ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
500 நாட்கள் வீதியில் ; போராட்ட வடிவத்தை மாற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 500 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் இறுதி யுத்தம் முடிவடைந்து இராணுவத்தின் கையில் ஒப்படைத்த எமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனவும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி பெற்றுத்தருமாறும் கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை 10 மணிமுதல் முல்லைத்தீவு மாவட்ட்ச்செயலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து முன்னெடுத்தனர். …
-
- 0 replies
- 389 views
-
-
எதிர்பார்த்த தீர்வு கிடைக்காமையால் மக்கள் விரக்தியிலுள்ளனர் - சம்பந்தன் தமது பிரச்சினைகளுக்கு தாம் எதிர்பார்த்த உடனடி நிவாரணங்கள் கிடைக்காமையால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலங்களை ஆயுத படையினர் கைவசப்படுத்தி வைத்துள்ளதனையும் இவற்றினை விடுவிப்பது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மிக மந்த கதியில் இடம்பெறுவதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை வந்துள்ள பெல்ஜியம் - இலங்கை பாராளுமன்ற நட்புறவு குழுவினருக்கும் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற கட்டிட தொகுதியிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் காரியாலய…
-
- 0 replies
- 561 views
-
-
வடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை- விமல் வடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார் இலங்கை பாராளுமன்றத்தில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது எமக்கு தெரிந்த உண்மையான தகவல்களுக்கு அமைய இப்போது வரையில் வடக்கில் 39 இராணுவ முகாம்களை நீக்க நடவடிக்கை எடுக்கபடுகின்றது வடக்கு கிழக்கில் மொத்தமாக 100 இராணுவ முகாம்களை அகற்ற நடவடிக்கைகளை எடுக்கப்படுகின்றது. இராணுவத்தில் இருக்கும் 25 வீத படையணியினரை நீக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நடவடிகைகள் மூலமாக…
-
- 0 replies
- 323 views
-
-
நகர சபைக்கு ஒத்துழைக்காத சந்திதி ஆலய நிர்வாகம்- வல்வட்டித்துறை நகர சபையில் கடும் விமர்சனம்!! வல்வெட்டித்துறை நகரசபையின் நான்காவது அமர்வு தவிசாளர் கோ.கருணாணந்தராசா தலைமையில் நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. அமர்வில் வல்வெட்டிதுறை நகரசபைக்குட்பட்ட அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக சந்நிதி கோயில் நிர்வாகம் நகரசபைக்கு ஒத்தழைப்பு வழங்குவதில்லை. ஆலய தனியார் காணிக்குள் இருக்கும் மலசலகூடங்களை கூடங்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தை அண்டியபகுதியில் உள்ள கழிவகற்றல் மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள பெரும்பாலான சேவைகளை நகரசபையாலே…
-
- 0 replies
- 343 views
-
-
விஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து ; அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் குற்றத் தடுப்பு பிரிவினர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலங்களை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் இதுவரை 25 பேரிடம் வாக்கு மூலம் பதவி செய்யப்பட்டுள்ளது. இதன்படி அமைச்சர் வஜிர அபேவர்த்தன, வட மாகாண முலமைச்சர் விக்னேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், வவுனியா மாவட்ட செயலாளர் மற்றும் சமூர்த்தி அதிகாரிகள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.…
-
- 0 replies
- 264 views
-
-
மன்றை அவமதித்த ஞானசார தேரருக்கு 8ஆம் திகதி நடக்கப்போவது என்ன? ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி நீதவான் முன்னிலையில் நடந்து கொண்ட விதம் மற்றும் நீதி மன்றத்தை அவமதித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வழங்கப்படும் என நீதி மன்றம் இன்று அறிவித்துள்ளது. அப்போது ஹோமாகம நீதவானாக இருந்த ரங்க திஸாநாயக்கவால் ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் தீர்ப்பை எதிர்வரும் மாதம் 8ஆம் திகத…
-
- 0 replies
- 328 views
-
-
என்னை இன்னமும் வேட்பாளராக மகிந்த அறிவிக்கவில்லை- கோத்தபாய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை நியமித்துள்ளார் என சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நிராகரித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமிருந்து வெளியாகியுள்ள அறிவிப்பு என சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கையே கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக என்னை நியமித்துள்ளதாக மகிந்த ராஜபக்சவிடமிருந்து வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை முற்றிலும் தவறானது என கோத்தபாய தெரிவித்துள்ளார். மக்களையும் அரசியலில் தொடர்புபட்டவர்களையும் குழப்புவதற்கான…
-
- 0 replies
- 438 views
-
-
நீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புக் கூடுகள்! மன்னார் நகர நுழைவாயிலிலுள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்பட்ட மனித எச்சங்கள் நீதிமன்றத்தில் ஒரு அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப் பணிகள் ஒரு மாத காலத்தை கடந்து இன்று (புதன்கிழமை) 36ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமையில் அகழ்வுப் பணிகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகின. அகழ்வுப் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அவ்விடங்களிலி…
-
- 0 replies
- 368 views
-
-
விஜயகலா ஆற்றிய உரை தொடர்பாக- மாவட்டச் செயலர்களிடம் – பொலிஸார் விசாரணை!! முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை தொடர்பில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட செயலர்களிடம் நேற்று விசாரணைகள் நடந்துள்ளன. ஒரு மணித்தியாலத்துக்கு அதிக நேரம் விசாரணைகள் நடைபெற்று திட்டமிட்ட குற்றங்களைத்தடுக்கும் பொலிப் பிரிவினர் வாக்குமூலங்கள் பதிவு செய்தனர் என்று கூறப்படுகின்றது. விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்…
-
- 0 replies
- 263 views
-
-
அச்சுவேலியில் வீட்டின் மீது தாக்குதல் – உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்( படங்கள்) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த இனந்தெரியாதேர் வீட்டின் கதவு, கண்ணாடி உட்பட வீட்டில் இருந்த ஏனைய பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி வீட்டின் உரிமையாளருக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் அச்சுவேலி பத்தமேணியிலுள்ள வீடொன்றில் நேற்று இரவு 10.30 இற்கும் 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடைபெற்றிருக்கின்றன. மோட்டார் சைக்கிளில் கம்பிகள் பொல்லுகள் …
-
- 0 replies
- 588 views
-
-
வடக்கு அமைச்சர் சபையை பரிந்துரைக்கும் அதிகாரம் இல்லை என விக்னேஸ்வரன் கடிதம் வடக்கு மாகாண அமைச்சர் சபையைப் பரிந்துரைப்பதற்குத் தனக்கு அதிகாரமில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ‘நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக அதிகாரம் பறிக்கப்படவில்லை. அந்த அதிகாரம் முதலமைச்சரிடமே தொடர்ந்து இருக்கின்றது’ என்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், முதலமைச்சருக்கு பதில் அனுப்பியுள்ளார். அதன் பிரதியை வடக்கு ஆளுநருக்கும் அனுப்பியுள்ளார். வடக்கு மாகாணசபையின்…
-
- 0 replies
- 388 views
-
-
சிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை! சம்பந்தன் சிங்கப்பூர் அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைள் சிலவற்றையேனும் இலங்கை அரசாங்கம் கடைபிடிப்பதில்லை என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவற்றில் ஒன்றையாவது இந்த அரசாங்கம் கடைபிடித்தால் நாடு அபிவிருத்தியடையும் என கூறினார். இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சிங்கபூர் அரசாங்கமானது இனங்களுக்கிடையில் ஒற்றுமை, சமத்துவம், ஊழல், மோசடியற்ற ஆட்சி, சட்டங்களுக்கு ஏற்ப கடுமையாக நடவடிக்கைகள் என்பனவற்றை கடைப்பிடித்து வருகின்…
-
- 4 replies
- 1k views
-
-
மனிதஉரிமை ஆணையகத்தின் தலைவருக்கே அச்சுறுதல்- சிவில் சமூகம் அதிர்ச்சி இலங்கையின் மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் தீபிக உடகமவிற்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதை சிவில் சமூக பிரதிநிதிகள் கண்டித்துள்ளனர். தீபிக உடகமவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை 37 சிவில் சமூக அமைப்புகளும் 170 தனிநபர்களும் கடுமையாக கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் தீபிக உடகமவிற்கு எதிராக கொலை மிரட்டல்,வன்முறைகள் மற்றும் பகைமையை தூண்டும் கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறித்து அதிர்ச்சியடைந்துள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். தீபிக உடகமவிற்கு எதிரான அறிக்கைகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கரிசனையையும், அச்சத்தையும்…
-
- 0 replies
- 399 views
-
-
வடக்கு அமைச்சரவை -மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு- ஆளுநர் விடுத்துள்ள உத்தரவு!! வடக்கு மாகாண அமைச்சரவையினை எனது மறு அறிவித்தல் வரும் வரை கூட்டக் கூடாது என வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உத்தரவு பிறப்பித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் பா.டெனீஸ்வரனும் ஓர் சட்டப்படியான அமைச்சராவார் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையில் அமைச்சர் வாரியக் கூட்ட ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை வழங்குமாறு பிரதம செயலாளர் ஆளுநருக்குக…
-
- 1 reply
- 243 views
-
-
யாழ் கோட்டைக்குள் இருந்த மினி முகாமே உள்ளகரீதியாக மாற்றப்படுகிறது… பாரிய இராணுவ முகாம் அமைக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்ப்பாண கோட்டைக்குள் இருந்த மினி முகாமை தான் இராணுவத்தினர் புதிதாக மாற்றி அமைத்து வருகின்றனர் என தொல்லியல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.கோட்டை பகுதியினை இராணுவத்தினர் முகாம் அமைப்பதற்கு தருமாறு கோரிக்கை விடுத்து இருக்கின்றமை உண்மையே. ஆனால் அதற்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு இதுவரையில் அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. கோட்டை பகுதி யுத்த காலத்தின் போது இராணுவ வசம் இருந்த போதிலும் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆ…
-
- 0 replies
- 285 views
-
-
சாவகச்சேரியைப் பிரிக்க அரசிதழ் அறிவிப்பு தயார் – யாழ். மாவட்டச் செயலர் சாவகச்சேரிப் பிரதேச செயலர் பிரிவை இரண்டாகப் பிரிப்ப தற்கான அரசிதழ் அறிவித்தல் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் நா.வேதநாயகன். அவர் தெரிவித்ததாவது:- 50 கிராம அலுவலர் பிரிவுகளை விட அதிகமான கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட பிரதேச செயலர் பிரிவுகளை இரண்டாகப் பிரிக்கும் யோசனை கொள்கையளவில் நீண்டகாலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 325 views
-
-
சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரும் செப்ரெம்பர் மாதம், புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சுப்ரமணியன் சுவாமி விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டே, மகிந்த ராஜபக்ச புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளார். சுப்ரமணியன் சுவாமி தலைவராக இருக்கும், விராட் ஹிந்துஸ்தான் சங்கம் என்ற அமைப்பின் பொதுக் கூட்டத்தில், செப்ரெம்பர் 12ஆம் நாள் உரையாற்றவுள்ளார். இந்தக் கூட்டத்தில் அனைத்து தேசப் பற்றாளர்களையும் பங்கேற்குமாறு, தனது கீச்சகப் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார் சுப்ரமணியன்…
-
- 0 replies
- 226 views
-
-
நீதியரசர் விக்னேஸ்வரனிடம் சி.ஐ.டி யினர் விசாரணை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்ட பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர், யாழ் பொலிஸ் நிலையத்தில் வைத்து விஜயகலா மகேஸ்வரனின் நிகழ்வில் கலந்துகொண்ட பலரிடம் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக விஜயகலா மகேஸ்வரனின் நிகழ்வில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ…
-
- 5 replies
- 810 views
-
-
நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர் வடக்கில் செயற்படும் ஆவா குழு தீவிரவாத அமைப்பு அல்ல என்று சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், “தெற்கில் வதந்திகள் பரப்பப்படுவது போன்று ஆவா குழு ஒன்றும் தீவிரவாத அமைப்பு அல்ல. அந்தக் குழு யாரையும் கொலை செய்யவில்லை. யாருக்கும் கடுமையான காயங்களையும் ஏற்படுத்தவில்லை. தமிழ்த் திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளின் ஆதிக்கத்தினால், சில இளைஞர்கள் ஆவா குழு என்று இயங்குகின்றனர். அவர்கள் 17, 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அண்மையில் நான் சட்டம் ஒழுங்கு பிர…
-
- 0 replies
- 266 views
-
-
தமிழ் மக்களின் விடயத்தில் மிகப்பெரும் பிழையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழைத் துள்ளதென்பது மறுதலிக்க முடியாத உண்மை. இந்த உண்மையை கூட்டமைப்பினர் பதவி யில் இருக்கும் வரைக்கும் அவர்கள் புரிந்து கொள்ளப்போவதில்லை என்பது நிறுதிட்டமான உண்மை. கூட்டமைப்பு சரியாக நேர்மையாக நடந்தி ருக்குமாயின் தமிழ் மக்கள் இத்துணை தூரம் துன்பப்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளை பட்டவர்த் தனமாக உள்ளும் புறமும் எடுத்துரைக்கும் என்றே தமிழ் மக்கள் நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கை காரணமாக தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்கு தங்களின் வாக்குகளை வழங்கினர். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏதோ வொரு இராஜதந்திரோபாயத்துடன் செயற்பட…
-
- 1 reply
- 905 views
-
-
சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால், வணிகச் சலுகைகளை சிறிலங்கா இழக்கும் ஆபத்து ஏற்படும் என்று, ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் அறிவித்திருந்தார். இதையடுத்து. மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதை தடுத்து, மரணதண்டனைக்கு எதிரான ச…
-
- 4 replies
- 623 views
-
-
யாழ்.கோட்டைக்குள் ஆடிப்பிறப்பு.. (படங்கள் இணைப்பு) யாழ்.கோட்டை பகுதியில் அகழ்வு ஆராய்சியில் ஈடுபட்டு உள்ளவர்கள் ஆடிப்பிறப்பை முன்னிட்டு கோட்டை வைரவருக்கு பொங்கல் பொங்கி வணங்கினார்கள். யாழ்.கோட்டை பகுதியில் அமெரிக்க பல்கலைகழகம் , யாழ்.பல்கலைகழகம், தொல்லியல் திணைக்களம் , மத்திய கலாசார நிலையம் உள்ளிட்டவை இணைந்து அகழ்வு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆடிப்பிறப்பை முன்னிட்டு , கோட்டைக்குள் இருக்கும் வைரவர் ஆலயத்திற்கு முன்பாக பொங்கி , கொழுக்கட்டை , மோதகம் அவித்து கூழ் காய்ச்சி வைரவருக்கு படைத்து வணங்கினார்கள். அதன் போது அகழ்வு பணிக்காக வந்திருக்கும் அமெரிக்க மற…
-
- 2 replies
- 906 views
-
-
வட்டுக்கோட்டைக் காவற்துறையும் சமூகவிரோதிகளின் பின்னணியில்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. சுழிபுரம் – திருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்த டிப்பர் மற்றும் ஜே.சி.பி வாகனங்களும் அவற்றின் இரு சாரதிகளும் அப்பிரதேச மக்களால் மடக்கிக் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைக் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. சடலங்களைப் புதைக்கும் புதைகுழிகள் அமைந்துள்ள இடத்தில் மணல் அகழப்பட்டமையால் எலும்புக் கூடுகள் வெளியே வந்துள்ளன. எலும்புக் கூடுகளின் எச்சங்களுடன் சேர்த்தே மணல் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது எனவும் மக்கள் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 387 views
-
-
ஆஸி.யில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 18 இலங்கையரை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளது. இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச்சென்ற 18 பேரையே அந்நாட்டு அரசாங்கம் தனி விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது. குறித்த 18 பேரும் இன்று காலை கடுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்நனர். அவர்களோடு அவுஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் அடங்கிய 36 பேர் கொண்ட குழுவும் வருகை தந்துள்ளது. குறித்த 18 பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். http://www.virakesari.lk/article/…
-
- 4 replies
- 1.3k views
-
-
மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்துக்கு வீடு கையளிப்பு யாழில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 20 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட குறித்த வீடு மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் குடும்பத்தினரிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டது. வீட்டை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் நண்பர்கள், கனடா, லண்டன், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் யாழ். பரியோவான் கல்ல…
-
- 1 reply
- 638 views
-