Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நடுவுல கொஞ்சம் வைகோவை காணோம் - எங்க போனீங்க ராசா? வைகோ, இந்த நூற்றாண்டில் அதிகமா கலாய்க்கப்பட்ட அரசியல்வாதி இவராத்தான் இருப்பார். எல்லாரும் அரசியல் பண்ணா, அரசியல் இவரை மட்டும் தயவு தாட்சண்யம் இல்லாம வச்சு செய்யும். தமிழ்நாட்டுல, அமெரிக்காவிலே... ஐரோப்பாவிலே... புளூட்டோவிலேன்னு எங்க என்ன பிரச்சனை நடந்தாலும் முதல் ஆளா ஆஜர் ஆகி கருத்து சொல்லுவார் நம்ம வைகோ. சில சமயம் எதும் பிரச்சனையே நடக்கலைன்னா, 'என்னதான் ஆகிவிட்டது நம்ம ஊருக்கு' அப்படின்னு இவராவே எதாவது கருத்து சொல்லி பிரச்சனையை ஆரம்பிப்பார். போன வாரம் ஃபுல்லா தமிழ்நாடே ஜல்லிக்கட்டு பிரச்னைல தீவீரமா இருந்தப்ப இவர் மட்டும் 'செலிப்ரிட்டி வாழ்க்கை நொந்தது... எனக்கு என்ன வந்ததுன்னு' அமைதியா இருந்தார். இவர் ம்யூட்ல …

  2. “சரி சரி அவரே இருக்கட்டும்...” ஓ.பி.எஸ் க்கு ‘விட்டுக்கொடுத்த’ சசிகலா! 2017 ஆம் ஆண்டு இப்படி துவங்கும் என மொத்த தமிழகமும் எதிர்பார்த்திருக்கமுடியாது. ஜெயலலிதா இல்லாமல் ஒரு புத்தாண்டு பிறந்திருக்கிறது. ஜெயலலிதா இல்லாமல் மாணவர்கள் நடத்திய எழுச்சிப் போராட்டம் நடந்து முடிந்திருக்கிறது. கட்சியின் செயற்குழுவில் மட்டுமே ஜெயலலிதாவால் அனுமதிக்கப்பட்ட சசிகலா, அந்த கட்சிக்கே பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவிற்கு முன் 2 சந்தர்ப்பங்களில் முதல்வர் பொறுப்பேற்ற ஓ.பி.எஸ் எப்போதும் இல்லாமல் நெஞ்சு நிமிர்த்தியபடி சட்டமன்றத்தில் அம்மாவின் இருக்கையை அலங்கரிக்கிறார். முதல்வராக இருந்த முந்தைய காலங்களில் கள்ள மௌனத்துடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்க்க…

  3. மிஸ்டர் கழுகு: நண்பேன்டா! நாடகம் நடக்குது நாட்டிலே... ‘‘இரண்டு மாதங்களுக்கு முன்பு கனவிலும் நினைக்காத காட்சிகள் எல்லாம் இப்போது சட்டமன்றத்தில் நடக்கின்றன’’ என்ற பீடிகையோடு உள்ளே நுழைந்தார் கழுகார். அவர் ஏற்கெனவே வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்த ‘நண்பேன்டா! நாடகம் நடக்குது நாட்டிலே...’ என்ற தலைப்பை வைத்து உருவாக்கப்பட்ட ஜூ.வி அட்டையை எடுத்து நீட்டி, ‘‘இதைத்தான் சொல்கிறீர்களா?” என்றோம். ‘‘ஆம்! ‘ஜெயலலிதா இல்லாத நிலையில் சட்டமன்றத்தில் தி.மு.க அதகளம் செய்துவிடும்; கேள்விகளால் முதல்வரைத் துளைத்தெடுப்பார்கள்’ என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மெரினாவில் மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட போலீஸ் தாக்குதல் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தை ச…

  4. சிக்கன்கடை சலாவூதீன்... உளவுத்துறை சொல்லிய ஒசாமா பின்லேடன் அனுதாபி இவர்தான்! #VikatanExclusive ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடனின் அனுதாபிகள் பங்கேற்றதாக மாநில உளவுப்பிரிவு போலீஸார், அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்தனர். பின்லேடன் படத்தை ஓட்டிய வாகனத்தில் சென்ற சிக்கன்கடை சலாவூதீன் அந்த ரிப்போர்ட் தவறு என்று தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் ஒற்றுமையுடனும், அறவழியிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினாவில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தால் அவசரச் சட்டம் இயற்றப்பட்டு சில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. சென்னையில் ஜல்லி…

  5. அப்போ போலிஸ்... இப்போ சசிகலா...விக்கிபீடியாவாசிகளின் அடாவடி! சில நாட்களுக்கு முன்பு, தமிழக போலீசாரின் விக்கிபீடியா பக்கம், மோசமான வார்த்தைகளால் எடிட் செய்யப்பட்டது. விஷமிகள் செய்த இந்த வேலையால் அந்த ஸ்க்ரீன்ஷாட்கள் இணையத்தில் வைரலாக சென்றது. பிறகு உடனே அந்த பக்கம் மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது. தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. இந்த முறை அ.தி.மு.க பொதுச்செயலாளரான வி.கே.சசிகலாவின் பக்கம் அதேபோல தரக்குறைவான வார்த்தைகளால் எடிட் செய்யப்பட்டுள்ளது. எந்த விஷயத்தை பற்றியும் தெரிந்து கொள்வதற்கு ஒரு பொதுவான என்சைக்ளோபீடியாவாக விளங்கும் தளம் விக்கிபீடியா. இதில் எந்த ஒரு நபரும் புதிதாக ஒரு பக்கத்தை துவங்கவும், எழுதவும் முடியும்.…

  6. ஜல்லிக்கட்டு போட்டிக்கு சசிகலா தலைமையாம்.. மாணவர்கள் யுக புரட்சிக்கு இழுக்கு.. மக்கள் கொந்தளிப்பு சென்னை: மாணவர்கள் போராடி பெற்ற ஜல்லிக்கட்டு உரிமைக்கு, உரிமை கொண்டாடுகிறார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை சசிகலா தொடங்கி வைக்க துரித கதியில் வேலைகள் நடக்கின்றன. இது இளைஞர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொது செயலாளர் சசிகலாவை மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவர் ஜெ.சுந்தர்ராஜன், செயலாளர் வி.சுந்தர் ராகவன் தலைமையிலான நிர்வாகிகளும், வாடிப்பட்டி தாலுகா, பாலமேடு கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரும், அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரும் தனித் தனியே நேரில் சந்தித்து, ஜல்லிக…

  7. சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு செக் வைத்த உயர் நீதிமன்றம் அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, அவரது சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது கீழ் நீதிமன்றம் விடுவித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. வெளிநாட்டில் இருந்து சுசீலா என்பவரிடம் உரிய அனுமதியின்றி பணம் பெற்றதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை விடுவித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை இன்று …

  8. ‘தற்காலிகம்தான்...நிரந்தரம் அல்ல!’ - சசிகலாவுக்கு செக் வைக்கிறதா ஆணையம்? அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவி குறித்த சர்ச்சை நீடித்துக்கொண்டே இருக்கிறது. 'வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில், கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராகத்தான் சசிகலா நியமிக்கப்பட்டார். முறைப்படி தேர்தல் நடத்த வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தம்பிதுரை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் சசிகலா' என்கின்றனர் அ.தி.மு.கவினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. 'கட்சி விதிகளின்படி ஐந்தாண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இல்லாதவர்கள், பொதுச் செயலாளர் ஆக முடியாது. 2011-…

  9. தீ வைத்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை! பேரவையில் முதல்வர் அதிரடி அறிவிப்பு ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும், தீ வைத்ததாக கூறப்பட்ட புகாரில் சிக்கிய காவலர்கள் மீடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிக்கை ஒன்றை படித்தார். அப்போது, ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட 36 மாணவர்கள் விடுவிக்கப்படுவர் எனறும், வன்முறை மற…

  10. “யாரைக் கேட்டு பேட்டி கொடுத்தார்..?” எகிறிய ஸ்டாலின்... சைலண்ட் ஓ.பன்னீர்செல்வம் சென்னை போலீஸுக்கு இது போதாத காலம்போல... மெரினா ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பத்தில் காவல் துறை காட்டிய கரிசனத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனார்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள். ஆனால், கடந்த 23-ம் தேதி அதே காவலர்கள், காட்டிய கோரமுகத்தைக் கண்டு, ‘‘காட்டுமிராண்டிகளாக தமிழக போலீஸ் நடந்த்கொண்டது’’ என்று வசைபாடினார்கள். போலீஸார், வீடுகளுக்குள் புகுந்து தாக்கிக்கொண்டிருந்த போதுதான், சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். கலவர பூமியாகச் சென்னை காட்சியளித்துக் கொண்டிருந்தபோது ‘‘அமைதிப் பூங்காவாகத் தமிழகம் உள்ளது’’ என்று சிலாகித்துக்கொண்டிருந்தார் கவர்னர். ஜல்லிக்கட்டு போர…

  11. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டது யார்? விசாரணை வெளிப்படுத்துமா ? ஜல்­லிக்­கட்டு நடத்த அனு­மதி வழங்க வேண்டும் என்று சென்னை மெரீனா கடற்­க­ரையில் அமைதிப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த மாண­வர்கள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கு யார் காரணம்? யார் தாக்­குதல் நடத்­து­மாறு உத்­த­ர­விட்­டது? தாக்­கு­தலின் பின்­ன­ணியில் விஷ­மிகள் உள்­ள­னரா? அல்­லது முதல்வர் ஓ. பன்­னீர்­செல்­வத்­துக்கு எதி­ரான சக்­தி­களா? என்­பது போன்ற கேள்­விகள் மக்­க­ளிடம் எழுந்­துள்­ளன. ஜல்­லிக்­கட்டு நடத்த வேண்டும் என்று கோரி தமி­ழகம் முழுதும் 8 தினங்­க­ளுக்கு மேல் போராட்­டங்கள் இடம்­பெற்­றன. இந்தப் போராட்டம் சென்­னையில் மட்­டு­மன்றி வெளி மாவட்­டங்­க­ளிலும் …

  12. கலைகிறதா அதிமுகவின் ராணுவ கட்டுப்பாடு? அதிமுக பிரமுகர் சட்டைப் பையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா-சசிகலா படம் | படம்: ம.பிரபு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தற்போது அதிமுகவில் நிலவும் போட்டி விமர்சனங்கள், கட்சியின் பல்வேறு நிகழ்வுகள் அக்கட்சியின் ராணுவ கட்டுப்பாடு கலைகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தவரை, அவரை மீறி கட்சியில் எந்த விஷயமும் நடந்துவிடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தவறியதில்லை. மேலும், எந்த விஷயத்திலும் அவர் உத்தரவின்றி யாரும் எதையும் செய்துவிட முடியாது; எவரையும் விமர் சித்து விடவும் முடியாது. இதற்கு சசிகல…

  13. இவர் தான் peta வின் இந்திய பிரதிநிதி

    • 0 replies
    • 483 views
  14. வர­லாறு படைத்த அற­வழி போராட்டம் தமி­ழக அர­சியல் களம் முன் எப்­போதும் இல்­லாத ஒரு சூழலை கடந்த வாரம் எதிர்­கொண்­டது. உலக வர­லாற்றில் சாத­னை­யாக பதிவு செய்யும் அள­விற்கு தலை­மை­யே­யில்­லாத தன்­னெ­ழுச்சிப் போராட்டம் நடை­பெற்­றது. அர­சியல் நோக்­கர்கள் மற்றும் எதிர்­கால அர­சி­ய­லுக்­கான கொள்கை வகுப்­பா­ளர்­க­ள் ஆகியோருக்கு ஆகச்­சி­றந்த உதா­ர­ண­மா­கவும் இந்த அற­வழி போராட்டம் அமைந்­தது. ஜன­நா­ய­கத்தில் மக்­களின் உரிமை காக்­கப்­ப­ட­வேண்டும் என்­றாலோ அல்­லது உரிமை மீட்­டெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்­றாலோ போராட்டம் நடத்­து­வது என்­பது அடிப்­ப­டை­யான நோக்­க­மாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டாலும் போராட்­டத்தின் எந்த வடி­வ­மாக இருந்­தாலும் அதற்கு ஒரு தலைமை இருக…

  15. சென்னை மெரினாவில் மீண்டும் போலீஸ் குவிப்பு சென்னை : சென்னை மெரினாவில், இன்று பிற்பகல் முதல் மீண்டும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மெரினாவை சுற்றி உள்ள பகுதிகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் பதற்றமாக மெரினா : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜனவரி 17 ம் தேதி முதல் 23 வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்திய போராட்டம் உலகம் முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரை அமைதியான முறையில் நடந்து வந்த போராட்டம், ஜனவரி 23 ம் தேதி சென்னையில் கலவரமாக மாறியது. த…

    • 2 replies
    • 540 views
  16. ஓ.பி.எஸ்.,க்கு எதிராக உள்ளடி செய்த மந்திரிகள்! அலங்காநல்லூரில் அம்பலமான சதி முதல்வருக்கு எதிராக, அமைச்சர்கள் செயல்படுவது, அ.தி.மு.க.,விலும், அரசியல் வட்டாரத்திலும், பெரும் பரபரப்பை உள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, முதல்வ ராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஏற்கனவே, இரு முறை, முதல்வர் பதவியில் இருந்து, ஜெ., விலக நேரிட்ட போது, முதல்வ ராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதன் பின் மீண்டும், ஜெ., பதவியேற்கும் சூழல் ஏற்பட்ட போது, முதல்வர் பதவியை துறந்து, தன் விசுவாசத்தை நிரூபித்தார். எனவே, ஜெ., மறைவுக்கு பின், மீண்டும் அவர் முதல்வ ரானது, மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்த வில்லை. ம…

  17. சசிகலாவுக்கு எதிராக தேர்தல் கமிஷனில் நெருக்கடி தம்பிதுரை முயற்சியை முறியடிக்க திட்டம் அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக் கப்பட்டதற்கு, தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் பெறும் முயற்சியில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஈடுபட்டுள்ளார். அதற்கு எதிராக, ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா மற்றும் தீபா ஆதரவாளர்கள், தேர்தல் கமிஷனிடம் மனுக்களை வழங்கி, சட்ட ரீதியாக நெருக்கடி கொடுப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க.,வில், 1.50 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். கட்சி விதிப்படி, உறுப்பினர்களின் ஓட்டு எண்ணிக்கை மூலம், …

  18. மிஸ்டர் கழுகு: குடியரசு தினத்தை மதிக்காத தமிழக அரசு! கடற்கரையில் இருந்து பறந்து வந்தார் கழுகார்! சிந்தனை வயப்பட்ட முகத்தோடு எதிரில் அமர்ந்தார். ‘‘குடியரசு தினக் காட்சிகளைப் பார்க்கலாம் என கடற்கரைக்குப் போனேன். சில நாட்களுக்கு முன்னால் மக்கள் தலைகளால் நிரம்பி வழிந்த கடற்கரை இன்று வெறிச்சோடிக் கிடந்தது. இதற்குக் காரணம் நிச்சயமாக அரசும் போலீஸும்தான். அமைதியாகப் போராடியவர்களை அராஜகமாகக் கலைத்ததன் விளைவு, ‘குடியரசு தினக் கொண்டாட்டத்துக்குப் போகலாமா’ என்ற பயத்தைக் கிளப்பிவிட்டது. போலீஸ் மீதான கோபத்தால் பலர் வரவில்லை. குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது நிரம்பி வழியும் கடற்கரை வெறிச்சோடியது. ‘ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துன’ கதையாகிவிட்டது. ‘யாராவது உள்ளே புகுந்து…

  19. தீபாவுக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் முதல் நிகழ்ச்சியை தடுத்த சசிகலா டீம் தீபாவின் அரசியல் பயணத்துக்கு முட்டுக்கட்டை போடுவதற்கான முயற்சியில் சசிகலா தரப்பு ஈடுபடுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலில் ஈடுபடுவதாக சமீபத்தில் அறிவித்தார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அரசியல் பயணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தீபாவின் அரசியல் பயணம், அ.தி.மு.க.வில் நிச்சயம் சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தீபாவுக்கு செக் வைக்கும் வேலையில் சசிகலா தரப்பு ஈடுபட்டு வருவதாக தீபாவின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையி…

  20. அ.தி.மு.க.,வில், ஜெயலலிதாவால் உருவாக் கப்பட்ட, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த நிர்வாகிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். ஆட்டம் போட்டவர்களுக்கு மீண்டும் பதவி தரும் முடிவில், கட்சியின் பொதுச் செயலர் சசிகலா இருப்பதால், அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே, தீபா பக்கம் செல்வது பற்றி பெண் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த ஜெயலலிதாவால் கட்டம் கட்டப்பட்ட மன்னார்குடி உறவுகள் கட்சியிலும், ஆட்சியி லும் கோலோச்சத் துவங்கி இருக்கின்றன. சசிகலாவின் அரவணைப்பில் உள்ள, அவரின் அக்கா வனிதாமணியின் மகன் தினகரனுக்கும், அண்ணன் சுந்தரவதனத்தின் மகன், டாக்டர் வெங்கடேஷுக்கும் இடையே, அதிகார போட்டி நடக்கிறது. கட்சி,…

  21. ' காலம் உங்களை கவனித்துக் கொள்ளும் பொன்னார்!' -தி.மு.க மா.செவின் ஃபேஸ்புக் பதிவு தி.மு.க நிர்வாகிகளில் அரியலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் சற்று வித்தியாசமானவர். நடப்பு அரசியலை நையாண்டி செய்து கட்டுரைகளாகப் பதிவு செய்வதில் வல்லவர். மெரினா போராட்டம் குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்தை விமர்சித்து, அவர் எழுதிய பதிவுகள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மாணவர்கள் நடத்திய மெரினா புரட்சியின் விளைவால், அவசரச் சட்டம் கொண்டு வந்தார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவர் டெல்லி சென்ற காட்சிகளை, 'மர்மப் புன்னகை ஓ.பி.எஸ்' என்ற தலைப்பில் நையாண்டி செய்திருந்தார். இறுதியாக, 'இடைவேளைக்குப் பிறகான ரஜினி படம் …

  22. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படம்! முதல்வர் ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல் சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை சிலர் பயன்படுத்தியதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வந்த முதல்வருக்கு பாராட்டு தெரிவித்ததோடு, மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியது குறித்தும், சென்னையில் போலீஸ் தடியடி தொடர்பாக முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், 2006-ம் ஆண்டு முதல் பல்வேறு ப…

  23. கொடூர போலீஸ் தாக்குதல்.. அரசு மீது கோபத்தை திருப்பிய தமிழக மக்கள்.. களையிழந்த குடியரசு தினம். சென்னை; குடியரசு தினம் என்றால் மாவட்டந்தோறும் நடக்கும் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டு களிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு போலீசாரின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி இருப்பதால் குடியரசு தினம் களையிழந்து காணப்படுகிறது. கடந்த திங்கள் கிழமை சென்னையில் நடைபெற்ற வன்முறையில் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள நடுகுப்பம், அயோத்திய குப்பம் மற்றும் ராயப்பேட்டை பகுதிகளில் வீடு வீடாக புகுந்து போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இது போதாதென்று அவர்களே குடிசைகள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினார்…

  24. நடுக்குப்பத்தில் காவல்வெறி! சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறை வெளியிட்ட ஆவணப் படம்! அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற பண்பாட்டுப் புரட்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன்போது சென்னை மெரீனாக் கடற்கரையிலும் மிகப் பெரியளவில் மக்கள் திரண்டு போராட்டம் இடம்பெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஜல்லிக் கட்டுக்கான தடையை நீக்குமாறு தமது முழக்கத்தை வெளிப்படுத்தினர். வரலாறு காணாத இந்தப் போராட்டத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பிதமடைந்தது. ஜல்லிகட்டு விடயத்தில் தமிழக அரசு மற்றும் இந்திய அரசு என்பன தமது முடிவுகளை மாற்றிக் கொள்ளும் அளவில் தமிழகமே திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.