ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
ஆளுனரும் முதல்வரும் நீதிமன்ற கட்டளையை மீறினால் அவமதிப்பு வழக்கு வட மாகாண முன்னாள் அமைச்சர் பா. டெனீஸ்வரன் வாசுகி சிவகுமார் தனக்கு அமைச்சுப் பதவியைத் தந்தவர் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானெனக் கூறும் வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன், தவறை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் தன்னுடன் கலந்தாலோசித்தால் தான் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இருப்பதாகச் சொல்கின்றார். வட மாகாண முன்னாள் அமைச்சர் பா. டெனீஸ்வரனின் பதவி நீக்கத்துக்கு மேன்முறையீட…
-
- 1 reply
- 477 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சீனாவால் வழங்கப்பட்ட பணம் தொடர்பிலான தகவல்களை அடுத்த வாரம் வெளியிடுவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. குறித்த தகவல் உள்ளடங்கிய ஆவணங்களை ஆதாரத்துடன் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/15067
-
- 0 replies
- 260 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமாகிய ஆர். சம்பந்தன் அறிவித்துள்ளார். ஜனாதிபதி தனது ரோம் விஜயத்தை முடித்து நாடு திரும்பியவுடன் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். http://thinakkural.lk/article/15071
-
- 0 replies
- 253 views
-
-
இராணுவத்தினருக்கு எதிராக, ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அருகில் வைத்து நேற்றைய தினம் சனிக்கிழமை முற்பகல் குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய குடும்ப பெண்ணும், அவரது ஆறு வயது மகன் மீதுமே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது…
-
- 1 reply
- 400 views
-
-
விஜயகலா, சி.வி இணைந்து புதிய கட்சி? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்டு தமது இராஜாங்க அமைச்சுப் பதவியை இழந்ததோடு, விசாரணைகளை எதிர்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஸ்வரன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து அவர் புதிய கட்சியை ஆரம்பிப்பார் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரனுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை அவர் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின…
-
- 0 replies
- 332 views
-
-
மரண தண்டனையை அமுலாக்குவதிலும் கூட்டு அரசுக்குள் நீடிக்கிறது குழப்பம் போதைப்பொருள் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ள நிலையில் கூட்டு அரசுக்குள் இவ்விடயமும் பூதாகரமாகியுள்ளதாகத் தெரியவருகிறது. அமைச்சரவைக் கூட்டத்தின்போது இலங்கையில் அதிகரித்துவரும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காக அவசர நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்ற அடிப்படையில் மரண தண்டனையை உடனடியாக அமுலாக்குவதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தபோதும் அதில் முற்றுமுழுதான நிலைப்பாடொன்று காணப்படவில்லை என உள்ளக தகவல்கள் க…
-
- 0 replies
- 194 views
-
-
சிரந்திக்கு வந்த அதிர்ஷ்டம்? எம்.சி.நஜிமுதீன் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தரப்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர் குறித்து மீண்டும் கூட்டு எதிர்க்கட்சிக்குள் முரண்பாடு வலுத்து வருவதாக அறிய முடிகிறது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை களமிறக்குவதற்கு அண்மையில் மறைமுக இணக்கம் ஏற்படுத்தப்பட்ட போதும், அதற்கெதிராக சில உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவை களமிறக்குது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்…
-
- 0 replies
- 506 views
-
-
‘நாம் காணாமல்போனோர் அலுவலகத்தை ஏற்கவில்லை’: யாழில் ஆர்ப்பாட்டம் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பிராந்திய மட்டத்திலான பொது அமர்வை கண்டித்து, யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் காணாமல் போனோர் அலுவலகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்து, யாழ். வீரசிங்கம் மண்டப வாயிலில் உறவுகள் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஏழு ஆணையாளர்களின் பங்கேற்புடன் யாழ். மாவட்டத்திற்கான அமர்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, தமது அமைப்பின் செயற்திட்டங்கள் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் …
-
- 4 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவுக்கு நீர்மூழ்கிகளால் அச்சுறுத்தல் – ஒப்புக்கொள்கிறார் பிரதமர் ரணில் எதிர்வரும் காலங்களில், நீர்முழ்கி கப்பல்களின் அச்சுறுத்தல்களை சிறிலங்கா எதிர்கொள்ளும் நிலை உருவாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க அனைத்துலக இராஜதந்திர கற்கை நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே, அவர் அவ்வாறு கூறியுள்ளார். “இந்தோ – பசுபிக் பிராந்தியம் என அமெரிக்கா அறிமுகப்படுத்தியதை சீனா தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் தமது அதிகாரத்தை கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சியாகவே சீனா இதனை கருதுகின்றது. அவ்வாறு எதுவும் இல்லை. எவ்வாறாயினும் சீனா இங்கு பல்வேறு உத்திகளை பயன்படுத்துகின்றது. அ…
-
- 0 replies
- 239 views
-
-
மத்தல விமான நிலையத்துக்காக 325 மில்லியன் டொலரை முதலீடு செய்கிறது இந்தியா மத்தல விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை கொள்வனவு செய்து, சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து- இந்தியாவின் விமான நிலைய அதிகார சபை அதனை கூட்டு முயற்சியாக இயக்கவுள்ளது. சிறிலங்கா அரச அதிகாரிகளை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 18 அனைத்துலக விமான நிலையங்கள், 7 சுங்க விமான நிலையங்கள், 78 உள்நாட்டு விமான நிலையங்கள், 26 இராணுவ ஓடுபாதைகளில் சிவில் போக்குவரத்தை மேற்கொள்ளும் விமான நிலையங்கள் உள்ளிட்ட, 125 விமான நிலையங்களை இந்திய விமான நிலைய அதிகார சபை இயக்கி வருகிறது. தமது நாட்டுக்கு வெளியே, அனைத்துலக விமான நிலையம் ஒன்றை இந்த…
-
- 0 replies
- 293 views
-
-
சீனாவுக்கு துறைமுகம் – இந்தியாவுக்கு விமான நிலையம் – துறைமுகத்தில் காலிக் கடற்படை தளம்… நீர்முழ்கி கப்பல்களின் அச்சுறுத்தல்களை இலங்கை எதிர்வரும் காலங்களில் எதிர்கொள்ளும் நிலை உருவாகும். இவற்றை கருத்தில் கொண்டு கடல் பாதுபாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க , அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க தென் பிராந்திய பாதுகாப்பு கட்டளை தலைமையகம் அங்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர கற்கை நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்து – பசுபிக் வலயம் என அமெரிக்க அறிமுகப்படுத்தி…
-
- 0 replies
- 364 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார்.... கோத்தபாய ராஜபக்ஷ முன்னைய மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் பாதுகாப்பு செயலாளராக நிர்வாக சேவையில் ஈடுபட்டிருந்த கோத்தபாய ராஜபக்ஷ மஹிந்த தரப்பில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என்ற கருத்துக்கள் பலமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அவரும் அதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருவதாகவே தெரிகிறது. இந்நிலையில் கோத்தபாய ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போகின்றாராயின் அவரிடம் தமிழ் பேசும் மக்களின் சார்பில் கேட்கப்படவேண்டிய பல கேள்விகள் உள்ளன. அதன்படி இவ்வாரம் கோத்தபாய ராஜபக் ஷவிடம் பல்வேறு கேள்விகளுக்கான …
-
- 1 reply
- 954 views
-
-
சீனாவின் பிடிக்குள் மட்டக்களப்பும் சிக்கும் அபாயம்!- வியாழேந்திரன் மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் காணியை சீனாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி மற்றும் காணி பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தளவாயில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எங்களது நிலம்சார்ந்த இருப்பு மிகவும் முக்கியமானது. எங்களது நிலங்களை பாதுகாப்பதற்காகவே கடந்த மூன்று தசாப்தங்களாக…
-
- 0 replies
- 374 views
-
-
இலங்கையின் 30க்கும் மேற்பட்ட போதைப் பொருள் கடத்தல்கார்கள், இத்தாலியின் 3 முக்கிய நகரங்களில்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இலங்கையை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட போதைப் பொருள் கடத்தல்கார்கள் இத்தாலியின் மூன்று முக்கிய நகரங்களில் இருப்பதுடன் அவர்கள் அங்கிருந்து இலங்கையில் உள்ள போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இத்தாலியின் மிலானோ, நாபோலி, வெரோனா ஆகிய நகரங்களில் இலங்கையை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர்கள் அதிகளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இத்தாலியில் பெருமளவில் விற்பனையாகும் லத்தீன் அமெரிக்காவின் சிட்டி அட்டை மூலம் இவர்கள், இலங்க…
-
- 0 replies
- 358 views
-
-
பொலிஸ் மா அதிபர், சட்ட அமைச்சர்கள் -வடக்கு முதல்வருடன் சந்திப்பு!! யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட அமைச்சர் குழு, வடக்கு மாகாண முதலமைச்சரை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையில் இன்று சந்தித்தது. வடக்கில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்காக சட்டம் ஒழுங்கு அமைச்சர் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் நளின் பண்டார, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்தனர். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் வந்த…
-
- 2 replies
- 504 views
-
-
10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை விரைவுபடுத்த இந்தியா உறுதி அமைச்சர் மனோவுடனான சந்திப்பில் வெளியுறவுச் செயலர் தெரிவிப்பு (ஆர்.யசி) மலையக தோட்டப் பிரதேசங்களில் இந்தியா முன்னெடுக்கவுள்ள 10ஆயிரம் வீடமைப்புத் திட்டம் தொடர்பில் உறுதியளித்த விடயங்களை துரிதகதியில் செய்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கேசவ் கோக்லே தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார். புதிதாக பதவி ஏற்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு முதல் தடவையாக இலங்கைக்கு வந்துள்ள நிலையில் தமிழ் முற்போக…
-
- 0 replies
- 287 views
-
-
1775.93 ஏக்கர் காணிகள் ராணுவத்தின் வசம் வவுனியாவில் போர் முடிவடைந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் தொடக்கம் நடப்பாண்டின் இன்று வரையான காலப்பகுதியில் 1775.93 ஏக்கர் காணிகள் ராணுவத்தின் வசம் இருப்பதாக வவுனியா மாவட்டசெயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் வவுனியா மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரங்களின் படி போர் முடிவடைந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான காலப்பகுதியில் அரசுக்கு சொந்தமான காணிகளாக 10788.3 ஏக்கரும் தனியாருக்கு சொந்தமாக 135 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 10923.67 ஏக்கர் காணிகள் ராணுவத்தின் வசம் இருந்துள்ளது. பின்னர் 2014ம் ஆண்டு டிசம்பர் 31 ம் திகதி வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் 1781.93 ஏக்கர் காணிகள் ராணுவத்தால் கைய…
-
- 0 replies
- 201 views
-
-
அமரர் அமிர்தலிங்கத்தின் 29 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அ. அமிர்தலிங்கத்தின் 29 ஆவது நினைவு தினம் நேற்று (13) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. தேசிய இன விடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிரை இழந்த கழக போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் வீரமக்கள் தினத்தின் முதல் நாள் நிகழ்வாக இந் நிகழ்வு அனுஷ்டிக…
-
- 0 replies
- 189 views
-
-
வடக்கின் தங்கச் சுரங்கத்தை காலியாக்கியவர்கள் யார்? வடக்கு மாகாணம் திடீரென தங்கத்திற்கு அமெரிக்காவினதும் தென்ஆபிரிக்காவினதும் தங்கச் சுரங்கங்களை விட பிரபலமடைந்துள்ளது. ஏனென்றால் தங்கத்தைத் தேடி வடக்கிற்கு வந்த இரண்டு வெளிநாட்டவர்கள் பாதுகாப்புப் பிரிவினரிடம் அகப்பட்டுக் கொண்டுள்ளார்கள். கடந்த ஜுன் மாதத்தில் மாத்திரம் வடக்கில் தங்கம் தேடி வந்த இருப்பத்தேழு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களிடமிருந்து தங்கத்தைத் தேடுவதற்காக கொண்டு வரப்பட்ட எட்டு ஸ்கானர் இயந்திரங்களும் வடக்கு பாதுகாப்புப் பிர…
-
- 0 replies
- 331 views
-
-
பிளவடையாத நாட்டுக்குள் தீர்வொன்றையே எதிர்பார்க்கின்றோம் - சம்பந்தன் ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக பிளவடையாத நாட்டிற்குள் நாம் தீர்வொன்றினை எதிர்பார்க்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலேவிடம் எடுத்துரைத்துள்ளார். இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளரை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் சம்பந்தன் தெரிவத்துள்ளதாவது, புதிய அரசியல் யாப்பானத…
-
- 1 reply
- 354 views
-
-
தாய்லாந்து தலைமை அமைச்சருடன்- கூட்டமைப்பு சந்திப்பு!! இரண்டு நாள்கள் உத்தியோகப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து தலைமை அமைச்சர் ப்ரயூத் சான் ஓசாவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சந்திப்பை மேற்கொண்டனர். இது தொடர்பில் கூட்டமைப்பு தனது உத்தியோகபூர்வக் கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். சந்திப்பில் எதிர்க்கட்சிச் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். http://newuthayan.com/story/13/தாய்லாந்து-தலைமை-அமைச்சருடன்-கூட்டமைப…
-
- 3 replies
- 518 views
-
-
மனித எலும்புகூடுகள் அகழ்வு பணி 33ஆவது நாளாகவும் தொடர்கிறது மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 33ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில் இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளின் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை தாங்கி வருகின்றார். அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் போசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி மனித புதை குழி அகழ்வு பணிகள் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை குறித்த வளாகத்…
-
- 1 reply
- 486 views
-
-
அமெரிக்கத் தலையீட்டினால் சிறிலங்காவுக்கு அநீதிகள் – நவீன் திசநாயக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலையீட்டினால் சிறிலங்கா பல்வேறு அநீதிகளை எதிர்கொண்டது என்று ஐதேகவின் தேசிய அமைப்பாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார். ஐதேக தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, அமெரிக்கா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகியுள்ள நிலையில், சிறிலங்காவும் விலக வேண்டும் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் விடுத்திருந்த கோரிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டார். “இது ஒரு அர்த்தமற்ற கருத்து. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலையீட்டினால் நாங்கள் பல்வேறு அநீதிகளை எதிர்கொண்டோம். ஆனால் இந்தச் சவால்…
-
- 0 replies
- 162 views
-
-
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை துரிதப்படுத்துமாறு இந்தியாவை கோருவோம் (எம்.மனோசித்ரா) வெளியுறவு செயலருடனான சந்திப்பு குறித்து கூட்டமைப்பு கருத்து தாமதமடைந்து கொண்டிருக்கும் புதிய அரசியலமைப்பு வரைவு செயன்முறைகளைத் துரிதப்படுத்துவதற்கு இந்தியா உதவ வேண்டும் என இலங்கை வரும் இந்திய வெளியுறவு செயலாளரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரவுள்ளதாக அதன் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேசரிக்கு தெரிவித்தார். இரு தினங்கள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே வரவுள்ளார். பதவியேற்றதன் பின்னர் அவரின் முதலாவது இலங்கை விஜயம் இத…
-
- 3 replies
- 459 views
- 1 follower
-
-
முதலமைசர் விக்னேஸ்வரனை கைது செய்ய வலியுறுத்தல் கிளிநொச்சியில் புதிதாக குழந்தைகளை பிரசவித்த தமிழ் தாய்மார்களின் தகவல்களை சிறிலங்கா இராணுவத்தினருக்கு வழங்க வேண்டாம் என வட மாகாண முதலமைச்சர் விடுத்த உத்தரவிற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள சிறிலங்கா’ முன்னாள் இராணுவ தளபதியொருவர், தேசிய பாதுகாப்பிற்காகவே இராணுவத்தினர் இவ்வாறான புலனாய்வுத் தரவுகளை திரட்டி வருவதாகவும் கூறியுள்ளார். வட மாகாண முதலமைச்சர் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ள மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, வட மாகாண முதலமைச்சரை உடனடியாக கைதுசெய்து அவருக்கு எதிராக சட்…
-
- 0 replies
- 426 views
-