ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
கொழும்பில் பெய்த மணல் மழையால் மக்கள் ஆச்சரியம்!! 18 கொழும்பைச் சூழவுள்ள நில இடங்களில் இன்று காலை மணல் மழை பெய்தது என்று கூறப்படுகின்றது. உலக வர்த்தக மையம் மற்றும் காலிமுகத் திடலைச் சுற்றியுள்ள பகுதியிலேயே இவ்வாறு மழை பெய்தது என்று கூறப்பட்டது. அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மணல் விழுந்ததையும், மக்களின் ஆடைகளில் மணல் விழுந்ததையும் காண முடிந்தது என்று தெரிவிக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கும் 10.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இவ்வாறு மழை பெய்தது என்றும் கூறப்படுகின்றது. http://newuthayan.com/story/31076.html
-
- 0 replies
- 350 views
-
-
சக்தி டிவி செய்திகள் 22 09 2017 , 8PM
-
- 0 replies
- 204 views
-
-
யாழில் சற்று முன்னர் விபத்து; இருவர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்! யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை ஐந்து மணிக்கு அண்மித்த வேளையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவரது கை மிகவும் சிதைவடைந்துள்ளது. குப்பிளான் வடக்குச் சந்தியில், இரு இளைஞர்கள் பயணித்த உந்துருளி ஒன்றின்மீது வீதி விதிகளை மீறி வந்த பார ஊர்தி மோதியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பார ஊர்தி…
-
- 0 replies
- 354 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்திற்குள் நுழைய முற்பட்டவர் கைது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த நபரொருவர் ஒருவரையே பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் கூரிய ஆயுதமொன்றுடன் வாசஸ்தலத்திற்குள் நுழைய முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/24759
-
- 1 reply
- 208 views
-
-
இடைக்கால அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் அரசியல் தலைவர்களது உரை தொகுப்பு 'பாரபட்சம் காட்டக்கூடாது' என்ற விடயம் நிராகரிப்பு எந்தவொரு இனத்தவர் மீதும் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற யோசனையை சில கட்சிகள் நிராகரித்திருப்பது வருத்தமளிப்பதாக லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள், பாரபட்சம் காட்டக்கூடாது என்ற விடயத்தை நிராகரித்துள்ளன. இது கவலைக்குரியது என்றார். அரசியலமைப்பு தயாரிப்பு…
-
- 6 replies
- 960 views
-
-
ஐ.நா. ஆணையாளர் அல் ஹுசைனை இன்று சந்திக்கும் ஜனாதிபதி மைத்திரி நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் குறித்து கலந்துரையாடப்படும் நாளை ஐ.நா.பொதுச்செயலாளருடன் சந்திப்பு (நியூயோர்க்கிலிருந்து ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுநடத்தவுள்ளார். இன்று வெ ள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை தூதரக அலுவலகததில் ஜனாதிபதி சிறிசேனவுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாள…
-
- 0 replies
- 224 views
-
-
கின்னஸ் சாதனையில் சர்ச்சை ; மாணவர்களை ஈடுபடுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் கின்னஸ் சாதனைக்காக பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தியமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கின்னஸ் சாதனைக்காக உலகில் மிக நீளமான முந்தாணையை மணப்பெண் அணிந்த திருமண வைபவம் ஒன்று கண்டியில் இடம் பெற்றது. இதில் குறித்த மணமகளின் 3.2 கிலோமீற்றர் நீளமான முந்தாணையை பாடசாலை மாணவிகள் ஏந்தியபடி நின்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. கண்டி, பேராதனை - கண்ணொருவ வீதியில் லொறி ஒன்றில் கொண்டுவரப்பட்ட 3.2 கிலோமீற்றர் நீளமான சேலையை விரிப்பதற்கு 250 பாடசாலை மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. …
-
- 0 replies
- 375 views
-
-
ஹக்கீமின் தயார் காலமானார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின், தயார் காலமானார் http://www.tamilmirror.lk/செய்திகள்/ஹக்கீமின்-தயார்-காலமானார்/175-204295
-
- 0 replies
- 250 views
-
-
பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு ஆதரவு – சம்பந்தன் : புதிய அரசியல் யாப்பின் ஊடாக அடிப்படை மற்றும் உச்ச அளவிலான சட்ட நடைமுறைகளுடன் புதிய எதிர்காலமொன்றை ஏற்படுத்துவது இலங்கைக்கு அவசியம் என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான சிறந்த சந்தர்ப்பம் ஒன்று இலங்கைக்கு கிட்டியுள்ளதென குறிப்பிட்டுள்ள சம்பந்தன், இதனை பயன்படுத்தி நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் அரசியலமை…
-
- 2 replies
- 467 views
-
-
போரின் பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலை வடக்கில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை கூடிக் குறைந்து செல்வதாகவும், இந்தப் புள்ளிவி வரங்கள் தனக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். வடக்கு இளையோரின் விரக்தியைக் கண்டுகொள்ளாமல்விட்டால் அவர்கள் மீண்டும் சயனைட் குப்பிகளுடன் போராட்டத்தில் இறங்கிவிடுவர் என்றும் அவர் எச்சரித்தார். நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது: வடக்கில் இடம்பெறும் தற்கொலைகள் தொடர்பான புள்ளி விவரங்கள் என்னை அதிர்ச்சியும் அச்சமும் அடைய வைத்துள்ளன. 2009ஆம் ஆண்டு 169 …
-
- 1 reply
- 304 views
-
-
புதிய யாப்பு. ஆதரவாகவும் எதிராகவும் வடக்கு கிழக்கில் மக்கள் சந்திப்பு புதிய அரசியல் யாப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கைக்கு எதிராகவும் ஆதரவாகவும் வடக்கு கிழக்கில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஆதரவாக தமிழரசுக் கட்சியும் எதிராக தமிழ் மக்கள் பேரவையும் மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டு விளக்கமளிக்கவுள்ளன. அதேவேளை ஈபிஆர்எல்எப், புளொட், ரொலோ ஆகிய கட்சிகள் புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடவுள்ளதாகவும் ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறுகின்றார். இதேவேளை புதிய அரசியல் யாப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட வ…
-
- 0 replies
- 305 views
-
-
முன்னாள் பெண் போராளி ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டுவருவதாக புனைவு ஒன்றை எழுதி உண்மைபோல ஆனந்தவிகடனில் வெளியிட்டிருந்த சிவமகாராசா அருளினியன் தமிழ்த் தேசவிரோத சக்திகளுடன் இணைந்து அதனை யாழ்ப்பாணத்தில் வெளியிடுகிறார். குறித்த பதிவு வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் விகடன் ஆசிரியர் குறித்த சம்பவம் மாணவப்பத்திரிகையாளர் ஒருவராலேயே எழுதப்பட்டிருந்தாக தெரிவித்து அன்றைய அதிர்வலைகளை தணிவித்திருந்தார். இந்நிலையில் அந்தப் பதிவு நூலுரு பெற்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படுகிறது. தமிழ் ஈழ விடுதலைப்போர் தொடர்பிலான எதிர் விமர்சனங்களை வெளியிட்டுவருகின்ற சில நபர்களே குறித்த வெளியீட்டு நிகழ்வின் பின்னணியில் இருப்பதுடன் அவர்களே கருத்துகரைகளையும் வழங்கவிருப்பதாகவும் தெரியவருகிறத…
-
- 9 replies
- 3.7k views
-
-
மனோ, ஹக்கீம், ரிஷாத்துடன் அமெரிக்காவிலிருந்து உரையாடிய ஜனாதிபதி மாகாணசபை தேர்தல் திருத்த சட்டமூலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்ளும் விடயத்தில் இழுபறி நிலை ஏற்பட்டதையடுத்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிலிருந்து தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த சட்டமூலத்தில் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்காதவகையிலான திருத்தங்களை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,…
-
- 0 replies
- 340 views
-
-
இலங்கையில் நிலையான அமைதிக்கு இன்னும் அதிகம் செய்ய வேண்டும் இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன என்று இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி தெரிவித்துள்ளார். அமைதிக்கான அனைத்துலக நாள் நேற்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதியை அமைதிக்கான அனைத்துலக நாளாக கொண்டாடுகிறோம். எல்லா நாடுகள், மற்றும் மக்களிடையே அமைதியை வலுப்படுத்துவதற்காக இந்த நாளை ஐ.நா. பொதுச்சபை பிரகடனப்ப…
-
- 0 replies
- 351 views
-
-
சகல அறிக்கைகள் மீதும் ஒக். இறுதியில் விவாதம் இடைக்கால அறிக்கை மற்றும் உபகுழுக்களின் அறிக்கைகள் மீது ஒக்ரோபர் மாதம் இறுதிப் பகுதியிலேயே விவாதம் இடம்பெறும் என்று தெரியவருகின்றது. விவாதத்துக்கான திகதியை, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மா னிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் நேற்று முன்வைக்கப்பட்டது. இந்த அறிக்கை மீதான விவாதம் ஒக்ரோபர் மாதம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒக்ரோபர் முதல் வாரங்களில், சபாநாயகர், தலைமை அமைச்சர் ரணில் உள்ளிட்டோர் நாட்டில் இருக்க மாட்டார்கள் என்பத…
-
- 0 replies
- 252 views
-
-
மட்டக்களப்பு சவுக்கடியில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27 ஆம் ஆண்டு நினைவுகூரல் மட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை நினைவுகூரப்பட்டுள்ளது . 1990ம் ஆண்டு செப்ரம்பர் 20ம் திகதி சவுக்கடி மற்றும் ஆறமுகத்தான் குடியிருப்பு கிராமங்களைச் சேர்ந்த 33 தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று 27 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களது உறவினர்களினால் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் நினைவாக சவுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் …
-
- 5 replies
- 758 views
-
-
‘ஜனவரியிலும் மார்ச்சிலும் இரு தேர்தல்கள்’ “உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் யாவும் எதிர்வரும் ஜனவரி மாதமும் பதவிக்காலம் நிறைவடையும் மாகாண சபைகளுக்கான தேர்தல், எதிர்வரும் மார்ச் மாதமும் நடைபெறும்” என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம், மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை இரவு நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டமூலம் தொடர்பில், ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுப்படுத்தும் ஊடகச் சந்திப்பு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில், நேற்று (21) மாலை நடைபெற்றது. அங்கு அவர்…
-
- 0 replies
- 409 views
-
-
‘கொடூர ஆட்சியை முடிப்பதற்கு அம்மணியே முக்கிய பங்கு வகித்தார்’ “முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கடந்த கொடூர ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் மிகவும் முக்கிய பங்கு வகித்தவர். அவரின் செயற்பாடுகள் இன, மத மற்றும் மொழி வேறுபாடுகளின்றி அனைத்து மக்களையும் ஒற்றுமைப்படுத்துவதுடன், சமாதானத்தை நோக்கியதாக அமைந்துள்ளது” என்று, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அம்பாறை மாவட்டத்துக்கான விஜயத்தையொட்டி, ஆலையடிவேம்பு பனங்காட்டுப்பிரதேசத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட…
-
- 0 replies
- 690 views
-
-
ரோஹிங்யா அகதிகளுக்கு கைகொடுக்க நாம் தயார் மியன்மார் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழலை அடுத்து தேவை ஏற்படும் பட்சத்தில் ரோஹிங்யா அகதிகள் விடயத்தில் கரிசனையின்றி செயற்படாமல் அவர்களுக்கு இலங்கை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன சபையில் தெரிவித்தார். பெளத்த நாடு என்ற அடிப்படையில் நாம் கவலை கொள்கின்றோம்.மியன்மாரில் சமாதானம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறு நாம் மியன்மார் அரசிடம் கோருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக மு…
-
- 0 replies
- 319 views
-
-
ஐ.தே.க - சுதந்திரக் கட்சி இணங்கும் அரசியல் யாப்புக்கு கூட்டமைப்பு இணங்குமாம் புதிய அரசியல் யாப்புக்காக ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் கூட்டாக இணக்கம் தெரிவிக்குமானால் அதற்கு இணங்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியளித்துள்ளது. புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக் கூடட்டமைப்பின் இந்த இணக்கப்பாடு இதற்கு முன்னர் ஏற்பட்டிருக்காத பாரிய முன்னேற்றமாக அடையாளப்படு…
-
- 1 reply
- 437 views
-
-
பெருந்தொகைப் பணத்துடன் இளம் ஜோடி கைது பெருந்தொகையான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயத்தாள்களை டுபாய் நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற இளம் ஜோடியொன்றை விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண்ணும் 24 வயது மதிக்கத்தக்க ஆணும் என சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். குறித்த ஜோடியிடமிருந்து சுமார் 88 மில்லியன் ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணய தாள்கள்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைது, சுங்க அதிகாரிகள், விசாரணை, நாணயத்தாள், சுங்க அ…
-
- 1 reply
- 701 views
-
-
யோசனைகளுக்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருப்பது மிகப்பெரிய வெற்றி புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட வழி நடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் ஆட்சி முறைமை தொடர்பிலும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பிலும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருப்பது மிகப்பெரிய வெற்றியென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை குறித்து ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே சுமந்திரன் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். htt…
-
- 0 replies
- 456 views
-
-
இலங்கையிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பு !! இலங்கை, பங்களாதேஸ் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்துக்கான ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக இந்தியாவின் பி.ரீ.ஐ.(p.t.i ) இணையத்தளம் தெரிவித்துள்ளது. முகநூல் மற்றும் ஏனைய சமுக வலைத்தளங்களின் ஊடாக நபர்களைத் தொடர்புகொண்டு, அவர்களை மூளைச்சலவைக்கு உட்படுத்தி, இயக்கத்தில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை தீவிரவாதிகள் முன்னெடுக்கின்றனர். இவ்வாறு இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து சேர்த்துக் கொள்ளப்படுகின்றவர்கள், பெரும்பாலும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்காக பயன்படுத்தப்படுவதாகவ…
-
- 0 replies
- 441 views
-
-
மகாநாயக்கர்களிடம் கூட்டாட்சித் தீர்வை தமிழர் கேட்கும் நிலமை உருவாகியுள்ளது வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் மகாநாயக்க தேரர்களிடம் சென்று கூட்டாட்சித் தீர்வைக் கேட்கும் அளவுக்கு இன்று நிலமை மோசமாகியுள்ளது. இந்த அமைச்சர்கள் நடுவீதியில் நின்றுகொண்டு தேரர்களை அவமதிப்பதால்தான் இந்த நிலமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மகிந்த நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அநுருத்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த நாட்டின் நிலமை நாளுக்கு நாள் மோசமடைந்துகொண்டே செல்கின்றது. ஒருபுறம் பொருளாதார நெருக்கடி. மறுபுறம், படையினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை. இது போதாதெ…
-
- 0 replies
- 206 views
-
-
மகாநாயக்கர்களிடம் கூட்டாட்சியைக் கோரினால் அவர்களால் அதனை வழங்கமுடியுமா ? இப்படிக் கேள்வி எழுப்புகிறார் துஸார எம்.பி. வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் மகாநாயக்க தேரரைச் சந்தித்துக் கூட்டாட்சித் தீர்வைக் கேட்டதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படிக் கேட்டாலும் அந்தத் தீர்வைத் தேரர்களால் வழங்க முடியுமா என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துஸார இந்துனில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக அறிவிக்கும் சட்டவரைவு தொடர்பில் எதுவும் அறியாமல் பேசுகின்றனர் மகிந்த அணியினர். அந்தச் சட்டவரைவுக்…
-
- 0 replies
- 127 views
-