ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
வடக்கில் பெண்கள் மீது படையினரின் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன; அருட்.நிக்கலா வடமாகாணத்தில் இராணுவத்தினரால் தொடர்ந்தும் தமிழ் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே காணப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக படையினரால் அவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாக மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்சகோதரி நிக்கலா தெரிவித்தார். ஜெனீவாவில் 36ஆவது ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அமர்வு இடம்பெற்று வரும் நிலையில், ஸ்ரீலங்காவின் தற்போதைய மனித உரிமை நிலவரம் குறித்து அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவிலுள்ள மனித உரிமை அமைப்புக்கள், அரச…
-
- 0 replies
- 563 views
-
-
சக்தி டிவி செய்திகள் 13 09 2017 , 8PM
-
- 0 replies
- 238 views
-
-
காலாண்டுப் பகுதியில் நடைபெற்ற 21 பாராளுமன்ற அமர்வுகளிலும் 14 உறுப்பினர்களே பங்கேற்பு
-
- 0 replies
- 194 views
-
-
2017 மே வரையான காலப்பகுதியில் படையினர் வசமிருந்த 32,745.97 ஏக்கர் காணி விடுவிப்பு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்த வருடத்தின் மே மாதம் வரையான காலப்பகுதியில் படையினர் வசமிருந்த 32,745.97 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2021ஆம் ஆண்டிற்குள் வடக்கில் சுமார் 3,400 ஏக்கர் காணியும் கிழக்கில் 3000 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது. மீள்குடியேற்ற அமைச்சின் தரவுகளின் படி, நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இராணுவத்தினர் வசமிருந்த 32,745.97 ஏக்கர் காணி வடக்கு, கிழக்கில் விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிலுருந்த காணிகள…
-
- 0 replies
- 256 views
-
-
ஊடகவியளலாளரின் வீட்டில் 40 பவுண் நகை கொள்ளை - எஸ். நிதர்ஷன் யாழ். ஊடக அமையத்தின் ஸ்தாபகரும் ஒருங்கிணைப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரட்ணம் தயாபரனின் வீட்டில் 40 பவுண் நகை இன்று கொள்ளையிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை, உடுப்பிட்டியில் அமைந்துள்ள தயாபரனின் வீட்டிலேயே, மேற்குறித்த கொள்ளை இடம்பெற்றுள்ளது. தயாபரனும் அவரது மனைவியும் அரச உத்தியோகத்தர்கள் என்ற நிலையில், அவர்கள் பணிக்கு சென்ற சமயம், அவரின் பிள்ளைகளும் பாடசாலை சென்றிருந்தபோது, வீட்டில் யாருமில்லாத சமயமே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது. வீட்டின் யன்னல் கம்பியை உடைத்து, அதன் வழியே உட்சென்றே நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. தவிர, கொள்…
-
- 0 replies
- 392 views
-
-
மஹிந்த மீது யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம் (ரொபட் அன்டனி) முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரத்துங்க, தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ தானே சில் துணிகளை வழங்குவதற்கு உத்தரவிட்டதாக தெரிவித்திருக்கிறார். எனவே அவர் மீது பொறுப்புக்கூறல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தற்போது யார் வேண்டுமானாலும் தொடரலாம் என்று இணை அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இணை அமைச்…
-
- 0 replies
- 271 views
-
-
சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் மாபெரும் வாகனப் பேரணி சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து "சைட்டத்திற்கு எதிரான மக்கள் அரண்" அமைப்பின் ஏற்பாட்டில் யாழில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட வாகனப் பேரணி வவுனியாவை வந்தடைந்த நிலையில் இன்று வவுனியாவில் இருந்து அனுராதபுரத்தை நோக்கி பயணமானது. வவுனியா ஏ - 9 விதியில் உள்ள புதிய பேரூந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பித்த குறித்த வாகனப் பேரணி மன்னார் வீதி வழியாக குருமன்காடு சந்தியை அடைந்து வைரவபுளியங்குள் ஊடாகச் சென்று வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து அங்கிருந்து ஏ9 வீதி வழியாக அனுராதபுரம் நோக்கிச் சென்றது. தனியார் மருத்துவக் கல்லூரியான சைட்டத…
-
- 1 reply
- 354 views
-
-
தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை பயன்டுத்துபவர்களுக்கு சாதகமாகவே கடற்தொழில் திணைக்களம் செயற்படுகின்றது கடல் சூழலுக்கும், கடல் வளங்களுக்கும் அழிவை ஏற்படுத்தும் இழுவை மடி கொண்டு மேற்கொள்ளப்படும் மீன் பிடி முறைமையினை தடை செய்ய மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக பாராளுமன்றினூடாக சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும் இன்று வரை குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமையினால் உள்ளூரில் உள்ள மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ந்தும் முகம் கொடுத்து வருவதாக வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடல் சூழலுக்கும், கடல் வளங்களுக்கும் அழிவை ஏற்படுத்தும் இழுவை மடி கொண்டு செய…
-
- 0 replies
- 250 views
-
-
மர்மநபர்களின் செயலால் 8 மாணவிகள் உட்பட 11 மாணவர்கள் வைத்தியசாலையில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா கிலன்டில் லங்கா பிரிவில், இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவிகளை வழியில் இடைமறித்த இனந்தெரியாத மர்மநபர்கள் இருவர், கத்தியைக் காட்டி மிரட்டியதால், அம்மாணவிகள் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளனரெனவும் பிரதேச மக்களின் உதவியுடன் அவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் எட்டு மாணவிகளும், மூன்று மாணவர்களும் மொத்தமாக பதினொறு பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் பகுதியில் அமைந்த…
-
- 0 replies
- 353 views
-
-
18 வருடங்களின் பின் முகமாலை ஆரோக்கிய மாதா திருவிழா முகமாலை புனித ஆரோக்கிய மாதா ஆலையத்தின் வருடாந்த திருவிழா 18 வருடங்களின் பின்னர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. நாளை மறுதினம் மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் வழிபாட்டுடன் திருப்பலி நடைபெற்று எதிர்வரும் 17ஆம் திகதி காலை 6.30 மணிக்கு திருநாள் திருப்பலியுடன் அன்னையின் ஆசீர்வாதம் இடம் பெறவுள்ளது. யுத்தகாலத்தில் சூனியப் பிரதேசமாக காணப்பட்டது. முகமாலையில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து இன்னமும் முழுமையாக மீள்குடியேற்றம் இடம்பெறாத பிரதேசமாகவும் காணப்படுகிறது. குறித்த பிரதேசத்தில் அதிகளவு ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதோடு தற்போதும் கண்ணிவெடி அகற்ற…
-
- 0 replies
- 272 views
-
-
வித்தியா வழக்கில் கைதான லலித் ஜயசிங்க பிணையில் செல்ல அனுமதி!! புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர் ஒருவரைத் தப்பிக்க உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். http://newuthayan.com/story/28250.html
-
- 2 replies
- 597 views
-
-
கொழும்புக்கான எச்சரிக்கை கொழும்பு அரசு விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் -ஹுசைன் தெளிவுபடுத்தியிருக்கிறார். கொழும்பு இந்தப் போக்கிலேயே சென்றால் அது பன்னாட்டு விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தி ருக்கிறார். அத்தகைய அவசியத்தில் இருந்து விடுபடுவதற்கு கொழும்பு உடனடியாகச் செய்யவேண்டியவற்றையும் அவர் பட்டியலிட்டிருக்கிறார். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்தின் பணிகளை உடனடியாக ஆரம்பிப்பது, நம்பிக்கையைக் கட்டியெழுப்புவத…
-
- 0 replies
- 313 views
-
-
மரத்துக்காக உண்ணாவிரதப் போராட்டம் -எஸ்.கணேசன், ஆ.ரமேஷ் “நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எனக்கே அதிகாரம் உண்டு. இதன் மூலமாக எனது 5 பிள்ளைகளுடைய கல்வி மற்றும் பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு இடமளியேன்” எனக் கோரி, வட்டகொட - மடக்கும்புர -வேவஹென்ன கிராமவாசியான எம்.ஜி.பந்தல பண்டார மரத்தில் கூடாரம் அமைத்து இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். தனக்கு சொந்தமான காணியில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களை வெட்டுவதற்கு தாம் அனுமதிகளைப் பெற்றிருந்த வேளையில், அதனை அரச சொத்தாக அபகரிக்கத் திட்டம் தீட்டுகின்றார்கள். இந்த மரங்களை வளர்த்ததால் அதனை வெட்டும் தருவாயில் எனது குடும்பத்தின் வருமானத்தை அ…
-
- 0 replies
- 234 views
-
-
வங்கி விவரங்களை அலோஸியஸ் வழங்கவில்லை ஷெஹான் சாமிக்க சில்வா பிணைமுறி தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுடன் இணைந்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோஸியஸின் வீட்டுக்கு, நேற்று விஜயம் மேற்கொண்டனர். ஆணைக்குழுவில் வங்கி விவரங்களை வழங்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அவற்றை வழங்காத அவர், நாட்டை விட்டுச் சென்றுள்ளதாகக் கிடைத்த, உறுதிப்படுத்தாத தகவலைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் டப்புல டி லிவேரா, ஆணைக்குழுவுக்கு அறிவித்தார். கருத்துத் தெரிவித்த, அலோஸியஸின் சட்டத்தரணியான ஜன…
-
- 1 reply
- 225 views
-
-
ஹுசைனின் குற்றச்சாட்டுக்களை கொழும்பு அடியோடு நிராகரிப்பு இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹுசைன் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்களை திட்டவட்ட மாக நிராகரித்துள்ள இலங்கை அரசு, அவை தவறானவை, அவதூறானவை எனவும் சாடியுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தமக்குப் போதியளவு காலம் இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 36ஆவது கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் சிறப்புரையாற்றிய ஆணையாளர் ஹூசைன் இலங்கையைக் கடுமையாகச் சாடியிருந்தார். இது தொடர்பில் இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன?…
-
- 1 reply
- 344 views
-
-
34/-1 பிரேரணையை அமுல்படுத்துங்கள் : ஜெனிவாவில் வலியுறுத்தியது பிரிட்டன் (நமது விசேட செய்தியாளர்) ஜெனிவா மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் 34-1 என்ற பிரேரணையை அமுல்படுத்த இலங்கை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜெனிவாவுக்கான பிரிட்டன் பிரதிநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் காணாம…
-
- 0 replies
- 415 views
-
-
யாழில் சுகாதார ஊழியர்களின் மாபெரும் பேரணி, போராட்டம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து அனைத்து சுகாதார ஊழியர்களும் போராட்டம் மற்றும் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். போராட்டத்தை ஸ்ரீலங்காவின் சகல பகுதி சுகாதார ஊழியர்களும் இணைந்து யாழில் இன்று காலை இந்த போராட்டம் மற்றும் பேரணியை முன்னெடுக்கவுள்ளனர். யாழ். மாநகர சபையில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களாக பணியாற்றியவேளையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்ற உத்தரவினை ஆட்சேபித்து இலங்கையின் சகல பகுதி சுகாதார உத்தியோகத்தர்களும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர ச…
-
- 0 replies
- 239 views
-
-
அல் ஹுசைகுக்கு பதில் தெரிவிக்கிறார் லக்ஷமன் கிரியெல்ல எம்.எம்.மின்ஹாஜ் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் பூரண ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்கியுள்ளோம். தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காகவே முழு மூச்சுடன் செயற்படுகின்றோம். எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைாளாளரின் அவசரத்திற்கு எம்மால் எதனையும் செய்ய முடியாது. எமக்கு கால அவகாசம் வேண்டும் என உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் நேற்று இலங்கை அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இது தொடர்பில் வினவிய போதே அமைச…
-
- 2 replies
- 414 views
-
-
நியூயோர்க்கில் ஹுசைனை சந்திக்கவுள்ள ஜனாதிபதி ஜெனிவா அதிருப்தி தொடர்பில் விளக்கமளிப்பார் (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் நோக்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நியூ யோர்க் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் மற்றும் உலக நாடுகளின் அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் சின்சிரோ அபே சீன ஜனாதிபதி ஷீ ஜின்பின் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்கல் கனடாவின் பிரதமர் டுருடூ உள்ள…
-
- 0 replies
- 145 views
-
-
அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை விரைவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியாகும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களாக புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியாகும் என அவர் குறிப்பிட்டார். இந்த இடைக்கால …
-
- 5 replies
- 1.1k views
-
-
20 வது திருத்தச் சட்டத்தில் உத்தியோகபூர்வமாக திருத்தங்கள் செய்யப்படாத நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு 20 வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க தமிழரசு கட்சியினர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கின்றது. அதேவேளை தமிழரசு கட்சியின் இத்தகைய தீர்மானம் தமிழ் மக்களை நிச்சயமாக படுகுழிக்குள் தள்ளுவதாகவே அமையும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறி…
-
- 0 replies
- 462 views
-
-
லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்டவை விடுவிக்க தேரர்கள் நிதி சேகரிக்க திட்டம் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ள நஷ்டஈடு மற்றும் தண்டப்பணம் என்பவற்றைச் செலுத்துவதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்கு நாளை மறுதினம் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். “சில்துணி சிறைக் கைதிகளைப் பாதுகாக்கும் நிதியம்” என்னும் அமைப்பினர் நேற்று கொழும்பிலுள்ள சம்புத்தத்வ ஜயந்தியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேல…
-
- 0 replies
- 279 views
-
-
உள்ளூர் கைக்குண்டுடன் அல்வாயில் இளைஞன் கைது!! பருத்தித்துறை, அல்வாய் பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலையில் இந்த இளைஞர் அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர் 23 வயதுடையவர் என்றும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். http://newuthayan.com/story/28183.html
-
- 0 replies
- 255 views
-
-
யாழ்-சாவகச்சேரியில் திருட்டு கும்பல் மேற்கொண்ட வாள்வெட்டு- மூவர் படுகாயம்! யாழ்ப்பாணம் சாவகச்சேரி கிராம்புவில் பகுதியில் வீடு ஒன்றில் திருடர்கள் நுழைந்த திருடர்கள் மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 8:40 மணியளவிலும் வீட்டில் திருடர்கள் நுழைந்ததை அவதானித்த வீட்டின் உரிiமாயளர் திருடன் திருடன் என கத்தியபோது அயல்வீட்டுக்கார் அங்கு விரைந்துள்ளனர். இந்நிலையில் ஓடிவந்த அயல் வீட்டுக்காரர் மீது வாள்களால் சரமாரியாக வெட்டியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் கிராம்புவில் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பரமேஸ்வரன் சுஜிவன், 27 வயதான பரமேஸ்வரன்…
-
- 0 replies
- 452 views
-
-
புலி உறுப்பினர் மேன்முறையீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரால், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளையை சவாலுக்கு உட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது விடுதலைப்புலி உறுப்பினர், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சட்டரீதியானதென, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் வழங்கிய கட்டளையை சவாலுக்கு உட்படுத்தியே, இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி காலிங்க ரவிந்திரவின் ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேற்படி மேன்முறையீட்டு மனு, புலிகள் அமைப்பின் எறிகணைப் படையணியின் முன்னாள் பிரபல்யானமானவரான புவலன் என்றழைக்கப்படும் இராசதுரை ஜெகன் சார்பிலேயே தா…
-
- 0 replies
- 282 views
-