ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
காணாமல் போனோர் அலுவலகம்; ஆணையாளர்களின் முதல் கூட்டம் இவ்வாரம் காணாமற் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கென நியமிக்கப்பட்ட ஆணையாளர்களின் முதலாவது கூட்டம் இவ்வாரம் கொழும்பில் நடைபெறும் என்று ஆணையாளர்களில் ஒருவரான நிமல்கா பெர்ணான்டோ நேற்று வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார். காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் கூட்டம், தலைவர், ஜனாதிபதிசட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையில் கொழும்பு நல்லிணக்க அலுவலகத்தில் நடைபெறும் என்றும் காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் இயங்குவதற்கான கட்டடம் ஒதுக்கப்பட்ட பின்னர் அலுவலகத்துக்கு தேவையான ஊழியர்கள், அதிகாரிகள் நிய…
-
- 0 replies
- 265 views
-
-
லக்ஸ்மன் கிரியெல்லவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு? சட்டம், ஒழுங்கு அமைச்சை, தற்போது அரச தொழிற்துறை அமைச்சராக உள்ள லக்ஸ்மன் கிரியெல்லவிடம் ஒப்படைப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைய அமைச்சரவை மாற்றத்தின் போது, சாகல ரத்நாயக்கவிடம் இருந்து சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பொறுப்பு பறிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாக சட்டம், ஒழுங்கு அமைச்சராக பதவியேற்றிருந்தார். அந்த அமைச்சுப் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்க ஐதேக திட்டமிட்டிருந்தது. எனினும், கூட்டு அரசாங்கத்துக்குள் உள்ளவர்களும், காவல்துறையின் உயர்மட்டத்தில் உள்ளவர்களும், சரத் பொன்சேகா இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதற்…
-
- 0 replies
- 293 views
-
-
பாலச்சந்திரனின் படத்துடன் முள்ளிவாய்க்காலில் போராட்டம்!! சிரியப் படுகொலைகளை நிறுத்தக் கோரி சிரிய நாட்டில் ஏற்பட்டுள்ள போரினால் இடம்பெறும் மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இன்று போராட்டம் இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் முதன்மைச் சந்திக்கு அருகில் இந்தக் போராட்டம் நடைபெற்றது. அதில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை ந…
-
- 3 replies
- 565 views
-
-
நட்சத்திர விடுதியாகிறது கீரிமலை அரச தலைவர் மாளிகை நட்சத்திர விடுதியாகிறது கீரிமலை அரச தலைவர் மாளிகை பொதுமக்களும் சாதாரண கட்டணத்தில் 5 நட்சத்திர விடுதியில் தங்குவதற்கு ஏற்ற வகையிலேயே, காங்கேசன் துறையில் உள்ள அரச தலைவர் மாளிகை மாற்றியமைக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முன்னைய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, காங்கேசன்துறையில், கீரிமலைக்கு அண்மையாக 3.5 பில்லியன் ரூபா செலவின் ஆ…
-
- 0 replies
- 343 views
-
-
பொன்னம்பலம் மருத்துவமனையில் இருந்து வெளியேறிவரும் படையினர்! பொன்னம்பலம் மருத்துவமனையில் இருந்து வெளியேறிவரும் படையினர்! புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்து வமனை வளாகத்தில் நிலைகொண்டி ருந்த படையினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள பொன்னம்பலம் மருத்துவமனையில் 68ஆவது படைப்பிரிவின் 2ஆவது படையினர் நிலை கொண்டுள்ளனர். அவர்கள் தற்போது, கனரக ஊர்…
-
- 0 replies
- 468 views
-
-
கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற 342 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கிவைப்பு இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும், சகவாழ்வுடனும் வாழவேண்டும் என்பதே தான் நான் காணும் கனவு எனவும் அந்த கனவு நனவாhவிட்டால் இந்த நாடே அழிந்துவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அதனைத் தீர்க்கும் வகையிலேயே இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வும், பாடசாலைகளுக்கு விஞ்ஞான உபரகணங்க…
-
- 0 replies
- 228 views
-
-
16 ஆம் திகதி கேள்வி எழுப்பவுள்ள நாடுகள் (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் ஜெனி வாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கை மனித உரிமை நிலவரம் குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு குறித்த விவாதம் நடைபெறவுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு மீண்டும் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்புக்கு உட்பட்ட இலங்கை குறித்த பிரேரணையின் அமுலாக்கத்தை அடிப்படையாகக்கொண்டே இந்த விவாதம் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இலங்கை குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு அமர்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. அதன்போது இலங்கை குறித்த பல்வேறு பரிந்து…
-
- 2 replies
- 262 views
-
-
உணவுக்கு பொருத்தமற்ற மீன்கள்!! உணவுக்கு பொருத்தமற்ற மீன்கள்!! இலங்கை 40 முதல் 60 வீதம் வரையிலான மீன் வகைகள் உணவுக்குப் பயன்படுத்த பொருத்தமற்றவை என்று கடல் ஆராய்ச்சி நிறுவனமான நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வள அமைச்சு அறிவித்துள்ளது. நாரா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் சில மீன்கள் கருவாட்டுக்குக் கூடப் பொருத்தமற்றவை என்றும் நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறான மீன் வகைகள்…
-
- 6 replies
- 555 views
- 1 follower
-
-
காணி கோரியுள்ள இராணுவத்துக்கு காணி வழங்குவது தொடர்பில் ஆராய்வு! புதுக்குடியிருப்பின் காணி கோரியுள்ள இராணுவத்துக்கு காணி வழங்குவது தொடர்பில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள காணிகள் விடுவிப்பதற்கு இராணுவம் மாற்று காணி கோரியுள்ளதாகவும், அதற்க்கு மாற்றுக்காணி எங்கு வழங்குவது என்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி சிவமோகன் தலைமையில், புதுக்குடியிருப்பு காணி உரிமையாளர்கள் மற்றும் புதிதாக பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒரு தொகுதியினர் கூடி கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடல் நேற…
-
- 0 replies
- 222 views
-
-
லசந்த கொலை தொடர்பான தகவல்களை முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபரே மூடிமறைத்தார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான தகவல்களை முன்னாள் சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவே மூடிமறைத்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லசந்த கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் கல்கிஸ்ஸ நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. லசந்தவின் கள குறிப்புப் புத்தகத்தை காணாமல் போகச் செய்வதற்கு நேரடியாகவே பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக்கார தலையீடு செய்தார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த விடயம் குறித்த…
-
- 0 replies
- 302 views
-
-
அம்பலவன்சின்னக்கட்டுக்குளம் வற்றியதன் காரணமாக மக்கள் பெரும் சிரமம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு துணுக்காய் அம்பலப்பெருமாள்குளம் கிராமத்தின் அம்பலவன்சின்னக்கட்டுக்குளம் முற்றாக வற்றியதன் காரணமாக 93 குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கிணறுகளின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதுடன் இக்குளத்தினை நம்பி மேற்கொள்ளப்பட்டிருந்த மேட்டுப் பயிர்ச் செய்கைகளும் அழிவடைந்துள்ளதுடன் தென்னை, மா, பலா போன்ற மரங்களும் நீரின்றி வாடி வருவதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அம்பலப்பெருமாள்குளம் கிராமத்தின் மேட்டுக் காணியில் குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கான நீர்த் தேவையினைத் தீர்மானிக்கின்ற குளமாக அம்பலவன்ச…
-
- 0 replies
- 202 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் தனது இடமாற்றத்தின் கடைசி நிமிடங்களை பகிர்ந்த சிங்கள காவல்துறை உத்தியோகத்தர் : குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் அண்மையில் கிளிநொச்சியில் இருந்து சுமார் 150க்கும் அதிகமான காவல்துறை உத்தியோகத்தர்கள் இடமாற்றம் பெற்று தென்னிலங்கைக்குச் சென்றனர். இவ்வாறு இடமாற்றம் பெற்றுச் செல்லும் வேளை, ஒரு காவல்துறை உத்தியோகத்தர் தனது கடைசி நிமிடங்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பகிர்ந்துள்ளார். அவர்களின் பிள்ளைகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் இதற்காக போராடும் உறவுகளை தான் மிகவும் நேசிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளர். அந்த மக்களுடன் சிற்றுண்டி ஒன்றை பகிர்ந்து அவர்களுடன் உரையாடிச் …
-
- 0 replies
- 190 views
-
-
மஹிந்த - மைத்திரி கொழும்பில் ஒருமணிநேர இரகசிய சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. கொழும்பிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரது இல்லத்தில் அண்மையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சுமார் ஒருமணித்தியாலம் வரை நீடித்த இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை. கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எ…
-
- 0 replies
- 232 views
-
-
அல் ஹுசைன் இலங்கை வருகிறார் (ரொபட் அன்டனி) மனித வளத்துக்கு எதி ரான கண்ணி வெடி களை தடை செய்வதற் கான சாசனத்தின் விசேட தூதுவரான இளவரசர் மிரெட்ராட் அல் ஹுசைன் நாளை மறுதினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகின்றார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வருகின்ற தூதுவர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுடன் இணைந்து வட மாகாணத்திற்கா…
-
- 0 replies
- 300 views
-
-
ஐங்கரநேசனை மத்திய குழுவில் இணைக்க எதிர்ப்பு!! ஐங்கரநேசனை மத்திய குழுவில் இணைக்க எதிர்ப்பு!! தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில், வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரை இணைப்பதற்கு மூத்த சட்டத்தரணி வி.புவிதரன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சரால், பொ.ஐங்கரநேசன், திருமதி அனந்தி சசிதரன், …
-
- 0 replies
- 263 views
-
-
வடக்கோடு இணைந்து செல்லாததற்காக மன்னிப்புக் கேட்டார் – அமைச்சர் ஜோன் !! வடக்கோடு இணைந்து செல்லாததற்காக மன்னிப்புக் கேட்டார் – அமைச்சர் ஜோன் !! வடக்கு மாகாணத்துடன் கொழும்பு அரசு இணைந்து செயற்படாததற்காக நேற்றுப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார் அமைச்சர் ஜோன் அமரதுங்க. ‘‘நாங்கள் உங்களுடன் (வடக்குடன்) இணைந்து செயற்படவில்லை என்று தெரிகிறது. அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். இனி இணைந்து செயற்படத் தொடங்குவோம். இணைந்து பணியாற்றுவதில் சிக்கல் இல்லை’’ என்றார் அவர். …
-
- 0 replies
- 353 views
-
-
பேரவைக்குள் குழப்பம்!! பேரவைக்குள் குழப்பம்!! தமிழ் மக்கள் பேரவையைத் தனது தனிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்கிறார் என்கிற அச்சமும், குழப்பமும் அதில் அங்கம் வகிப்பவர்களிடையே தோன்றியுள்ளது. இந்தக் குழப்பங்கள் காரணமாக தமிழ்க் காங்கிரஸ் மற்றும் ஈபிஆர்எல்எவ் கட்சிகள் பேரவையை விட்டு விலகப் போகின்றன என்றும் பேரவை இ…
-
- 0 replies
- 235 views
-
-
இந்தியா, சீனாவுடன் விரைவில் ஒப்பந்தங்கள் : சிங்கப்பூரில் பிரதமர் ரணில் இந்து சமுத்திர பிராந்தியத்தை அடிப்படையாகக்கொண்டு வளர்ச்சியடையும் புதிய பொருளாதார பயணத்தின் பங்காளர்களாக வருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் உட்பட உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். எதிர்வரும் காலங்களில் இந்தியாவுடன் தற்போது கைச்சாத்திட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் பலமாக்கி பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தையும் (எட்கா) சீனாவுடன் விஸ்தீர சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தையும் கைச்சாத்திடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சிங்கப்…
-
- 0 replies
- 159 views
-
-
அம்பாறை அசம்பாவிதம் ; கைதான ஐவரும் பிணையில் விடுதலை, சந்தேகநபர்களை தேடுவதாக பொலிஸார் அறிவிப்பு அம்பாறை நகரில் ஜும் ஆப் பள்ளிவாசல் மற்றும் மூன்று உணவகங்கள் உள்ளிட்ட நான்கு முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் ஐவரும் நேற்று மீள அம்பாறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது, தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல நீதிவான் அவர்களுக்கு அனுமதியளித்ததுடன், சந்தேக நபர்கள் வெளிநாடு செல்லவும் தடை விதித்துள்ளார். குறித்த சந்தேக நபர்கள் ஐவரும் கடந்த புதன் கிழமை இரவு பொலிஸாரால் கை…
-
- 0 replies
- 129 views
-
-
பொதுநலவாய சர்வதேச நீதிபதிகளை பொறுப்புக்கூறலில் உள்வாங்குங்கள் : கனடா வலியுறுத்தியது இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் காணப்படுகின்ற தாமதம் காரணமாக அதிருப்தியடைந்துள்ளதாக கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேர வையில் தெரிவித்துள்ளன. அத்துடன் இலங்கை அரசாங்கம் பொதுநலவாய மற்றும் சர்வதேச விசாரணையாளர்கள் நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறையை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்பை வெ ளிக்காட்ட வேண்டும் என்று கனடா வலியுறுத்தியுள்ள நிலையில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுல்படுத்துவதில் முன்னேற்றத்தை வெ ளிக்காட்டுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக பிரிட்டன் அறிவித்திருக்கி…
-
- 0 replies
- 162 views
-
-
நிலைவரங்களை நேரில் அறிய அம்பாறை செல்கிறார் ஜனாதிபதி அம்பாறை நகரில் அண்மையில் ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பில் நேரில் சென்று அறிவதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இன்று காலை அம்பாறை செல்கின்றார் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன. நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, அங்கிருந்து அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் அசம்பாவிதம் இடம்பெற்ற பகுதியான அம்பாறைக்கு செல்லவுள்ளார். அம்பாறை நகரில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தோதலால் குறித்த பகுதியில் இருந்த உணவகங்கள், ஜும் ஆப் பள்ளிவாசல் ஆகியன தாக்குதலுக்குள்ளாகின. சம்பவத்தையடுத்து பொலிஸார் 5 சந்தேகநபர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்த…
-
- 0 replies
- 152 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவரின் மனைவியும் காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினராக நியமனம் காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஏழு பேரில், காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் மனைவியான ஜெயதீபா புண்ணியமூர்த்தியும் அடங்கியுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த 28ஆம் நாள், சாலிய பீரிஸ் தலைமையிலான காணாமல் போனோர் பணியகத்தின் 7 உறுப்பினர்களையும் நியமித்துள்ளார். இந்த ஏழு உறுப்பினர்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஜெயதீபா புண்ணியமூர்த்தி என்ற பெண்ணும் ஒருவராவார். இவர், காணாமல் ஆக்கப்பட்ட பத்மசிறி என்பவரின் மனைவியாவார். 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த நான்காவது நாள், மட்டக்களப்பில் இவரது கணவன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்…
-
- 0 replies
- 164 views
-
-
சீனாவைக் குறிவைக்கும் இந்தியாவின் கூட்டுப் பயிற்சி – சிறிலங்கா போர்க்கப்பல்களும் விரைவு இந்தியக் கடற்படையின் ஏற்பாட்டில் நடக்கவுள்ள மிலன்-2018 கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க, சிறிலங்கா கடற்படை இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது. சிறிலங்கா கடற்படையின் எஸ்.எல்.என்.எஸ் சமுத்ர, எஸ்.எல்.என்.எஸ் சுரனிமல ஆகிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள், இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக நேற்று திருகோணமலை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றன. 27 அதிகாரிகள் மற்றும் 6 பயிற்சி அதிகாரிகள் உள்ளிட்ட 284 கடற்படையினருடன் சிறிலங்கா கடற்படையின் இரு போர்க்கப்பல்களும் எதிர்வரும் 6ஆம் நாள் விசாகப்பட்டினம் துறைமுகத்தைச் சென்றடையும். மிலன்-2018 கூ…
-
- 0 replies
- 298 views
-
-
தாமதமான நடவடிக்கை என்றாலும் வரவேற்கிறது அனைத்துலக சமூகம் காணாமல் போனோர் பணியகத்துக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை, அனைத்துலக நாடுகள் வரவேற்றுள்ளன. நீண்டகால இழுபறிகளுக்குப் பின்னர், காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிசும், ஏனைய ஆறு உறுப்பினர்களும் கடந்த 28ஆம் நாள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதை அமெரிக்கா, பிரித்தானியா, நெதர்லாந்து, கனடா, உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன. காணாமல் போனோர் பணியகத்துக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமை, நிலையான அமைதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளி்ட்ட விட…
-
- 0 replies
- 103 views
-
-
சிறிலங்காவில் மெதுவான முன்னேற்றமே – கனடா ஏமாற்றம் சிறிலங்காவில் அமைதி, நல்லிணக்கம், அரசியல் உறுதிப்பாடு, மனித உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலில் மெதுவான முன்னேற்றங்களே காணப்படுவது குறித்து கனடா ஏமாற்றமடைந்துள்ளது என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா பிரிலான்ட் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடந்து வரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது அமர்வில், கடந்த 27ஆம் நாள் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “சிறிலங்காவில் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது ஒரு முக்கியமான தருணமாகும். ஆனால் அது முதற்படி மாத்திரமே. பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் காயங்கள் ஆற்றப்படாமல் விரக்தியில் உள்ளனர். உண்மையான நல்லிணக்கம்…
-
- 0 replies
- 106 views
-