அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
பிரித்தானியாவில் இருந்து இந்தியா வருவோரை... தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்! பிரித்தானியாவில் இருந்து இந்தியா வரும் அந்நாட்டு குடிமக்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளது. புதிய கட்டுப்பாடுகளை இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த அனைத்து மாநில மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து இந்தியா வருவோர் தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்தியா புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா சோதனை செய்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவிற்கு வருகை தந்தவுடன் ஒருமுறையும் எட்டாவது நாளில் ஒரு தடவையும் பி.சி.ஆர் பரிசோதனையை …
-
- 0 replies
- 121 views
-
-
அதிகாலையில் நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்! நேபாளத்தில் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், இமயமலைப் பகுதி முழுவதும் அதிர்வு உணரப்பட்டது. பாட்னா, முசாபர்பூர் மற்றும் பீகாரின் அருகிலுள்ள பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தின் சிந்துபால்சோக் மாவட்டத்தின் பைரப் குண்டாவைச் சுற்றி அதிகாலை 2.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புவி அறிவியலுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தை அளந்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவின் நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் 5.5 என அதன் அளவை மதிப்பிட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வலுவானதாகக் கருதப்படுகிறது, குறிப்பிடத்தக்க ச…
-
- 0 replies
- 120 views
-
-
உத்தர பிரதேசத்தில் 2 வயது பெண் புலியை அடித்தே கொன்ற கிராம மக்கள் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உத்தர பிரதேசத்தின் தூத்வா புலிகள் காப்பகத்தில் இரண்டு வயது பெண் புலி ஒன்று கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், சையத் மோசிஸ் இமாம் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தூத்வா புலிகள் காப்பகத்தில் பெண் புலி ஒன்றை கிராம மக்கள் அடித்துக் கொன்றுள்ளனர். அந்தப் பெண் புலி தாக்கியதால் கிராம மக்கள் சிலர் காயமடைந்துள்ளனர். அதே புலிகள் காப்பகத்தில் உள்ள மலனி என்ற பகுதியில் மற்றொரு புலி இறந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தூத்வா புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநரான டி. ரங்கராஜு இந்த இரண்டு விவகாரம் தொடர்பாகவும் வழக்குப் பத…
-
- 0 replies
- 120 views
- 1 follower
-
-
ஒளரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாக்கக் கோரி ஐ.நாவுக்குக் கடிதம்! மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, அங்கு சில நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வழித்தோன்றல் என்று கூறும் யாகூப் ஹபீபுதீன் டூசி, ஷம்பாஜி நகரில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாப்பதை உறுதிசெய்யக் கோரி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு கடிதம் எழுதியுள்ளார். முகலாயப் பேரரசரின் கல்லறை அமைந்துள்ள வக்ஃப் சொத்தின் பராமரிப்பாளர் எ…
-
- 0 replies
- 120 views
-
-
திறந்தவெளியில் விருது வழங்கும் விழா- வெயிலின் தாக்கத்தால் 11 பேர் சுருண்டு விழுந்து பலி மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் நவி மும்பையில் பூஷண் விருது வழங்கு விழா நேற்று நடைபெற்றது. திறந்த வெளியில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் தத்தாத்ரேயே நாராயணுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா விருது வழங்கினார். விழாவில் அம்மாநில முதல்வர் ஷிண்டே மற்றும் துணைத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் கலந்துக் கொண்டனர். கோடைக்காலம் தொடங்கிய நிலையில், நேற்று பகல் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது. நவி மும்பையில் உள்ள ஒரு பெரிய மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்களின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக…
-
- 0 replies
- 120 views
-
-
இந்தியாவில் இயக்கப்படும் முதல் ஹைட்ரஜன் ரயில்! இந்திய ரயில்வே திணைக்களம் ,அதன் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தும் வகையில், ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயிலை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் ஹரியானாவின் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கத் தொடங்கும் எனவும், இதன் மூலம், கார்பன் வெளியேற்றத்தை குறைத்து, சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தில் இந்தியா முன்னேற்றம் அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் ரயில்கள் இந்தியாவின் பசுமை எரிசக்தி துறையில் ஒரு முக்கிய கட்டமாக விளங்குகிறது. நிலையான போக்குவரத்து, கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களைப் பயன…
-
- 0 replies
- 120 views
-
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை – சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா? மக்கள்தொகை கணக்கெடுப்பானது தாமதப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் மத்திய அரசு அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். பீகார் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஏற்கெனவே சாதிவாரி கணக்கீடு நடத்தப்பட்டுள்ளன. பீகார் மாநில புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்ட நிலையில், கர்நாடக மாநில புள்ளி விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் தெலுங்கானா, தமிழ்நாடு, மேற்குவங்கம், மற்றும் கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சாதிவ…
-
- 0 replies
- 119 views
-
-
இலங்கை சிறையில் 97 இந்திய மீனவர்கள் இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்! இலங்கையின் காவலில் தற்போது மொத்தம் 97 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர், மூன்று பேர் விசாரணைக்காக காத்திருக்கிறார்கள், மேலும் 11 பேர் வியாழக்கிழமை (27) கைது செய்யப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மாநிலங்களவையில் தெரிவித்தார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜெய்சங்கர், இதுபோன்ற சூழ்நிலை மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மீன்பிடி படகுகளில் டிரான்ஸ்பாண்டர்களை நிறுவுவது உள்ளிட்ட நீண்டகால வழிகளை மத்திய அரசு கண்டுபிடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சினையில் மனிதாபிமா…
-
- 0 replies
- 119 views
-
-
பிகாரில் மகனின் சடலத்தைப் பெற மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்டதால் பிச்சை எடுத்த தம்பதி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI பிகார் மாநிலத்தில் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தங்களது மகனின் சடலத்தைப் பெற, மருத்துவமனை ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க, வயதான தம்பதி பிச்சை எடுக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி, கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் வட மாநிலங்களில் ஒன்றான பிகாரில், வயதான தம்பதியினர் பிச்சை எடுக்கும் காணொளி ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியது. பிகாரின் சமஸ்திபுர் மாநகரில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், மருத்துவமனையில் உள்ள தங்களது மகனின் சடலத்தைப் பெறுவதற்காக, இறந்தவரின் பெற்றோர், வீடு வீ…
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
அகமதாபாத் விமான விபத்து: மன்னிப்புக் கோரினார் டாடா குழுமத் தலைவர். அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் ‘மன்னிப்பு’ கோரியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். விமானம் விழுந்ததில் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலரும் உயிரிழந்தனர். ,இதனையடுத்து மொத்த உயிரிழப்பு 270ஐ தாண்டியது. இந்நிலையில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் ‘மன்னிப்பு’ கோரியுள்…
-
- 0 replies
- 118 views
-
-
காந்தியின் தலித் வளர்ப்பு மகளின் கதை: ஆசிரமத்தில் அவர் குடும்பம் தங்குவதை கஸ்தூரிபா எதிர்த்த வரலாறு பட மூலாதாரம்,Getty Images/HITESH DAFDA படக்குறிப்பு,கடந்த 1915ஆம் ஆண்டு ஆமதாபாத்தில் உள்ள கோச்ரப் ஆசிரமத்திற்கு ஒரு தலித் குடும்பம் வந்தபோது, ஆசிரமவாசிகள் பலர் அவர்களை எதிர்த்தனர். உள்ளே உள்ள படத்தில் காந்தியும் அவர் தத்தெடுத்த தலித் மகளான லட்சுமியும் காணப்படுகின்றனர் கட்டுரை தகவல் ஜெய் சுக்லா பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் காந்திக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு மகளைத் தத்தெடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த மகள் யார்? அவர் கோச்ரப் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டவுடன், கஸ்தூரிபா உட்பட ஆசிரமவாசிகள் அவர…
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
நீர்மூழ்கிக் கப்பல் குறித்த இரகசியங்களை பகிர்ந்த ஐவர் கைது! இந்திய நீர்மூழ்கிக் கப்பல் குறித்து இரகசியங்களை வெளியிட்டமை தொடர்பாக மும்பையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் லெப்டினன்ட் கர்னலுக்கு இணையான கமாண்டர் பதவியில் இருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கைலோ ரக நீர்மூழ்கி கப்பலை இந்தியா கொள்வனவு செய்திருந்தது. இது குறித்த இரகசிய விவகாரங்கள் கசிந்துள்ளதாக முறைப்பாடு எழுந்த நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்படி டெல்லி, மும்பை, ஐதராபாத், விசாகப்பட்டிணம் உள்ளிட்ட 19 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://atha…
-
- 0 replies
- 118 views
-
-
அதானி-ஹிண்டன்பெர்க் அறிக்கை: அமித் ஷா பேட்டி - "மறைக்க ஒன்றுமில்லை, பயப்பட எதுவுமில்லை" 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த நேர்காணலில் எதிர்க்கட்சிகளைக் குறிவைத்துப் பேசியுள்ளார். ராகுல் காந்தியின் சமீபத்திய கருத்துகள், அதானி-ஹிண்டன்பர்க் சர்ச்சை, 2024 தேர்தல் போன்ற பல விஷயங்களில் அமித் ஷா தனது கருத்தைத் தெரிவித்தார். மத்திய அரசாங்க அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, அமித் ஷா, "எதிர்க்கட்சிகள் ஏன்…
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்கள் வாழ்நாளில் 3.4 வருடங்களை இழக்கும் அபாயம்- ஆய்வில் தகவல். இந்தியாவில் காற்று மாசு தொடர்ந்து நீடித்து வந்தால் மக்கள் வாழும் தங்கள் வாழ்நாளில் 3.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் என அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்லைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2021-ம் ஆண்டின் காற்று மாசுப்பாட்டை காட்டிலும் 2022-ம் ஆண்டில் காற்று மாசுபாடு 19.3 சதவீதம் குறைந்துள்ளது. காற்று மாசுபாடு இதேபோன்று நிலைத்திருந்தால் இந்தியாவில் வாழும் மக்கள் சராசரியாக 3.4 வருட வாழ்நாளை இழக்க நேரிடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் அதிக மக்கள் தொகையின் காரணமாக காற்று மாசுபாட்டிற்கான சுமையை இந்தியா எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 118 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES நாடாளுமன்ற பாதுகாப்புத்துறை நிலைக்குழு, மானியங்களுக்கான கோரிக்கை மீதான அறிக்கையைச் சமர்பித்துள்ளது. அதில் முப்படைகளின் முன்னாள் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த விபத்து 'மனிதப் பிழை (விமானத்தை இயக்கியவர்களின் பிழை) காரணமாக ஏற்பட்டது' என்று பாதுகாப்புத்துறை நிலைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் – யார் இவர்? பிபின் ராவத் மரணம்: இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தகவல் பிபின் ராவத்: இந்தியாவில் வான் விபத்தில் உயிரிழந்த முக்கிய தலைவர்கள் …
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
ரஷ்ய எண்ணெய்க் கொள்வனவு: இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது ட்ரம்பின் 500% வரி! ரஷ்யாவிலிருந்து எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி பொருட்களை வாங்கும் நாடுகள் மீதான வரிகளை குறைந்தது 500 சதவீதமாக உயர்த்த அச்சுறுத்தும் ஒரு சட்டமூலத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பச்சைக்கொடி காட்டியதாக கூறப்படுகிறது. இந்த சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டால், அமெரிக்காவின் தடைகளை மீறி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு வரிகளால் அழுத்தம் கொடுக்கப்படும். செனட் சபையில் ட்ரம்பின் நெருங்கிய காங்கிரஸ் நண்பர்களில் ஒருவரான அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் இந்த விடயத்தை உறுதிபடுத்தினார். ரஷ்யாவின் உக்ரேன் படையெடுப்புடன் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவத…
-
- 0 replies
- 117 views
-
-
பயங்கரவாதத்துக்கு சீனா- பாகிஸ்தான் ஆதரவு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு! பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தானும், சீனாவும் ஆதரவு அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். பயங்கரவாதத்துக்கு கிடைக்கும் நிதியை தடுப்பது தொடர்பான கருத்தரங்கை டெல்லியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு நிதி ரீதியிலும், சித்தாந்த ரீதியிலும் பாகிஸ்தானும், சீனாவும் ஆதரவு அளிப்பதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். அத்துடன், பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைக்காக செலவிடப்படும் நிதியை, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளிடம் இருந்து பெற வழிமுறை உருவாக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். …
-
- 0 replies
- 117 views
-
-
இராணுவ தேவைகளுக்காக... இந்தியா, ரஷ்யாவை சேர்ந்திருக்கக்கூடாது – அமெரிக்கா இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியா, ரஷ்யாவை சார்த்திருக்கக்கூடாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க இராணுவ அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி மேலும் தெரிவிக்கையில், ”இந்தியா உள்ளிட்ட எந்த நாடுகளாக இருந்தாலும், தங்கள் இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய ரஷ்யாவை சார்த்திருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவை பிற நாடுகள் சார்ந்து இருப்பதை நாங்கள் என்றும் ஊக்கப்படுத்த மாட்டோம். அதே நேரத்தில் இந்தியா உடனான எங்கள் உறவுகளை மிகவும் மதிக்கிறோம். இந்த உறவுகளை மேம்படுத்த தேவையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்” எனத் …
-
- 0 replies
- 117 views
-
-
மியன்மாரைச் சேர்ந்த 27 பேரை நாடு கடத்திய இந்திய அரசு! மணிப்பூரில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய மியன்மார் நாட்டைச் சேர்ந்த 27 பேரை இந்திய அரசு நாடு கடத்தியுள்ளது. மணிப்பூரில் சுமார் 2 ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த கலவரம் தொடர்பாக அண்டை நாடான மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. எனவே சட்ட விரோத குடியேறிகளை மாநில அரசு கைது செய்து தடுப்புக்காவல் மையங்களில் சிறை வைத்துள்ளது. இவ்வாறு சிறைவைக்கப்பட்ட 27 பேரின் தண்டனை காலம் நிறைவடைந்துள்ளது. எனவே அவர்கள் 27 பேரும் நேற்று மியன்மாருக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்தோ-மியான்மர் நட்புறவு வாயில் வழியாக அவர்களை இந்திய அதிகாரிகள் மியான்மார் அதிகாரிகளிடம் ஒப்ப…
-
- 0 replies
- 117 views
-
-
இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடன் ரூபாவில் பரிவர்த்தனை மேற்கொள்ள இந்தியா முடிவு! இந்திய ரூபாயின் உலகளாவிய பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியாவின் மத்திய வங்கி புதன்கிழமை (01) முன்மொழிந்தது. இதில் உள்ளூர் வங்கிகள் அண்டை நாடுகளில் உள்ள வணிகங்களுக்கு ரூபாயில் கடன் வழங்க அனுமதிப்பது மற்றும் முக்கிய வர்த்தக பங்காளிகளின் நாணயங்களுக்கு அதிகாரப்பூர்வ அடிப்படை மாற்று விகிதங்களை நிர்ணயிப்பது ஆகியவை அடங்கும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, புதன்கிழமை மத்திய வங்கியின் பணவியல் கொள்கை முடிவோடு இந்த நடவடிக்கைகளை அறிவித்தார். இதில் இந்தியாவின் நாணய விகித நிர்ணய குழு எதிர்பார்த்தபடி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்தது. முன்மொழியப்பட்ட மாற்ற…
-
- 0 replies
- 117 views
-
-
டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; எல்லை பகுதிகளில் பதற்றம்! வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பேராட்டத்தை ஆரம்பித்துள்ள இந்திய விவசாயிகள் குழு, இன்று டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனை முன்னிட்டு பஞ்சாப்-ஹரியானா எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ‘டெல்லிக்கு செல்வோம்’ (டெல்லி சலோ) என்ற போராட்டத்தை பஞ்சாப் – ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு என்ற இடத்தில் இருந்து விவசாயிகள் நவம்பர் 6 தொடங்கினர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்…
-
- 0 replies
- 116 views
-
-
நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரும் கர்நாடக அரசு! தமிழகத்தைத் தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, கர்நாடக அரசு சட்டப்பேரவையில் தீர்மானமொன்றைக் கொண்டுவந்துள்ளது. மாநில அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட இத் தீர்மானத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஒப்புதல் அளித்துள்ளார். இதேவேளை நீட் விலக்கு கோரி மேற்கு வங்க சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு, “தேசிய அளவில் நீட் தேர்வை இரத்து செய்திட வேண்டும்” என்று வலியுறுத்தி கடிதமொன்றை எழுதியிருந்தார். அதேபோல், தேசிய அளவில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்த வேண்டு…
-
- 0 replies
- 116 views
-
-
இந்தியாவும் – சீனாவும் ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்திக்கொள்ளக் கூடாது – வாங் யி இந்தியாவும் – சீனாவும் பரஸ்பரம் உதவி செய்துக்கொள்ள வேண்டும் எனவும், ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்திக்கொள்ளக் கூடாது எனவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்த வாங் யி தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்திக் குறிப்பில், ” சீனாவும், இந்தியாவும் ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இல்லை. இருநாடுகளுக்கு இடையே நிலவும் மாறுபாடுகளை சரியான முறையில் கையாள வேண்டும். இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகள்தானே தவிர போட்டியாளா்கள் அல்ல. இருநாடுகளும் வெற்றிபெற பரஸ்பரம் உதவி செய்துக்கொள்ள …
-
- 0 replies
- 116 views
-
-
அம்பானி வீட்டு கல்யாண செலவு மட்டுமல்ல பரிசுகளும் கோடியில் தான் கிடைத்துள்ளது! ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் தம்பதிக்கு கொடுக்கப்பட்ட திருமண பரிசுகள் தொடர்பான சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. உலகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான அம்பானி, சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். இவர்களது திருமணம் மற்றும் ரிசப்ஷனுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றாலும், முக்கிய பிரபலங்கள் தவறாமல் இடம்பெற்றிருந்தனர். திருமண பரிசாக முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி சார்பாக விலையுயர்ந்த கார், நூறு கோடி ரூபாய் வைரம் மற்றும் முத்துக்கள் அடங்கிய நகைகள் பரிசளிக்கப்பட்டது. அத்தோடு, Palm Jumeir…
-
- 0 replies
- 116 views
-
-
சத்தீஸ்கரில் எஸ்.பி.ஐ. பெயரில் போலி வங்கிக் கிளை நடத்திய கும்பல் - உண்மை வெளிப்பட்டது எப்படி? சத்தீஸ்கரில் உள்ள பன்பராஸ் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி யாதவ் கடந்த வாரம் வரை 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா - சப்போரா கிளை' என்றழைக்கப்பட்ட ஒரு வங்கிக் கிளையில் பணியாற்றி வந்தார். ஆனால், அது உண்மையில் வங்கியே இல்லை என்பதை அவரால் இன்னும் நம்ப முடியவில்லை. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரிகள் சிலர் போலீஸாருடன் அந்த வங்கிக் கிளைக்கு வந்தபோதுதான், ஜோதிக்கு அந்த வங்கியின் நிர்வாகக் குழுவில் இருந்து, வங்கி ஊழியர்கள், தனது பணி நியமனக் கடிதம் என அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 200கி.மீ. தொலைவில் உள்ள சக்தி மாவட்டத்தில் உள்ள சப்போரா கிராமத…
-
- 0 replies
- 116 views
-