வரமா... சாபமா? முதல்வர் பதவி, ஒ.பன்னீர்செல்வத்துக்கு வரமா? சாபமா? என்ற முடிவுக்கு வரமுடியவில்லை. ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து விலகும் சூழல் ஏற்படும் போதெல்லாம் முன்னிறுத்தப்பட்டது இவர் தான். 'பதவியை திரும்பக் கொடு' என்று கேட்டாலும் சிரித்துக் கொண்டே கொடுத்துவிட்டுச் செல்வதும் இவர் தான். 'பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டுப் போன்றது' என்பார் அறிஞர் அண்ணா. அவருடைய இந்த வரி நாவலர் நெடுஞ்செழியனுக்கு பிறகு ஓ. பன்னீர்செல்வத்திற்குத்தான் சரியாகப் பொருந்தி போகிறதோ என்று தோன்றுகிறது. தோளில் கிடக்கிற துண்டைத் தொடர்ந்து நழுவ விடுவதற்கு நிர்பந்திக்கப்பட்டவர் ஒ.பன்னீர்செல்வம். 2001 - ல் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளம் மற்ற…

  3. சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பாரா ஆளுநர்?! - திடுக் டெல்லி காட்சிகள் 'தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறேன்' என ஆளுநருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 'பதவியேற்பு நடக்கும் வரையில் பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார்' என அறிவித்துவிட்டார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். 'கிரிமினல் வழக்கு உள்ளவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது' என குடியரசுத் தலைவருக்குப் புகார் மனு அனுப்பியிருக்கிறார் அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா. அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுவிட்டார் சசிகலா. இன்னும் சில தினங்களில் முதல்வராக அவர் பதவியேற்க இருக்கிறார். 'கட்சியி…

  4. தமிழகத்தில் 234 இடங்கள் காலியாகுது : தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சென்னை : தமிழகத்தில் விரைவில் 234 இடங்கள் காலியாக உள்ளதாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்வராவதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது டுவிட்டர் பதிவில், " தமிழக இளைஞர்கள் அனைவரின் கவனத்திற்கு, விரைவில் தமிழகத்தில் 234 இடங்கள் காலியாக உள்ளது. வாய்ப்பு காத்திருக்கிறது" என, குறிப்பிட்டுள்ளார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1705481

  5. சசிகலாவுக்கு எதிராக போயஸ் தோட்டம் எதிரே ராப் பாடல்! (வீடியோ) சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இந்திய ராப் பாடகி சோபியா அஷ்ரப். இவர், சசிகலா முதல்வராக தேர்வானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தன் குழுவினர் நான்கு பேருடன் இணைந்து நேற்று நள்ளிரவு போயஸ் தோட்டத்திற்கு வெளியே கோவமாக ராப் பாடல் இசைத்து எதிர்ப்பை வெளிபடுத்தி உள்ளார். ’நான் உங்களுக்கு ஓட்டு போடவில்லை, நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல’ என்று கடும் கோபத்துடன் ராப் செய்துள்ளார். இதை ஃபேஸ்புக் லைவ் வீடியோவாக பதிவு செய்துள்ளார். http://www.vikatan.com/news/tamilnadu/79910-sofia-ashraf-raps-against-sasikala-infront-of-poes-garden.art

  6. சசிகலாவுக்கு, டி.ராஜேந்தர் சரமாரி கேள்வி! தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு, லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, 75 நாள் சிகிச்சைக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அன்று இரவே முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர், நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சசிகல…

  7. 900 காளைகள், 750 மாடுபிடி வீரர்கள்: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிபாயும் காளைகளை அடக்கும் முயற்சியில் மாடுபிடி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவனியாபுரம்: சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக, தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாத ஜல்லிக்கட்டு, மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் காரணமாக, தமிழக அரசு சட்டம் இயற்றியதால் இந்த ஆண்டு நடைபெறுகிறது. மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு ஆண்டுதோற…

  8. 'முதல்வர் பதவிக்காக ஏன் அவசரப்பட்டார் சசிகலா?!' - ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா பின்னணி #VikatanExclusive தமிழ்நாட்டின் மூன்றாவது பெண் முதல்வராக பதவியேற்க இருக்கிறார் சசிகலா. 'எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்றத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட அதேநேரத்தில், உறவுகளின் அழுத்தம் தாங்க முடியாமல் அப்போலோ மருத்துவமனையின் எல் வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ம.நடராசன். மன்னார்குடி உறவுகளின் ஆட்டமும் தொடங்கிவிட்டது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 60 நாட்கள் நிறைவடைவதற்குள், தமிழக முதல்வர் நாற்காலியை எட்டிப் பிடித்துவிட்டார் சசிகலா. 'தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறேன்' என ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியிருக…

  9. சசிகலாவின் போஸ்டரைக் கிழித்தவரை அடிக்கும் அமைச்சர்: சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் போஸ்டரைக் கிழித்தவரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் காவல்துறையினர் சிலரும் அடிக்கும் வீடியோ காட்சி வைரலாகப் பரவி வருகிறது. அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஏகமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அதிமுக அதிருப்தியாளர்களும் தீபா ஆதரவாளர்களும் சசிகலா முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இச்சூழலில் சென்னையில் சசிகலாவின் படத்துடன் கூடிய போஸ்டரை ஒருவர் கிழத்துள்ளார். இதைப் பார்த…

  10. ஆசை இல்லை! அரசியல் ஆசை இல்லை என்றவர் முதல்வராகிறார் 'எனக்கு அரசியல் ஆசை எப்போதும் இல்லை' என, மறைந்த முதல்வர் ஜெயலிதாவிடம் சொல்லி, மன்னிப்பு கோரி, மீண்டும் அவருடன் இணைந்த சசிகலா, அந்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு, முதல்வராக உள்ளார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த, விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு, சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி, சசிகலா, திவாகரன் என, ஆறு குழந்தைகள். இவர்களில், ஐந்தாவ தாக பிறந்தவர் சசிகலா. 10ம் வகுப்பு படித்துள் ளார். இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தை சேர்ந்த, நடராஜனுக்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில…

  11. சசிகலா கணவர் நடராஜனுக்கு... ஹை பிபி.. அப்பல்லோவில் அனுமதி. சென்னை: நேற்று தான் சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய தினமே அவரது கணவர் நடராஜனுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன். அவருக்கு திடீரென நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுவதாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 4வது மாடியில் உள்ள எல் வார்டில் நடராஜன் அனுமதி…

  12. 'சசிகலா முன்னரே முதல்வராகி இருக்க வேண்டும்!'- அ.தி.மு.க நிர்வாகியின் ஆவேசம்!! அ,தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா, கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. கட்சியின் பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தின் பின்னணியில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி டிசம்பர் 5-ம் தேதி வரை 75 நாட்கள் அப்போலோவில் நடந்தது என்ன? என்ற கேள்விக்கு இதுவரை தமிழக மக்களுக்கும், அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்களுக்கும் யாரும் எந்தப் பதிலும் சொல்லவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சையை ஊடகங்களும் இரண்டொரு நாள் வி…

  13. சல்லிக்கட்டு பற்றி ஆதி (ஹிப் ஹொப் தமிழா)

    • 0 replies
    • 398 views
  14. கருணாநிதி இன்று..? ப.திருமாவேலன் - ஓவியம்: கார்த்திகேயன் மேடி ‘`சார்... தலைவரே!” என்று அழைக்கிறார் ரஜினிகாந்த். அவரை அடையாளம் காண முடியவில்லை கருணாநிதியால். ‘`ஐயா, வைரமுத்து வந்திருக்கிறேன். உங்கள் கவிஞர் வந்திருக்கிறேன்’’ என்று உரக்கக் குரல்கொடுக்கிறார் வைரமுத்து. குரலோசை, காதுகளுக்குள் போகவில்லை கருணாநிதிக்கு. “அப்பா, திருவாரூர் போயிட்டு வர்றேன்” - உத்தரவுக்காகக் காத்திருக்கிறார் ஸ்டாலின். உரக்கச் சொல்லியும் உணர்வு இல்லை கருணாநிதியிடம். “அண்ணே, அறிவாலயம் போகலாமா?” இது துரைமுருகனின் வெடிக்குரலில் வெளிப்படும் வேதனைக் கேள்வி. சிக்கலான எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் கருணாநிதியிடம் இருந்து வரவில்லை எதிர்க்குரல். நாளிதழை வாசிக்கிறார் சண்மு…

    • 10 replies
    • 3.1k views
  15. ஜெ.,வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன: அப்பல்லோ நாளை விளக்கம் சென்னை: ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ மருத்துவனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆகியோர் நாளை விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக, இருவரும் சென்னையில் நாளை மதியம் பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளனர். அந்த சந்திப்பின் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என விளக்கம் அளிக்க உள்ளனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=1704988

  16. பன்னீரை அவமானப்படுத்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்? அ.தி.மு.க., தலைவர்கள் அதிர்ச்சி சென்னை: பன்னீர்செல்வம் முதல்வர் ஆன பின், இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார் அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா. தன்னை முதல்வராக்கிக் கொள்வதற்காக, சசிகலா இந்த கூட்டத்தை கூட்டியிருப்பதாக, எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் பரபரப்பாகப் பேசப்பட்டாலும், இரண்டாவது முறையாக, முதல்வர் பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்த வேண்டும் என்பதோடு, பன்னீர்செல்வத்தைக் காட்டிலும், கட்சியின் பொதுச் செயலராக இருக்கும் தான் தான் உயர்ந்தவர் என்று காட்டுவதற்காகவே, இப்படியொரு கூட்டத்துக்கு சசிகலா அழைப்பு விடுத்திருப்பதாக, கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக கூறப்படுகிறது. …

  17. தமிழக அரசின் முதன்மை செயலர், முதல்வரின் தனிச்செயலர் பதவி விலகல்? சென்னை: தமிழக அரசின் முதன்மை செயலாளர் வெங்கட்ராமன், முதல்வரின் தனிச்செயலாளர் ராமலிங்கம் ஆகிய இருவரும் தங்களது பொறுப்பிலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் நேற்று பொறுப்பிலிருந்து விலகியதாக கூறப்பட்டது. இதையடுத்து மேலும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடுத்தடுத்து பொறுப்பிலிருந்து விலகிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1703806 அரசு ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் விலகல்? சென்னை: தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரள …

  18. அரசியல் கிசு கிசு: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய மறுப்பு? ஆதரவு எம்எல்ஏக்களுடன் ரகசியமாக ஆலோசனை சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சசிகலா, சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. அப்படி அவர் சட்டமன்ற கட்சி தலைவராக வேண்டும் என்றால், முன்னதாக தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வேண்டும். அந்த ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநனரிடம் ஓ.பன்னீர்செல்வம் வழங்க வேண்டும். ஆனால், இன்று காலை வரை ஓ.பன்னீர்செல்வம் …

  19. போயஸ் கார்டனில் அதிமுக அமைச்சர்கள்...? அதிமுக-வின் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியின் அமைச்சர்களை போயஸ் கார்டனுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளாராம். இதனையடுத்து, தற்போது அதிமுக அமைச்சர்கள் போயஸ் கார்டனில் கூடியுள்ளதாக தகவல் வந்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு சீக்கிரமே வரவுள்ள நிலையிலும், வரும் 9-ம் தேதி சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்பார் என தகவல்கள் கூறப்பட்ட நிலையிலும், தற்போது போயஸ் கார்டனில் அதிமுக அமைச்சர்கள் கூடியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுக-வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 'கட்சி விதிகளின்படி ஐந்தாண்டுகள் தொடர்…

  20. இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வராக சசிகலா பதவியேற்பு? - முதல் உத்தரவாக 2000 டாஸ்மாக் கடைகளை மூட வாய்ப்பு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா | கோப்பு படம் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படும் வி.கே.சசிகலா, இன்றே முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். டிசம்பர் 31-ல் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். முதல்வர் பொறுப்பையும் சசிகலா ஏற்க வேண்டும் என சில அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்து வந்தனர். …

  21. Started by நவீனன்,

    மிஸ்டர் கழுகு: தீபா டீல்? ‘‘ ‘தீபா’வளி... ‘தீபா’வளி எனப் பாடிக்கொண்டு வந்தார் கழுகார். யாரைப் பற்றி சொல்லப் போகிறார் என்பது தெரிந்தது. அவரைப் பற்றியே ஆரம்பித்தோம். ‘‘ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டின் முன் இன்னமும் கூட்டம் குவிந்து கிடக்கிறதே... என்ன முடிவில் இருக்கிறார் தீபா?’’ ‘‘தீபா, மாற்றி மாற்றி முடிவுகளை அறிவிக்கிறார்; ஆனால், தனது நோக்கத்தில் அவர் தெளிவாக இருக்கிறார்.’’ ‘‘நோக்கமா?’’ ‘‘ ‘ஜனவரியில் புதுக்கட்சி ஆரம்பிப்பேன்’ என்று தீபா சொல்லவில்லை. ஆனால், தீபா தரப்பில் இருந்து அப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டது. அதை நம்பி, அ.தி.மு.க-வில் சசிகலாவின் தலைமையை ஏற்காத தொண்டர்கள் தீபா வீட்டு முன் குவிந்தனர். தீபா வீட்டை நோக்கி தினமும் சாரை சாரையாகப…

  22. ' ஆவணங்களைக் கொடுங்கள்' -சசிகலாவை அதிர வைத்த தேர்தல் ஆணையம் ' தமிழக முதல்வர் நாற்காலியை நோக்கி சசிகலா நகர்ந்து கொண்டிருக்கிறார்' என வட இந்திய ஊடகங்கள் வரையில், விவாதங்களைத் தொடங்கியுள்ள சூழலில், ' அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் தேர்வு குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சசிகலாவுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கூடவே, ' இரட்டை இலை சின்னத்துக்கு யாராவது உரிமை கொண்டாடினால், ஏற்கக் கூடாது' எனவும் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள் சசிகலா எதிர்ப்பு அணியினர். சென்னை, வானகரத்தில் கூடிய அ.தி.மு.க பொதுக்குழுவில், பொதுச் செயலாளர் பதவிக்கு கட்சியின் நிர்வாகிகளால் முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. தற்காலிக பொதுச் செயலாளராக பதவியேற்றவர், ' பொதுக்குழு…

  23. சின்னம்மா துணை கேப்டன்... தீபா மண்குதிரை! கலகலக்கும் வாட்ஸ்அப் கலாட்டா 'அ.தி.மு.க.வின் கேப்டன் அம்மாவின் மறைவுக்குப்பிறகு சின்னம்மா துணை கேப்டனாக இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார். இந்த நேரத்தில் தீபாவின் பின்னால் அறியாமையில் கட்சியினர் செல்கின்றனர்' என்ற வாட்ஸ்அப் பதிவு வைரலாகி வருகிறது. "அ.தி.மு.க.வின் கேப்டன் அம்மா, துணை கேப்டன் சின்னம்மா. அம்மா மறைவுக்குப்பிறகு 2 கோடி தொண்டர்களை வழிநடத்தி வருகிறார் சின்னம்மா. இந்த நேரத்தில் மாற்றுக்கட்சியினரால் வரும் ஆபத்தை விட உள்கட்சியினரால் பல்வேறு சோதனைகள் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டு வருகிறது. அதாவது தீபாவின் பின்னால் அறியாமையில் கட்சியில் இருந்து சிலர் செல்கின்றனர். அவர் ஒரு மண் குதிரை. அவரை நம்பி பயண…

  24. 'தீபா அணியை நோக்கித் தள்ளுகிறாரா சசிகலா?!' -புதிய பதவி கடுப்பில் அ.தி.மு.க சீனியர்கள் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கோகுல இந்திரா உள்பட 23 பேருக்கு புதிய பொறுப்புகளை வழங்கியிருக்கிறார் சசிகலா. ' இப்படியொரு பதவியை வழங்காமலேயே இருந்திருக்கலாம். கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்களுக்குப் பொதுச் செயலாளர் கொடுக்கும் மரியாதை இதுதானா?' எனக் கொந்தளிக்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர். அண்ணா தி.மு.க-வின் புதிய நிர்வாகிகள் பட்டியலை நேற்று வெளியிட்டார் பொதுச் செயலாளர் சசிகலா. இதில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 14 பேருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளராக சிவபதியும் மீனவர் அணிச் செயலாளர…

  25. சொல்வது டிஜிட்டல் இந்தியா; கழிவை அள்ளுவது வாளியில்..! கனிமொழி கிண்டல் டிஜிட்டல் இந்தியா என அரசு கூறுகிறது; ஆனால் கழிவை வாளியில் அகற்றம் நிலைதான் உள்ளது என்று திமுக எம்பி கனிமொழி கிண்டல் செய்துள்ளார். எண்ணூர் கடற்பகுதியில் எண்ணெய் படிந்துள்ளதை இன்று திமுக எம்பி கனிமொழி இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலில் படிந்துள்ள எண்ணெய் கழிவுகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறினார். கடலோர பகுதி மக்கள் நச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்த கனிமொழி, எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும், சில நாட்களில் எண்ணெய் படல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.