Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இழுபறி ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி 4 மணி நேரங்களுக்கு முன்னர் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை புதன்கிழமை அன்று ஏற்றுக்கொண்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஒரு பெரிய நடவடிக்கை என்று மத்திய அரசு கூறுகிறது. குழுவின் பரி…

  2. ஹவுதி கிளர்ச்சியாளர்களால்... கடந்தப்பட்ட, இந்திய மாலுமிகள் விடுவிக்கப் பட்டனர்! ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடந்தப்பட்ட 7 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட 14 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் கொடி பொருத்திய சரக்கு கப்பலை கைப்பற்றினர். குறித்த கப்பலில் இருந்த 7 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதனை ஓமன் நாட்டு வெளியுறவு அமைச்சர் அல்புசைதி உறுதிப்படுத்தினார். தற்போது குறித்த ஏழு இந்திய மாலுமிகள் உள்ளிட்ட 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார். https://athav…

  3. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, அனில் அம்பானி குழுமத்தின் சில நிறுவனங்கள் திவால்நிலை செயல்முறையை எதிர்கொள்கின்றன கட்டுரை தகவல் தினேஷ் உப்ரேதி பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு காலத்தில் ஒரு டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான வணிக சாம்ராஜ்யத்தின் உரிமையாளராக இருந்த அனில் அம்பானி இன்று பல்வேறு கவலைகளை எதிர்கொண்டிருக்கிறார். அவரது குழும நிறுவனங்கள் அமலாக்க இயக்குநரகத்தால் விசாரிக்கப்படுகிறது. 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, மிகப் பெரிய தொகை தொடர்பான விசாரணை மும்முரப்படுத்தப்பட்டுள்ளது. அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 5) அன்று டெல்லியில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தின் (ED) தலைமையகத்துக்க…

  4. மே.10 வரை விமான நிலையங்கள் மூடல்; 200 விமான சேவை ரத்து இந்திய ராணுவ முப்படைகளின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் 200 விமானங்களின் சேவை வரும் 10-ம் திகதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தரும்விதமாக புதன்கிழமை (07) அதிகாலை, இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த இந்திய ராணுவம், மொத்தம் 9 தீவிரவாதிகளின் தளங்களை தாக்கி அழித்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே மேலும் பதற்றமான…

  5. ராஜஸ்தானில் 150 அடி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவன்; வீணான 56 மணி நேர மீட்பு போராட்டம்! ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் (Dausa) 150 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கி 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 56 மணி நேரம் அல்லது இரண்டு நாட்களுக்கும் மேலான அதிகாரிகளின் தொடர்ச்சியான மீட்பு பணிகளின் பின்னர், கிணற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட ஆர்யன் என்ற சிறுவன் மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். கடந்த திங்கள்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் கலிகாட் கிராமத்தில் வயலில் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யன் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார். மீட்புப் பணி ஒரு மண…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ரஜ்னீஷ் குமார் பிபிசி தமிழ் 44 நிமிடங்களுக்கு முன்னர் சுமார் 1,200 தீவுகளை உள்ளடக்கிய மிகச்சிறிய நாடு தான் மாலத்தீவு. உலக அளவில் பூகோள ரீதியாக மிகவும் சிதறுண்ட நாடாக மாலத்தீவு உள்ளது. வெறும் 5.21 லட்சம் மக்கள் தொகையே கொண்ட மாலத்தீவில், ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்குச் செல்ல படகுப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். 1965ஆம் ஆண்டு மாலத்தீவு பிரிட்டனிடமிருந்து முழுமையாக சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அடைந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மாலத்தீவு அரசியலமைப்பு ரீதியான இஸ்லாமியக் குடியரசாக மாறியது. சுதந்திரம் பெற்றதிலிருந்து, மாலத்தீவின் அரசியலிலும் மக்களின் வாழ்க்கையிலும் இஸ்லாம் முக்கிய பங்கு வகித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு மாலத்தீவில் இஸ்லாம்…

  7. கடலில் கூடுகிறது இந்திய கடற்படைத் தளபதிகள் மாநாடு Published By: RAJEEBAN 06 MAR, 2023 | 10:51 AM இந்திய கடற்படைத் தளபதிகளின் மாநாடு, நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் இன்று தொடங்குகிறது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ''2023-ம் ஆண்டுக்கான கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் முதல் கட்டம் இன்று தொடங்குகிறது. கடற்படைத் தளபதிகள் மட்டத்தில் ராணுவ-பாதுகாப்பு உத்தி போன்ற விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவும், அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவும் இந்த மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் புதுமையாக, கமாண்டர்கள் மாநாட…

  8. உலகின் உயரமான ரயில் பாலம் ஜம்மு காஷ்மீரில் திறப்பு By Vishnu 19 Aug, 2022 | 08:58 PM உலகின் மிக உயரமானதாக கருதப்படும் செனாப் ரயில் பாலம் கடந்த 13 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது. ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி என்ற இடத்துக்கு இடையே செனாப் ஆற்றின் குறுக்கே 1,178 அடி உயரத்தில் குறித்த ரயில் பால கட்டுமான பணி கடந்த 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 4,314 அடி. கடந்த 2017 ஆம் ஆண்டு அடித்தளம் அமைக்கும் பணி நிறைவடைந்து வளைவுப் பகுதி கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது. இரும்பு மற்றும் கொங்கிரீட் பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது. இதன்…

  9. குஜராத் கலவர வழக்கில் தண்டனை பெற்றவர் மகள் பாஜக வேட்பாளராக போட்டி கட்டுரை தகவல் எழுதியவர்,ரஜ்னீஷ் குமார் பதவி,பிபிசி செய்தியாளர் 36 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பாயல் குக்ரானி 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தின் போது பாயல் குக்ரானிக்கு எட்டு வயது. 2002 கலவரத்தில் பங்கு வகித்ததற்காக பாயலின் தந்தை மனோஜ் குக்ரானிக்கு நீதிமன்றம் 2012இல் ஆயுள் தண்டனை விதித்தது. 2002 பிப்ரவரி 28 ஆம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரோதா பாட்டியா என்ற முஸ்லிம் குடியிருப்பு பகுதியில் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலையின் குற்றவாளிகளில் மனோஜ் குக…

  10. உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்கள்! உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (28) ஏற்பட்ட பனிச்சரிவில் குறைந்தது 57 பேர் பனியின் கீழ் சிக்கிக்கொண்டனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பனிச்சரிவு இடையூறாக உள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான சாலையும் மூடப்பட்டுள்ளது. சாமோலியின் மானா கிராமத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிக்கியவர்கள் கட்டிட தொழிலாளர்கள் ஆவர். மீட்பு பணிகளில் இந்தோ திபெத்திய எல்லைக் பொலிஸாரும், இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், மாநில பேரிடர் மீட்புப் படையும், தேசிய பேரிடர் மீட்பு படையும் சம்பவ இடத்திற்குச் செல்லவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் 57 பேர் பனியின் கீழ் சிக்கியிருப்பதை சாமோலி அனர்த்…

  11. நேஷனல் ஹெரால்ட் வழக்கு; சோனியா, ராகுல் காந்தி மீது 142 கோடி இந்திய ரூபாவை பெற்றதாக பாரிய குற்றச்சாட்டு! நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் குற்ற வருமானமாக 142 கோடி இந்திய ரூபாவை பெற்றதாக அமுலாக்க இயக்குநரகம் (ED) இன்று டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டுமா என்பது குறித்த முதற்கட்ட சமர்ப்பிப்புகளின் போது, அமுலாக்கத்துறை சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு இந்த அறிக்கையை வெளியிட்டார். 2014 ஜூன் 26 அன்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஒரு தனிப்பட்ட முறைப்பாட்டை பதிவு செய்ததைத் தொடர்ந்து, இது தொடர்பான ந…

  12. 16 FEB, 2025 | 07:20 AM புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் சனிக்கிழமை (பிப்.15) இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தலைநகர் டெல்லியில் உள்ள புகையிரத நிலையத்தில் ரயிலில் பயணிக்க வேண்டி திரண்ட காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் புதுடெல்லி புகையிரத நிலையத்தின் நடைமேடை 13 மற்றும் 14-ல் நடந்தது. உயிரிழந்தந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதை டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி உறுதி செய்துள்ளார். பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜுக்குச…

  13. ரா உளவு அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்! 28 Jun 2025, 8:54 PM ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் ரா எனப்படும் உளவு அமைப்பின் தலைவராக பதவி வகித்து வரும் ரவி சின்ஹா வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் புதிய தலைவரை நியமிப்பதற்கு ஆலோசித்து வந்த மத்திய அரசு பராக் ஜெயினை புதிய தலைவராக அறிவித்துள்ளது. ஜெயின் 1989 ஆம் ஆண்டு பஞ்சாப் கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். தற்போது விமான ஆராய்ச்சி மையத்தின் (ARC) தலைவராக உள்ளார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத மறைவிடங்களில் துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களை எளிதாக்கும் உளவு தகவல்களை வழங்கியதன் மூலம், ஆபரேஷன் சிந்தூரில் ARC முக்கிய பங்கு வகித்ததாக அறியப்படுகிறது. அந்தவகைய…

    • 1 reply
    • 147 views
  14. குடியரசு தலைவர் தேர்தல் ஹைலைட்ஸ்: பிபிஇ ஆடையுடன் ஓபிஎஸ், நிர்மலா - தனி விமானத்தில் வந்த உதயநிதி - சர்ச்சையான சுயேச்சை எம்எல்ஏ ஓட்டு - ஹைலைட்ஸ் 43 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பிபிசி கவச ஆணையுடன் வாக்குரிமை செலுத்தும் ஓ.பன்னீர்செல்வம் (இடது) இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு திங்கட்கிழமை (ஜூலை 18) மாலையில் நிறைவடைந்தது. இந்த தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்ற வளாகங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான ஓட்டுகள் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு, ஜூலை 21ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். அன்றே முடிவகள் அற…

  15. டெல்லியில்... பட்டாசுகளை வெடிப்பதற்கு தடை! டெல்லியில் ஜனவரி முதலாம் திகதிவரை எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்கக் கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டாசுகளை வெடிப்பதினால் ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக கொரோனா நோயாளிகள் கடுமையான மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. எனவே மக்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் நேற்று முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வந்துள்ளது. மேலும் பட்டாசுகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1241802

  16. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குள் லாங்கேட் எம்எல்ஏ குர்ஷித் அகமது சேக், சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று பதாகை காட்டியதால் வியாழக்கிழமை பேரவையில் பரபரப்பும் கைகலப்பும் ஏற்பட்டது. குர்ஷித் பாராமுல்லா மக்களவை உறுப்பினரும், சிறையில் இருக்கும் பொறியாளர் ரஷித்தின் தம்பியுமாவார். அவாமி இட்டேஹக் கட்சியைச் சேர்ந்த குர்ஷித் காட்டிய பதாகையில்,‘சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏவை மீட்டெடுக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான சுனில் சர்மா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதனைப் பொருட்படுத்தாத குர்ஷித் பேரவையின் மையப்பகுதிக்குள் வந்தார். சபாநாயகரும்…

  17. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஈ - பைக்: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சந்தையின் சவால்களும் சிக்கல்களும் க. சுபகுணம் பிபிசி தமிழ் 23 அக்டோபர் 2022, 02:50 GMT பட மூலாதாரம்,OLA ELECTRIC/TWITTER இந்தியாவின் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தைக்குள் ஓலா நிறுவனம் கடந்த ஆண்டு நுழைந்தது. தற்போது, அக்டோபர் 22ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இருசக்கர வாகன சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா? ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் ஓலா ஸ்கூட்டரை, 2021ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதியன்று பெங்களூருவில் டெஸ்ட் டிரைவ் செய்த காணொளி வெளியானது. அதைத் தொடர்ந…

  18. கோதுமை ஏற்றுமதி மீதான... தடையை நீக்க, இந்தியாவிடம் வேண்டுகோள்! கோதுமையின் ஏற்றுமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியாவிடம் சர்வதேச நாணய நிதியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச உணவுப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா பங்காற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளது. 135 கோடி மக்களுக்கு உணவளிக்க வேண்டி இந்தியா எடுத்த இந்த முடிவை பாராட்டுவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ஏற்றுமதி தடையை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். https://athavannews.com/2022/1283727

  19. மணிப்பூரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 6 பேரின் உடல்களை கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முதல்வர், எம்எல்ஏக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். போராட்டக்காரர்கள், மாநில முதல்வர் பிரேன் சிங்கின் மருமகன் உட்பட ஆறு எம்எல்ஏக்களின் மூன்று பேரின் வீடுகளில் சூறையாடினர், சொத்துக்களை தீ வைத்து சேதப்படுத்தினர். இம்பால் நகரின் பல பகுதிகளில் போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்ததாக போலீஸார் தெரிவித்தனர். போரட்டத்தைத் தடுக்கும் விதமாக ஐந்து மாவட்டங்களில் அரசு காலவரையற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. சில இடங்களில் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைமைச் செயலர் வினீத் ஜோஷ…

  20. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் பிழைப்புக்காக குடும்பத்துடன் இடம்பெயர்ந்து, புதுச்சேரியின் கிராமப்புற பகுதியான கோர்க்காட்டில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். கரும்பு வெட்டும் வேலைக்காக வருடத்தின் பெரும்பாலான நாள்கள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தங்கிவிடும் இவர்களுக்கு குழந்தைகள் என்பது எப்போதும் கூடுதல் சுமை. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவர் தனது வாத்துப் பண்ணையில் சிறுமிகளை கொத்தடிமைகளாக வைத்திருக்கிறார் என்று புதுச்சேரி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு ரகசிய தகவல் சென்றது. அதனடிப்படையில் அங்கு சென்று ஆய்வு நடத்திய குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் 2020 அக்டோபர் 21-ம் தேதி இரண்டு சிறுமிகளை மீட்டன…

  21. இந்தியாவின் ஏற்றுமதி... 417.8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு! இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மார்ச் மாதத்துடன், 417.8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இது குறித்து பேசிய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய பொருளாதாரம் பல சாதனைகளை முறியடிக்கும் வகையில் வளரும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். அதேநேரம் இந்தியாவின் ஏற்றுமதி வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமானது எனவும், அவர் கூறியுள்ளார். இதேவேளை தற்போது எட்டப்பட்டுள்ள இந்தச் சாதனை முந்தைய ஆண்டை விட 14.53 விழுக்காடு அதிகமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274697

  22. நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவத்தினர் மீது காவல்துறை குற்றப்பத்திரிகை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிசம்பர் 2021இல் இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பலருக்கும் ஒன்றாக இறுதிச்சடங்கு நடந்தது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு தவறான ராணுவ நடவடிக்கையில் குடிமக்கள் கொல்லப்பட்ட நிகழ்வு தொடர்பாக ராணுவத்தினர் 30 பேர் மீது நாகலாந்து காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு மேஜரும் அடக்கம். மோன் மாவட்டத்தில் உள்ள திஜித் காவல் நிலையத…

  23. உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்து! உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” உக்ரைனில் போர் பதற்றம் நிலவுவதால், இங்கிருக்கும் இந்தியர்கள், குறிப்பாக அத்தியாவசிய தேவைகளுக்கு தங்கியிருக்கும் மாணவர்கள் உள்ளிட்டோர் உடனடியாக நாடு திரும்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும் பதற்றம் தனியும் வரை உக்ரைனுக்கு அத்தியாவசிய பயணத்தை தவிர்க்குமாறு இந்தியர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்’ எனத்…

  24. அமெரிக்க துணை ஜனாதிபதியின் குழந்தைகளுக்கு மயில் இறகுகளைப் பரிசளித்த பிரதமர் மோடி! அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் (JD Vance ) 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு வருகை தந்தார். இதன்போது அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸுக்கு மத்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இச் சந்திப்பின்போது ஜே.டி.வான்ஸ் அவரது மனைவியான இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகள் இவான், விவேக், மிராபெல் ஆகியோரும் உடன் இருந்தனர். இதன்போது பிரதமர் மோடியும், ஜே.டி. வான்சும் கலந்துரையாடிக்கொண்டிருந்த வேளை ஜே.டி.வான்சின் குழந்தைகள் பிரதமர் மோடி அருகே சென்…

  25. Published By: Digital Desk 3 12 Oct, 2025 | 10:11 AM பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பல பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் பதிவாகியுள்ளன. எல்லையில் உள்ள பாகிஸ்தான் சோதனைச்சாவடிகளையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இந்த பயங்கரவாத அமைப்பை அழிப்பதாக கூறி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பாகிஸ்தான் விமானப்படை கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.