ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
மத்தியை ஆத்திரமூட்டினால் கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடுமோ என எமது மாகாண அலுவலர்கள் அஞ்சுகின்றார்கள் வடக்குமாகாணம் சம்பந்தமான பூர்வாங்க தேவைகள் மதிப்பீடு பணிக்கூடம் யாழ் யு.எஸ்.ஹொட்டேலில் 2018ம் ஆண்டு மே மாதம் 25ந் திகதி காலை 09.30 மணிக்கு முதலமைச்சர் உரை 2003ம் ஆண்டில் நடந்தது போல் போருக்குப் பின்னரான வடமாகாணம் சம்பந்தமான தேவைகள் மதிப்பீட்டுக் கோரிக்கை சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் எம்மால் ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதி முன்வைக்கப்பட்டது. அதனைத் தட்டிக்கழித்துக்கொண்டிருந்த வதிவிடப் பிரதிநிதி அவர்கள் தாம் மாற்றலாகிச் செல்ல முன் எமது கோரிக்கையின் ஒரு பகுதியை மட்டும் இய…
-
- 1 reply
- 435 views
-
-
மாகாண சபைகளை இழந்துவிடும் நிலையை கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளது: சாடுகிறார் பஷில் ராஜபக் ஷ (ரொபட் அன்டனி) தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு வழங் கும் ஆதரவை எமக்கு வழங்கியிருந்தால் நாம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கண்டி ருப்போம். வடக்கு, கிழக்கில் யுத்தத்தின் பின்னர் எமது அரசாங்கம் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்தது. ஆனால் கூட்டமைப்பு எமக்கு ஆதரவு வழங்கவில்லை என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன வின் முக்கியஸ்தர் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு பாரிய ஆதரவை வழங்கிவருகிறது. மைத்…
-
- 0 replies
- 276 views
-
-
நீடிக்கிறது அவலம்: 18 பேர் உயிரிழப்பு;1,38,000 க்கும் மேற்பட்டோர் தவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) (படம்: புத்தளம் மேலதிக நிருபர்) சப்ரகமுவ, மேல், வட மேல் மாகாணங் களில் பிற்பகல் வேளைகளில் கடும் மழை பொழிந்து வரும் நிலையில் நாடளாவிய ரீதியில் 20 மாவட்டங்கள் வெகுவாக பாதிப் படைந்துள்ளன. அடை மழை, வெள்ளம் கார ணமாக குருணாகல், புத்தளம், இரத்தின புரி,கம்பஹா, கொழும்பு, களுத்துறை மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் 30404 பேரும் கம்பஹாவில் 42053 பேரும் குருணாகலில் 8556 பேரும் புத்தளத்தில் 31068 பேரும் களுத்துறையில் 5131 பேரும் கொழும்பில் 9475 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள் ளதாக…
-
- 0 replies
- 628 views
-
-
அமெரிக்காவின் பாரிய கடற்படை கூட்டுப் பயிற்சி – சிறிலங்கா கடற்படைக்கு முதல்முறையாக அழைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்கா நடத்தி வரும் பாரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் முதல்முறையாக சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது. ஹவாயில் பசுபிக் விளிம்பு ஒத்திகை என்ற பெயரில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பாரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியை அமெரிக்கா நடத்தி வருகிறது. 1971ஆம் ஆண்டு அமெரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கூட்டுப் பயிற்சி இந்த ஆண்டு வரும் ஜூன் 27ஆம் நாள் ஆரம்பமாகி, 29ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. இம்முறை கூட்டுப் பயிற்சியில் இந்தியா, அவுஸ்ரேலியா, ஜப்பான், கனடா உள்ளிட்ட 20இற்கும் மேற்பட்ட ந…
-
- 0 replies
- 143 views
-
-
சீன அபிவிருத்தி வங்கியிடம் 1 பில்லியன் டொலர் கடன் வாங்குகிறது சிறிலங்கா சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து சிறிலங்கா அரசாங்கம் 1 பில்லியன் டொலர் கடனைப் பெறவுள்ளது. இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்களுக்கான கொடுப்பனவுகளை கொடுத்துத் தீர்க்கவே, சிறிலங்கா அரசாங்கம் இந்தக் கடனைப் பெறவுள்ளது. எட்டு ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில், இந்தக் கடன் பெறப்படவுள்ளதாக சிறிலங்கா நிதியமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “சிறிலங்காவுக்கு கடன் வழங்க நான்கு அனைத்துலக நிறுவனங்கள் முன்வந்திருந்தன. ஏனைய மூன்று நிறுவனங்களும், கடனை மூன்று ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தன. ஆனால் சீன அபிவிருத்தி வங்கி, எட்டு ஆண்டுகள…
-
- 0 replies
- 236 views
-
-
முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பது குறித்து மலிக் சமரவிக்ரமவுடன் சீனத் தூதுவர் பேச்சு முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாக, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக அமைச்சின் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாந்தோட்டையில் சீனா தளம் அமைக்கவுள்ளதாக வெளியாகும் தகவல்களால் சீனா எரிச்சலடைந்துள்ளது. அத்தக…
-
- 0 replies
- 414 views
-
-
அர்ஜூன் அலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றதை ஒப்புக்கொண்டார் தயாசிறி மத்திய வங்கி பிணைமுறி மோசடிக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியசின் வோல்ட் அன் றோ அசோசியேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து தாம் 10 மில்லியன் ரூபாவைப் பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர. கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகித்து, அண்மையில் அதிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்ட 16 சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான தயாசிறி ஜெயசேகர நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இதன்போதே, தாம் 10 மில்லியன் ரூபாவுக்கான காசோலையை, வோல்ட் அன் றோ அசோசியேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றதாக ஒப்புக் க…
-
- 0 replies
- 259 views
-
-
பாதுகாப்பு நிலைமைகள் குறித்த சிங்கள நாளிதழ்களின் செய்தி – சிறிலங்கா அதிபர் விசாரணைக்கு உத்தரவு தேசிய பாதுகாப்புத் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கரிசனை கொண்டிருப்பதாக, இரண்டு சிங்கள நாளிதழ்களில் நேற்று வெளியாகிய செய்தி தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘தேசிய நாளிதழ்களான, தினமின மற்றும் லக்பிம ஆகியவற்றில், வெளியாகியுள்ள “சிவில் போராட்டங்களுக்கான பின்னணியை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம்”, ”நாட்டைப் பிளவுபடுத்தும் செயல்கள் தொடர்பாக பாதுகாப்புத் துறையினர் அவத…
-
- 0 replies
- 202 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய போட்டியிட்டால் நான் கட்டுப்பணம் செலுத்துவேன் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவதாக இருந்தால், தேர்தலுக்காக அவர் செலுத்த வேண்டிய கட்டுப்பணத்தை அவர் சார்பில் தான் செலுத்த தயார் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்று (25) கம்பஹாவில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் சரத் பொன்சேகா, கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது பலர் பயந்தார்கள். வௌ்ளை வேன் அனுப்பினார், கடத்தினார், குண்ணடர்களை அனுப்பி தாக்குதல் மேற்கொண்டார்,…
-
- 0 replies
- 302 views
-
-
கிழக்கு மாகாணத்தின் முதலாவது கைத்தொழில்பேட்டை- மட்டக்களப்பில் IBC-தமிழின் நிதி அனுசரணையுடன் கிழக்கு மாகாணத்தின் முதலாவது கைத்தொழில்பேட்டைக்கான அடிக்கல் இன்று மட்டக்களப்பில் நாட்டப்பட்டுள்ளது. IBC -தமிழ் வலையமைப்பின் தலைவர் திரு.கந்தையா பாஸ்கரன் அவர்கள் இந்த தொழில்பேட்டைக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார். முன்னைநாள் போராளிகள் சுமார் 100 பேருக்கான தொழில்வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் இலக்கினை நோக்கமாகக் கொண்டு இந்தக் கைத்தொழில்பேட்டை அமைக்கப்பட இருப்பதாக, IBC-தமிழ் வலையமைப்பின் தலைவர் திரு.கந்தையா பாஸ்கரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கும்புறுமூலை கிராமத்தில் அமைக்கப்பட உள்ள இந்த பாரிய கைத்தொழில்பேட்டையில், விதம்விதமான கைப்பணிப் …
-
- 0 replies
- 448 views
-
-
20 ஆவது திருத்தத்தை ஜே.வி.பி கையளித்தது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்த உள்ளிட்ட திருத்தங்கள் அடங்கிய, அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தை ஜே.வி.பிஇ இன்று (25) கையளித்துள்ளது. தனிநபர் பிரேரணையாகவே, ஜே.வி.பியின் தலைவரும், எதிர்க் கட்சி முதற்கோலாசானுமாகிய அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திஸாநாயக்கவிடம் கையளித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக, இதற்கு முன்னர் ஆட்சிபீடமேறிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகிய முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும், 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதியன்று ஆட்சிபீடமேறிய தற்போதைய ஜனாதிபத…
-
- 0 replies
- 281 views
-
-
ஓமந்தையில் வயலுக்குள் தூக்கி எறியப்பட்ட இளைஞர்!! – துண்டிக்கப்பட்ட கால் வீதியில்!! – நடந்தது என்ன? விபத்தில் இளைஞரின் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் 15 நிமிடங்களுக்குப் பின்னர் பொலிஸார் காலை மருத்துவமனையில் சேர்ப்பித்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, ஓமந்தையின் இன்று மதியம் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார். விபத்தில் அவரது ஒருகால் தொடையுடன் துண்டிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது டிப்பர் வாகனம் நேருக்கு நேர் மோதியது என்று கூறப்படுகின்றது. 22 வயதுடைய இளைஞர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார். …
-
- 0 replies
- 269 views
-
-
முஸ்லிம் இளைஞன் மீது தாக்குதல் – அம்பாறையில் பதற்றம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் சற்றுமுன்னர் இளைஞர் ஒருவரைப் பொதுமக்கள் கட்டிவைத்து அடித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இளைஞர் ஒருவர் தகாதமுறையில் நடந்துகொண்டதையடுத்து அவரது மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டதுடன் அந்த இளைஞனும் தாக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டது. முஸ்லீம் இளைஞர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகினார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொல…
-
- 0 replies
- 284 views
-
-
இலங்கை அணி வீரர் தனஞ்சயவின் தந்தை சுட்டுக் கொலை!! இந்தச் சம்பம் இன்று இரவு 10 மணியளவில் இரத்மலான பிரதேசத்தில் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவரவில்லை. இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் தெகிவளை மாநகர சபையின் உறுப்பினருமான ரஞ்சன் சில்வா துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பம் இன்று இரவு 10 மணியளவில் இரத்மலான பிரதேசத்தில் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http…
-
- 2 replies
- 799 views
-
-
போதை தலைக்கேறி விமானப் பணிப் பெண்ணின் கையை பிடித்த வர்த்தகருக்கு நேர்ந்த கதி (எம்.எப்.எம்.பஸீர்) டுபாயில் இருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமானத்தில், போதை தலைக்கேரி, நடு வானில் வைத்து விமானப் பணிப் பெண் ஒருவரின் கையைப் பிடித்திழுத்து துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்கிசை பகுதியைச் சேர்ந்த 49 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந் நிலையில் மேல் மாகாணத்தின் வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் மேற்பார்வையில் நிர் கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சந்தன அத்துகோரளவின் ஆலோசனைக்கு அம…
-
- 0 replies
- 437 views
-
-
மக்களின் காணியை மீண்டும் கைப்பற்ற முயற்சி? முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலளர் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் மக்கள் பயன்படுத்திய காணிகளை வேலி அடைக்கும் செயற்பாடு தொடர்பில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜா நேரில் சென்று பார்வையிட்டார். குறித்த பகுதியில் இடப்பெயர்வுக்கு முன்னர் மக்கள் வசித்து வந்த நிலையில் இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும், பின்னர் பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கமைய குறித்த காணி விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவு காணியை அங்கு அமைந்துள்ள இந்து ஆலயம் ஒன்றுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நி…
-
- 0 replies
- 459 views
-
-
தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழில் அஞ்சலி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழகம் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மாலை யாழ் வடமராட்சி, பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. http://globaltamilnews.net/2018/80483/
-
- 9 replies
- 993 views
-
-
மயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர் (எம்.நியூட்டன்) அண்மையில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மயிலிட்டி 683 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஆயிரத்து 600 மில்லியன் ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள மயிலிட்டியில் சுமார் 683 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்வதற்கான மதிப்பீட்டுப் பணிகள் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளினால் மதிப்பீடு செய்யப்பட்டது. இதன்போது சுமார் ஆயிரத்து அறுநூறு மில்லியன் ரூபா த…
-
- 0 replies
- 278 views
-
-
முன்னாள் போராளியின் வீட்டு முற்றத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கும் கருவியும் துப்பாக்கி ரவைகளும் மீட்பு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டு முற்றத்தில் அகழ்வுப் பணிகளை விமானப்படையினர் மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன்(தீபன்) என்பவரின் வீட்டில் புதைத்து வைத்திருப்பதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இன்று 23-05-2018 கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த இடத்தில் அகழ்வை மேற்கொள்வதற்கான அகழ்வுப் பணியை மேற்கொண்டு வ…
-
- 7 replies
- 1.3k views
-
-
புதிய அரசியலமைப்பை வரைய நிபுணர் குழுவுக்கு ஒரு மாத காலஅவகாசம் புதிய அரசியலமைப்புக்கான வரைவை ஒரு மாத காலத்துக்குள் தயாரித்து தருமாறு, நிபுணர் குழுவிடம் வழிநடத்தல் குழு கேட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழு ஆறு மாதங்களுக்குப் பின்னர் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூடியது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், சுமார் 40 நிமிடங்கள் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில், வழிநடத்தல் குழுவின். பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்றனர். 2016ஆம் ஆண்டு வழிநடத்தல் குழு உருவாக்கப்பட்ட பின்னர், நடத்தப்பட்ட 76 ஆவது கூட்டம் இதுவாகும். இந்தக் கூட்டத்தில், 10 பேர் கொண்ட நிபுணர் குழு, புதிய அரசியலமைப்புக்கான வரைவைத்…
-
- 2 replies
- 383 views
-
-
நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் போராளியை விசாரணைக்கு வருமாறு, சிறிலங்காவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது. கே. ஜெயக்குமார் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான, முன்னாள் போராளியையே, கொழும்பில் உள்ள சிறிலங்கா காவல்துறை தலைமையகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறை தலைமையகத்துக்கு வருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு, புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட, இந்த முன்னாள் போராளி, போரில் ஒரு காலை இழந்தவர். தற்போது, கிளிநொச்சி சந்தையில், காய்கறிக் கடை ஒன்றை …
-
- 2 replies
- 554 views
-
-
அச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை நோக்கி அச்சுறுத்தும் விதத்தில் சைகை செய்து சர்ச்சையில் சிக்கிய பிரிட்டனிற்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கர பெர்ணான்டோ குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் மீண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர் ஹைவெல் வில்லியம்ஸ் குறிப்பிட்ட விவகாரம் குறித்து மீண்டும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள பிரிட்டனின் ஆசிய விவகாரங்களிற்கான அமைச்சர் மார்க் பீல்ட் பொதுநலவாய மாநாட்டின் போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்து ஆராய்ந்ததாக தெரிவித்த…
-
- 0 replies
- 239 views
-
-
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் நியமனம் இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக அலைனா பி டெப்பிளிட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார். அவரது நியமனத்தை செனெட் அங்கீகரிக்கும் பட்சத்தில் அதுல் கெசாப்பிற்கு பின்னர் அலைனா டெப்பிளிட்ஸ் இலங்கை தூதுவராக பணியாற்றுவார். தற்போது நேபாளிற்கான அமெரிக்கத் தூதுவராக பணியாற்றும் அலைனா டெப்பிளிட்சையே டிரம்ப் இலங்கை தூதுவராக நியமித்துள்ளார். புதிய தூதுவர் அமெரிக்க வெளிவிவகார சேவையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது http://www.virakesari.lk/article/33900
-
- 0 replies
- 555 views
-
-
125000 பேர் பாதிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு நாடளாவிய ரீதியில் 19 மாவட்டங்களை வெகுவாக பாதித்துள்ள அடைமழை, வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக இரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட் டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் 28328 பேரும் கம்பஹாவில் 42973 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. இதனைவிட நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள புத்தளம் மாவட்டத்தில் 24133 பேர் அடை மழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த 24 மணி நேர…
-
- 0 replies
- 375 views
-
-
புதையல் தோண்ட முற்பட்ட ஏழு பேர் கைது ! புதையல் தோன்றுவதற்கு முயற்சித்த ஏழுபேர் தர்மபுரம் பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் . குறித்த நபர்கள் கல்மடுவிலுள்ள காணி ஒன்றில் பூசை ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர் . கைது செய்யப்பட்டவர்களில் மூவர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் மூவர் சிங்கள இனத்தை சேர்ந்த கொழும்பை வதிவிடமாகக் கொண்டவர்கள் எனவும் ஒருவர் தமிழர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கேரளாவை சேர்ந்தவர்கள் மூவரிடமும் கடவுச் சீட்டோ அல்லது வீசாவோ எதுவும் இல்லை என தர்மபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர் ஆரம்பகட்ட விசாரணைகள் முடிவுற்ற நிலையில் சந்தேக நபர்களை இன்று கிளிநொச்சி நீதவான் நிதிமன்றில் ஆஜர்ப்படு…
-
- 0 replies
- 429 views
-