உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27032 topics in this forum
-
பெற்றோரை சந்திக்கும் எதிர்பார்ப்புடன் தாய்லாந்து குகைக்குள் காத்திருக்கும் சிறார்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கனவுடன் தாயகத்தை விட்டு வெளியேறிய குடியேறிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 394 views
-
-
ஐஎஸ் தலைவரின் மகன் பலி ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு அல் பக்தாதியின் மகன் சிரியாவின் ஹோம்ஸ் நகரில் கொல்லப்பட்டுள்ளார் என அந்த அமைப்பின் ஊடகமொன்று தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. பக்தாதியின் மகன் ஹ_தைபா அல் பத்ரி ஹோம்ஸில் உள்ள அனல்மின் நிலையத்தில் ரஸ்யர்களுக்கும் நுசாய்ரியாக்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகயின் போது கொல்லப்பட்டுள்ளார் என ஐஎஸ் அமைப்பின் செய்தி பிரிவு தெரிவித்துள்ளது. இளம் சிறுவனொருவன் ஆயுதங்களுடன் காணப்படும் படத்தையும் ஐஎஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது. இதேவேளை பக்தாதி எங்கிருக்கின்றார் என்பது தெரியாதபோதிலும் அவர் உயிருடன் இருப்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது என ஆய்வாளர்கள் தெரி…
-
- 0 replies
- 259 views
-
-
போலி பாஸ்போர்ட்டில் கனடா செல்ல முயன்ற 12 பேர் உட்பட 19 பேர் கைது பகிர்க போலியாக எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து கனடா செல்ல முயன்ற 12 பேரையும் அவர்களை அனுப்பிவைக்க முயன்ற 7 பேரையும் இந்திய குடியேற்றத் துறை அதிகாரிகள் கைதுசெய்து, காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். படத்தின் காப்புரிமைALEX GRIMM/BONGARTS/GETTY IMAGES Image captionகோப்புப்படம் போலி பாஸ்போர்ட்டில் கனடா செல்ல முயன்ற 12 பேரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. கனடாவில் நடக்கவிருக்கும் ஒரு நடனப் போட்டியில் பங்கேற்பதற்காக செல்வதாகக் கூறி விசா பெற்றுள்ளதும் தெரியவந்திருக்கிறது. திங்கட்…
-
- 0 replies
- 406 views
-
-
உலகப்பார்வை: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிபுக்கு எதிராக 3 ஊழல் குற்றச்சாட்டுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். மலேசிய முன்னாள் பிரதமர் நஜிபுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள் படத்தின் காப்புரிமைAFP/ GETTY IMAGES மலேசியாவில் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பல பில்லியன் ட…
-
- 0 replies
- 300 views
-
-
எங்கள் நாட்டின் வான் எல்லைக்குள் வரும் மேகக் கூட்டங்கள் மழை பொழியாமல் இருக்க சதி செய்கின்றன என்று இஸ்ரேல் மீது ஈரான் நாட்டின் பாதுகாப்புத் துறை இயக்குனர் கோலாம் ரேசா ஜலாலி குற்றம்சாட்டியுள்ளார். ஈரான் நாட்டின் பாதுகாப்புத் துறை இயக்குனர் கோலாம் ரேசா ஜலாலி பத்திரிகையாளர் சந்திப்பில் மிகவும் வினோதமான குற்றச்சட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது:- ஈரானில் பருவநிலை மாறிவருவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பருவநிலை மாற்றத்தில் வெளிநாட்டி தலையீடு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. ஈரான் வான் எல்லைக்குள் வரும் மேகக் கூட்டங்கள் மழை பொழியாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வேலையை செய்கின்றன. மேகம் மற்றும் பனி திருட்டு காரணமாக நாம் …
-
- 1 reply
- 531 views
-
-
தாய்லாந்து குகையில் கண்டுபிடிக்கப்பட்ட 13 பேர் வெளியே வருவதில் சிக்கல், கழிவுகளை சேகரித்து மாற்று வழியில் வருவாய் ஈட்டும் மொராக்கோ தொழிலாளர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 564 views
-
-
அரசு முதலீட்டில் பல பில்லியன் டாலர் மாயம்: மலேசிய முன்னாள் பிரதமர் கைது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES மலேசியாவில் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பல பில்லியன் டாலர் பணம் காணாமல் போயுள்ளது தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நீண்ட கார் அணிவகுப்போடு வீட்டிலிருந்…
-
- 0 replies
- 356 views
-
-
வடகொரியா ரகசியமாக தனது அணுஆயுத திட்டத்தை தொடர்கிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வடகொரியாவை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக்க கிம் அரசு உறுதியளித்திருந்த போதிலும் வடகொரியா தனது அணு ஆயுத திட்டத்தை தொடர்வதாக செய்திகள் வெளியானதால் அமைதி பேச்சுவார்த்தைக்காண அந்நாட்டின் நேர்மை மீது சந்தேகம் எழுகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இது தொடர்பான அமெரிக்க…
-
- 0 replies
- 327 views
-
-
பாதிரியாரின் பாலியல் குற்றம் மூடிமறைப்பு: ஆஸ்திரேலிய பேராயருக்கு 12 மாதம் சிறை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 1970களில் பாலியல் தேவைகளுக்கு தேவாலயச் சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்திய பாதிரியார் ஒருவரின் குற்றத்தை மூடி மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட கத்தோலிக்கப் பேராயர் ஒருவருக்கு ஆஸ்திரேலியாவில் 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்ப…
-
- 0 replies
- 342 views
-
-
ஆஃப்கானிஸ்தானில் சீக்கியர்களை குறிவைத்து தற்கொலை குண்டுதாரிகள் நடத்திய தாக்குதல், மாற்று வழிக் கல்வி மூலம் சிறப்புக் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 310 views
-
-
ஜேர்மன் அதிபரை மிரட்டிய உள்துறை அமைச்சர்! அகதிகள் பிரச்சினையில் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் ஒரு நல்ல முடிவு எடுக்காவிட்டால் ராஜினாமா செய்ய இருப்பதாக மிரட்டியுள்ள உள்துறை அமைச்சர் Horst Seehofer, அவருக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அடுத்த மூன்று நாட்களில் எனது இரண்டு பொறுப்புகளையும் ராஜினாமா செய்வேன் என்று Horst Seehofer தெரிவித்தார். அவர் ஃபெட்ரல் அரசில் உள்துறை அமைச்சராகவும் CSU கட்சியின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இன்று மதியம் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பேச்சு வார்த்தை நடத்த இருக்கும் Horst Seehofer, ஒரு நல்ல முடிவு எட்டப்படாவிட்டால் தனது பொறுப்புகளில் தொடர்வதா அல்…
-
- 0 replies
- 698 views
-
-
செய்தித்தாள்களில் இன்று: "இந்தியாவில் 19,569 மொழிகள் பேசப்படுகின்றன" பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி - "இந்தியாவில் 19,569 மொழிகள் பேசப்படுகின்றன" இந்தியாவில் தாய்மொழியாக 19,500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாக கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், அதில் 121 மொழிகளை தவிர மற்ற மொழிகளை பேசுபவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது. 121 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில் 19,569 …
-
- 0 replies
- 412 views
-
-
சுவிஸில் பணப் பதுக்கல் – 108ஆவது இடத்தில் இலங்கை – இந்தியாவுக்கு 73 ஆவது இடம்… சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் இலங்கை 108 ஆவது இடத்திலும், இந்தியா 73-வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை, இந்தியர்கள் உள்பட சர்வதேச நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களின் கரறுப்பு பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்குகிறார்கள். இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கறுப்பு பண பதுக்கலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. எனினும் அதனை மீறியும் கடந்த ஆண்டு, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து அண்மையில் வெளியானது. இதன் மூலம் சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியவர்களி…
-
- 0 replies
- 341 views
-
-
உலகப் பார்வை: ரஷ்யாவில் ஓய்வூதிய வயது உயர்த்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ரஷ்யா: ஓய்வூதிய வயது உயர்த்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் படத்தின் காப்புரிமைTWITTER ரஷ்யாவில் ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை உயர்த்தும் முடிவை எதிர்த்து 30 நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உலகக்கோப்பை கால்பந்து தொடங்கிய நாளன்று வந்த இது குறித்த அறிவிப்பின்படி, ஆண்களுக்கான ஓய்வூதிய வயது 60லிருந்து 65 ஆகவும், பெண்களுக்கு 55லிருந்து 63 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 388 views
-
-
புதுடில்லியில் வீடொன்றிலிருந்து 11 சடலங்கள் மீட்பு இந்திய தலைநகர் புதுடில்லியில் வீடொன்றிற்குள் இருந்து 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் சிறிய வணிகவளாகமொன்றை நடத்திவந்த குடும்பத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் 4பெண்கள் உட்பட 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர் இவர்களின் கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இவர்கள் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் வீட்டிலிருந்த நகைகள் பொருட்கள் எவையு…
-
- 1 reply
- 681 views
-
-
ஹெலிக்கொப்டரை பயன்படுத்தி சிறையிலிருந்து தப்பிய கைதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சிறையொன்றிலிருந்து 25 வருட சிறைத்தண்டனை அனுபவித்த ஆபத்தான குற்றவாளியொருவர் ஹெலிக்கொப்டரை பயன்படுத்தி தப்பிச்சென்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ரெடொய்ன் பைட் என்ற நபரே இவ்வாறு சிறையிலிருந்து ஹெலிக்கொப்டர் மூலம் தப்பிச்சென்றுள்ளார். குறிப்பிட்ட நபர் பாரிய கொள்ளைச்சம்பவமொன்றில் ஈடுபட்டமைக்காக 25 வருடசிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுதங்களுடன் வந்த சிலர் சிறைச்சாலை வாசலில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கைதி ஹெலிக்கொப்டர் மூலம் தப்பிச்சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளன…
-
- 1 reply
- 758 views
-
-
"பிரதமர், முதல்வர் பதவிகளை எத்தனை முறை வகிக்கலாம் என வரையறுக்க வேண்டும்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி - பிரதமர், முதல்வர் பதவிகளை எத்தனை முறை வகிக்கலாம் என்பதை வரையறுக்க கோரிக்கை படத்தின் காப்புரிமைKEVIN FRAYER பிரதமர் மற்றும் மாநில முதல்வர் பதவியை ஒருவர் எத்தனை ம…
-
- 0 replies
- 230 views
-
-
அமெரிக்கா: 200 முறை தோற்கடிக்கப்பட்ட 'கும்பல் கொலை' எதிர்ப்பு மசோதா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகும்பல் கொலைகளுக்கு எதிராக அமெரிக்காவில் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தும் மூன்று செனட்டர்களில் ஒருவரான கமலா ஹாரிஸ். மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முஸ்லிம்களுக்கு எதிராகவும், சாதிய ஆதிக்க நடைமுறைகளை மீறியதாக தலி…
-
- 0 replies
- 519 views
-
-
உலகப் பார்வை: குடியேற்ற கொள்கை: டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். குடியேற்ற கொள்கை: டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான குடியேற்ற கொள்கை…
-
- 0 replies
- 220 views
-
-
டிரம்பின் சர்ச்சை கருத்தால் மேலும் ஓர் அமெரிக்க வெளியுறவு அதிகாரி பதவி விலகல் பகிர்க அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளி நாடுகளை பற்றி அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த கருத்துகளால் விரக்தியடைந்த எஸ்தோனியாவுக்கான அமெரிக்க தூதர் பதவி விலகியுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பற்றி அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துகள்தான், பணியில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற முடிவை எடுக்க செய்துள்ளதாக ஜேம்ஸ்.டி.மெல்வில்லி கூறியுள்ளதாக ஃபாரின் பாலிஸி பத்திரிகை தெரிவித்திருக்கிறது. தூதரின் தனிப்பட்ட ஃபேஸ்புக் பதிவை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. நேட்டோ கூட்டணி…
-
- 0 replies
- 311 views
-
-
சுவிஸ் வங்கிகளுக்கு கறுப்பு பணம் சென்று சேர்வது எப்படி? பகிர்க கறுப்புப் பணம் பற்றிய சர்ச்சைகள் எழும்போது, அதனுடனே சுவிஸ் வங்கி அல்லது சுவிட்சர்லாந்தின் வங்கி என்ற பெயரும் இணைந்து வருவது இயல்பே. சுவிஸ் வங்கியில் இந்திய பணக்காரர்கள் பணம் வைத்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்தாலோ, நமது ஆவல் உச்சத்தை அடைந்துவிடுகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES சுவிஸ் வங்கிக் கணக்குகளில் இருந்த இந்தியர்களின் பணம், மூன்று ஆண்டுகளில் குறைந்திருந்ததாக கூறப்பட்டது. ஆனால் 2017இல் நிலைமை தலைகீழாகிவிட்டது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இருந்த இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரித்து 1.01 பில்லியன…
-
- 2 replies
- 788 views
-
-
நாளிதழ்களில் இன்று: "சிங்கம், புலியை பார்த்தவன் நான்" - அமைச்சர் ஜெயக்குமார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமலர் - "சிங்கம், புலியை பார்த்தவன் நான்": அமைச்சர் ஜெயகுமார் படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிங்கம், புலியை பார்த்துள்ள நான், நண்டுக்கு எல்லாம் பயப்பட ம…
-
- 0 replies
- 322 views
-
-
உலகப் பார்வை: ஐரோப்பாவின் 2வது மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பாளரான டாடா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஒரு ஒப்பந்தத்தில் 2வது மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பாளரான டாடா படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜெர்மனியின் தொழில்துறைப் பெருநிறுவனம் தைஸ்சன்க்ரப்புன், டாடா ஸ்டீல் நிற…
-
- 0 replies
- 231 views
-
-
வரி விதிப்பு: "அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பதிலிருந்து கனடா பின்வாங்காது" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது, அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுப்பதிலிருந்து கனடா "ஒரு போதும் பின்வாங்காது" என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். கனடாவின் எஃகு மற்றும் அலுமினிய தொழிற்சாலைகளுக்கு …
-
- 0 replies
- 260 views
-
-
இராக்: தீவிரவாதக் குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கு இராக் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. படத்தின் காப்புரிமைAFP மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் அடையாளங்களை இராக் அரசு வெளியிடவில்லை. தீவிரவாதிகள் என்று நிரூப…
-
- 0 replies
- 391 views
-