ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143323 topics in this forum
-
கிளிநொச்சியில் 9 அரசியல் கட்சிகளும், 1 சுயேட்சை குழுவும் போட்டி, – சுந்தரம் அருமைநாயகம்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுகின்றன. அத்தோடு அன்னலெட்சுமி வனசுரா தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான சுந்திரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார் இன்று பிற்பகல் மாவட்டச் செயலகத்தில் இ்டம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவா் அதனை தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள 40 வட்டாரங்களில் ஒன்பது அரசியல் கட்சிகளையும், ஒரு சுயேட்சை குழுவையும…
-
- 0 replies
- 180 views
-
-
"இறுதிக்கணங்கள் வரை பிரச்சனைகள் இருந்த போதும் கூட்டமைப்பின் ஒற்றுமையை நினைவில் கொண்டு அமைதியான முறையில் தீர்வு கண்டுள்ளோம்." "வன்னி மாவட்டத்தில் வவுனியா நகர சபை மற்றும் துணுக்காய் பிரதேச சபை இரண்டிலும் தமிழீழ விடுதலை கட்சியின் சார்பில் நேரடி வட்டாரத் தேர்தலில் நாம் எந்தவொரு வேட்பாளரையும் நிறுத்தவில்லை. இரண்டு சபைகளிலும் விகிதாசாரப் பட்டியலில் கிடைக்கின்ற முதல் உறுப்பினர் எமது கட்சிக்கு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது." என அக்கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சில சபைகளில் ரெலோ கட்சி போட்டியிடாமை குறித்து அவரிடம் கேட்ட போதே அவர் அவ…
-
- 0 replies
- 441 views
-
-
சிறிலங்காவில் இராணுவ மறுசீரமைப்பு சாத்தியமா? 2009ல் சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததில் , இருந்து, சிறிலங்காவின் பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டிய தேவையுள்ளதாகக் விவாதிக்கப்பட்டது. நல்லாட்சியை நிலைநிறுத்துவதாகக்கூறி ராஜபக்ச அரசாங்கத்தைத் தோற்கடித்து நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமானது நாட்டின் பாதுகாப்புத் துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என வாக்குறுதி வழங்கியதன் மூலம் இது தொடர்பான விவாதமானது மீண்டும் தூண்டப்பட்டது. பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டியதன் தேவையை பல்வேறு தரப்பினரும் ஏற்றுக்கொள்கின்றனர். என்னைப் போன்ற பொதுமக்கள் வடக்கு கிழக்கானது இராணுவ …
-
- 0 replies
- 265 views
-
-
கிளிநொச்சியில் ஜதேக, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி வேட்பு மனுத் தாக்கல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இறுதி நாளான இன்று(21) கிளிநொச்சியில் ஜக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுந்திர கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி என்பன வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான சென்ற குழுவினரும், ஜக்கிய தேசிய கட்சியின் சார்பாக வைத்தியர் விஜயராஜன் தலைமையிலான குழுவினரும், ஈபிடிபி சார்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை தவநாதன் தலைமையிலான அணியினரும் மூன்று உள்ளுராட்சி சபைகளுக்கும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். …
-
- 1 reply
- 490 views
-
-
31000 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.. 31000 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் எம்.நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுக்கொண்ட இலங்கையர்களுக்கு இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. தனியொருவர் இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக மூன்று லட்சம் ரூபாவும், மனைவி பிளைகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா 50000 ரூபாவும் செலுத்தியே இவ்வாறு இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்கின்றனர். http://globaltamilnews.net/2017/56490/
-
- 0 replies
- 269 views
-
-
’தீர்வு காணுவோம்’ -டி.விஜிதா “மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் தீர்வு காணுவோம்” என, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர், தமது வேட்புமனுவை யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று (21) காலை 8.30 மணியளவில் தாக்கல் செய்தனர். இதன்போது, யாழ்.மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்பு மனுவைத் தாக்கல் செய்தப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரி…
-
- 0 replies
- 218 views
-
-
கொழும்பு மாநகர சபைக்கு த.மு.கூ. சார்பில் களமிறங்குகிறார் குகவரதன் மேல் மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா (நமது நிருபர்) கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தனித்து தமிழ் முற்போக்குக் கூட்டணி களமிறங்கவுள்ளது. இந்த சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுக்கள் இடம்பெற்ற போதும் தொகுதிப் பங்கீடு விடயத்தில் இணக்கம் காணப்படாததையடுத்து தனித்துக் களமிறங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணிச் சின்னத்தில் களமிறங்கும் அதேவேளை கட்சியின் முதன்மை வேட்பாளராக மேல்மாகாண சபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின்…
-
- 0 replies
- 414 views
-
-
மத்திய அரசாங்கம் வழங்கும் நிதியை பயன்படுத்தாத விக்கி மலேஷியாவின் நிதியை வைத்து என்ன செய்வார்? (ரொபட் அன்டனி) மத்திய அரசாங்கம் வழங்குகின்ற மொத்த நிதியையே உரிய முறையில் பயன்படுத்தாது மீதம் வைக்கின்ற வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் மலேஷியா வழங்குகின்ற உதவியை வைத்து என்ன செய்வார் என்று புரியவில்லை என சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இரா ஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். சிறந்த நீதியரசரான வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் அரசியல்வாதியாக தோல்வி அடைந்திருக்கின்றார் என்பதையே நான் கூறுகின்றேன் என்றும் டிலான் பெரேரா குறிப்பிட்டார். இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ம…
-
- 1 reply
- 423 views
-
-
மஹிந்த தரப்பை இறுக்கிப்பிடிக்கும் சுதந்திரக் கட்சி தரப்பினர் (ரொபட் அன்டனி) சுதந்திரக்கட்சியில் இணைந்துகொள்ளாமல் தனித்துப்போட்டியிடும் கூட்டு எதிரணி தொடர்பில் சில இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கின்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கினாலோ, அல்லது அக்கட்சியில் இணைந்து செயற்பட்டாலோ கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து சுதந்திரக்கட்சியின் தலைமை ஆராய்ந்து வருவதாக தெரிகிறது. இதுவரை கூட்டு எதிரணியி…
-
- 0 replies
- 191 views
-
-
வடக்கின் சாபக்கேடாக மாறியுள்ள வறுமையும் வேலையின்மையும்! நாட்டில் வறுமையும் வேலை வாய்ப்பின்மையும் வடக்கு மாகாணத்திலேயே அதிகளவில் காணப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மாகாண சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு– செலவுத் திட்டத்தை இரண்டாவது வாசிப்புக்காகச் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். வறுமை ஏற்படுவதற்கு வேலை வாய்ப்பின்மையே முதன்மைக் காரணமாகக் கூறப்படுகின்றது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதில் வேலையில்லாப் பிரச்சினை முக்கிய பங்கை வகிக்…
-
- 1 reply
- 400 views
-
-
மனித உரிமை விவகாரங்களில் இலங்கை மந்த கதியிலான கொள்கைகளை பின்பற்றி வருகின்றது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மனித உரிமை விவகாரங்களில் இலங்கை மந்த கதியிலான கொள்கைகளை பின்பற்றி வருகின்றது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அந்த தீர்மானத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் மந்த கதியிலான போக்கே பின்பற்றப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளது. 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கையும் இணை அனுசரணை வழங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.உண்மையைக் கண்டறிதல் மற்றும பலவந்த கடத்தல்கள் தொடர்பான குற்றச் செ…
-
- 0 replies
- 191 views
-
-
நோயாளர் காவு வண்டியில் சென்று பரீட்சை எழுதிய மாணவர்கள்….. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழில். சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் இருவர் நோயாளர் காவு வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு சென்று பரீட்சை பரீட்சை எழுதியுள்ளனர். குப்பிளான் மற்றும் வசாவிளான் பகுதியை சேர்ந்த இரு மாணவர்களே இவ்வாறு பரீட்சை எழுதியுள்ளனர். குறித்த மாணவர்களில் ஒருவர் காய்ச்சலினாலும், மற்றையவர் பாம்புக்கடிக்கு இலக்கான நிலையிலும் தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இரு மாணவர்களும் நடைபெறும் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் என்பதனால் வைத்திய நிபுணர் மற்றும் தாதியர்கள் விசேட கவனம் செலுத…
-
- 0 replies
- 265 views
-
-
சந்தேகத்திற்கு இடமான முகாம்களை ஐக்கிய நாடுகள் சபையினர் சோதனையிடலாம் : அனுமதி வழங்குவோம் என்கிறது அரசாங்கம் (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கு எதிரான சர்வதேச குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் உள்நாட்டில் மேற்கொள்ளும் ஆய்வுகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாது. உறுப்பு நாடு என்ற வகையில் அவ்வாறான அனுமதிகளுக்கு இணங்கியே ஐ.நா.சாசனங்களில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்கு இடமான முகாம்களில் மனித எலும்பு கூடுகள் காணப்பட்டமையினாலேயே எந்தவொரு பிரதிநிதியையும் கடந்த அரசாங்கம் முகாம்களுக்குள் அனுமதிக்கவில்லை. நல் …
-
- 0 replies
- 134 views
-
-
யாழ். மாநகர சபையின் மேயர் வேட்பாளர் ஆர்னோல்ட் தமிழரசுக்கட்சி இறுதி செய்தது; இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பு (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபையின் மேயர் வேட் பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டை களமிறக்குவதென இலங்கை தமிழரசுக்கட்சி இறுதி செய்துள்ளதாகவும் இன்று வியாழக்கிழமை உத்தி யோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் உள்ளகத்தகவல்கள் தெரி விக்கின்றன. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனுத்தாக்களுக்கான கால அவகாசம் இன்று நண்பகல் 12மணியுடன் நிறைவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் அண்மைய நாட்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேயர் வேட்பாளர் தொடர்பில் பலத்த இழுபறிகள் காணப்பட்டு வந்திருந்தன.…
-
- 0 replies
- 312 views
-
-
ஒருங்கிணைந்த முற்போக்குக் கூட்டணியாக கொழும்பு மாநகர சபையில் களமிறங்குகிறோம் ஐ.தே.க.வுடன் முரண்பாடு இல்லை; சின்னம் முக்கியமில்லை எண்ணமே முக்கியம் என்கிறார் அமைச்சர் மனோ (ஆர்.யசி) கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் "ஒருங்கிணைந்த முற்போக்கு கூட்டணியாக" தமிழ் முற்போக்குக் கூட்டணி களமிறங்குகிறது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் எமக்கு எந்தவித முரண்பாடுகளும் இல்லை. எனினும் கட்சிக்குள் உள்ள ஒரு சிலருடனேயே முரண்பட வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தனித்து களமிறங்க இதுவே காரணமாகும் என்று முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். அரச…
-
- 0 replies
- 357 views
-
-
தமிழ் இனத்தின் பலத்தை சிதைப்பதில் குறி- சிறிதரன் எம்.பி தமிழ் இனத்தின் பலத்தை சிதைப்பதில் குறி- சிறிதரன் எம்.பி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல்வேறு இயக்கங்களை உருவாக்கி தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ததன் பின்னணியில் இருந்த சக்திகள், இன்றும் ஜனநாயகத்தின் பெயரால் பல்வேறு விதமான மனிதர்களையும் பல்வேறு கோணங்களில் உருவாக்கி பல்வேறு கருத்துக்களையும் பல்வேறு சின்னங்களையும் காட்டி ஒன்றுபட்ட தமிழ்த்தேசிய இனத்தின் பலத்தை உடை…
-
- 0 replies
- 368 views
-
-
தேயிலை தடை நீக்கத்திற்கு சகலமட்டத்திலும் நடவடிக்கைகள் அஸ்பெஸ்டஸ் இறக்குமதி கட்டுப்பாட்டிற்கான தடையும் ஒத்திவைப்பு (லியோ நிரோஷ தர்ஷன்) அஸ்பெஸ்டஸ் கூரை தகடு உற்பத்தி மூலப் பொருட்களுக்கான இறக்குமதிக்கு விதித்துள்ள கட்டுப்பாடு காரணமாகவே இலங்கை தேயிலைக்கு ரஷ்யா தடைவிதித்துள்ளதாக வெளிவரும் தகவல்களில் உத்தியோகபூர்வ தன்மை இல்லை. எனவே ரஷ்யா விதித்துள்ள தடை மிக விரைவில் தளர்த்த தேவையான அனைத்து மட்டத்திலான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெருந் தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார். அதேபோன்று பிரச்சினைக்கு சுமுகமான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் அ…
-
- 0 replies
- 330 views
-
-
ஈ.பி.டி.பியின் கட்டுப்பணம் நிராகரிப்பு! ஈ.பி.டி.பியின் கட்டுப்பணம் நிராகரிப்பு! வவுனியா மாவட்டத்தில் இரண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஈ.பி.டி.பியினால் செலுத்தப்பட்ட கட்டுப் பணம் தேர்தல்கள் திணைக்களத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கட்சியின் செயலரோ, அதிகாரமளிக்கப்பட்ட முகவரோ கட்டுப்பணத்தைச் செலுத்தாமையினாலேயே கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. இறுதி…
-
- 0 replies
- 292 views
-
-
மாவையின் மகனும் தேர்தல் களத்தில். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உள்ளூராட்சி தேர்தலில் மாவை சேனாதிராஜாவின் புதல்வன் களமிறங்க உள்ளதாக தமிழரசு கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் போட்டியிடவுள்ளார். கடந்த காலத்தில் இந்தியாவில் தங்கி இருந்து கல்வி கற்று வந்த கலையமுதன் தற்போது நாடு திரும்பியுள்ளார். வலி.வடக்கு பிரதேச சபையில் போட்டியிடுகின்றார். வலி.வடக்கு பிரதேச சபையில் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் மற்றும் முன்னாள் உப தவிசாளர் எஸ்.சஜீவன் ஆகியோரும் தமிழரசு கட்சி சார்பாக போட்டியிருகின்றமை உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழரசு கட்சி தகவல்கள் தெரிவிக்க…
-
- 6 replies
- 830 views
- 1 follower
-
-
ஒன்றாக வந்தால் தலைமையையும் விட்டுக்கொடுக்கத் தயார் – ஆனந்தசங்கரி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள் எனவே அவா்களின் விருப்பத்திற்கு அமைவாக எல்லோரும் ஒற்றுமையாக வந்தால் நான் தலைமையையும் விட்டுக்கொடுக்கத் தயார் என வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று(20) கிளிநொச்சியில் உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவா் இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்த முறை தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கடவுள்தான் சொல்ல வேண்டும். இன்றும் காலங் கடந்து விடவில்லை மாறுபட்டு தேர்தல் கேட்கின்றவா்கள் ஒன்றாக …
-
- 1 reply
- 982 views
-
-
தேர்தலில் போட்டியிட பாலியல் இலஞ்சம்கோரிய மஹிந்த அணி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துவரும், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலஙகா பொதுஜன முன்னணியில் உள்ள பலர், தேர்தலில் போட்டியிடுவதற்கு தன்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து பெண் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளார். இலங்கை மாதா அமைப்பின் தலைவியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கோட்டை அமைப்பாளருமான மதுஷா ராமசிங்க என்பவரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்து கொழும்பு – இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று முற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டார். கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அவர்…
-
- 1 reply
- 507 views
-
-
வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை: கடும் காற்றினால் மன்னாரில் வீடுகள் சேதம் வட கிழக்கு பருவப்பெயர்ச்சியினால் வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்நிலையில், நேற்று (19) முதல் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மன்னார் – மாந்தை மேற்கு, தேவன்பிட்டி கிராமத்தில் நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளன. இதன்போது, 13 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வை.எம்.எஸ் தேசப்பிரிய குறி…
-
- 0 replies
- 254 views
-
-
யாழ். சாவகச்சேரியில் அமையவுள்ள நல்லிணக்கத்தின் அலைவரிசை எனும் தொலைக்காட்சி சேவை! நாட்டில், நல்லிணக்கத்தின் அலைவரிசை என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சேவையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(20.12.2017) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் இவ்வாறான தொலைக்காட்சி அலைவரிசையொன்று இருப்பது பெரும் பின்புலமாக அமையும் என்பதினால் நல்லிணக்க தொலைக்காட்ச…
-
- 0 replies
- 296 views
-
-
அரசாங்கத்தினுள் கொடுப்பதை பெற்றுக்கொண்டு வாய்மூடி இருக்க முடியாது.! (ஆர்.யசி) கொழும்பு மாநகர சபையில் " ஒருங்கிணைந்த முற்போக்கு கூட்டணியாக" களமிறங்குகின்றது தமிழர் முற்போக்குக் கூட்டணி. ஐக்கிய தேசியக் கட்சியுடன் முரண்பாடுகள் இல்லை, எனினும் கட்சிக்குள் உள்ள ஒரு சிலருடனே முரண்பாடுகள். தனித்து களமிறங்க இதுவே காரணம் என்கிறார் அமைச்சர் மனோ கணேசன். அரசாங்கத்தின் பங்காளிகள் என்பதற்காக சலுகைகளை பெற்று வாயை மூடி இருக்க முடியாது, தமிழர்களின் உரிமை எமக்கு முக்கியம் எனவும் அவர் தெரிவித்தார். தமிழர் முற்போக்கு கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் மகாவலி கேந்திர மையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மனோ கணேசன் இதனை த…
-
- 0 replies
- 287 views
-
-
அவர்கள் திரும்பி வரவே இல்லை – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் வாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின்னரும், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றும் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடனுடன் ஊர் திரும்பும் மக்களின் உணர்வு எதன்பாற்பட்டது என்பதை விபரிக்கவே தேவையில்லை. ஒரே ஒரு தடவை என் வீட்டை பார்க்க வேண்டும், ஒரே ஒரு தடவை என் தெருவை பார்க்க வேண்டும் என்ற தவிப்புடன் இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளுக்குச் சென்றவர்கள் பலர் திரும்பி வராத கதைகள் ஈழத்தில் நிறையே நடந்ததுண்டு. அது மாத்திரமல்ல, போர் ஓய்ந்திருந்த சமாதான காலமொன்றில்கூட இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட …
-
- 0 replies
- 450 views
-