ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
"சிக்கல் இல்லாத நிர்வாகத்தை ஏற்படுத்தி ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக வடமாகாணம் திகழ வேண்டும்" "உள்ளூராட்சி மன்றங்களுக்கான தெரிவுகள், விட்டுக்கொடுப்புகள் மற்றும் புரிந்துணர்வுகளுடன் ஒற்றுமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக வடமாகாணம் திகழ வேண்டும்" என வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய சிவஞானம், "உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அந்தந்த கட்சி வெற்றி பெற்ற இடங்களில் அவர்களையே ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டும். அதற்கு ஏனையோரும் ஆதரவளிக்க வேண்டும். இதன்மூலம் இ…
-
- 0 replies
- 212 views
-
-
சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்க கோரி மன்னாரில் கையெழுத்துப் போராட்டம்!!! அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி வடக்கு - கிழக்கில் தொடர்ச்சியாக பல்வேறு பொது அமைப்புக்களினால் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னாரில் இன்று காலை சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கையெழுத்து போராட்டத்தை மேற்கொண்டனர். மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவும் மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியிலும் இன்று காலை மன்னாரில் உள்ள சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்தனர். அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் மனைவி கடந்த மாதம் 15 ஆம் திகதி இயற்கை எய்திய நிலையில் அவர்களுடைய ஆண் மற்றும் பெண் பிள்ளைகளாக…
-
- 0 replies
- 419 views
-
-
கூட்டமைப்பு, ஜே.வி.பி., சு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம் என்கிறார் ருவன் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரே ரணையை தோற்கடிப்பதற்கான ஆதரவை திரட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டுக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தனி அரசாங்கத்தை அமைக்கும் மறுசீரமைப்பு செயற்பாடுகள் மே மாதமளவில் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். பிரதமருக்கு எதிராக நம…
-
- 0 replies
- 246 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தால் சுதந்திரக்கட்சி எம்.பி.க்கள் மஹிந்தவுடன் இணைவர் (எம்.சி.நஜிமுதீன்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பாரா ளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக் கையில்லாப் பிரேரணை வெற்றியளித்தால் புதிய அரசாங்கம் அமைக்க வேண்டிவரும். மாறாக அது தோல்வியடைந்தால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகள வான உறுப்பினர்கள் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்துகொள்வார்கள் என்று அமைச் சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையி…
-
- 0 replies
- 147 views
-
-
அர்ஜுன மகேந்திரனை காப்பாற்றவே தீவிர பொறுப்பு முகாமை சட்டம் கடன் செயற்பாடுகளில் மீண்டும் அவரை அனுமதிக்கும் நகர்வு கூட்டு எதிர்க்கட்சி,ஜே.வி.பி. சபையில் குற்றச்சாட்டு (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை காப்பாற்றி ஊழல் குற் றங்களில் இருந்து தப்பிக்க வைக்கவே தீவிர பொறுப்பு முகாமை சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவருகின்றது. கடன் செயற்பாடுகளில் மீண்டும் அர்ஜுன மகேந் திரனை அனுமதித்து தீர்மானம் எடுக்கும் நகர்வுகளா என்ற சந்தேகம் எழுவதாக ஜே.வி.பி. மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர். அர்ஜுன் மகேந்திரனை காப்பாற்றி சகல குற்றங்களில் இருந்தும் விடுவிக்கவே பிரதமர் அதிகாரங்களை கைப்பற்ற மு…
-
- 0 replies
- 242 views
-
-
சபையில் களேபரம் : தீவிரபொறுப்பு முகாமை சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் சபை நடுவில் ஆர்ப்பாட்டம் செய்த கூட்டு எதிரணி வெளிநடப்பு (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) தீவிர பொறுப்பு முகாமை சட்டமூலத்தை நிறைவேற்று வதற்கு இலத்திரனியல் வாக்கெடுப்பு பெறப்பட்ட போது சபாபீடத்திற்கு வருகை தராத அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஆதரவாக வாக்களித்ததாக திரையில் காண்பிக்கப்பட்டமையினால் நேற்று சபையில் கடுமை யான களேபரம் ஏற்பட்டதுடன் கூட்டு எதிர்க்கட்சியினர் சபை நடுவே வந்து கோஷம் எழுப்பினர். இதனை யடுத்து சபை நடவடிக்கைகள் 10 நிமிடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதுடன் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வேளை கூட்டு எதிரணி எம்.பி.க்கள் சபையி லிருந்து வெளிநடப்பு செய்தனர். …
-
- 0 replies
- 98 views
-
-
ஐ.நா.வின் வெறுப்பை சம்பாதித்துள்ள இலங்கை ஜெனிவா கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பான முக்கிய அமர்வொன்று கடந்த புதன்கிழமை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்தன. ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் முகாமிட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள், அரசாங்கத்தின் பிரதிநிதிகள், சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், புலம்பெயர் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், தென்னிலங்கை சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் என்ன நடக்கப்போகின்றது என்பதை மிகவும் எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டிருந்…
-
- 0 replies
- 224 views
-
-
அரசியல் தீர்வே முக்கியமானது என்கிறார் விக்கி இராணுவத்தை வடக்கில் வைத்துக்கொண்டும் அதிகாரங்களைத் தம்வசம் வைத்துக்கொண்டும் பொருளாதார விருத்தி பற்றியும் நல் லிணக்கம் பற்றியும் அரசாங்கம் பிரஸ்தாபிக்கும் போது நுண்ணறிவு ள்ள தமிழர்கள் யாவரும் அதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் சத்திரசிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி இறந்துவிட்டார்” என்று ஆகிவிடும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதற்காகவே அரசியல் தீர்வு முதலில் வரவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். அதற்காக நாம் மத்தியைப் புறக்கணிக்கவில்லை. செய்வதைச் செய்யுங்கள் ஆனால் எங்களையும் பங்குதாரர்கள் ஆக்கிச் செய்யுங்கள் என்றே கூறி வருகின்றோம். அப்…
-
- 0 replies
- 576 views
-
-
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ரஷ்யாவுக்கு இரகசியப் பயணம் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் ரஷ்யாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன. எனினும், இந்தப் பயணம் தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேவேளை, இழுபறிக்குள்ளாகியிருக்கும், ரஷ்யாவிடம் இருந்து ஜிபார்ட் 5.1 ரக போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு உடன்பாடு தொடர்பாக பேச்சுக்களை நடத்தவே, சிறிலங்கா பாது…
-
- 0 replies
- 107 views
-
-
சர்வதேச நியாயாதிக்கம் தொடர்பான ஐ.நா. மனித உரிமை பேரவையின் கோரிக்கை இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் என்பன தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்ற பாதிக்கப்பட்ட மக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் ஐக்கியநாடுகள் சபையினதும் கோரிக்கை உரியமுறையில் இலங்கையினால் செவிமடுக்கப்படாமையின் காரணமாக இன்று சர்வதேச ரீதியான மாற்றுவழி குறித்து ஆராயும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இலங்கை மனித உரிமை …
-
- 0 replies
- 468 views
-
-
நிராகரிக்கப்பட முடியாதவை சம்பந்தனின் கருத்துக்கள் ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்கள், தமக்கான உள்ளக சுயநிர்ணய உரிமையைக் கோருவதற்கு உரித்துடையவர்கள். அவர் களது அத்தகைய கோரிக்கை நிராகரிக்கப்படுமாயின், வெளி யக சுயநிர்ணய உரிமை யைக் கோரும் உரித்து அவர்களுக்கு உண்டு என்று கருத்து வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். பழுத்த அரசியல்வாதி என்ற வகையில் அவரது மேற்குறித்த கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இலங்கை தனது 70ஆவது சு…
-
- 0 replies
- 338 views
-
-
ஜெனீவா அமர்வு- கண்டுகொள்ளாத சிங்கள ஆங்கில நாளேடுகள். செய்திகள் இருட்டடிப்பு இலங்கை நிலைமை தொடர்பாக, இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைச் சபை கூட்டத் தொடர் குறித்து, கொழும்பில் இருந்து வெளியாகும் பல சிங்கள ஆங்கில நாளேடுகள், எந்தவொரு செய்தியையும் பிரசுரிக்கவில்லை என ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். சிலோன் ரூடே என்ற ஆங்கில நாளேடு ஒன்றைத் தவிர ஏனைய ஆங்கில நாளேடுகள் ஜெனீவா அமர்வு பற்றி சிறிய செய்தியைக்கூட பிரசுரிக்கவில்லை. டெயிலி நியூஸ் என்ற அரசசார்பு ஆங்கில நாளேடு அரசாங்கத்துக்கு சாதமான செய்திகள் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. ஆகவே இந்த நாளேடுகள் தவிர்ந்த ஏனைய ஆங்கி…
-
- 0 replies
- 259 views
-
-
பாகிஸ்தானில் சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் தூதரக வளாகத்திலுள்ள புனர்நிர்மாணம் செய்யப்பட்ட சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இடம்பெற்றது. பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்னூன் ஹுசைனின் உத்தயோகபூர்வ அழைப்பை ஏற்று பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அந்நாட்டிலுள்ள ஒரே ஒரு பௌத்த விகாரையான சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு இன்றுபிற்பகல் விஜயம் செய்தார். முதலில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி , அவ்விகாரை வளாகத்தை சுற்றிப் பார்வையிட்டார். …
-
- 0 replies
- 257 views
-
-
வவுனியாவின் பணமோசடி மன்னன் பருத்தித்துறையில் கைது வவுனியா நகரப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்துவதாக தெரிவித்து வறிய மக்களிடம் பணமோசடி செய்த நபர் வழக்குத் தவணைகளுக்கு ஆஜராகாமல் மறைந்திருந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகர மத்தியில் விவசாய கால்நடை மீன்பிடி ஊக்குவிப்பு நிறுவனம் என்ற பெயரில் வறிய மக்களிடம் ஆசை வார்த்தைகளைக்கூறி கடன் வழங்கும் திட்டமொன்றினை அறிமுகம் செய்து பல கோடி ரூபா நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது ஏமாற்றப்பட்ட பொது மக்கள் குறித்த அலுவலகத்தில் ஒன்று திரண…
-
- 0 replies
- 327 views
-
-
பாதாள உலகக் குழுவை அழிக்க முடியாமைக்கு நல்லாட்சி மாத்திரமல்ல கடந்த அரசாங்கமும் காரணம் : ஞானசார தேரர் (இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகளின் இயக்கத்தினை முற்றாக அழித்து நாட்டை ஒருமைப்படுத்திய அரசாங்கத்திற்கு வெளிப்படையாக செயற்படும் பாதாள குழுவினரை அழிக்க முடியாதுள்ளமை வேடிக்கையாகவுள்ளது. புலிகளின் விவகாரத்தில் அரசாங்கம் மேற்கொண்ட உத்திகளை பாதாள உலகக் குழுவினர் மீது செயற்படுத்த அரசு பின்வாங்குவது வேடிக்கையாகவுள்ளது என பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். தற்போது நாட்டில் தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் பாதாள உலகக் குழுவினரின் தாக்குதல்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் போது அ…
-
- 0 replies
- 141 views
-
-
இரண்டாவது போர்க்கப்பலையும் சிறிலங்காவிடம் கையளித்தது இந்தியா இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட 2500 தொன் எடையுள்ள பாரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்டது. சிறிலங்கா கடற்படைக்காக கோவா கப்பல் கட்டும் தளத்தில் இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களைக் கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. முதலாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கடந்த ஆண்டு சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்டு, கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பலைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று கோவா கப்பல் கட்டும் தளத்தில் இடம்பெற்றது. இதில், இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகீஸ்வராவ…
-
- 1 reply
- 313 views
-
-
ஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித் வீரசிங்கவை தற்போது அரசாங்கம் மேலும் சிலருடன் சேர்த்து கைது செய்துள்ளது. அமித் வீரசிங்க கடந்த சில வருடங்களுக்குள் இந்த நாட்டுக்கு ஏற்படுத்தியிருக்கிற ஆபத்தும், அழிவுகளும் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல தான். ஹலாலுக்கு எதிராக, முஸ்லிம்களின் வியாபரத்துக்கு எதிராக, முஸ்லிம்களின் ஜனத்தொகைக்கு எதிராக, ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிராக, ஹிஜாப் அணிவதற்கு எதிராக, என்று அடுக்கிக் கொண்டு போகலாம். ஜாதிக ஹெல உறுமய சித்தாந்த தளத்திலும், களத்திலும் பெரும் பங்கை 90 களிலிருந்து இரு தசாப்த காலம் பங்கை ஆற்றிய பின்னர் அவர்கள் அரசியல்…
-
- 1 reply
- 569 views
-
-
என். சரவணன் “மஹாசொன் பலகாய” என்கிற பெயரை “மகாசேனன் படையணி” என்று தமிழ் ஊடகங்களில் இந்த நாட்களில் பயன்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் அது மகாசேனன் அல்ல “மஹாசொன் பலகாய” தான் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். சிங்கள மரபிலக்கிய அர்த்தத்தில் கூறுவதாயின் அதுவொரு “அரக்கர் சேனை” (Demon Brigade) “மஹாசொன் பலகாய” என்கிற அமைப்பின் பெயர் முதன் முதலில் வெளியானது 2008 ஒக்டோபர் மாதமளவில் தான். அதாவது யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயம் அது. 20.10.2008 ஆம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு சிறிய கடிதப் பொதியொன்று கிடைத்தது. ஒரேவிதமான கடிதத்தின் 50 பிரதிகள் அதில் இருந்தன. மனித உரிமைகளின் பேரால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வாதிடும் அனைவரும் கொல்லப்படுவர் என்…
-
- 1 reply
- 1.1k views
-
-
காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ள போராளிகளுக்கு உதவும் திட்டம்;அமைச்சரவை பத்திரம் நிராகரிப்பு டக்ளஸின் கேள்விக்கு சுவாமிநாதன் பதில் காயமடைந்து சிகிச்சை பெற்ற போராளிகளுக்கு உதவும் திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டி.பி பாராளுமன்ற…
-
- 3 replies
- 361 views
-
-
காலி, நீர்கொழும்பு மாநகரசபைகளில் ஐதேகவை மண் கவ்வ வைத்த மகிந்த கட்சி காலி, நீர்கொழும்பு மாநகரசபைகளில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய போதும், இந்த இரு மாநகரசபைகளின் முதல்வர் பதவிக்கான தேர்தல்களில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியிடம், ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. காலி, நீர்கொழும்பு மாநகரசபைகளின் முதல்வர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்புகள் இன்று அந்தந்த சபைகளில் இடம்பெற்றன. காலி மாநகரசபையில் ஐதேக 14 ஆசனங்களையும், சிறிலங்கா பொதுஜன முன்னணி 13 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன. அத்துடன், ஜேவிபி- 3, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி- 1, சுயேட்சைக்குழு- 1 என ஆசனங்களைப் பெற்றிருந்தன…
-
- 0 replies
- 284 views
-
-
நாமல் ராஜபக்ஸ ரஸ்ய விமான நிலையத்தில் முடக்கப்பட்டார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ரஸ்ய விமான நிலையத்தில் வைத்து முடக்கப்பட்டுள்ளார். ரஸ்யாவிலிருந்த அமெரிக்கா செல்வதற்கு நாமல் ராஜபக்ஸவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் ஓர் கண்காணிப்பாளராக நாமல் ராஜபக்ஸ பங்கேற்றிருந்தார். தாம் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய எத்தனித்த போது விமான நிலைய அதிகாரிகள் அதற்கு அனுமதிக்கவில்லை என டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் தெரிவித்துள்ளார். என்ன காரணத்திற்காக இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ரஸ்யாவிற்கும் ராஜபக்ஸ க…
-
- 3 replies
- 727 views
-
-
ஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய கோரி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டை ஆரம்பம் : ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்த சுதாகரனை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வழியுறுத்தி தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்றுக்கொள்ளப்பட்டு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிடம் கையளிக்கும் நடவடிக்கையினை இன்று வெள்ளிக்கிழமை (23) முன்னெடுத்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இவ் விடையம் தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,, …
-
- 0 replies
- 218 views
-
-
2 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள், இராணுவ கோப்ரலுக்கு மரணதண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு கொலை, கொள்ளை உட்பட 5 குற்றங்களை புரிந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவர் மற்றும் இராணுவ கோப்ரல் ஆகியோரை குற்றவாளிகளாக இனம்கண்ட யாழ் மாவட்ட நீதிபதி மா. இளஞ்செழியன் மூவருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி சங்கானை முருகமூர்த்தி ஆலய குருக்களின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ரி.56 ரக துப்பாக்கியால் குருக்களை சுட்டுக்கொலை செய்தமை, வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்தமை குருக்களின் மகன்மார் இருவரையும் சுட்டு படுகாயப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை புரிந்த இரு முன்னாள்…
-
- 1 reply
- 549 views
-
-
நீதிமன்ற வழக்குக்கு வந்தவர் மீது கத்திக்குத்து!! நீதிமன்ற வழக்குக்கு வந்தவர் மீது கத்திக்குத்து!! நீதிமன்றில் வழக்குக்கு வந்து விட்டு வெளியே வந்த பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த இளைஞரை கத்தியால் குத்திக் காயப்படுத்தினார் வவுனியா கல்வளையைச் சேர்ந்த நபர். கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் சாவகச்சேரி பேருந்…
-
- 0 replies
- 316 views
-
-
இலங்கையில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தானின் 78 ஆவது தேசிய தினம் இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகரகத்தில் பாகிஸ்தானின் 78 ஆவது தேசியதினம் பதில் உயர்ஸ்தானிகர் ஜான் பாஸ் கான் தலைமையில் கொண்டாடப்பட்டது. தங்களது தாய்நாட்டினை துடிப்புமிக்கதாகவும், முன்னேற்றமுடையதாகவும், ஜனநாயக நலன்புரி அரசாக வலிமைபெறச்செய்வதற்கான உறுதிமொழிகளுடன் கொண்டாடப்பட்ட தேசிய தினத்தில் இலங்கை வாழ் பாகிஸ்தானிய பிரஜைகள் பலர் கலந்துகொண்டனர். பாகிஸ்தானின் தேசிய கொடியை பதில் உயர் ஸ்தானிகர் ஜான் பாஸ் கான் தற்காலிக உயர் ஸ்தானிகரால் ஏற்றிவைக்கப்பட்டது. பின்னர் பாகிஸ்தானிய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துச் செய்திகள் வாசி…
-
- 0 replies
- 459 views
-