ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
மன்னார் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு எதிராக, மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர், வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில், புதன்கிழமை (20) காலை முறைப்பாடு செய்துள்ளார். மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த கடலுணவு பொருட்களைக் கொள்வனவு செய்து வியாபாராத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகரான வெற்றிவேல் தயானந்தன் (வயது-40) என்பவரே, வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “…
-
- 0 replies
- 219 views
-
-
சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கோரி கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றுமாறு வலியுறுத்தி சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த சிலர் கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் கொழும்பு மாநகர சபைக்கு முன்னால் இன்றைய தினம் காலை இடம்பெற்றது. சமத்துவத்திற்கான பிரஜைகளின் நடவடிக்கைக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்திற்கு நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய இயக்கத்தின் இணைப்பாளர் சுந்தரம் மகேந்திரன், புரவெசி பலய அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் காமினி வியங்…
-
- 0 replies
- 402 views
-
-
ரஷ்ய குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார். இலங்கையிலுள்ள ரஷ்ய குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டிமிட்ரி மஹய்லோவஸ்கி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை கடற்படை தலைமையகத்தில் நேற்று சந்தித்துள்ளார். கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பு மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டார். இச் சந்திப்பில் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. கலந்துரையாடலின் இறுதியில் இச் சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன http://www.virak…
-
- 0 replies
- 323 views
-
-
யாழில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட மாணவிக்கு ஏற்பட்ட அவமானம்..! யாழ் மண்டைத் தீவு பகுதியில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாடசாலை மாணவிக்கு, நபர் ஒருவர் முத்தம் கொடுத்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை நேற்றைய தினம் யாழ் பொலிசார் கைது செய்துள்ளனர். மண்டைத் தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவி ஒருவருக்கே இந்த அவமானம் ஏற்பட்டுள்ளது. விளையாட்டரங்கு ஒன்றில் உள்ள அறை ஒன்றில் வைத்து இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த மாணவி தனது பெற்றோரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து பொலிஸில் முற…
-
- 0 replies
- 542 views
-
-
யாழில் போதைப் பொருளுடன் 10ம் தரத்தில் கற்கும் மாணவர் கைது யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் வசம் இருந்து போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கஞ்சா கலந்த மாவா எனப்படும் போதைப் பொருள் பக்கற்றுக்கள் நான்கு இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதோடு, குறித்த மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். http://tamil.adaderana.lk/news.php?nid=95596
-
- 0 replies
- 268 views
-
-
புலிகளை அழித்தொழித்ததால் என்னைப் பழிவாங்குகின்றனர் நான் நினைத்திருந்தால் புலிகளுடன் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு சத்தமில்லாமல் இருந்திருக்க முடியும். நாட்டுக்காக நான் புலிகளிடம் போர் செய்து அவர்களை அழித்ததால் இன்று இந்த ஆட்சியாளர்கள் எங்களை அரசியல் ரீதியாகப் பழிவாங்குகின்றனர். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: நாங்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த நாட்டைப் புலிகளிடம் இருந்து மீட்டெடுத்தோம். தாய் நாட்டின்மீது நாம் வைத்த அன்பு காரணமாக இந்த நாட்டைப் புலிகளிடம் இருந்து பாதுகாப்பதற்குப் பல தியாகங்களைச் செய்தோம். எ…
-
- 1 reply
- 244 views
-
-
கழிவுகளை கொட்டுவதற்கான தடையுத்தரவு மட்டக்களப்பு மேல் நீதிமன்றால் நீக்கம் மட்டக்களப்பு மாநகரசபை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு நீதிவான் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையினால் மேல் நீதிமன்றில் குறித்த தடையினை நீக்குமாறு கோரும் மனு தாக்கல்செய்யப்பட்டது. இதனை விசாரணைசெய்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.இஸ்ஸடின் குறித்த தடையுத்தரவினை நீக்கியுள்ளதுடன் இது தொடர்பான விசாரணை எதிர்வரும் 04 ஆம்திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இன்று காலை மட்டக்களப்பு மாநகர …
-
- 0 replies
- 221 views
-
-
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்துப் போட்டியிடாது – சம்பந்தன்! எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றிரவு தமிழ் ஊடகவியலாளர்களை அழைத்து சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடினார். இக்கலந்துரையாடடின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடாது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிலேயே போட்டியிடும் எனவும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்…
-
- 1 reply
- 461 views
-
-
யாழ். அம்மாச்சி உணவகம் சத்தம் சந்தடியின்றித் திறப்பு கொழும்பின் அழுத்தம் காரணமா? வடக்கு மாகாண விவசாய அமைச்சால் நடத்தப்படும் அம்மாச்சி உணவகம் யாழ்ப்பாணத்தில் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு அரசின் அழுத்தத்தால் திறப்பு விழா நிகழ்வு ஏதுமின்றி அது இயங்கியது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் விவசாயக் கண்காட்சி நேற்றையதினம் திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாயப் பயிற்சி கல்லூரியில் ஆரம்பமானது. அதில் பயிற்சிக் கல்லூரிக்கு முன்பாக அம்மாச்சி உணவகம் ஊடாக கண்காட்சியில் பங்கேற்ற அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டன. வடக்கு மாகாண விவசாய அமைச்சால் அம்மாச்சி உண…
-
- 0 replies
- 566 views
-
-
பாத யாத்திரையில் குழப்பம் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ள நஷ்டஈடு மற்றும் தண்டப்பணம் என்பவற்றைச் செலுத்துவதற்காக பெளத்த தேரர்கள் நேற்று கிரிபத்கொடையில் நிதி திரட்டும்போது அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது. “சில் துணி சிறைக் கைதிகளைப் பாதுகாக்கும் நிதியம்” எனும் அமைப்பு லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ள நஷ்டஈடு மற்றும் தண்டப்பணம் என்பவற்றைச் செலுத்துவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை முதல் ந…
-
- 0 replies
- 324 views
-
-
லலித்துக்கும் அனுஷவுக்கும் பிணை முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று (20) பிணை வழங்கினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/லலித்துக்கும்-அனுஷவுக்கும்-பிணை/175-204161
-
- 0 replies
- 179 views
-
-
‘புதிய அரசியல் சீர்திருத்தத்தின் ஊடாக நல்லதொரு தீர்வை வழங்குவோம்’ “இந்த நாட்டில் இடம்பெற்ற இனப்பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வை வழங்க முடியும். எனவே தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என, தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். “தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே, புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், முஸ்லிம் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன” எனவும் அவர் தெரிவித்தார். அம்பாறை, திருக்கோவில…
-
- 0 replies
- 222 views
-
-
கொன்று குவிப்பைக் கண்டு கதறியோருக்கு ‘ஆறுதலையாவது வழங்க முடியும்’ “இளைஞர், யுவதிகள், வயதுவந்தவர்கள், குழந்தைகள் என்று, எதுவித வேறுபாடும் இன்றி பல்லாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட இந்த மண்ணில் நின்று, அந்த நிகழ்வுகளை நேரடியாகக் கண்டும் கலங்கியும் கதறியும் அனுபவித்த மக்களுக்குச் சற்று ஆறுதலையாவது வழங்க முடியும் என்ற எண்ணத்தில் இந்த அகமானது அமைக்கப்பட்டமை வரவேற்புக்குரியது” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு, வட்டுவாகலில் நிர்மாணிக்கப்பட்ட, பிரம்ம குமாரிகள் இராஜ யோகா நிலையம் திறப்பு விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில், சிறப்பு…
-
- 1 reply
- 293 views
-
-
வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் உயிரிழப்பு நல்லூர் சங்கிலியன் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் இன்று காலை உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் கொண்ட குழுவென்று குறித்த குடும்பத் தலைவரை நேற்றுக் கடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை குறித்த குடும்பத் தலைவர் சங்கிலியன் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையிலேயே இவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. http://newuthayan.com/story/29963.html
-
- 7 replies
- 481 views
-
-
"சர்வஜன வாக்கெடுப்புக்கு பங்கத்தை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை" மாகாண சபைத் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்படவேண்டியது அவசியமாகும்,ஆனாலும் புதிய அரசியல் யாப்பை உருவாக்குவது தொடர்பிலான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்வரை ஏனைய தேர்தல்களை நடத்தி அதற்கு பங்கத்தை ஏற்படுத்த நாம் விரும்பவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழு நேற்று காலையில் கூடியது. இதன் போது 20ஆம் அரசியல் சாசன திருத்தம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் என்பன தொடர்பில் ஆராயப்பட்டது. இதன் போது உரையாற்றிய சமபந்தன், "அரசாங்கம் எந்த விதத்தில…
-
- 0 replies
- 252 views
-
-
மாகாண சபை தேர்தல் சட்டமூலத்தில் திருத்தம் இன்று சபையில் நிறைவேற்ற அரசாங்கம் முஸ்தீபு; திருத்தத்திற்கு மு.கா., த.மு.கூ., அ.இ.ம.கா. எதிர்ப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 20 ஆவது திருத்தச்சட்ட மூலத்தினை நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உயர்நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ள நிலையில் அதற்கு மாற்றீடாக 1988ஆம் ஆண்டு மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தத்தினை மேற்கொள்வதென எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போத…
-
- 0 replies
- 255 views
-
-
ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்றத்தில் ரகளை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், சபைக்கு நடுவே வந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சபையில் சற்று பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஒன்றிணைந்த-எதிரணி-நாடாளுமன்றத்தில்-ரகளை/175-204150
-
- 0 replies
- 188 views
-
-
நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு நாடாளுமன்றத்துக்கு செல்லும் வழியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பொலிஸாரிடம் வினவியப்போது, இந்தப் பகுதியில் ஊனமுற்ற போர் வீரர்களின் எதிர்ப்பு பேரணியொன்று, இன்று (20) இடம்பெறுகின்றது. இதனால்,கலவரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளமையினால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/நாடாளுமன்றத்தைச்-சுற்றி-பலத்த-பாதுகாப்பு/175-204152 நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வீதி மூடப்பட்டது நாடாளுமன்ற சுற்றுவட்டம் முதல், நாடாள…
-
- 0 replies
- 312 views
-
-
சிங்களவருக்கு மகிந்த போன்று தமிழருக்கு பிரபாகரன் ‘ஹீரோ’ ஞானசார தேரர் தெரிவிப்பு “மகிந்த அரசு போரின் மூலம் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டபோதும் தமிழ் மக்களின் உள்ளத்தை வெற்றிகொள்வதற்கு எந்த வேலைத்திட்டமும் இருக்கவில்லை. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நந்திக்கடலில் பிரபாகரனுக்கு நினைவுத்தூபி அமைத்திருந்தாலும் பிரச்சினை இல்லை” இவ்வாறு பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். “மகிந்த இங்குள்ள மக்களுக்கு வீரர் போன்று பிரபாகரன் தமிழ் மக்களுக்கு வீரராவார். சரியோ பிழையோ அதுதான் உண்மை” என்றும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற பத்த…
-
- 1 reply
- 347 views
-
-
யாழ். சிறையிலிருக்கும்கைதிக்கு ஹெரோயின் ஆடைகளுக்குள் மறைத்துக் கடத்தியவர் சிக்கினார் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் விளக்கமறியல் கைதிக்கு வழங்குவதற்கு என ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட இளைஞ ரொருவர் நேற்று முன்தினம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. விளக்கமறியலில் கைதியான தனது சகோதரரைப் பார்ப்பதற்காக ஊர்காவற்றுறை நாரந்தனையைச் சேர்ந்த இளைஞரொருவர் ஆடைகளை கொண்டு சென்றுள்ளார். அந்த ஆடைகள் மீது சந்தேகம் கொண்ட சிறைக்காவலர்கள் அதனை பரிசோதித்துள்ளனர். …
-
- 0 replies
- 266 views
-
-
தேர்தலைத் தள்ளிப்போட அரசுக்குள்ளேயே எதிர்ப்பு தேர்தல்களை ஒத்திப்போடும் திட்டங்களைக் கைவிட்டு உடனடியாகத் தேர்தலொன்றுக்கு அரசு செல்லவேண்டும். சிறுபான்மையினர் பாதிக்கப்படும் வகையில் எந்தவொரு திருத்தங்களையும் அரசு செய்யுமாயின் அது நியாயமானதாக இருக்காது. தேர்தலை ஒத்திப்போட்டு ஆளும் கூட்டணி அரசு தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக் கொள்ளக்கூடாது. ஆளும் கட்சிக்குள்ளிருந்து இவ்வாறான குரல்கள் நேற்று வெளிப்பட்டுள்ளன. அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோர், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்துள்ளனர். தற்போதைய அரசியல் நிலவரம் மற்று…
-
- 0 replies
- 258 views
-
-
ஏன் இந்த பாராமுகம்? : யாழ் மாநகர சபையின் சுகாதாரப்பிரிவிடம் மக்கள் கேள்வி யாழ்.பஸ் நிலையத்திற்கு பின்னால் இயங்கும் பிரபல சைவ உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிக்கொண்டிருப்பதாகவும், மக்கள் உணவருந்திக் கொண்டிருக்கும் போதே கழிவுகள் அகற்றப்படுவதாகவும் குறித்த சுகாதார சீர்கேடுகள் தொடர்பாக யாழ்.மாநகர சபையின் சுகாதார பிரிவு பாராமுகமாக இருப்பதாக மக்கள் விசணம் தெரிவிக்கின்றனர். இது குறித்து மக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், “யாழ் நகருக்குள் பெருமளவு மக்கள் தினசரி கூடும் நிலையில், பஸ் நிலையத்திற்கு பின்னால் உள்ள பிரபல சைவ உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது, குறித்த சில உணவகங்களில் கழிவுநீர்த் தொட்டிகள் அமைக்க…
-
- 0 replies
- 271 views
-
-
அமெரிக்க அழுத்தத்துக்கு தலைசாய்கிறது கொழும்பு ஐ.நா. அணு ஆயுதத் தடை உடன்பாட்டில் கையெழுத்திடாது ஐ.நாவின் அணு ஆயுதத் தடை உடன்பாட்டில், இலங்கை கையெழுத்திடுவதற்கு வாய்ப்பில்லை என்று அரச தரப்பு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. அணு ஆயுதங்களைத் தடை செய்யும் ஐ.நா. பிரகடனம் தொடர்பான உடன்பாடு, ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொட ரின் போது நாளை கையெழுத்திடப்படவுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தற்போது அமெரிக்காவுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின்போது கலந்துரையாடப்படவுள்ள விடயங்க ளில், இந்த விவகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடைசி நேர அழுத்தங்களால், உடன்பாட்டில் க…
-
- 0 replies
- 202 views
-
-
காணாமற்போனோர் அலுவலகத்தால் சிங்களவர்களுக்கும் நன்மையுண்டு காணாமற் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டால் சிங்கள மக்களும் அதிக நன்மையடைவர் என்றும் இந்த அலுவலகம் தமிழர்களுக்காக மாத்திரம் அமைக்கப்படாது. இந்த அலுவலகம் ஊடாகப் படையினரை பன்னாட்டுப் போர்க்குற்ற நீதிமன்றுக்கு அனுப்பும் எந்தவோர் ஏற்பாடும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் சாந்தபண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த நாட்டில் 30 வருட காலமாக இடம்பெற்ற போரால் நாம் அதிக அழிவுகளை எதிர்கொண்டோம். இன, மத பேதமின்றி அனைவரும் பாதிக்கப்பட்டனர். உயிர்களை,உடைமைகளை இழந்தோம். பலர் கா…
-
- 0 replies
- 274 views
-
-
‘உயர்நீதிமன்ற வியாக்கியானம்; ஜனநாயகத்தின் வெளிப்பாடு’ அரசமைப்பின், 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், உயர் நீதிமன்றம் நாடளுமன்றத்துக்கு வழங்கியுள்ள வியாக்கியானமானது, நாட்டின் ஜனாநாயகம், நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை வெளிப்படுத்துவதாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 20ஆவது திருத்தம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் குறித்து, அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனநாயக நாட்டில் மக்களின் எதிர்பார்ப்புகள் - அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தவகையில், 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் ஊடாக சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில்…
-
- 0 replies
- 169 views
-