ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
பிரதமர் குற்றவாளியென நீதிமன்றம் கூறினால் பதவியை இராஜினாமா செய்வேன் (எம்.ஆர்.எம்.வஸீம்) மத்திய வங்கி பிணைமுறியில் பிரதமர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன். ஊடகங்களே பிரதமருக்கு திருட்டு முத்திரை குத்த முயற்சிக்கின்றன என நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்தார். இரத்தினபுரி மாதம்ப பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நல்லாட்சி அரசாங்கத்தில் அனைத்து தரப்பினரதும் உரிமைகள் பாதுக…
-
- 0 replies
- 386 views
-
-
எனக்கு கிடைத்துள்ள இரண்டு அறிக்கைகளிலும் இரண்டு கட்சிகளினதும் முக்கியஸ்தர்கள் தொடர்பு ஜனநாயக போர்வையில் பாரிய ஊழல் என்கிறார் ஜனாதிபதி (ஆர்.யசி) ஊழல்கள் குறித்து என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு ஆணைக்குழுக்களின் அறிக்கைகளிலும் பிரதான இரண்டு கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் தொடர்புபட்டுள்ளனர். எனது அறிக்கை எவரையும் காப்பாற்ற உருவாக்கப்பட்டதல்ல என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனநாயகம் சுதந்திரம் என்ற போர்வையில் இன்று மிகப்பெரிய ஊழல் இடம்பெற்று வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். மெதரிகிரிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் க…
-
- 0 replies
- 177 views
-
-
திருடர்களை தண்டித்து தூய்மையான தனிக்கட்சி அரசை சு.க. உருவாக்கும் மோதிக்கொண்ட இரண்டு தரப்பினரும் திருடர்கள் என்கிறார் அமரவீர (ஆர்.யசி) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தில் இல்லையென்றவுடன் இரண்டு திருடர்களும் பாராளுமன்றத்தை போர்க்களமாக்குகின்றனர். யார் பழைய திருடர், யார் புதிய திருடர் என்ற போட்டி இரு தரப்பிடமும் நிகழ்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும் பொதுஜன முன்னணியாக இருந்தாலும் இருவருமே திருடர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொது எதிரண…
-
- 0 replies
- 195 views
-
-
வடக்கு, கிழக்கு இணைப்புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் இந்திய தூதுவரிடம் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தல் (ஆர்.யசி) வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கான அழுத்தங்களை இந்தியா வழங்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியத் தூதுவர் தரன்ஜித் சந்துவை நேற்று சந்தித்துப் பேசியபோதே முதலமைச்சர் இவ்வாறு கோரியுள்ளார்.வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் வாழ்வாதார நகர்வுகளை கையாள்வது குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையில் நேற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது. தூத…
-
- 0 replies
- 192 views
-
-
தன்னை காப்பாற்றிக்கொள்ள ரணில் நாடகமாடுகிறார் எந்த விசாரணைக்கும் நான் தயார் என்கிறார் மஹிந்த ராஜபக் ஷ (ஆர்.யசி) எனது ஆட்சிக்காலத்தில் மத்திய வங்கியில் ஊழல் இடம்பெற்றதா என ஆராய வலியுறுத்தப்பட்டுள்ளதே தவிர, நான் குற்றவாளி என அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் சுட்டிக்காட்டப்படவில்லை. சந்தேகம் இருக்கும் பட்சத்தில் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத் தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் பதிலளிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலை யில் அது குறித்து…
-
- 0 replies
- 253 views
-
-
நல்லாட்சி அரசில் அதிகரிக்கும் நெருக்கடி (ரொபட் அன்டனி) ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையிலான நெருக்கடிகள் தொடர்ந்து அதிகரித்து செல்கின்றன. அதாவது இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து அமைத்த நல்லாட்சி அரசாங்கத்திற்குள் தற்போதைய நிலைமையில் பாரிய நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த அறிக்கை வெ ளிவந்துள்ள நிலையில் தற்போது அது தொடர்பில் இரண்டு தரப்பினரும் பகிரங்கமாகவே முரண்பட ஆரம்பித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களும் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும் பாரியளவில் கடும் விமர்சனங்களை முன்வவைத்து…
-
- 0 replies
- 330 views
-
-
அழுத்தம் பிரயோகிக்க போகிறாரா ஹுசைன் ? (ரொபட் அன்டனி) ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் மார்ச் மாதம் 21 ஆம்திகதி இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள நிலையில் ஐக்கிய நாடு கள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பான தனது அறிக்கையில் அதிருப்தி வெ ளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கை குறித்த ஜெனிவா பிரேரணை நிறைவேற்றப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயத்தில் இதுவரை சரியான முன்னேற்றம் காணப்படவில்லை என்ற அதிருப்தியை தனது அறிக்கை ஊடாக செயிட் அல் ஹூசைன் முன்வைப்பார் என எதிர்பார்க்…
-
- 0 replies
- 198 views
-
-
இன்றைய தினமே ஜனாதிபதி பதவியை விட்டுச் செல்ல தயார் – மைத்திரிபால சிறிசேன குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இன்றைய தினமே ஜனாதிபதி பதவியை விட்டுச் செல்ல தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது பதவிக் காலம் தொடர்பில் உச்ச நீதிமன்றினால் வழங்கப்படும் எந்தவொரு சட்ட விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அக்குரஸ்ஸவில் இன்றைய தினம் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பதவி வகிக்க கூடிய காலம் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டதனால் சட்ட விளக்கம் கோரியதாகவும் எத்தனை ஆண்டுகள் ஆட்சி நடத்த வேண்டுமென கோரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நிரந்தரமாக ஜனாதிபதியாக பதவி வகிப்பத…
-
- 3 replies
- 420 views
-
-
ஆறு வருடங்கள் பதவி வகிக்கலாம் : சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் வாதம் 5 வருடங்களே பதவி வகிக்க முடியுமென 7 சட்டத்தரணிகள் வாதம் (எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலத்தை ஆறு வருடங்கள் வகிக்க முடியும் எனவும் அவரது பதவிக்காலம் 6 வருடங்கள் என்பதே தனது அபிப்பிராயம் எனவும் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய நேற்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார். மக்கள் வழங்கிய 6 வருடங்களுக்கான ஜனாதிபதியின் பதவிக்காலத்தை குறைப்பது அவர்களின் இறைமையுடன் தொடர்புபட்ட விடயம் எனவும் அதனால் பதவிக் காலத்தை குறைப்பாதாக இருந்தால் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பு ஊடாக பொ…
-
- 1 reply
- 447 views
-
-
மஹிந்த ஆட்சியில் 4000 பில்லியன் ரூபா மோசடி நடக்கும் போது மைத்திரி துங்கினாரா.? எம்.எம்.மின்ஹாஜ் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக கடுமையாக சாடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னைய ஆட்சியின் போது 4000 பில்லியன் ரூபா மத்திய வங்கி பிணைமுறி மோசடி நடக்கும் போது பிரதான அமைச்சராக இருந்தும் ஏன் அமைச்சரவையில் எதிர்த்து பேசவில்லை?. ஆனால் நல்லாட்சியில் அனைத்து அமைச்சர்களுக்கு எதிர்த்து பேசுதவதற்கு இடமளித்துள்ளோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். அத்துடன் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்க எவராலும் முடியவில்லை. வரலாற்றில் நீண்ட காலங்களுக்கு…
-
- 1 reply
- 552 views
-
-
தேசியக் கூட்டமைப்பு மீதான மக்கள் நம்பிக்கை தகர்ந்துள்ளது தேசியக் கூட்டமைப்பு மீதான மக்கள் நம்பிக்கை தகர்ந்துள்ளது இப்படிச் சொல்கிறார் பசில் ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பகத் தன்மையினை அந்தக் கட்சி தகர்த்துள்ளது. வடக்கு மக்களுக்கு அந்தக் கட்சி வழங்கியிருந்த வாக்குறுதிகளை கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்ற முடியாது போயுள்ளது. அந்தக் கட்சி வடக்கில்…
-
- 1 reply
- 452 views
-
-
தமிழர்கள் கடத்தல் வழக்கில் பிணையில் விடுதலையானார் தஸநாயக்க தமிழ் மாணவர்கள் ஐவர் உட்பட 11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தி காணாமல் போகச்செய்த விவகார வழக்கில் ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி தஸநாயக்க உட்பட 6 சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றம் இவர்களுக்கான பிணை அனுமதியை வழங்கிய நிலையில் கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் லங்கா டி ஜயரத்ன 6 மாதங்களுக்குப் பின்னர் இவர்களை இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கொழும்பு கொட்டாஞ்சேனை, தெஹி…
-
- 1 reply
- 518 views
-
-
மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பு!! மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பு!! புனர்வாழ்வு அமைச்சிலிருந்து கதைப்பதாகக் கூறி ஒருவாரமாக நடைபெற்று வருகிறது என மக்கள் விசனம் புனர்வாழ்வு அமைச்சிலிருந்து கதைக்கின்றோம் என அலைபேசியில் கதைக்கும் நபர்கள், பொதுமக்களை ஏமாற்றிப் பணத்தை ‘ஈசி காஷ்’ (இலகு பணம்) மூலம் பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சம்பவங்கள் தென்மராட்சி பிரதேசத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன…
-
- 1 reply
- 175 views
-
-
கூட்டமைப்பின் விரிசலால் தமிழின அரசியல் பலவீனம் 'உள்ளுராட்சித் தேர்தலுக்குப் பிறகு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எப்படியிருக்கும்' என்பதே பலரது கேள்வி. தங்களுடைய அரசியற் சக்தியாகக் கூட்டமைப்பு உள்ளது. தங்களுடைய அபிலாஷைகளுக்கேற்ற விதத்தில் அது செயற்படும் எனப் பலரும் நம்பியிருந்தனர். ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் ஏற்றமாதிரிக் கூட்டமைப்பு நடந்து கொள்ளவில்லை. பதிலாக உள்ளரங்கில் சிதைந்து கொண்டிருக்கும் ஓரமைப்பாக அ…
-
- 2 replies
- 332 views
-
-
பாடசாலை ஆரம்பித்ததும் பரீட்சை; வடக்கு மாகாணத்தில் புதுமை! பாடசாலை ஆரம்பித்ததும் பரீட்சை; வடக்கு மாகாணத்தில் புதுமை! எங்கும் நடைபெறாத வகையில் வடக்கு மாகாணத்தில் 2018ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பித்தவுடனேயே மாகாணக் கல்வித் திணைக்களம், பரீட்சைகள் நடத்தும் செயற்பாட்டை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்து எச்சரிக்கை செய்கிறது. சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் கே.நல்லதம்பி அனுப்…
-
- 0 replies
- 387 views
-
-
வானிலை அவதான நிலையம் விசேட அறிவித்தல் இலங்கையின் மேற்குக் கடற்பகுதியில் அடுத்த சில மணி நேரங்களுக்கு கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது. மேகமூட்டம் கடுமையாக இருப்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, கடல் திடீரென்று சீற்றத்துக்கு உள்ளாவது, காற்றின் வேகம் மணிக்கு சுமார் எண்பது கிலோ மீற்றர் வேகத்தில் வீசுவது என்பது உள்ளிட்ட தன்மைகள் உருவாகும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புத்தளம் முதல் கொழும்பு ஊடாக பலப்பிட்டிய வரையிலான கரையோரப் பகுதியில் இந்த அறிகுறிகள் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 783 views
-
-
“நித்திரையா தமிழா நிமிர்ந்து பாரடா இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா” வேட்பாளர் அறிமுகத்தில் புலிகளின் பாடல்… “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம்” “இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா” யாழில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டது. யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. அந்நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட புரட்ச…
-
- 1 reply
- 409 views
-
-
பிரதமர் என்ன திருட்டு செய்தார்.? விளக்குகிறார் இராஜாங்க அமைச்சர் எம்.எம்.மின்ஹாஜ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது வீண் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பிரதமர் என்ன திருட்டு செய்தார்? பிணைமுறி விசாரணைக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கியது தவறா? அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையை ஏன் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவில்லை? தமக்கு சாதகமானவற்றை மாத்திரமே பிரபலப்படுத்திவிட்டு ஏன் பூரண அறிக்கையை மறைக்க வேண்டும் என சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுஜிவ சேனசிங்க கேள்வி எழுப்பினார். அத்துடன் அநுராதபுர கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறி…
-
- 0 replies
- 394 views
-
-
யாழ். மாவட்டத்தில் வாழ்வோர் சட்டம், ஒழுங்கை மதிப்பதில்லை யாழ். மாவட்டத்தில் வாழ்வோர் சட்டம், ஒழுங்கை மதிப்பதில்லை யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் விஜிர குணரத்ன தெரிவிப்பு யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒழுக்கம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இங்கு வாழ்பவர்களில் அதிகமானோர் சட்ட ஒழுங்குகளை மதிப்பதில்லை. இவ்வாறு யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் விஜிர குணரத்ன தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர…
-
- 3 replies
- 457 views
-
-
தமிழ்ப் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கேட்க வைத்த முதலமைச்சர் தனது உத்தரவைப் புறக்கணித்த தமிழ்மொழி மூல பெண்கள் பாடசாலை அதிபர் ஒருவரை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முழங்காலில் நின்று, மன்னிப்புக் கேட்க வைத்துள்ளார். இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்ட ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக கல்வி அமைச்சின் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களைக் கண்காணிக்கும் அமைப்பு (கபே) கோரிக்கை விடுத்துள்ளது. “பதுளையில் உள்ள தமிழ் மொழி மூல பெண்கள் பாடசாலை ஒன்றின் அதிபரை தமது அதிகாரபூர்வ இல்லத்துக்கு அழைத்த ஊவா முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முழங்காலில் நின்று வணங்கி மன்னிப்புக் கோர வைத்துள்ளார்…
-
- 4 replies
- 646 views
-
-
இலங்கையின் நீர்வளத்தை காண ஆசையாய் இருக்கிறது – இந்திய விவசாய வல்லுநர் எஸ். பாமயன்… இயற்கை விவசாயத்தின் மூலம் செயற்கை விவசாயத்தினை முறியடிக்க வேண்டும்…. இயற்கை விவசாயத்தின் மூலம் செயற்கை விவசாயத்தினை முறியடிக்க வேண்டும் என தமிழ்நாட்டின் இயற்கை விவசாய வல்லுநர் எஸ். பாமயன் தெரிவித்தார். நேற்றையதினம் 11.01.2018 கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலையத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயம் தொடர்பான பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது. இலங்கைக்கு நான் வந்தபோது இங்குள்ள நீர் வளத்தினைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனேன். தமிழ்நாட்டிலே தூய்மையான நீருக்காக நாள்…
-
- 0 replies
- 404 views
-
-
வேட்பாளரை தாக்க முயன்ற தமிழரசு கட்சி ஆதரவாளர்களை எச்சரித்து விடுதலை செய்தது நீதிமன்றம்… கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் தங்களது பிரதேச தேர்தல் அலுவலகத்தை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் ஒருவரை அலுவலகத்திற்கு உள்நுழைந்து தாக்குவதற்கு முயன்ற கிளிநொச்சி தமிழரசு கட்சியின் குறித்த பிரதேச வேட்பாளரின் ஆதரவாளர்கள் மூவரை கடுமையாக எச்சரித்து பிணையில் விடுதலை செய்தது கிளிநொச்சி நீதவான் நீதின்றம். குறித்த தாக்குதல் முயற்சி சம்பவம் கடந்த புதன் கிழமை பிரமந்தனாறு பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் உடனடியாக தர்மபுரம் காவல் நிலையத்தில…
-
- 0 replies
- 227 views
-
-
ஆறு வருடங்கள் பதவி வகிக்கும் அருகதை ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு இல்லை : பஷில் ராஜபக் ஷ தெரிவிப்பு (எம்.சி.நஜிமுதீன்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,தன்னால் ஆறு வருட காலம் பதவி வகிக்க முடியுமா என உயர்நீதிமன்றத்திடம் பொருட்கோடல் கோரியுள்ளார். எனினும் ஆறு வருடகாலம் பதவி வகிப்பதற்கான தார்மீகம் அவருக்கில்லை என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 172 views
-
-
புலிகளின் வழக்குகளை விசாரித்த நீதிமன்றுக்கு பூட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் அநுராதபுரத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட மிகவும் முக்கியமான இரண்டு தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பிலான வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்திய அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தை இரத்துச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சபையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அந்த விசேட மேல் நீதிமன்றம், எதிர்காலத்தில் வடமத்திய மாகாண 2ஆம் இலக்க மேல் நீதிமன்றமாக பெயரிடப்படவுள்ளது. அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம், 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதியன்று நிறுவப்பட்டது. …
-
- 0 replies
- 276 views
-
-
பெயரளவில் மாத்திரமே தேர்தலில் பெண்கள் – கபே அமைப்பு பெயரளவில் மாத்திரமே தேர்தலில் பெண்கள் – கபே அமைப்பு வடக்கு மாகாணத்தில் பல இடங்களில் பெயரளவில் மாத்திரம் பெண்களின் பெயர்கள் வேட்புமனுவில் குறிப்பிடப்ப ட்டுள்ளன என்று கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் குற்றம் சுமத்தியுள்ளார். வவுனியாவில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவித்ததாவது– வட மாகாணத்தில் பல இடங்களில் பெயர…
-
- 0 replies
- 348 views
-